அத்தியாயம் 37.1:
எட்டு வருடங்களுக்குப் பிறகு…
பண்ணையார் வீடே சொந்தபந்தங்கள் சூழ ஒரே சத்தமும் கூட்டமாகவும் ஜேஜே என இருந்தது.
அந்த அதிகாலை பொழுதில் சகுந்தலா, காயத்ரி மற்றும் ஜெயாவும் நிக்க நேரமின்றிச் சுழன்று கொண்டிருந்தனர்.
இந்த எட்டுவருடத்தில் ஜெயா நடக்க ஆரம்பித்திருந்தார். ஆனாலும் அவரால் வேகமாக நடக்கவோ ஓடவோமுடியாது நிதானமாக நடந்தால் தொடர்ச்சியாக நடக்கமுடியும்.
இந்த எட்டுவருடத்தில் உமா சகுந்தலா, ஜெயா மற்றும் காயத்திரியை வீட்டுவேலையைச் செய்யவிடாமல் தடுத்தவள் அடிக்கடி சுற்றுலா சொல்வதுமாக வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றுக்கொடுத்திருந்தாள்.
இதையெல்லாம் பார்த்த வெற்றி அவளைப் பண்ணை அல்லது பள்ளி பொறுப்பை எடுக்கச் சொல்ல அவளே குழந்தைகளையும் வீட்டையும் பார்த்துக்கிறேன்; ஒரு பத்துவருடத்திறக்கு பிறகு ஏதாவது ஒரு பொறுப்பை எடுத்துக்கொள்வதாகக் கூறியவள் வீட்டுநிர்வாகத்தைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டவள்.
அதே போல் அருண் “உமாவை Ph.D படிக்கவைத்தவன் தன்னுடனேயே கல்லூரி நிர்வாகம் செய்ய அழைத்துச்சொன்றான்”.
விஷ்ணுவோ “மல்லியின் சிறுபிள்ளைத்தனத்திற்கு ஏற்ற இடமாக தங்களின் பள்ளி தான் சரியாக வரும் என நினைத்தவன் பெரியவர்களிடம் பேசி அவளிடம் பள்ளிநிர்வாகத்தை ஒப்படைத்துவிட்னான். முழுதாக மல்லியின் கட்டுபாட்டில் விடாமல் சங்கர் மற்றும் தர்மரின் மேற்பார்வையில் வைத்திருந்தான். அவளின் குணத்திற்கு இவை ஒத்துபோக இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாகவே செல்கிறது”.
மதன் மற்றும் நித்தியனும் இனைந்து தாங்கள் ஆரம்பித்த தொழில் எந்தபிரச்சனையும் இன்றி நடத்தியவர்கள் தங்கள் மனைவிமார்களையும் அதில் ஈடுபடுத்திக்கொண்டனர்.
மீனுவோ சங்கருக்கு துணையாக வழக்கம் போல் தொழிலைகவனிக்க ஆரம்பித்துவிட கார்த்திக் டென்ஷனில்லாமல் தொழில் சம்பந்தமான வெளிஇடங்களுக்கு சென்றுவந்தான்.
அவர்களின் குழந்தைகளின் பொறுப்பை விசாலாட்சியும் வேலம்மையும் எடுத்துக்கொண்டனர்.
///////*********/*********///////*********//////
வெளியே சென்ற சந்தரனும் தர்மரும் கிளம்பி ரெடியாக இருந்தவர்களை வீட்டிலிருந்து மதன் மற்றும் நித்தியனின் பொறுப்பில் அம்மன் கோயிலுக்கு அனுப்பிவைத்தவர்கள். நேராக நாச்சியார் அறைக்குச் சென்றவர்கள் அங்குக் கண்டகாட்சியில் நெகிழ்ந்துபோய்விட்டனர்.
வர்ஷா தனது தம்பிகள், மாமன்களின் மகன்கள் மற்றும் மகள்களைச் சாப்பிடவைத்துக்கொண்டிருந்தாள்.
சாப்பிட்டு முடித்தவுடன் நாச்சியார் மற்றும் சாரதாவுடன் சேர்ந்து அவரின் பேத்திகளும் பேரன்களும் திருமணத்திற்குச் செல்ல அவர்களிடம் மல்லுக்கட்டி ஒரு வழியாகக் கிளம்பி தயாராகி வெளியே செல்ல எத்தனித்தார்.
அப்பொழுது தான் வாசலில் இருந்த மகன்களைக் கண்டதும், “எல்லோரும் கிளம்பியாச்சா சந்திரா? சொந்தக்காரங்க எல்லாரும் கோயிலுக்குப் போய்ட்டாங்கலா?.
கோயிலுக்கு மாப்பிள்ளை போய்சேரந்தாச்சானு அருணை கேளு தர்மா”.
“எல்லாரும் போய் சேர்ந்தாச்சி ம்மா… நீங்களும் சித்தியும் வந்தா நாமளும் போய்டலாம் ம்மா”.
“அண்ணா குழந்தைகள் உமா வரும்போது வெற்றிகூட வரட்டும்… அத்தனை கூட்டத்தில் தனியா விட்டா உமா திட்டும்”.
அதற்குச் சாரதா, “உமா திட்டுவதும் சரிதானா தர்மா… இந்த உலகம் இருக்க நிலைக்குப் பிறந்தகுழந்தைகளைக்கூட அடுத்தவங்க கையில் கொடுக்கக்கூடாது டா… அதுவும் இல்லாம நம்ம ஊர் ஆளுங்க மட்டும்னாகூடப் பரவாயில்லை, கண்ணன் நண்பர்கள், குட்டி நண்பர்கள் அப்புறம் உங்க பசங்க நண்பர்களோடு தெரியாதவங்க எல்லாம் வந்திருக்காங்கடா. பிள்ளைங்க பாதுகாப்பு தான் முக்கியம்” என்றார் கண்டிப்புடன்.
சந்திரன், “அதுதான் கோயிலில் அம்முவும் குட்டியும் இருக்காங்கயில்ல அவங்க பார்த்துப்பாங்க சித்தி, பசங்க அவங்ககூடவே இருக்கட்டுமே… உமாவும் வெற்றியும் அங்கையும் இங்கையும் ஓடவுமே சரியா இருக்கும்”.
என்ன தான் தம்பி கல்யாணம் இருந்தாலும் உமா மற்றும் வெற்றியின் கண்கள் பசங்க மேல தான் இருக்கும்.
ஆம் இன்று கண்ணனுக்கும் மார்க்கின் தங்கை நான்ஸுக்கும் தான் திருமணம்.
நான்ஸீயின் அதீத குறும்புத்தனமும் தைரியமும் வெகுவாக உமாவிற்குப் பிடித்துபோக வீட்டினருடன் பேசி அடுத்த ஆறுமாதத்திலேயே திருமணத்தையும் முடித்துவிட்டாள். திருமணத்திற்கான அனைத்தையும் உமாவும் அம்முவும் குட்டியும் மல்லியும் தான் பார்த்துபார்த்து செய்தனர்.
தர்மர், “சரிசரி… வாங்க நேரமாகிடுச்சி, நாம அங்க போயி தான் வெற்றி இவங்களை வந்து கூட்டிகிட்டு வரமுடியும் என்றவர் கையேடு பேரப்பிள்ளைகளைச் சாந்தியிடம் விட்டுவிட்டு மனைவி, தாய்மார்கள் மற்றும் அண்ணிமார்களையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்”.
இவர்கள் கோயிலுக்குச் சென்றவுடன் வெற்றியையும் விஷ்ணுவையும் வீட்டிற்கு அனுப்பிவைத்தார் நாச்சியார்.
குழந்தைகள் மற்றும் மல்லியையும் விஷ்ணுவுடன் அனுப்பிய வெற்றி பூனைபோல் அடிமேல் அடிவைத்து தன் அறைக்குள் சென்றான்.
அங்குச் சென்றவன் தாய்மையின் பூரிப்பில் புத்தம் புது மலர் போல் அழகில் மிளிர்ந்த உமாவை வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே நின்றான்.
தன்னவனின் வரவை உணர்ந்தாளும் அவனின் மேல் இருந்த கோபத்தில் தன்னைக் கண்டுகொள்ளாமல் அலங்கரித்துக்கொண்டிருந்தால்.
அவளின் கோபத்தை உணர்ந்தவன் வேண்டுமென்றே அவனைச் சீண்டும் பொருட்டு பாடலை பாடிக்கொண்டு இருந்தான்.
என் பச்சரிசி நீதான்
அச்சுவெல்லம் நான்தான்
ஒன்னில் ஒன்னு கலகட்டுமே
ஆத்துகுள்ள தோப்புகுள்ள
அய்யனாரு கம்மாகுள்ள
நம்ம கொடி பறக்கட்டுமே
சொந்தக்கார பூவே
சொல்லிகொஞ்சம் தாரேன்
சொல்லி கொடு மானே
அள்ளி தர வாரேன்
நான் உறவுக்காரன்
உறவுக்காரன் உறவுக்காரன்
நீ கட்டிய சேலைக்கும்
கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்
அதில் மயங்கியவள் முயன்று கோபத்தைப் பிடித்துவைத்துக்கொண்டு, “உங்ககிட்ட அத்தனை தடவை படிச்சிபடிச்சி சொன்னேனா இல்லையா? உங்க சேவையை ஒரு மீடியாவுக்கு ஒதிக்கிவச்சிட்டு கல்யாண வேலையைப் பாருங்கனு… நீயென்ன சொல்லறதுனு கிளம்பி போய்ட்டீங்க”.
“நேத்து மதியானம் போனீங்க இன்னிக்குக் காலையில் ரெண்டு மணிக்கு வரீங்க. போனதுதான் போனீங்க கொஞ்சம் சீக்கிரமாவாவது வரலாமில்ல” என ஆதங்கமாக முடித்தவளிடம்…
வெற்றி, “நம்ம சக்தி மாதிரி ரெண்டு சின்னக் குழந்தைங்க உமா… பாக்கவே கஷ்டமா இருந்தது அதனால் தான் கூடவே இருந்து அந்தப் பொண்ணு கண்முழிக்கறவரை தேவையான உதவிகளைச் செய்துகொடுத்துவிட்டு வந்தேன். மார்க் இருந்தாலாவது அவனை விட்டுவிட்டு நான் வந்திருப்பேன் அவனும் தனியாளா இருந்து நான்ஸு திருமணத்திற்காக வேலையைப் பார்க்கிறானில்ல அதனால்தான் மகாம்மா நானே எல்லாவேலையையும் பார்க்கவேண்டியதா போச்சி”.
அதில் கோபத்தை மூத்தவள் “அந்தப் பொண்ணுக்கு இப்ப பரவாயில்லையா மாமூ? குழந்தைகளை யார் பாத்துக்கிறாங்க மாமூ? அந்த ஆளை என்ன பண்ணுனீங்க?”.
“குழந்தைங்க அந்தப் பொண்ணோட அப்பா, அம்மாகிட்ட பத்திரமா இருக்காங்க மகாம்மா… அந்தப் பொண்ணோட புருசன் டீயடிசன் சென்டரில் சேர்த்துவிட்டேன்”.
“இந்த எட்டுவருடத்தில் நீங்களும் உங்கதம்பிகளும் சேர்ந்து நம்ம ஊருக்குள்ள மதுக்கடை வரவிடாமல் பண்ணீட்டீங்க அப்படியிருந்தும் இன்னும் இந்தமாதிரி கொடுமை நடந்துகிட்டேதான் இருக்கு” என்றவளிடம் வெற்றி, “நம்ம ஊர் மக்கள் முன்னைவிட இப்ப எவ்வளவோ மாரீட்டாங்க மகாம்மா, இன்னும் கொஞ்சம் நாளில் இந்த மாதிரி வெளியே குடித்துவிட்டு வரவீங்களையும் ஊருக்குள்ள வரவிடாமல் பண்ணிட்டா போதும் அந்தப் பயத்திலேயே வெளியே குடித்துவிட்டு நம்ம ஊர் எல்லைக்குள் வரமாட்டாங்க. அதற்கான ஏற்பாடுகளையும் ஆரம்பிச்சாச்சி மகாம்மா”.
“சரிசரிவா இந்தச் சக்தி குட்டி எல்லாருக்கும் முன்ன கிளம்பி கண்ணன்கூடவே கோயிலுக்குப் போய்ட்டான் அங்க என்ன பிரச்சனையைப் பன்னிவச்சிருகானோ தெரியவில்லை டீ”.
“உங்களுக்கு அவனைப் பத்தி குறைசொல்லலீனா பொழுதுவிடிஞ்சி அந்திசாயாதே, அதெல்லாம் அவன் கண்ணனையும் பத்திரமா பாத்துக்குவான் நீங்க சீக்கிரமா வாங்க நான் போய் பசங்களைப் பார்க்கிறேன் என்றவள் அவனின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் சென்றுவிட்டாள்”.
வெற்றி வந்ததும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றனர். அங்குச் சென்றவர்களை வரவேற்றது நாச்சியாரின் புழம்பல்கள் தான்.
“என்ன ஆட்சி பாட்டி? ஏன் இவ்வளவு டென்சனா இருக்கீங்க?” என்றவளிடம் நாச்சியார், “நீ போய் பாரு உம் மகனை. அவன் பன்ற அட்டகாசம் தாங்கமுடியலடா வெற்றி”.
டென்ஷனாகாம வாங்க பாட்டி என்றவன் தன் மனைவியை அழைத்துச்சென்று மேடையைப் பார்த்ததும் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான். அதில் உமாவுக்குக் கூடச் சிரிப்பு வந்துவிட்டது.
மேடைக்குச் சென்ற உமா அங்குச் சூழ்ந்துநின்ற குடும்பத்தினரை வேலையைப் பார்க்க அனுப்பிவிட்டு கண்ணனின் அருகில் அமர்ந்து தானும் மந்திரம் செல்வேன் என்று அடம்பித்துக்கொண்டிருந்தவனை, “சக்தி கண்ணா வா அம்மா உனக்குப் புதுப் பொம்மை வாங்கித்தறேன்” எனக்கூறித் தாஜசொய்ய அது அவனிடம் எடுபடாமல் போகிவிட்டது.
“பொம்மைவேண்டானா போ நான் அபி, சவி க்கும் வாங்கிதந்திடறேன்” என்றவளிடம் அந்த வாண்டோ, “எனகு அத பொமு வேணா போ இதா வேணும்” என்று கூறி அவளின் அழுத்தத்தை அதிகரித்தான் உமாவின் மைந்தன்.
சக்தியை வழுகட்டாயமாகத் தூக்க முற்பட்ட உமாவை தடுத்த கண்ணன் அவனைத் தன் மடியில் இருத்திக்கொண்டு ஐயர் கூறிய மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருந்தான். கண்ணனுடன் சேர்ந்து சக்தியும் தன் மழழை மொழியில் பிதற்றிக்கொண்டிருந்தான்.
மணமேடையிலிருந்த கீழேவந்த உமா குட்டியை தேட அவனோ அங்கு வந்த பெண்களிடம் கடலைபோட்டுக்கொண்டிருந்தான்.
பள்ளி படிப்பை முடித்ததும் வெற்றி குட்டி ஆசைபட்ட மருத்துத்துறையிலேயே அவனைப் படிக்கவைத்தான்… அதுவும் அவன் விருப்பப்பட்ட Oxford Universityயில் குட்டியின் மார்க்குக்கு எளிதாகச் சீட்டுகிடைத்துவிட்டது. இப்பொழுது கண்ணனின் திருமணத்திற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்துள்ளான்.
தூரத்திலேயே உமா வருவதைப் பார்த்துவிட்டு குட்டி அந்தப் பெண்களை விட்டுவிட்டு உமாவிடம் சென்றுவிட்டான்.
என்னதான் வளர்ந்திருந்தாலும் குட்டிக்கு சின்னசின்ன விஷயத்திற்குக் கூட உமா தான் வேண்டும்.
“இப்ப எதுக்குக்கா ஒரு இடத்தில் உக்காராம இப்படி அங்கேயும் இங்கேயும் நடந்துகிட்டே இருக்க? இங்க வேலையைப் பார்க்கதான் இத்தனை பேர் இருக்கோமில்ல நீ கொஞ்சம் அமைதியா இருக்கா” என்றவனிடம் உமா, “நான் இங்க எந்தவேலையும் செய்யக்கூடாதுனு தான அங்கேயே விட்டுவிட்டு இங்கவந்து கூட்டிகிட்டு வந்தீங்க… எல்லாரும் கூட்டுக்கலவாணிங்க”.
“அக்கா உன் நல்லதுக்குதான சொல்லறோம்… நீ நல்லா இருந்தாதான நாங்கெல்லாம் நல்லா இருப்போம். முதல்பிரசவத்திலேயே எவ்வளவு சிக்கல் இந்தத் தடவை அந்த மாதிரி பிரட்சனை இல்லாம என் மருமக ஆரோக்கியமா இந்த உலகத்திற்கு வரனும், நீயும் நல்லா இருக்கனு எனக் கோபத்தில் ஆரம்பித்து கெஞ்சிலில் முடித்தான்”.
அவன் சொல்வது முற்றிலும் உண்மை தான் சக்தி கிட்டதட்ட திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் கழித்துப் பிறந்தான், அதுவும் குறைபிரசவத்தில் குறைந்தபட்ச எடையில் பிறந்து அனைவரையும் நான்கு நாட்கள் டென்ஷனிலேயே வைத்திருந்து ஐந்தாவது நாள் தான் உடல் தேறி வந்தான். அதனாலேயே அனைவருக்கும் செல்லப்பிள்ளையாக ஆகியிருந்தான். அக்காக்கள் அண்ணன்களுக்குக் கூடச் சக்தி என்றால் கொள்ளைபிரியம். அதனாலேயே இவனின் சேட்டைகள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போனது அதன் விளைவு தான் இப்பொழுது மேடையில் தெரிகிறது.
“சரிடா இனி இந்த இடத்தைவிட்டு எங்கேயும் போகல போதுமா? எங்க என்கிட்ட வந்தா நானும் வேலை செய்ய வந்திடுவேனோனு அம்முவும் மல்லியும் கண்ணில் படவே மாட்டிக்கிறாங்கடா இங்க தனியா இருக்க ஒரு மாதிரியா இருக்கு டா”.
“நான் போய் பசங்களைப் பார்த்துகிட்டுப் பாட்டிகளை வரசொல்லறேன் க்கா” எனக்கிளம்பியவனிடம் உமா, “பசங்க ஜாக்கிறதை குட்டி தனியா எங்கேயும் விடாதே”.
“சரிக்கா நானும் சாந்தி அக்காவும் பார்த்துகிறோம் என்றவன் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டான்”.
அவன் சென்ற பத்துநிடத்தில் பாட்டிகள் வர அந்த இடத்திலிருந்தே பிள்ளைகளைக் கண்காணிப்பது, மல்லி, அம்மு மற்றும் ஆனந்தியிடம் தேவையான பொருள்களைக் கொண்டுவரச் சொல்வதுமா சொன்றது.
அடுத்து வந்த நல்ல நேரத்தில் கண்ணன் பெரியோர்களின் முன்னிலையில் மங்களநாண் அனிவித்து நான்ஸீயை தன்னில் சரிபாதியாக ஆகிக்கொண்டான்.
அதன் பின் சடங்குகள் முடிந்து பெரியவர்களிடம் ஆசி வாங்கியவர்கள் உமா மகேஸ்வரி மற்றும் வெற்றியிடம் ஆசி வாங்க சொல்லும்போது ஒரு பெருசு வாயைவைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் உமாவை, “ஏம்மா பொண்ணே… நீயே கல்யாணம் ஆகி நாளு அஞ்சி வருசம்கழிச்சி தான் பிள்ளையைப் பெத்த அதுவும் குறைபிரசவத்தில், நீ போய் அவங்களுக்கு ஆசி கொடுக்கலாமா? அவங்க வாழவேண்டாமா” என வெறுப்புடன் கூறியவரிடம் கண்ணன், “போதும் தேவையில்லாம பேசாதீங்க நீங்க யாரு என் அக்காவப்பத்தி பேச? என் அக்காவைவிட வேற யாரும் என்வாழ்க்கையைப் பத்தி அக்கறை காட்ட முடியாது தெரிஞ்சிக்கோங்க என்றவன் உமாவை அணைத்துக்கொண்டான்”.
அம்முவோ, “உங்களைத்தான் ரொம்ப நாளா பாக்கனும்னு நினைத்தேன்… நீங்க தான் போர இடத்திலெல்லாம் யாரையாவது பேசி அவங்க மனசை நோகடிக்கிறதா? இனி யாரையாவது இந்த மாதிரி பேசி பார்த்தேன் போலீஸ் கிட்ட புடிச்சிகொடுத்துவிடுவேன்”.
அதற்கு மல்லி, “இந்தக் கிழவியைப் போலீஸ்ல புடிச்சி கொடுத்தா மட்டும் பத்தாது டீ சிபிஐ கிட்ட பிடிச்சிகொடுக்கனும் அம்மு என்றதும் பயந்தவர் இனி யாரையும் மனசு நோகிரமாதிரி பேசமாட்டேன் எனக்கூறி கோயிலைவிட்டு விட்டால் போதும் என ஓடிவிட்டார்”.
அதன் பின் நித்தியனும் மதனும் அவர்களைச் சமாதானம் செய்து அடுத்தடுத்த சடங்குகளைச் செய்யவைத்தார்.
மார்க் மற்றும் அவனின் மனைவி தமிழரசியும் சேர்ந்து உமாவை சமாதானம் செய்ய முயன்ற போது அவர்களின் மனம் அறிந்த உமா, “இந்த மாதிரி ஆளுங்க வீட்டுக்கு இருக்கதான் செய்வாங்க அவங்க பேசரதையெல்லாம் நாம மனதில் வச்சிகிட்ட நம்ம வாழ்க்கைதான் பாலாம்போகும்னு நான் அனுபவப்பூர்வமா உணர்ந்தேன் அதனால் தான் இதை நான் பெருசா எடுத்துக்கவில்லை மார்க் அண்ணா நான்ஸீயை பாருங்க அவ இவ்வளவு நேரம் அமைதியா இருந்ததே பெருசு சீக்கிரம் சடங்கைமுடித்துவிட்டு அவளைக் கொஞ்சம் ரிலீஸ் பன்னுங்க” எனக்கூறி அவர்களை அனுப்பி வைத்தாள்.
அதுவரை அமைதியாக இருந்தவன் உமாவின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். அந்தப் பிடியே சொன்னது அவனின் மனதை.
“அங்க பாருங்க உங்க பையனை என்னமோ அவன் தான் மாப்பிள்ளை கனக்கா கண்ணன் மடியில் உட்கார்ந்துகிட்டு புறப்பட்டுவிட்டான்”.
அவளின் சமாளிப்பை உணர்ந்தவனும், “அவனுக்கென்னடி குறைச்சல் சொன்னாலும் சொல்லா விட்டாலும் அவன் ராஜா தான்டீ… பாரு உந்தம்பி எல்லார் காலுலையும் விழறானு அவனும் விழுந்து ஆசி வாங்கிறான்… அவனே போதும் டீ இந்த வீட்டை உயிர்போடு வைக்க” என்றவனைப் பார்த்து உமா, “நீங்களே உங்க பையனை கட்டகிட்டு அழுங்க நானும் எம்பொண்ணும் சேர்ந்து உங்களைக் கவனிச்சிக்குறோம் என்றவள் அவனுக்குப் பழிப்பு காட்டிவிட்டு சென்றுவிட்டாள்”.
அதன் பின் போட்டோ எடுப்பது என அத்தனை நிகழ்வுகளிலும் அந்தவீட்டின் மொத்தவாண்டுகளும் பெரியவர்களையும் போட்டோ கிராப்பரையும் படுத்தியெடுத்துவிட்டனர்.