அத்தியாயம் 23:
நம்பியை தாக்கிய விஷ்ணுவை தடுத்த தர்மர் மகன்கள் மூவரையும் பார்த்து, “நீங்க மூனுபேரும் என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது… இந்த நம்பி அவனுடைய இறுதிகாலம் வரை ஜெயிலைவிட்டு வெளியே வரவேகூடாது” எனக்கூறி அன்னைகளுக்கு ஆறுதலாக அவர்கள் கைகளை பற்றி காலுக்கருகே அமர்ந்து கொண்டார் அந்த தனையன்…
சகுந்தலா மற்றும் காயத்திரி இருவருக்கும் நம்பியின் இந்த முகம் முற்றிலும் அதிர்ச்சியாக இருந்தது… அதைவிட ஜெயாவை நினைத்தால் தான் கெஞ்சம் கஷ்டமாக இருந்தது.
“ஜெயாவிற்கு திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அவரின் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக பரமாத்மாவின் காலடியை அடைந்துவிட்டார்கள்”.
“அதன் பிறகு அவருக்கு என இருந்த ஒரே பிறந்தவீட்டு சொந்தம் நம்பி மட்டுமே. நம்பி என்றால் ஜெயாவிற்கு அத்தனை பிரியம். அவரின் மேல் கொண்ட பாசத்தினால் தான் தன்னுடைய சொத்தில் பாதியை அவரின் பெயருக்கு மாற்றிகொடுத்தார்”… அப்படி இருக்க தன் அன்பு அண்ணனின் மற்றொரு முகத்தை அறிந்தால் நிச்சயமாக அவரால் தாங்கிக்கொள்ளவே முடியாது என்று நினைத்து அத்தனை வருத்தமாகவும் பயமாகவும் இருந்தது அவர்களுக்கு.
“தன் அன்னைகளின் அமங்கலி கோலத்தை பார்க்கபார்க்க சந்திரனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை”… அவர்களின் இந்த நிலைக்கு காரணமானவன் இத்தனைவருடங்களாக தங்களுடனே நல்லவன் போல் உறவாடியது இன்னும் வேதனையாக இருந்தது.
“ஊரில் நடைபெறும் அனைத்து நல்ல காரியங்களுக்கு முன்னே நின்று செய்த தன் அன்னை, தந்தையின் இறப்பிற்குப்பிறகு அதிகமாக நல்லகாரியங்களில் கலந்துகொள்ளாமல் தங்களில் யாரையாவது அனுப்பிவைத்த போதெல்லாம் சந்திரன் மனதானது பட்ட வேதனை அவர் மட்டும் அறிந்தது”.
அதிலும் தந்தையின் இறப்பு விபத்து அல்ல திட்டமிட்டு செய்த கொலை என்று அறிந்ததும் முற்றிலுமாக உடைந்துபோய்விட்டார். ஆனால் மனதில் நம்பியின் மீதான கோபம் மட்டும் குறையவில்லை மாறாக அதிகமாகிகொண்டே சென்றது.
அந்த கோபத்துடன் நம்பியிடம் சென்றவர், “இனி உன்னை வெளி உலகத்தையே பார்கமுடியாத படி பண்ணல நான் சந்திரதேவன் இல்ல”… “ஐயோக்கிய பயலே என் அப்பா, சித்தப்பாவை கொலை பண்ணினதும் இல்லாம… நியாயமா பேசர… நியாயம்… இனி தான் இந்த சந்திரதேவனை பத்தி தெரிந்துகொள்ள போற” எனக்கூறிவிட்டு சென்றவரை, “யாரும் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த பழம் வெட்டும் கக்தியினால் தாக்க முயன்ற நம்பியை, கூட்டத்தில் நின்றிருந்த உமாவும் மல்லியும் தள்ளிவிட்டனர்… அதில் நிலை தடுமாறிய நம்பி கீழே விழுந்து விட்டார்”.
நம்பியின் இந்த செயல்களை எதிர்பார்க்காத காவல்துறை அதிகாரிகள் உடனடியாக கைதுசெய்து அழைத்துச்சென்றுவிட்டனர்.
அவர்கள் செல்லும் முன் காவல்துறை உயர் அதிகாரி சந்திரனிடம், இப்ப இவர நாங்க கூட்டிகிட்டு போறோம் சார்… நீங்க ஸ்டேஷன் வந்து இவர் மேல் புகார் கொடுத்திடுங்க… அதுக்குப்பிறகு இவன் எப்படி வெளியே வருகிறான் நான் பாத்துக்கிறேன் எனக்கூறி சென்றுவிட்டார்.
சந்திரன் வெற்றியிடம், “நீ போய் புகார் கொடுத்துவிட்டு வா”… நான் சொல்லற விஷயத்தை நல்லா நியாபகம் வச்சுக்கோங்க மூனு பேரும், “அவன் இனி ஜெயிலைவிட்டு வெளியே வரவேகூடாது.. புரியுதா?”… “எங்களுக்கு புரியுது ங்கப்பா… இனி அவன் வெளியே வரமுடியாது… அவன் பண்ணின அத்தனை பித்தளாட்டத்தை கண்டுபிடிச்சிடோம் ப்பா… அதற்கான அத்தனை ஆதாரமும் எங்ககிட்ட இருக்கு இதுவே போதும் அவனை கலிதிங்க வைக்க”.
அதற்கு விஷ்ணுவோ, “அப்படி இந்த ஆதாரம் எல்லாம் பத்தலைனாக்கூட, மறைந்து போயிருக்க தகிடுதத்தத்தையும் தோண்டியெடுக்காம விடறதா இல்ல பெரியப்பா… எத்தனை துணிச்சல் இருந்தா தாத்தாவை கொலைப் பண்ணினதும்இல்லாமல், உங்களையும் கொலைசெய்ய முயன்றிருப்பான் பெரியப்பா… அவனுக்கான தண்டனை கிடைக்கிற வரை பாட்டிங்க மனசு நிம்மதியாகாது… நம்ம யாராலையும் நிம்மதியா இருக்க முடியாது”… “விஷ்ணு சொல்லறது தான் எனக்கு சரியாகபடுகிறது ப்பா… அவனுக்கான தண்டனையை கண்டிப்பாக வாங்கிகொடுத்தா தான் எங்களால் நிம்மதியாக இருக்க முடியும் ப்பா… வெற்றிக்கூட நாங்களும் போய் புகார் கொடுத்துவிட்டு அதற்கான சாட்சியங்களையும் கொடுத்துவிட்டு வருகிறேன் ப்பா எனக்கூறி வெற்றி மற்றும் விஷ்ணுவுடன் காவல்துறை அலுவலகம் நோக்கி சென்றான் அருண் “…
“அங்கே சென்றவர்கள் நம்பியின் மேல் புகார் கொடுத்தது மட்டுமல்லாமல், அவர்வாயாலே சொன்ன அத்தனை குற்றங்களையும் சாட்சியாக சமர்பித்துவிட்டுவந்தனர். அந்த ஆதாரமே நம்பிக்கு ஆயுள் தண்டனை பெற்று தர போதுமானதாக இருந்தது”.
அங்கே அனைத்து வேலையையும் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர்கள் கண்டது ஜீவன்கள் மெத்தமும் வடிந்தது போல் இருந்த வீட்டினறையே…
சமையளறைக்கு சென்றவர்கள் கண்டது தங்கள் குடும்பத்தினருக்காப் பால் காய்ச்சிக்கொண்டிருந்த உமா மற்றும் மல்லியும் தான்.
அவர்களிடம் தூக்க மாத்திரை கொடுத்த வெற்றி, “இந்த மாத்திரையை எல்லாரும் போட்டு கொடுத்துவிட்டு உமா… புரியாமல் அவனையே பார்த்தவளிடம்… அப்பத்தான் நல்லா தூங்குவாங்க, இல்லையானா அதையே நினைத்துநினைத்து அழுதுகிட்டே இருப்பாங்க… அதனால் தான் உமா”.
அவர்கள் மூவருக்கும் பால் கொடுத்துவிட்டு, “நீங்க முதலில் குடிங்க நான் போய் அவங்களுக்கு கொடுக்கிறேன்… மல்லி, கண்ணா நீங்க ரெண்டு பேரும் இவங்களை பாத்துக்கோங்க.. நான் போய் மத்தவங்களுக்கு கொடுத்துவிட்டு வருகிறேன் எனக்கூறி சென்றுவிட்டாள்”.
மல்லியும் கண்ணனும் அவர்கள் மூவரும் குடிக்கும் வரை அருகிலேயே இருந்து கட்டாயப்படுத்தி, அவர்கள் மூவரும் குடித்தபின் தான் அங்கிருந்து வெளியே சென்றனர்.
பால் கொண்டு சென்ற உமா மதனிடம் மூன்று டம்ளர் மற்றும் கார்த்தியிடம் இரண்டு டம்ளர் கொடுத்து, “இதை பாப்பாக்கும் மதனிக்கும் கொடுத்துவிடுங்க அண்ணா… நீங்க இதை மீனுக்கு கொடுத்துவிடுங்க”… “இரண்டு பேரிடம் மூன்றாவது டம்ளாரை காட்டி இதை இப்பவே நீங்க குடிங்க ண்ணா… நீங்க குடித்த பிறகு தான் நான் போவேன் எனக்கூறி அவர்கள் இருவரையும் குடிக்க வைத்தபின்னே அங்கே இருந்து சென்றாள் உமா”.
அதன் பின் பாட்டிகள், சகுந்தலா மற்றும் காயத்திரி என வீட்டினர் அனைவருக்கும் கொடுத்துவிட்டு, அவர்களை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து, அவரவர் அறைக்கு அனுப்பி வைத்தபின்னே கண்ணன், மல்லி மற்றும் சுந்திரத்தை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றால்.
அவர்கள் சென்றவுடன் தமையன்கள் மூவரும் சிறிது நேரம் பேசி திட்டம் தீட்டி விட்டே படுக்க சென்றனர்.
வீட்டிற்கு போகும் வழியில் கண்ணன் திடீரென சத்தமாக சிரித்தான்… அவன் சிரிப்பதை பார்த்த மல்லி, “எதுக்கு டா இப்படி பேய் மாதிரி சிரிக்கிற… ஒரு நிமிஷம் பயந்தே போய்டேன் டா… எதா இருந்தாலும் சொல்லீட்டு சிரி கண்ணா, நானும் சிரிப்பேன் இல்ல”.
கண்ணன், “அது ஒன்றும் இல்லை மல்லி க்கா… பணம் இல்லாதவங்களுக்கு தான் பணத்தால் பிரச்சினைனா… கொல்லகொல்லையா பணம் வச்சியிருக்கவீங்களுக்குகூட இந்த பணத்தால் தான் பிரட்சனை வருது இல்லக்கா?”… “அது என்னமோ உண்மை தா கண்ணா… நம்மள மாதிரி ஆளுங்க வீட்டுக்கு திருடன் வந்தான் திருட எதுவும் இல்லாமல் காண்டாகி நம்மல வேணா கொலை பண்ணுவான்டா கண்ணா”… “ஆமாம் க்கா” எனக்கூறியவனின் கூற்றில் இருவரும் சிரித்தனர்… அதில் உமா மற்றும் சுந்தரத்திற்கும் கூட சிரிப்புவந்துவிட்டது.
உமா மற்றும் கண்ணனை வீட்டில் விட்டுவிட்டு மல்லியுடன் சுந்தரம் தங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அவர்கள் சென்றவுடன் விளக்குகளை எல்லாம் அனைத்துவிட்டு படுத்த உமாவிற்கு பழைய நிகழ்வுகள் எல்லாம் நினைவிற்கு வந்து பாடாய்படுத்தியது… வெகு நேரம் கழித்து மிகவும் சிறமபட்டு உறங்கிய உமா வழக்கம் போல் அதிகாலையிலேயே எழுந்து வேலையை பார்க ஆரம்பித்துவிட்டாள்.
“இரவு ஜெயாவுடனே படுத்துக்கொண்டால் மீனு காலையில் எழுந்ததும் இரவு நடந்த அத்தனை விஷயத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டாள்… அதில் அதிர்ச்சி அடைந்த ஜெயா மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்”.
வீட்டினர் அனைவரும் அவரை மருத்துவமனையில் அனுமதி செய்தார்கள் , உடனடியாக தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயா.
வெளியே சென்றிருந்த வெற்றி மற்றும் விஷ்ணு விஷயமறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.
அங்கு வந்த வெற்றி மீனுவை வாங்குவாங்கு என்று வாங்கிவிட்டான்.
“இந்த விஷயத்தை பற்றி உன்னை யாரு அம்மா கிட்ட சொல்ல சொன்னா மீனு… எங்களுக்கு தெரியாதா எப்ப சொல்லனும்னு?… உன்னுடைய பொருப்பில்லாத செயலால் அம்மாவை எங்க கொண்டுவந்து நிறுத்தியிருக்க மீனு”… “சாரி அண்ணா… நான் வேணும்னு பண்ணவில்லை ண்ணா… இப்படி ஆகும்னு சத்தியமா நினைக்கவே இல்லை ண்ணா”… “நினைத்து பார்த்து இருக்கனும் மீனு… அம்மாவால் இந்த மாதிரி விஷயத்தை தாங்கிக்க முடியுமா இல்லையானு நினைத்து பாரத்து இருக்கனும் எனக்கூறி வெளியே சென்றுவிட்டான்”…
சந்திரனும் சகுந்தலாவும் மருத்துவர் வந்து எதுவும் இல்லை எனக்கூறிவிடமாட்டார்களா என அறை வாசலையே பார்த்துக்கொண்டு இருந்தனர்… அதனால் இவர்களின் சண்டையை கவனிக்கவில்லை.
“வெளியே சென்ற வெற்றியின் பின்னே சென்ற மதன், அவனை சமாதானம் செய்து மருத்துவமனையில் அருகில் இருந்த பார்க்கில் அமரவைத்துவிட்டு வந்து அழுதுகொண்டு இருந்த மீனுவை சமாதானம் செய்ய, அது எடுபடாமல் போனது”.
விஷ்ணு மற்றும் அருணும் முயன்று தோழ்வியையே சந்தித்தனர்.
“கார்த்திக் தான் இவளிடம் கெஞ்சல், கொஞ்சல் எல்லாம் சரிபட்டு வராது என நினைத்தவன்… அவளை அதட்டி மிரட்டி சமாதானம் செய்து, வெற்றியின் மனநிலையை விளக்கமாக எடுத்துக்கூறி மீனுவை வெளியே கூட்டிக்கொண்டு வந்தவன் பார்க்கில் அமர்ந்திருந்தவனை காட்டி, போ மீனு, போய் பேசு… அவன் ரொம்ப பதறி போய்விட்டான் டா… நீ பேசினா எல்லாம் சரியாகிவிடும் மீனு எனக்கூறி அனுப்பிவைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்”.
வெற்றியிடம் சென்றவள், “சாரி ண்ணா… எங்கிட்ட பேசு ண்ணா.. இனி இந்தமாதிரி பண்ணமாட்டேன் எனக்கூறி அழுதவளிடம்”…
வெற்றி, “சாரி குட்டிமா… நான் தான் தேவையில்லாமல் உன்னை திட்டிவிட்டேன்… எதேதோ டென்ஷனை எல்லாம் உன் மேல் காட்டிவிட்டேன் குட்டிமா”… “அச்சோ… சாரி எல்லாம் வேணாம் அண்ணா… நீ போய் எங்கிட்ட சாரி கேட்டுகிட்டு இருக்கீங்க… ஆனா இனி பேசாம மட்டும் இருக்காத ண்ணா எனக்கூறி சலுகையாக தமையனின் தோழில் சாய்ந்துகொண்டாள் மீனு”.
“உமாவும் மல்லியும் வழக்கம் போல் வேலைக்கு சென்றவர்கள் விஷயம் கேள்வி பட்டு, மருத்துவ மனையில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை சுந்தரம் மூலமாக செய்து அனுப்பி வைத்துவிட்டு, பெரியம்மாவின் நிலை தெரியாமல் தடுமாறிய ஜெயந்திக்கு தேவையானவற்றை மதன் மூலமாக செய்து பார்த்துக்கொண்டனர்”.
“வர்ஷாவின் முழு பொறுப்பையும் குட்டியிடமும் அம்முவிடமும் ஒப்படைத்துவிட்டனர்… அவளும் மற்றவர்களை மறந்து அவர்களுடன் ஐக்கியமாகிவிட்டாள்”.
இப்படியாக இரண்டு நாட்கள் அனைவரையும் படாதபாடு படுத்திய பின்னர் மூன்றாவது நாள் மாலை வீட்டிற்கு வந்தார் ஜெயந்தி.
இந்த இரண்டு நாட்களில் பத்துவயது அதிகமானவர் போல் இருந்தது சந்திரனின் தோற்றம்.
***********************************************
நித்தியனோ அமெரிக்கா வாழ்க்கையின் ஓட்டம் அழுத்து போய் இந்தியாவிலேயே நிறந்தரமாக தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துகொண்டிருந்தான்… அவனின் இந்த செயலானது ஆனந்திக்கு தெரியாது… அந்த அளவுக்கு ரகசியமாக ஏற்பாடுகளை செய்து கொண்டு உள்ளான் நித்தியன்.
ஆனந்திக்குமே இந்த உப்புசப்பில்லாத வாழக்கையை பிடிக்கவில்லை தான்… தன்னவனுக்காகவும் தான் பெற்ற மகனுக்காகவும் இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாள்… அதைவிட மாமியாரின் கண்களில் இருந்து தப்பித்து இங்கு வந்ததோ சந்தோசமாக வாழத்தான்… அந்த சந்தோசமானது இங்கு கிடைத்தாலும் அது தற்காலிகமானது தான்… நிரந்தரமானது இல்லை என்று தெளிவாகவே தெரியும்.
தன் மனைவிக்கு நிரந்தரமான சந்தோஷத்தை கொடுக்கவேண்டும் என்பதற்காகவும், தன் அன்பு தங்கையின் அருகில் இல்லையென்றாலும் காதல் மனைவியின் நிம்மதிக்காக இந்தியாவில் இருக்கலாம் என முடிவெடுத்தவன், அதை தன் நண்பனின் மூலமாக செயல்படுத்திக்கொண்டிருந்தான்.
“தன் தந்தை தன் பெயரிலும் தன் மனைவி ஆனந்தியின் பெயரிலும் எழுதியவைத்திருந்த அறுவது சதவீதம் சொத்துக்களையும் விற்றுவிட்டான்… அதில் வந்த பணத்தை வைத்து மூணாறில் இருந்த நண்பன் கிருஷ்ணாவின் உதவியுடன் அங்கேயே ஏலக்காய் மற்றும் டீ எஸ்டேட்டும், தொழிற்சாலை மற்றும் தன் நண்பனின் உணவகத்தின் சிறிது பங்குகளையும் வாங்கியிருந்தான்… அதோடு கிஷ்ணாவின் வீட்டிற்கு அருகில் இருந்த வீட்டை தன் சுயசம்பாத்தியத்தில் மனைவியின் பெயரில் வாங்கிவிட்டான் நித்தியன்”.
இவன் செய்த அத்தனையும் ஆனந்திக்கு தெரியாது… அவளுக்கு சப்ரைஸ் கொடுப்பதற்காக இதை ரகசியமாக செய்திருந்தான்.
“இங்கே கொஞ்சம் வேலை இருப்பதால், அதை முடித்துவிட்டு தன் சிறிய குடும்பத்துடன் செல்லும் நாட்களுக்காக ஆவலாக காத்திருக்கிறான் நித்தியன். ஆனால் ஆனந்தியிடம் துபாயில் உள்ள கிளைக்கு டிரான்ஸ்பர் கிடைத்திருப்பதாக கூறி பொருட்களை அடுக்கும் ஏற்பாட்டை செய்திருந்தான் நித்தியன்”.
**************************************************
மார்க்கின் கஸ்டடியில் இந்த பரமனும் அவனின் ஆளும் சேர்ந்து மருத்துவமனையிலிருந்து தப்பித்துவிட்டான்.
அங்கிருந்து சென்றவன் நேரடியாக பாண்டிச்சேரி செல்லாது, எப்படி உமாவையும் அம்முவையும் பலிவாங்களாம் என யோசனை செய்து அதற்கான தீர்வை கண்டுபிடித்தவன், அதை செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டான்.
“மருத்துவமனையிலிருந்து வந்த ஜெயாவை யாரும் தனியாக இருக்கவிடவில்லை… யாரேனும் ஒருவர் அவருடனேயே என்னாடும் இருந்தனர்”.
ஜெயா வீட்டிற்கு வந்த அடுத்த நாளே மதன் ஜெயந்தி மற்றும் வர்ஷாவை அழைத்துக்கொண்டு மூணார் சென்றுவிட்டான்.
“தன் தந்தையும் இல்லாத நேரத்தில் தானும் இல்லாமல், பொறுப்புகளை அடுத்தவரை நம்பி அதிக நாட்கள் ஒப்படைத்துவிட்டு இங்கே இருந்தால் சரிபட்டுவராது என்பதாலும் அடுத்த வாரத்திலிருந்து வர்ஷாவிற்கு பள்ளி ஆரம்பிப்பதாளும் மனைவி மற்றும் மகளை தன்னுடன் அழைத்துச்சென்றுவிட்டான் மதன்”.
“ஜெயாவின் மனப்போராட்டத்தை அறிந்த குடும்பத்தினர் கலந்து பேசி மீனாவின் திருமணத்தை விரைவாக வைக்கலாம் என தீர்மானித்து அதற்கான வேலையையும் ஆரம்பித்தனர்… இவர்களின் சூழ்நிலையை அறிந்ததால் வேலம்மையும் தன்னுடைய சம்மதத்தை தெரிவித்துவிட்டார்”.
இந்த முடிவை எடுத்த கார்த்திக் குடும்பத்தினர் அடுத்தநாளே ஊருக்கு சென்றுவிட்டனர்… அதோடு தொழில் ரீதியா மீட்டிங்கிற்காகவும் ஊருக்கு சென்ற இரண்டாவது நாளே கார்த்திக் லண்டன் சென்றுவிட்டான்.
சங்கருக்கோ இருபது நாட்களாக கம்பெனிக்கு செல்லாததால் வேலையானது அதிகமாக சேர்ந்துவிட்டது… அவருக்கு உதவியாக வேலம்மையும் விசாலாட்சியும் கம்பெனி பொருப்புகளை பகிர்ந்துகொண்டனர்.
***********/****************************
இவர்கள் அனைவரும் சென்றவுடன் முற்றத்தில் அமர்ந்திருந்த ஜெயா அனைவரையும் அழைத்தார்… என்னமோ ஏதோ என்று பதரிக்கொண்டு வந்தவர்களின் முன்பாக சகுந்தலாவிடம் நிதானமாக தன் மனதில் இருந்த கேள்வியை கேட்டார்.
“சகுந்தலா… நான் கேட்கிற கேள்விக்கு உண்மையான பதில் சொல்லு… எதையும் எங்கிட்ட இருந்து மறைக்காத சகு”… “அச்சோ அக்கா… உங்ககிட்ட இருந்து நான் என்ன மறைக்க போகிறேன் க்கா?… நீங்க கேளுங்க நான் சொல்லறேன்” என்றவரிடம்…
“எனக்கு விபத்து நடந்து சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த அப்ப உன் அறையில் தான் நான் இருந்தேன் இல்லையா?”… “ஆமாம் அக்கா… என் அறையில் தான் இருந்தீங்க… அங்க இருந்த பெட்டியில் உன்னுடைய துணிகளையும் குழந்தைகள் துணியையும் எதுக்காக வச்சியிருந்த சகு?”… “அதில் இருந்தது எல்லாம் பழையதுணிக்கா… அதான் அதில் தனியா வச்சியிருந்தேன்”… “முன்னையே உன்கிட்ட பொய் சொல்லாதனு சொன்னேன் சகு… என் மேல் பாசம் இருந்தா உண்மையை மட்டும் சொல்லு சகு என்றவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அழுதுகொண்டு நின்றிருந்தார் சகுந்தலா”.
“நான் சொல்லட்டா சகு?… நம்பி உன்னை வீட்டைவிட்டு வெளியே போக சொல்லி மிரட்டினதால் தான் சகு… அதுவும் குழந்தைகளை கென்றுவிடுவேனு மிரட்டியிருக்கான் இல்லையா?”… “அப்படியெல்லாம் இல்லை க்கா” என்றவரிடம் ஜெயா, “அப்ப என் மேல் சத்தியம் பண்ணு சகு… நான் நீ சொல்வது உண்மை என்று ஒத்துகிறேன்”.
அதற்கு சகுந்தலா, “இல்ல நான் பண்ணமாட்டேன்.. நான் எப்படி அக்கா உங்க மேல பொய் சத்தியம் பண்ணுவேன்?… இந்த வாழ்க்கையே நீங்க எனக்கு கொடுத்த வரம்… அப்படியிருக்க நான் எப்படி க்கா உங்களுக்கு கெடுதல் நினைப்பேன்” எனக்கூறி அழுதவளை சமாதானம் செய்ய முயன்ற குடும்பத்தினரை தடுத்த ஜெயா, “நீங்க யாரும் இதில் தலையிடாதீங்க… நானே பார்த்துக்கிறேன்…
எனக்கு தெரிஞ்சி சகுந்தலா பொய் பேசமாட்டா, அதுவும் எங்கிட்ட சுத்தமா பொய் சொல்லமாட்டா… அவளுக்கு எல்லாரையும் சந்தோஷபடுத்தத்தான் தெரியும், வேதனை படுத்த தெரியாது… அவகிட்ட எந்த கல்லமும் இருக்காது…ஆனா இவ என் சகுந்தலா இல்ல… இத்தனை வருஷமா மனசில் கவலையை மறச்சிகிட்டு, வெளியே சந்தோசமா இருக்க மாதிரி நடிச்சிகிட்டு இருக்கா மாமா”… “அப்படியெல்லாம் எதுவும் இல்லை க்கா” என்றவரிடம்…
ஜெயா, “அப்புறம் எதுக்குடீ வீட்டைவிட்டு வெளியே போக முடிவு பண்ணின?… அதுவும் குழந்தைகளை கூட்டிகிட்டு”.
சந்திரன், “என்ன ஜெயா சொல்லற?… வீட்டை விட்டு வெளியே போக இருந்தாளா?… ஆமாம் மாமா.. இது எப்ப ஜெயா?… எனக்கு விபத்து நடந்த அன்னைக்கு மாமா… எவனோ ஒரு வீணா போனவன் சொன்னான் வீட்டைவிட்டு போக எல்லாம் வேலையும் பாத்திருக்கா… நீங்களே அவகிட்ட கேளுங்க எனக்கூறி இருவரையும் விட்டு விலகி சென்றுவிட்டார்”.
“சொல்லு சகு… ஜெயா சொன்னது எல்லா உண்மையா?… யார் உன்னை போக சொன்னாங்க சகு”…
இனி உண்மையை மறைத்து பயனில்லை என அறிந்துகொண்ட சகுந்தலா, “நம்பி அண்ணன் தான் மாமா வீட்டைவிட்டு வெளியே போகளாம்னு மிரட்டுனாங்க… போகவில்லையினா ஜெயந்தியையும் அருணையும் கொண்ணுடுவேணு மிரட்டுனாங்க… அதனால் தான் இந்த வீட்டைவிட்டு வெளியே போக முடிவு பண்ணினேன்… அப்போது தான் அந்த விபத்து நடந்தது மாமா… இந்த கஷ்டத்தில் உங்களையெல்லாம் விட்டு போகமுடியாம என்ன நடந்தாலும் சரீனு இங்கேயே இருந்துவிட்டேன் மாமா”… “இதை ஏண்டீ அப்பையே என்கிட்ட சொல்லாமல் விட்ட?”… “உங்ககிட்டயோ இல்ல அக்காகிட்டையோ சொன்னா அவருகிட்டை சண்டை பண்ணி உறவு இல்லாமல் போய்டும் தான் மாமா சொல்லவில்லை எனக்கூறி அழுதவளை ஆறுதலாக அனைத்துக்கொண்டான் வெற்றி”.
“நம்பி மண்டையை நீ உடைத்தது இதுக்கு தானா வெற்றி?”… “ஆமாம் அம்மா… அந்த நம்பி சித்தியை மிரட்டும்போதே நான் எல்லாதையும் கேட்டுவிட்டேன்… அந்த கோபத்தில் தான் அவன் மண்டையை உடைத்தேன் ம்மா”… “அப்பையே அம்மா கிட்ட சொல்லியிருக்கலாம் இல்ல வெற்றி… உங்ககிட்டயோ இல்ல அப்பாகிட்டையோ சொன்னா வருத்தப்படுவீங்கனு நினைத்துதான் சித்தி சொல்லவில்லைனு எனக்கு தெரியும் அதனால தான் நானும் உங்ககிட்ட சொல்லவில்லை ம்மா”… எல்லாரும் எனக்காக பார்கிற அளவு நான் என்ன பண்ணிட்டேன்? என்றவரிடம்…
சகுந்தலா, “உங்கள் வாழ்க்கையில் பங்கு போட என்னைய கூட்டிகிட்டு வந்து, சம உரிமையும் கொடுத்து, என் தங்கைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தந்தீங்க… அத்தைங்களோட அன்பு கிடைத்தது… பெரிய மாமவோட பாசம் கிடைத்தது… சித்திசித்தீனு பாசத்தை காட்டுகிற பசங்க இதைவிட வேற என்ன க்கா வேண்டும்… இது போதும் எனக்கு… வாழ்க்கை முழுக்க உங்க அன்பு போதும் எனக்கூறிய சகுந்தலாவை அன்புடன் அணைத்துக்கொண்டார் ஜெயா”.
“ஏண்டா விஷ்ணு நீ கூட பெரியம்மாகிட்ட சொல்லவில்லையில்ல?” என்றவரிடம்… “சாரி பெரியம்மா… சகு பெரியம்மா எப்ப பார்த்தாலும் அந்த ஆளு முறச்சிகிட்டே இருப்பான்… அப்படித்தான் ஒரு நாள் சகு பெரியம்மா அவனுக்கு டீ கொண்டு போகும் போது, நீ இன்னுமா வீட்டைவிட்டு வெளியே போகாம இருக்கனு திட்டினான்… அதிலிருந்து தான் எனக்கு அவனை பிடிக்கவில்லை பெரியம்மா… அந்த சமயத்தில் தா உங்களுக்கு விபத்து நடந்தது, அதில் அதை யாருகிட்டையும் சொல்ல தோனவில்லை பெரியம்மா எனக்கூறியவனை செல்லமாக முறைத்தாள் ஜெயா”.
விஷ்ணு, “இந்த விஷயம் உங்களுக்கு எப்படித்தெரியும் பெரியம்மா?… மருத்துவமனையில் நீ வெற்றிகிட்ட பேசும் போது தான் கேட்டேன்… குத்துமதிப்பா போட்டுவாங்கினேன் டா… அதில் பயந்து இவளும் உண்மையை சொல்லிவிட்டா விஷ்ணு எனக்கூறி சிரித்தவரை பார்த்து அனைவரும் சிரித்துவிட்டனர்”.
“சந்திரனுக்கோ தன் மனைவிகளை பார்த்து அத்தனை பெருமையாக இருந்தது… தன் மீது எந்த அளவுக்கு காதலாக இருக்கிறார்களோ அதே அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருப்பதை பார்த்தவருக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது”… அதே அளவுக்கு நம்பியின் மீது கோபமும் இருந்தது.
நாச்சியார் மற்றும் சாரதாவும் சொல்ல முடியாத அளவுக்கு சந்தோசமா இருந்தனர்.
தர்மர் அழுதுகொண்டிருந்த காயத்ரியை அனைத்து ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார்.
“அருணோ மீனுவுடன் சமையளறைக்கு சென்று உமா மற்றும் மல்லியின் உதவியுடன் டீ மற்றும் ஜூஸ் எடுத்துக்கொண்டு வந்தவர்கள் டீபாயின் மீது வைத்துவிட்டு தங்கள் இருவருக்கும் மட்டும் வேண்டியதை எடுத்துக்கொண்டு அவர்களை கவனிக்காமல் அமர்ந்துவிட்டனர்.
இவர்களின் சேட்டையை பார்த்த வெற்றி மற்றும் விஷ்ணுவும் அவர்களின் தலையில் செல்லமாக குட்டிவிட்டு, சிரித்துக்கொண்டே தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மற்றவைகளை அனைவருக்கும் கொடு்த்தனர்… மனம்விட்டு பேசியதால் நிம்மதியாக உணர்ந்தவர்கள், இந்த நிகழ்வை முற்றிலுமாக தவிர்க்க ஆரம்பித்தனர்”.
ஆனால் வெற்றியோ தன் மனதில் நம்பியின் மீதான கோபத்தின் அளவு உயர்ந்துகொண்டே சென்றது… தகுந்த நேரத்தில் தன் கோபத்தையும் வெளிபடுத்திட தயாராக இருந்தான்.
“விஷ்ணுவுக்கும் அருணுக்கும் வெற்றியை பற்றி நன்கு தெரியும்… கண்டிப்பாக இந்த விஷயத்தை விட்டுவிட மாட்டான் எனவும் தெரியும்… அதனால் எந்த சூழ்நிலையிலும் வெற்றியின் அனைத்து செயல்களுக்கும் ஆதரவை அளிக்கவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டார்கள் இந்த அன்பு தமையன்கள்”.