நண்பர்களின் ஆரவாரத்தை அடக்கி இரண்டு காளைகளையும் தங்கள் வாகனத்தில் ஏற்றி முழு சந்தோசத்தோடு ஊர் வந்து சேர வழக்கம் போல் இருக்கும் ஆரவாரத்தோடு இணைந்து கொட்டு சத்தமும் வரவேற்றது அவனை.
“இதெல்லாம் கேள்வி கேக்க கூடாது மாபிள்ளை, அனுபவிக்கனும்” என குணா தானும் இளைஞர்களோடு சேர்ந்து ஆட ஊரின் நுழைவிலிருந்து தோட்டம் வரை இரண்டு காளைகளையும் இருபுறமும் வைத்து அளப்பறையை கூட்டி நடந்தே வந்தனர்.
மனைவியை எதிர்பார்த்தே வந்த தேவாவின் கண்களுக்கு விருந்தாய் பளிச்சென புடவையில் தன்னுடைய ஆச்சிக்கு பின்னால் நின்றவளை பார்த்து விரிந்தது தேவாவின் புன்னகை.
“ஏன்டா எத்தனை நாள் சொல்றது ஊர் வழிய நடத்தி கூட்டியார வேணாம்னு செவுல குடுத்து கேக்குறதே இல்ல”
இளவட்டங்களை திட்டி பேத்தி கையில் ஆரத்தி தட்டை கொடுக்க பெரிய புன்னகையோடு மூவரும் சேர்த்து சுற்றியவள் இரண்டு காளைகளுக்கு திலகமிட்டு தேவாவிற்கு வர, “ரெண்டு காளைக கணக்கு கரெக்ட்டா?”
மெல்லிய குரலில் கேட்க, மென்சிரிப்போடு அவனுக்கும் வெற்றித்திலகமிட்டு, “மூணு” என திருத்தினாள் மனைவி.
சிரிப்பை கன்னம் கடித்து அடக்கியவன் அவளை பார்த்த மையல் பார்வையில் வெட்கத்தோடு ஆச்சியோடு மீண்டும் இணைந்துகொண்டாள்.
“ஏலேய் எல்லாருக்கும் சாப்பாடு ஆக்கியிருக்கு வந்து தெம்பா சாப்புடுங்க” கடற்கரைதாயம்மாள் அனைவரையும் அழைக்க அன்று மதிய உணவு அனைவருக்கும் தேவாவின் தோட்டத்து வீட்டில் வைத்து நிறைவாக முடித்திருந்தனர்.
கையேடு ஊர் பஞ்சாயத்தை தேவா கூட்ட மீண்டும் அய்யனாரின் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
“இவரு ஜல்லிக்கட்டுக்கு கூட்டிட்டு போன காளைக்கு போதை மருந்து குடுத்துருக்கார்” என செய்தியை போட்டு உடைக்க கூட்டத்தில் பெரும் கூச்சல்.
“என்ன இது, தேவா நீ என்ன சொன்னாலும் அத இந்த கூட்டம் நம்பணுமா? வாடிவாசலுக்குள்ள போகுறதுக்கு முன்ன சோதிக்காம விடமாட்டாங்கனு எங்களுக்கும் தெரியும் ய்யா”
“தெரியும் நான் சொன்ன கேக்க மாட்டீங்கனு” நண்பனுக்கு கைபேசி மூலம் அழைத்த தேவா அவர்களை வர சொல்ல, புதியவன் ஒருவன் வந்தான் அவர்களோடு. அவன் வந்ததும் சில காகிதங்களை நாட்டாமை திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவரிடம் கொடுத்தான்.
“இவர் கால்நடை டாக்டர். ஜல்லிக்கட்டுக்கு கவெர்மென்ட்ல இருந்து அப்பாய்ண்ட் பண்ண டாக்டர். இவர் தான் அய்யனாரோட காலைய செக் பண்ணி மெடிக்கல் அப்ப்ரூவள் குடுத்தவர்”
தேவா கூறியதன் அனைத்து ஆதாரங்களும் அவன் ஒப்படைத்த காகிதங்களில் இருந்தது.
அய்யனார், “ஆமா இப்ப அதுக்கு என்னங்குற?” குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் அய்யனார் முந்திக்கொண்டு தேவாவிடம் சண்டைக்கு வந்தார்.
“நில்லுங்க தலைவரே, என்ன அவசரம் நான் முழுசா பேசிக்கிறேன்”
“என்னடா பேச போற? ஆஹ்? என்ன பேச போற? மாட்டுக்கு ஊசி போட்டு வாடிவாசல் அனுப்புனேனு சொல்லுவ? அப்போ மெடிக்கல் டெஸ்ட் எடுத்த நான் கிறுக்கன், அத அப்ரூவ் பண்ண டாக்டர் கிறுக்கனா…?”
“கிறுக்கன் இல்ல தலைவரே, பண பிசாசு” அழுத்தி கூறினான்.
அய்யனார், “டேய் வார்த்தையை விடாத… ஒரு நாள் என் வேலை தப்பா போனதில்லை. நேர்மையா இருக்கறவன் எதுக்குடா காச குடுத்து அடுத்தவனை விலைக்கு வாங்கணும்?”
“ஆனா சர்டிபிகேட் உங்க மேல தான் தப்புனு சொல்லுதே தலைவரே… உங்கள மீறி உங்க ஆளுங்க மாட்டுக்கு மருந்து குடுத்துருக்க மாட்டாங்க”
“ஏன் நான் குடுத்துருக்கணும்? நீ டாக்டர்க்கு காச காட்டிருக்க மாட்டியா இல்ல அலங்காநல்லூர்ல இருந்து இங்க வர்ற இடைவெளில மருந்து குடுத்து நான் தான்னு சொல்ல எவ்ளோ நேரம் ஆகிட போகுது?”
“வாயில்லாத ஜீவனை போதை பொருள் குடுத்து சித்திரவதை பண்ற மிருகம் நான் இல்லை” ஆத்திரம் தாளாமல் குரலை உயர்த்தினான் தேவா.
“ஏய் என்ன ப்பா என்ன என்னமோ பேசுறீங்க?” பெரியவர் ஒருவர் இடையில் புகுந்து சந்தேகமாய் கேள்வி கேட்டார்.
“இதுக்கும் மேலையும் இருக்கு…” தன்னுடைய கைபேசியை எடுத்து ஒரு புகைப்படத்தை நீட்டினான்.
“இது என்ன புதுசா மாட்டுக்கு ஊசி போடுறத எதுவும் எடுத்தியா தேவா?” அவனிடம் தன்னை மீறிய எந்த ஆதாரம் இருந்திட போகிறதென தென்னகம் அய்யனாருக்கு.
“ஊசி எதுக்கு தலைவரே நாம செடி வளக்குறத ஊருக்கே காட்டலாம்” தேவா உடைத்த உண்மையில் முகம் வெளிறி உறைந்து போனார் அய்யனார்.
“எந்த செடியை பத்தி பேசுற தம்பி நீ?” பெரியவர் ஒருவர் கேட்க, “போதை செடி” என்றான் உரத்த குரலில்.
“என்னடா நாயே நீ பண்ற தப்பலாம் எங்க மேல தள்ள பாக்குறியா?” வேட்டியை மடித்து கட்டி அருகில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து தேவாவை அடிக்க போக, அசையாமல் நிதானமாக நின்றவனை அய்யனாரின் ஆள் நெருங்கும் முன்பே ஊர் மக்கள் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
“என்ன அய்யனார் இது? ஊர்ல நல்ல பதவில இருக்க, பெரிய மனுஷன்-னு உன்ன மதிச்சு சபையை கூட்டி பேசிட்டு இருந்தா ஆளுங்கள வச்சு சின்ன பசங்கள அடிக்கிற… இது தான் இந்த ஊருக்கும் பஞ்சயாத்துக்கும் நீயே குடுக்குற மரியாதையா?” பஞ்சாயத்து செய்பவர் ஒருவர் அய்யனாரை பார்த்து அதட்டி கேள்வி எழுப்பினார்.
“யோவ் என்னமோ பெரிய மனுஷன், பதவில இருக்கறவன்-னு சொல்றிங்க, இவன் நாலு மாசமா ஒவ்வொரு இடத்துலயும் என்ன அசிங்கப்படுத்துறான், நான் பாத்துட்டு சும்மா இருக்கணுமா? ஊரும் துணைக்கு நிக்கல, பஞ்சாயத்தும் பொடியனுங்க பேசுறத கேட்டு ஆடிட்டு இருக்கீங்க”
“என்ன அய்யனார் வார்த்தை எல்லை மீறுது… இது கிராம பஞ்சாயத்து இங்க நீயும் கட்டுப்படணும் உன் அப்பனும் கட்டுப்படணும், அப்டி மாட்டேன் ரவுடி மாதிரி தான் இருப்பேன்னா பட்டணத்துல போய் இருந்துக்கோ” அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த இளங்கோவன் அய்யனாரின் வார்த்தைகள் தந்த தாக்கத்தில் பேசியிருந்தார்.
அய்யனார், “ஓ ஹோ… பேரனும் தாத்தனும் சேர்ந்து ஊற விட்டு விரட்ட பாக்குறீங்களா?”
தேவா, “தாத்தா வேணாம்… அவர் பேச்சை திசை திருப்ப பாக்குறார். இன்னும் நிறையா இருக்கு சொல்ல வேண்டியது”
“என்ன தம்பி இன்னும் இருக்கா? கஞ்சா மாட்டுக்கு குடுத்ததே தப்பு இதுல அவன் வளத்துருக்கான், இதுக்கும் மேல என்ன இருக்கு?”
“இருக்கே… தலைவர் தலைவர் பதிவிய வச்சு என்ன என்னமோ பண்ண பிளான் போடுறார். ஆத்து பாலம் கட்ட அனுமதி குடுத்து ஒன்றை வருசமாச்சு. ஆனா எலெக்ஷன் நேரத்துல பரபரப்பா வேலைய ஆரமிச்சு மறுபடியும் பதவில ஒக்கார திட்டம்”
“ஏலேய் உன் தாத்தா காலத்துல இந்த ஊருக்கு ஏர்போர்ட் வருதுன்னும் தான் சொன்னாய்ங்க, எங்க கானம்?” அய்யனாரின் ஆள் ஒருவன் சலம்ப அந்த கூட்டம் கூட்டமாக சிரித்தது.
தேவா, “எங்களால முடியல ப்பா, உன் அய்யாகிட்ட சொல்லு… ஊர் காச திருடி அவர் வச்சிருக்க பணத்துல சொந்தமாவே ஒரு ஹெலிகாப்டர் வாங்கி உன் நிலத்துல வந்து இறக்குவார்”
“இந்த எகத்தால மயிறு என்கிட்ட வேணாம்” ஆவேசமடைந்த அய்யனார் கண்கள் சிவக்க தேவாவை பார்த்து காய்ந்தார்,
“ஊர் காச நான் வச்சிருக்கேன்னு நீ வந்து பாத்தியாடா? சொந்த காசுல திங்காம தாத்தனோட காசுல அண்டி பொழைக்கிறவன் என்ன பேச வந்துட்டான். பிச்சைக்கார பய”
அய்யனாரின் வார்த்தை சபையை மொத்தமாய் உலுக்கிட தான் பேசியதன் அர்த்தம் உணர்ந்த அய்யனார் அதனை என்னை கர்வப்படும் முன்பே அய்யனாரின் சட்டையை பற்றியிருந்தார் இளங்கோவன்.
“யாருடா அண்டி பொழைக்கிறவன்? யாரு பிச்சைக்கார பய? நாப்பது வருஷம் முன்னாடி ஒரு லட்சம் என்கிட்ட கடன் வாங்கி, இன்னைக்கு நீ பீத்திட்டு இருக்கியே அந்த இடத்தை எல்லாம் வாங்கி போட்டான் உன் அப்பன். இப்ப வர அதுக்கு ஒரு ரூவா காசு குடுக்கல.
“தாத்தாவாவே இருந்தாலும் ஒரு ரூவா என்னோட சொத்துல இனாமா வாங்குனதில்லடா என் பேரன். இப்ப வர அதுக்கான காச என்கிட்ட குடுக்குறான். அடுத்தவனை பத்தி பேசுறப்போ தன்னோட தகுதி என்னனு யோசிச்சு பேசணும்டே”
அவமானமாக உணர்ந்த அய்யனார் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட, பேரனிடம், “நீ சொல்லு சாமி இந்த அயோக்கிய பய இன்னும் என்னென்ன பண்ணிருக்கான்னு. இன்னைக்கு நான் அவன் அப்பனுக்கு குடுத்த காசையும், இவன் ஊருக்கு பண்ணிருக்குற கொடுமையையும் மொத்தமா வசூலிக்காம விடப்போறதில்ல, பஞ்சாயத்து தான் என்னோட காச இன்னைக்கே வாங்கி தரணும் இப்படியே சொல்லிட்டேன்”
இளங்கோவனை எதிர்த்து அங்கு வேறு வாதமும் இல்லாமல் போக தைரியமாய் அடுத்த உண்மையை கூறினான்.
“கஞ்சா செடிய அய்யனார் அவர் வீட்டுல நாலு மாசமா வச்சு வளக்குறார்… இது எங்களுக்கு தெரிஞ்சு. தலைவரே நீங்க இல்ல-னு சொல்லாதீங்க. உங்க பக்கத்துக்கு இடத்தை அவ்ளோ போராட்டம் பண்ணி நான் வாங்குனது காரணமே இது தான். வீடியோ எல்லாம் பக்காவா இருக்கு.
அந்த கஞ்சா செடியை எடுத்து மருந்தா மாத்தி எங்க வந்ததுன்னு யோசிக்கிறப்போ உங்களுக்கு சிக்கின இடம் நம்ம குளம். யாருக்கும் சந்தேகம் வராது, ஆனா அங்க யாரையும் அதிகம் வர வைக்க கூடாது.
அதுக்கு ஒரே வழி உயிர் பயத்த குடுக்குறது. ஒரு உயிரை நான் காப்பாத்திட்டேன், செல்வம் அண்ணன் ஒரு உயிர் போய்டுச்சு…” பற்களை கடித்து ஆத்திரத்தை அடக்கினான் தேவா.
“அடேய் அய்யனாரே இவ்ளோ மோசமானவனாடா நீ? பொறுப்பானவன், நல்லவன்னு தானேடா நாங்க நினைச்சு உன்ன இவ்ளோ தூரம் ஆளாக்கினது? இப்டி ஊருக்கே உபத்திரம் பண்ணி உன் குடும்பத்துக்கு என்ன பாவத்தை சேர்க்க போற?
அரை வயிறு கஞ்சினாலும் நம்ம உழைச்சு நம்ம சாப்பிடணும்யா அதான் நம்ம ஒடம்புல ஒட்டும், வம்சத்துக்கும் அதான் நல்லது” மனம் தாளாமல் ஒரு பெரியவர் வருத்தமாக கேட்டார் கேட்க வேறொருவர்,
“அய்யா, இவன் வாட்டுக்கு என்ன சொன்னாலும் நம்புவிகளா? எப்பா தேவா, அவருக்கு எதிரா என்ன ஆதாரம் இருக்கு? ஊர்க்கு உன் மேல நம்பிக்கை இருந்தா பத்தாது இவனையும் தான் நாங்க நம்புனோம்,
இப்ப தலைல தண்ணி ஊத்தி உண்மைய புரிய வச்சிட்டான். அதே தப்ப இனி இங்க நடக்க விட மாட்டோம். ஆதாரம் எடு. ஆகுறத அப்றம் பாக்குறோம்” என்றார் நாட்டாமை ஒருவர் காட்டமாக. அய்யனார் பல் பிடுங்கிய பாம்பை போல் செய்வதறியாது தவித்தார்.
“அவ்ளோ தான… ஒரு பத்து நிமிஷம் பொறுங்க படமே ஓட்டுறேன்” பத்தே நிமிடத்தில் ஒரு மடிக்கணினியில் படத்தை ஓட விட்டான்.
குளத்தின் புதருக்கடியில் மறைத்திருந்த கேமரா துல்லியமாக அந்த காட்சியை படமாக்கியிருந்தது. அய்யனாரின் ஆட்கள் குளத்தை சுற்றிலும் பார்வையிட, அவர்களுக்கு பின்னே வந்த அய்யனார் வேலையை ஆரமிக்க உத்தரவிட, இரண்டு பேர் குளத்திற்குள் குதித்தனர்.
கையில் பெரிய பெரிய மூடைகளோடு. குளத்திற்குள் குதித்தவர்கள் சில பல நிமிடங்கள் கழித்தும் வராமல் இருக்க சில நொடிகளில் வந்தவர்கள் அடுத்த மூடையை பெரிய பாறாங்கல் கொண்டு கட்டி மீண்டும் குளத்திற்குள் குதித்தனர்.
இதுவே இன்னும் சில முறை நீடிக்க காணொளியில், “பொருளுக்கு எதுவும் ஆகிடாதுல?” உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டார் உடலை தண்ணீரிலிருந்து உத்தரிக்கொண்டிருந்தவனிடம்.
“அதெல்லாம் ஒன்னுமாகாது அண்ணாச்சி. வேலை பாத்தது நம்ம மக்கா. எந்த கோட்டிக்கார பயலும் நம்ம வேலைய சந்தேகப்பட மாட்டான். ஏலேய் சொல்லுங்கலே” அருகில் இருந்த இருவரை ஏவினான்.
“யண்ணே வேலை எல்லாம் பக்கவா இருக்கும். விடுங்க. அடுத்த செடியை இன்னும் ரெண்டு வாரத்துல இறக்கிடலாம்” எனவும் அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டே குளத்தை விட்டு வெளியேறினர்.
அந்த படம் ஓடி முடிய நீரினுள் இறங்கிய இருவரின் படத்தை காட்டினான். செல்வம் இறந்த அன்று அவரது உடலை நீருக்கடியிலிருந்து எடுத்து வந்தவர்கள்.
“இவங்க தூத்துகுடில இருந்து வந்தவங்க. செல்வம் அண்ணன் ஒடம்ப எடுத்து வந்த அப்போவே சந்தேகம், எப்படிடா இவ்ளோ நேரம் தண்ணிக்கடில இருந்து ஒடம்ப சிரமமே படாம தூக்கிட்டு வந்தாய்ங்கனு… அதான் தூத்துகுடில விசாரிச்சேன். முத்துகுளிக்கிறவங்களாம்.
வர்ற வருமானம் பத்தாதுன்னு ஹார்பர்ல பொருள் கடத்துற வேலை எல்லாம் பாத்து ரெண்டு வருஷம் ஜெயில்ல இருந்து வந்தவிங்க.
அவிங்க பழக்கம் எப்படி நம்ம தலைவருக்கு கெடைச்சதோ வேலைக்கு வேலையும் ஆச்சு, சம்பளத்துக்கு குளத்துக்கு குளிக்க வர மனுசங்க கால பிடிச்சு ஆளத்துல இழுத்துட்டு போய் காலை கொடில கட்டி வச்சு உசுரு போனதும், அவங்க ஒடம்ப வெளிய எடுத்து வர உதவுறேன்னு சொல்லி ஆழத்தை காரணம் காட்டி காசும் எக்கச்சக்கமா வாங்கியும் பணத்தை சேர்த்தாச்சு” வாயில் கை வைத்து நடந்ததை கேள்வி கேட்க அய்யானர் மேல் சிலர் மண்ணை வாரி, கற்களை வீசி சாபமிட்டனர்.
“இதுக்கும் மேல உங்களுக்கு ஆதாரம் வேணும்னா அவரோட அமைதியே பதில் சொல்லிருக்கும், இன்னொன்னு அந்த தூத்துக்குடி காரைங்க இப்ப செல்லுக்குள்ள இருக்காய்ங்க அங்க போய் விசாரிச்சுக்கோங்க”
தேவா கூட்டத்திரிலிருந்து ஓரமாக ஒதுங்கிவிட, அய்யனார் தவறுக்கு துணை சென்று குரலை கொடுத்த சில தலைகள் கூட்டத்திலிருந்து தப்பித்திருந்தனர்.
மயிலப்பன் கூட அதிகம் பேசாது அமைதி காத்துவிட்டான். திண்ணையில் அமர்ந்திருந்த நால்வர் தங்களுக்குள் ஒரு மனதோடு பேசி,
“இளங்கோவன் அய்யனாரோட அய்யன்க்கு காசு குடுத்ததுக்கான ஆதாரம் காட்டுனா இத்தனை வருசத்துக்கான பணத்தை வட்டியும் முதலுமா பணமாவோ, பொருளவோ இல்ல நிலமாவோ குடுக்கணும். அடுத்தது செல்வதோடு குடும்பத்துக்கு ஒரு நிலத்தை எழுதி வைக்கணும்”
“அதெல்லாம் ஒன்னும் வேணாம்” குணா உடனே தடுத்தான், “ஊரையே அடிச்சு ஏமாத்துன காசு என் பொண்டாட்டி குடும்பத்துக்கு வேணாம்” ஒரே முடிவாக கூறினான்.
“எப்பா அத நீ சொல்ல கூடாதுல, அடுத்து பொம்பள புள்ளை இருக்கு, அதுக்கு நல்லது செய்ய வேணாம்?”
குணா, “வேணாம்ங்றேன்…” என்றவன், “என் மாமனார் காசுல இருந்து ஒரு ரூவா எனக்கு வேணாம். அவரோட மத்த பிள்ளைக்கு மொத்தமா இருக்கட்டும், நானோ என் பொண்டாட்டியோ அதுல உரிமை கொண்டாட மாட்டோம்” நொடி யோசிக்காமல் அவன் கூறிட மலைத்து போனது கூட்டம்.
பணத்திற்காக தான் திருமணம் செய்கிறான் என கூறிய வாயையும் சேர்த்து அடைத்தான் குணா.
“சரி தான், அடுத்தது பாப்போம். இனி அய்யனார் இந்த ஊருக்கு பிரசிடெண்ட் இல்ல, அவனே ஊருக்கு கட்டுப்பட்டு பதவியை ராஜினாமா செய்யணும்”
உத்தரவு வர முடியாது என சண்டையிட தூண்டிய மனதை தூண்டிவிட அசிங்கப்பட்ட மூளை விடவில்லை. தலை தாழ்த்தி ஊராரின் பேச்சை எல்லாம் மௌனமாய் வாங்க வேண்டிய நிலை. நிலைகுலைந்து போனார் அவமானத்தில்.
“அடுத்த உத்தரவு, அய்யனாரையும் அய்யனாரோட குடும்பத்தையும் இந்த ஊற விட்டு ஒதுக்கி வைக்கிறோம். இது இந்த பஞ்சாயத்தோட ஒருமித்த கருத்து. இத மீறி யாரும் எதுவும் செஞ்சா அவங்களும் அவனோடேயே இந்த ஊற விட்டு தாராளமா போகலாம்” அவ்விடமே தெளிவாக கேட்கும் அளவு அமைதி வந்தது தீர்ப்பினால்.
“அதோட அய்யனார் கூட சுத்துன சோக்காலிக நல்லா கேட்டுக்கோங்க, ஊருக்குள்ள உங்களால இந்த மாதிரி கேடுகெட்ட தப்பெல்லாம் வந்தா ஒரு நிமிஷம் யோசிக்காம போலீஸ்க்கு தான் பஞ்சாயத்து போகும். எச்சரிக்கையா நினைச்சு ஒழுங்கா இருந்துக்கோங்க”
“ஊருக்கு செஞ்ச கொடுமைக்கு அவனை ஊரைவிட்டு தள்ளி வச்சாச்சு. அவன் பண்ண தப்புக்கு செல்வதோட குடும்பம் போலீஸ் போறதுனா இந்த ஊர் அதுக்கு என்னைக்கும் துணை நிக்கும்”
பஞ்சாயத்தை முடித்திட நிச்சயம் காவல் நிலையம் செல்லும் முனைப்போடு நின்ற குணாவிற்கு தோளோடு அணைத்து தன்னுடைய ஆதரவையும் தெரிவிக்க நண்பன் தோள் தட்டி தானும் உடன் இருப்பதாக உறுதிக்கொடுத்தான் வெற்றியும்.
இனிமேல் ஒரே ரொமான்ஸ் தான்… ஆனா இன்னும் ஒரு சாப்டர் தான் கதை இருக்கும்.