“என்ன சார் விளையாடுறிங்களா..? நீங்க கட்டும் போதும் வாங்கிக்கிறதுக்கும், கேட்கும் போது கழட்டி குடுக்குறதுக்கும் இதென்ன விளையாட்டு பொருளா..?” என்றாள் வராஹினி கோபமாக.
“இங்க பார் வராஹினி..! என்னை பொறுத்த வரைக்கும் இதை உன் கழுத்தில் போட்டால் தான் அவங்க நம்புவாங்க. அதுக்காக போட்டேன். மத்தபடி இந்த தாலியெல்லாம் வெட்டி செண்டிமெண்ட். உனக்கு நீ நேர்மையா இரு. உனக்கு எது சரின்னு படுதோ அதை செய். உனக்கான வாழ்க்கையை நீ தான் வாழ முடியும். அதுல நான் கட்டுப்படுத்துறதுக்கு ஒண்ணுமே கிடையாது. இந்த தாலியும் உன்னைக் கட்டுப் படுத்தாது..” என்றான் தீர்க்கமாய்.
அவனையே ஆச்சர்யமாய் பார்த்தாள் வராஹினி. அவனைப் பற்றி சரியாக தெரியாவிட்டாலும், ஏதோ ஒன்று அவனை நோக்கி அவளை ஈர்த்துக் கொண்டே இருந்தது. அந்த ஈர்ப்பு தானே இவ்வளவு தூரம் அவளை அழைத்து வந்திருக்கிறது.
“நீங்க நிஜமாவே அவங்க பையனா..?” என்றாள், இன்னமும் கூட அவளால் நம்ப முடியவில்லை.
“அவங்களுக்கும், எனக்கும் எந்த உறவும் கிடையாது. அவங்களோட உறவு கொண்டாடுறது உன்னோட தனிப்பட்ட விஷயம்..” என்றான் அர்ஜூன்.
“எல்லாத்துலையுமே நான் தனிப்பட்ட முறையில் இருக்கணும்ன்னா, எதுக்கு சார் தாலி கட்டுனிங்க..?” என்றாள் கோபமாக.
“இப்பவும் சொல்றேன். இது வெறும் நாடகம் மட்டும் தான். உனக்கு எப்ப தோணுதோ, அப்ப நீ போகலாம். இப்போதைக்கு நீ நினைச்சது நடந்திருக்கு. அதை நினைச்சு மட்டும் சந்தோஷப்படு வராஹினி..” என்றான் அர்ஜூன்.
“என்னைப் பத்தி எதுவுமே தெரியாம, எப்படி இப்படி தைரியமா கூட வர்ற..?” என்றான் அர்ஜூன்.
“நீங்க மொத்தமா யாருன்னு தெரியாதப்பவே கூட வந்தேன். இப்போ தாலி வேற கட்டியிருக்கிங்க, பத்தாத குறைக்கு உங்க குடும்பமும் தெரியாத குடும்பமில்லை. நான் ஏன் சார் பயப்படனும்..?” என்றாள் வராஹினி.
“நல்லா பேசுற..! சரி என்ன படிச்சிருக்க..?” என்றான் அர்ஜூன்.
“வாட்..!!!!” என்றவன் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான்.
“என்னாச்சு..? எதுக்காக இப்படி பிரேக் போடுறிங்க..?” என்றாள், புரியாமல்.
“என்ன படிக்கிற..?” என்றான். அவன் முகம் லேசாக மாறியிருந்ததோ.
“பி.டெக். தேர்ட் இயர்..” என்றாள் சாவகாசமாய்.
“தேர்ட் இயரா..?” என்றவனுக்கு, மனதிற்குள் அப்படி ஒரு அதிர்ச்சி. எல்லாம் சரியாக போய் கொண்டிருக்கிறது என்ற அவன் நினைத்த நேரத்தில், இப்படி ஒன்றை அவன் எதிர்பார்க்கவே இல்லை.
“எதுக்காக சார்.. இப்படி ஷாக் ஆகுறிங்க..?” என்றாள் வராஹினி.
“அறிவிருக்கா உனக்கு..? இதையேன் முன்னாடியே சொல்லலை.நேத்து இருந்து வளவளன்னு எவ்வளவு பேசுன..? இதைப்பத்தி ஏன் பேசவே இல்லை..” என்றான் கோபமாக. ரஞ்சனிடம் பேசிய போதும் அவன் முகம் இப்படித்தான் கோபமாக இருந்தது.
“அது நீங்க கேட்கவேயில்லையே. அதான் நானும் சொல்லலை..” என்றாள் அவன் முகத்தைப் பார்த்து பயந்தபடி.
“படிச்சுகிட்டு இருக்கும் போதே தான் கல்யாண ஏற்பாடு பண்ணாங்களா..?” என்றான் அர்ஜூன் கோபமாக.
“ஆமா..! அதனால தான் கல்யாணத்தை நிறுத்த வழி தெரியாம வீட்டை விட்டு வெளிய போனேன்..” என்றாள்.
“ஹோ…! ஷிட்..!” என்றவன் ஸ்டீயரிங் மீது அப்படியே தலை கவிழ்ந்தான். சில நிமிடங்கள் வரைக்கும் அவன் அப்படியே இருக்க, இப்போது வராஹினிக்கு தான் பயம் பிடித்துக் கொண்டது.
“அறிவு இருக்கா உனக்கு..? உன்கிட்ட பேசிட்டு தான தாலியை கட்டுனேன். அப்பவே சொல்றதுக்கு என்ன..? கல்யாணத்தை நிறுத்த வீட்டை விட்டு வெளிய வந்துட்டு, இப்ப என்ன பண்ணி வச்சிருக்க..? இப்பவும் கல்யாணம் தான் பண்ணியிருக்க..?” என்றான் அர்ஜூன்.
“நீங்க எங்க சார்.. நான் பேச இடம் குடுத்திங்க..? பேசிட்டு இருக்கும் போதே, தாலியையும் கழுத்துல போட்டுவிட்டுட்டிங்க. இதுல நான் எங்க இருந்து பேசுறது..?” என்றாள் வராஹினி.
“ஷிட்..ஷிட்..!” என்று ஸ்டியரிங்கை ஓங்கிக் குத்திக் கொண்டிருந்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த வராஹினிக்கு மனதிற்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி. நீண்ட நாள் கழித்து மனதிற்குள் கொஞ்சம் இதமாக உணர்ந்தாள்.
“இப்ப எதுக்கு சார் நீங்க இவ்வளவு பீல் பண்றிங்க..? நீங்க ஒன்னும் நிஜக் கல்யாணம் பண்ணலையே..? இது வெறும் நடிப்பு தான சார்..! எப்படியும் என் படிப்பு முடிஞ்ச உடனே நான் உங்களை விட்டு கிளம்பிடுவேன்.. அதனால கவலைப் படாம இருங்க சார்..” என்று அவனின் வார்த்தைகளை அவனுக்கே படித்தாள்.
“நீ என்ன சொன்னாலும், நான் செஞ்சது பெரிய தப்பு. சத்தியமா நீ இவ்வளவு சின்ன பொண்ணுன்னு எனக்குத் தெரியாது. வாழ்க்கையில முதல் முறையா இந்த அர்ஜூன் ஒரு விஷயத்துல சறுக்கியிருக்கான்..” என்று கோபமாக தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.
“காரை எடுக்குறிங்களா..? நான் நேத்து மதியம் சாப்பிட்டது. பசி உசுரு போகுது. கல்யாணம் பண்ணியிருக்கிங்க..? கல்யாண சோறு போட மாட்டிங்களா..?” என்றாள் பேச்சை மாற்றும் பொருட்டு.
அவள் என்னதான் பேசினாலும், தன்னுடைய தவறை நினைத்து மனதிற்குள் வெம்பிப் போனான் அர்ஜூன்.
“இயர்லி மார்னிங்..! டிபன் கூட இன்னும் கொஞ்சம் நேரமாகும். ஏதாவது டீ, காபி குடிக்கிறியா..?” என்றான்.
“இல்லை சார்..! முதல்ல பிரஷ் பண்ணனும். பிரஷ் பண்ணாம, குளிக்காம கூட கல்யாணம் பண்ணின முதல் ஆள் நானா தான் இருப்பேன்..” என்றாள் எதார்த்தமாய்.
“என்ன பண்ணி வச்சிருக்க அர்ஜூன்..? அவங்களைப் பார்த்தா எப்பவும் நீ நீயா இருக்கிறதில்லை. அதோட விளைவு தான் இதெல்லாம். இவ்வளவு அவசரமா இதெல்லாம் தேவையா..? நீ என்ன நினைச்சு அங்க போன..? இப்ப என்ன பண்ணி வச்சிருக்க..?” என்று அவனின் மனசாட்சி கேள்விகளால் அவனைத் துளைத்துக் கொண்டிருந்தது.
என்னவென்று சொல்வான் பதில்..? இத்தனை நாள் நினைத்ததை சொல்வானா..? இல்லை இப்போது இப்படி நடந்ததை சொல்வானா..?
“அதான் எனக்கு பேரு இருக்குல்ல. அதை சொல்லியே கூப்பிடு..” என்றான் பட்டென்று.
“எனக்கு உடனே சொல்ல வராது. இருந்தாலும் ட்ரை பண்றேன்..” என்றாள்.
என்னதான் பேசிக் கொண்டிருந்தாலும், அதுவரை அவன் முகத்தில் இருந்த அமைதி தொலைந்திருந்தது. அது வராஹினிக்கும் தெரிந்து தான் இருந்தது.
கன்னத்தில் கைவைத்தபடி அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே வந்தவளுக்கு, காரணமே இல்லாமல் அப்படி பிடித்தது அவனை. தலை முதல் பாதம் வரை அவனை பகிரங்கமாய் சைட் அடித்துக் கொண்டிருந்தாள் வராஹினி.
“என்ன பண்ணிட்டு இருக்கு வராஹி..? ஞாயமா பார்க்க போனா இப்ப நீதான் அவனை மாதிரி கோபமா வரணும். இங்க என்னடான்னா அவன் கோபமா வர்றான். நீ அமைதியா வர்ற..?” என்றது மனசாட்சி.
“நான் என்ன நினைச்சேனோ அதான நடந்திருக்கு. இதுல எனக்கு கோபம் எப்படி வரும். மனசு முழுசா மகிழ்ச்சி மட்டும் தான்..” என்று மனதிற்குள் பேசுவதாய் நினைத்து வெளியே பேசிக் கொண்டிருந்தாள்.
“என்ன, நீ நினைச்சது தான நடந்தது..?” என்றான் அர்ஜூன்.
அவனின் கேள்வியில் தான் சத்தமாக பெசிவிட்டதை உணர்ந்தவள்,
“ங்கான்..! அதான், எப்படியும் இன்னைக்கு குருவை வச்சு ஒரு டிராமா காதல் கல்யாணம் செட் பண்ணலாம்ன்னு நினைச்சேன். கடைசில அது உங்க மூலமா நடந்திருச்சே… அதைச் சொன்னேன்..” என்றாள்.
“ஹோ..” என்றவன் எதுவும் பேசவில்லை.
“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்..?” என்றாள்.
“ஏன் ரொம்ப பசிக்குதா..?” என்றான்.
“பசிக்கவும் செய்து.. கொஞ்சம் டயர்டாவும் இருக்கு…” என்றாள் வராஹினி. நிஜமாகவே அவள் முகத்தில் அப்படி ஒரு அசதி தெரிந்தது.
“ஜஸ்ட் ஹாப்னவர்…” என்றவன் வண்டியை வேகமாக ஓட்டினான்.
அங்கே ரஞ்சனின் வீட்டில்….
“இப்ப என்ன பண்றது ரஞ்சன்..?” என்றான் பிரஜேஷ்.
“எனக்கு ஒன்னுமே புரியவேயில்லை பிரஜேஷ். எல்லாமே கையை விட்டு போன மாதிரி இருக்கு…” என்றான் ரஞ்சன்.
“ரஞ்சன் உனக்கு வேற ஒரு நல்லா பொண்ணா பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்..” என்றார் சுமித்ரா.
“நீங்க எனக்கு அம்மாவா இருக்கனும்ன்னு நினைச்சா, இன்னொரு பொண்ணை என் வாழ்க்கையில் கொண்டு வர்றதைப் பத்தி பேசாதிங்க…” என்றான் ரஞ்சன்.
அவன் அப்படி பேசுவதைக் கேட்ட கார்த்திகேயன் பல்லைக் கடித்தார். அவரும் எவ்வளவு தான் பொறுப்பார்.
“அப்பர் மிடில்கிளாஸ், லோயர் மிடில்கிளாஸ் பசங்க கூட, அவங்க அம்மா-அப்பா பேச்சைக் கேட்டு கௌரவமா நடந்துக்கிறாங்க. ஆனா, பிறந்ததுல இருந்து உங்களை செல்வ செழிப்பா வளர்க்குறதுனால தான், எல்லாமே உங்க இஷ்ட்டத்துக்கு பண்றிங்க. கேட்டா, சுதந்திரம் அது இதுன்னு பேச வேண்டியது. வெளிய பார்க்க தான் கௌரவம் எல்லாம், உள்ளுக்குள்ள பெத்த புள்ளைங்க பத்து பைசாவுக்கு மதிக்கிறதில்லை..” என்றார் கார்த்திகேயன்.
“உங்க பெரிய பையன் செஞ்சுட்டு போனது மட்டும் ரொம்ப தரமான விஷயமோ..?” என்றான் ரஞ்சன் நக்கலாக.
“நான் அவன் செஞ்சது சரின்னு சொல்லலை ரஞ்சன். அதுக்காக நீ செய்றது சரியும் இல்லை. வராஹினி தான் உன் வாழ்க்கையில் வந்த முதல் பொண்ணுன்ற மாதிரி நீ பேசுறது தான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு…” என்றார் கார்த்திகேயன்.
“நான் இல்லாததைப் பேசலை… உண்மையைத் தான சொல்றேன். எங்க இல்லைன்னு உன்னால மறுத்து பேச முடியுமா.. (Alprazolam) ?” என்றார் கார்த்திகேயன்.
“என்ன மாமா..? ரஞ்சனைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா..? அவனை மாதிரி ஒருத்தனை பார்க்கிறது எவ்வளவு கஷ்ட்டம் தெரியுமா..?” என்றான் பிரஜேஷ்.
“ரொம்ப கஷ்ட்டம் தான்ப்பா..! அவன் உன் நண்பன்றதால இப்படி பேசுறியா..? இல்லை, உனக்கு காரியம் ஆக வேண்டியிருக்கிறதால இப்படி பேசுறியா..?” என்றார்.
“என்ன மாமா இப்படி சொல்லிட்டிங்க..? ரஞ்சன் கிட்ட ஆதாயத்தை எதிர்பார்த்து நிக்கிற அளவுக்கு நாங்க ஒன்னும் ஒன்னுமில்லாதவங்க கிடையாது..” என்றான் பிரஜேஷ் கோபமாக.
“நான் அந்த அர்த்ததுல சொல்லலை. ஆனா, என்னோட கணிப்பு சரின்னா, ரஞ்சனுக்கும்- வராஹினிக்கும் கல்யாணம் பேசி முடிவு பண்ணதுல, உங்களுக்குள்ள ஒரு பெரிய டீல் இருக்குன்னு மட்டும், ஆரம்பத்துல இருந்து என் மனசு சொல்லிட்டே இருக்கு. சரி எதுவா இருந்தாலும், பையன் விருப்பம் தான் முக்கியம்ன்னு இருந்துட்டேன். ஆனா, விஷயம் இவ்வளவு தூரம் போய், வராஹினிக்கு இவனைப் பிடிக்கலைன்னு தெரிஞ்சும், நீங்க இந்த பாடு படுறிங்கன்னா, கண்டிப்பா ஒரு விஷயம் இருக்கு..” என்று தெளிவாய் பேசினார் கார்த்திகேயன்.
“எப்படி உன் தங்கச்சியை வச்சா..?” என்று பட்டென்று கேட்டு விட்டார் கார்த்திகேயன். அவர் அப்படி பட்டென்று கேட்பார் என்று எதிர்பார்க்காத பிரஜேஷும் கொஞ்சம் அதிர்ந்து தான் போய் விட்டான்.
“என்ன கார்த்திகேயன் இப்படி பேசுறிங்க..?” என்றார் மோகன் குமார். அவர் அப்படி சொன்னதில் மோகனுக்கும் வருத்தம்.
“உங்களைக் காயப்படுத்தனும்ன்னு நான் சொல்லலை மோகன். ஆனா, இது தான் உண்மையா இருக்கும்ன்னு எனக்குத் தோணுது. எங்க? உங்க பையனை இல்லைன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்..” என்றார் கார்த்திகேயன்.
“இவர் சொல்றது மட்டும் உண்மையா இருந்தது, கூடப் பிறந்த பிறப்பையே நீ அடமானம் வைக்க தயாரா இருந்திருக்க. இப்படி அசிங்கப் படுத்தியிருக்க வேண்டாம் பிரஜேஷ். பையன் பொறுப்புக்கு வந்துட்டான்.. எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான்னு உன்னை முழுசா நம்பினதுக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்..” என்ற மோகனுக்கு மனமே ஆறவில்லை.
“டாட், அவர் தான் எதையோ மனசுல நினைச்சுகிட்டு சொல்றாருன்னா, நீங்களும் என்னை நம்பாத மாதிரி பேசுறிங்க..? நீங்களாவது சொல்லுங்க மாம்..” என்றான் கல்பனாவைப் பார்த்து.
“இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு..? அவன் தாலி கட்டினாலும் பரவாயில்லை, உனக்கு என் தங்கச்சியை கட்டி வைக்கிறேன்னு இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் சொல்லிட்டு இருந்தவன் தானே நீ..? என் பொண்ணு வாழ்க்கையில இனி நீ தலையிட கூடாது. உனக்கும் சேர்த்து தான்..” என்று கல்பனாவையும், பிரஜேஷையும் பார்த்து எச்சரிக்கை செய்தவர்,
“நான் கிளம்புறேன் கார்த்திகேயன்..” என்ற மோகன் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
“நானும் கிளம்புறேன் ரஞ்சன். நாம பிறகு பேசலாம்..” என்ற பிரஜேஷ், தாயை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
“இப்ப உங்களுக்கு சந்தோஷமா..?” என்று கோபமாக கத்திய ரஞ்சன், அவனின் அறைக்குள் சென்று விட்டான்.
“அர்ஜூன் நடந்துகிட்டது சரின்னு சொல்ல வர்றீங்களா..?” என்றார் சுமித்ரா வாயைத் திறந்து.
“நான் எப்ப சுமித்ரா அப்படி சொன்னேன். ஆனா, இந்த விஷயத்திலாவது அவன் ஜெயிச்சதா இருக்கட்டுமே..” என்றவருக்கு கண்கள் கலங்கியதோ.
“நான் என்னைக்குமே அவனை உங்க பையனா பார்த்தது இல்லைங்க..” என்றார் சுமித்ரா.
“அது எனக்கும் தெரியும் சுமித்ரா. ஆனா, சூழ்நிலை அப்படி அமைஞ்சது தான் தப்பு. நீ சரியா இருக்கனும்ன்னு நினைச்சாலும், ரஞ்சன் உன்னை இருக்க விட்டதில்லை. அது தான் உண்மையும் கூட. இவன் இவ்வளவு செஞ்சும் நான் இவன் கூட இருக்குறதுக்கு காரணம் என்ன தெரியுமா..? யாருமே கூட இல்லைன்னாலும், அர்ஜூன் என்னைக்குமே வழி தவற மாட்டான். ஆனா, ரஞ்சன் நாம கூட இருந்து புத்தி சொல்லிட்டு இருக்கும் போதே, கொஞ்சம் அகம்பாவம், அதோட கொஞ்சம் கூட சுயபுத்தியே இல்லாம இருக்கான். இதை அந்த பிரஜேஷ் நல்லா யூஸ் பண்ணிக்கிறான். அது என்னைக்கு இவனுக்குத் தெரியப் போகுதுன்னு தான் தெரியலை..” என்றார் கார்த்திகேயன் கவலையாக.
“நடந்ததை பார்த்துட்டு இருந்ததானே ரூபி..! அவனை நான் சும்மா விட மாட்டேன்..” என்றான்.
“உனக்கு மட்டும் தான் பாதிப்பு அப்படின்ற மாதிரி பேசுற..? அப்போ, என்னோட நிலைமையை என்ன சொல்ல..?” என்றாள் ரூபிணி.
“நீ கவலைப் படாத ரூபி. எல்லாத்தையும் நான் சரி பண்றேன்…” என்ற ரஞ்சன், அடுத்து செய்ய வேண்டிய அனைத்தையும் மனதிற்குள் அணி வகுத்துக் கொண்டான்.
தன் வீட்டின் முன்பு காரை நிறுத்தினான் அர்ஜூன். அவளைத் திரும்பிப் பார்க்க, அவளோ நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
“அரைமணி நேரத்துல அப்படி என்ன தூக்கம்..?” என்று நினைத்தவன், மெதுவாக அவளை எழுப்பினான். அவனை அதிகம் சோதிக்காமல், அவன் முதன் முறை அழைக்கும் போதே விழித்து விட்டாள் வராஹினி.
“இறங்கு..!” என்றான்.
“வீடு வந்திருச்சா சார்..!” என்றபடி இறங்கினாள். அது ஒரு தனி வீடு. அந்த தெருவில் இருந்த அனைத்து வீடுகளும் ஒரே மாதிரியாக கட்டப்பட்டிருந்தது.
“வீட்ல வேற யாரும் இல்லையா..?” என்றாள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே.
“இப்போதைக்கு நானும், நீயும் மட்டும் தான். வீட்டு வேலைக்கு ஒரு அம்மா வருவாங்க. இரண்டு நாள் அவங்க லீவ். நாளைக்கு மறுநாள்ல இருந்து வருவாங்க..” என்று அவன் சொல்லிக் கொண்டே உள்ளே சென்றிருந்தான். வராஹினி உள்ளே செல்லாமல் வெளியவே நிற்க,
“என்னாச்சு..? ஏன் வெளியவே நிற்கிற..?” என்றான் புரியாமல்.
“இல்லை சார்..! முதன் முதல்ல வர்றேன். இன்னைக்கு காலையில தான் கல்யாணம் கூட முடிஞ்சிருக்கு…” என்று இழுத்தாள்.
“அதுக்கு, ஆரத்தி எடுக்கணுமா உனக்கு..?” என்றான், வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“முறைன்னு ஒன்னு இருக்குள்ள சார்..” என்றாள்.
“எல்லாம் முறைப்படி நடந்த மாதிரியே பேசுற..? இங்க ஆரத்தி எடுக்க யாருமில்லை..” என்றான்.
“அதனால என்ன? நீங்க எடுங்க..” என்றாள் பட்டென்று.
“நானா..? என்ன கொழுப்பா..?” என்று பல்லைக் கடித்தான்.
“இதென்ன ஆரி வித்தையா சார், நான் வேணும்ன்னா சொல்றேன்..” என்றவள், ஆரத்தி கரைக்கும் முறையை சொல்ல,
“எல்லாம் என் நேரம்..” என்று புலம்பிக் கொண்டே சென்றாலும், அர்ஜூன் அதை செய்தான்.
“உலகத்திலேயே பொண்டாட்டிக்கு ஆரத்தி சுத்தி உள்ள அழைச்ச புருஷன் நீங்களாதான் சார் இருப்பிங்க..” என்றவள், முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் உள்ளே நுழைந்தாள்.
“நாடகக் கல்யாணத்துக்கு தாலி தேவைப்படும் போது, இதுவும் கண்டிப்பா தேவை தான் சார்..” என்றாள் வராஹினி.
“நல்லா பேசுற..” என்றான் அர்ஜூன்.
“எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும்..” என்றாள்.
அவன் ஹாலை ஒட்டி இருந்த ஒரு அறையை காட்ட, தயக்கம் எதுவுமின்றி உள்ளே சென்றாள் வராஹினி.
“என்ன..? இவ கோபப்படுவா..? பயப்படுவா..? நாம தான் பேசிப் புரிய வைக்கணும்ன்னு பார்த்தா.. ரொம்ப சகஜமா, ரொம்ப நாள் பழகின மாதிரி போறா..? விட்டா குடும்பம் நடத்தவே ஆரம்பிச்சுடுவா போல இருக்கு” என்ற அர்ஜூனுக்கு குழப்பம் தான் மிஞ்சியது.
“எது எப்படி இருந்தாலும் ரொம்ப சின்ன பொண்ணு அர்ஜூன். உன்னை விட பத்து வயசு சின்ன பொண்ணா தான் இருப்பா. தேவையில்லாம அவ வாழ்க்கையில விளையாடாத… அவளை நீ இங்க இருந்து அனுப்புறது தான் சரி..” என்று அவனின் மனம் அவனுக்கு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருந்தது.
அவனுக்கு நேர் மாறாக அங்கே வராஹினியோ…
“எப்படியோ, அந்த ரஞ்சன் கிட்ட இருந்து தப்பிச்சாச்சு. அவசர கல்யாணமா இருந்தாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஒரு புருஷன். சும்மா சொல்லக் கூடாது ஆள் செம்மையா தான் இருக்காரு. இப்படி மயங்கிப் போய் கிடக்குறேனே.. இது தெரிஞ்சா அவர் என்ன நினைப்பாரு…?” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்.
காலத்தின் ஓட்டத்தில் இவர்களின் கனவுகள் கை கூடுமா..?