அத்தியாயம் 24:
“நம்பியை கைது செய்த செய்தி மும்பையில் உள்ள கவிதாவிற்கும் நவ்யாவிற்கும் நம்பியின் முக்கியமான ஆட்கள் மூலமாக தெரியவே மூன்று நாட்கள் ஆகிவிட்டது”… அங்கு இருந்து அவர்கள் இருவரும் காங்கேயம் வருவதற்குள் அனைத்தும் முடிந்து விட்டது.
“நம்பியின் மேல் இ்ரட்டைக்கொலை, மரகதலிங்கத்தை கடத்த முன்றது மற்றும் கொலை முயற்சி என மூன்று பிரிவுகளில் புகார் பதிவுசெய்தது மட்டுமல்லாமல் அவர் செய்த அத்தனை குற்றங்களையும் அவர்வாயாலே சொன்ன வீடியோவை சாட்சியாக நீதிபதியின் முன் சமர்பிக்கபட்டதால் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டார் நம்பி”.
அதில் ஆத்திரமடைந்த நம்பி தன்னை பார்க்க வந்த நவ்யா மற்றும் கவிதாவிடம், “நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது… என்னுடைய இந்த நிலைக்கு காரணமானவங்களை சும்மா விடக்கூடாது… எனக்கு அந்த குடும்பமே அழிஞ்சி போய்டுச்சிங்கிற செய்தியோடு வந்தா போதும்… அதுவரை என்னை பார்க்க வராதீங்க…
முக்கியமா இனி அந்த மரகதலிங்கம் அந்த வீட்டில் இருக்கக்கூடாது” என பைத்தியம் பிடித்தது போல் கத்தியவரை நவ்யா, “எப்பப்பாரு மரகதலிங்கம், மரகதலிங்கம்னு… அதை தவிர வேற ஒன்னும் இல்லயா ப்பா பேச?… எங்களை விட உங்களுக்கு அந்த லிங்கம் தான் முக்கியமா போச்சா ப்பா?”.
கவிதாவோ, “நீங்க நினைத்தால் ஒன்று அல்ல பத்து மரகதலிங்கத்தை வாங்கலாம் நம்பி… அப்படி என்ன தான் இருக்கு அந்த மரகதலிங்கத்தில்?… அதை எடுக்க வந்து இப்ப இந்த இடத்தில் இருக்கீங்க… இதெல்லாம் நமக்கு தேவையா நம்பி?”.
நம்பி, “என்ன தெரியும் உங்களுக்கு அந்த மரகதலிங்கத்தை பற்றி?… நம்ம சொத்து முழுவதையும் விற்றால் கூட அந்த மரகதலிங்கத்தை வாங்க முடியாது… அதோட மதிப்பு அப்படி… உங்க ரெண்டு பேருக்காகத்தான் மரகதலிங்கத்தை எடுக்க இங்க வந்தேன், இல்லைனா யாரு வந்து இங்க தங்கப்போறா?… எல்லா பிளானிங் சரியாதான் போட்டேன் நவ்யா… நான் பண்ணின ஒரே தப்பு, அடுத்தவங்க கவனிக்கிற அளவுக்கு கவனம் இல்லாமல் அசால்டா இருந்துவிட்டேன்”.
நவ்யா, “இவ்வளவு மதிப்பு இருக்க மரகதலிங்கம் எப்படி இவங்க கைக்கு கிடைத்தது ப்பா” என்றவளிடம்…
நம்பி, “அக்காலத்தில் வெற்றியோட முன்னோர்கள் இந்த பகுதியை ஆண்ட சிற்றரசருக்கு படைதளபதியா இருந்தாங்க… அவர் பேர் வேல் வேந்தன்… அப்போ நடந்த போரில் அரசனை முதுகில் தாக்கவந்த எதிரிநாட்டைச்சார்ந்த தளபதியை கொன்று அரசரை காப்பாற்றினார் வேல் வேந்தன்” …
“அந்த போரில்கூட இவங்க தான் வெற்றியடைந்தாங்க… அந்த மகிழ்ச்சியில் அரசன் தளபதி வேல் வேந்தனுக்கு இந்த மரகதலிங்கத்தை பரிசாக கொடுத்தாா்… அதை பாதுகாக்கிற பொருப்பையும் வேல் வேந்தன் வம்சத்தில் பிறக்கும் மூத்த ஆண்வாரிசுகக்கு கொடுத்ததுமட்டுமல்லாமல்…. தன் தங்கையான மங்கையர்க்கரசியை அவருக்கு திருமணம் செய்து வைத்து வெற்றி குடும்பம் இருக்க அல்லியூரையும் சன்மானமாக கொடுத்தாா்”.
அதோடு அல்லியூரில் தங்க விரும்பிய மக்களையும் அனுப்பி வைத்தார் அரசர்… வேல் வேந்தனும் மங்கையர்க்கரசியும் வாழ்க்கையை நடத்த தேவையான சிலஉதவிகளை செய்து கொடுத்தார் அரசர்.
[the_ad id=”6605″]
இனியும் தன் பிறந்த நாட்டிலேயே இருந்தால் அது கணவனுக்கு மரியாதை அல்ல என்பதை உணர்ந்து, திருமணம் முடிந்த கையேடு இளவரசி மங்கையர்க்கரசி, தன் கணவனையும் அவரின் குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு அல்லியூருக்கு வந்துவிட்டாங்க…
அவங்க இங்க வந்தபோது அல்லியூர் வெறும் காடாகத்தான் இருந்தது நவ்யா… “அந்த காடு வெறும் அல்லிக்குளமும் மரங்களும் மலையும் நிறைந்த பகுதியாதான் இருந்தது”.
“தளபதி வேல் வேந்தன் மற்றும் அவரின் மனைவியின் கடும் முயற்சியில் இயற்கையை அழிக்காமல் மக்கள் வசிக்ககூடிய இடமா மாற்றி அமைச்சாங்க… இவங்க முயற்சிக்கு உதவியா மக்களும் இருந்தாங்க”.
இப்படித்தான் அல்லியூர் உருவானது நவ்யா… “பல காலம் கழித்து அந்த ஊரில் பாதியை அங்கு வசிக்கும் மக்களின் பேருக்கு மாற்றி கொடுத்தாங்”க.
“இ்ந்த மரகதலிங்கத்தை பற்றி அறிந்த பல பேர் திருடமுயற்சி செய்து உயிரை விட்டு இருக்காங்க… இதுக்காக பல அரசே அழிந்து போய் இருக்கு நவ்யா”.
இப்ப சொல்லுங்க ரெண்டு பேரும், “இவ்வளவு சிறப்பு வாய்ந்த மரகதலிங்கத்தை எப்படி விட்டு வைக்க?… இந்த லிங்கத்தையும் வித்து வர பணத்தை வைத்து ஏழு தலைமுறைக்கும் உட்கார்ந்து திண்ணா கூட தீராது கவிதா.
இப்ப சொல்லுங்க?.. இது யார்கிட்டையும் இருக்கா அவங்க தான் இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரனா இருக்க முடியும்”.
கவிதா, “இவ்வளவு நாளா இதை பற்றி ஏன் நம்பி என்கிட்ட சொல்லாமல் விட்டால்?… அப்பவே சொல்லியிருந்தீங்கனா இந்த மரகதலிங்கம் இப்ப நம்ம கைகளில் இருந்திருக்கும் நம்பி…
சரி விடுங்க… இனி இதை பற்றி கவலை உங்களுக்கு வேணா… எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன் நம்பி… கூடிய சீக்கிரமா நீங்க வெளியே வரது என்னுடைய பொருப்பு நம்பி”.
அதற்கு நவ்யா, “என்ன கவிதா பேசர… இவரு ஜெயிலில் இருக்கிறது பத்தாதுனு நீயும் உள்ளே போக முடிவு பண்ணீட்டையா கவிதா… முதலில் இவரை வெளியே எடுத்து மும்பைக்கு கூட்டிகிட்டு போர வழிய பாக்கலாம்”.
கவிதா, “நீ சும்மா இரு நவ்யா… இந்த மரகதலிங்கம் மட்டும் நம்ம கையில் கிடைத்துவிட்டா போதும் நவ்யா”… “இவருகூடையே ஜெயிலில் உட்கார்ந்து கலி திங்க வா கவிதா?”… கடுப்படிக்காத டீ… நான் ஒன்றும் உன்னைய கடுப்படிக்கவில்லை கவிதா… “நடக்க போற உண்மையை சொன்னேன்… விதி யாரை விட்டது ?… உன்னை விட கவிதா”.
நவ்யா கூறிய எதையும் காதில் வாங்காத கவிதா நம்பியிடம், “இப்ப எப்படி அதை எடுக்கிறது நம்பி?… இதை உண்ணால் தனியா எடுக்க முடியாது கவிதா… உனக்கு துணையாக ஒரு ஆளை வச்சுக்கோ… ரொம்பரொம்ப நம்பிக்கையான ஆளா பாத்து வச்சிகோ கவிதா”… இந்த ஊரில் யாரையும் எனக்கு தெரியாது நம்பி என்றவரிடம்…
நம்பி, “அது ஒன்றும் பிரச்சனையில்லை கவிதா… பாண்டிசேரியில் இருந்த பரமனை பிடி, அவனை இந்த வேலைக்கு பயன்படுத்திக்கோ… அவனா நம்பி?”… “அவனை பற்றி நல்லா தெரிஞ்சும், அவனை போய் பார்க்க சொல்லீற்ங்க”… “அவனுக்கு பணம்தான் முக்கியம் கவிதா… அவன் கேட்ட பணத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக கொடு, காரியத்தை கச்சிதமா முடிச்சிடுவான்… அவனை பற்றி நான் சொல்லி நீ தெரிஞ்சுக்க எதுவும் இல்லை கவிதா… இதற்கு அவன் தான் சரியா இருப்பான்… ஆனா மரகதலிங்கத்தை பற்றிய உண்மையை மட்டும் அவன்கிட்ட சொல்லாத கவிதா”.
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததை கேட்ட நவ்யா, “நீங்க என்னமோ பண்ணுங்க கவிதா… நான் வெற்றியோட குடும்பத்துகிட்ட பேசி புகார் திரும்ப வாங்க முடியும்னு பார்க்கிறேன்… முடியாதுனு சொன்னா மும்பை போய் வக்கீல் கிட்ட பேசி வேற ஏதாவது பன்னலாமானு பார்க்களாம்” என்றவளை…
நம்பி, “போதும் வாயை மூடு நவ்யா… அவங்ககிட்ட போய் புகார் வாபஸ் வாங்க சொல்லி கெஞ்சப்போறையா?… இதைவிட வேற வழியே இல்லையா நவ்யா?”… “இதையெல்லாம் நீங்க கொலை பண்ண முன்பு யோசனை செஞ்சியிருக்கனும் ப்பா” என்றவளை முறைக்க மட்டுமே முடிந்தது நம்பியால் …
கவிதா வாங்க போகலாம் எனக்கூறி அவளை அழைத்துக்கொண்டு அவர்கள் தங்கியிருந்த உணவுவிடுதியில் விட்டுவிட்டு அல்லியூர் நோக்கி சென்றால் நவ்யா.
உமா நாளை தம்பிகள் மற்றும் தங்கைக்கு பள்ளி, கல்லூரிக்கு முதல் நாள் என்பதால் கண்ணனிடம் பணம் கொடுத்தவள், இந்த பணத்தில் மூனு பேருக்கும் தேவையானவைகளை வாங்கிகோங்க… காசு பத்தலைனா சாய்ந்திரமா வந்து வாங்கி்தருகிறேன்… என்னென்ன வேணுமா எல்லாத்தையும் எடுத்துவச்சிக்கோங்க… அப்புறம் காலையில் எழுந்ததும் அவசரஅவசரமா தேடுகிறவேலையெல்லாம் இருக்கக்கூடாது… குட்டி உனக்கு தான் முக்கியமா சொல்லறேன் டா…
“நான் எல்லாத்தையும் ஏற்கனவே வைத்துவிட்டேன் க்கா… அண்ணாவும் அக்காவும் தான் இன்னும் எடுத்துவைக்கவில்லையே க்கா”… “அதை அவங்க பாத்துக்குவாங்க டா… நீ உன் வேலையை பார்… எனக்கு நேரமாகுது… எதா இருந்தாலும் சாய்ந்திரமா பேசிக்கலாம் எனக்கூறி சென்றுவிட்டாள் உமா”.
அவள் சென்றதும் அம்மு, “அக்கா உன்னைய கேள்விகேட்டா நீ தான் பதில் சொல்லனும்… அதைவிட்டுவிட்டு எதுக்குடா எங்களைய போட்டுவிடற?”… அதுவா அக்கா, சும்மா டைம்பாஸ்க்கு…
அதற்கு கண்ணன், “வரவர உன் லொல்லு தாங்க முடியவில்லை”… “அதுவா ண்ணா?…அம்மு க்கா தான் இன்னும் கொஞ்சம் நாளில் நம்மையெல்லாம் விட்டுவிட்டு அந்த வீட்டுக்கு போய்டும் இல்லயா?”… ஆமாம் டா குட்டி… அதுவரை உங்க ரெண்டு பேரையும் தொந்தரவு பண்ணலாம்னு சபதமெடுத்து இருக்கேன் ண்ணா…
அம்மு, “என்னை ரொம்ப மிஸ் பண்ணுவையாடா குட்டி?”… “கொஞ்சமா மிஸ் பண்ணுவேன் க்கா”… “நீ என்ன மிஸ் பண்ணும் போது எல்லாம் அங்க வந்திடு குட்டி… யாரும் உன்னைய எதுவும் சொல்லமாட்டாங்க”… கண்டிப்பா வருவேன் க்கா எனக்கூறி அம்முவின் மடியில் படுத்துக்கொண்டான் குட்டி.
அவர்களை சகஜமாக்கும் பொருட்டு கண்ணன், “நீங்க ரெண்டு பேரும் பாசபயிரை வளர்த்தது போதும் வாங்க கடைக்கு போய் தேவையானதை வாங்கிகிட்டு வந்துடலாம் எனக்கூறி அவர்களை அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றான்”.
வேலைக்கு சென்ற உமா மற்றும் மல்லியும் காலை உணவை முடித்து விட்டு அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் மதிய வேளையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது வாசலில் கார் சத்தம் கேட்க யார் என பார்க்க சென்ற மல்லி கண்டது காரிலிருந்து இறங்கிய நவ்யாவை தான்.
‘இவ எங்க இங்க வரா?… இவ அப்பன போலீஸ்க்கு புடிச்சி குடுத்ததுக்காக பழிவாங்க வந்திருப்பாளோ?… என்னவோ இருந்தாலும் பாத்துக்கலாம்’ என நினைத்தவள் நவ்யாவை முறையாக வரவேற்கவும் தவரவில்லை.
“வீட்டில் யாரையும் கானோம்?… எல்லாரும் எங்க போய்டாங்க?”… “பெரிய ஐய்யா தோப்புக்கு போயிருக்காங்க… மத்த ஆம்பளைங்க பழப்பண்ணையும் இருக்காங்க… மத்தவங்க மேலத்தான் இருக்காங்க… நீங்க உட்காருங்க நான் போய் கூட்டிகிட்டு வருகிறேன் எனக்கூறி சென்றுவிட்டாள்”.
[the_ad id=”6605″]
அவள் சென்றதும் உமா டீ கொண்டு வந்து கொடுக்க அதை எடுத்துக்கொண்டவள் மற்றவர்களுக்காக காத்திருந்தாள்… மேலிருந்து பெண்கள் அனைவரும் வருவதற்கும் வெளியே இருந்து ஆண்கள் வருவதற்கும் சரியாக இருந்தது.
நாச்சியார், “கோபத்தில் போன பெண்ணு திரும்ப வர மாட்டேன் நினைத்தேன்… என்ன விஷயமா வந்திருக்கனு தெரிஞ்சிக்கலாமா நவ்யா”…
“தாராளமாக தெரிஞ்சிக்கலாம் பாட்டி… எல்லாம் என் அப்பா விஷயமா தான் வந்தேன்” என்றவள் முழுசா பேசி முடிப்பதற்குள் அருண், “அன்னைக்கு அவ்வளவு பேசிட்டு போன இப்ப எதுக்காக வந்த?… கண்டிப்பா புகாரை வாபஸ் வாங்க மாட்டோம்… உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என்றவனிடம்…
நவ்யா, “நான் எப்ப புகாரை வாபஸ் வாங்க வந்தேன்னு சொன்னேன் அருண்?… இன்பேக்ட் உங்களுக்கு நன்றி சொல்லத்தான் இங்க வந்தேன்”.
சந்திரன், “நன்றி சொல்லவா?… எங்களுக்கு எதுக்கு நீ நன்றி சொல்லனும் நவ்யா?”…
“அம்மாவை கொன்னவனை ஜெயிலில் போட்டதுக்கு நன்றி சொல்லித்தான் ஆகனும் ப்பா”…
“என்ன வெற்றி சொல்லுற?”… “ஆமாம் அப்பா… நவ்யா அம்மாவை கொன்னது நம்பி தான்… தாத்தாவையும் உங்களையும் கொலைசெய்ய பிளான் பண்ணும் போது நவ்யா அம்மா கேட்டுவிட்டாங்க… இப்படி பண்ணாதீங்கனு கண்டிச்சியிருக்காங்க அந்த ஆளு கேட்கவில்லை… போலீஸ்க்கு போன் பண்ணுவேன் சொல்லியிருக்காங்க… அந்த கோபத்தில் நம்பி அவங்களை மேலிருந்து கீழேதள்ளிவிட்டுவிட்டான்… அதில் அடிபட்டு தான் நவ்யா அம்மா இறந்தாங்க”.
இந்த விஷயம் கொஞ்ச நாளுக்கு முன்ன தான் நம்பி அவன் ரெண்டாவது பெண்டாட்டிகிட்ட சொல்லியிருக்கான்… அப்ப தான் இவ அந்த விஷயத்தை தெரிஞ்கிட்டா.
நான் சொல்லறது எல்லாம் சரியா நவ்யா எனக்கேட்டவனிடம்… சரி தான் வெற்றி.
இந்த விஷயம் உனக்கு எப்படித்தெரியும் வெற்றி தர்மனிடம், “டிடக்டிவ் மூலமாக தம்பியை பற்றிய அத்தனை விஷயத்தையும் தெரிஞ்சிகிட்டேன் சித்தப்பா… நவ்யாவை பற்றியும் தெரிஞ்சிகிட்டேன்… அவ என்ன முயற்சி பண்ணியும் தம்பியை ஜெயிலில் தல்லமுடியவில்லை… அதில் தான் கெஞ்சம் ரூடா நடந்துக்கிறா எனக்கூறி ஆழ்ந்து பார்த்தவன் பார்வையை தாங்காது தலையை தாழ்த்திக்கொண்டாள் நவ்யா”.
அவன் பன்ன தப்புக்கு எங்ககிட்ட ஏன் அப்படி நடந்துகிட்ட நவ்யா? என்ற காயத்திரியிடம்…
“முதலில் இங்க வரவே எனக்கு பிடிக்கவில்லை காயத்ரி அத்தை… இங்க வந்தது தங்கச்சி மேல உயிரா இருக்க அண்ணன் மாதிரி ஓவரா நடிச்சானா, அதில் கொஞ்சம் டென்சன் ஆயிட்டேன்”.
“இவங்க யாருக்கும் அவனோட நடிப்பு வேற தெரியவில்லை… அந்த டென்ஷனை தான் குட்டிகிட்ட காட்டிட்டேன்”.
அதில் கண்ணனை நான் அடிச்சி, அம்மு என்னைய அடிக்க… அப்ப தான் உமா மன்னிப்பு கேட்க சொன்னதும் கொஞ்சம் கோபம்தான்…. ஆனா அது அப்பவே போய்டுச்சி.
“அம்மு நிச்சியத்தப்ப தான் அவன் யாருகிட்டையோ மரகதலிங்கத்தை கடத்த சொல்லி பிளான் பண்ணினான்… அந்த பிளான் நானும் கேட்டேன்… உமா பாத்ததையும் பார்த்தேன்… ஏதாவது பண்ணி அவனை திசை திருப்ப நினைத்தேன்”.
“அப்பத்தான் வெற்றி உமாவையே பார்த்துகிட்டிருந்ததை பார்த்தேன்… அவளும் உன்ன அப்பஅப்ப பார்த்ததை பார்த்தேன்… ஒன்றும்ஒன்றும் இரண்டுனு பிளான் போட்டேன் வெற்றி… ஆனா அது பதினொன்னா போயிடுச்சி”.
நவ்யா இவ்வாறு சொன்னதும் அடக்கமாட்டாமல் சிரித்துவி்ட்டான் வெற்றி… மேலே சொல்லு என சைகை காட்டியதும் அவனை முறைத்துவிட்டு திரும்பவும் தொடர்ந்தாள் நவ்யா.
நவ்யா, “சிரிக்காத வெற்றி… அன்னைக்கு நீ ரூமில் இல்லாம வெளியே இருந்ததை பார்த்தும் அப்படியே சாக் ஆயிட்டேன் டா”…
“நல்ல வேலையா அருணும் அம்முவும் அந்த ரூமில் இந்ததை பார்த்ததும் தான் எனக்கு மூச்சு வந்துச்சு… சரி அப்படியே யாருக்கும் தெரியாமல் அவளை வெளியே கூப்பிட்டளாம்னு பார்த்தா… அந்த ஆளு வேற யாருக்கும் தெரியாமல் பூஜை அறைக்கு மறைந்துமறைந்து போனான்”, “அதுவும் இல்லாம அருண் வேற அப்பஅப்ப அம்முவை பார்த்து ரொமேன்டிக்கா லுக்விட்டுகிட்டே இருப்பானா… அதை வச்சி நானே ஒரு முடிவுக்கு வந்ததால் தான் இவன் கல்யாணம் வரை வந்திருக்கான்…
இல்லைனா இந்த அருண் வெறும் லுக்கோட தான் சுத்திகிட்டு இருந்திருப்பான் எனக்கூறியதும் மல்லி விழுந்துவிழுந்து சிரித்துவிட்டாள்… அதை பார்த்த அனைவரும் சிரித்துவிட்டனர்”.
அதில் காண்டானவன் நவ்யா மற்றும் மல்லியை பார்த்து முறைக்க, மல்லி இன்னும் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்… விஷ்ணுவும் அவளை அடக்க பார்க்க ஆனால் மல்லி சிரிப்பை நிறுத்திய பாடு இல்லை.
அதில் சாரதா கூட சிரித்துவிட்டார்… உமா அவளை பார்த்து முறைத்த பின் தான் கொஞ்சம் கட்டுக்குள் வந்தாள் மல்லி.
ஜெயாவிடம் வந்த நவ்யா, “சாரி அத்தை… நீங்களும் அந்த ஆளு மாதிரி தான் இருக்கீங்கனு நினைத்து இங்க வராமல் இருந்துவிட்டேன்… இனி அடிக்கடி இல்லைனாலும் வருஷம் ஒரு முறையாவது வருவேன்… வரலாம் இல்ல அத்தை?”… “கண்டிப்பா வரலாம் டா… இது உன் அத்தை வீடு நவ்யா… உனக்கு இல்லா உரிமையா டா…ரொம்ப நன்றி அத்தை… எங்க நீங்களும் என்னைய வெறுத்துவிடுவீங்களோனு நினைத்தேன்… அப்படி இல்லையினு நினைக்கும்போது சந்தோசமா இருக்கு”.
நாச்சியார் மற்றும் சாரதாவிடம் வந்தவள், “ரொம்பரொம்ப சாரி பாட்டி… எனக்கு நல்லா தெரியும் இந்த வீட்டுக்கு யார்வந்தாலும் வயிறு வாடவிடாம பார்த்துப்பார்த்து செய்வீங்கனு… இந்த வீட்டு இதுவரை வந்தவர்களுக்கு மரியாதை மட்டும் தான் கிடைத்திருக்கும், அதை எல்லாம் கெடுக்கிற மாதிரி நான் நடந்துகிட்டேன் பாட்டி… நீங்க தான் இதில் ரொம்ப வருத்தமடைந்திருப்பீங்க”.
நாச்சியார், “அந்த வருத்தமெல்லாம் இப்ப போய்டுச்சி நவ்யா”.
சாரதா, “நீ நினைத்த காரியம் சரிதான் நவ்யா… ஆனா அதுக்கான வழிதான் தப்பா போய்டுச்சி… எங்களுக்கு உன் மேல் எந்த கோபமும் இல்ல நவ்யா”.
சந்திரனிடம் வந்தவள், “சாரி மாமா… என்னால் நீங்க தலை குனியும் படியா ஆயிடுச்சி இல்ல?”… “விடுமா இனி அதை பற்றி பேசவேண்டாம்… நீ அப்படியே உன் அம்மா மாதிரி… நீ வாழ்க்கையில் ரொம்ப சந்தோசமாக இருக்கனும் ம்மா”… “கண்டிப்பா அதற்கான முயற்சி எடுக்கிறேன் மாமா எனக்கூறி வெற்றியை பார்த்தாள் நவ்யா”.
“ஆனாலும் சகுந்தலா அத்தை நீங்க இவ்வளவு பொருமையா இருக்கக்கூடாது… அந்த ஆளு அப்படி முறைக்கிறான் நீங்க அமைதியா இருக்கீங்க… உங்க அமைதி யாருக்கும் வராது போங்க… எனக்கு உங்ககிட்ட பிடிச்சதே அதைத்தான் என்றவளை சிரிப்புடனே வாஞ்சையாக பார்த்தார் சகுந்தலா”.
இதுக்கு கூட சிரிப்புவந்துவிட்டது தானா?… போங்க சகுஅத்தை… இவங்களை விட உங்க சிரிப்பை ரொம்ப மிஸ் பண்ணுவேன் அத்தை.
நீ எதுக்கு டா என்னை மிஸ் பண்ணனும்?… எப்ப எல்லாம் பேசனும்னு தோனுதோ, அப்ப எல்லாம் ஒரு போன் போடு… இந்த அத்தை எங்க இருந்தாலும் உங்கிட்ட பேசிட்டுதான் மறு வேலை பார்ப்பேன் நவ்யா.
இறுதியாக உமாவிடம் வந்தவள், “இவங்களை விட உன்கிட்டையும் அம்முகிட்டையும் தான் உமா நான் மன்னிப்பு கேட்கனும்… அன்னைக்கு நான் பேசினது ரொம்ப அதிகம் தான்… என்னால் கோவத்தையெல்லாம் கட்டுபடுத்த முடியாம இப்படி பேசிவிட்டேன்… சத்தியமா மனதார அப்படி பேசவில்லை உமா” என்றவளிடம்…
[the_ad id=”6605″]
உமா, “எல்லாருக்கும் கோபம் வரது சகஜம் தான்… அந்த கோபம் கூட நாம தனிமையை உணரும் போது அதிகமா வெளிபடும்… உனக்குள் இருக்கிற தனிமை உணர்வு தான் இப்படி நடக்க காரணம்… இப்படி பண்ணினது கூட நல்லதுக்குதானு நினைத்துக்கோ, அதுக்காக நீ எடுத்த பாதை தான் இந்த பிரச்சனைக்கு காரணம்… இனி இதை எல்லாம் மறந்திடலாம் நவ்யா… அதை பற்றியே பேசுனா காயம் தான் அதிகமாகும்”.
“உன்னை பார்த்தா பொறாமையா இருக்கு மல்லி… இவ்வளவு நல்ல தோழி உனக்கு கிடைத்திருக்கா… நீ ரொம்ப ரொம்ப கொடுத்துவச்சி இருக்க மல்லி… கண்டிப்பா நவ்யா… இவ மட்டும் என் வாழ்க்கையில் வரவில்லையினா, குட்டி, அம்மு மற்றும் கண்ணன் வராம போயிருப்பாங்க”.
அதற்கு உமா, “மல்லி கிடைக்க நான் தான் கொடுத்து வச்சியிருக்கனும் நவ்யா… முன்னபின்ன தெரியாத ஊரில் கிடைத்த முதல் தோழி இவ… என்னுடைய கஷ்டம், சந்தோசம், துக்கம் எல்லாத்துலையும் மல்லி இருந்திருக்கா நவ்யா”.
“உங்க கூட நானும் ஜாயின் பண்ணிக்கலாமா?… கண்டிப்பா நவ்யா… எனக்கு எந்த உதவி வேணும்னாளும் தயங்காம உங்க ரெண்டு பேருகிட்டையும் தான் கேட்பேன் எனக்கூறி சிரித்தவளை பார்த்த மல்லி மற்றும் உமா இருவரும் சிரித்தனர்”.
அதன் பின் வெற்றியிடம் வந்தவள், “ஒரு முக்கியமான விஷயம் வெற்றி… அந்த ஆளோட பெண்டாட்டி மரகதலிங்கத்தை கடத்த திட்டம் போட்டு இருக்கா… அதுக்கு பாண்டிச்சேரியில் யாரோ பரமனு சொன்னா… அவனை பார்க்க நாளைக்கு கிளம்பறா… நான் நாளைக்கு மும்மை கிளம்பறேன் வெற்றி… அங்கேயிருந்து அடுத்த நாளே லண்டன் போரேன்… வர ரெண்டு வருஷம் ஆனாலும் ஆகும் வெற்றி”.
இதுக்கும் மேல இங்க இருந்தா என்னுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இவங்களையெல்லாம் விட்டு தூரமா இருந்தாதான் நான் நல்லா இருப்பேன்… சரி அப்ப நான் கிளம்பறேன்.
ஜெயா, “என்ன நவ்யா இது… இப்ப தான் நாங்க உனக்கு இருக்கோம் இல்ல, அப்புறம் ஏண்டா நீங்க லண்டன் போகனும்?”.
“அங்க மேல் படிப்புக்கு அப்ளை பண்ணியிருக்கேன் அத்தை… அதுவும் இல்லாம கொஞ்சம் தனிமை தேவைப்படுது… படிப்பு ஒரு வருஷம் தான் அத்தை… அதை முடித்துவிட்டு உடனே வந்தாலும் வந்துடுவேன் அத்தை”.
“கண்டிப்பா ஒரு வருஷத்தில் வந்திடுவ தான நவ்யா?”… “உங்களுக்காக கண்டிப்பா ஒரே வருஷத்தில் வந்திடறேன்… அதற்கு இடையில் இந்த தடியனுங்க கல்யாணம் வைங்க உடனே வந்துடுவேன் அத்தை”.
“மீனாவிடம் சென்றவள் தன் கைபையில் இருந்த பெட்டியை கொடுத்து, இது உன்னுடைய கல்யாணத்திற்கு என்னுடைய பரிசு… கார்த்திக் அண்ணா உன்னை ரொம்ப காதலிக்கிறார் மீனு, நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்ல கப்புள் மீனு”.
“ரொம்ப நன்றி நவ்யா”… “இதை நீ கல்யாணம் அன்னைக்கே கொடுக்கலாம் இல்லை?”… இப்ப லண்டன் போனா லீவ் கிடைக்க மூனு அல்லது நான்கு மாதங்கள் ஆகும் மீனு… அதனால் தான் இப்பவே கொடுக்கிறேன். அப்ப கல்யாணத்திற்கு வரமாட்டியா?… முயற்சி பண்ணி பார்க்கிறேன் மீனு.
விஷ்ணு மற்றும் வெற்றியிடம் வந்தவள், “சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோங்க டா… லவ் பண்ற பொண்ண இப்படி வீட்டுக்குள்ளேயே வச்சுகிட்டு எப்படிடா இப்படி நல்லவனா இருக்கீங்க ரெண்டு பேரும்?… நானா இருந்தா இன்னேறம் கல்யாணம் பண்ணி தேன்நிலவுக்கே போய்ட்டு வந்திருப்பேன்… ஆனாலும் நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு ஸ்லோவா இருக்கக்கூடாது டா”.
அதற்கு வெற்றி, “நான் காதலிக்கிற விஷயம் எல்லாருக்கும் தெரியும் நவ்யா… அந்த பக்கம் இருந்து சிக்னல் வந்தா உடனே கல்யாணம் தான்… அப்ப உன்ன கூப்பிடறேன் கண்டிப்பா நீ வரனும்”… கண்டிப்பா வருவேன் டா.
மாமா, அத்தை, பாட்டி எல்லாருக்கும் போய்ட்டுவறேன்.
மல்லி, உமா போய்ட்டு வருகிறேன்.
அனைவரின் அன்பையும் பெற்று அல்லியூரில் இருந்து கிளம்பினால் நவ்யா.
ஆனால் உமாவோ நவ்யா சொன்ன பரமனின் பெயர் சொன்னதால் இருந்தே ஒரே குழப்பமாக இருந்தாள். மும்பையில் இருக்கும் அவள் சித்திக்கு எப்படி பரமனை தெரியும் என்பது தான் அவள் குழப்பம்.
இங்கிருந்து சென்ற அடுத்தநாளே கவிதா மற்றும் நம்பிக்கு சந்தேகம் வராதவாறு லண்டன் சென்றுவிட்டாள் நவ்யா.