அத்தியாயம் 28:
தான் வேலை செய்த கம்பெனியில் அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு வெளிநாட்டிலிருந்து நித்தியன் தன் மனைவி மற்றும் மகனுடன் தாயகம் திரும்ப விமானத்தில் முதல் ஆளாக ஏறி அமர்ந்தவனின் மனதோ அத்தனை நிறைவாகவும் நிம்மதியாகவும் இருந்தது.
அதே நிம்மதியான மனநிலையில் மகன் மற்றும் மனைவிக்கு தேவையான உதவிகளை செய்து அமரவைத்தவன் கண்மூடி அமர்ந்துகொண்டான்.
இனி இங்க வரும் என்னம்மானது துளியும் அவன் மனதில் இல்லை. இதுவரை அன்னைக்கு பயந்து தங்கையை விட்டு இருந்தது போதும் என நினைத்தவன் மொத்தமாய் மூட்டைமுடிச்சை கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
அவனின் இந்த வேகத்திற்கு ஒரு வகையில் காரணம் மகாலட்சுமி உமாவை தேடுவது என்றால் மற்றொரு காரணம் உமா.
ஆம் உமாவே தான்…!
கண்மூடி அமர்ந்தவனின் மனதானது பறக்கும் விமானத்தின் வேகத்தை போலவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உமாவுடனான உறையாடல் நினைவிற்கு வந்தது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நித்தியனுக்கு போன் செய்தாள் உமா… அதுவும் தன்னுடைய நம்பரிலேயே அழைத்திருந்தாள்.
அன்று முக்கியமான வேலையிருந்ததால் நித்தியன் அவசரஅவசரமா கிளப்பிக்கொண்டு இருந்தன்.
“இரவே சொன்னேன் இல்ல ஆனந்தி இன்னைக்கு முக்கியமான வேலை இருக்குனு… இப்ப பாரு உன்னால தான் நேரமாகிவிட்டது” எனக்கூறி மொத்த பொறுப்பையும் அவள் தலையில் கட்டினான்.
அதில் கடுப்பான ஆனந்தி, “இங்க பாருங்க மாமா… நான் எத்தனை தடவை உங்களை எழுப்பினேன் தெரியுமா? நீங்க தான் கும்பகர்ணனுக்கு தம்பி மாதிரி கொஞ்சம் கூட அசையாம தூங்கிகிட்டு இருந்தீங்க”.
“அதுக்காக அப்படியே விட்டுவிடுவையா ஆனந்தி?” என்றவனிடம்… “என்னது அப்படியே விட்டுவிட்டேனா?… கொண்டே பிடுவேன் உங்களை, நானும் மகியும் சேர்ந்து எழுப்பியும் எழுந்திருக்காம இருந்தீங்க அந்த கோபத்தில் தான் தண்ணியை தலையில் கொட்டினேன்; அதனால் தான் இப்பவும் எழுந்தீங்களா மாமா… இப்படியே என்மேல் பழிபோட்டீங்கனா மறுபடியும் தண்ணீர் ஊற்றிவிடுவேன் தெரிஞ்சிக்கோங்க எனக்கூறி மகனை தூக்கிக்கொண்டு தங்கள் அறைக்கு சென்று கதவடைத்துக்கொண்டவளை எப்படி சமாதானம் செய்ய என முழித்தவனை கலைக்கும் விதமாக போன் அடிக்க இருந்த கடுப்பில் நம்பரை பார்க்காமல் எடுத்து பேசியவன் உமாவின் குரலில் கண்கள் கலங்கி அப்படியே அமர்ந்துவிட்டான்”.
அவனின் முகமானது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
நித்தியன் அமைதியை கலைக்கும் விதமாக உமா அவனை திரும்பிதிரும்பி அழைக்க அதில் சுயம் பெற்றவன், “பாப்பா!” எப்படி இருக்க? பேசி எத்தனை நாள் ஆச்சி? எதாவது பிரச்சனையா பாப்பா?” என்றவனிடம்…
உமா, “சாரி… சாரி அண்ணா… இங்க நடந்த பிரச்சனையால் தான் பேசமுடியாமல் போயிடுச்சி”.
“என்ன பிரச்சனை பாப்பா? யாராவது வம்பிளுத்தாங்களாடா?… எதாயிருந்தாளும் அண்ணாகிட்ட சொல்லுடா”.
“அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லை ண்ணா… ஒரு வாரத்திற்கு முன்ன சுந்தரம் அப்பா தவறீட்டாங்க ண்ணா, மல்லியோ சொந்தங்கள் சொத்துக்காக தேவையில்லாத பிரச்சனை பண்ணீட்டாங்க, அதில் மல்லி கொஞ்சம் மனசொடஞ்சி போயிடா ஒரு வழியாக அவளை தேத்த இத்தனை நாள் ஆகிடுச்சி ண்ணா”.
“அச்சோ!”… “ரொம்ப நல்ல மனுசனாச்சே டா; இவங்கள மாதிரி ஆளுங்களைத்தான் அந்த கடவுள் சீக்கிரமா கூப்பிட்டுகிறார்… இந்த பூமிக்கு பாரமா, உலகத்திற்கு எந்த பயனும் இல்லாதவங்களை எல்லாம் அந்த கடவுள் விட்டுவிடறார் இல்ல பாப்பா”.
“அவங்களை ரொம்ப பிடிச்சி போய் தான் அண்ணா கடவுள் சீக்கிரமா கூப்பிட்டுகிறதா பாட்டி சொல்லியிருக்காங்க” என்றவளிடம்…
நித்தியன், “அதனால் தான் அந்த கடவுள் உங்க ஐந்து பேருக்கும் துணையா இருந்த சுந்தரம் அப்பாவையும் கூப்பிட்டுகிறாரா பாப்பா”.
அவனின் கேள்விக்கு பதில் அளிக்க மழுப்பியவள், “அதை விடு அண்ணா… இனி பேசி ஒன்றும் ஆகபோறது இல்லை, என்னை நம்பி இருக்கவங்களுக்கு நல்லது பண்ணிட்டா போதும் அண்ணா”.
“உன்னால முடியும் உமா, கண்டிப்பாக சின்னதுங்களுக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்துதரமுடியும், அண்ணா ஏதாவது பண்ணனுமாடா” என்றவனிடம் உமா, “ஆமாம் அண்ணா… உன்னுடைய உதவி எனக்கு தேவை அண்ணா”.
“என்னடா பண்ணட்டும்? சொல்லு பாப்பா… நம்ம அம்முக்கும் மல்லிக்கும் இன்னும் நாற்பது நாளில் கல்யாணம் ண்ணா, நீ அண்ணியையும் சின்னவனையும் கூட்டிகிட்டு வந்திவிடுறையா? எனக்கு நீ இல்லாம இவ்வளவு பெரிய விஷயத்தை பண்ண மனசுவரவில்லை ண்ணா, ஒரு வாரமாவது இருக்க மாதிரி வரையா?”.
“நீ கூப்பிட்டு அண்ணா வராம இருபேனா பாப்பா, உன்னையை விட சொந்தம்னு சொல்லிக்க எங்களுக்கு யாரு உமா இருக்கா?”.
“சாரி ண்ணா… நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தறேன் இல்லையா?”.
[the_ad id=”6605″]
“அப்படியெல்லாம் இல்ல பாப்பா, நீ சொன்னதை ஆனந்தி மட்டும் கேட்டா போன்ளையே சண்டைக்கு வந்திடுவா”.
“அச்சோ அண்ணா!”… அண்ணிகிட்ட என்னைய மாட்டிவிட்டுடாத, அண்ணிக்கிட்ட கல்யாண விஷயத்தை சொல்லாம ஏதாவது சாக்கு சொல்லி இந்தியா அழைத்துக்கொண்டு வாண்ணா. அவங்களுக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கலாம்”.
“பாப்பா உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி சொல்லட்டா?”.
“என்ன விஷயம் சொல்லு ண்ணா, சீக்கிரம்… சீக்கிரம் ண்ணா” என பரபரத்தவளிடம்…
நித்தியன், “நான் ஏற்கனவே இந்தியா வர தேவையான வேலைகளை செய்துவிட்டேன் டா, இங்க கொஞ்சம் வேலை இருப்பதால் அதை முடித்துக்கொண்டு ஆனந்திக்கு இன்பதிர்ச்சி கொடுக்களாம்னு இருந்தேன் ஆனா நீ எனக்கு அதிர்ச்சி கொடுத்துட்ட பாப்பா… இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு, உன் பேச்சை மீறி இந்தியா வர கொஞ்சம் உறுத்தளாவே இருந்தது, இப்ப அந்த மாதிரி எதுவும் இல்லை பாப்பா எனக்கூறியவனை நினைத்து கொஞ்சம் கவலையாகவும் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருந்தது உமாவிற்கு”.
அதன் பின் உமா, “அண்ணா!”…ஒரு முக்கியமான விஷயம், கல்யாணத்துக்காக பணம் வேணும்னா.
நித்தியன், “எவ்வளவு வேணும் சொல்லு உமா, எப்ப வேணும்”.
அதற்கு உமா, “பத்து லட்சம் வேணும்னா; நாளைக்கு இல்லை அதற்கு அடுத்த நாள் அனுப்ப முடியுமா ண்ணா”.
“நாளைக்கு அனுப்பறேன் உமா, அக்கோண்ட் நம்பர் தா அனுப்பிவிடறேன்”.
நான் நம்பர் அனுப்பறேன் ண்ணா, “நீங்கள் கல்யாணத்திற்கு வந்துடுவீங்க தான? என்றவளிடம் நித்தியன், கண்டிப்பா பத்து நாளுக்கு முன்னையே வந்துடறேன் பாப்பா, நீ தைரியமா கல்யாண வேலையை ஆரம்பி நான் பாத்துக்கிறேன்”.
“அப்புறம் பாப்பா நீ எந்த ஊரில் இருக்கேனு அண்ணுக்கு தெரியாதேடா?” என்றவனிடம் உமா, “உனக்கு தெரியாதா ண்ணா? பொய் புழுவாத, உன் நண்பன், அதான் மதுபாட்டில் எப்பையோ சொல்லியிருப்பாங்கனு எனக்கு நல்லா தெரியும், அதனால் என்னை ஏமாத்தாம ஊர் வந்து சேருகிறவழியை பாருண்ணா எனக்கூறி கலாய்த்தவளிடம் அசடு வழிய நின்றான் நித்தியன்”.
அதில் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு மிடுக்கா உமா நித்தியனிடம், “சரி… சரி நீங்க ஊருக்கு வர நாளுக்காக காத்துகிட்டு இருப்பேன் ண்ணா, இப்ப நான் போனை வைக்கிறேன்”.
பார்த்து ஜாக்கிரதையா இருக்கனும் பாப்பா, நான் சீக்கிரமா வந்திடறேன் எனக்கூறி போனை வைத்துவிட்டான் நித்தியன்.
தங்கை இந்தியா வர அழைத்ததையும் மனைவியிடம் கூறாமல் அவளை இந்தியா அழைத்து வந்து கொண்டு இருக்கிறான் நித்தியன்.
மகனின் சிணுங்களில் நினைவுகளிலிரிருந்து கலைந்தவன் மனைவியிடமிருந்து மகனை வாங்கிக்கொண்டு விளையாட்டு காட்ட ஆரம்பித்தான் அன்பு தந்தையாக.
கொஞ்சம் நாட்களாகவே கணவனின் முகத்தில் தெரிந்த தெளிவையும் மகிழ்ச்சியை கவனித்து கொண்டு இருந்த ஆனந்தி எதுவாக இருந்தாலும் அவனாகவே சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தாள் அந்த காதல் மனைவி.
*****/////******/////*****////*****/////****///*/////*****///***
அல்லியூரில் உமாவோ சுந்தரம் இறந்த ஒரு வாரத்திற்கு பிறகு பாலிஷ் செய்த நகைகளை வாங்கி வந்தவளின் மனது ஒரு நிலையில் இல்லாமல் தவித்து கொண்டிருந்தது. காரணம் இவ்வளவு பெரிய, பாரம்பரியமான வீட்டில் ஒன்றுக்கு இரண்டு பெண்களை கொடுக்கும் போது அவர்களின் வசதிக்கு தகுந்த மாதிரி சீர் செய்யவில்லை என்றாலும் அவர்களின் மரியாதைக்கு பங்கம் வராதமாதிரி செய்யனும் என்று நினைத்துக்கொண்டாள்.
முயன்று அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சிறிவர்களை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பிவிட்டு மல்லியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வர மனம் இல்லாததால் அவளையும் அழைத்துக்கொண்டு வேலைக்கு சென்றுவிட்டாள்.
அங்கு சென்றவளில் கண்ட காட்சியில் மனதானது முன்பைவிட நகை விஷயத்தில் இன்னும் உறுதியாக இருந்து.
வளக்கம் போல் வேலைக்கு சென்றவள் காலை உணவை முடித்து விட்டு அனைவருக்கும் பரிமாறிய பின் வெளிவேலையை பார்க்க மல்லி மற்றும் உமாவும் சென்றுவிட்டனர்.
அனைவரும் சேர்ந்து காலை உணவை உண்ணும்போது நாச்சியார், “இவங்க ரெண்டு பேரும் ரெண்டு வாரம் வேலைக்கு வராததால் வீடுவீடு மாதிரியே இல்லை; இப்ப தான் வீடு பார்க்க நல்லா இருக்கு” என்றவரிடம்…
சாரதா, “ஆமாம் க்கா…!” இந்த மல்லியை எப்படி பழையமாதிரி மாத்தறதோ தெரியவில்லை… பிள்ளைங்க முகமே சரியில்ல க்கா, ரொம்ப நாளைக்கு பிள்ளைங்களை தனியா விட்டுவைக்கிறது எனக்கு சரியா படவில்லைக்கா.
அதற்கு சந்திரன், “நானும் சித்தி சொல்லறதை தான் யோசிக்கறேன் ம்மா, கல்யாண வயசில் இருக்க மூனு பெண்ணுங்க தனியா இருக்கிறது அவங்களுக்கு பாதுகாப்பில்லை ம்மா, நீங்கள் ஒரு நல்ல முடிவை சொல்லனும் எனக்கூறியவர் அமைதியாக உணவில் கவனத்தை செலுத்தினார்”.
நாச்சியார், “அவங்களை இந்த வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரவேண்டிய வேலையை நாளையிலிருந்து பார்க்க ஆரம்பிச்சிடலாம்… சந்திரா, தர்மா நீங்க வேலையை முடித்துவிட்டு வழக்கமா போகிற நகைகடைக்கு வந்துடுங்க, பசங்களா நீங்களும் வந்துடுங்க. கல்யாணத்திற்கு நகை செய்ய ஆடர் கொடுத்துவிட்டு வரனும்”.
“அதற்கு நாங்கள் எதற்காக வரனும் பாட்டி?… ஏனா நீங்க மூனுபேருந்தான் அவளுக்கு அண்ணனுங்க அருண்”.
அவளுக்கு தேவையானதை நீங்கள் மூனு பேருந்தான் செய்யனும்… சரி பாட்டி நாங்க வேலையை முடித்துவிட்டு வந்துவிடறோம், நீங்கள் கடைக்கு வந்ததும் போன் பண்ணீடுங்க பாட்டி, இப்ப எனக்கு முக்கியமான வேலை இருக்கு நான் கிளம்பறேன் எனக்கூறியவன் சாப்பிட்டு முடித்தவுடன் வெளியே சென்றுவிட்டான்.
விஷ்ணு, “டேய் அருண்… இருடா நானும் வந்துட்டேன் எனக்கூறியவன் இறுதிவாய் உணவையும் உண்டுவிட்டே அருணுடன் காங்கேயம் கல்லூரிக்கு சென்றான்”.
வெற்றியோ எதுவும் பேசாமல் அதுவரை அமைதியாக உண்டவன் நாச்சியாரிடம், “பாட்டி நீங்க கடைக்கு போகும் போது போன் பண்ணுங்க நான் வந்துடறேன்.
அப்புறம் முக்கியமான விஷயம் மீனுக்கு மட்டும் நகை வாங்காம எல்லாரும் வாங்கிக்கோங்க பாட்டி… எனக்கு பண்ணையில் சரக்கு அணுப்பனும், அதை அனுப்பிட்டு நான் வந்துடறேன். அம்மா போயிட்டு வருகிறேன்… சித்தி வருகிறேன்”.
ஜெயா, “வெற்றி வேலை அதிகமாக இருந்தா மார்க்க பார்த்துக்க சொல்லீட்டு வாடா… பார்க்கிறேன் ம்மா… மார்க்குக்கு பள்ளிக்கூடத்தில் வேலையிருக்கு, எப்படியும் மதியத்திற்குள் முடிந்துவிடும் ம்மா”.
“அப்புறம் சித்தி… நைட் டின்னர் வெளியே சாப்பிட்டுக்கலாம், அதனால் அவங்க ரெண்டு பேரையும் நீங்கள் வரும் போதே அனுப்பிவிட்டுவிடுங்க.
அதுவும் இல்லாம அவங்க முகமே சரியில்ல, இன்னைக்கு கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் எனக்கூறி கிளம்பிட்டான்”.
இவர்கள் அனைவரும் சாப்பிட்டதும் வெளிவேலையை செய்து கொண்டு இருந்த மல்லி மற்றும் உமாவை அழைத்தார் காயத்ரி, ரெண்டு பேரும் சாப்பிட வாங்க, அத்தைங்க உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
[the_ad id=”6605″]
நாங்க வரும்போதே சாப்பிட்டு வந்துவிட்டோம் அம்மா என்றாள் உமா.
அதற்கு அவரோ, எதா இருந்தாலும் அத்தைங்ககிட்ட வந்து செல்லுங்க, வாங்க… வாங்க எனக்கூறி கையோடு அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
அவர்கள் இருவரையும் உணவு மேஜையில் நாச்சியாரின் அருகில் அமரவைத்தவர் காயத்திரி சமையளறைக்கு சென்றுவிட்டார்.
அவர்கள் இருவருக்கும் தன் கையாளே உணவினை பரிமாறி கட்டாயப்படுத்தி சாப்பிடவைத்தார் நாச்சியார்.
அதன் பிறகு நாச்சியார் அவர்களிடம், “இன்னைக்கு மதிய சாப்பாடு எளிமையா பண்ணீடுங்க போதும், அப்புறம் மதியவேலை முடித்துவிட்டு வீட்டிற்கு போங்க நாளைக்கு வந்தா போதும்”.
“ஏன் பாட்டி போக சொல்லறீங்க…! எதாவது முக்கிய வேலையா பாட்டி?” என்ற மல்லியிடம்…
சாரதா, “ஆமாம் மல்லி… மீனுக்கு நகையெடுக்க காங்கேயம் வரை போகவேண்டி இருக்கு, அதனால் தான்”.
அதற்கு உமா, “சரிங்க பாட்டி…! நாங்க வேலையை முடித்துவிட்டு கிளம்பறோம்… அப்ப நாளை வேலைக்கு வந்திடறோம்” எனக்கூறியவளிடம்…
“சரி… இப்ப நீங்கள் ரெண்டு பேரும் பொருமையா சாப்பிடுங்க, ஒன்றும் அவசரமில்ல, உங்களுக்கு உதவியா நம்ம சாந்தியிருப்பா,எனக்கு கொஞ்சம் அசதியா இருக்கு, நான் போய் படுக்கிறேன் எனக்கூறி நாச்சியார் சென்றுவிட்டார். அவரின் பின்னே சாரதாவும் சென்றுவிட்டார்”.
அதில் சஞ்சலம் அடைந்த உமா உணவினை விழுங்கமுடியாமல் விழுங்கிவிட்டு மல்லியுடன் மதிய உணவினை சமைக்க சென்றுவிட்டாள்.
ஆனால் அவளின் மனமோ, ‘மீனு கல்யாணத்திற்கு நகை எடுக்க செல்லும் விஷயத்தில் உமாவிற்கு ஏதோ அவர் இவர்களை விலக்கிவைப்பதை போல் தோன்றி இம்சித்தது… அந்த நாள் முழுவதும் அதிலேயே உழன்றவளுக்கு தெளிவு தான் கிடைத்தபாடில்லை’.
மதியத்திற்கு மேல் நகை வாங்க சென்றவர்கள் மொத்த கதையையும் புரட்டி போட்டு எடுத்த பின், துணிகடைகளுக்கு சென்று துணிகளை எடுத்துக்கொண்டு வெளியே வர மணி இரவு எட்டு தொட்டுவிட்டது.
இறுதியாக பிரபல உணவகத்திற்கு வந்து உணவினை உண்டார்கள்.
அப்பொழு விஷ்ணு, “நீங்கள் இப்படி பண்ணுவீங்கனு நான் நினத்துக்கூட பார்க்கவில்லை பாட்டி… நீங்க இங்க வரப்ப மல்லியும் உமாவும் நம்ம வீட்டில் தான இருந்தாங்க, அவங்களையும் கூட்டிகிட்டு வந்திருக்கலாம் இல்ல” என்றவனிடம்…
நாச்சியார், “விஷ்ணு கேட்ட கேள்வி தான் உங்க எல்லாரு மனசுலையும் இருக்குனு எனக்கு தெரியுது, அவங்களை நம்ம கூட கூட்டிகிட்டு வந்திருந்தா தேவையில்லாத பேச்சியெல்லாம் வரும், அதை தவிர்க்க தான் அவங்களை நான் கூப்பிடவில்லை.
அதைவிட முக்கியமான விஷயம் அவங்களை பக்கத்திலேயே வச்சுகிட்டு மீனுக்கு நாம செய்வதெல்லாம் சரிவராது.
தேவையில்லாம அவங்க மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கு, அதுவும் இல்லாம அவங்களுக்கு இப்பவே நாம வாங்கிகொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்… இப்பவே நாம இதையெல்லாம் செஞ்சா ஊரிலிருக்கவங்க நாக்கு மேல பல்ல போட்டு பேசுவாங்க, அது அந்த பொண்ணுங்களுக்கு தான் மனபாரத்தை ஏற்படுத்தும்… இதையெல்லாம் நினைத்துதான் நான் அவங்களை கூப்பிடவில்லை என்றார்”.
அவரின் இந்த செயலானது ஏற்கனவே உமாவின் மனதில் சஞ்சலத்தை விதைத்துவிட்டதை அவர் அறியவாய்ப்பில்லை.
வெற்றி, “நீங்க சொல்லறது ஒரு வகையில் சரிதான் பாட்டி, ஆனால் அது அவங்க மனதில் எந்த மாதிரி பதியும்னு நமக்கு தெரியாது இல்லையா? ஊரை பார்த்து உறவை விட்டுவிடாதீங்க பாட்டி என்றவன் உணவில் கவனமானான். மற்றவர்களும் எதுவும் பேசாமல் உணவினை உண்ண ஆரம்பித்தனர். அன்றையபொழுது இப்படியே பலகுழப்பத்துடனும் மகிழச்சியுடனுமே சென்றது”.
அடுத்த நாள் அம்மு, குட்டி மற்றும் கண்ணனுக்கு விடுமுறை என்பதால் அவர்களையும் அழைத்துக்கொண்டு வேலைக்கு வந்தாள் உமா.
அப்பொழு எழுந்துவந்த நாச்சியாருக்கு டீயை கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கும் கொடுத்தவள் வேலையில் மூழ்கிவிட்டாள்.
அன்றைய காலை வேலையை முடித்துவிட்டு மதிய வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது மீனு நேற்று அவர்கள் வாங்கிய நகைகள் மற்றும் துணிமணிகளை அவளிடம் ஆசையாக காட்டினால் அதை பார்த்தவளின் மனதானது மேலும்மேலும் சஞ்சலப்பட்டது.
மற்றவர்களோ இவளின் முகமாற்றத்தை கவனிக்காமல் நகைகள் மற்றும் துணிமணிகளை பார்ப்பதில் மூழ்கிவிட்டனர்… அப்போ அந்த பக்கமாக வந்த வெற்றி உமாவின் முகமாற்றத்தை கண்டுகொண்டான், உடனடியாக அதை சரிசெய்ய வேண்டிய உறுதியையும் மனதில் எடுத்துக்கொண்டான்.
அடுத்துவந்த இரண்டு நாட்களும் அதே யோசனையில் இருந்த உமா வேலையைவிட்டு வந்ததும் இதுவரை தான் சேமித்துவைத்த பணம் மற்றும் சுந்தரத்தின் சேமிப்பு என அனைத்தையும் எடுத்துகணக்கு பார்க்க ஆரம்பித்தாள்… தங்களின் அனைத்து சேமிப்பையும் சேர்த்தால் கூட ஐந்து பவுன் நகையைக்கூட வாங்க முடியாது என தெளிவாக புரிந்தது.
நான்கு நாட்களாகவே உமாவின் யோசனை படிந்த முகத்தை கண்ட மல்லி மற்றும் சிறியவர்களுக்கு அவளின் இந்த செயல் மிகவும் வித்தியாசமாக உணர்ந்தனர்.
யாரிடமும் சரியா பேசாமலும் சரியா தூங்காமலும் யோசனையில் இருந்தவளுக்கு ஒன்று மட்டும் சரியாக புரிந்தது தங்களிடம் இருக்கும் நகைகளை மட்டும் போட்டு அம்மு மற்றும் மல்லியை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் அவர்களின் மரியாதையும் சுயகெளரவமும் பாதிப்படையும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது என உணர்ந்தவளின் மனதில் தெளிவு பிறந்ததும்…
அதைவிட நித்தியன் இல்லாமல் இவ்வளவு பெரிய காரியத்தை தான் மட்டும் தனித்து செய்ய மனமுரண்டவும் சிறிது யோசனை செய்தவள் அடுத்த நிமிடமே நித்தியனுக்கு போன் செய்து விஷயத்தை கூறி இந்தியா வர சொல்லியவள், திருமணசெலவிற்காக பத்துலட்சம் பணத்தையும் கேட்டாள்.
“நித்தியனோ சிறிதும் யோசிக்காமல் தங்கை இந்தியா வரசொன்ன மகிழ்ச்சியிலும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து அவள் கேட்ட பணத்தை அடுத்த இரண்டாவது நாளிலேயே அனுப்பிவைத்துவிட்டான்… அதோடில்லாமல் ஒன்னறை மாதத்தில் முடிக்க வேண்டிய வேலையை ஒரே மாதத்தில் முடித்துவிட்டு மனைவி மற்றும் மகனுடன் தாயகம் திரும்பும் முயற்சியில் ஆழ்ந்துவிட்டான்”.
“அங்கு உமாவோ நித்தியன் அனுப்பிய இரண்டாவது நாளே பணத்தை எடுத்தவள் அதில் அம்முவிற்கு ஐந்து பவுனும் மல்லி்க்கு பத்து பவுன் வாங்க முடிவு செய்தாள்… இவளின் இந்த முடிவிற்கு காரணமும் இருந்தது, இருவரும் ஒரே வீட்டுக்கு மருமகளாக வாழபோவதால் நகைமுதல் துணிமணிகள் வரை ஒரே மாதிரியாக செய்ய முடிவு செய்தாள் உமா”.
தனியாக போய் இவ்வளவு நகைகளை தங்களால் வாங்கிக்கொண்டு வருவது கடினம் என்பதால் அன்று இரவே வெற்றிக்கு அழைத்தாள்.
அவளின் அழைப்பை ஏற்ற வெற்றி உமாவின் நண்பர் என அறிந்தும் யாரோ தெரியாதவர்களிடம் பேசுவதை போல் பேசி அவளின் வாயிலிருந்து மனதை திறக்கவைத்தான் அந்த கள்வன்.
வெற்றி, “ஹலோ யாருங்க?”.
“நான் உமா பேசறேன் வெ… வெற்றி”.
[the_ad id=”6605″]
“உமா வா!”… “அதுவும் இந்த நேரத்தில்…!” என வெற்றி கூறியவுடன் மணியை பார்க்க அதை ஒன்பதை காட்டியது, அதில் அசடு வழிந்தவள் வெற்றியிடம் காட்டாது மிடுக்காகவே பேசினாள்.
அவளின் முகபாவனையை அறிந்து மனதிற்குள்ளே சிறித்தவன் அவளை போல மிடுக்காக பேசினான்.
“சொல்லு உமா என்ன விஷயம்? ஏதாவது பிரச்சனையா?”…
“அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லை வெற்றி, நாளைக்கு நீங்க வேலையில்லாமல் இருந்தால் கொஞ்சம் காங்கயேம் வரை வறீங்களா?”.
“நாளை முக்கியமான வேலை எதுவும் இல்லை உமா, எத்தன மணிக்கு வரனும்னு சொல்லு நான் வந்துடறேன்” என்றவனிடம்…
உமா, “வாறீங்கலானு கேட்டதும் என்ன, ஏதுனு, கேட்காம வறேன் சொல்லறீங்களே, கேள்வி கேட்கவும் தோனவில்லையா வெற்றி?”.
“எனக்கு என்னுடைய உமாவை பற்றி தெரியும், அவ என்னைக்கும் தவறானவழியில் போகமாட்டா”…
“அந்த அளவுக்கு என்னைய நம்பறீங்களா வெற்றி? நீங்கள் நம்பற அளவுக்கு நான் எதையும் பண்ணவில்லையே வெற்றி, அவ்வளவு ஏன் என்னைய பற்றி எந்த உண்மையும் நான் உங்ககிட்ட கூட செல்லவே இல்லையே வெற்றி” என்றவளிடம்…
“உன்னைய நம்பாத வேற யாரை நம்ப போறேன் உமா” என்ற வெற்றியிடம் உமா, “அதான் ஏன் வெற்றி? ஏனா நீீ என்னுடைய சரிபாதி டீ… நீ தான் நான், நான் தான் நீ டீ… உன்னுடைய ஒவ்வொரு செயலிலும் நான் இருக்கனும்னு கொள்ளை ஆசை இருக்கு”.
“அதைவிடு நீ போன் பண்ண விஷத்தை சொல்லு உமா”… “அது வந்து அம்மு, மல்லி கல்யாணத்திற்கு நாளைக்கு நகை செய்யனும் நீங்களும் வந்தா நல்லா இருக்கும்னு தோனுச்சி அதான் என்றவளிடம்”, “கண்டிப்பா வருகிறேன் உமா… நாளு நாளா உன் மனதை போட்டு குழப்பின விஷயம் தெழிந்துவிட்டாதா?”.
“அதெல்லாம் சரியாகிடுச்சி; ஆமாம் உங்களுக்கு எப்படித்தெரியும்? அவ்வளவு வெளிப்படையாவா தெரிஞ்சது?” என்றவளிடம் வெற்றி, “கவலைபடாத வீட்டிலிருக்கவங்களுக்கு தெரியவாய்ப்பில்லை உமா, நானும் அதை பற்றி யாருகிட்டையும் பேசவில்லை உமா. நீ பஸ் ஏறினவுடனே எனக்கு போன் பண்ணு நான் வந்துடறேன்” என்றவனிடம் உமா, “சரி வெற்றி… நான் போன் பண்ணறேன்”.
“வெற்றி என்னுடைய குழப்பம் என்னனு கேட்க மாட்டீங்களா?”.
“எதா இருந்தாலும் நீயே அதை சரி பண்ணீடுவனு எனக்கு தெரியும், இருந்தாளும் உன்னுடைய குழப்பத்திற்கு காரணம் நம்ம வீட்டுல் நடந்த விஷயமுனும் எனக்கு தெரியும் உமா என்றவன் அன்று நாச்சியார் கொடுத்த விளக்கத்தை உமாவிடம் கூறினான்… அதை கேட்டவளின் மனதானது மிகவும் லேசானது போல் இருந்தது”.
அதை உணர்ந்தவன் சிறிது நேரம் அவளிடம் வம்புவளர்த்த பின் தான் போனை வைத்தான்.
“வெற்றியிடம் பேசியபின் தான் உமாவின் மனதானது ஒரு நிலைக்கே வந்தது, அந்த மனநிலையுடனேயே இரவு நிம்மதியாக ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள்”.
“தங்களின் சிறு செயல் கூட அவளை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்று நினைத்து வருந்தினான், அதைவிட அவளின் ஒவ்வொரு செயலிலும் தன்னை தேடுவதை நினைத்து மகிழ்வாகவும் உணர்ந்தான்… அதே மனநிலையில் தனது தூக்கத்தை தொடர்ந்தான் வெற்றி”.
வெற்றி உமாவிடமும் உமா வெற்றியிடமும் தங்களின் காதல் மனதை பகிரவில்லை தான், ஆனால் உணர்ந்தார்கள். பகிரப்படும் காதலைவிட உணர்வுப்பூர்வமான உணரும் காதலுக்கே வலிமை அதிகம். அதன்னுடைய வலிமை தான் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும் சின்னசின்ன முகசுழிப்பை வைத்தே மனதை அறிந்துகொள்ள் உதவியாக இருக்கிறது.
அதற்கு அடுத்த நாள் அனைவரும் விடுமுறை என்பதால் மல்லி மற்றும் சிறியவர்களை அழைத்துக்கொண்டு நகை செய்ய குடுக்க காங்கேயம் செல்லும் பஸ்சில் ஏறியமர்ந்தவள் வெற்றியை அழைத்துவிட்டாள்.
அன்பு தொடரும்….