இளம்பரிதியின் மூச்சு காற்று இன்னும் தன் மீது இருப்பது போல் ஒரு பிரம்மை மிருதுளாவிற்கு.சற்று முன் நடந்துவிட்ட அணைப்பில் அவளின் உடலில் ஏற்பட்ட நடுக்கம் இன்னும் குறையாமல் இருந்தது.குடுசையின் மூளையில் அமர்ந்து விட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.மிருதுளாவிற்கு பரிதியின் அணைப்பும் பேச்சும் ஒருவித ஒவ்வாமையை கொடுத்தது.என்ன தான் அவள் அவனின் மனைவி என்றாலும் அவனது நெருக்கம் பிடிக்கவில்லை.மனதால் உணராத உறவை உடலால் உணரவைக்க முடியாது.ஆனால் அதற்கு இருமனங்கள் வேண்டும் இங்கோ ஒருவனிற்கு மனம் என்பதே இல்லை என்பதை மிருதுளாவிடம் யார் கூறுவது.
தன் குடுசை விட்டு வெளியில் வந்த பரிதியின் நிலையோ மிகவும் மோசமானது என்று தான் கூற வேண்டும்.முதல் முறை தன் அணைப்பில் இருந்த பெண் ஸ்பரிசம் மனதில் உற்சாகம் தருவதற்கு பதிலாக கோபத்தை மட்டுமே தூண்டிக் கொண்டிருந்தது.தான் மட்டும் என்று நிம்மதியாக சென்று கொண்டிருந்த வாழ்வில் திடீர் என்று ஒருவள் வந்து பங்கு கொள்ள பார்க்கிறாள்.அது அவனிற்கு பிடிக்கவில்லை கோபம்,கோபம் மட்டுமே எதையாவது அடித்து நொறுக்க வேண்டும் போல் இருந்தது.
அவனை கூறியும் குற்றமில்லை விவரம் தெரிந்த நாளில் இருந்து தாய் வேலை வேலை என்றே தன் உடலை கெடுத்து கொண்டு படுத்த படுக்கையாகிவிட அன்பின் சுவை அவன் கண்டது மிகவும் சொர்பமே.அவனை அன்பாக வழி நடத்திக் கொண்டிருந்த ஜீவனும் பாதியில் விட்டுவிட்டு சென்றுவிட இயல்பாக வரும் அன்பை ஏற்கவே பயம் கொள்கிறது அவனின் மனது.அதனால் தான் அவன் யாரிடமும் ஒட்டி உறவாட மாட்டான்.பரிமளத்தின் மீது தனி பரியம் இருந்தாலும் அதை அவரிடம் காட்டிக் கொண்டது இல்லை.
ஆனால் இன்று மிருதுளா தன்னிடம் உரிமையாக நின்றது அவனை அவள் பால் இழுப்பதை போல் ஒரு மாயயை உருவாக்க கோபம் எழுந்துவிட்டது.அதன் விளைவு தான் அவன் அவளிடம் நடந்து கொண்டது.அவனும் அறிந்து தானே இருந்தான் அவள் தன்னிடம் இருக்கிறேன் என்று கூறுவதன் காரணத்தை.பெண்கள் பொதுவாக ஆண்களிடம் எதிர்பார்ப்பது பாதுகாப்பை தான்.அதை அவள் தன்னிடம் உணர்கிறாள் என்று புரிந்திருந்தது அவனிற்கு.அதனால் தான் இன்று அவளை பயமுறுத்தி வந்திருப்பது.ஆனால் அவளை அணைத்ததும் அவனின் நெஞ்சமும் தடதடத்து தான் போயிருந்தது.
“இல்ல….இல்ல….அவளை இனி என் பக்கத்துல இருக்க விடக் கூடாது…..முதல்ல வெளில அனுப்பிடனும்….”என்று தனக்குள் கூறிக் கொண்டவனின் கைகலும் நடுங்கி கொண்டிருந்தன.அந்த இரவு இருவருக்குமே தூங்கா இரவாகி போக,காலையில் பரிதி குடுசைக்கு வரும் போது அவள் இல்லை.சென்றுவிட்டாளா என்று அவள் பொதி இருந்த இடத்தை பார்க்க அது அப்படியே இருந்தது.
இரவு முழுவதும் தூக்கமில்லை மிருதுளாவிற்கு காலை பரிமளத்தின் குரல் கேட்கவும் எழுந்தவள் அவருடன் பூ விக்க வந்துவிட்டாள்.ஏதோ குடுசைக்குள் இருந்து மனதை குழப்பிக் கொள்வதைவிட வெளியில் இருப்பதே மேல் என்று நினைத்து வந்துவிட்டாள்.ஆனால் மனது முழுவதும் நேற்றைய நிகழ்விலேயே சுழன்று கொண்டிருந்தது.அவன் தன்னை சரியாக கணித்துவிட்டான் இனி அதை வைத்து தான் தன்னை வெளியில் துரத்த முயல்வான் என்று புரிந்தது மிருதுளாவிற்கு.ஆனால் அவனிடமிருந்து தப்பிக்கும் வழி தான் தெரியவில்லை.
“ஆங்….என்ன சொல்லுறீங்க நீங்க….”என்று அவரிடம் கேட்க,
“அட என்ன கண்ணு நீ அப்பப்ப எங்கோ போயிடுற….இந்தா போறான் பாரு….அந்த பய என்கிட்ட காசை வாங்கிட்டு என்ன கண்டாலே ஓடிக்கிட்டு இருக்கான்….அவனை தான் கூப்பிட்டு இருக்கேன்….”என்று கூற மிருதுளா அசடு வழிய,அவளை கண்டு கொண்டவரோ,
“ம்ம்ம்….நீ சரியில்லை….பய ஏதோ உன்னை பண்ணிட்டான்…”என்று கூற வேர்த்துவிட்டது மிருதுளாவிற்கு.அவளின் முக சிவப்பை கண்டவர்,
“நல்லா இருந்தா சரி தான்….இப்படியே அவனை பிடிச்சிடு….இல்ல பய ஓடிடுவான்….”என்று கூற மிருதுளாவின் முகம் யோசனையானது.
வீடு வரும் வரை மிருதுளாவின் முகம் யோசனையில் தான் இருந்தது.பரிமளம் அதனை கவனித்தாலும் எதுவும் கேட்கவில்லை.அவருக்குமே புரிந்தது மனகுழப்பத்தில் இருக்கிறாள் அவளே தெளிந்து வெளிவருவது தான் நல்லது என்று விட்டுவிட்டார்.அதோ இதோ என்று இரவு வந்துவிட மிருதுளாவிற்கு நெஞ்சில் நடுக்கம் பிறந்தது.கடவுளே காப்பாத்து என்று வேண்டியபடி இருந்தாள்.
பரிதி எப்போதும் போல் வந்தவன் அவளை கண்டு கொள்ளாமல் கட்டாந்தரையில் படுத்துவிட மிருதுளாவிற்கு ஒன்றும் புரியவில்லை.என்ன இவன் நேத்து அப்படி நடந்துகிட்டான் இன்னைக்கு அமைதியா இருக்கான் இவனை புரிஞ்சிக்கவே முடியலையே என்று தனக்குள் நினைத்து கொண்டே படுத்திருந்தவளுக்கு ஏதோ தோன்ற அருகில் படுத்திருந்தவனை பார்த்தால் அவனோ இவளையே விழுங்கும் பார்வை பார்த்து கொண்டிருந்தான்.
அவனது பார்வையை கண்டவளுக்கு உள்ளுக்குள் மீண்டும் நடுக்கம் பிறக்க படபடக்கும் இதயத்துடன் அவனிடம் இருந்து பார்வையை விலக்கி கொண்டாள்.ஆனால் அவனின் பார்வை அவளிடம் இருந்து மாறவில்லை அப்படியே இருக்க மிருதிளாவிற்கு தான் அவஸ்தையாகி போனது.தூங்கவும் முடியவில்லை எழுந்து அமரவும் பயமாக இருக்க,சற்று என்று அவளின் அருகே அவனின் மூச்சு காற்றை உணர்ந்தவள் உடல் அதிர்ந்து நகரும் முன் அவளை இடை வளைத்திருந்தது பரிதியின் கரங்கள்.
“அப்ப நீ போகமாட்ட….அப்படி தான…”என்று அவன் அவளின் காதருகில் ரகசியம் கேட்க,மிருதிளாவிற்கு பேச்சே எழவில்லை.மனதின் நடுக்கம் உடல் எங்கும் பரவிடஅவளின் கைகள் தன் போல் அவனின் கைகளை எடுக்க போராட அவனின் இரும்பை ஒத்த கரத்தை நகரத்த கூட முடியவில்லை அவளால்.
“நானே நினைச்சா தான் நீ விடுபட முடியும்…..”என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் கலங்கி இருந்தாலும் அதில் ஏதோ ஒன்றும் கூடவே இருந்தது.அவளின் போராட்டத்தை கைவிட்டவள்,
“நான் போகமாட்டேன்…..உங்காளல என்ன பண்ணமுடியுமோ பண்ணுங்க…..அதோட இந்த திருட்டு வேலையெல்லாம் விட்டுடுங்க…..அது தப்பு…..ரொம்ப தப்பு…..”என்று ஒருவாறு இன்று காலை முதல் அவனிடம் பேச மனப்பாடம் செய்து வைத்திருந்ததை கூறிவிட,மறுபுறம் எந்த பதிலும் இல்லை அதே சமயம் இடை வளைத்த அவனின் கரம் இடையை வளைத்தபடியே இருந்தது.கோபப்படுவான்,திட்டுவான் இல்லை அடிப்பான் என்று எல்லாம் எண்ணி இருந்தவள் அவனின் அமைதியில் அவனின் முகத்தை பார்க்க அவனோ அவளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.
“உன்னை இந்த வீட்டுக்குள்ளேயே நான் விடல என் வாழ்க்கைகுள்ள எப்படி விடுவேன்னு எதிர்பார்க்குற….”என்று அவளை இன்னும் தன்னுடன் நெருக்கியபடி கேட்க,அவனின் நெஞ்சில் இரு கைகளையும் வைத்து தடுத்தவரே,
“அப்….அப்புறம் எதுக்கு இப்படி நடந்துக்கிறீங்க……எனக்கு பிடிக்கலை….விடுங்க…..விடுங்க…..நீங்க செய்றது தப்பு சொன்னா உங்களுக்கு கோபம் வருதா…..திருடறது உங்களுக்கு அசிங்கமா இல்லை….”என்று அவள் அவனை விலக்கியபடியே கேட்க,அவளை முகவாயை பிடித்து ஆக்ரோஷமாக இழுத்து அவனின் முகத்தின் அருகே வைத்தவன்,
“இங்க பாரு நான் இப்படி தான்….இப்படி தான் இருப்பேன்…..உனக்கு இதெல்லாம் பிடிக்கலை இல்ல போயிடு…..அது தான் உனக்கு நல்லது….இல்லை….நீ பயந்தது எல்லாம் நடுக்கும்…..”என்று ரௌத்திரமாக கூறிவிட்டு அவளை உதறிவிட்டு நகர்ந்து படுத்துக் கொண்டான்.
“ஏன் இப்படி இருக்கீங்க…..என்னை எங்க ஊர்லேயே எப்படியோ போ விட்டுட்டு வந்திருக்கலாம்ல…..இப்படி கூட்டிட்டு வந்து இப்போ போ போனா நான் எங்க போக…..எனக்கு போக்கிடம் இல்லை….என்னால எங்கேயும் போக முடியாது…..அதே சமயம் உங்க கூட இப்ப….இப்ப…இப்படி எதிர்த்து நிக்கவும் முடியாது….”என்றுவிட்டு தேம்பி அழ,
“நான் இப்பவும் சொல்லுறேன் என்னை காப்பாதிக்க தான் நான் அப்படி செஞ்சேன்….அதுக்காக உன்கூட வாழ முடியாது….”என்றவன் சற்று நேரம் விட்டத்தை பார்த்து கொண்டே நீண்ட மூச்சை இழுத்துவிட்டு,
“எனக்கு நான் மட்டும் போதும்….வேற யாரும் வேண்டாம்….இந்த உறவு,நட்பு எல்லாம் பொய்…..எனக்கு நம்பிக்கையில்லை….அதனால தான் சொல்லுறேன் போயிடு……”என்றவன் இப்போது அவளை பார்த்து திரும்பி படுத்து,
“அப்புறம் என்னால ரொம்ப நல்லவனா எல்லாம் இருக்க முடியாது….நீ என் பக்கத்துல வந்தா என் உடம்பு தடுமாறுது…..அது எனக்கும் நல்லதுக்கு இல்ல….உனக்கும் நல்லதுக்கு இல்ல….”என்று கூறவிட்டு தன் தூக்கத்தை தொடர,மிருதுளாவோ தன் தூக்கத்தை இழந்து அவனையே பார்த்தபடி இருந்தவள் ஏதோ சொல்லவர,
“சும்மா உடைஞ்ச ரெக்கார்டு மாதிரி சொன்னதையே சொல்லாத….நான் இப்படி தான் இருப்பேன்…..நான் யாருக்காவும் என்னை மாத்திக்க மாட்டேன்….எனக்கு யாரும் வேண்டாம்….”என்று அழுத்தமாக கூறியவன் எழுந்து சென்றுவிட்டான்.
மிருதுளா தான் அவன் சென்ற திசையையே பார்த்தபடி இருந்தாள்.இவனை எவ்வாறு கையால்வது என்று அவளுக்கு புரியவில்லை.தனக்கு தானே ஒரு வேலி அமைத்து அதற்குள் இருப்பவனை எப்படி வெளி கொண்டு வருவது என்று தான் அவளின் சிந்தனை சென்றது.ஒரு நிமிடம் கூட அவனை விட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை.ஒருவேளை அவனிடம் அவள் உணர்ந்த பாதுகாப்பு வேறு எங்கும் இல்லை என்பதலா இல்லை தாலி கயிறு மேஜிக் என்பார்களே அதுவா என்று அவளுக்கே தெரியவில்லை.
இதோ மூன்று மாதங்கள் எப்படியோ முடிந்திருந்தது மிருதுளா பரிதியின் வாழ்வில் வந்து.காலை பரிமளத்துடன் பூ கட்டி அவருடன் சென்று விற்றுவிட்டு வருவார்கள்.அவள் செய்வதற்கு பரிமளம் சரியாக பணம் கொடுத்துவிடுவார்.தனக்கு தேவையானது அனைத்தும் தனது உழைப்பில் தான் வாங்குவாள் மிருதுளா.அவனும் அவள் என்ன செய்கிறாள் என்று எல்லாம் கேட்டதும் இல்லை.
மிருதுளா வந்தவுடன் வீட்டிற்கு தேவையான சில சாமான்களை வாங்கி உபயோகிக்க தொடங்கியிருந்தாள்.உணவு இருவருக்கும் சேர்த்து தான் செய்வாள் ஆனால் அவள் சமைத்ததை அவன் ஒருநாள் கூட தொட்டு பார்த்ததில்லை.முதல் முறை சமையல் செய்து அவனிற்கு பரிமாற வீட்டில் இருந்த அனைத்து சாமான்களும் உடைந்தது தான் மிச்சம்.ருத்ரதான்டவம் ஆடிவிட்டான் பரிதி.அதன் பிறகு அவனிற்கு பரிமாறுகிறேன் என்று விஷபரிட்சை அவள் செய்யவில்லை.ஏனோ அவளை அதன் பிறகு அவன் வெளியில் போ என்றும் கூறவில்லை.அதற்காக அவன் மாறிவிட்டான் என்று கூற முடியாது அவன் அவனது பாதை என்பதில் மாற்றமில்லை.மிருதுளாவும் அவனிடம் எவ்வளவோ முறை கூற முயற்சி செய்வாள் ஆனால் அது வெறும் முயற்சியாக மட்டுமே இருக்கும் அதற்கு மேல் அவனிடம் நெருங்க கூட முடியாது.
அன்று அவளிடம் நெருங்கியவன் அதன் பின் அவளை நெருங்க முயலவில்லை ஏனோ அவளை நெருங்கினால் தன் சுயம் இழந்து விடுவோமோ என்று நினைத்தானோ என்னவோ அதானல் நெருங்கவில்லை.ஆனால் அவளை சில நேரங்களில் வார்த்தைகளால் குதறிவிடுவான்.மிருதுளாவும் அவனுக்கு சளைத்தவள் இல்லை அவன் என்ன பேசினாலும் அமைதியாக கடந்துவிடுவாள் அதுவே அவனிற்கு அத்தனை கோபத்தை தரும்.
இவர்களின் சண்டையில் அடிக்கடி இடையில் மாட்டி முழிப்பது பரிமளமாக தான் இருப்பார்.மிருதுளாவிடம் சண்டையிட்டு வந்து அவரின் வீட்டு கதவை தான் உடைப்பான்.அவர் எவ்வளவு சத்தம் போட்டாலும் காதில் வாங்காமல் அன்று முழுவதும் அவரை தூங்க விடாமல் செய்துவிடுவான்.
“அய்யோ இந்த பய ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு வந்து என் பாவத்தை வாங்குறானே….”என்று அவர் புலம்ப,
“இந்தா நீ தான அவளுக்கு சொல்லி கொடுத்து என் கூட இருக்க வச்ச….அப்ப உன் உயிரை தான் எடுப்பேன்….மரியாதையா அவளை போக சொல்லு….”என்று அவன் அவரிடம் சண்டைக்கு நிற்க,மிருதுளாவோ இப்போது எல்லாம் இந்த நிகழ்வை ஏதோ சினிமா படம் பார்ப்பது போல தான் பார்ப்பாள்.இதோ இன்றும் அதே போல் ஒன்று தான் நடந்து கொண்டிருந்தது.
“நீ எதுல வேணா கதவு போடு….இந்தா இருக்காளே இவ இங்க இருக்குற வரை உன்னை சும்மா விடமாட்டேன்….அவளை போக சொல்லு….”என்று பழைய பல்லவியை படிக்க,
“அடேய்…உன் பொண்டாட்டி ஆச்சு நீ அச்சு ஏன்டா என்னை படுத்துற….ஏன்மா மிருது…இவனை கொஞ்சம் அடக்கி தான் வைய்யேன்…..முன்னாடி பேசாம கொன்னான் இப்ப பேசியே கொல்லுறான்….”என்று பரிமளம் அவர் பாட்டிற்கு புலம்ப பரிதியின் முகம் இறுக்கம் பெற்றது.அதை மிருதுளாவும் கண்டுவிட அவள் அவனை நெருங்கும் முன் அவன் அவ்விடத்தை விட்டு சென்றிருந்தான்.
பரிதியின் மாற்றத்தை மிருதுளா எப்போதோ கண்டு கொண்டாள் ஆனால் அதை பரிமளத்திடம் கூறவில்லை.ஆம் முன்பெல்லாம் வாய் திறக்காதவன் இப்போது அவளை திட்டுவதற்காகவே வாய் திறக்கிறான் அதுவே அவனிடம் ஏற்பட்ட பெரிய மாற்றம் அதை அவன் உணரவில்லை ஆனால் மிருதுளா உணர்ந்துவிட்டாள்.இதோ இன்று பரிமளம் அதை சாதாரணமாக கூறிவிட வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது.இனி அவனின் தாண்டவத்தை மிருதுளா எதிர்கொள்வாளா.