Skip to content
Post Views: 1,306

அர்ஜுனன் ஆரவ் ரித்திகா மூவரும் உறங்குவதை பார்த்த சுபா நிரவி அங்கு தனியாக அழுது கொண்டு உறங்குவதை பார்த்து கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது…. பின் தன்னை சரிப்படுத்தி கொண்டு ரித்திகா ஆரவ் இருவரையும் எழுப்பி குளிக்க அனுப்பி விட்டவள் உறங்கும் அர்ஜுனனுக்கு நெற்றி முத்தமிட்டு கீழே சென்றுவிட்டாள்…. நிரவி அர்ஜுனன் தவிர்த்து மற்றவர்கள் எழுந்து இருக்க அனைவரும் குளித்து விட்டு காலை உணவை உண்ண ஆரம்பித்தனர்… சசி நிரவி சாப்பிடும் போது உண்ணுகிறேன் என்று கூறினான்….
அவனையம் உண்ண வைத்து விட்டு அனைவரும் முகுந்தன் வீட்டிற்கு கிளம்பினர்…நேற்று நடந்ததை பற்றி யாரும் எதுவும் பேசவில்லை… சசி மட்டும் நிரவியை விட்டு வர தயங்க சுபாவின் கெஞ்சல் பார்வையில் என்ன உணர்ந்தானோ எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்….
அவர்கள் சென்றதும் கதவை அடைத்து விட்டு நிரவியின் தூக்கம் கலையாமல் தூக்கி கொண்டு தங்கள் அறைக்கு சென்றவள் அர்ஜுனன் அருகில் படுக்க வைத்தவள் அவளின் மறுபக்கம் படுத்து கொண்டாள்… அவள் உறங்கவில்லை இருவரையும் பார்த்து தான் படுத்து இருந்தாள்… மணி பத்து மணி மேலாகி இருக்க அர்ஜுனன் அப்போது தான் எழுந்தான்…
Advertisement
அவனால் எழ முடியவில்லை… எதுவோ மென்மையாக தன் மேல் இருப்பது போல் இருந்தது… குனிந்து பார்த்தால் நிரவி குட்டி தான் அவன் மேல் ஏறி படுத்து கொண்டு இருந்தாள்… சுபாவும் அவன் கைமேல் தலை வைத்து தூங்கி இருந்தாள்….
அவன் அசைவதை பார்த்து எழுந்த சுபா நிரவி அர்ஜுனன் மேல் உறங்குவதை பார்த்து கண் கலங்கிவிட்டாள்…. அர்ஜுனன் பதறிவிட்டான்…. “அம்மு என்ன ஆச்சு… ஏன் அழுகுற…” என்று நிரவியை கீழே படுக்க வைக்க முயன்றான்… ஆனால் சுபா இருவரையும் சேர்த்து அணைத்தவள் நிரவி குட்டி தூக்கம் கலையாமல் காலையில் சசியின் அறையில் நடந்ததை கூறினாள்…. அர்ஜுனன் அதை கேட்டு கலங்கிவிட்டான்…
தன் தந்தையின் பரிசம் நீண்ட நாள் கழித்து கிடைத்ததாலோ என்னவோ நிரவி குட்டி நன்றாக உறங்கி கொண்டு இருந்தது… திருவிழா வேலை ஆரம்பித்தது முதல் அவனால் அதிகம் வீட்டிற்கு சரியாக வர முடிவது இல்லை… தற்போது அவன் பரிசம் கிடைத்ததும் உறங்க ஆரம்பித்துவிட்டாள்..
Advertisement
நிரவியின் தூக்கம் கெடாதவாறு சுபாவிடம் “அம்மு நாம தான் பாப்பாவை கஷ்டப்படுத்துறோமா…. ஏற்கனவே நாம இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டா… ஆனா இப்பயும் நாம கஷ்டப்படுத்துறோம்… இனிமே நமக்கு தெரியாம கூட பாப்பாவை கஷ்டப்படுத்த கூடாது அம்மு…” என்று கூறி நிரவி குட்டியின் தூக்கம் கெடாதவாறு முத்தமிட்டு அவளை அணைத்து கொண்டான்…
Advertisement
சிறிது நேரம் படுத்து இருந்த சுபா அர்ஜுனன் நிரவி குட்டி இருவரும் உண்ணாது இருப்பதை உணர்ந்து “மாமா எந்திரிங்க நேரம் ஆச்சு… பாப்பாவும் நீங்களும் இன்னும் சாப்பிடல.. நீங்க போய் குளிங்க… நான் பாப்பாவை எழுப்பி குளிக்க வெச்சு சாப்பிட கூட்டிட்டு வரேன்…” என்று நிரவி குட்டியின் தலையை தடவி கொண்டே கூறினாள்…
அவனும் நேரத்தை பார்த்து நிரவி குட்டியை கீழே படுக்க வைத்தவன் சுபாவிற்கு நெற்றியில் முத்தமிட்டவன் குளிக்க சென்றான்… சுபா மென்மையாக நிரவி குட்டியை எழுப்பி விட்டு இன்னொரு அறையில் குளிக்க வைத்தவள் அவளுக்கு தானே உடை அணிந்து சாப்பிட அழைத்து வந்தாள்… அர்ஜுனன் நிரவி இருவருக்குமே தானே ஊட்டி விட்டால் சுபா..
நிரவி குட்டி காலையில் நடந்ததை மறந்து சந்தோசமாக தன் பெற்றவர்களுடன் இருந்தாள்… அன்று முழுவதும் அவளுடன் தான் இருந்தனர் அர்ஜுனன் சுபா மூவரும்…
Advertisement
அதன் பின் நாட்கள் அதன் போக்கில் சென்றது… இதில் சிவனேஸிற்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு ஆரம்பித்து இருந்தது… அவனும் நன்முறையில் எழுதி முடித்து இருக்க அடுத்து என்ன என்ற யோசனை அவனை சுற்றிக்கொண்டே இருந்தது.. அவனுக்கு பைலட் ஆவது தான் கனவு… இதை அவன் சசியை தவிர்த்து யாரிடமும் கூறவில்லை..
அவனும் அதற்கு முதலில் ஒத்துக்கொள்ளவில்லை… அதன்பின் அவனின் ஆசை அறிந்து ஒத்துக்கொண்டவன் அவனுக்கு தேவையானதை சேகரிக்க ஆரம்பித்தான்…
சிவனேஸிற்கு தெரியும் வீட்டினர் அவ்வளவு எளிதில் அனுமதிக்க மாட்டார்கள் என… இருந்தும் நம்பிக்கையுடன் வீட்டில் சொல்லிவிட்டான்… பைலட்டாக கண்டிப்பாக அரை கோடி ஆகி விடும்… பணத்திற்கு இங்கு பிரச்சனை இல்லை ஆனால் வாணனுக்கு அது வேண்டாம் என்று தான் தோன்றியது…
சிவனேஸிற்கு தெரியும் பணம் நிறைய செலவாகும் என… இருந்தும் வீட்டில் தன்னை புரிந்துகொள்வர் என நம்பி வீட்டில் அனைவரும் இருக்கும் போது கூறிவிட்டான்….
வீட்டில் முதலில் அனைவரும் தயங்கினாலும் அனைவரும் ஒத்து கொண்டனர்… வாணன் மட்டுமே மறுத்தான்… வர்ணன் வாணனிடம் “ண்ணா சிவா அவனுக்கு தேவையானதை சொல்லிட்டான்…வீட்டுல எல்லாரும் சம்மதிச்சிட்டாங்க நீ மட்டும் ஏன் மறுக்குற…” என்று கொஞ்சம் கோவமாக கேட்டான்…
வாணன் அமைதியாக இருக்க அர்ஜுனன் அவனிடம் “அத்தான் பணத்துக்காக தயங்குறீங்களா… சிவா மேல நம்பிக்கை இல்லையா உங்களுக்கு… நம்ம கிட்ட இல்லாத பணமா நீங்க ஏன் இப்படி தயங்குறீங்க…” என்று கேட்டான்…
அவன் அப்போதும் அமைதியாக இருக்க வர்ணன் “ண்ணா நம்ம கிட்ட இல்லாத பணமா… ஏன் வேண்டாம்னு சொல்றிங்க” என்று கோவமாக கேட்டான்…
வாணன் “வர்ணா நாம நினைக்குற மாதிரி பத்து லட்சத்துல முடியுற வேலை இல்லை.. கிட்டத்தட்ட அரை கோடி மேல ஆகும்.. அதுக்கு மேல ஆகுமே தவிர அதுக்கு கீழ வராது… நம்ம கிட்ட பணம் இருக்கு தான்… அதுக்காக எல்லாத்தையும் இவனுக்கே செலவு பண்ணா மத்த பசங்க இருக்காங்க… அவங்களுக்கு என்ன பண்ணுவ… இவன் சேர்ந்ததும் இவனுக்கு வேலை கிடைச்சிடுமா… அதுக்கு எவளோ நாள் ஆகும் தெரியுமா… வேண்டாம் அவன் இன்ஜினியரிங் படிக்கட்டும்.. பைலட் வேண்டாம்” என கூறி விட்டான்…
“அண்ணா என் பையனுக்கே எல்லாம் பண்ணிட்டா உன் பசங்களுக்கு செலவு பண்ண பணம் இருக்காதுனு சொல்றியா” என்று கேட்க வாணன் அமைதியாக இருந்தான்… அதுவே அவனுக்கு உண்மை என்பது புரிய “ண்ணா சிவா என் முதல் பையன் ண்ணா.. அவனுக்கு செலவு பண்ண நான் யோசிப்பேன்னு நினைக்குறிங்களா… கண்டிப்பா என் பையன் பைலட் ஆவான்… நீங்க மறுத்தாலும் அவன் ஒரு நாள் அவன் பைலட் ஆவான்…” என்று வாணனிடம் கூறியவன் சிவனேஸிடம் சிவா “உன் அப்பா என்ன வேணா சொல்லட்டும்… நான் உன்னை படிக்க வைக்குறேன்…. நீ கவலைப்படாத சிவா..” என்று கூறி அணைத்து கொண்டான்..
சிவாவும் “தேங்க்ஸ் ப்பா…” என்று கூறி இறுக்கி கொண்டான்… ஜனனியும் அவனிடம் வந்து “சிவா நீ எதை பத்தியும் கவலைப்படாத நாங்க இருக்கோம்… உனக்கு உன்னோட கனவை நோக்கி மட்டும் தான் இருக்கனும்… கண்டிப்பா நீ பைலட் ஆவ… பணத்தை பத்தி நீ கவலைப்படாத… கண்டிப்பா என் பையன் பைலட் ஆவான்…” என்று அவனின் தோளில் தட்டி கூறினாள்…
வாணன் மட்டும் அனைவரும் கூறியதால் அரை மனதாக ஒத்துக்கொண்டான்… இங்கும் நந்தினியிடம் யாரும் அபிப்பிராயம் கேட்கவில்லை.. அவளும் நினைக்கவில்லை அவள் செய்த தவறுக்கான தண்டனை இப்படி தான் தொடர்கிறது…
சிவாவிற்கு அதை பற்றி கொஞ்சம் கொஞ்சம் அறிந்து இருந்தாலும் அதை பற்றி முழுதாக தெரியவில்லை.. அர்ஜுனன் தனக்கு தெரிந்தவர்களிடம் இதை பற்றி கேட்க ஆரம்பித்தான்…
அர்ஜுனனின் கம்பெனியில் வேலை செய்யும் ஒருவனின் நண்பன் பைலட்டாக இருக்க அவனிடம் பேசினான்… அவனோ தமிழ்நாட்டில் இன்னும் அதற்கான சரியான வழிமுறைகள் இல்லை என கூறியவன் சிவாவை தான் இருக்கும் டெல்லிக்கு அனுப்பி வைக்க கூறினான்…
அவனின் கனவிற்காக அனைவரும் சந்தோசமாக அனுப்பி வைத்தனர்… நிரவி குட்டியும் சந்தோசமாக அனுப்பி வைத்தாள்… அந்த வயதிலே அவனின் கனவை புரிந்து அனுப்பி வைத்தவளுக்கு தெரியவில்லை இந்த பிரிவு தான் அவளை அவனிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிரிக்க போகிறது என…
error: Content is protected !!