“அக்கா நீங்க எப்பவும் இவ்ளோ அமைதியா தான் இருப்பிங்களா?”
தனக்கு ட்ரிப்ஸ் மாற்றிக்கொண்டிருந்த செவிலியர் முகம் பார்த்து ஆரோஹி ஒரு ஆர்வத்தில் கேட்டுவிட, “ஆரூ” அஸ்வின் மனைவியை அதட்டினான்.
“சும்மா தான் நாராயணா கேட்டேன். ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்கு தானே தெரியும். என்ன க்கா நான் சொல்றது சரி தானே?”
“ஆரூம்மா நீ படு” என்றான் அஸ்வின் மீண்டும்.
“இல்ல சார் அவங்க படுக்க வேணாம், கொஞ்சம் ஒக்காந்து இருக்கட்டும்” என்ற அந்த செவிலியர் ஆரோஹி முகம் பார்த்து மெல்ல புன்னகைத்தாள்,
“நான் எப்பவும் இப்டி தான் மேம். கொஞ்சம் வலிக்கும் வேணும்னா என் கை புடிச்சுக்கோங்க”
அந்த பெண் கூறவும் வேகமாக எழுந்து வந்த அஸ்வின் ஆரோஹி தோளோடு அணைத்துக்கொள்ள, அவன் காதல் பார்த்து அந்த பெண்ணின் இதழில் மெல்ல புன்னகை அரும்பியது.
தான் வந்த பணியை முடித்து ஆரோஹியின் உடல்நிலையை ஒருமுறை பரிசோதித்தவள் அதே அறையில் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த சிறு மேஜையில் குறிப்புகளை எழுதி வைத்து யாருடனோ கைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தாள். அவளை கண் எடுக்காமல் ஆரோஹி பார்க்க அஸ்வினுக்கே அது சங்கடமாக இருந்தது.
“பாத்துருக்கேன், ஆனா இவங்க ரொம்ப சாப்ட். அவங்க போடுற ஊசி கூட ரொம்ப வலிக்கல. குழந்தையை பாத்துக்குற மாதிரி பாத்துக்குறாங்க”
அஸ்வின், “நீ ஸ்பெஷல்லடா அதுனாலயா இருக்கலாம்”
“ஷி இஸ் ஆல்வேஸ் லைக் திஸ்” திடீரென தன் பின்னே கேட்ட குரலில் இருவரும் படக்கென திரும்ப அங்கு ஒரு மருத்துவன்.
வாட்ட சாட்டமான உடல்வாகு, பார்க்கவே ஒரு வசீகரம் அவன் முகத்தில் தெரிந்தது. அது நிமிர்வாலா இல்லை இயற்கையிலே வந்த வசீகரமா என்பது யாரும் அறியார்.
“அவங்களுக்கு ஸ்பெஷல் ஆர்டினரி எல்லாம் தெரியாது. எல்லாரும் ஒரே மாதிரியான முகத்தை தான் காட்டுவாங்க”
அதோடு அந்த தன்னுடைய பார்வையையும் அவளிடமிருந்து திரும்பியவன் அஸ்வினை பார்த்து கை நீட்டினான், “ஹலோ மிஸ்டர் அஸ்வின், ஐ அம் அர்ஜுன், நியூராலஜிஸ்ட். வரதராஜன் என்னோட அப்பா. உங்க கண்டிஷனை செக் பண்ணிட்டு வர சொன்னாங்க. மிஸ்ஸஸ் ஆரோஹி கேன் வி டாக்?”
ஆரோஹி தலை அசைக்க, அவளது மனநிலையை மெல்ல பேசி தெரிந்துகொண்டான். அவன் பேசியது ஆரோஹி பதில் கொடுத்தது எல்லாம் அந்த செவிலியர் குறிப்பெடுத்துக்கொண்டாள்.
“ஓகே குட்” எழுந்து நின்ற அர்ஜுன், “அஸ்வின் நாளைக்கு மார்னிங் டெஸ்ட் ரிசல்ட்ஸ் வந்துடும். பர்த்தர் டிரீட்மென்ட் பத்தி அப்போ பேசலாம். ரிலாக்ஸ் இப்போ”
ஆறுதல் வார்த்தை கூறி கதவை அடைந்தவன் திரும்பி அந்த செவிலியரை பார்த்து, “இலக்கியா என் கேபின்க்கு வாங்க” என்றான்.
“அக்கா உங்க பேர் இலக்கியாவா?” ஆரோஹி அந்த பெண்ணை பார்த்து கேள்வி கேட்க ஆரோஹிக்கு சன்னமான சிரிப்போடு ஆமாம் என்றவள் அர்ஜுனிடம்,
“என் டியூட்டி டைம் ஓவர் சார், நான் வீட்டுக்கு கெளம்பனும்” என்றாள் எழுத்தில் கவனமாக.
‘திமிரு’ முணுமுணுப்போடு அவளை முறைத்தவன் அதே உஷ்ணபார்வையோடு வேகமாக வெளியேறியிருக்க அவன் சென்றதும் கழுத்தை திருப்பி அவன் சென்ற திசையை பார்த்தவள் அடுத்த பத்து நிமிடத்தில் வேறொரு செவிலியரை அங்கு அமர்த்தி வெளியேறிவிட, அஸ்வினை ஆரோஹி ஒரு மாதிரி பார்த்து சிரித்தாள்.
“என்ன?” என்றான் அஸ்வின் மனைவி கையை பிடித்து அருகிலே அமர்ந்து.
“அவங்களுக்குள்ள என்னமோ இருக்கு கிரிக்கெட்டரே”
“எவங்களுக்குள்ள?”
“அந்த டாக்டர் அப்றம் இந்த இலக்கியா அக்கா”
“ஆமா வந்து ஒரே நாள்ல நர்ஸ் ஆகணும்னு ஆசை வரும், யாருன்னே தெரியாத ரெண்டு பேரை சம்மந்தமே இல்லாம சேர்த்து வைக்கணும்னு கூட ஆசை வரும், ஆனா உன்னையே சுத்தி சுத்தி வர்றவனை பத்தி ஒரு நிமிஷம் யோசிக்க தோணிருக்காது. அப்டி தானேடா?” போலியான சிரிப்போடு அஸ்வின் அவள் முகம் பார்த்து கேட்க, ஆரோஹி நெஞ்சினில் பயம் ஒட்டிக்கொண்டது.
கோவம் என்பது அஸ்வின் குரலில் துளியும் தென்படவில்லை, எதையோ இழக்கப்போகும் ஒரு வேதனையின் சாயல் அது.
எப்பயோ துவங்குமென அவள் எதிர்பார்த்த அந்த கேள்வி இப்பொழுது தான் துவங்குகிறது. உறக்க மருந்தை கொடுத்து உறங்க வைத்தவள் கண் விழிக்கும் பொழுது இருந்தது முற்றிலும் வேறான மருத்துவ சூழல்.
அவள் கண் விழிக்கையிலே வாடிய முகமாய் இரு பக்கம் அரனாய் மதியும் திவ்யாவும் காத்திருந்தனர். அப்பொழுது விழித்தவளை பார்த்து சிரமப்பட்டு சிரிக்க முயன்ற திவ்யாவிடம், “லிப்ஸ் ரொம்ப ட்ரையா இருக்கு திவ்யா நீ உன்ன கவனிக்கிறது இல்லையா?”
திவ்யா, “ரோஹி… வலிக்கிதா?”
ஆரோஹி, “வலியா எனக்கா… இப்ப கூட எந்திரிச்சு ஒரு ஓட்டம் ஓடிடுவேன். பாக்கறியா?”
மதி, “ம்ம்ம். நீ ஓடுறதுலையே இருடா” வேகமாக தோழிகளை இடையிட்டு பதில் கொடுத்த மதிவர்தினி மணத்தாங்களை எப்படி கூறவென தெரியாமல் மீண்டும் கண்ணீர் உதிர்க்க துவங்க, ஓரம் நின்ற அஸ்வின் தந்தையிடம், “ப்பா ப்ளீஸ் எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு போங்க”
“அது சரி வராது அஸ்வின்” உடனே தந்தையானவரிடமிருந்து பதில் வந்தது.
“ஆமா அஸ்வின், எங்களால வீட்டுல நிம்மதியா இருக்க முடியாது. நாங்க இங்கையே இருக்கோம்” என்றான் மாறனும் உடன்.
“இல்ல மாறன், நேத்துல இருந்து எல்லாரும் இங்க தான் இருக்கீங்க, திவ்யாக்கு ஹாஸ்பிடல்ல இருக்குறதால ஏதாவது அலர்ஜி ஆகிட்டா ரொம்ப கஷ்டம். நீங்க எல்லாரும் என் வீட்டுக்கு போங்க. பக்கம் தான். காலைல வாங்க” என்றான் அஸ்வின்.
“சரி எல்லாரும் போகட்டும் நான் இருக்கேன்” அடமாக நின்றான் சித்தார்த். அவன் பார்வை மொத்தமும் ஆரோஹி மேல் தான்.
நேற்றிலிருந்து அவன் முகம் சிறிதும் சரியில்லை எதையோ நினைத்து பெரிதும் அழுத்திகொண்டுள்ளான். ஆரோஹி சார்ந்த கவலை மட்டுமே என அஸ்வின் நினைக்க, அது மட்டுமல்ல என்றது அவனது சிந்தனை சூழ்ந்த முகம்.
“டேய் போ” அஸ்வின் சித்தார்த்தை பார்த்து முறைக்க, “இல்ல அஸ்வின்…” என்றவனை தடுத்து,
“வேலை எல்லாம் முடிச்சிட்டு வா. என் ஆரூவ நான் எங்கையும் போக விட மாட்டேன்”
அவன் கொடுத்த அழுத்தமே ஆண்களை சம்மதிக்க வைக்க பெண்கள் இருவரையும் அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்த தத்தம் கணவன்மார்கள் தான் பாடு பட வேண்டி இருந்தது. அனைவரும் சென்ற பிறகு இறுதியாக அறையை விட்டு நகர்ந்த சித்தார்த், “எதுவா இருந்தாலும் ஒடனே கால் பண்ணு அஸ்வின்” என வெளியேற,
“டேய் சித்து… சித்து சித்து… டேய் ஜனனி புருஷனே” என்ன அழைத்தும் திரும்பியே பார்க்காமல் போனவனின் கோவம் புரிந்தாலும் விடாமல் அழைத்து பார்க்க அவன் நிற்கவே இல்லை.
“ஆரூ மெதுவா பேசு”
“அவன் ஏன் பேச மாட்டிக்கிறான் கிரிக்கெட்டரே?”
“பேசாம படு” அவளும் அவனோடு என்னென்னவோ பேச முயன்று தோற்று போய் இறுதியில் உறங்கியே விட்டாள்.
அடுத்த நாள் காலையில் ஆரோஹிக்கு தேவையான மருந்தை கொடுத்து வீட்டினருக்காக காத்திருக்கையில் தான் அஸ்வின் அந்த கேள்வியை வைத்தான். மனைவியோடு தனியாக இருந்தவனால் என்ன அடக்கியும் மனதிலிருந்த கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை.
“நாராயணா…”
“வேணாம் ஆரூ நீ என்ன காரணம் சொன்னாலும் என்னால அதை ஏத்துக்க முடியாது. எப்படிடி இப்டி எல்லாம் யோசிக்க முடிஞ்சது?”
“இல்ல ப்பா நான் சொல்ல கூடாதுனு நினைக்கல” அவளது கண்ணீரை பொருட்படுத்தாமல் இரும்பென மாறிய தொண்டையை செறுமி அவள் முகத்தை ஏறிட்டான்.
“உனக்கு எப்ப ஆரூ இந்த பிரச்சனை தெரிஞ்சது?”
“கிரிக்கெட்டரே கோவப்படாதிங்க…” அவள் கெஞ்சியத்தில் தலை அசைத்து அனுமதி கொடுத்தான்.
“நம்ம கல்யாணம் முன்னாடியே தெரியும்”
“ஓ…” அவன் குரலில் தெரிந்த அந்த சலனமற்ற ஓ என்கிற வார்த்தை ஆரோஹியை கொல்லாமல் கொன்று புதைத்தது.
“நான் உங்க வாழ்க்கைல வந்துருக்கவே கூடாதோ நாராயணா?” உடைந்து வந்த அவள் குரலில் தன்னுடைய கைகளை அவளிடமிருந்து மெல்ல எடுக்க பார்க்க, பதறி அவன் கையை பிடித்துக்கொண்டாள்.
“அஸ்வின்…” அவள் தவிப்பை உணர்ந்தவன், “போகல” என்றான் உடனே.
தலை அசைத்து கண்ணீரை துடைத்தாலும் நிற்க மாட்டாமல் அழுகை வெடித்தது ஆரோஹி பெண்ணுக்கு, “உங்க லைப்பயும் சேர்த்து ஸ்பாயில் பண்ணிட்டேனா நான்?” அவனது அமைதியை எவ்வாறு எடுக்கவென அவளுக்கு தெரியவில்லை.