Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 30
Post Views:
1,489
உனக்குள்
என்
உயிரே
அத்தியாயம்
30
ரஞ்சனா
குழந்தைக்கு
முடியவில்லை
,
அதனால்
தான்
சஞ்சனா
வீட்டிற்கு
வரவில்லை
என்று
சொன்னதை
,
அவள்
அம்மா
வந்தனா
நம்பவில்லை
.
அவர்
சஞ்சனாவிடம்
தனிமையில்
, “
பாரு
நீ
யோசிக்காம
அறிவுகெட்ட
தனமா
பண்ற
விஷயம்
,
உங்க
அக்காவை
தான்
பாதிக்குது
.
அன்னைக்கு
வீட்டுக்கு
வந்த
அவங்க
மாமனார்
,
மாமியாரை
நீ
வாங்கன்னு
கேட்கலை
.
அதனால
தான்
இன்னைக்கு
அவங்க
உங்க
அக்காவை
அனுப்பலைன்னு
நான்
நினைக்கிறன்
.
உங்க
அக்கா
வரணும்னு
நினைச்சிருந்தா
,
குழந்தையை
அவ
மாமியார்கிட்ட
விட்டுட்டு
வந்திருக்கலாம்
.”
என்றார்
.
“
வரலைனா
போறா
…”
என்று
சஞ்சனா
அலட்சியமாகத்
தோளை
குலுக்கி
விட்டு
சென்றாள்
.
அவளுக்கு
அதனால்
ஏற்படப்
போகும்
பின்
விளைவுகளைப்
பற்றித்
தெரியவில்லை
.
சஞ்சனாவின்
பெற்றோர்
மறு
நாள்
ரஞ்சனா
வீட்டுக்கு
கிளம்ப
,
அவர்களுடன்
தினேஷின்
பெற்றோரும்
கிளம்பினார்கள்
.
அவர்கள்
கிராமத்து
மனிதர்கள்
அவர்களுக்கு
வீட்டில்
முடங்கிக்
கிடப்பது
பிடிக்கவில்லை
.
அதனால்
அவர்களும்
ரஞ்சனா
வீட்டை
பார்த்துவிட்டு
வருவோம்
என்று
நினைத்தனர்
.
அவர்கள்
தினேஷையும்
,
சஞ்சனாவையும்
கூட
அவர்களுடன்
அழைத்தனர்
.
ஆனால்
சஞ்சனா
தலை
வலிக்கிறது
என்று
சொன்னதால்
,
சரி
நீங்கள்
இருவரும்
வீட்டில்
இருங்கள்
என்று
சொல்லிவிட்டு
மற்றவர்கள்
சென்றனர்
.
அவர்கள்
வெளியே
சென்றதும்
தினேஷ்
சென்று
சஞ்சனாவை
அணைக்க
…
அவளும்
அவனை
அணைத்தாள்
.
மாலை
வரை
இருவரும்
தங்கள்
உலகில்
இருந்தனர்
.
“
தலை
வலிக்குதுன்னு
சொன்ன
,
ஆனா
உன்னைப்
பார்த்தா
அப்படித்
தெரியலையே
…
நாம
தனியா
இருக்கணும்னு
அப்படிச்
சொன்னியா
,
இல்லை
உனக்கு
உங்க
அக்கா
வீட்டுக்கு
போக
இஷ்டம்
இல்லையா
….”
தினேஷ்
சிரித்துக்
கொண்டே
கேட்க
….
சஞ்சனா
அதிர்ச்சி
அடைந்தாள்
.
ஆனால்
அதை
அவள்
முகத்தில்
காட்டாமல்
மறைத்தவள்
, “
இல்லை
,
இன்னொரு
நாள்
போலாமேன்னு
நினச்சேன்
.”
என்று
சொல்லி
சமாளிக்க
…”
சரி
,
இன்னொரு
நாள்
போகலாம்
.”
என்று
சொல்லிவிட்டுத்
தினேஷ்
குளியல்
அறைக்குச்
சென்றான்
.
தினேஷின்
பெற்றோருக்கு
ரஞ்சனா
வீட்டினரை
மிகவும்
பிடித்து
விட்டது
.
ரஞ்சனா
வீட்டில்
அவர்கள்
அனைவரையும்
நன்றாகக்
கவனித்தனர்
.
அதோடு
விருந்து
சாப்பாடும்
செய்து
அசத்தினர்
.
கிளம்பு
போது
சஞ்சனாவையும்
,
தினேஷையும்
பார்த்துக்கோங்க
அவங்களுக்கு
நீங்கதான்
பக்கத்தில
இருக்கீங்க
என்று
இருவரின்
பெற்றோரும்
சொல்ல
…
“
நாங்க
பார்த்துக்கிறோம்
,
நீங்க
கவலைப்படாம
ஊருக்கு
போங்க
.”
என்று
சொல்லி
வித்யா
அவர்களை
அனுப்பி
வைத்தார்
.
அர்ஜுனும்
,
சூர்யாவும்
வேலைக்குச்
செல்ல
ஆராம்பித்து
இருந்தனர்
.
மீரா
இரு
வாரத்திற்கு
ஒரு
முறை
சென்னை
வந்து
இரண்டு
நாட்கள்
தங்கி
விட்டு
சென்றாள்
.
அவளுக்குப்
பெங்களூர்
இப்போது
ஓரளவு
பழகிவிட்டது
.
அர்ஜுன்
அருகில்
இல்லை
என்று
குறை
தவிர
வேறொரு
கஷ்டமும்
இல்லை
.
ஆரு
தன்
வீட்டினரிடம்
எப்படியாவது
தான்
சூர்யாவை
விரும்புவதைச்
சொல்லிவிட
வேண்டும்
என்று
நினைத்தாள்
.
ஆனால்
அவளுக்குச்
சொல்ல
தான்
தைரியம்
வரவில்லை
.
ஆதியிடமாவது
சொல்லிவிட
வேண்டும்
என்று
செல்பவள்
,
சிறிது
நேரம்
கழித்துச்
சொல்லாமலே
வருவாள்
.
அவளின்
தவிப்பை
ஆதி
,
அர்ஜுன்
இருவருமே
கவனித்துக்
கொண்டு
தான்
இருந்தனர்
.
அவள்
என்ன
தான்
செய்கிறாள்
பார்ப்போம்
என்று
அமைதியாக
இருந்தனர்
.
ஆரு
சூர்யாவிடமும்
சரியாகப்
பேசுவதில்லை
.
சூர்யா
இப்போது
தான்
புதிதாக
வேலைக்குச்
சேர்ந்திருப்பதால்
…
அவன்
கவனம்
வேலையில்
தான்
இருந்தது
.
அதனால்
அவன்
ஆரு
சரியாகப்
பேசாததைப்
பற்றிப்
பெரிதாக
நினைக்கவில்லை
.
அந்த
வாரம்
ஞாயிற்றுக்
கிழமை
மதுரையில்
இருந்து
வந்து
இறங்கிய
பெரியம்மாவை
அழைக்க
…
அர்ஜுன்
ரயில்வே
ஸ்டேஷன்
சென்று
இருந்தான்
.
ஸ்டேஷன்னில்
இருந்த
கடையில்
,
இரண்டு
காபி
வாங்கிக்
கொண்டு
இருவரும்
அங்கிருந்த
பெஞ்சில்
சென்று
அமர்ந்தனர்
.
அர்ஜுன்
காபியை
குடித்துக்
கொண்டே
தன்
பெரியம்மாவிடம்
எந்த
மாதிரி
பேச்சை
ஆரம்பிக்க
வேண்டும்
என்று
சொல்லி
கொடுக்க
…
பெரியம்மாவும்
பத்தாம்
வகுப்பு
மாணவி
போல்
அவன்
சொன்னதுக்கு
எல்லாம்
தலையைத்
தலையை
ஆட்டினார்
.
“
பெரியம்மா
சொதப்பிட
மாட்டீங்களே
…”
“
மாட்டேன்னு
தான்
நினைக்கிறன்
.
ஆனாலும்
கொஞ்சம்
பயமா
இருக்கு
.
சின்னப்
பசங்க
பேச்சை
கேட்டு
எதுவும்
தப்பு
நடந்திட
கூடாது
.
கல்யாணம்
ஒன்னும்
விளையாட்டு
இல்லை
அர்ஜுன்
.”
“
அந்தக்
கவலை
உங்களுக்கு
வேண்டாம்
.
சூர்யா
ரொம்ப
நல்லவன்
,
அவன்
என்
தங்கைய
நல்லா
பார்த்துப்பான்
.”
அர்ஜுன்
உறுதியாகச்
சொல்ல
…
பெரியம்மா
ஆமாம்
என்று
தலை
அசைத்தார்
.
இருவரும்
எழுந்து
வீடு
நோக்கி
சென்றனர்
.
வித்யா
இரண்டு
நாட்கள்
கழித்து
,
அவரே
தன்
சகோதிரியிடம்
ஆரு
திருமணத்தைப்
பற்றிப்
பேச்செடுத்தார்
.
“
அக்கா
…
ஆருவுக்கும்
இந்த
வருஷம்
கல்யாணம்
பண்ணிடலாம்னு
இருக்கோம்
.”
வித்யா
எப்போது
இந்தப்
பேச்சை
எடுப்பார்
என்று
காத்திருந்த
காயத்ரி
, “
இப்பவெல்லாம்
தெரியாத
இடத்தில
சம்பந்தம்
பண்ணவே
பயமா
இருக்கு
.
அதுவும்
பொண்ண
வெளிய
குடுக்கனும்னா
ரொம்பப்
பார்த்து
,
நல்லா
விசாரிச்சு
தான்
குடுக்கணும்
.”
என்றார்
.
“
ஆமாம்
,
அது
என்னவோ
உண்மை
தான்
.”
என்று
வித்யாவும்
ஒத்துகொண்டார்
.
“
எனக்குத்
தெரிஞ்ச
ஒரு
இடத்தில
மணமேடை
வரை
வந்து
கல்யாணம்
நின்னுடுச்சு
.
அப்புறம்
இன்னொரு
இடத்தில
வெளிநாட்டு
மாப்பிள்ளைன்னு
கட்டி
கொடுத்தாங்க
,
அவன்
என்ன
பண்ணான்
தெரியுமா
?
ஏற்கனவே
அங்க
ஒரு
பொண்ண
கல்யாணம்
பண்ணி
இருக்கான்
.
அவன்
வீட்ல
இது
தெரியாம
,
இந்தியா
வந்தவனுக்கு
இவங்க
ஒரு
கல்யாணம்
பண்ணி
வைக்க
,
இப்ப
பெரிய
தகறாரு
ஆகி
கோர்ட்க்கும்
,
வீட்டுக்கும்
அலையறாங்க
.
அப்புறம்
எனக்குத்
தெரிஞ்ச
ஒரு
பொண்ணு
கல்யாணம்
பண்ணி
போன
ஒரே
மாசத்தில
வீட்டுக்கு
வந்துடுச்சு
.
ஏன்
வந்தேன்னு
கேட்டா
?
சொல்லவே
மாட்டேங்குது
.”
என்று
பெரியம்மா
அடித்து
விட
….
“
என்னக்கா
இப்படிக்
குண்டை
தூக்கி
போடுற
.
எனக்கு
இப்பவே
வயத்த
கலக்குது
.
ஆருவுக்கு
ஒரு
நல்ல
இடம்
அமையணுமேன்னு
நானே
பயந்திட்டு
இருக்கேன்
.”
என்றார்
வித்யா
கவலையாக
…
“
நான்
உண்மைய
தான்
சொல்றேன்
வித்யா
.
நாட்ல
இப்ப
இப்படித்
தான்
நிறைய
நடக்குது
.
நீ
ஆருவை
எதுக்கும்
தெரிஞ்ச
இடத்தில
செய்யறதே
நல்லது
.
தெரியாத
இடத்தில
பொண்ண
கொடுக்கிறது
ரொம்ப
ரிஸ்க்
.”
காயத்ரி
சொன்னதைக்
கேட்ட
வித்யா
யோசித்தார்
.
அவர்
யோசிக்கட்டும்
என்று
நினைத்த
காயத்ரி
அங்கிருந்து
எழுந்து
சென்றார்
.
ஆரு
தன்
அம்மாவும்
,
பெரியம்மாவும்
தன்
கல்யாணத்தைப்
பற்றிப்
பேசுவதைக்
கேட்டவள்
,
இதற்கு
மேலும்
தாமதித்தால்
நல்லது
இல்லை
எனபதை
உணர்ந்து
வேகமாகத்
தன்
அறைக்குச்
சென்று
மீராவை
அழைத்தாள்
.
“
மீரா
,
எங்க
வீட்ல
எனக்கு
மாப்பிள்ளை
பார்கிறாங்க
.”
என்று
ஆரம்பித்து
வீட்டில்
நடந்த
அத்தனையும்
சொன்னவள்
, “
மீரா
எனக்கு
வீட்ல
சொல்ல
தைரியம்
இல்லை
.
நீ
தான்
அர்ஜுன்கிட்ட
சொல்லி
எதாவது
பண்ண
சொல்லணும்
.
அவன்
என்
மேல
கோபமா
இருக்கான்
.
அவன்
நினைச்சா
என்னையும்
,
சூர்யாவையும்
சேர்த்து
வைக்க
முடியும்
.
ப்ளீஸ்
தயவு
செஞ்சு
எனக்கு
உதவி
பண்ண
சொல்லு
மீரா
,
நீ
சொன்னா
கண்டிப்பா
செய்வான்
.”
“
நான்
அர்ஜுன்கிட்ட
சொல்லலைனாலும்
அவங்க
கண்டிப்பா
எதாவது
பண்ணுவாங்க
ஆரு
.
கவலைபடாதே
அவங்க
எதாவது
முயற்சி
பண்ணிட்டு
தான்
இருப்பாங்க
.
அவங்க
நீ
லவ்
பண்றேன்னு
தெரிஞ்ச
போதே
இப்படித்
தான்
ஆகும்னு
சொன்னங்க
,
நீயும்
அவங்க
எதிர்பார்த்த
மாதிரி
தான்
நடந்து
இருக்க
.”
“
நான்
எல்லாம்
லவ்
பண்ணி
இருக்கவே
கூடாது
.
சூர்யாவுக்குத்
தெரிஞ்சா
ரொம்ப
வருத்தபடுவாங்க
.”
என்ற
ஆரு
அழுதாள்
.
“
விடு
ஆரு
,
நீ
எப்பவும்
உன்
குடும்பத்தைச்
சார்ந்தே
இருப்ப
,
அப்படி
இருக்கும்
போது
சட்டுன்னு
அவங்களுக்கு
எதிரா
நடந்துக்க
வராது
தான்
.
உன்னை
அர்ஜுன்
கண்டிப்பா
விட்டு
குடுக்க
மாட்டாங்க
,
அதனால
சூர்யாவுக்கு
நீ
அப்படிச்
சொன்னது
தெரியாது
.”
“
இருந்தாலும்
எனக்கே
மனசாட்சின்னு
ஒன்னு
இருக்கே
,
அது
என்னை
நிம்மதியா
இருக்கவிடாது
.
ஆமாம்
அர்ஜுன்
எதுவும்
உன்கிட்ட
இதைப்
பத்தி
சொல்லலையா
?”
“
இல்லை
சொல்லலை
…”
“
உன்கிட்ட
சொல்லாம
இருந்தது
,
உனக்குக்
கோபம்
வரலை
.”
“
ஏன்
வரணும்
?
அர்ஜுன்
அவங்களைப்
பத்தியா
மறைச்சாங்க
,
இல்லையே
….
அவங்களுக்கு
என்கிட்டே
எதைச்
சொல்லணுமோ
அதைக்
கண்டிப்பா
சொல்வாங்க
.
உன்னை
அவங்க
என்கிட்டே
கூட
விட்டுக்குடுக்க
மாட்டங்க
ஆரு
.”
என்றாள்
மீரா
தெளிவாக
.
“
இப்ப
நான்
என்ன
பண்ணட்டும்
மீரா
?”
“
இரு
நான்
எதுக்கும்
அர்ஜுன்கிட்ட
பேசிட்டு
உனக்குப்
போன்
பண்றேன்
.”
என்று
சொல்லிவிட்டு
வைத்த
மீரா
அர்ஜுனை
அழைத்தாள்
.
“
என்னடி
பொண்டாட்டி
ஆபீஸ்
நேரத்தில
போன்
பண்ணி
இருக்க
,
என்னைப்
பார்க்கம
இருக்க
முடியலையா
…”
“
ஆமாம்னு
சொன்னா
என்ன
பண்ணுவீங்க
,
உடனே
இங்க
வந்துடுவீங்களா
…”
“
வர்றதை
பத்தி
ஒன்னும்
இல்லை
,
அம்மாகிட்ட
நான்
மீராவை
லவ்
பண்றேன்
கல்யாணம்
பண்ணி
வைங்கன்னு
சொல்றதுக்குப்
பதிலா
…
அம்மா
உங்களுக்குப்
பேரன்
வரப்போறான்
,
அதனால
எங்களுக்குச்
சீக்கிரம்
கல்யாணம்
பண்ணி
வைங்கன்னு
சொல்ற
நிலைமை
வந்துட்டா
…..”
அர்ஜுன்
சொன்னது
முதலில்
மீராவுக்குப்
புரியவில்லை
,
அவன்
சொன்னதைத்
திரும்ப
மனதிற்குள்
சொல்லி
பார்த்ததும்
,
அவள்
முகம்
சிவந்தது
.
அவள்
அமைதியாக
இருந்தாள்
.
“
என்ன
மேடம்
சத்தத்தைக்
காணோம்
,
நான்
பெங்களூர்
வரட்டுமா
…”
அர்ஜுன்
மீராவை
வம்பு
இழுக்க
….
“
உதை
வாங்க
போறீங்க
,
பேச்சை
பாரு
…
நீங்க
ஒன்னும்
இங்க
வந்திட
வேண்டாம்
.”
என்றாள்
மீரா
.
“
நிஜமா
தான்
சொல்றியா
…
சரி
விடு
நம்ம
அதிர்ஷ்டம்
அவ்வளவு
தான்
.
ஆமாம்
எதுக்குப்
போன்
பண்ண
?”
“
ஆரு
விஷயம்
என்ன
ஆச்சு
?
வீட்ல
பேசலையா
….”
மீரா
கேட்க
….
“
பெரியம்மாவை
ஊர்ல
இருந்து
வர
வச்சிருக்கேன்
,
அவங்க
சூர்யாவுக்குச்
சொந்தம்
தான
,
அதனால
அவங்க
மூலமா
அரேஞ்
மேரேஜ்
மாதிரி
கொண்டு
வர
போறேன்
.
இதனால
அம்மா
மனசு
கஷ்டபடாது
இல்ல
…
நாமளும்
லவ்
மேரேஜ்
,
ஆருவும்
லவ்
மேரேஜ்னா
அம்மா
ரொம்பப்
பீல்
பண்ணுவாங்க
,
அதனால
தான்
.”
என்றான்
.
மீராவுக்கு
அவனின்
நிலை
புரிந்தது
, “
சரி
…
சூர்யா
அண்ணன்கிட்ட
பேசுங்க
,
நைட்
கூப்பிடுறேன்
, bye.”
என்று
போன்னை
வைத்தவள்
,
ஆருவை
அழைத்து
….
அவளிடம்
விஷயத்தைச்
சொல்லி
, “
தைரியமா
இரு
,
அர்ஜுன்
பார்த்துப்பாங்க
.”
என்றாள்
.
மேலும்
இரண்டு
நாட்கள்
சென்ற
பிறகு
…
வித்யா
காயத்திரியிடம்
“
எனக்கும்
நீ
சொல்றாது
சரின்னு
தான்
தோணுது
கா
,
நானும்
இவர்கிட்ட
நீ
சொன்ன
மாதிரியே
தெரிஞ்ச
இடத்தில
எதாவது
மாப்பிள்ளை
இருக்கான்னு
பார்க்க
சொல்லி
இருக்கேன்
.
நீயும்
உனக்குத்
தெரிஞ்ச
இடத்தில
மாப்பிள்ளை
இருந்தா
சொல்லு
.”
என்றார்
.
“
என்
வீட்டுகாருக்கு
தூரத்துச்
சொந்தம்
தங்கச்சி
முறை
,
இங்க
சென்னையில
தான்
இருக்காங்க
.
அவங்களை
நான்
ஆதி
வரவேற்புல
பார்த்தேன்
.
அவங்க
பையன்
கூட
நம்ம
அர்ஜுன்
ஃப்ரண்ட்
தான்
,
அவன்
பேரு
ஆர்யாவோ
,
சூர்யாவோ
…”
காயத்திரி
தெரியாதது
போல்
இழுக்க
….
“
சூர்யா
தான்
அவன்
பேரு
.
அவங்க
நமக்குச்
சொந்தமா
?
இது
எனக்கு
இப்ப
நீ
சொல்லி
தான்
தெரியும்
.”
வித்யா
சொல்ல
…
“
அவங்க
குடும்பம்
நல்ல
குடும்பம்னா
,
நீ
அங்கயே
ஆருவை
செய்யலாமே
…”
என்றார்
காயத்திரி
.
“
குடும்பம்
நல்ல
குடும்பம்
தான்
,
பையனும்
ஆருவுக்குப்
பொருத்தமா
இருப்பான்
.
ஆனா
அவனுக்கும்
அர்ஜுன்
வயசு
தான்
இருக்கும்
.
அவங்க
வீட்ல
இவ்வளவு
சீக்கிரம்
கல்யாணம்
பண்ணுவாங்களான்னு
தெரியலையே
…”
வித்யா
யோசிக்க
…
“
அர்ஜுன்
வயசுனா
இப்ப
இருப்பத்தஞ்சு
வயசு
நடக்குமே
,
இன்னும்
ஆறு
மாசம்
கழிச்சு
வேணா
கல்யாணம்
வச்சுப்போம்
.”
காயத்ரி
யோசனை
சொல்ல
….
வித்யா
சரி
பார்ப்போம்
என்றார்
.
அன்று
இரவு
எல்லோரும்
சேர்ந்து
சாப்பிடும்
போது
,
வித்யா
தன்
அக்கா
சொன்னதைச்
சொல்லி
, “
ஆருவுக்கு
வேணா
சூர்யாவை
பார்ப்போமா
?”
என்றவர்
,
அர்ஜுனிடம்
“
நீ
என்ன
டா
சொல்ற
?
உன்னோட
ஃப்ரண்ட்
தான
சூர்யா
….
அவனுக்கு
நம்ம
ஆருவை
கல்யாணம்
செய்யலாமா
சொல்லு
.”
என்று
கேட்டார்
.
ஆருவுக்குத்
தன்
அம்மா
சொன்னதைக்
கேட்டதும்
முகம்
நொடியில்
தாமரையாக
மலர்ந்தது
.
அர்ஜுன்
அவளை
ஓரக்கண்ணில்
பார்த்துக்
கொண்டே
உடனே
பதில்
சொல்லாமல்
யோசிக்க
…
ஆரு
அவனையே
தவிப்பாகப்
பார்த்துக்
கொண்டிருந்தாள்
.
“
என்ன
டா
இவ்வளவு
யோசிக்கிற
?
அந்தப்
பையன்
வேண்டாமா
…”
வித்யா
கேட்க
…
ஆருவின்
முகம்
வாடிவிட்டது
.
அவளுக்கு
எதையாவது
தூக்கி
அர்ஜுனின்
மண்டையில்
போட்டு
விடலாமா
என்று
நினைக்கும்
அளவிற்கு
ஆத்திரம்
.
கணேசனும்
,
ஆதியும்
அங்கே
நடப்பதை
சுவாரசியமாகப்
பார்த்து
கொண்டிருந்தனர்
.
“
இருங்க
அம்மா
,
யோசிக்க
விடுங்க
.
தங்கச்சியா
….
நட்பான்னு
யோசிக்கிறேன்
.
தங்கச்சிக்காக
நட்புக்குத்
துரோகம்
செய்ய
முடியாது
இல்ல
…
சூர்யா
நல்லவன்
,
திறமையானவன்
,
ரொம்பச்
சாது
….
பாவம்
அவன்
தலையில
இவள
கட்ட
பார்கறீங்களே
…
அது
தான்
என்ன
பண்றது
?”
என்று
அர்ஜுன்
தலையில்
தட்டி
யோசிப்பது
போல்
நடிக்க
…
அவன்
சொன்னதைக்
கேட்ட
வித்யா
சிரித்துக்
கொண்டே
அர்ஜுனின்
தலையில்
கொட்டி
, “
வாலு
…
எல்லாத்திலையும்
விளையாட்டு
தான்
.”
என்றவர்
,
மற்றவர்களைப்
பார்த்து
,
அப்ப
சூர்யாவையே
ஆருவுக்குப்
பார்க்கலாமா
என்று
கேட்க
…
எல்லோரும்
சந்தோஷமாகச்
சரி
என்றனர்
.
ஆருவிற்கு
நம்பவே
முடியவில்லை
.
நடப்பதெல்லாம்
கனவு
போல்
இருந்தது
.
அன்று
இரவு
எல்லோரும்
சென்று
படுத்ததும்
அர்ஜுனின்
அறைக்கு
வந்தவள்
, “
அர்ஜுன்
ரொம்பத்
தேங்க்ஸ்
,
நீ
எனக்கு
ஹெல்ப்
செய்ய
மாட்டேன்னு
நினைச்சேன்
.
நீ
மட்டும்
இல்லைனா
,
என்னுடைய
நிலைமை
…”
என்று
சொல்லி
அவள்
அழ
….
அர்ஜுன்
அவள்
கண்ணீரை
துடைத்து
, “
ஷு
….
முதல்ல
இப்படி
எதுக்கெடுத்தாலும்
அழுகிறதை
நிறுத்து
.
சூர்யாங்கிறதுனால
ஈஸியா
முடிஞ்சது
,
இல்லைனா
கஷ்டம்
தான்
.”
என்றவன்
, “
ஐஷு
உன்னையே
பார்கிறா
பாரு
.”
என்று
சொல்ல
…
ஆரு
அங்குக்
கட்டிலில்
அமர்ந்து
அவர்களையே
பார்த்துக்
கொண்டிருந்த
ஐஷுவை
தூக்கி
கொஞ்ச
…
அது
அழகாகச்
சிரித்தது
.
ஆரு
அவள்
அறைக்குச்
சென்றதும்
,
அர்ஜுன்
கட்டிலில்
படுத்து
…
ஐஷுவை
தூக்கி
தன்
வயிற்றில்
உட்கார
வைத்தவன்
,
உங்க
சித்திகிட்ட
பேசுவோமாடா
செல்லம்
என்று
சொல்லிக்கொண்டே
மீராவை
அழைத்தான்
.
மறுநாள்
அலுவலக
இடைவேளையில்
சூர்யாவை
சந்தித்த
அர்ஜுன்
, “
லவ்
மட்டும்
பண்ற
,
கல்யாணத்துக்கு
ஒரு
முயற்சியும்
செய்ற
வழிய
காணோம்
.”
என்று
கேட்க
….
“
இப்ப
என்ன
டா
அவசரம்
?
இப்ப
தான
வேலையில
சேர்ந்திருக்கேன்
,
இன்னும்
ரெண்டு
வருஷம்
போகட்டும்
.”
சூர்யா
லகுவாகச்
சொல்ல
….
“
அப்படியா
சரி
,
ஆருவுக்கு
எங்க
வீட்ல
மாப்பிள்ளை
பார்கிறாங்க
.
நீ
பொறுமையா
ரெண்டு
வருஷம்
கழிச்சு
வா
…
அநேகமா
அவளுக்குக்
குழந்தை
இருக்கும்
.”
என்றான்
அர்ஜுன்
நக்கலாக
.
“
என்ன
டா
சொல்ற
?
ஆருவுக்கு
மாப்பிள்ளை
பார்கிறங்களா
…”
என்று
சூர்யா
அலற
…
அர்ஜுன்
“
ஆமாம்
”
என்றான்
.
“
டேய்
,
இப்ப
என்ன
டா
பண்றது
?
நான்
எங்க
வீட்ல
சொல்லி
,
உங்க
வீட்ல
வந்து
பேச
சொல்லவா
…”
சூர்யா
கேட்க
….
ஹப்பா
…
இவனாவது
தைரியமா
இருக்கானே
என்று
நினைத்த
அர்ஜுன்
, “
எங்க
வீட்ல
ஆரு
கல்யாணம்
பேச்சை
ஆரம்பிச்சதும்
,
நான்
எங்க
பெரியம்மா
மூலமா
…
உன்னை
ஆருவுக்குப்
பார்க்கலாம்னு
சொல்ல
சொன்னேன்
.
அதுக்கு
எங்க
வீட்லயும்
சரின்னு
சொல்லிட்டாங்க
.
அதனால
நீ
உங்க
வீட்ல
மட்டும்
பார்த்துக்க
.
அப்புறம்
ஒரு
விஷயம்
மறந்திடாத
,
எங்க
வீட்ல
உங்க
லவ்
மேட்டர்
தெரியாது
…
இது
அரேஞ்ட்
மேரேஜ்
தான்
.”
என்றான்
.
சூர்யா
அர்ஜுனின்
கையைப்
பிடித்துக்
கொண்டு
, “
மச்சான்
,
எங்களுக்காக
நீ
எவ்வளவு
வேலை
பார்த்திருக்க
…
ரொம்பத்
தேங்க்ஸ்
டா
…
ஆமாம்
ஆரு
ஏன்
மாப்பிள்ளை
பார்க்கிற
விஷயத்தை
என்னிடம்
சொல்லலை
…”
என்றான்
யோசனையாக
…
“
மாப்பிள்ளை
பார்த்ததும்
தான்
அவகிட்ட
சொல்லலாம்னு
இருந்தாங்க
.
அவளுக்கு
நேத்து
தான்
தெரியும்
.”
என்று
சொல்லி
அர்ஜுன்
சமாளிக்க
…
சூர்யாவும்
அதை
நம்பி
விட்டான்
.
Advertising
Advertising