வெளியே சென்று வந்ததிலிருந்து வெற்றியின் முகம் சரியில்லாததை பார்த்த குடும்பத்தினர் ஏதோ சரியில்லை என நினைத்துக்கொண்டவர்கள்… அவனிடம் பேசுவதற்காக மொத்த குடும்பமும் வெற்றியின் அறைக்கு சென்றார்கள்.
அவனோ இவர்கள் அறைக்குள் வந்ததுகூட அறியாமல் கண்களை மூடிக்கொண்டு கட்டிலில் படுத்திருந்தான்… அவனின் விழியசைவே சொன்னது அவன் தூங்கவில்லை என்று.
நாச்சியார், “வெற்றி… என்னடா ஒரு மாதிரியா இருக்க?… ஏதாவது பிரச்சனையா?” என்றவரிடம்…
“பெருசா எதுவும் இல்லை பாட்டி”.
“அப்போ ஏதோ இருக்குனு அர்த்தம்… சரி சொல்லு என்ன பிரச்சனை?”.
“உமாக்கு என்ன பிடிச்சி இருக்கு பாட்டி… ஆனா ஏத்துக்க தயங்கறா… கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ தம்பிங்களை விட்டுவிட்டு வந்திடுனுமேனு பயப்படறா பாட்டி… நான் போய் எப்படி பாட்டி அந்த சின்ன பசங்ககிட்ட இருந்து இவளை பிரிப்பேன்?… அவளுக்கு தம்பி, தங்கச்சி இருக்கிற மாதிரி தான, எனக்கும் தம்பி, தங்கச்சி இருக்காங்க… நான் மட்டும் இவங்கக்கூட இருக்கும் பொழுது, அவளை மட்டும் எப்படி பாட்டி அந்த சின்ன புள்ளைங்ககிட்ட இருந்து பிரிப்பேன்?… அதைக்கூட புரிஞ்சிக்காம நடந்துக்கிறா பாட்டி”.
அதற்கு நாச்சியார், “உன்னை பத்தி அவளுக்கு புரியவச்சயா வெற்றி?… உன்னுடைய அன்பை உமாவுக்கு தெரியபடுத்தினியா?… நீ அவளை எந்த அளவுக்கு காதலிக்கிறைனு புரியவச்சயா?… இல்ல அவ தம்பி, தங்கையை பிரிய தேவையில்லைனு தான் புரியவச்சியா வெற்றி?” என்றவரிடம்…
“உன் சி்த்தி சொன்னதை நூத்துக்குநூறு சதவீதம் உண்மை தான் வெற்றி… ஆனா அதுமட்டும் போதாது டா… நீ அவளோட நம்பிக்கையை பெறனும்… அது அவ்வளவு சுலபமான விஷயமில்லை, அதே மாதிரி கஷ்டமும் இல்லை”.
“என்ன ம்மா இப்படி சொல்லறீங்க?… எதா இருந்தாலும் எனக்கு புரியும் படி சொல்லுங்க ம்மா” எனக்கூறியவனிடம்…
காயத்திரி, “கட்டுன பொண்டாட்டியா இருந்தாலும் சரி, காதலிக்கிற பொண்ணா இருந்தாலும் சரி அந்த பொண்ணு உடையவன் மேல நம்பிக்கை வைக்கிறது இயற்கை…
அந்த நம்பிக்கையோட தான் கட்டுனவன் கையை பிடித்துக்கொண்டு அவன் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கிறா…
அப்படிபட்டவ வச்ச நம்பிக்கையை ஒரு முறை உடச்சிட்டாகூட மறுபடியும் அவளோட காதலன் அல்லது கணவனை நம்புவது கஷ்டம் வெற்றி… அதையும் மீறி நம்பிக்கை வைத்தால் அந்த ஆண் மகன் அதிஷ்டசாலி டா”.
சந்திரன், “ஒரு நல்ல ஆண் மகனுக்கு அழகே, நேசிக்கிற பொண்ணோட இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் உடனிருக்கனும்… அவளை துன்பம் நெருங்கும் போதெல்லாம் நல்ல தோழனா தோழ் கொடுக்கனும்… அவளுடைய வெற்றிக்கு படியா இருந்து முன்னேற உதவனும்… தடுமாறும் போதெல்லாம் தாங்கிபிடிக்க நான் இருக்கேன் அப்படீங்கிற எண்ணத்தை கொடுக்கனும்”.
“அப்போ அவளுக்கு என் மேல் நம்பிக்கை வரவைக்க நான் என்ன பண்ண?”…
“கொஞ்சம் காமெடியா தான் இருக்கு வெற்றி… எத்தனை பேரை தலையில தண்ணி குடிக்க வச்சியிருப்ப?… எத்தனை பேரை பார்வையாலையே மிரட்டியிருப்ப?… எத்தனை பேரை அடிவெளுத்திருப்ப?… இப்ப பாரு காதலிக்கிற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க சம்மதம் வாங்க படாதபாடு படறையேடா மகனே” என்ற ஜெயாவின் கூற்றில் அனைவரும் சிரித்துவிட்டனர்…
அவர்களிடம் வெற்றி எதையோ கூற வரும்பொழுது போன் வர எடுத்தவன் வங்கி சென்றான்…
“எப்படி இருக்க ஜெயந்தி?… மாமா எப்படி இருக்காங்க?… வர்ஷா குட்டி எங்க?… என்ன திடீரென போன் பண்ணி இருக்க?… எதாவது பிரச்சனையா?”.
“டேய் முதலில் என்னை பேசவிடுடா வெற்றி”… சரி சரி சொல்லு.
“நாங்க எல்லாம் நல்லா இருக்கோம் வெற்றி… உன் மாமா ஏதோ முக்கியமான விஷயம் பேசனுமாம் டா… இரு நான் கொடுக்கறேன் எனக்கூறி மதனுடன் கொடுத்துவிட்டு வர்ஷாவை காண சென்றுவிட்டாள்”.
“ஹாலோ வெற்றி”…
“எப்படி இருக்கீங்க மாமா… நாங்க நல்லா இருக்கோம்… ஒரு முக்கியமான விஷயம் பேசனும் வெற்றி… கூட யாராவது இருந்தால் கொஞ்சம் தனியா வந்து போன் பண்ணு டா… சரிமாமா… நான் அப்புறமா கால் பண்றேன்” எனக்கூறி வைத்தவிட்டான்.
அம்மா நான் வெளியே கொஞ்சம் போய்ட்டு வருகிறேன் எனக்கூறியவன் அவர்கள் மறுப்பு சொல்லும் முன் வெளியே சென்று விட்டான்.
நேராக தோப்புக்கு சென்றவன் மதனுக்கு அழைத்துவிட்டான்.
மதன் போன் எடுத்த உடனே வெற்றி, “சொல்லுங்க மாமா… எதோ முக்கியமான விஷயம் பேசனும் சொன்னீங்க”…
“முக்கியமான விஷயம் தான் வெற்றி”… ஏதாவது பிரச்சனையா மாமா?… பிரச்சனை தான் வெற்றி… ஆனா நமக்கு இல்ல உமாவுக்கு தான்.
“உமாவுக்கா!”… அவளுக்கு என்ன பிரச்சனை மாமா… அது உங்களுக்கு எப்படித்தெரியும்?… கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க மாமா…
[the_ad id=”6605″]
வெற்றியின் படபடப்பை உணர்ந்து உமா அல்லியூருக்கு வருவதற்கு முன்பு அவளின் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினான் மதன்… வெற்றிக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை… மனமெல்லாம் காரணமானது போல் இருந்தது.
மதனிடம் கூட பேசமுடியாமல் அமைதியாக இருந்தவனின் நிலையை உணர்ந்து, வெற்றி இந்த விஷயத்தை பற்றி யாருகிட்டையும் பேச வேண்டாம்.
“சரிங்க மாமா… நீங்களும் தெரிஞ்ச மாதிரி யாருகிட்டையும் காட்டிக்காதீங்க… வீட்டிலேயும் சொல்ல வேண்டாம் மாமா… இந்த விஷயத்தை பற்றி உமாவே சொல்வதுதான் நல்லது மாமா”.
“அதனால் தான் வெற்றி உன்னை தனியா வந்து பேச சொன்னேன்… இனி உமாவோட பாதுகாப்புக்கு நீ தான் பொறுப்பு வெற்றி”… “இனி இந்த விஷயத்தை நான் பாத்துக்கிறேன் மாமா… நீங்க கவலையை விட்டுவிடுங்க… ஜெயந்தியையும் வர்ஷாவையும் பத்திரமா பாத்துக்கோங்க மாமா எனக்கூறி போனை வைத்துவிட்டான்”.
மார்க்குக்கு போன் செய்தவன் அவன் எடுத்த உடன், “மார்க்கு உனக்கு நம்பிக்கையான ஆளுங்களை ரொம்ப ரொம்ப ரகசியமா உமாவையும் அவ தம்பிகளுக்கும் தங்கைக்கும் பாதுகாப்புக்காக போடு… அவங்களை சுற்றி என்ன நடந்தாலும் எனக்கு தகவல் வந்திடனும்”.
“ஓகே வெற்றி… அவங்க பாதுகாப்பா இருக்க நான் பொறுப்பு… எந்த விதமான பிரச்சனையும் வராம பார்த்துக்கிறேன் வெற்றி… நீ மீனு கல்யாண வேலையை மட்டும் பாரு”.
“உன்னை நம்பி தான் நான் மீனு விஷயத்தில் முழுவீச்சில் இறங்க போரேன்… ரொம்ப ஜாக்கிரதையா இருடா”… “நான் பாத்துக்கிறேன் வெற்றி” எனக்கூறி அவனை சமாதானம் செய்து வைத்துவிட்டான் மார்க்.
கிட்டதட்ட ஒரு மணிநேரம் உறித்தும் கோபத்தை சிறிதும் கட்டுபடுத்த முடியாமல் திரும்பவும் மட்டையை உறிக்க ஆரம்பித்துவிட்டான்.
வெளியே வந்த வெற்றி ரொம்ப நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவனை கான பண்ணைக்கு இளயவர்கள் இருவரும் சென்றவர்கள் வெற்றி அங்கு இல்லாததால் தோப்பிற்கு சென்றனர்.
“எங்கடா விஷ்ணு வெற்றிய காணோம்?”… “கொஞ்சம் உள்ள போய் பார்க்கலாம் பொழம்பாம வாடா”…
“இவன் வந்து ரொம்ப நேரம் மேல் ஆகுது அருண்… போன் வந்ததும் போனவனை இன்னும் காணோம், போன் பண்ணினாலும் எடுக்க மாட்டிக்கிறான்”…
“எனக்கு என்னமோ பிரச்சனை போல தோனுது விஷ்ணு”… “என்னடா சொல்லற?”… “பிரச்சனையா இருந்தா நம்மகிட்ட சொல்லியிருப்பானே அருண்…. சொல்லமுடியாத அளவுக்கு இருந்தா எப்படி விஷ்ணு சொல்லுவான்?”.
சரிசரி வாடா… நீ சொல்லற மாதிரியே இருந்தாலும் இருக்கலாம்… அதனால் இதை பற்றி நாமளா கேட்டு வெற்றியை சங்கட படுத்த வேண்டாம் அருண்… அவனா சொல்லறப்ப சொல்லட்டும் எனக்கூறியவர்கள் சிறிது தூரம் உள்ளே சென்றனர்.
அங்கு அவர்கள் கண்டது கோபத்தில் வேகவேகமாக மட்டையை உறித்துக்கொண்டு இருந்த வெற்றியை தான்.
அவனின் கண்களில் தெரிந்த ரெளத்திரத்தில் விஷயம் பெரியது என்பதை உணர்ந்தும் அவனை அமைதி படுத்தும் பொருட்டு, “ஏண்டா இவ்வளவு கோபம்?… இங்கப்பாரு அருண் அவன் கையொல்லாம் புண்ணாயிருச்சி… அருண் அந்த குடோன்ல மருந்து இருக்கு எடுத்துகிட்டு வாடா”…
“என்ன?, ஏதுனு? நாங்க யாரும் உன்னை கேள்வி கேட்க மாட்டோம் வெற்றி… எந்த பிரச்சனைக்கு கோபம் தீர்வு இல்லை… நிதானமா யோசனை செய் வெற்றி, அப்பதான் தெளிவான முடிவை எடுக்க முடியும் என்றவன் அருண் கொடுத்த மருந்தை வெற்றியின் கைகளுக்கு போட்டவன் அமைதியாக அமர்ந்துவிட்டான்”.
“அருணும் எதுவும் பேசாமல் அமைதியாக வெற்றியின் அருகில் அமர்ந்துகொண்டான்”.
சகோதரர்களின் கூற்று சிறிதுசிறிதாக அமைதியானவன் நிதானமாக யோசனை செய்ய ஆரம்பித்தான்… யோசனை செய்யசெய்ய வெற்றியின் முகத்தில் தெளிவு பிறந்தது… அவனின் முகத்தில் தெளிவு பிறந்ததும் விஷ்ணு மற்றும் அருணின் மனதில் நிம்மதி பிறந்தது.
அந்த தெளிவுடனே மூவரும் வீட்டிற்கு சென்றார்கள்.
[the_ad id=”6605″]
வீட்டிற்கு சென்றதும் வெற்றி முற்றத்தில் நின்று அனைவரையும் அழைத்தான்.
“ஜெயா மற்றும் சந்திரனிடம் சென்றவன், அப்பா, அம்மா நான் உமாவை கல்யாணம் பண்ணிக்க ஆசை பாடறேன்… இதில் உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லையில்ல ப்பா?… அதற்கு சந்திரன், உன் வாயிலிருந்து இந்த வார்த்தை வர இத்தனை நாளா வெற்றி?… உமாவை விட நல்ல பொண்ணை எங்க போய் தேடமுடியும்?… குணத்தில் சொக்கத்தங்கம் வெற்றி அந்த பொண்ணு”.
நாச்சியார், “ஏண்டா சந்திரா, இந்த விஷ்ணு, அருணுக்கு இவன் எவ்வளவோ பரவாயில்லை டா”…
“ஆமாம் ம்மா… இந்த பயலுங்க வாய திறந்து ஏதாவது சொல்லறானுங்களானு பாருங்க… சைலண்டா இருந்தே காரியத்தை சாதிக்க பார்க்கிறானுங்க ம்மா”…
சகுந்தலா, “என்ன அத்தை சொல்லறாங்க?… எங்களுக்கு ஒன்னும் புரியல… இவனுங்க இரண்டு பேரும் என்ன பண்ணுனாங்க அத்தை?”.
பொண்ணுக்கு என்ன பதில் சொல்லறது?” என புலம்பியவரிடம்…
தர்மன், “இந்த அருண் காதலிக்கிறதே அம்முவைத்தான்… மூனு பேரும் கூட்டுகலவானிங்க ம்மா… உனக்கு நான் உதவி பண்றேன், நீ எனக்கு உதவி பண்ணு சொல்லிவச்சிகிட்டு திரியரானுங்க என தன் பங்குக்கு மூவரையும் மாட்டிவிட்டு சந்திரனிடம் அமர்ந்து கொண்டார்”.
அது சரி இந்த விஷ்ணு பையன் யாரை விரும்பமாட்டான் தர்மா என்ற சாரதாவிடம், “மல்லியைத்தான் விரும்புரான் ம்மா… கொஞ்ச நாளுக்கு முன்ன தான் என்கிட்ட சொன்னான்”… “இவ்வளவு நடந்து இருக்கு யாரும் எங்ககிட்ட சொல்லவே இல்ல?”… “முதலில் அவனுங்க தெளிவாகட்டும்னு தான் அண்ணன் யாருகிட்டையும் சொல்ல வேண்டாம்னு சொன்னாங்க”.
சந்திரன், “நான் தான் சித்தி தர்மன்கிட்ட இந்த விஷயத்தை பற்றி யாருகிட்டையும் பேசாதைனு சொன்னேன்… வெறும் ஈர்ப்பு தானா இல்லை உண்மையா விரும்பரானுங்களானு தெரிஞ்சுக்க தான் தடுத்தேன் சித்தி… வெறும் ஈர்ப்பா இருந்து, இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா அந்த பொண்ணுங்க வாழ்க்கைதான் பாதிக்கும்னு நினைத்து தான் சொல்லவேண்டாம்னு சொன்னேன்”.
வெற்றிக்கோ தன் தந்தையின் பேச்சை கேட்டு மிகவும் பிரமிப்பாக இருந்தது… தங்களை பற்றி மட்டும் யோசனை செய்யாமல் உமா, அம்மு மற்றும் மல்லியின் வாழ்க்கையையும் யோசனை செய்து முடிவெடுத்ததை நினைத்தால் மகிழ்ச்சியாக இருந்தது.
‘அருணோ தன் மனதில் உள்ள மொத்த கலக்கமும் இறங்கியது போல் நிம்மதியாக உணர்ந்தான்’.
விஷ்ணுவோ ஒன்றும் அறியாத பிள்ளை போல் பாவமாக முகத்தைவைத்துக்கொண்டு அமைதியா நின்றிருந்தார்… அவனின் மனமோ மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தது.
இறுதியாக நாச்சியார், “அதெல்லாம் இருக்கட்டும்… நீங்க அந்த பொண்ணுங்களை காதலிக்கிறீங்க, ஆனால் அந்த பொண்ணுங்க உங்களை விரும்பராங்களா?… அவங்க விருப்பமும் முக்கியம் இல்லையா?” என்றவரிடம்…
“விஷ்ணு அனைவரையும் முந்திக்கொண்டு மல்லியும் அவனை விரும்புவதாகவும், ஆனால் நம்ம குடும்பத்தினர் இதற்கு ஒத்துக்கொள்வார்களா என பயப்படுவதாக கூறினான்”.
‘அருணோ அம்முவின் மனதில் தான் இருப்பதாகவும், ஆனால் அவளோ அவளின் மனதை உணரவில்லை எனக்கூறினான்’.
வெற்றி எதையும் கூறாமல் அமைதியாக இருந்தான். ஏற்கனவே உமாவின் மனநிலையை கூறிவிட்டதால் இந்த அமைதி.
நாச்சியார், “சுந்தரத்துகிட்ட இதை பற்றி மீனு கல்யாணத்திற்கு பிறகு பேசிக்கலாம்… முறைபடி அவளை இந்த வீட்டுக்கு மருமகளா கூட்டிகிட்டு வரவரை இதை பற்றி யாருகிட்டையும் பேச வேண்டாம்… விஷ்ணு நீயும் அவகிட்ட இதை பற்றி பேச வேண்டாம்… புரியும்னு நினைக்கிறேன்”.
வெற்றியிடம், “உமாவை நீ தான் கல்யாணத்திற்கு சம்மதிக்கவைக்கனும்… அவளுக்கு உண்மையை புரியவச்சி இந்த வீட்டுக்கு மூத்தமருமகளா கூட்டிகிட்டு வா… அவளை விட யாராலையும் இந்த வீட்டுக்கு மூத்த மருமகளாக வரமுடியாது… வரவும் கூடாது அது உன் பொறுப்பு… என்னுடைய இந்த முடிவில் யாருக்காவது மறுப்பு இருந்தா சொல்லுங்க” என்றவரிடம்…
மீனு, “வெற்றி அண்ணா கிட்ட மட்டும் ஏன் உமாவை சம்மதிக்க வைக்கிற பொறுப்பை தறீங்க?… நீங்க இல்ல அம்மா, சித்தி, அப்பா யாராவது பேசலாம் இல்ல பாட்டி?”… “நாங்க பேசினா கண்டிப்பா ஒத்துக்க வாய்ப்பிருக்கு மீனு, ஆனால் அது ஒரு கட்டாயமாக மாறிவிடும்… வெற்றியே பேசினா தான் அவ மனசில் இருக்க பயம், தவிப்பு, குழப்பம் எல்லாம் வெளியே வரும்… அதுதான் இவங்க வாழ்க்கைக்கும் நல்லது, இந்த கும்பத்திலிருக்கிறவங்களுக்கு நல்லது மீனு”.
“இனி இதை பற்றி யாரும் பேச வேண்டாம்… போங்க போய் எல்லாரும் வேலையை பாருங்க எனக்கூறி தன் அறைக்கு சென்றுவிட்டார். அவர்
சென்றுதும் மற்றவர்களும் சென்றுவிட்டனர்”.
இவர் மூவரும் மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டனர்.
அப்பொழுது தான் தங்களை முறைத்துக்கொண்டிருந்த மீனுவை கண்டனர்.
விஷ்ணு, “உனக்கு பசிக்குதுனையே வாடா அண்ணா உனக்கு பிடிச்ச பிரியாணியும் சில்லிசிக்கனும் வாங்கி தரவா?”…
அருணோ, “கார்த்திக் போன் பண்ணலையாடா?… வா நாம போன் பண்ணி அவனை கேட்களாம்”…
அதுவரை அமைதியாக இருந்தவள், “நீங்க மூனுபேரும் என்கிட்ட இருந்து உங்க காதலை பற்றி மறச்சிடீங்க இல்ல… இனி நானா எதையும் உங்க மூனு பேருகிட்டையும் வந்து கேட்கமாட்டேன்… நீங்களாவும் வந்து என்கிட்ட எதையும் கேட்கவும் வேண்டாம், சொல்லவும் வேண்டாம் எனக்கூறிவிட்டு தன் அறையில் அடைந்துகொண்டாள்”… அதில் அதிர்ந்தவர்கள் அப்படியே அமர்ந்துவிட்டனர்.
‘கோபமாக உள்ளே சென்றவளோ வயிற்றைபிடித்துக்கொண்டு விழுந்துவிழுந்து சிரித்தவள் அப்படியே படுத்துவிட்டாள்… என்கிட்ட சொல்லாமல் மறச்சீங்க இல்ல இப்ப நல்லா அனுபவீங்க… நல்லா அனுபவீங்க என நினைக்கொண்டு படுத்தவள் அப்படியே போனில் ஆழ்ந்துவிட்டாள்’.
விஷ்ணு, அருண் மற்றும் வெற்றி மூவரும் எப்படி மீனுவை சமாதானம் செய்வது எனத்தெரியாமல் தவித்து போய்விட்டனர்.
இன்று பள்ளி முதல் நாளாக இருந்தாலும் பள்ளிவிட்டு வந்ததும் சிறுவர்கள் டியூசனுக்கு வந்துவிட்டனர்.
மாலையே வேலையை முடித்துவிட்டு வந்ததும் மல்லியும் டியூசனுக்கு வந்துவிட்டாள்… முதல் நாளே சிறுவர்களை படிபடி எனபடுத்தாமல் சிறிது நேரம் படிப்பு சிறிது நேரம் விளையாட்டு என கழிந்தது.
அப்பொழுது உள்ளே இருந்து வந்த உமா, “மல்லி சாதம் நானே வச்சிட்டேன் டீ… அப்பாவை இங்கேயே வந்து சாப்பிட சொல்லு புள்ள”.
அதற்கு மல்லி, “நீயே வர சொல்லு புள்ள… நான் கூப்பிடா திட்டுவிழும் டீ”.
சரி புள்ள நானே கூப்பிடறேன் எனக்கூறி அவருக்கு போன் செய்து விஷயத்தை கூறி வரசொன்னவள் இரவு உணவிற்காக வேலையையும் செய்ய ஆரம்பித்தவிட்டாள்.
இரவு உணவை உமா மல்லிக்கும் சுந்தரத்துக்கும் சேர்த்து செய்தவள் மாணவர்களை அனுப்பிவிட்டு சுந்தரத்தின் வருகைக்காக காத்திருந்தனர்.
இரவு வெகு நேரம் கழித்தே வந்தவரிடம் உமா, “ஏன் ப்பா இவ்வளவு நேரம்?”… “ஈரோடு வரைக்கும் போனதால் தான் இவ்வளவு நேரம் உமா”… “சரி வாங்க ப்பா, சாப்பாடு எடுத்துவைக்கிறேன் எனக்கூறியவள் கையோடு சாப்பாடு எடுத்து வைத்தவள் அனைவருக்கும் பரிமாறினாள்”.
உணவினை முடித்தவர்கள் வெளியே சற்று காற்றாட அமர்ந்தனர்.
அப்பொழுது சுந்தரம் உமாவிடம், “எப்ப உமா புது நகையும் துணியும் வாங்கலாம்?”… வர ஞாயிற்றுக்கிழமை போகலாம் ப்பா.
“என்னப்பா எதோ மாதிரி இருக்கீங்க?… இனி ஒரு ஒருத்தரா கல்யாணம் பண்ணி போய்டுவீங்க இல்ல. .. இப்ப இருக்க மாதிரியே அப்பையும் ஒத்துமையாக இருக்கனும் நீங்க எல்லாம்”.
அம்மு, “கண்டிப்பா இப்படியே இருப்போங்க ப்பா… நீங்களும் அதை பார்த்து சந்தோசப்பட தான் போறீங்க… அதை பார்த்து நாங்களும் நிம்மதியா இருக்க தான் போறோம்”.
“அப்படி மட்டும் நடந்தா எனக்கு போதும்… அதே மாதிரி உமாவும் கல்யாணம் பண்ணிக்கனுங்கிறது என்னுடைய ஆசை… இந்த அப்பாவோட ஆசையை நிறைவேற்றுவையா உமா?”…
“அம்மு, மல்லி கல்யாணம் முடிந்ததும், என்னை மட்டுமல்லாது தம்பிங்களையும் தங்கச்சியையும் சேர்த்து ஏத்துக்கிறவனா கிடைத்தால் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவேன் அப்பா”… “உன்னோட நல்ல எண்ணத்திற்கும் குணத்திற்கும் நல்லா இருப்ப உமா… இந்த அப்பா இல்லாம போய்டா மல்லியையும் அப்பப்ப பார்த்துக்குவ தான உமா”.
மல்லி, “எதுக்கு ப்பா இந்த மாதிரியெல்லாம் பேசுரீங்க?… பேரன், பேத்தி கல்யாணத்தை பார்க்கிர வரை உங்களுக்கு ஒன்றும் ஆகாது… அதுக்கு மேலேயும் இருப்பீங்க ப்பா”.
உமா, “அப்பா நீங்க தேவையில்லாத கவலையை விடுங்க… மீனு கல்யாணம் முடிந்ததும் மல்லி கல்யாணத்தை முடித்துவிடலாம் ப்பா… எனக்கு தெரிஞ்ச மாப்பிள்ளை ஒருத்தர் இருக்காரு… அவருக்கு மல்லியை ரொம்ப பிடிச்சியிருக்காம் ப்பா… அவங்க வீட்டில் பேசி சம்மதம் வாங்கிட்டு வந்து முறைப்படி திருமணம் பேசவருகிறேனு சொன்னாரு… மல்லி கல்யாணத்திற்கு நான் பொறுப்பு நிம்மதியா நீங்க போய் தூங்குங்க ப்பா”.
“அம்மு கல்யாணத்தை சிறப்பா பண்ணனும் உமா… ஊரில் இருக்க யாரும் ஒரு குறையும் செல்லக் கூடாது… எல்லா சடங்கும் செய்யனும் எதையும் விட்டடக்கூடாது… பணம் பத்தலைனா சொல்லு உமா, நான் ஏற்பாடு பண்றேன்” என்றவரிடம்…
[the_ad id=”6605″]
உமா, “இப்போதைக்கு பணம் தேவையில்லை ப்பா… தேவைப்படும் போது நானே உங்ககிட்ட கேட்கிறேன்”.
குட்டி, “அப்பா… நீங்க அக்கா மூனு பேருடைய கல்யாணம் பத்தி மட்டுமே நினைகிறதால் தான் இப்படி தப்பா நினைப்பு வருது… இனி பசங்க ரெண்டு பேர் கல்யாணம் பற்றி மட்டும் யோசனை செய்யுங்க இந்த மாதிரி வேண்டாத நினைப்பு எல்லாம் உங்களுக்கு வரது”.
அம்மு, “ஏண்டா குட்டி… உன் பேருக்கு ஏத்த மாதிரி குட்டியா இருந்துகிட்டு கல்யாணம் வேணுமாடா உனக்கு?… முதலில் படிக்கிற வேலையை பாருடா” என்றவளிடம்…
குட்டி,” நீ மட்டும் படிக்கும் போது கல்யாணம் பண்ணிக்கிறையே க்கா… அது பரவாயில்லையா?.”..
அதற்கு கண்ணன், “குட்டி இவங்க தான் சீக்கிரமா கல்யாணம் பண்ணி சமையல்கட்டே கதினு இருக்கபோறாங்க… நாமளும் அந்த மாதிரி இல்லாம, லைப்ப கொஞ்ச நாளுக்கு என்ஜாய் பண்ணலாம் டா… அதுக்கு பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம்”.
அம்மு, “நாங்க மட்டும் கல்யாணம் முடிஞ்சி எதுக்குடா வீட்டுளையே இருக்கப்போறோம்?… நான் படிக்கபோறேன்… மல்லி அக்காவுக்கு வேலைக்கு போகனும்னு ஆசை… உமா அக்கா வேலைக்கு போகாம கொஞ்சம் நாளுக்கு நிம்மதியா இருக்கனும், பிறகு தான் அவங்க விருப்பப்படி என்னவேனாலும் செய்ய மாமாகிட்ட சொல்லி அனுமதிக்க சொல்லுவேன்”.
“ஏன் அக்கா, உமா அக்கா விருப்பப்படி இருக்க வேண்டாமா?… கண்டிப்பா இருக்கணும் டா… அதுக்கு முன்ன என் விருப்பப்படி கொஞ்சம் நாளைக்கு ஓய்வு”.
சுந்தரம், “ஓய்வா இருந்தாலும் சரி, வேலைக்கு போவதாக இருந்தாலும் சரி அது உமா விருப்பம்… நீங்க சண்டை போடாம போய் படுங்க… சரி உமா அப்படியே நாங்களும் கிளம்பறோம் எனக்கூறி சிரிது தூரம் சென்றவர், திரும்பி உமாவை ஆழ்ந்து பார்த்தவர் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்”.
அவர்கள் சென்றவுடன் இவர்களும் வேலையை முடித்துவிட்டு படுத்துவிட்டனர்… ஆனால் உமாவிற்கு தான் தூக்கம் வந்தபாடில்லை… சுந்தரத்தின் பார்வையும் சிறிப்பும் ஏதோ சொல்வது போல் இருந்தது… ஆனால் அது என்ன வென்று தான் தெரியவில்லை.
வீட்டிற்கு சென்றவுடன் சுந்தரம் மல்லியிடம், “மல்லி இனி எந்த முடிவு எடுத்தாலும் சரியா தவறானு யோசனை செய்து முடிவெடு… என்னைக்கும் உமா கூடையே இரு… உமாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமச்சிக்குடுக்கனும்” என்றவரிடம்…
அங்கு வெற்றி, விஷ்ணு மற்றும் அருண் மூவரும் சேர்ந்து மீனுக்கு விருப்பமானவற்றை வாங்கிகொடுத்து கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தனர். அதில் மகிழ்ந்தவள் அவர்களை மன்னித்ததை போல் வெளியே காட்டிக்கொண்டு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள்… தங்கை சமாதானம் செய்த நிம்மதியில் நாளைய விடியல் வைத்திருக்கும் அதிர்ச்சி மற்றும் துக்கம் தெரியாமல் இவர்களும் சென்று நிம்மதியாக உறங்கிவிட்டனர்.