அத்தியாயம் 30:
திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே முக்கியமான சொந்தபந்தங்கள் அனைவரும் பண்ணையாரின் வீட்டிற்கு வர வீடே ஜேஜே என இருந்தது.
மல்லியும் உமாவும் வேலைக்கு வராததினாலும் சொந்நபந்தங்களின் வருகையாலும் வேலைகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிய சாந்தியை பார்த்த ஜெயா அவர்களிடம், “சாந்தி திருமணம் முடியறவரை வேலை அதிகமாக இருக்கும் துணைக்கு ரெண்டு ஆளுங்கள் வச்சுக்கோ, யாருக்கும் எந்தக் குறையும் இல்லாம பார்த்துக்கோங்க.
ஏதாவது குறை வந்தா அதைவச்சே பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு, இதைப் பற்றியெல்லாம் நாங்க சொல்லனும்னு இல்லை நீ தான் பார்த்துக்கனும் சாந்தி”.
“எந்தப் பிரச்சினையும் வராம பார்த்துக்கிறேன் ங்கம்மா… நாளையிலிருந்து ஆளுங்களைக் கூட்டிகிட்டு வந்திடறேன், நானே உங்ககிட்ட கேட்களாம்னு தான் இருந்தேன் ம்மா” என்றார் சாந்தி.
“எதாயிருந்தாளும் வந்து சொல்லு சாந்தி, நீயே அத்தனை வேலையையும் இழுத்து போட்டு செஞ்சி உடம்பை கெடுத்துக்காத, பார்த்து செய் என்றவரை யாரோ அழைக்க இவரிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்”.
“வீட்டு ஆட்கள் அனைவரும் நிற்கக்கூட நேரமில்லாமல் அங்குமிங்கும் அலைந்துகொண்டே இருந்தனர், ஆண்களோ உறவினர்களை அழைத்துவருவது, அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்துதருவதுமாக அழைந்துகொண்டிருந்தனர்”.
“பெண்களோ வீட்டிற்கு வந்த சொந்தபந்தங்களுக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துபார்த்து கவனிப்பதோடு மட்டுமல்லாமல் உள்ளூரில் உள்ளவர்களுக்குப் பத்திரிகை வைப்பதுமாக அழைந்துகொண்டிருந்தனர்”.
ஜெயா கூறியதைபோலவே அடுத்த நாளே வேலைக்கு உமாவின் உதவியால் தனம் மற்றும் மாரியக்காவை வேலைக்கு அழைத்துக்கொண்டு வந்தார் சாந்தி.
வெளியில் வேற்க விறுவிறுக்க வேலை செய்துவிட நிழலில் வேலை செய்வது எளிமையாக இருக்க எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நாட்கள் சென்றது. உணவின் ருசியும் நன்றாக இருக்க வந்தவர்களுக்குப் புறணிபேச வாய்ப்பில்லாமல் போனது.
அங்கு உமாவோ வாங்கிவந்த நகைகளைப் பாதுகாப்பாக வைத்தாள், வேலைவிட்டுவிட்டு அம்மு மற்றும் மல்லியை உடனிருந்து அவர்களுக்குப் பிடித்ததை வாய்க்கு ருசியாகச் செய்து கொடுத்ததினாலும், மயிலுபாட்டியின் கைவண்ணத்திலும் ஒரு சுற்று தேறி அழகுகூடி மிளிர்ந்தனர்.
அவர்களை விடக் குட்டி தான் சந்தோசத்திலிருந்தான். அவர்களைவிட்டு இவன் தான் நிச்சியத்திற்காக ஆர்வமாகக்காத்திருந்தான்.
கொஞ்சம் நாட்களாகவே குட்டியின் ஆவலை கண்ட அம்மு, “நிச்சியம் எங்களுக்கா? இல்ல உனக்கா டா?, நீ அடிக்கிற கூத்தை தாங்க முடியவில்லை குட்டி, எங்க பேரை சொல்லி நம்ம ஊர் குளத்திலிருக்க அல்லிக் கிழங்கு புட்டாக்க காத்துகிட்டு இருக்கயில்ல”.
“அம்மு க்கா… எனச் சினுங்கியனை பார்த்து மல்லி, அம்மு சிரித்தனர்”.
அவர்களை அடக்கிய மயிலுபாட்டி, “சும்மா இருங்க டீ… அவனுக்குப் பிடிச்சதை செய்யச்சொன்னாலும் அல்லிபுட்டை பொண்ணுங்க சாப்பிட்டா இடுப்புவலி வராது டீ, அதுவும் உங்களை மாதிரி வயசு பொண்ணுங்க தான் அதிகமா சாப்பிடனும்.
கண்ணனும் உமாவும் குளத்துக்குப்போயி ரொம்ப நேரமாச்சு நீங்க இங்க உட்கார்ந்து இந்தப் பொடியங்கிட்ட வம்பு பண்ணிகிட்டு இருக்காதீங்க.
வெளியே வராம போய் உள்ளே இருக்கனு என அதட்டியவர் குட்டியை அவர்களுக்குத் துணையாக விட்டுவிட்டு உமாவை பார்க்க குளத்திற்குச்சென்றார்”.
அங்குச் சென்றவர் கண்டது அல்லிமொட்டு வேட்டையில் இருந்த உமா மற்றும் கண்ணனை தான்.
மயிலுபாட்டியை கண்ட உமா, “நீங்க எதுக்குப்பாட்டி இவ்வளவு தூரம் வந்தீங்க? அவங்களுக்குத் துணையாக வீட்டிலேயே இருக்க வேண்டியது தான?”.
“நீங்க ரெண்டு பேரும் வந்து ரொம்ப நேரம் ஆச்சினு தான் வந்தேன் டீ, கிழங்கு எடுத்ததுவரை போதும் வாங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப்போகலாம்”.
“அவ்வளவு தான் பாட்டி பரிச்சாச்சி, அவங்க ரெண்டு பேரும் தனியா வேற இருப்பாங்க வாங்க போகலாம்… கண்ணா வாட போகலாம்”.
அதான் குட்டியிருக்கானே க்கா, “இன்னும் கொஞ்சம் எடுத்துகிட்டு போகலாம்” என்றவனிடம்…
மயிலு பாட்டி, “போட போக்கத்தவனே, அந்த எலிகுஞ்சு நம்பி ரெண்டு வயசு புள்ளைங்கள விட்டுவிட்டு எவ்வளவு நேரம் இங்க இருக்கிறது? இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவளுங்ககிட்ட சண்டைபோட்டுகிட்டு இங்கேயே வந்தாலும் வந்திடுவான் டா”.
“கண்ணா குளத்தை விட்டு முதலில் வெளியே வாடா… அவன்தான் சின்னப்பையன் விஷயம் புரியாம பேசறானா நீயும் உள்ளயே நிக்கற வாடீ வெளியே என இருவரையும் அதட்டி அழைத்துச்சென்றார் மயிலுபாட்டி”.
“சரி சரி வறோம் பாட்டி கத்தாதீங்க… கண்ணா வாடா போகலாம் எனக்கூறி அவனையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றனர் மூவரும்”.
“ஏண்டீ உமா!”… “நம்ம ஊர் குளத்திலிருக்க அத்தனை மொட்டையும் பறிச்சிகிட்டு வந்துட்டையோடீ, இந்தக் குளத்தைப் பார்த்தா யாரும் அல்லிகுளம்னு சொல்ல மாட்டாங்க டீ”.
“சும்மா வம்பு பண்ணாத பாட்டி… நாங்க கொஞ்சம் தான் எடுத்தோம், அப்படியாவது இந்தக் குளத்தில் இருக்கத் தண்ணி தெரியுமானு பாக்கலாம்னு இருந்தேன், எங்களை இப்படி இழுத்துகிட்டு வந்து கெடுத்துவிட்டையே பாட்டி”.
“இந்தக் குளத்ததோட மகிமையே அதுதான் டீ உமா”.
“எவ்வளவு கிழங்கு எடுத்தாலும் அடுத்தநாளே குளம்முழுக்கப் சொடி நெறஞ்சி இருக்கே, அது எப்படிப் பாட்டி?” என்ற கண்ணனிடம்…
“எனக்கு மட்டும் என்ன தெரியும் கண்ணா? நானும் இந்த ஊருக்கு வாக்கபட்டு வந்த நாளிலிருந்து பார்க்கிறேன் இந்தக் குளம் நிறஞ்சு தான் இருக்கு, அது என்ன அதிசயமோ ஆச்சரியமோ தெரியல கண்ணா என அதிசயத்தைப் பார்த்ததைப் போல் பேசிக்கொண்டே மூவரும் வீடுவந்து சேர்ந்தனர்”.
வீட்டிற்கு வந்தும் குளித்து விட்டு வந்தவள் மயிலுபாட்டியின் உதவியுடன் புட்டுச் செய்ய ஆரம்பித்தாள்.
அவர்களுக்குத் தேவையான அளவு கொடுத்தவள் பாதியை தங்களுக்கு எடுத்துவைத்துவிட்டு மீதியை ஒரு டப்பாவில் எடுத்துவைத்துக்கொண்டாள்.
அதைப் பார்த்த மல்லி, “யாருக்கு உமா இதை எடுத்து வைக்கிற? அதுவும் இவ்வளவு பெரிய டப்பாவில்”.
“பண்ணையார் வீட்டில கொஞ்சம் கொடுத்துவிட்டு சாந்திக்கும் கொஞ்சம் கொடுத்துட்டு வருகிறேன் மல்லி”.
“அது அவங்களுக்கு ஒரு சின்ன டப்பாவை காட்டி இந்த டப்பாவில் இருக்கப் புட்டு யாருக்கு டீ?”… “இதுவா? இது தனத்துக்கும் மாரிக்காவுக்கும் மல்லி, அவங்களுக்கு அல்லி புட்டுனா ரொம்பப் பிடிக்குமில்ல அதான்”.
“உனக்கு எதுக்கு உமா இந்த வேலை? அவங்க வேலையை விட்டு வரும்போது இந்த வழியாதான வருவாங்க அப்ப கொடுத்தா போதாதா டீ?” என்றவளிடம்…
உமா, “பண்ணையார் வீட்டில தான வேலை செய்றாங்க அப்படியிருக்க நான் அவங்களுக்கு மட்டும் இவ்வளவு பெரிய டப்பாவில் கொடுத்தால் இவங்களுக்கு ஒருமாதிரி இருக்கும் இல்ல அதனாலதான் மல்லி அவங்களுக்கும் கொண்டுகிட்டு போறேன், சரிசரி நீங்க நாளு பேரும் இங்கேயே இருங்க நான் போய் கொடுத்துட்டு வரேன் எனக்கூறி சென்றுவிட்டாள்”.
ஏதோ தைரியத்தில் பண்ணையார் வீட்டின் வாசல்வரை சென்றுவிட்டவளின் மனம் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
யாராவது வெளியே வந்தா அவங்ககிட்ட கொடுத்துட்டுப் போயிடலாம் என நினைத்துக்கொண்டு சிறிது நேரம் காத்திருந்தாள், ஆனால் யாரும் வரும் படி தான் இல்லை.
சிறிது யோசனை செய்தவள் சாந்திக்கு போன் செய்தாள் உமா, முதல் ரிங்கிலேயே போனை எடுத்தவரிடம், “ஹாலோ அக்கா… நான் உமா பேசரேன் கொஞ்சம் வெளியே வாங்க க்கா”.
இதோ வரேன் இரு உமா எனக்கூறியவரின் மனதில் ‘என்னாச்சு இப்பவே வெளி வரசொல்லறா, ஏதாவது பிரச்சனையா இருக்குமோ’ எதாயிருந்தாளும் அவகிட்டையே கேட்டுக்கலாம் என நினைத்துக்கொண்டு வெளியே செல்ல எத்தனித்தவரின் எதிரில் தனம், மாரி வந்தனர்.
“வந்துடீகளா?… என்ன க்கா எதாவது செய்யனும் என்ற தனத்திடம், அதெல்லாம் இல்ல தனம், உமா வெளியே இருக்கா அதான்”.
மாரிக்கா, “என்ன உமாவோ? அவ எதுக்கு இங்க வந்தா? அதுவும் இந்த வெயிலில்”.
“தெரியவில்லை மாரி, தனியா வேற நிக்கறா வாங்க போய் பார்க்கலாம் எனக்கூறி தனம் மற்றும் மாரிக்காவை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்”.
வெளியே சென்றவர்கள் உமாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அவள் கொடுத்த புட்டை வாங்கிக்கொடண்டு உள்ளே சென்றவர்கள் அனைவருக்கும் கொடுத்துவிட்டுத் தங்களுக்குக் கொடுத்ததைப் பகிர்ந்து கொண்டனர்.
தர்மர் வீட்டின் பால்கனியிலிருந்து போகும் உமாவையோ பார்த்துக்கொண்டிருந்த நித்தியன் கண்கள் சந்தோசத்தில் கலங்கி போயிருந்தது, கலங்கிய கண்களுடன் போகும் உமாவையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த நித்தியனை பார்த்த ஆனந்திக்கும் அத்தனை கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் இந்தக் கஷ்டங்கள் எல்லாம் இன்னும் சிறிது நாட்களுக்கு மட்டுமே என நினைத்து கணவனைத் தேற்றினாள் அந்த அன்பு மனைவி.
வீட்டிற்குச் சென்ற உமா சிறியவர்களுடன் நேரத்தை சந்தோசமா செலவிட்டுகொண்டிருந்தாள்.
அடுத்த இரண்டு நாட்களும் சிறப்பாகச் செல்ல மூன்றாவது நாள் மாப்பிள்ளை மற்றும் பெண்வீட்டினர் முகூர்த்தக்கால் நடுவது, உப்பு வாங்க செல்வதுமாக அன்றைய நாள் சென்றது.
அடுத்த வந்த இரண்டு நாட்களும் மாமன் முறை, அத்தை முறை மற்றும் பங்காளிகள் முறை சீர் செய்வதென இரண்டு நாட்களும் சென்றது.
கார்த்திக் மேல் இருந்த கோபத்தில் அவனிடம் பேசாமல் அவனை நன்றாக அழையவிட்டுக்கொண்டிருந்தாள் மீனு.
நித்தியன் வரவை எதிர்பார்த்துப்கொண்டே உமாவிற்கு நாட்கள் சென்றது, போன் செய்தாலும் அவன் எடுக்காததால் சற்றுப் பயமாக இருந்ததுதான் இருந்தது ஏதோ ஒரு நம்பிக்கையில் நித்தியன் வந்துவிடுவான் எனத் திடமாக நம்பியவள் நிச்சியத்திற்கான அடுத்தடுத்த வேலையைச் செய்தாள்.
****////******////*******///******////***////’/******////
மறுநாள் காலை அனைவரும் புறப்பட்டு அம்மன் கோயிலுக்குச் சென்றனர். மீனு – கார்த்திக் திருமணமானது அம்மன் கோயிலில் நடைபெறுவதால் அந்த அதிகாலைவேலையே கோயில் மிகவும் பரபரப்பாகவும் பிரகாசமாக இருந்தது.
ஐய்யர் மந்திரங்கள் ஓத, உறவினர்களின் சலசலப்பும் சேர கோயிலோ திருவிழா போல் நிறைந்திருந்தது.
ஓமக்குண்டத்திலிருந்து வந்த புகையில் கண்கள் எரிச்சலுடனும் மனம் நிறைய மகிழ்வுடனும் முகத்தில் புன்னகையுடனும் அமர்ந்திருந்தான் கார்த்திக்.
ஜெயா, நாச்சியார், சாரதா, வேலம்மை மற்றும் ஜெயந்தி ஆகியோர் முதல் வரிசையிலேயே அமர்ந்து திருமணத்தை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
உமா, அம்மு மற்றும் மல்லியும் மீனுவிற்குத் துணையாக அவளின் அறையில் இருந்தனர். குட்டியும் கண்ணனும் வர்ஷாவுடன் சுத்திக்கொண்டிருந்தனர், அவள் கேட்டதையெல்லாம் வாங்கிகொடுத்து கொண்டும், கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர்.
மங்களவாத்தியங்கள் இசைக்கச் சரியான நேரத்தில் ஐயர் மனமகளை அழைத்துவர சகுந்தலாவிடம் பணிக்க அவரோ மனமகள் அறைக்குச் சென்று காயத்ரி மற்றும் உமாவுடன் சேர்ந்து மீனாவை அழைத்துவந்தார்.
மனமேடையை நோக்கி வந்துகொண்டிருந்த மீனாவை பார்த்த கார்த்திக் அவளின் அழகில் ஐயர் கூறிய மந்திரத்தை சொல்ல மறந்து அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான்.
சிவப்பு நிற பட்டுபுடவையில் காதில் தொங்கிய சிமிகியோடு கழுத்துநிறைய நகைகள் அணிந்து, கைகள் நிறையக் கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தாள், அழகுநிலைய பெண்களின் கைவண்ணத்திலும் கூடுதலாகக் கல்யாணக்கலையும்சேர அழகு தேவதையைப் போல் மிளிர்ந்தாள் மீனு.
கார்த்திக் கண்களோ அவளைவிட்டு அசையமாட்டேன் எனச் சண்டித்தனம் செய்ய ஐயரின் “மாப்பிள்ளையாண்டா இங்க பார்த்து மந்திரத்தை சொல்லுப்பா” என்ற குரலில் சற்றுச் சுயத்திற்கு வந்தவன் தட்டுதடுமாறி மந்திரம் சொல்ல ஆரம்பித்தான்.
கார்த்திக்கின் செயலில் வெக்கம் கொண்ட மீனு குனிந்ததலை நிமிராது சடங்குகளைச் செய்தால்.
தாலிக்கு பூஜை செய்த ஐயர் தாலியை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு வரசொல்ல உமாவும் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தால்.
தாலியை வாங்கிக்கொண்ட ஐயர் கெட்டிமேளம் சொல்ல, ஊரார் அட்சதை தூவ தாலியை மீனுவின் சங்கு கழுத்தில் கட்டி தன்னில் சரிபாதி ஆக்கிக்கொண்டான் கார்த்திக்.
பெற்றவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்கியவர்கள் அம்மனிடம் ஆசி வாங்கிக்கொள்ள சென்றனர். அவர்களுடன் சிறியவர்கள், விசாலாட்சி, காயத்ரி மற்றும் சங்கரும் சென்றனர்.
அடுத்து வரவிருக்கும் பிரச்சனை தெரியாமல் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
********************************************
அடுத்து வந்த முகூர்த்தத்தில் நிச்சயம் செய்ய இருந்ததால் உமாவுடன் சேர்ந்து வெற்றி, சகுந்தலா, நாச்சியா மற்றும் சாரதாவும் வேலையைப் பகிர்ந்து கொண்டனர்.
அம்மு, மல்லி, விஷ்ணு மற்றும் அருணும் நிச்சியத்திற்கு ஜெயா மற்றும் மதனின் உதவியுடன் தயாராகிக்கொண்டிருந்தனர்.
அடுத்த முகூர்த்தத்திலயே நிச்சியத்திற்கு இருவீட்டு உறவினர்கள் முன்னிலையில் தட்டுமாற்ற ஆரம்பிக்கும் போது வெற்றியின் உறவினர்களில் வயதில் மூத்தபெண்மனி ஒருவர், “இது என்ன புதுக் கூத்து இருக்குது!… தட்டு மாத்த இப்படி ஒத்தையாவா வந்து நிக்கிறது? வயசு பெரியவங்க இருந்தா வரசொல்லுமா”.
அப்போது உமாவின் அருகில் வந்த வெற்றி அவளின் தோழில் கைபோட்டவன் அதிரடியாக, “இவ தான் எங்க வீட்டுக்கு மூத்த மருமகள், இவ வீட்டுக்கு இவ தான் மூத்தவப் பாட்டி, அவ்வளவு ஏன் இந்தப் பொண்ணுங்க கல்யாணத்தை ஒத்தையாளா நின்னு நடத்த போறவளும் இவ தான் பாட்டி, இப்ப சொல்லுங்க இவளைவிட வேற யாரு பாட்டி இந்தத் தட்டை வாங்க முடியும்?” என்றவனிடம்…
வெற்றியின் கூற்றில் அவளின் மேல் மதிப்பும் கூடியது அவருக்கு, அதுமட்டுமல்லாமல் உண்மை உறைக்கப் பாட்டி கலங்கி நின்ற உமாவிடம் சென்று, “இந்த வயசானவ ஏதோ புத்தியில்லாம பேசிட்டேன் ம்மா… என்னைய மன்னிச்சிகோ த்தா, உன்னைவிட வேற யாருக்கும் இந்தத் தட்டை வாங்க தகுதியில்ல த்தா, போத்தா போய் தட்ட வாங்கிக்கோங்க எனக்கூறி உமாவை முன்னே அனுப்பிவைத்தார்”.
முதலில் மல்லி – விஷ்ணுவிற்கும் அடுத்தது அருண் – அம்முவுக்கும் நிச்சயதட்டு மாற்றபட்டது.
புதுபெண்ணிற்கே உண்டான நாணத்துடன் சபையில் அமைந்திருந்த அம்மு மற்றும் மல்லியை பார்க்க பார்க்க தெகட்டவில்லை அத்தனை அழகாக இருந்தனர், ஊர் மக்கள் கூட அவர்ளை பார்த்து அசந்துப் போயிருந்தனர்.
மங்கிய விளக்கு போல் இருந்த இரண்டு பெண்களும் உமாவின் கைவண்ணத்தில் துலக்கிவைத்த வெண்கல விளக்கு போல் மிகவும் பிரகாசமாக இருந்தனர்.
ஐயர் லக்கணப் பத்ரிக்கையை வாசிக்க ஆரம்பித்த பிறகு நிச்சயமானது நிறைவாக முடிந்தது. அதன் பின் பெரியவர்களிடம் ஆசி வாங்கினார்கள்.
யாரும் எதிர்பாராத நேரத்தில் அம்மு உமாவின் காலில் விழுந்தாள்… எதிர்பாராத நிகழ்வில் அதிர்ந்த உமா அம்முவை எழுப்பித் தன்னுடன் அணைத்துக்கொண்டாள், மல்லி தன்னுடைய மகிழ்ச்சியை இறுகிய அணைப்பின் மூலமா வெளிபடுத்தினாள்.
குட்டியும் கண்ணனும் அம்முவையும் மல்லியையும் அணைத்துக்கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.
இவர்களின் பாசபினைப்பை பார்த்த அனைவரும் பிரம்மிப்பில் ஆழ்ந்தனர்.
அவர்களின் மகிழ்ச்சியைக் கலைக்கும் விதமாக வந்து சேர்ந்தனர் மகாலட்சுமி மற்றும் ராமன்.
இவர்களைப் பார்த்து உமா, அம்மு மற்றும் கண்ணன் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர், லேசான பயம் கூட எட்டி பார்த்தது.
ஆனால் அந்தப் பயத்தை மறைத்துக்கொண்ட உமா கண்களால் சிறியவர்களுக்கு ஆறுதல் அழித்தாள்.
தங்களைக் கண்டதும் உமாவின் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் பயத்தைக் கண்டுகொண்ட மகாலட்சுமி மனதில் சற்றுக் கர்வமாக நினைத்துக்கொண்டார்.
அவளின் சிறு தடுமாற்றத்தையே தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட மகாலட்சுமி தன் நாடகத்தை அரங்கேற்றினார்.
“அம்மாடி உமா, ஏண்டா இந்தப் பெரியம்மாவை விட்டுவிட்டு இங்க வந்த? பெரியம்மா உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா? நீயில்லாமல் என்னால் அந்த வீட்டிலேயே இருக்க முடியவில்லை, நீ வீட்டைவிட்டு வந்ததும் நித்தியனும் பொண்டாட்டியை கூட்டிகிட்டு வெளிநாடு போனவன்தான் இன்னும் நம்மவீட்டுக்கு வரவேயில்லை உமா”.
“இந்தப் பெரியம்மா மேல கோபமிருந்தா அதை நம்மவீட்டுக்கு வந்து காமி உமா எனக்கூறி நீலிக்கண்ணீர் வடித்தவரை ஆழ்ந்து பார்த்த உமா, யாருக்கு யார் பெயரிம்மா? என் அம்மா கூடப் பிறந்தவங்க யாருமே இல்லையே, நீங்க யாரோ நினைத்து எங்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்கனு நினைக்கிறேன்”.
“இப்ப தான் என் தங்கச்சிக்கு நிச்சயம் நடந்தது இந்த நேரத்தில் வந்து தேவையில்லாம பிரச்சனை பண்ணாம போங்க”.
“நான் உன் அம்மா கூடப் பிறக்கவில்லை தான் உமா, ஆனா ரெண்டு பேரும் ஒரே வீட்டுக்கு தான் வாக்கபட்டு வந்தோம், அந்த வகையில் நான் உனக்குப் பெரியம்மா தான உமா?”.
அங்கு இருந்த ஊர்காரர்களில் ஒருவர், “ஏம்மா அந்தப் பொண்ணு தான் நீங்க நினைக்கிற ஆளு நான் இல்லையினு சொல்லுது, அப்புறம் எதுக்கு ம்மா தொந்தரவு பண்ற?”.
அதற்கு ராமனோ, “இல்லைங்க பெரியவரோ இவ எங்க வீட்டு பொண்ணு தான். ஒரு சின்னப் பிரச்சனையில் வீட்டைவிட்டு ஓடி வந்துட்டா”.
அதற்கு மற்றொருவரோ, “உங்க வீட்டு பொண்ணுங்கிறதுக்கு என்ன ஆதாரம் இருக்கு ம்மா? ஆதாரம் இருந்தா காட்டுமா”.
இப்படி ஏதாவது பிரச்சனை வரும்னு நினைத்து தான் ஆதாரம் கொண்டுவந்தேன், “இதே இந்தப் போட்டோவையே பாருங்க, இதில் இருக்கிறது இவ தானுங்க எனகூறி நடித்தவரை பார்த்த வெற்றி, சரி உங்க வீட்டு பொண்ணுன்னே வச்சிக்கலாம், உங்க வீட்டு பொண்ணா இருந்தா ஏன் வீட்டைவிட்டு வரனும்? வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிற அளவுக்கு அவ ஏதோ பாதித்திருக்கு, அப்படி என்ன கொடுமை பண்ணுனீங்க? என்றவனிடம் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் முழித்தார் மகாலட்சுமி”.
“மகாலட்சுமியின் திருட்டு முழியைப் பார்த்த நாச்சியாருக்கு அவரின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது, அந்தச் சந்தேகத்துடன் மகாலட்சுமியை ஆராய்ச்சி பார்வை பார்த்தார்”.
அவரின் ஆராய்ச்சி பார்வையை உணர்ந்த ராமன், “ஏன் தம்பி யாராவது வீட்டு பெண்ணையே கொடுமைபடுத்துவாங்களா? அதுவும் உமா எங்க வீட்டு ஒரே பொண்ணுங்க” எனக்கூறி வராத கண்ணீரை துடைத்தவனின் கூற்றில் ஆத்திரம் கொண்ட உமா, “யாரும் எதிர்பாராத நேரத்தில் ராமனை கீழே தள்ளி தாறுமாறாகத் தாக்க ஆரம்பித்தாள், எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்த ராமன் அவளை தடுக்கக்கூட முடியாமல் திணறினார்”.
“ஏண்டா ப***** நாயே நீயெல்லாம் கொடுமையைப் பத்தி பேசரையா? அப்பா, அம்மா இல்லாத பொண்ணுன்னுகூடப் பாக்காம ஒரு வேலைக்காரி மாதிரி நடத்துனையே அதுக்குப் பேர் என்னடா? மகாலட்சுமியை காட்டி அந்த ***** சேர்ந்துகிட்டு ஒரு வாய் சாப்பாடுகூடப் போடாம கொடுமைபடுத்துனியே அதுக்குப் பேர் என்னடா? எனக்குகூறி அடித்துக்கொண்டே இருந்த உமாவை தடுத்த மகாலட்சுமியை விட்ட அரையில் சில அடி தள்ளி போய் விழுந்தார்”.
இவளின் இந்தத் தாக்குதலை சிறிதும் எதிர்பாராத மகாலட்சுமியின் முகமானது உதடுகிழிந்து, கணம்வீங்கி, கீழேவிழுந்ததில் நெற்றியில் ஏற்பட்ட காயத்துடன் அவரைப் பார்க்க அகோரமாக இருந்தார், வாங்கிய அரையில் எழக்கூட மறந்து அப்படியே இருந்தார்.
ஆவேசமாக அவரை நெருங்கியவளை தடுக்க வந்தவர்களை வெற்றி, விஷ்ணு மற்றும் அருண் தடுத்து நிறுத்தினர்.
பயத்தில் அழுகைக்குத் தயாராக இருந்த குட்டியையும் வர்ஷாவையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான் மதன்.
இத்தனை நாள் மனதில் அடக்கிவைத்திருந்த கோபத்தில் உமா, “நீயெல்லாம் ஒரு பொம்பளையாடீ… பொண்ணுங்கனா பூமாதேவிக்குச் சமம்னு சொல்லுவாங்க ஆனா நீ அரக்கி, ராட்சசி, பணத்தாசை பிடித்த பேய்.
பணத்துக்காக எந்த எல்லைக்குப் போகக்கூடத் தயங்காத ஜென்மம், நீ எனக்குப் பெரியம்மா வாடீ? பெரியம்மானா அம்மாக்கு நிகர்னு சொல்லுவாங்க ஆனா நீ பணத்துக்காகச் சொந்த பையனையே கொண்ணுடுவேணு என்னையே மிரட்டுனவளாச்சே. அதே பணத்துக்காக மூனு பேரை கொலைபண்ணின கொலைகாரி தான டீ நீ”.
“நீ எதுக்காக என்னைத் தேடி வந்திருக்கேனு கூடத் தெரிஞ்சிக்க முடியாத பழைய மகானு நினைச்சா? நான் ஒன்றும் அந்த முட்டால், பயந்தாங்கொள்ளி மகா இல்லடா, உமா டீ.. உமா. இந்த உமாவுக்கும் அவளைச் சேர்ந்தவங்களுக்கும் உன்னால் ஆபத்துனு தெரிஞ்சா உன்னைக் கொலைகூடப் பண்ண தயங்க மாட்டேன்”.
இத இதைத்தான் பாப்பா உங்கிட்ட நான் எதிர் பார்த்தேன் எனக் குரல் வந்த திசையைத் திரும்பி பார்த்த உமா வில்லிலிருந்து புறப்பட அம்பாக நித்தியனிடம் தஞ்சமடைந்தாள். இத்தனை நாள் அடக்கிவைத்திருந்த அழுகையை ஒரே மூச்சாக அழுது தீர்ப்பவள் போல் கதரிகதரி அழுதுகொண்டிருந்தாள் உமா.
அவளின் அழுகையைப் பார்த்த அனைவரும் கண்கள் கலங்கி விட்டது.
நித்தியனை பார்த்த மகாலட்சுமி அவனிடம் போலிக்கண்ணீ்ர் வடித்து உமாவை குறைசொல்லி நடிக்க அதில் ஆத்திரமடைந்த நித்தியன், “போதும் ரொம்ப நல்லவ மாதிரி நடிக்காதீங்க; உன்னுடைய அத்தனை பித்தளாட்டமும் எனக்குத் தெரியும் அதற்கான ஆதாரமும் என்கிட்ட இருக்கு எனகூறிக்கொண்டிருக்கும் போதே போலீஸ் அதிகாரிகள் வந்துவிட்டனர்”.
வந்தவர்கள் அடிபட்டு அறைமயக்கத்தில் கீழே கிடந்த ராமன் மற்றும் மகாலட்சுமியை கைது செய்தனர்.
காவல்துறை அதிகாரியின் செயலில் காண்டான மகாலட்சுமி ஆங்காரமாக, “இப்ப எதுக்கு எங்களைக் கைது பண்ணரீங்க சார்? நாங்க என்ன தப்புப் பண்ணினோம்?” என்றவரிடம்…
நித்தியன், “நீங்க என்ன பண்ணுனீங்களா? இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன், என்ன தான் பண்ணலை?”.
ஒன்னு ரெண்டு தப்பு பண்ணியிருந்தா நீயாபகத்தில் இருக்கும், இவங்க தான் தப்பைத்தவிர வேறெதுவும் பண்ணலையோ நித்தியன் என்ற வெற்றியிடம் நித்தியன், “நீங்க சொல்லறது சரிதான் வெற்றி… இவங்களைப் பார்த்தாலே வெறுப்பா இருக்கு, சின்னப் பொண்ணைக் கொடுமைபடுத்துனது மட்டுமல்லாமல் பணத்திற்காகக் கட்டின புருசனையும், அவருடைய தம்பி, தம்பி மனைவியையுமே கொலை பண்ணின உயர்ந்த உள்ளம் பொண்ணு இல்ல இவங்க என இகழ்ச்சியாகக் கூறியவனைப் பதட்டமான பார்த்தாள் உமா”.
அவளின் பதட்டத்தை உணர்ந்த நித்தியன் “ஒரே வார்த்தையில் எனக்கு எல்லாம் தெரியும்” என்பதோடு முடித்துக்கொண்டவன், இதுவரை இவர்கள் திரட்டிய ஆதாரங்களை அதிகாரிகளிடம் கொடுத்தான் நித்தியன்.
அவர்கள் இருவரையும் கைதுசெய்யப் போதுமானதாக இருக்கக் காவல்துறை அதிகாரிகள் மகாலட்சுமி மற்றும் ராமனை கைதுசெய்தனர். வர மறுத்தவர்களை வழுகட்டாயமாக இழுத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.