மாப்பிள்ளை வீட்டார்கள் ஊர் எல்லைக்கு வந்த உடன் பண்ணையாரின் வீட்டிற்கு தகவல் வந்துவிட்டது.
தகவல் கிடைத்ததும் சந்திரன் வேகமாக உள்ளே சென்று சகுந்தலாவுக்கு விஷயத்தை கூறினார்…
“சகுந்தலா எல்லாம் ரெடி பண்ணீட்டையா?”… “நான் எல்லாம் ரெடி பண்ணிட்டேன் மாமா… நீங்க போய் வாசலில் நில்லுங்க, அப்படியே தம்பியையும் ஜெயாக்காவையும் கூட்டிகிட்டு போங்க மாமா… நான் அத்தையே கூட்டிகிட்டு வருகிறேன்”.
“சீக்கிரமா வா… அவங்க ஊர் எல்லைக்கு வந்துட்டாங்க சகுந்தலா”… நீங்க டென்ஷன் ஆகாம போங்க நான் எல்லாம் பண்ணிட்டேன் எனக்கூறி அவரை அனுப்பிவைத்தார்.
சமையல் செய்யும் இடத்தில் இருந்த நாச்சியாரிடம் சென்றவர், “அத்தை மாப்பிள்ளை ஊர் எல்லைக்கு வந்துட்டாங்க, வரவேற்கபோகனும் இல்ல, நீங்க வாசலுக்கு போங்க நான் சின்ன அத்தைகிட்ட சொல்லீட்டுவறேன்”… “அப்படியா சகு! “… நான் போறேன், நீ அவளை கூட்டிகிட்டு வா கூறிவிட்டு எட்டிநடைபோட்டு வெளியே சென்றார்.
தன் வயதைகூட கருத்தில் கொள்ளாது ஓடியவரை தடுத்த மல்லி, “சகுந்தலாம்மா மெதுவா போங்க… ஏன் இப்படி ஓடி வரீங்க?”… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பக்கத்தில் வந்துட்டாங்க மல்லி, இந்த சின்ன அத்தகைய வேற காணோம். அவங்களை கூப்பிடத்தான் போறேன்… “நீங்க வாசலுக்கு போங்க ம்மா… நான் போய் அவங்களை கூட்டிக்கிட்டு வருகிறேன்”… அப்படியே உமாவை டீ போட சொல்லு மல்லி… சரிங்கம்மா… நான் பாத்துக்கிறேன், நீங்க போங்க எனக்கூறி அவரை அனுப்பிவைத்தாள்.
அவரை அனுப்பிவைத்தாள் மேலே இருந்த சரதாவிடம் விஷயத்தை கூறி அவரை அழைத்து சென்றவள்… உமாவிடமும் சகுந்தலா டீ போட்டு வைக்க சென்றதாக கூறி சென்றுவிட்டாள்.
சாரதா, “ஏண்டீ மல்லி… எல்லா வேலைகளையும் முடித்துவிட்டாச்சி தான?”… அது எல்லாம் ஆட்சி பாட்டி… நீங்க வாங்க சகுந்தலா அம்மா வேற டென்ஷனா இருக்காங்க… “அவ அப்படிதான் டீ!”… பசங்க விஷயம்னு வந்தா அவ அவள் இருக்கமாட்டார்கள்… அது என்னமோ சரிதான் பாட்டி.
மல்லி சென்றதும் மீனாவிடம் விஷயத்தை கூறி கீழே செல்லும் போது பக்கத்தில் இருந்த அறையில் கேட்ட செய்தியில் சாக்கடித்தார் போல் நின்றுவிட்டால்… பின் அந்த செய்தி மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து தன்னை அந்த அளையும் கதவின் பின் மறைத்துக்கொண்டு இவர் நிகழ்த்த உள்ள பாதச்செயலை ஒன்றுவிடாமல் கேட்டவள் யாரும் அறியாமல் கீழே சென்றுவிட்டாள்… கீழே சென்றவள் தன் காதால் கேட்ட செய்தியை அவளால் ஜீரணிக்க முடியவில்லை… அதைவிட, அந்த திட்டத்தை போட்டவரையும் நினைத்து அத்தனை பயமாக இருந்தது… அவரால் கண்டிப்பா இந்த குடும்பத்திற்கு ஆபத்து என்பதை அவளின் உள்மனம் உறக்க சொன்னது.
‘இந்த சதியை பற்றி யாரிடம் சொல்வது?… எப்படி இந்த திட்டத்தை முறியடிப்பது?… தான் சொன்னார் இவர்கள் நம்புவார்களா?… அதைவிட இந்த சதிகாரனால் யாருக்காவது ஆபத்து வந்துவிடுமே என பல்வேறான குழப்பத்தில் ஆழ்ந்திருந்தவளை சாந்தியின் குரல் கலைத்தது’.
சாந்தி, “என்ன உமா… அப்படியே இருக்க?… அவங்க வறதுக்குள்ள டீயும் ஜூஸ் ரெடி பண்ணனும் உமா”… நான் டீ போடறேன், நீங்க ஜூஸ் போட்டிடுங்க எனக்கூறி முயன்று தன்னை வேலையில் மூழ்கடித்துக்கொண்டாள் உமா.
“பியூடிஷனின் கைவண்ணத்தில் சொர்கரத்திலிருந்து பூமிக்கு வந்த அப்சரஸ் போல் அவ்வளவு அழகாக இருந்தால் மீனு… முகத்தில் சிறிது பதட்டமும் அதையும் மீறி காதல் கைகூடியதனால் வந்த சந்தோசமும் ஒருங்கே இருந்தது”.
மாப்பிள்ளை குடும்பத்தை வரவேற்க அனைவரும் வெளியே காத்திருந்தனர்… அவர்களை அதிக நேரம் காக்கவைக்காமல் கார்த்திக் குடும்பத்தினர் வந்துசேர்ந்தனர்.
வந்தவர்களை அனைவரும் வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றனர். பரஸ்பர நலவிசிரிப்புக்கு பின் பொதுவாக பேசிக்கொண்டே உள்ளே சென்றனர்.
நாச்சியார், “வாங்க சம்பந்தி… வாங்க மாப்பிள்ளை… வா விஷாலா… வாடா கார்த்தி… எல்லாரும் எப்படி இருக்கீங்க?… வேலை எல்லாம் எப்படி போகுது?” என்றவரிடம்…
வேலம்மை, “எல்லாரு நல்லா இருக்கோம் நாச்சியா… வேலையும் நல்லா போகுது… நீதான் அந்த பக்கம் வரது இல்லையே”… எங்க வேலாம்மை, இங்கேயே எல்லாம் சரியா இருக்கு… அதுவும் இல்லாம வயசு ஆகஆக அதிகமா வெளியே போகமுடியவில்லை… அது என்னமோ சரிதான் நாச்சியா.
ஏன் கார்த்தி மச்சான் நீங்க கூட இந்த பக்க வரவில்லை என்ற முறைபெண் ஒருத்தியிடம் கார்த்திக், எங்க வேலையே சரியா இருக்கு… அதுவும் இல்லாம நீயும் வேற எங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ட… அதனால் தான்… “மச்சான் என் தங்கச்சியே உங்களுக்கு அதிகம்… இதுல நானும் வேற வேணுமா உங்களுக்கு?”… எல்லா ஒரு சமூகசேவை தான்… இந்த வாய்மட்டும் இல்லனா நாய் உங்களை தூக்கிகிட்டு போய்டும் மச்சான்.
இவர்களின் பேச்சை கேட்டவர்கள் கலகலவென சிரித்தனர்… அதை பார்த்த குட்டியும் வர்ஷாவும் கைகொட்டி சிரித்தார்கள். இவர்களை பார்த்த சங்கர், “வர்ஷா குட்டி எப்படி இருக்கீங்க?… ஏண்டா இந்த தாத்தாவை பார்க்க வரவில்லை?”… “நான் உங்க மேல கோவமா இருக்கேன் தாத்தா… நீங்க ஏன் என்னைய பார்க்க வீட்டுக்கு வரவில்லை… இப்ப கூட என்னைய பார்க்கவரவில்லை இல்ல நீங்க” எனக்கூறி முகத்தை திருப்பியவளை பாரத்த வேலம்மை, “வர்ஷா குட்டி… பெரிய பாட்டி ஊருக்கு போனதனால் தான்தாட தாத்தாவும் பாட்டியும் உன்னை பார்க்க வரவில்லை”… கார்த்திக் சித்தப்பா நீங்களும் என்னைய பார்க்கவரவில்லையில்ல… உங்ககூடையும் பேசமாட்டேன் என்றவளை காலில் விழாத குறையாக சமாதானம் செய்தான் கார்த்திக்.
சிறிது நேரத்தில் சமாதானம் ஆன வர்ஷா, “சித்தப்பா இவங்க குட்டி அண்ணன், இவங்க கண்ணன் அண்ணா, இது அம்மு அக்கா… இவங்க தான் என்னுடைய பிரண்ட்ஸ் தெரியுமா?… எப்பையும் எங்கூடத்தான் விளையாடுவாங்க… உமா அக்காவும் மல்லி அக்காவும் நான் கேட்கிறத எல்லாம் செஞ்சி தருவாங்க சித்தப்பா என அவள்பாட்டுக்கு பேசிக்கொண்டே இருந்தாள்”.
குட்டி மற்றும் அம்மு, கண்ணனை காட்டி வேலம்மை, “யார் இந்த பசங்க சம்பந்தி?… புதுசா இருக்காங்க… நான் இது வரையில் பார்த்ததே இல்லையோ” என்பவரின் நியாபகசக்தியை மெச்சி காயத்ரி, “ஐந்து வருஷத்துக்கு முன்ன தான் இங்க வந்தாங்க… நம்ம பார்வதியோட பேத்தியும் பேரன்களும் தான் சம்பந்தி”… “அப்படியா!” என்றவர் கண்கள் அவர்களை ஆராய்ந்தது.
காயத்ரி, “உமாவை காட்டி இவ தான் பார்வதி அம்மாவோட மூத்த பேத்தி அத்தை… ஒத்த ஆளாயிருந்து தங்கை, தம்பிகளை படிக்க வக்கிறா… இந்த குட்டிகளும் அவளை புரிஞ்சிகிட்டு நல்ல படிக்கிறாங்க… அதுமட்டுமல்ல அந்த தம்பிகள ஒத்த வேலை செய்யவிடாமல் அப்படி பாத்துக்கிறோம் உமா”…
இவ மல்லி… “நம்ம ுந்தரத்தோட பொண்ணு… உமாவும் மல்லியும் ரொம்ப நல்ல தோழிகள்”… எங்கே போனாலும் ரெண்டு பேரும் தான் போவாங்க என்றவரிடம்…
வேலம்மை, “என்னைக்கு பெண்கள் தைரியமா இருந்தா தான் பிடிக்கும்”… “உமாவிடம் திரும்பி, உனக்கு எந்த உதவி வேணும்னாளும் தயங்காம என்னை கேளுமா” என்றார் வேலம்மை.
பின் ஜெயந்திிடம், “எத்தனை மாசம் ம்மா?… செக்கப் எல்லாம் கரக்டா போறயா?”… நாளு மாசம் பாட்டி… கரக்ட்டா போரேன் பாட்டி… நான் மறந்தாளும் அவர் மறக்காம கூட்டிகிட்டு போய்டுவாரு பாட்டி.
ஜெயா, “ஜெயந்தி மாப்பிள்ளை கூட்டிகிட்டு வந்து பாட்டிகிட்டையும் அத்தை-மாமகிட்டையும் ஆசிர்வாதம் வாங்கிக்கோம்மா”… சரிங்க அம்மா எனக்கூறி மதனுடன் சென்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினால் ஜெயந்தி.
அப்பொழுது காயத்திரி உள்ளே சென்று அனைவருக்கு தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்.
தண்ணீர் பருகிக்கொண்டே கார்த்திக் கண்களோ தன்னவளை தான் தேடிக்கொண்டு இருந்து. அவனின் கண்களில் தேடலை உணர்ந்த விஷ்ணு, “அடேய் மாப்பு!”… அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு?… உன் ஆளை அதுக்குள்ள காட்டிடுவோமா?… “ஏண்டா மச்சி இந்த வெறி உனக்கு?”… அதுவா?… எல்லாம் ஒரு டைம்பாஸ்காகா தான்… நீ டைம்பாஸ் பண்ண நான் தான் கிடைச்சேனா?… உன்னை விட்டா யாருடா இருக்கா எனக்கு… எல்லாம் என் நேரம்டா… “நீயும் ஒரு நாள் வசமா மாட்டுவ விஷ்ணு அப்ப பாத்துக்கறேன்டா உன்ன”… அப்படி ஒரு நாள் வரவேவராது டா மச்சி… எப்படிடா அப்படி கான்பிடன்டா சொல்லற?… எல்லாம் ஒரு யூகம் தான் கார்த்திக்… கத்திரிக்காய் முத்துனா கடைத்தொருவுக்கு வந்துதான ஆகனும் அப்ப பாத்துக்கறேன்டா என்றவனை பார்த்து வாய் எல்லாம் பல்லாக சிரித்தான் விஷ்ணு… இவர்களின் பேச்சில் வெற்றி மற்றும் மதனும் சிரித்துவிட்டனர்.
சிறிது நேரம் பெருமையாக இருந்தவன் தன்னவளை காணவேண்டும் என்ற ஆவலில் வெற்றியின் கையை மெதுவாக சுரண்டினான் கார்த்திக்.
வெற்றி, “எதுக்குடா என்கையை புண்ணு பண்ற?”… “ஹாம்!”… பழனி முருகனுக்கு வேண்டுதல்… டேய் இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்டா?… கொஞ்ச நேரம்தான் இருடா கூட்டிகிட்டு வருவாங்க… இப்படித்தான் அரைமணிநேரமா சொல்லற, ஆனா கூட்டிகிட்டு வந்த பாடத்தான் காணோம் எனக்கூறியவனை பார்த்துசிறித்தான் மதன்.
மதன், “ஆமாம் இந்த அருண் எங்க காணோம்?… காலையிலிருந்தே அவனை பார்க்க முடியலையே வெற்றி?”… இந்த நேரத்தில் கூட கல்லூரி வேலையை பார்க்க போய்விட்டானா என்ன?… “நானும் காலையிலிருந்து பார்க்கவேயில்லையே மாமா”… அவனுக்கு போன் போட்டு பாரு விஷ்ணு… போன் போகமாட்டிக்குது வெற்றி… இரு விஷ்ணு நான் போட்டு பார்க்கிறேன் எனக்கூறி அழைத்தவனின் அழைப்பும் போகாததால் குழப்பமடைந்தனர்.
விஷ்ணு, “காலையில் எழுந்ததும் வெற்றியோட ரூமில் தான் குளிக்க போனான் அதுக்குபிறகு நான் அவனை பார்க்கவே இல்லையே வெற்றி”.
மதன், “ஒரு வேளை பின்பக்கம் இருக்கானோ என்னமோ?”… அப்படித்தான் இருக்கு தான் இருக்கும் நினைக்கிறேன் மாமா…
அதற்கு விஷ்ணு, “எதுக்கும் நீ போய் பார்த்துவிட்டு வாடா வெற்றி”… வேண்டாம் விஷ்ணு… இப்ப போனா தேவையில்லாத எண்ணம் யாருக்காவது வந்திடப்போகு… அதனால் அமைதியா இருங்க எனக்கூறி வெற்றி மற்றும் விஷ்ணுவையும் தடுத்தார் மதன்.
நேரம் ஆவதை உணர்ந்த நாச்சியார் சகுந்தலா போய் மீனுவை கூட்டிகிட்டு வா… இதே போய் கூட்டிகிட்டு வருகிறேன் அத்தை எனக்கூறி அறைக்கு சென்று மீனுவை அழைத்துவந்தார்.
சமையலறையில் இந்து டீ எடுத்துவந்த காயத்ரி மீனாவிடம் கொடுத்து அனைவருக்கும் கொடுக்க சொன்னவர், உமா மற்றும் மல்லியிடம் ஜூஸ் மற்றும் இனிப்புகளை கொடுத்து அனுப்பினார்… இவர் இருவரும் அவற்றை டீப்பாயின் மீது வைத்துவிட்டு வேளை ஆட்களுடன் நின்று கொண்டனர்.
அவற்றை எல்லாம் அனைவரும் கொண்டுத்துவிட்டு, பெரியவர்களிடம் ஆசி வாங்கிய மீனுவை தன் அருகில் அமர்த்திக்கொண்டார் வேலம்மை… இதை பார்த்த மற்றவர்களுக்கு அத்தனை நிம்மதியா இருந்தது.
இதற்கிடையில் ஒரு முறைக்கூட மீனு கார்த்திக்கை நிமிர்ந்து பார்க்கவில்லை.
அப்பொழுது போன் பேசிவிட்டு வந்த நவ்யா, “உமா இருப்பதை கவனிக்கவில்லை… வெற்றி வெளியே இருப்பதை பார்த்தவள் சற்று குழப்பமடைந்தாள். பின் அனைவரையும் பார்த்தவள் அருண் இல்லாதது அவளின் கண்களில் பட்டது”. இவள் வந்தவுடன் உமா பின்னால் சென்றதால் அவளை கவனிக்கவில்லை. ஆதலால் தன் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தவள் மீனுவின் அருகில் அமர்ந்துவிட்டாள்.
பின் அனைவரும் பேசிமுடித்து நல்ல நேரத்தில் மோதிரம் மாற்றிக்கொள்ளலாம் என முடிவு செய்தன் படி நாச்சியார் வேலம்மையிடம், சம்மந்தி ம்மா, நேரமுடியங்காட்டி மோதிரம் மாத்தி, நிச்சியமும் பண்ணீடலாம்… அப்ப ஆரமிச்சடலாம் நாச்சியா… “காயத்ரி அந்த மோதிரம் சாமியறையில் இருக்கு எடுத்துகிட்டு வாம்மா”… இதோ எடுத்துகிட்டு வருகிறேன் அத்தை எனக்கூறி எடுத்துக்கொண்டு வந்தார்.
அதை நாச்சியாரிடமும் கொடுத்தவர் தர்மனின் அருகில் நின்றுகொண்டார்… அதை வாங்கிய நாச்சியார் மோதிரத்தை வருங்கால தம்பதியினர் கொடுத்து மாற்றிக்கொள்ளும்படி சொன்னார்.
அவரின் கையில் இருந்த மோதிரதை பார்த்த நவ்யாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது… அவளின் அருகில் வந்த வெற்றி, “என்ன நவ்யா அதிர்ச்சியாகிட்டையா?”… அவனின் பேச்சில் தன்னை சமாளித்துகொண்ட நவ்யா, “நீ என்ன லூசா?… இப்ப நான் எதற்காக அதிர்ச்சியாகனும் வெற்றி?”… “நீ திருடி உமா பையில் வைத்த மோதிரம் எப்படி வந்ததுனு அதிர்ச்சியா இருக்கும் இல்ல நவ்யா?”… எங்கிட்ட இல்லாத பணமா?… நான் எதுக்கு திருடனும் வெற்றி?… “உமாவை பழிவாங்கனும் கூட அப்படி பண்ணியிருக்கலாம் நவ்யா… பண்ணாத தப்புக்கு உமாவை சிலுவைசுக்க வைக்க தான இப்படி பண்ணுன நவ்யா… மறுபடியும் இந்த மாதிரி ஏதாவது பண்ணுனையினு எனக்கு தெரிந்தால் இருக்க இடம் தெரியாம போடும், பாத்து பக்குவம் நடந்துக்கோ எனக்கூறி யாரும் அவர்களை கவனிக்கும் முன் அவளை விலகி சென்றுவிட்டான் வெற்றி”.
வெற்றியின் மிரட்டளில் அதிகமான கோபம் கொண்ட நவ்யா மனதில், ‘அந்த மோதிரத்தை உமா திருடிவிட்டானு சொல்லியிருந்தா கூட அவளை மன்னித்துவிட்டு இருப்பாங்க, ஆனா வெற்றி இப்ப அவள் படப்போற அவமானத்தில் அவளே தூக்கு மாட்டி செத்து போய்யிடுவா… என்னை அவமான படுத்தினதுக்கு இதுதான் அவளுக்கு தண்டனை…. உன்னையும் சும்மா விடமாட்டோன் வெற்றி என தன் திட்டம் சற்று நேரத்தில் வெற்றியை அடையப்போகும் மகிழ்ச்சியில் இருந்தாள்.
வெற்றிலை பாக்கு மாத்தி நிச்சியதார்த்தமும் செய்துகொள்ள தயாராகும் அப்பொழுது தான் ஜெயா அருண் இல்லாதது கவனித்தார்… உடனே காயத்திரிய அழைத்தவர், “அருண் எங்க காயத்ரி?… அப்போ இருந்தே அவனை காணோம் காயத்ரி”… தெரியவில்லை க்கா… நான் அவனை காலையில் பார்த்தது தான் க்கா… என்ற சொல்லற காயத்திரி?… அவனுக்கு போன் போட்டு பாரு… அதுவும் எடுக்கவுல்லையே அக்கா… அப்ப ஜெயந்தியை கூப்பிடு… இருங்க நான் போய் கூட்டிகிட்டு வருகிறேன் எனக்கூறி சென்றவர் கையேடு ஜெயந்தியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.
பின் ஜெயந்தியிடம் விசாரித்தார் அவளும் அவனை காணவில்லை என்றதால் மிகவும் பயந்து போய்விட்டார்… இவர்களின் பேச்சை கேட்ட வேலம்மை, “எதுக்கும் எல்லா இடங்களிலும் தேடி பாருங்க… இந்த டெக்ரேன் எல்லா சரியா தூக்கமில்லாம பண்ணுனதும் உடலுக்கு முடியவில்லையே என்னமோ… எதுக்கும் மேல போய் பாருங்க எனக்கூறி அவனுக்காக அனைவரும் காத்திருந்தனர்”.
அங்கு அறையில் கதவை தட்டி பாத்த அருணும் அம்முவும் யாரும் வராததால் சோர்ந்து ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்துவிட்டார்கள்.
அருணின் மனதில் தன்னவளை இவ்வளவு அருகில் பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தாலும், இப்படி இருவர் மட்டுமே இருப்பதை யாராவது பார்த்தால் தவறாக நினைப்பார்கள் என்ற பயமும் ஏற்பட்டது.
அனைந்து போய் இருந்த போனை எடுத்து எத்தனை முயற்சி செய்தும் வேலை செய்யாததால் மிகவும் சோர்ந்து விட்டனர்.
“இதற்கு இடையே ஓயாமல் அழுது கொண்டே இருந்த அம்முவை ஏதேதோ கூறி சமாதானம் செய்வதற்குள் அருணுக்கு போதும்போதும் என்றானது”.
அனைவரும் அருணை தேடும் போது தான் உமா அம்மு இல்லாததை கவனித்தாள்… குட்டியிடம் கேட்க அவனும் பார்க்கவில்லை என்றான்… பின் கண்ணனிடம் கேட்டால் அவனும் அதையே சொல்ல அவளும் பயந்துவிட்டாள்.
சுதாரித்த மல்லி, குட்டி, கண்ணன் மற்றும் உமாவை விரட்டிக்கொண்டு அவளை தேடிச்சென்றனர்… தோட்டம், மீனா அறை மற்றும் அவளின் அறை என அனைத்து இடங்களிலும் பார்த்தும் அவளை காணாததால் மிகவும் பயந்துவிட்டாள்… எதாவது ஆபத்தில் சிக்கிவிட்டாளா என்ற பயம் அவர்களை ஆட்கொண்டது.
ஜெயந்தி, “வெற்றி இவர்களுடன் சேர்ந்து கொண்டு அருணை தேடுவது போல் பாவல செய்த நவ்யா”, அவர்களை அனுப்பிவைத்தவள் அறையை பார்த்தால்… அது வெளியே பூட்டிய படியே இருந்ததால் ஒன்றும் அறியாது போல் ஜெயந்தியை அழைத்து, “மதனி இது யார் ரூம்?… ஏன் பூட்டு வெளியே பூட்டி இருக்கு?” என்றவளிடம்…
“இது வெற்றி ரூம் நவ்யா… அவன் தான் பூட்டி இருப்பானு நினைக்கிறேன்… ஒரு வேளை இந்த அறையில் இருக்காங்களா என்னமோ?”… திறந்து பாக்கலாமா மதனி?… நீ அந்த பாரு நான் போய் அடுத்த ரூம்ல பார்க்கிறேன் எனக்கூறி சென்றுவிட்டாள்.
அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட நவ்யா எப்படியாவது உமாவை அவமானபடுத்திவிட வேண்டும் என நினைத்துக்கொண்டு ஒன்னுமே தெரியாதமாதிரி அறையை திறந்தவள் அம்முவை கண்டதும் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தாள்… எல்லாம் ஒரு நிமிடம் தான்… சுதாரித்துக்கொண்டவள் அனைவரையும் கத்தி அழைத்து அங்கு ஒரு கலவரத்தையே உண்டாக்கிவிட்டாள்.
இவளின் சத்தம் கேட்டு அனைவரும் மேலே வந்துவிட்டனர்.
“அருணுடம் ஒரே அறையில் இருந்ததை அனைவரும் எப்படி எடுத்துகொள்வார்கள் என்ற பயத்தில் உமாவை கட்டிக்கொண்டு அழுதாள்”…
உமா, “நீ எதுக்கு அம்மு இங்க வந்த?”… ஒரு பாப்பா வந்து பாட்டி தான் இந்த அறையில் நகையிருக்கு அதை எடுத்துக்கொண்டு வரசொன்னாங்கனு சொல்லிச்சி அக்கா… நானும் மேலே வந்து பார்த்தேன் இங்க எதுவுமே இல்லை, அதனால் வெளியே போகளாம்னு கதை திறக்க முயற்சி செய்தாள் அது திறக்கவே இல்லை… கதை தன்னுடன் யாரும் கதவை திறக்கமுடியவில்லை க்கா.
அப்போ தான் இவர் பாத்ரூமிலிருந்து வந்தார் க்கா… அவரு என்னைய பார்த்துவிட்டு எதுக்கு இங்க வந்தைனு கேட்டார்… நான் நடந்ததை சொன்னதும் போன் பண்ணினோம், ஆனா யாரும் எடுக்கவே இல்ல… அந்த பதட்டத்தில் போன் கீழே போட்டுவிட்டார் அதுவும் வேலை செய்யவில்லை க்கா எனக்கூறி அழுதவளை சமாதானம் செய்தாள் உமா. சுதாரித்த விஷ்ணு குடிரக தண்ணீர் எடுத்து வந்து இருவருக்கும் கொடுத்தான்.
வெற்றி, “அம்மு… அந்த குழந்தையை தெரியுமா உனக்கு”… தெரியாது வெற்றி சார்… இப்ப பார்த்தா அடையாளம் சொல்லுவையா?… சொல்லுவேன் சார் என்றவளிடம்…
நவ்யா, “தேவையில்லாமல் பொய் சொல்லாத அம்மு… நீ வேணும்னு தான இந்த அறைக்கு வந்த… அருண் அங்க இருக்காருனு உனக்கு தெரியும் தான… எதுக்கு இப்படி ஒழுங்கு மாதிரி பேசாத… பெரிய இடம் வெச்சி போட்டா காலம் முழுக்க ஒக்காந்தே சாப்பிடலாம்னு பிளான் போட்டு கச்சிதமா இப்படி பண்ணுன?… இந்த திட்டத்துக்கு நீ்ங்க எல்லாம் உடந்தை அம்மு என்ன நாக்கில் நரம்பிள்ளாமல் கூறிய நவ்யாவை அருண் பளார் என விட்ட அறையில் கீழே விழுந்துவிட்டாள்”.
உமாவோ கண்கள் கலங்க தன் கோவத்தை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தாள்.
அவனை அடக்கிய வெற்றி, “அம்முவை அழைத்துக்கொண்டு கீழே குட்டியுடன் விளையாடிக்கொண்டு குழந்தைகளை காட்டி, இப்ப பார்த்து சொல்லு அம்மு”… சுற்றிலும் பார்த்த அம்முவின் பார்வையில் விழுந்த ஒரு குழந்தை காட்டி, இந்த குழந்தை தான் சார்… “இந்த குழந்தையா அம்மு, நல்லா நியாபகம் இருக்கா?… எனக்கு நல்லா நியாபகம் இருக்கு சார்”. அந்த குழந்தை தான் என்றவளை அமைதிபடுத்திய வெற்றி, அந்த குழந்தையிடம் சென்று சிறிது நேரம் விளையாட்டு காட்டியவன், “ஒரு விளையாட்டு விளையாடலாம் பாப்பா?”… விளையாடலாம் அங்கிள்… என்ன விளையாட்டு அங்கிள்?… நான் உங்ககிட்ட கேள்வி கேட்பேன் நீங்க அதுக்கு உண்மையான பதில் சொல்லனும், பொய் சொல்லக்கூடாது குட்டிமா… ஓகே அங்கிள் விளையாடலாம்…
“உங்களுக்கு யாரை பிடிக்கும் பாப்பா?”…
“எனக்கு அம்மாவைத்தான் பிடிக்கும் அங்கிள்”.
“யார் கூட வந்தீங்க குட்டிமா?”…
“அம்மா கூட அங்கிள்”.
“அம்மா எங்க இருக்காங்க டா?”…
“மேலே கையை காட்டி அங்கு இருக்காங்க அங்கிள்”.
“அங்கிள் ஒரு முக்கியமான கேள்வி கேட்கிறேன் பாப்பா… அதுக்கு உண்மையான பதில் சொல்லுங்க பாக்கலாம்”…
“இன்னைக்கு யார் வந்து உங்ககிட்ட மேல இருக்க அறையில் நகையிருக்குனு சொன்னாங்க பாப்பா?”…
“நவ்யாவை காட்டி அதோ அந்த அக்கா தான் அங்கிள் சொன்னாங்க”.
“யாரைடா போய் எடுத்துக்கிட்டு வரசொன்னாங்க?”…
“உமாவை காட்டி இந்த அக்காவை தான் எடுத்தக்கிட்டு வரசொன்னாங்கனு அங்கிள்”.
இந்த கேம் நீங்க தான் ஜெய்சிட்டீங்க… சுந்தரத்தை காட்டி, “அதே அந்த அங்கிள் உங்களுக்கு சாக்லெட் தருவாங்க நீங்க போய் வாங்கிக்கோங்க” எனக்கூறி அனுப்பி வைத்தான்.
அவர்கள் சென்றவுடன் நவ்யாவுடன் வந்தவன் “எதற்காக இப்படி பண்ணுன நவ்யா?… அப்படி என்ன கோவம் உனக்கு?… அதுவும் ஒரு பொண்ணோட பெண்மையை கலங்கபடுத்திற அளவுக்கு?… சொல்லு நவ்யா”…
“என்னத்த சொல்ல?. .. இல்ல என்னத்த சொல்ல சொல்லற வெற்றி… போயும் போயும் ஒரு வேலைக்காரி, அவ எல்லாம் எண்ணை கைநீட்டி அடித்தும் இல்லாம?… அதோ இல்லாம எண்ணிய மன்னிப்பு கேட்க வெச்சா அதனால் தான் இப்படி பண்ணினேன்” என்றவளை உமா, “தன் முழு பலத்தையும் ஒன்றாகூட்டி இரண்டு கண்ணத்திலும் மாறிமாறி அடித்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தாள் நவ்யா”.
என்னது போயும் போயும் வேலைக்காரியா? … “ஆமாம் டீ!”… “நான் வேலைக்காரி தான்… அதுக்கு இப்ப என்ன?… எங்களுக்கு எல்லாம் தன்மானம் இல்லையா?… இல்ல சுயகெளரவம் தான் இல்லையா?… அதுக்காக இப்படியாடீ ஒரு பெண்ணை அவமான படுத்துவ?”…
“இப்ப இவ எதிர் காலத்துக்கு யார பொறுப்பு?… உன்ன மாதிரி திமிரெடுத்தவ இல்ல டி என் தங்கச்சி… உன்ன மாதிரி குடித்துவிட்டு சுத்தரவ இல்லடா என் தங்கச்சி… ச்சை நீ எல்லா ஒரு பெண்ணாடீ?”…
நாச்சியார், “என்ன நவ்யா அதுதெல்லாம்?… என்ன தான் பிரச்சனையா இருந்தாளும் நீ இந்த மாதிரி பண்ணினது தப்பு… அதுவும் இந்த வீட்டில் ஒரு பொண்ணோட பெண்மையை கலங்கபடுத்திற மாதிரி நடந்துகிட்டதை நான் மன்னிக்கவே மாட்டேன் நவ்யா… இப்பவே அம்முகிட்ட மன்னிப்பு கேளு நவ்யா”…
“சாரிபாட்டி”… “என்னா இவங்க கிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது… அப்படி மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை… இனி ஒரு நிமிஷம் கூட என்னால் இங்க இருக்க முடியாது, நான் இப்பவே கிளம்பறேன் எனக்கூறி தன் உடமைகளை எடுத்துக்கொண்டு பண்ணையாரின் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டாள்”. அவளை யாரும் தடுக்கவில்லை…