அத்தியாயம் 1
அந்த குடி இருப்பு பகுதியில் அழகான வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்க அளவான வசதிகள் கொண்டு மிடில் தர மக்களும் வசிக்கும்படியான வீடுகளுமே இடம் பெற்றிருந்தன…
அதில் ஒரு வீட்டில் தான் மேல் தளத்தில் சாதனாவும்.. கீழ் தளத்தில் அவள் உற்ற நண்பன் அசோக் அவனின் தாயுடன் வசித்து வருகிறார்கள் ..சாதனாவின் வாழ்வில் கடந்த மூன்று வருடங்களின் அதிமுக்கிய உறவுகளாகி போயினர் அசோக் மற்றும் அவனது தாய் ரேவதி….
சாதனா அசோக் நட்பானது கல்லூரியில் உருவானது…பெண்ணானவள் ஏதேனும் ஒரு டிகிரி படிப்பை முடித்தால் போதும் என்ற பெருந்தன்மையை கொண்ட சாதனாவின் பெருங்குடும்பம் சேர்த்துவிட்ட கல்லூரியில் சாதனாவிற்கு அசோக் தோழமை கிடைத்தது …
அத்தகைய பெருந்தன்மை குடும்பத்தில் …பெயருக்கு இன்சியல் மட்டும் வழங்கிய வள்ளலான தந்தையும் அக்கரை அளவாக கொண்ட பெரியப்பா மற்றும் சித்தப்பா அவர்களின் மனைவி மக்கள் என ஒரு கூட்டமே அதில் அடக்கம்….தற்போது அவளுடன் அவள் நலனில் யாரும் இல்லை…
“மை ஸ்வீட் ஹார்ட் எங்க இருக்கிங்க நம்ம பிஸ்னஸ் செம்ம பிக்கப் ஆகிட்டு வருது…ரிவ்யூஸ் ரேட்டிங்க் பாருங்க “என்று வழவழத்து கொண்டே ரேவதி ஆண்டியை தேடி வருவது நம் சாதனாவை தவிர வேறு யாராக இருக்கும்.?….
“வாடா என் பட்டு குட்டி உனக்காக தான் ஏலக்காய் தட்டி டீ வச்சிட்டு இருந்தேன்”..என்று தன் கையில் அவளுக்கான டீயுடன் கிச்சனில் இருந்து அன்பை அரை லிட்டர் பாலுடன் டிக்காசன் விட்டு ஆவிபரக்க எடுத்து வந்தார் ரேவதி…
ஒரு மிடரு டீயுடன் ம்ம்ம்ம் என்ற தலையாட்டலும் என சாதனா டீயில் காட்டும் ரசனை பார்ப்பவரை டீ அருந்த அழைத்து வைக்கும்…
அசோக் கூட சில நேரங்களில் கேட்பதுண்டு “அட கெரகமே டீக்கு செத்தவளா நீ” என்று…அதை பற்றியெல்லாம் என்றுமே காதில் வாங்கி கொள்வதும் இல்லை காலி டம்ளரை கழுவி வைப்பதும் இல்ல…
“பார்த்திங்களா ஆன்டி நம்ம பிஸ்னஸ் ப்ளான் எப்டி ஒர்க் அவுட் ஆகிட்டு வருது…சில பேரும் தான் இருக்காங்களே வாய்ல வடை சுடுறதோட சரி..அதுக்குலாம் ஒரு கெத்து வேணும் ஆன்டி..என்று அசோக்கை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே ரேவதிக்கு எடுத்து கொடுக்க..விடுவாரா ரேவ் “படம் எடுக்குமா பாம்பு பனைமரத்துக்கு இங்கிலிபிஷ்ல பேம்பூ.”…
“என்னய்யா ஸ்வீட் இப்டி கிளம்பிட்டீரு…”என்று பாவம் அசோக் என்பது போல் ஒரு லுக்கை விட்டு கொண்டே ப்ளேட்டை திருப்பி விட்டு தாவி விட்டது செவலை….(செவலை ஆருனு தெர்தா… நம்ம சாதுவே தான் )…
அசோக் தன் படிப்பை டிகிரியுடன் முடித்து க் கொண்டு அவன் கேமரா காதலில் களம் இறங்கிவிட்டான் பெரிய அளவில் இன்னும் முன்னேற்றம் இல்லை என்ற போதிலும் திருமண நிகழ்வுகளை ஒரு படபிடிப்பை போல வெகு சிரத்தையுடன் புதுமையான விதங்களில் படம்பிடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டான்.. ஆனாலும் அவன் சினிமாவின் ஒளிபதிவு ஆசைக்கு வடிகாலாக பிரபல சின்னத்திரை நிகழ்ச்சியில் தன் திறமையை காட்டி வருகிறான்… பெரிய திரை வேண்டாம் என ரேவதியின் வேண்டுகோளை மதித்து தன் கனவை பாதை மாற்றி பயணித்து வருகிறான்..
“ என்னை கலாய்க்கிறது இருக்கட்டும் தாய்கிளவி ..உன்னோட ரீல்ஸ் பார்த்திட்டு உன்ன சின்னத்திரைல ஒரு மாமியார் ரோலுக்கு நடிக்க கேட்டிருக்காங்க இந்தா இந்த வேஸ்ட் லக்கேஜயும் கூட்டிட்டு போ அதுக்கு ஒரு வில்லிக்கு மகளாவும் ஹீரோயின்க்கு வில்லியாவும் ஒரு ரோல் குடுப்பானுக”. வந்துட்டாங்க ரெண்டு பேரும் பெரிய அதானி க்ரூப்ஸ் ஆஃப் பிசினஸ் பீப்பிள்ஸ் போவிங்களா ஆன்லைன்ல ஆர்டர் போட்டு அதை சேல்ஸ் பண்ணி பெரிசா பேசிகிட்டு,” அதானியே அன்டர்ல போய்டாராம் இவங்க ரொம்ப ஓவரால பேசிட்டு இருக்காங்க என மாடிக்கு சென்றுவிட்டான் செடிகளை பார்க்க…
“ இந்த உறுப்படாத சீரியல் கேமராவே நம்மள கலாய்க்குதே நாம இன்னும் கொஞ்சம் வளரனுமோ,” என தீவிர யோசனைக்கு போய் கொண்டிருக்கும் சாதனாவை அவளது செல் போன் ஒளி எழுப்பி தரை இறக்கியது.. சாதனாவின் தம்பி அதாவது அவள் சித்தப்பா ஜெய்சங்கரின் மகன் மதன் அனுப்பியது.. நானும் பெரியப்பாவும் உன்ன பார்க்க வர இருக்கோம் எங்கயும் ஓடி ஒளியாத என்று அனுப்பி இருந்தான்.. சோபி அக்கா கால் பண்ணி இருந்தாங்க அட்டன் செய்யல இப்ப இவனா என்று சலிப்பாக உணர்ந்தால்.. இவள் தந்தை ராஜசேகரனுடன் பிறந்தது மூத்தவர் ராஜதுரை இளையவர் ஜெய்சங்கர் … ராஜசேகரின் மனைவி லலிதா..சாதனாவிற்கு 6 வயதாகும்போது தவறான தொடர்பால் குடும்பத்தை விட்டு ஓடிச்சென்று குடும்ப மானத்தையும் ராஜசேகர் நிம்மதியையும் பறித்துவிட்டார்..
4ஆம் வகுப்பு வரை சென்னையில் தன் தந்தையுடன் இருந்து வந்தாள் சாதனா..தந்தை இரண்டாவது திருமணம் செய்யும்வரை ..ஆம் அவள் தந்தை சுமித்ராவை திருமணம் செய்ததிலிருந்து பெரியப்பா வீட்டில் திருச்சியிலும் அதற்கு பிறகு 9 ஆம் வகுப்பு முடித்து ஹாஸ்டலில் சேர்ந்தது.. குடும்பத்துடன் ஒட்டுதல் இல்லை என்றாலும் ஒதுக்கமும் இல்லாமல் தான் போய் கொண்டிருந்தது கல்லூரி முடித்து வீட்டினர் இவளுக்கு திருமணம் செய்ய நினைத்த போது தான் திடீர் மாற்றமா சில நிகழ்வுகள் அவளை அந்த குடும்பத்துடன் அரைவே ஒதுங்கி போக செய்தது…
திருமணம் பேச்சு ஆரம்பித்து ஒரு வரன் பெண்பார்க்கும் சம்பிரதாயம் வரை முடிந்திருக்க , தாய் மாமன் என சொல்லிக்கொண்டு இவள் தலையில் ஒரு பாரத்தை ஏற்றி வைத்தார் லலிதாவின் அண்ணன் சிவநேசன்…
கடமையில் இரண்டு வருடங்கள் கடத்திவிட்டு இதோ இந்த ஒரு வருடமாக விரும்பிய வேலைகளை செய்து கொஞ்சம் இலகுவாக இருந்து வருகிறாள் …
மீண்டும் அங்கே செல்வதால் மனதில் உண்டான அழுத்தங்கள் மீண்டுவிடும் என்பதால் யாருடனும் பேசுவதையும் தவிர்த்து வருகிறாள்… மதன் அவளை விட 2 வயசு சின்னவன் என்றாலும் சாதனாவின் மீது பாசம் அதிகம் காட்டியவன் சிறு வயதிலிருந்தே அவள் விடுமுறைக்கு ஊர் வரும் தருணங்களில் சாது சாது என்று அவளோட விளையாட்டு தோழனாய் சுற்றுவதிலிருந்து பெரியவனானதும் அவளுக்காகவே வீட்டிலும் வெளி இடங்களிலும் சண்டை இடுவது என எப்போதும் அவளை விட்டு கொடுக்க மாட்டான்… அப்படிபட்ட அவனையுமே இந்த இடைப்பட்ட வருடங்களில் கொஞ்சம் தள்ளி நிறுத்தி இருந்தாள்..
இந்த ஒரு வருடத்தில் குறுகிய கால அழகுகலை பயிற்சியும் குக்கரி பயிற்சியும் பெற்று தன் தேவைகளை பார்த்து கொள்ளும் அளவு வந்துவிட்டாள்…
அடுத்த அழைப்பாக மீண்டும் சோபனா அவள் பெரியப்பாவின் ஒரே மகள் ..திருமணமாகி கணவனுடன் மும்பையில் வசித்து வருகிறாள்… செல்வம் சோபனா தம்பதியர்க்கு பிறந்தவன் வருண் ….
திரையில் மின்னி மறையும் வருணின் புகைபடம் சாதனாவை சோபனாவின் அழைப்பை ஏற்க சொன்னது..
“ஹலோ சனா என் போன் இப்ப தான் எடுக்கனும்னு தோணுச்சாடி..”என சோபனாவின் ஆதங்கம் நிறைந்த குரல் சாதனாவின் மௌனம் உடைத்தது…
“சொல்லு சோபிக்கா என்ன விசயமா போன் பண்ணின, அந்த பக்கம் மதன் வேற பெரியப்பாவோட கிளம்பி வர்ரதா சொல்றான், எல்லாரும் என்ன ப்ளான் செய்றிங்க ..இத்தன நாள் என்ன என் போக்குல விட்டிங்க தானே..இப்ப என்ன திடீர்னு” என கேட்டு வைக்க ..
இப்படி உடனே தன்னிடம் பேசுவாள் என்றோ ,இப்படி கேள்விகளால் தாக்குவாள் என்றோ சோபனா எதிர்பார்க்கவில்லை..
“ஒரு ப்ளானும் பண்ணல, உங்க அப்பா என் சித்தப்பா அவர் பெத்த பொண்ணுக்கு கல்யாண ஏற்பாடு செய்றாங்க …அதான் மூத்தவ நீ இருக்கும் போது அவளுக்கு முடிக்க எங்களுக்கு கஷ்டமா இருக்கு..அதான் உன்ன இனியும் தனியா விடுறதா இல்ல… நீ உங்க சித்தப்பா வீட்டுக்கு வந்து இருக்க வேணாம் நம்ம வீட்டுல இருந்தா போதும்…”என இடைவிடாது தான் சொல்ல நினைத்ததை சொல்லி நிறுத்த…
சமையல் வேலையில் கிச்சனில் இருந்த ரேவதி சாதனாவின் அருகில் வர அவள் முகபாவனை இலகுவாக்கி கொண்டு சற்றே அழுத்தங்கூட்டி “ நான் ஒன்னும் தனியா இல்ல…” என்று குரலுயர்த்தி சொல்ல…
ரேவதிக்கு அவள் பேசுவது யாரிடம் என்று விளங்கவில்லை என்றாலும் அவர் குடும்பத்து ஆட்கள் என்பது புரிந்தது… அவர் மனசு அவளை நினைத்து கலக்கம் கொண்டது …. செடியை ஆராய்ச்சி செய்து கை கேமராவில் கிளிக்கி கொண்டு கீழே வந்தான்…
சாதனாவின் தொலைபேசி உரையாடலை கேட்டுகொண்டே வந்த அசோக் மொபைலை தருமாறு கையை நீட்டினான்..
சாதனா மொபைலை அவனிடம் கொடுக்க…“ என்ன சோபிக்கா நீ நான் தான் சாதுகிட்ட பேசுறேன்னு சொன்னேன் தானே ..அதுக்குள்ள என்ன அவசரம்” என கேட்டு நிறுத்த… “அதில்லடா அசோக்கு இந்த மதன் பயதான் அவனோட சாதுக்காவ நினச்சு ரொம்ப வருந்துறான்..இன்னும் ரெண்டு நாள்ல எங்க அப்பாவ கூட்டிட்டு அவகிட்ட நேர்ல வந்து பேசுறேன் சொல்லி இருக்கான்” என்ற சோபனாவின் பேச்சிற்கு மறுமொழியாக ஓஹ் என்றதோட நிறுத்தி போனை சாதனாவிடம் கொடுத்துவிட்டான் … ஸ்பீக்கர் ஆன் செய்து பேசிக் கொண்டிருப்பதால் சாதனாவிற்கு புரிந்து விட்டது மதன் என்றால் மறுபேச்சு அசோக்கிடம் இருக்காது.. இது அவர்களுக்குள் என்ன மாதிரி போக்கு என்றே இருவருக்கும் மிக முக்கியமாய் திகழும் சாதனா அறியாதது .. என்னைக்காவது என் கைல வசமா ரெண்டு பேருமே மாட்டிவிங்கள்ல அப்ப கைமா பண்ணிடுறன் என்றபடி சாதனா இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதோடு வருணை பற்றி கேட்டறிந்து அவன் பள்ளி சென்றிருப்பதால் இன்னும் ஓரிரு நல விசாரிப்புகளில் குடும்ப உறுப்பினர் அனைவரின் குசலம் விசாரித்து கொண்டு தொலைபேசியை கட் செய்து வைத்தாள்..
சாதனா போனை அணைத்ததும் அசோக்கிடம் விசாரணையை ஆரம்பிப்பாள் என்னும் அபாயம் இருப்பதால் ஆஃப்பாயில் முட்டையுடன் ஒரு சப்பாத்தி ரோலையும் எடுத்துக்கொண்டு ரேவதியின் அழைப்பை பொருட்படுத்தாது வெளியேறிவிட்டான்…
சாதனா அசோக்கை மேலும் கீழும் தேடி சத்தமிட்டு உஷ் புஷ் மூச்சுகள் விட்டு அவளும் ரேவ் செய்து வைத்த சப்பாத்தி ரோலுக்கு தன் நாவினை பதம்பார்க்க கிளம்பிவிட்டாள்…
மாலை 6 மணிக்கு பிறந்தநாள் ஒன்றிற்கு ஆர்டர் செய்யப்பட்ட கேக்கினை முன்பே செய்து வைத்திருந்ததால் டெகரேசன் வேலைகளை முடித்து கொடுத்து அனுப்பி விட்டு கொஞ்சம் சோர்வாக கீழே வந்து ரேவதி கொடுத்த டீயோடு மாடியிலிருக்கும் தன்னறையில் தஞ்சம் புகுந்து விட்டாள் மொபைலுடன்..
வாட்சப்பில் அவர்களது குழுவின் மெசேஜ்களுக்கு பதில் அளித்துவிட்டு சோசியல் மீடியாவின் தனது பக்கங்களில் தலையைவிட்டாள்..
பச்சை தண்ணிதான் குடிக்க வேண்டும் சுடுதண்ணில நுண்ணுயிரிகள் செத்துவிடும் அப்பறம் எதை கொண்டு நோய் கிருமிகளை கொல்வது என்று அரசியல் மற்றும் சினிமா பிரமுகர் ஒருவரின் ஆவேச பேச்சை கேட்டு, கடும்சுரம் வந்தாலும் பச்சை தண்ணி தான் என்று ரேவதியுடன் சண்டையிடும் தன்னை பெருமையாக நினைத்து கொண்டாள்…அடுத்து வந்த ஒரு வீடியோ காட்சி அவள் கண்களை அகலவிரித்து அதனில் கவனம் பெற செய்தது….
கல்கத்தாவில் நடைபெற்ற பார்வையற்ற பெண்களுக்கான பேசன் சோ ….
வெள்ளை நிறம் கொண்ட கவுன்களில் அங்கங்கள் முழுமையாக மறைக்கவில்லை என்றாலும் முகம் சுழிக்கா வண்ணமே அவை அணியப்பட்டிருந்தன … அவர்களை கருப்பு நிற கோர்ட்சூட் அணிந்த ஆடவர்கள் கைபிடித்து சில தூரங்கள் மட்டுமே அழைத்து வர இன்னும் சில தூரங்கள் தன் தேர்ந்த நடைபயிற்சியை கொண்டு மெல்லிய சிரிப்பு முகத்தில் அலங்கரிக்க அவர்கள் குறைபாடு பார்வையாளர்கள் வெகு சிலருக்கே..தெரியும்படி இருந்தது..
இதுவரை இதுபோன்றதொரு நிகழ்வை அவள் கண்டதில்லை என்றாலும் இதுபோலெல்லாம் சின்ன சின்ன ஆசைகள் எழுதும் அவள் டைரி குறிப்பில் இடம்பெற்றிருக்கும் ..
இப்போதெல்லாம் அத்தகைய ஆசை கிறுக்கல்கள் பழக்கம் சாதனாவுக்கு குறைந்து மறைந்தே போய்விட்டது… அவற்றை நினைவு மீட்டும்படியான இந்த வீடியோ பகிர்வு இதனுடன் தான் தவறவிட்ட டைரியை நினைத்து கொண்டது…. எங்கிருக்கிறாய் என் இதயமே என ஒரு முறை கேட்டுக்கொண்டாள்…
பேனாவை காகிதம் தொட்டு வரையும் சின்ன சின்ன கிறுக்கல்கள் கூட கவிதையாகவே தெரியும்…
இன்னுமா அந்த டைரி உயிரோட இருக்க போகுது எந்த பழையசாமான் கடைல சிக்கி எந்த மளிகை கடையில் பொட்டலங்கள் கட்டப்பட்டுச்சோ… இதுல எங்கிருக்கிறாய் என் இதயமேவாம்ல… குப்பைல இருக்கேன் வந்து பொறுக்கிட்டு போ ஒரு குரல் குடுக்கப்போகுது என்று தானே தன் உளரலை எண்ணி சிரித்துக்கொண்டாள்…
காதல்கோட்டை படத்துல வர்ர மாதிரி அந்த டைரியோட என்னோட சர்ட்டிபிகேட் எதையாச்சு வச்சு தொலச்சிருந்தா எங்க இருந்தாவது ஒரு சூர்யாவோ ஆர்யாவோ ..இல்ல சூரியேவோ ஒரு கொரியர் சர்வீஸ் பண்ணிவிட்டிருக்க மாட்டான்… கொரியர் சர்வீஸ் மட்டும் இல்ல காதல் சர்வீஸும் கிடைக்கும் பரவால்லயா என தில்சாட்சி எடுத்து சொல்ல(தில்-மனசு) ஆத்தி இப்டி ஒன்னு இருக்குல..நோ நோ எனக்கு அந்த டைரியும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்… என்றதோடு தன் எண்ண அலைகளை அடக்கி வைத்து கீழே சென்று ரேவதிக்கு சமையலில் சில உதவிகள் செய்ததோடு அசோக்கிடம் வம்புபேசிக்கொண்டே சாப்பாடும் முடித்து உறங்க சென்றுவிட்டாள் …
இங்கே உறக்கம் தொலைத்த ஒருவனோ தன் முயற்சி நிகழ்ச்சியாகி அதன் வெற்றி அவனுக்கு பெரும் நெகிழ்ச்சியாகி இதோ தன் உணர்வுகளை தான் கண்டெடுத்த இதயத்திடம் பேனா மை கொண்டு தீட்டுகிறான்… எங்கிருக்கிறாய் என் இதயத்தின் இன்னொரு பாகமே … என்ற கிறுக்கலில் ஆரம்பித்து இல்லை இல்லை என்று அவனே அதை அடித்தும் வைத்தான் …. கிறுக்கல்கள் அழகானது தன் உள்ளத்து ஆசையோடு பயணிப்பது பகுப்பாய்வு செய்வதுனு காகிதத்தில் முத்தமிடும் பேனாக்கள் பெருங்காதல் கொள்ளுமா அதனிடம்… விசித்திர வினோத கேள்விகளாய் எழுதி தள்ளிவிட்டான் இன்றைய மகிழ்ச்சியில்…
தமிழில் திருத்தமாகவே எழுதத்தெரிந்தவன்… பேசுவது இயலாது என்றாலும் எழுத்துக்களால் ஆயிரம் பேசிவிடுவான் இவன் சைகை மொழியும் இவனை போன்று கவிதையாக இருக்கும் அழுத்தமான பாவனையுடன் ஆழமான ஈர்ப்பு கொண்டது ..ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடன் நீண்ட இமைகளுடன் கண்களும் தட்டையான வரைந்து வைத்த பிருவமும் கட்டான தேகமும் கொண்டு அழகான ஆண் மாடலாகவே இருப்பான்…
அவன் சாருகாசன் மும்மையில் வசிக்கும் சிவராமன் அனுராதா தம்பதியர்க்கு மூத்த மகன் இவன் தந்தைக்கு கமல் பைத்தியம் மட்டும் அல்ல அவர் குடும்ப பைத்தியமும் போல அதனாலே மூத்தவனுக்கு சாருகாசன் என்றும் இளையவன் கமலகாசன் என்று வைத்துவிட்டார் …நல்ல வேளை இரண்டு போதும் என்று நினைத்ததால் சந்திரகாசன் என்று வைக்காமல் விட்டார்…. தம்பதியர்க்கு பூர்வீகம் தமிழகம் என்றாலும் தற்போதைய ஜாகை மும்பை சிட்டி… இவர்களின் தொடர் பெரும்கவலை மூத்தவன் பேச்சுதிறன் குறைபாடு மட்டுமே…மற்றபடி இரண்டு மகன்களும் படிப்பு மற்றும் தொழிலில் வெகு சிறப்பாக முன்னேறி விட்டனர்… பெரிய தொழில் குடும்பம் என்றாலும் இவர்கள் வீட்டினர் எளிமையான இலகுவாக பழக கூடிய மனிதர்கள்..
அண்ணன் குரலாக தம்பியும் தம்பியின் மூளையாக அண்ணனும் சில இடங்களில் வெளிபடுவது உண்டு… பெரியவன் ஆடை வடிவமைப்பில் சிறந்து விளங்க சின்னவன் கமல் அதனை விற்பனை மற்றும் சந்தைபடுத்தும் தொழில் பிரிவில் சிறப்பாக விளங்குகிறான்….
இருவரும் இணைந்து சமீபத்தில் கல்கத்தாவில் நடத்திய பேசன் சோவின் வெற்றியை கொண்டாடி கொண்டிருக்கிறது குடும்பம்.. இதன் யோசனை சாரு என்றாலும் இருவரும் இணைந்து இதனை வெற்றிகரமாக நடத்தி மக்களிடம் பாராட்டையும் பெற்றுவிட்டனர்…
அதன் மகிழ்ச்சியை பகிரவே அவன் தனிமையில் பேனா மற்றும் பேப்பரோடு காதல் பேச சென்றது… இதோ எழுதி எழுதி அடித்து வைக்கிறான் அப்படி என்னதான் இவன் இதயம் பேசுமோ… ?
தன் இணையை தேடுமோ?..