அம்மையப்பன் 14
நீங்கயெல்லாம் யாரு?.. எதுக்காக இப்படி பிரச்சனை பண்றீங்க.. போலீஸ்க்கு போனா என்ன நடக்கும் தெரியுமா.. என ஜிஎம் கத்த அவன் முகத்திலேயே ஒரு குத்து விட்டான் அகத்தியன்..
நாற்பது வயது ஆண்மகன் அவன்.. ஜிஎம் முப்பதின் தொடக்கத்தில் இருந்தாலும் அகத்தியனின் பலத்திற்கு முன் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை..
சொல்லுடா.. என் பசங்க எங்க சொல்லு.. உனக்கு தெரியாம இருக்காது என அகத்தியன் அவனை நொறுக்கி கொண்டிருந்தான்.. அவனை பதில் பேசக்கூட அனுமதிக்க வில்லை..
அகத்தியனிடம் இப்படியொரு பரிணாமத்தை அரவிந்தனும் சரவணனும் எதிர்பார்க்கவில்லை.. அரக்கன் போல் அவனை ரத்தம் வருமளவிற்கு அடித்து கொண்டிருக்க.. மற்ற இருவரும் அவனை நெருங்கவே பயந்தனர்.. ஆனால் இப்படியே விட்டால் அவன் செத்துவிடுவானோ என பயந்து சரவணன் தான் அவனை பிடித்து இழுத்தான்..
மச்சான் விடு செத்துர போறான்.. நமக்கு பசங்க எங்கன்னு தெரியணும்.. என அவன் சொல்லவும்.. அடிப்பதை நிறுத்தி.. அவனை தூக்கி இழுத்து அங்கிருந்த சுவற்றில் சாய்த்து.. கழுத்தில் கரம் பதிக்க.. அவன் பயந்து போனான்..
சொல்லு என அகத்தியன் உறும.. அங்கிருந்த போன் ஒலித்தது.. அவன் மெல்ல போனை கை காண்பிக்க.. அகத்தியன் எடுத்து காதில் வைத்தான்..
ஒரு நிமிட அமைதிக்கு பின்.. வாங்க மிஸ்டர் அகத்தியன் அம்மையப்பன்.. வெல்கம் டு அதி’ஸ் எம்பயர்.. என நக்கலாகவும் ஆளுமையாகவும் ஓர் பெண்குரல் கேட்க.. அகத்தியன் முகம் ஓர் நொடி அதிர்ந்து பின் கோபமாக மாறியது..
யார் நீ.. எதுக்கு.. என அவன் அடுத்து தொடங்கும் முன்பே..
ஷ்ஷ்ஷ்ஷ் மிஸ்டர் அகத்தியன் அதி மட்டும்தான் பேசுவா.. வேற யாரும் அவகிட்ட அவளோட பெர்மிஷன் இல்லாம பேசக்கூடாது.. என அழுத்தமாக அவள் சொல்ல.. உடல் இறுக நின்றிருந்தான் அகத்தியன்..
குட்.. வீரியத்த விட காரியம் பெருசுன்னு புரிஞ்சுக்கிட்ட.. உன்னோட வருங்கால மாப்பிள்ளை சொன்னான்.. என் மாமா பெரிய புடுங்கி.. ஒருமணி நேரத்துல எங்கள கூட்டிட்டு போயிடுவாருன்னு.. நாட் பேட்.. ஆனா உன்னால எங்க இருக்காங்கன்னு ஊகிக்க முடியுமே தவிர அழைச்சிட்டு போக முடியாது.. ஏன்னா அவங்கள தூக்கியிருக்கிறது நான்.. அதி..
இப்போ என்ன பண்ற.. நீ இவ்வளவு நேரம் புரட்டியெடுத்த என்னோட ஹோட்டல் ஸ்டாஃப்ப ஒரு பெரிய ஹாஸ்பிடல்ல சேர்த்து டிரீட்மென்ட் பாரு.. அப்பொறம் பத்திரமா அவனோட வீட்டுல விட்டுட்டு.. ஒரு லட்சரூபா பணம் கொடுத்துட்டு.. இங்க வா.. அப்பொறம் பேசலாம்.. என போனை வைக்க பார்க்க..
அப்படி செய்யலன்னா என இறுக்கமாக ஒலித்தது அவன் குரல்..
ம்ம்ம்ம்.. நீ கடைசி வரைக்கும் உன் வீட்டு வாரிசுகள தேடிகிட்டே இருக்க வேண்டியதுதான்.. நீ போலீஸ்க்கு போனாலும்.. இல்ல அதுக்கும் மேல போனாலும் ஒன்னும் கழட்டிட முடியாது என போனை வைத்துவிட்டாள்..
அகத்தியன் வதம் செய்ய காத்திருக்கும் ராட்சஷன் போல் நிற்க.. அதனை கேமரா வழியாக வன்மம் சூழ்ந்த விழிகளுடன் பார்த்து கொண்டிருந்தாள் அதி..
மாப்புள.. என்னாச்சு யாரு பேசுனாங்க.. என அரவிந்தன் கேட்க.. அகத்தியன் பதில் சொல்லாது.. ஜிஎம்மை இழுத்து கொண்டு சென்றான்..
இருவரும் புரியாது அவனை பின் தொடர்ந்தனர்.. அதி கூறியது போல் அனைத்தும் செய்ய ஒருமணி நேரம் கடந்திருந்தது..
சார்.. ஒரு விஷயம் மட்டும் சொல்றேன்.. எங்க மேடம் என்ன சொல்றாங்களோ அதை செஞ்சிடுங்க.. மீறி வேற ஏதாவது பண்ணா, உங்க பசங்களுக்கு தான் ஆபத்து.. அவங்களோட உயிருக்கு எதுவும் ஆகாது.. ஆனா நீங்க அவங்க பேச்சை கேட்கலைன்னா அவங்கள காயப்படுத்துவாங்க.. இன்னைக்கு மட்டுந்தான் அவங்கள இங்க வச்சுருப்பாங்கனு சொன்னாங்க.. அதுனால புத்திசாலி தனமா நடந்துகோங்க என்ற ஜிஎம்.. அவனை பார்த்தவாரு தன் வீட்டிற்குள் சென்றான்..
அகத்தியன் அதனையெல்லாம் விழிகள் சிவக்க கேட்டு கொண்டிருந்தவன்.. ப்ளூ ரோஸ் ஹோட்டலுக்கு மீண்டும் சென்றான்.. அரவிந்தனுக்கும் சரவணனுக்கும் ஜிஎம் பேச்சியிலேயே என்ன நடந்திருக்கும் என புரிந்தது.. அவர்கள் இருவரும் அகத்தியனை பயத்துடன் பார்த்தனர்..
சார் லாஸ்ட் ப்ளோர்ல உள்ள எம்டி ரூம்க்கு போங்க என ஒருவன் சொல்லி செல்ல மூவரும் அங்கு சென்றனர்.. அந்த தளத்தின் கோடியில் அந்த அறை இருக்க.. உள்ளே சென்றனர்..
வெல்கம் பேக்.. சரி அடுத்த டாஸ்க்.. நீ என்ன பண்ற உடனே அம்மையப்பன் மாளிகைக்கு போ.. அங்க உன்னோட பெட்ரூம்ல உள்ள மர பீரோக்கு மேல ஒரு லெட்டர் இருக்கும்.. அதுலதான் அடுத்த டாஸ்க்குக்கான க்ளு இருக்கு.. என அந்த அறையில் அவள் குரல் மட்டும் ஒலிக்க..
அரவிந்தனும் சரவணனும் மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்து நின்றார்கள் எனில்.. அகத்தியன் வெறிகொண்ட வேங்கை போல் ஆனான்.. அங்கிருந்த கண்ணாடி மேஜை மீது மொத்த வெறியையும் காண்பிக்க அது நொறுங்கி போனது..
மச்சான் வா.. என சரவணன் தான் அகத்தியனை இழுத்து போனான்..
ஓவரா திமிர் காமிக்கிறான்.. அதுவும் அதிக்கிட்டயே.. இத அடக்கியே ஆகணும் என சீற்றமாய் எழுந்தவள்.. அனைவரும் அடைக்க பட்டிருந்த இடம் நோக்கி சென்றாள்..
அங்கோ நேரம் செல்ல செல்ல எல்லோரும் பயத்தில் தத்தளிக்க.. குழலியும் அமுதனும் மட்டும் அகத்தியன் எப்படியும் கண்டுபிடித்து விடுவான் என்ற தைரியத்தில் இருந்தனர்.. அதனை அங்கு வந்த அதியும் உணர்ந்தாள்..
என்ன அமுதன்.. உன் மாமனுக்கு இன்னும் ஒரு மணி நேரம் வரலையா.. என கேலியாக கேட்டவாறு அவர்கள் முன் நிற்க.. அமுதன் அவளை கோபத்துடன் பார்த்தானே தவிர பதில் சொல்லவில்லை..
என்ற ஐயன்கிட்ட நாங்க எந்த ஹோட்டலுக்கு போறோம்ன்னு சொல்லல.. அதுனால கொஞ்சம் நேரம் எடுக்கலாம் ஆனாலும் என்ற ஐயன் வந்துடுவார்.. என குழலி கோபமாக சொல்ல.. அதி புருவம் உயர்த்தி அவளை பார்த்தாள்..
குழலி கொஞ்சம் அமைதியா இரு.. என மதுமித்ரா அவளை அடக்க பார்க்க.. குழலி தந்தையை கேலி செய்த கோபத்தில் கொதித்தாள்..
ஹ்ம்ம் ஆட்டிடூட் என அதி அவளை உருத்து விழிக்க.. அமுதன் குழலியை தன்னோடு அணைத்து கொண்டான்..
ஒரு உண்மை சொல்லவா உன்ற ஐயன் உங்களை ஏற்கனவே கண்டுபிடிச்சிட்டார் என சிரிப்புடன் சொல்ல.. அமுதன் மதுமித்ரா தவிர அனைவர் முகமும் ஜொலித்தது..
என்ன அமுதன் நீ மட்டும் சந்தோஷபடமாட்ற.. ஒருவேளை உங்க மாமாவ நான் நாய் மாதிரி அலையவிடுறது உனக்கு தெரிஞ்சிடுச்சா என குரூரமாக கேட்க.. அனைவரும் அதிர்ந்தனர்.. அதி ஒருவனை பார்க்க.. அவன் அங்குள்ள தொலைக்காட்சியை உயிர்பித்தான்..
அதில் அகத்தியன் முதன் முதலாக அவர்களை தேட ஆரம்பித்தது முதல் ஓட தொடங்கியது.. அகத்தியன் அவர்களுக்கு போன் போகவில்லை என தெரிந்ததும் சற்று பதட்டம் கொண்டவன், அரவிந்தனுக்கு போன் செய்து எந்த ஹோட்டல் என கேட்க அவர்களுக்கும் தெரியவில்லை.. உடனே அவர்கள் எங்கு சென்றிருப்பார்கள் என யூகித்து.. முதலில் பேரடைஸ் ஹோட்டலுக்கு சென்றான்.. ஒவ்வொரு இடமாய் தேடினான்.. இடடையில் அவர்களுக்கு போன் செய்து கொண்டே இருந்தான்.. ஆனால் பலன் கிட்டவில்லை.. அங்குள்ளவர்களையும் விசாரிக்க அவர்களுக்கும் தெரியவில்லை.. மேலதிகாரியை பிடித்து கேமராவயும் அலசியவன்.. எதுவும் கிடைக்காது சோர்ந்து போனான்..
அடுத்து கிராண்ட் ஹோட்டலிலும் இதே நிலைதான்.. இறுதியாக அவன் ப்ளூ ரோஸ் ஹோட்டல் வந்தடைந்தான் அவனின் கடைசி நம்பிக்கை.. இங்கு இருக்க வேண்டுமே என்ற தவிப்புடன் உள்ளே வருவதைக் கண்டு குழலியின் விழிகள் கண்ணீர் சிந்தியது.. மற்ற ஹோட்டலில் அனைவரையும் விசாரித்தார்கள் ஆனால் இங்கோ யாரும் அவ்வளவாக பதிலும் சொல்ல வில்லை.. கேமராவையும் பார்க்க விடவில்லை.. அதில்லையே அகத்தியனுக்கு சற்று சந்தேகம் வந்தது.. அதோடு அவனின் உள்ளமும் இங்கு ஏதோ இருப்பதாய் சொன்னது..
இதனை உறுதி செய்வதற்காகவே அகத்தியன் ஆணையரிடம் சென்றான்.. சரவணன் அப்பொழுது போன் செய்ய.. அகத்தியன் நண்பனிடம் அனைத்தையும் கூறினான்.. சரவணன் உடனே நண்பனுக்கு உதவி செய்ய வந்துவிட்டான்..
அண்ணனுக்கு போன் செஞ்சு சொல்லிடு மச்சான்.. அவரு பொண்ணும் பையனுமே காணும்ல.. என சரவணன் சொல்லவும்.. அகத்தியன் அவரை வரவழைத்து அனைத்தும் சொல்ல அரவிந்தனும் பதறிவிட்டார்..
அதற்க்கடுத்து அவர்கள் ஆணையர் அறையினுள் இருந்தது முதல் இப்பொழுது அவன் மேட்டுபாளையத்திற்கு செல்வது வரை அனைத்தும் ஓடி கொண்டிருந்தது..
என்ன, குழலி அகத்தியன் அம்மையப்பன் எப்படி இருக்கு.. என அதி கேட்க.. குழலி விழிகளில் நிறைந்த கண்ணீருடன் அவளை வெறித்து பார்த்தாள்..
சரி விடு.. மிஸ்டர் அமுதன் திருநாவுக்கரசு நீங்க சொல்லுங்க, எப்படியிருக்கு.. என அவள் கேலியாக கேட்க.. அமுதன் சட்டென எழுந்து அவள் முன்னே வர.. சுற்றியுள்ள காவலர்கள் அவனை நோக்கி துப்பாக்கியை உயர்த்தினர்.. ஆனால் அவன் அதற்கு சிறிதும் அஞ்சாமல்.. கண்டிப்பா இதுக்கெல்லாம் நீங்க அனுபவிப்பிங்க என அதியின் விழியையே பார்த்து கூற.. அவள் அலட்சியமாய் சிரித்தாள்..
ஹ்ம்ம் யாரு அனுபவிக்க போறாங்கன்னு பாரு.. என அவள் ஒருவனை பார்க்க.. அவன் ரோலிங் சேரை கொண்டு வந்தான்.. அதனில் அரசியாய் அமர்ந்து கால் மேல் கால் போட்டவள்.. நானும் உங்களோடவே இருந்து இந்த படத்தை ரசிக்கிறேன்..
அப்பொறம் அமுதன்.. நீங்க எல்லாம் காமிக்கிற ஆட்டிட்டூட்க்கு சேர்த்து உன் மாமன் தான் இன்னும் ஓடபோறான் என திரையை வெறித்தவாரு சொல்ல.. அமுதன் ஆயாசத்துடன் குழலியின் அருகே அமர.. அவளோ தொலைக்காட்சியில் தெரிந்த தன் தந்தையையே பார்த்து கொண்டிருந்தாள்..
அவர் கோபமாக இருப்பதாய் தெரிந்தாலும்.. அவரின் ஆழ்மனதின் பயத்தையும் பதட்டத்தையும், அவளால் புரிந்து கொள்ள முடிந்தது..
அகத்தியின் கைமுஷ்டி இறுக.. விழிகள் சிவக்க காரை தன் வீட்டு வாசலில் நிறுத்தினான்.. அவன் வேகத்தை பார்த்து.. வேலையாட்கள் அனைவரும் நடுநடுங்கி போயினர்..
ராசா என்னாச்சு ஏன் இவ்வளவு வேகம்..
ஐயா..
தம்பி.. என அனைவரும் அவனை அழைக்க.. அவனோ யாருக்கும் நின்று பதில் சொல்லும் நிலையில் இல்லை.. வேகவேகமாக தன்னறைக்கு செல்ல.. அதனை கண்டு வீட்டினர் அனைவரும் அதிர்ந்து போயினர்.. இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட அவன் இவ்வாறு நடந்து கொண்டதில்லை.. இது அவனின் சுபாவமே கிடையாது..
அகத்தியன் வேகமாக முன்னே செல்ல.. அரவிந்தனும் சரவணனும் சற்று பின்னால் வந்தனர்..
சரவணா என்னய்யா ஆச்சு.. ஏன் தம்பி இப்படி இருக்கு என மரகதம் கேட்க.. அவன் என்ன சொல்வது யோசிப்பதற்குள் மேலே ஏதோ உடையும் சத்தம் கேட்டு.. இருவரும் மேலே சென்றனர்.. கூடவே திருநாவுக்கரசு திருச்செல்வமும் செல்ல.. அகத்தியன் ஆக்ரோஷமாக அவன் அறையில் உள்ளதை எல்லாம் உடைத்து கொண்டிருந்தான்.. உள்ளே வந்த திருச்செல்வமும் திருநாவுக்கரசும் மைத்துனனின் செயலில் அதிர்ந்து போயினர்..
டேய் என்னடா ஆச்சு.. அதுல என்ன இருந்ததுடா என்ற சரவணன் அவன் கரத்தில் அவன் கரத்தில் இருந்த பேப்பரை பார்க்க.. அதில் மீண்டும் ப்ளூ ரோஸ் ஹோட்டலிற்கு வருமாறு இருக்க.. சரவணன் ஓய்ந்து போனான்..
என்னாச்சு சரவணா..
மறுபடியும் ஹோட்டலுக்கு வர சொல்லி போட்டு இருக்குண்ணே என மெல்லிய குரலில் சொன்னான்..
ஹாஹா.. என அதி சிரிக்க.. அனைவரும் அவளை வெறுப்பாய் பார்த்தனர்..
விஷ்ணு இப்ப அவங்களுக்கு எப்படி இருக்கும்.. பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்காது.. என அவளின் தலைமை பாதுகாவலரிடம் கேட்டாள்..
கண்டிப்பா மேம் என்றான்..
இங்க என்ன நடக்குதுன்னு கொஞ்சம் சொல்றிங்களா என திருச்செல்வம் கேட்க.. அகத்தியன் சட்டென வெளியேறினான்.. இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாத சூழ்நிலை அண்ணே.. நான் உங்களுக்கு போன் பண்றேன்.. சரவணன் அகத்தியன் பின் ஓடியவாரு சொன்னான்..
கீழே எல்லோரும் பயத்துடன் நிற்க அவனோ யாரையும் சட்டை செய்யாது காரை எடுக்க.. கடைசி நொடியில் இருவரும் சேர்ந்து கொண்டனர்..
என்ன மாப்ள ஆச்சு? என்ன சத்தம் என சிவநேசன் கேட்டார்..
என்னன்னு புரியல மாமா.. மேல எல்லாத்தையும் போட்டு உடைச்சு வச்சிருக்கான்..
ஏதோ பெருசா ஒன்னு நடந்து இருக்குன்னு மட்டும் தெரியுது என்னன்னு தான் புரியல என திருநாவுக்கரசு யோசனையாக சொல்ல.. குடும்பத்தினர் அனைவரும் பயந்து நின்றனர்.. அதனை அதி வன்மமாக பார்த்துக் கொண்டிருந்தாள்..
ம்ம்ம்ம் படுங்க படுங்க நல்லா கவலைப்படுங்க.. இப்பதானே ஆரம்பிச்சிருக்கேன்.. இதுக்கேவா என அதி போலியாக சலித்து கொண்டாள்..
ஏன் விஷ்ணு அடுத்த நம்ம ஆட்டத்தை இவங்க தாங்குவாங்க..
சந்தேகம் தான் மேம்
மீண்டும் ஒருமணி நேர பயணம்.. தலை கலைந்து.. முகம் இறுக.. ஏதோ போல் இருந்த அகத்தியனை கண்டு மற்றவர்கள் ரத்தகண்ணீர் சிந்த.. அதியோ அதனை ரசித்து கொண்டிருந்தாள்..
மீண்டும் அதே அறை..
ஹலோ மிஸ்டர் அகத்தியன்.. என்ன ரொம்ப ஜாலியா இருக்கீங்க போல..
ஓகே உனக்கான அடுத்த டாஸ்க்.. உடனே நீ உடைச்ச டேபிள மாத்து.. என அதிகாரமாக சொன்னாள்..
அதில் தன் பொறுமையை முற்றும் இழந்த அகத்தியன்.. யாருடி நீ.. உனக்கென்ன வேணும்.. ஏன் இப்படி போட்டு படுத்துற.. என ஆக்ரோஷமாக இரைந்தான்..
இவ்வளவு பட்டும் உன் திமிரு அடங்கல.. உன் வீட்டு பசங்க வேணும்னா நான் சொல்றத செய்டா..
முடியாது.. எனக்கு என் பசங்கள பாக்கணும்.. என இறுக்கமாக கூறினான்..
முடியாதா.. இதுக்கு நீ ரொம்ப வருத்தப்படுவ.. உனக்கென்ன அவங்கள நீ பாக்கணும் அவ்வளவு தானே என ஒரு மாதிரியாக வினவ.. மதுமித்ராவின் விரல் நடுங்கியது.. அதனை உணர்ந்த குழலி அவளை புரியாது பார்க்க.. சட்டென எழுந்த அதி வேகமாக யாழினி முடியை பிடித்து இழுத்து செல்ல..
அய்யோ.. அவளவிடுங்க.. விடுங்க என அனைவரும் கத்தினர்.. எழுந்த அமுதனை இருவர் பிடிக்க.. மற்றவர்கள் துப்பாக்கி முனையில் இருந்தனர்..
ஆஆஆஆ.. ஆஆஆஆ என்ன விடு.. விடு என யாழினி கதற.. அந்த சத்தம் அகத்தியன் இருந்த அறை முழுக்க எதிரொலித்தது..
அகத்தியனும் மற்ற இருவரும் பதட்டமாக சுற்றும் முற்றும் பார்க்க.. டேய் இங்க பாருடா என விரல் சொடுகிட்ட சத்தத்தில் அகத்தியன் திரும்ப.. அங்குள்ள கண்ணாடி சுவர்களில், அதி அவள் கரத்தில் துடித்து கொண்டிருந்த யாழினி, பின்னால் இருவரால் பிடிக்கப்பட்டிருந்த அமுதன், துப்பாக்கி முனையில் இருந்தவர்கள் என எல்லோரும் தெரிந்தனர்..
யாழினி.. என அகத்தியன் வேகமாக முன்னேற.. கண்ணாடி இடித்தது.. அகத்தியன் அதனை உடைக்க முயற்சிக்க முடியவில்லை.. அதோடு வேறு வழி ஏதேனும் இருக்கிறதா என ஆராய எதுவும் புலப்படவில்லை..
இதுவரை அவனின் செயல்களை எல்லாம் குரூரமாக பார்த்து கொண்டிருந்த அதி யாழினியின் முடியை இழுத்து பிடித்து.. அவளின் முகத்தை கண்ணாடியில் அழுத்த..
மாமா.. மாமா.. ஆஆஆஆ.. மாமா என யாழினி கதற ஆரம்பித்தாள்..
வேண்டாம் அவளை விடு.. விடு.. அகத்தியன் கத்த.. சரவணனும் அரவிந்தனும் உறைந்து நின்றிருந்தனர்.. அரவிந்தனின் மனது அங்கு படுக்க வைப்பட்டிருந்த மகனையும், துப்பாக்கி முனையில் நின்றிருந்த மகளையும் கண்டு.. பதறி துடித்து கொண்டிருந்தது..
ஷ்ஷ்.. என அதி சொல்ல.. யாழினி சத்தம் குறைத்து மெல்ல விசும்பினாள்.. அவளை பின்னால் தள்ள.. சற்று தூரத்தில் விழுந்தாள்..
என்னடா.. உன்னோட பசங்கள பாத்தாச்சு இல்ல.. போ போயி டேபிள மாத்து.. என அதி அதிகாரமாக சொல்ல.. ருத்ரமூர்த்தியாய் அகத்தியன் நின்றிருந்தான்.. அவனுக்கு மிக எதிரில் ருத்ரனுக்கு சலைக்காத காளியாய் அதி நின்றிருந்தாள்.. இருவருக்கும் இடையில் கண்ணாடி மட்டுமே இருந்தது.. இருவரும் ஒருவரையொருவர் ஆக்ரோஷமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.. அவர்களின் விழிகளில் தீப்பொறி பறந்து கொண்டிருந்தது..