அத்தியாயம் 25:
அல்லியூரில் இருந்து வந்ததும் நவ்யா கவிதாவிடம் வெற்றியின் குடும்பத்தினர் புகார் வாபஸ் வாங்க மறுத்துவிட்டதாக கூறியவள்.
“இதெல்லாம் சரிபட்டு வராது கவிதா… நம்ம லாயர் கிட்ட சொல்லி அடுத்து என்ன பண்ணலாம்னு கேட்கலாம்… இப்பவே மும்பை போனா தான் சரியா இருக்கும் கவிதா… உன்னுடைய துணிகளை எல்லாம் எடுத்துவை… அடுத்த பிளைட்க்கு நாம கிளம்பனும்”.
“நான் பாண்டிச்சேரி போகனும் நவ்யா… நம்பி சொன்ன வேலையை முடித்துவிட்டு தான் நான் மும்பை வருவேன்… நீ வேணா போ நவ்யா”.
“விளையாடத கவிதா… எனக்கு நாளைக்கு லண்டனுக்கு பிளைட்… மறந்துவிட்டையா?”.
“நான் எதையும் மறைக்கவில்லை நவ்யா… நீ தான் மரகதலிங்கத்தோட மதிப்பை மறந்துவிட்டு லண்டன், சிங்கப்பூர்னு பினாத்திகிட்டு இருக்க… பேசாம இந்த மரகதலிங்கத்தை எடுத்துகிட்டு ரெண்டு பேரும் லண்டன் போய் செட்டில் ஆகிடலாம்… அவங்க இருந்தே நம்பி வழக்கையும் நடத்தலாம் நவ்யா”.
“மரகதலிங்கத்தை எடுத்தா லண்டன் போக முடியாது கவிதா… புழல் சிறைக்கு தான் போகமுடியும்… அந்த மரகதலிங்கத்தை அவ்வளவு பாதுகாப்பா வச்சியிருக்காங்க. பேசாம எங்கூட மும்பைக்கு வா கவிதா… அது தான் உனக்கு நல்லது…
அவரு பேச்சை கேட்டுகிட்டு சிங்கத்து குகையில் போய் மாட்டிக்க நான் தயாராயில்லை… நான் ஊருக்கு கிளம்பறேன், நீ வரதுனா வா, இல்லை இங்கேயே இருந்து கம்பி எண்ண தயாரா இரு… என்னைய விட்டுவிடுங்க நான் என் வாழ்க்கையை வாழனும்… ஜெயிலுக்கு போக நான் தயாராயில்லை… இப்பக்கூட டைம் இருக்கு நல்லா யோசனை செய்து முடிவெடு கவிதா” எனக்கூறி சென்றுவிட்டாள்.
அவள் அளைக்கு சென்ற நவ்யா வெற்றியிடம் இவர்கள் பேசிய அனைத்து விஷயங்களையும் சொல்லிவிட்டாள்.
[the_ad id=”6605″]
மாலை வரை பார்த்த நவ்யா, கவிதா வரமாட்டேன் என பிடிவாதம் பிடித்தால் இவள் மட்டும் மும்பைக்கு கிளம்பிவிட்டாள். அங்கு சென்றவள் தங்கள் வக்கீலிடம் விவரத்தை கூறி காங்கேயம் அனுப்பி வைத்துவிட்டு அடுத்த நாளே கிளம்பி லண்டன் சென்று விட்டாள்.
பரமனை பற்றி நவ்யா பேசியதிலிருந்து குழப்பத்தில் இருந்த உமா விரைவாக வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
மல்லிக்கு பரமனின் செயலை பற்றி ஒன்றுவிடாமல் தெரியுமாததால் அவளுக்கும் சுற்று பயமாக தான் இருந்தது. எங்கே மறுபடியும் இவனால் உமாவின் வாழ்க்கையில் பிரட்சனை வந்துவிடுமே என பயந்தாள் மல்லி.
இந்த மனநிலையிலேயே வீட்டிற்கு வந்தவர்களுக்கு ஒரு வேளையும் ஓடவில்லை… எல்லா வேலைகளையும் அம்மு, கண்ணன் மற்றும் குட்டியுமே பார்த்துக்கொண்டனர்.
ஆனால் மனதிற்கு ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது, ஏதோ பெரியதாக நடக்கப்போகிறது என்று தோன்றியது.
இரவு உணவை முடித்துவிட்டு படுத்தவளுக்கு தூக்கம் தான் வந்தபாடியில்லை.
அடுத்த நாள் வழக்கம் போல் அதிகாலையிலேயே எழுந்த உமா வேலைகளை விரைவாகவே முடித்துவிட்டாள் காங்கேயம் செல்வதாள்.
“அம்மு எழுந்திரு கல்லூரிக்கு செல்ல நேரமாகிடுச்சி பாரு… கண்ணா, குட்டி எழுந்து குளித்துவிட்டு வாங்க எனக்கூறி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, அவர்களின் மதிய உணவினையும் கொடுத்து அனுப்பிவைத்தாள் உமா”.
மூவரும் ஒன்றாக சென்றவர்கள் குட்டியை பள்ளியில் விட்டுவிட்டு தங்கள் கல்லூரி நோக்கி சென்றார்கள்.
கண்ணன் கல்லூரிக்கு அடுத்து அம்முவுடையது என்பதால் அவன் இறங்கிய பின் இறுதியா இவள் இறங்கினாள்.
“கல்லூரிக்கு முதல் நாள் எப்படி இருக்குமோ என பயந்துகொண்டே என்றவளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, அருண் அவளுக்கு முன்பாகவே காத்திருந்தான். அதில் சற்று தெளிந்தவள், அருணை பார்த்து புன்னகைத்துவிட்டே அவளுடைய அறைக்குள் சென்றாள்”.
என்னதான் அருண் மற்றும் அம்மு இருவரும் சரியாக பேசிக்கொள்ளவில்லை என்றாலும் சிரிப்பு மற்றும் பார்வையே ஒரு அளவுக்கு போதுமானதாக இருந்தது இருவருக்கும்.
“சுந்தரம் ஏற்கனவே சொன்னதை போல் நாச்சியாரிடம் கேட்டு, அவரின் மூலமாகவே நகையை பாலீஸ் போடுவதை பற்றி நகைக்கடை முதலாளியிடம் பேசியதால் சற்று நிம்மதியாக உணர்ந்தனர்”.
உமா, மல்லி மற்றும் சுந்தரம் மூவரும் சேர்ந்து நகைகளை பாலீஸ் செய்ய காங்கேயம் சென்றனர்.
நாச்சியார் மூலமாக வந்ததால் கடையின் முதலாளிலியே வந்து இவர்களை அழைத்துச்சென்று மரியாதையாகவே நடத்தினார்.
நகைகளை பாலீஸ் பண்ண கொடுத்தவர்களை இரண்டு நாட்கள் கழித்து வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறி அனுப்பிவைத்தார்கள்.
அதை முடித்துவிட்டு நேராக பண்ணையாரின் வீட்டிற்கு வந்துவிட்டனர்… வந்தவர்கள் நேராக வேலையில் ஆழ்ந்துவிட்டனர்.
அப்பொழுது அங்கு வந்த ஜெயா உமாவிடம், “அம்முக்கு இன்னைக்கு முதல் நாள் இல்ல உமா”… “ஆமாம் ம்மா… அதுதான் கொஞ்சம் பயமா இருக்கு… இவ்வளவு பயம் இருக்கவ அவ கூட போய் விட்டுவிட்டு வந்திருக்கலாம் இல்ல”… அது சரிவராது ம்மா… ஏன் உமா? என்றவரிடம்…
“இத்தனை நாள் நான் அவக்கூடையே இருந்தேன் தான், ஆனால் இனி அப்படி இருக்க முடியாது… அவ வாழ்க்கையில் இன்னெருத்தரும் வரபோறாங்க… நான் அவளைவிட்டு தள்ளியிருந்தா தான் அவங்களுக்கும் இடம் கொடுப்பா ம்மா” என்றவளிடம்…
“கண்டிப்பாக உன்னுடைய இடத்தை யாராலும் நிறப்பமுடியாது உமா” என்ற குறள் வந்ததிசையில் அனைவரும் திரும்பி பார்க்க அங்கு வெற்றி நின்றிருந்தான்… “அது அவளுடைய வருங்கால கணவனாக இருந்தாளும் சரி, அவள் பெற்ற பிள்ளையாக இருந்தாளும் சரி.. என்னைக்குமே நீ, நீ தான்… அதை நல்லா புரிஞ்சிக்கோ உமா… அவளை விட்டு நீ விலகினா அதற்கு காரணமா இருந்தது அருண் தான் நினைப்பா… அருணைவிட்டு விலகி தான் போவா உமா… நீ வழக்கம் போல இரு அதுதான் அம்மு வாழ்க்கைக்கு நல்லது… அப்புறம் இன்னொரு விஷயம்… நீ என்னைக்குமே அம்மு, கண்ணன் மற்றும் குட்டியை விட்டு பிரியும் சூழ்நிலை வராது… அதுக்கு நான் பொருப்பு உமா” எனக்கூறி தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அவன் சென்றதும் ஜெயா உமாவிடம், “எம் பையனோட மனசு எனக்கு புரிந்துவிட்டது உமா… உனக்கும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்… இந்த கும்பத்திலிருக்கிறவங்களுக்கு எப்பவும் பசஞ்களோட சந்தோசம் தான் முக்கியம்… பணம் மட்டுமே வாழ்க்கைக்கு நினைக்கிறவங்க இங்க யாரும் இல்லை… யோசனை செய்து முடிவெடு உமா” எனக்கூறி சென்றுவிட்டார்.
“வெற்றியின் கூற்றில் உமாவின் மனது மகிழ்ச்சியாக இருந்தாளும், சற்று கவலையாகவும் இருந்தது… அன்று முழுவதும் ஒரு நிலையில் இல்லாமல் தவித்து கொண்டிருந்தாள் உமா”.
இவளின் நிலையை பார்த்த மல்லி வீட்டிற்கு வரும் வழியில், “உனக்கு என்ன தான் பிரச்சனை உமா?… ஏன் இப்படி மண்டைய போட்டு பிச்சிகிட்டு இருக்க?… உனக்கு வெற்றி அத்தனை பிடிச்சியிருக்கா, இல்லையா புள்ள?”…
“பிடிச்சி இருக்கு மல்லி… ரொம்பரொம்ப பிடிச்சியிருக்கு மல்லி, அவரை மாதிரியே எனக்கு சின்னதுங்களும் முக்கியம்… அவருக்கா இவங்களை என்னால் விடமுடியாது புள்ள”… “உன்னைய யாரு புள்ள அவங்களை விட சொன்னாங்க?… நிச்சயம் பெரிய குடும்பத்து ஆட்கள் நினைக்கமாட்டாங்க… இதை பற்றி வெற்றி அத்தான் கிட்ட பேசினா உனக்கு தெளிவான முடிவு கிடைக்கும் உமா… இப்ப நிம்மதியா இருக்கபாரு, சின்னதுங்களும் வீட்டுக்கு வர நேரமாகிடுச்சி, உன் முகத்தை பார்த்தே கண்டுபிடித்துவிடுவாங்க”… “ஆமாம் புள்ள”… “அதிலும் குட்டியிருக்கானே ரொம்ப ரொம்ப தெளிவாக இருப்பான் மல்லி”… “அவனாவது பரவாயில்லை நேரடியாக உன்ன தான் கேள்வி கேட்பான்… இந்த கண்ணன் இருக்கான் பாரு நேரடியா என்கிட்ட வந்து நோன்டிநோன்டி கேள்வி கேட்பான்… அவனையெல்லாம் என்னால் சமாளிக்க முடியாது ப்பா எனக்கூறி சிரித்தவளை பார்த்து உமாவும் சிரித்துவிட்டாள்”.
இவர் பேசியதையெல்லாம் மறைந்திருந்து கேட்ட வெற்றிக்கு உமாவின் மனதானது தெளிவாக புரிந்துவிட்டது… அதைவிட அவளின் பயத்தையும் தெளிவாக புரிந்து கொண்டான்… இதையெல்லாம் விட இவர்களின் பாசமும் புரிந்தது.
உமாவின் பயத்தை எப்படி போக்குவது என யோசனை செய்தவன் நேரமாவது உணர்ந்து வீட்டிற்கு சென்றுவிட்டான்.
[the_ad id=”6605″]
##########
நவ்யா மும்பை சென்றதும் பாண்டிச்சேரி சென்ற கவிதா, எங்கு தேடியும் பரமனை கண்டுபிடிக்க முடியாமல் போனது.
அதனால் நம்பியின் பாண்டிச்சேரி வீட்டில் தங்கியவள், அங்கு இருந்தே பரமனை டிடக்டிவ் மூலமாக தேட ஆரம்பித்தாள்… அதே சமயம் மும்பையில் உள்ள தொழில்களையும் இங்கு இருந்தே பார்த்துக்கொண்டாள்.
இவள் இங்கே அவனை தேடிக்கொண்டிருக்க, அந்த பரமனை கேரளாவில் ஆயுர்வேத வைத்திய சாலையில் நிம்மதியாக வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தான்.
“அவனின் திட்டமே மார்க்கின் கண்களில் இருந்து தப்பித்து வைத்தியம் முடிந்தபின் மும்பை சென்று நம்பி மற்றும் கவிதாவை பார்ப்பது தான்”.
ஆனால் அவன் பார்க்க நினைத்த கவிதாவோ இவனை தேடிக்கொண்டு பாண்டிச்சேரி வந்திருப்பதை அறியாமலும், மார்க்கிடம் இருந்து தப்பித்துவிட்டதாக நினைத்து ராஜவைத்தியம் செய்துகொண்டிருந்தான்.
“பாவம் அவனுக்கு தெரியவில்லை அவன் இன்னும் மார்க்கின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறான் என்று… அதைவிட வைத்தியசாலையிலன் ஒவ்வொரு இடத்திலும் மார்க்கின் ஆட்கள் இருக்கிறார்கள் என்றும்… இங்கு வந்ததிலிருந்து அவனின் கண்காணிப்பில் தான் இருக்கிறான் என்று உணராமல் இருந்தான் பரமன்”.
@@@@@@@@@
மகாலட்சுமியோ ராமனுடன் நேரடியாக நித்தியனின் நண்பனைக்கான மூணார் சென்றுவிட்டார்.
ஊருக்கு சென்றிருந்த நித்தியன் நண்பன் கிருஷ்ணான் மூணார் வந்து ஒரு வாரம் ஆகிறது என்ற செய்தியை அறிந்த மகாலட்சுமி இந்த முறையாவது அவனை பார்த்துவிடவேண்டும் என நினைத்து இன்றுகாலையே மூணாருக்கு கிளம்பிவிட்டார்.
மாலையே மூணாறு சென்றவர் நேரடியாக கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்றுவிட்டார்… அங்கு அவரை வரவேற்றது கிஷ்ணாவின் மனைவிதான்.
கார் சத்தம் கேட்டு வெளியே வந்த கிஷ்ணாவின் மனைவி புதிதாக வந்தவரை உள்ளே வரவேற்றார்.
“வாங்க ம்மா… வாங்க சார்… உங்களை நான் இதுக்கு முன்னாடி பார்த்து இல்லையே ம்மா… யாரை பார்க்க வந்திருக்கீங்க?… அத்தையும் மாமாவைத்தான் பார்க்க வந்தீங்கனா… அவங்க அமெரிக்கா போய் இருக்காங்க வர எப்படியும் மாசகணக்காகும் ம்மா”.
“என் பேர் மகாலட்சுமி… இவன் என தம்பி ராமன்… இது முன்ன நான் இங்க வந்தது இல்லை… இப்ப தான் முதல் முறையாக இங்க வருகிறேன்… நான் பார்க்க வந்தது கிருஷ்ணாவை… அவன் அப்பா அம்மாவை இல்ல”.
“நீங்க யாரும் தெரிந்து கொள்ளலாம் ம்மா… நான் கிருஷ்ணன் நண்பனோட அம்மா… கிருஷ்ணாவின் முக்கியமான விஷயமா பேச வந்தேன்”.
“அப்படியா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அவர் வந்திடுவார்… நீங்க என்ன சாப்பிடரீங்க ம்மா?”… அதெல்லாம் எதுவும் வேண்டாம் ம்மா… அட இருங்க ம்மா… குளிருக்கு இடமா எதாவது எடுத்துக்கிட்டு வரசொல்லறேன்… வேலையாள் அழைத்து இரண்டு டீ சொன்னவள் டீ வரும் வரை அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்பொழுதே கிஷ்ணாவின் வந்துவிட, வீட்டிற்கு புதிதாக வந்தவர்களிடம் முறையாக வரறேற்றவன்… மனைவியிடம் கண்களால் யார் என விசாரிக்க, அவளே தெரியாது என சைகை செய்தால்.
அதன் பின் அவர்களிடமே சென்று விசாரிக்க, “நீ தான் கிருஷ்ணனா வா ப்பா? … ஆமாம் ம்மா… எனக்கு உங்களை பார்த்ததா நியாபகம் இல்ல ம்மா… நீங்க யாரும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க என்றவனிடம்…
“நான் நித்தியன் அம்மா… இவன் அவன் மாமா”… “சாரி… சாரி அம்மா… நான் உங்களை பார்த்தது இல்லை, அதனால் தான் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை… அந்த தடியன் எப்படி இருக்கான் ம்மா?… பார்த்து கூட ரொம்ப வருஷமாச்சா… உங்க முகவரி தான் எனக்கு தெரியாது, அவனுக்கு தான் என்னுடைய முகவரி தெரிந்திருந்தும் வரவில்லை… இப்ப கூட உங்களை இங்க அனுப்பிவிட்டு அந்த நாய் வரவில்லையா ம்மா… அவன் நம்பர் தாங்க ம்மா… பழைய நண்பரை மாற்றிவிட்டான் போல் இருக்கே ம்மா?”…
“என்ன ப்பா இப்படி சொல்லற… அவன் இருக்க இடம் உனக்கு தெரியாதா?… உன்னை நம்பி தான் இங்கே வந்தே கிருஷ்ணா” என்றவரிடம்…
கிருஷ்ணன், “என்ன ம்மா சொல்லறீங்க… அவன் சென்னையில் தான இருப்பான்… எனக்கு புரியவில்லை… கொஞ்சம் புரியும் மாதிரி சொல்லுங்க ம்மா”.
‘நித்தியனும் அவன் பெண்டாட்டியும் வீட்டைவிட்டு போய் ஆறு வருஷத்துக்கும் மேல ஆச்சிப்பா… எங்க இருக்கான்… என்ன ஆனான் ஒன்னுமே தெரியவில்லை ப்பா… அவன் காணாம போன அன்னைக்கே அவன் தங்கச்சியையும் காணோம் ப்பா… அவங்க மூனு பேருக்கும் என்ன ஆட்டின் தெரியவில்லை” எனக்கூறி அழுதவளை சமாதானம் செய்தவன், “கவலை படாதீங்க ம்மா… நான் எங்களுடைய நண்பர்கள் அனைவருக்கிட்டையும் கேட்டு சொல்லறேன் எனக்கூறி அவரை சமாதானம் செய்தான்”.
அத்தனை நேரமும் அமைதியாக இருந்த ராமன் மகாலட்சுமியின் நடிப்பை பார்த்து, ‘உலகமகா நடிப்பு டா சாமி… இந்த அக்கா மாதிரி யாராலையும் இருக்கமுடியாது… அந்த சிவாஜியை தோத்துபோய்டுவாரு இதுகிட்ட… பெத்த பையனையே பணத்துக்காக தேடி முதல் அம்மா இதுதான் இருக்கும்… அந்த உமா இந்த அக்கா கொடுமைகளில் தாங்காத தப்பிச்சிகிட்டு வீட்டைவிட்டு ஓடிபோயிடுச்சி… என்னவோ தாய் பாசத்தில் ரெண்டு பேரையும் தேடுவது போல் நடிப்பைப்பாரு… அப்பா சாமி இதுகிட்ட இருந்து என்னை உயிரோடு காப்பாத்திடு அதுவே போதும்’ எனக்கு என அவசரமாக நினைத்துக்கொண்டான்.
அதன் பின் அவர்களுடன் சேர்ந்து மகாலட்சுமியை சமாதானம் செய்வது போல் நடித்தான் ராமன்.
கிருஷ்ணாவும் அவன் மனைவியும் மகாலட்சுமியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணாவின் வீட்டிலிருந்து செல்லும் வழியில் எல்லாம் மகாலட்சுமியையே பார்த்துக்கொண்டிருந்த பரமனிடம், “என்ன டா ராமா அப்படி பார்க்கிற?”… “ஒன்னும் இல்ல க்கா… சும்மா சொல்லுடா… எப்படி க்கா இப்படி?… என்னமா நடிக்கிற… நான் கூட ஒரு நிமிடம் நீ அழுத்தும் உண்மையின் நம்பிட்டேன்” என்றவரிடம்…
“காரியம் ஆகனும்னா இப்படியெல்லாம் கண்ணீரை வீணாக்கவேண்டி வரும்… நெஞ்சுவலி எல்லாம் கூட வரும் டா… இதெல்லாம் சகஜம்”… “அது சரிக்கா. .. நீ எதுக்காக நித்தியனை பற்றி கேட்ட?… அடேய் அவங்கிட்ட ஆறுபது சதவீதம் சொத்து இருக்கு இல்ல அதை வாங்கத்தான்”… “அக்கா அவன் உன் பையன்”… “அதுக்கு இப்ப என்ன?… பணம் நமக்கு வேணும்னா புருசனாவது பையனாவது போடா”… “அப்ப அவனையும் போட்டு தல்லீடுவையா க்கா?”… “தேவையே இல்லை, அவன் பெண்டாட்டியை கடத்தி வச்சி மிரட்டினா தானா பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிடவான் ராமா” என்றவர் கண்மூடி சீட்டில் சாய்ந்துகொண்டார்.
‘அடங்கொக்கமக்கா இது கூட இருக்க வரை என் உயிருக்கு உத்திரவாதம் இல்லை டா சாமி… முதலில் ஊர் போய் சேர்வதற்கான வழியை பார்க்கனும்… ஆடுமாடு மேச்சாவது சோறு திண்ணுக்கலாம்… இனி இங்க இருந்த எனக்கும் பால் ஊற்றி விடுவாங்க… பணமும் வேணா, அந்த உமாவும் வேணா எனக்கு உயிர் தான் வேணும் என நினைத்துக்கொண்டான் ராமன்’.
அவர் இருவரும் சென்றதும் “என்னங்க இது.. இந்த அம்மா இப்படி புளுகுது?”… “நல்ல வேலையா நித்தியன் இந்த அம்மாவை பற்றி சொல்லி எச்சரிக்கை செய்து இருந்தான்… நீ எதாவது உளறி வச்சையா?”… “இல்லீங்க… அண்ணா இந்த அம்மா போட்டோவையே முன்னமே அனுப்பியிருந்ததாள் நான் கொஞ்சம் சுதாரித்துவிட்டேன்”… “ஏண்டீ நாளுவருசத்துக்கு முன்னாடியே பார்த்த மூஞ்சி இன்னுமா நியாபகம் இருக்கு?”… “சில மூஞ்சி நாம இறக்கிறவரை மறக்கமுடியாது மாமா, அந்த லிஸ்டில் இந்த அம்மாவும் வருதாட்டுகிறது”.
இதுபற்றி அப்புறமா பேசலாம்… முதல்ல அண்ணுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லுங்க மாமா… அதுவும் சரிதான்… முதலில் அவங்ககிட்ட பேசிட்டு வந்துடலாம் எனக்கூறி தன் மனைவியையும் அழைத்துச்சொன்றவன் நித்தியனுக்கு வீடியோ கால் செய்தான்.
“என்னடா மது இன்னைக்கு கால் பண்ணியிருக்க?… எப்படிடா இருக்க?… நீ எப்படிமா இருக்க?… எங்கடா என் செல்லக்குட்டியை காணோம்? என கேள்வியா அடிக்கிற நித்தியனை முறைத்தான் கிருஷ்ணன்”.
[the_ad id=”6605″]
“என்ன டா பாசமா பாக்கிற”… “உங்கிட்ட எத்தனை தடவை சொல்லறது என்னை மதுனு கூப்பிடாதனு… ஏதோ பொண்ணுங்களுக்கு கூப்பிடறமாதிரி இருக்குடா… ஒழுங்கா கிருஷ்ணான் கூப்பிடு இல்ல மதன்னு கூப்பிடு… அதுவும் இல்லைனா மதன் கிருஷ்ணன் கூப்பிடுடா என்ற நண்பனை பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்த நித்தியன்”, எனக்கு மதுனு தான் கூப்பிட வருதுடா… நான் என்ன பண்ண சொல்லு? என அவனையே கேள்வி கேட்டவரை பார்த்த ஆனந்தி மற்றும் ஜெயந்தியும் சிரித்துவிட்டனர்.
ஆம் மதன் தான் கிருஷ்ணன்… அவனின் முழு பெயர் மதன் கிருஷ்ணன்.
ஆனந்தி, “அண்ணா… அவரை விடுங்க… எப்படி இருக்கீங்க?… பாப்பா எங்க?”.
(இனி கிஷ்ணாவை மதன் என்றே அழைக்கலாம்).
மதன், “நான் நல்லா இருக்கேன்… உன் தோழி என்னை நல்லா கவணிச்சிக்கிறா… பாப்பா இன்னைக்கு தான் முதல் நாள் பள்ளிக்கு போய் இருக்கா ம்மா… எங்க குட்டியை காணோம்?”… தூங்கிறான் அண்ணா.
ஜெயந்தி, “அடியே ஆனந்தி… நானும் இங்க தான்டீ இருக்கேன்… உங்க அண்ணன் வந்தா நானும், நித்தியன் அண்ணனும் கண்ணுக்கு தெரியாதாடீ?” என்றவளிடம்…
ஆனந்தி, “உங்க அண்ணன் எல்லாம் என் கண்ணுக்கு நல்லா தான் தெரியராங்க டீ… நீ ஒரு மாதம் போன் கூட பண்ணாம, அம்மா வீட்டுக்கு போய் உட்கார்ந்துகிட்ட”… “இதுக்கு தான் கோபம்?… டாக்டர் பெட் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க அதில் ஒரு வாரம் போய்டுச்சி… தங்கச்சி நிச்சியத்திற்கு போய்ட்டு அப்படியே திருவிழாவையும் பார்த்துட்டு வர இருபது நாட்கள் ஆகிவிட்டது ஆனந்தி… போன் எடுத்தாலே பாட்டிங்க திட்டறாங்க நான் என்ன பண்ண டீ?”… “குழந்தைக்கு நல்லதில்லை தான் பாட்டி சொல்லியிருப்பாங்க… அதனால் பொழச்சி போ”.
நித்தியன், “டாக்டர் என்ன சொன்னாங்க ம்மா?… குழந்தை ஆரோக்கியமா இருக்கா?… எந்த பிரச்சினையும் இல்லையில்ல ம்மா?” என்றவனிடம்…
“அதெல்லாம் இல்லை அண்ணா… பாப்பா ஆரோக்கியமா இருக்கு… இனி எல்லா வேலைகளையும் பண்ணலாம்னு சொன்னாங்க”.
மதன், “ஒரு முக்கியமான விஷயம் டா நித்தியன்… கொஞ்சம் நேரத்திற்கு முன்பு தான் உன் அம்மா வந்தாங்க… நீ காணாம போய் ஆறு வருஷத்துக்கும் மேல ஆயிடுச்சினு, எனக்கு எதாவது உன்னை பற்றி தெரியுமானு தேடி வந்தாங்க டா… நான் எதுவும் தெரியாத மாதிரி பேசி அனுப்பிவிட்டேன் டா”.
நித்தியன், “ரொம்ப ஜாக்கிரதையா இருடா… அவங்க ரொம்ப டேஞ்சரானவங்க… சாமர்த்தியமாக உங்கிட்ட விஷயத்தை வாங்க பார்ப்பாங்க நீ உசாரா இருடா… நாங்க அங்க வரவை நீ பார்த்துக்கோ, நான் சீக்கிரமா வர பார்க்கிறேன் மதன்”.
“உன் தங்கையை பத்தியும் விசாரிச்சாங்க டா நித்தியன்”… “என்ன பாப்பாவை பற்றியா?… பாப்பாவை பற்றி விசாரிக்கிறாங்கனா கண்டிப்பா ஏதோ பண்ண போறாங்க மதன்… இப்ப நான் எப்படி அவகிட்ட விஷயத்தை பற்றி சொல்லுவேன் தெரியவில்லையே?”… “அண்ணா நிஜமா மகாவை பற்றி விசாரிச்சாங்களா?”… “ஆமாம் ஆனந்தி”… “அவங்க இவளை தேடராங்கனா மகா உயிருக்கு ஆபத்து… இப்ப என்ன பண்ண நித்தியன்?”… “எனக்கும் தெரியவில்லை ஆனந்தி… பாப்பா நம்பர் இருந்தாலாவது போன் பண்ணி எச்சரிக்கை செய்யலாம்”.
ஜெயந்தி, “என்ன அண்ணா சொல்லறாங்க?… போன் நம்பர் கூட இல்லையா?”.
“ஆமாம் ஜெயந்தி… அவளால் எங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமே என பயந்து நம்பர் தரமாட்டிக்கிறா… எங்க இருக்கான் கூட சொல்ல மாட்டிக்கிறா ம்மா”… “அண்ணா அப்ப ஒன்னு பண்ணுங்க, உங்க தங்கச்சி போட்டோவையே எங்களுக்கு அனுப்புங்க, நாங்க என் தம்பி வெற்றி மூலமா தேடி பார்க்கிறோம்”… “ஜெயந்தி சொல்லறது தான் சரி… நீ இப்பவே அனுப்பு, நான் வெற்றிகிட்ட பேசி மார்க் மூலமா தேடலாம்… மார்க் ரொம்பரொம்ப நம்பிக்கையான ஆளுடா… நீ தைரியமா என்னை நம்பி அனுப்பு நான் பார்த்துக்கிறேன் நித்தியன்”… “உன்னை நம்பாத நான் யாரை டா நம்ப போரேன்?… பாப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாடா… அதை நினைத்தால் தான் பயமா இருக்கு”.
அந்த வாலுகிட்ட போன்ல பேசுன எனக்கே தெரியுதுடா உன் நிலைமை… அவளை நேரில் பார்த்து பேசணும்னு நானே எவ்வளவு ஆவலா இருந்தேன்… இப்ப தான் போட்டோ அனுப்பறேன் பார்த்து சொல்லு அந்த வாலுலை… இதோ பார்க்கிறேன் இருடா எனக்கூறி பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்துவிட்டான். கணவனின் கையில் இருந்த போடு வாங்கி பார்த்த ஜெயந்திக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது.
“அண்ணா இந்த பொண்ணு உங்க தங்கச்சி?”… “இவதான் என் தங்கை மகா”… “முழுபெயர் உமா மகேஸ்வரி தான் அண்ணா?”… “ஆமாம் ஜெயந்தி… உனக்கு எப்படித்தெரியும்?”… “இப்ப இவ எங்க இருக்கா… எப்படி இருக்கானு கூட எங்களுக்கு தெரியும் அண்ணா… நீங்க இவ்வளவு நாளா தேடிகிட்டு இருக்கிற மகா, அல்லியூரில் உமாவோ இருக்கா அண்ணா”.
“என்ன சொல்லற ஜெயந்தி?”… “ஆமாம் ஆனந்தி… உமா அல்லியூருக்கு வந்து ஐந்து வருடங்கள் முடியப்போகுது டீ… அதுக்கு முன்ன ஒரு வருஷம் பாண்டிச்சேரியில் இருந்தா… இவளை பார்த்துகிட்டவங்க ஒரு விபத்தில் இறந்துவிட்டதால் அவங்க பசங்களை உமா தான் பாபார்த்துக்கிறா… அவங்களா இவளுக்கு உயிர்”.
“அதிலும் குட்டிமா உமாவுக்கு ரொம்பரொம்ப பிரியம் ஜெயந்தி ம்மா… பிடிப்பில்லாம இருந்தவளை உயிர்போடு வச்சிருக்கிறது அம்மு, கண்ணன், குட்டியும் தான்… இவளுடைய நெருங்கிய தேவகி மல்லிகா சரியா ஜெயந்தி”… “நூறு சதவீதம் சரிண்ணா”.
“இவ்வளவு தெரிஞ்சிருக்கு அப்புறம் ஏண்டா உமாவை பார்க்க வரவில்லை”… “உனக்கு அவளுடைய வைராக்கியத்தை பற்றி தெரியாது மதன்… நான் அவளை தேடி இந்தியா வந்தா செத்து போய்டுவேண்ணு மிரட்டி வரவிடாமல் பண்ணிட்டா டா”.
ஆனந்தி, “அவ ஒன்னு யாருக்கும் தெரியக்கூடாதுனு நினைத்துவிட்டா, வாய திறந்து சொல்லமாட்டா அண்ணா… இந்த வைராக்கியத்தால் தான் அந்தவீட்டில் இவளுக்கு நடந்த கொடுமைகளில் யாருக்கும் தெரியாமல் போய்டுச்சி… நானா பார்த்து கண்டுபிடித்ததனால் தான் அவ பட்ட கஷ்டங்கள் இவருக்கு தெரிந்தது… இல்லை என்றால் எங்களுக்கு எப்பவும் தெரியாமல் போயிருக்கும் அண்ணா”.
மகாலட்சுமியிடம் உமா பட்ட பாட்டை கேட்ட மதன் மற்றும் ஜெந்திக்குமே மலைப்பா இருந்தது… இதற்கு என் செல்வது என்றுகூட தெரியவில்லை அவர்களுக்கு.
மதன், “இதுவரை எப்படியோ நித்தியன்… இனி உமா எங்க பொருப்பு… இந்த பிரச்சனையை நீ வரவரை நான் பார்த்துக்கிறேன் எனக்கூறி நித்தியனை ஆறுதல் படுத்தினான்”.