Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 31
Post Views:
1,293
உனக்குள்
என்
உயிரே
அத்தியாயம்
31
சூர்யா
அவனுடைய
அக்கா
மதுவிற்கு
அழைத்துத்
தான்
ஆருவை
காதலிப்பதாகச்
சொல்ல
… “
நான்
இதை
எதிர்
பார்த்தேன்
.
நீ
ஆஸ்திரேலியால
இருந்து
தான்
யாரையாவது
தள்ளிட்டு
வருவேன்னு
நினைச்சேன்
.
பரவாயில்லை
நம்ம
ஊரு
பொண்ணு
தான்
.
அதுவும்
ஆராதனாவை
எனக்கு
ரொம்பப்
பிடிக்கும்
.”
என்றாள்
.
“
மது
,
நீ
தான்
அம்மா
அப்பாகிட்ட
எப்படியாவது
பேசி
சம்மதம்
வாங்கணும்
.
ஆருவோட
பெரியம்மா
நமக்குச்
சொந்தம்
தான்
.
ஆரு
வீட்ல
அர்ஜுன்
தவிர
மத்தவங்களுக்கு
,
நாங்க
லவ்
பண்றது
தெரியாது
.
அதனால
அரேஞ்
மேரேஜ்
மாதிரி
தான்
கொண்டு
போகணும்
.
நீ
இதையும்
அம்மா
அப்பாக்கிட்ட
சொல்லிடு
.”
“
நீ
கவலைப்படாதே
சூர்யா
,
நான்
இன்னைக்கு
நம்ம
வீட்ல
பேசுறேன்
.
மறுக்கக்
காரணம்
எதுவும்
பெரிசா
இல்லை
…
அதனால
ஒதுக்குவாங்கன்னு
தான்
நினைக்கிறேன்
.”
மது
சொல்ல
…
சூர்யாவும்
தன்
பெற்றோர்
தங்கள்
காதலை
ஏற்றுக்
கொள்ள
வேண்டும்
என்று
கடவுளை
ப்ராதித்தான்
.
மதுவும்
சொன்னது
போல்
அன்றே
தன்
பெற்றோரிடம்
சூர்யா
ஆருவை
விரும்புவதைச்
சொன்னாள்
.
சூர்யாவின்
அம்மா
அவனைப்
பார்த்து
, “
நீயே
உனக்குப்
பொண்ணு
பார்த்துக்கிற
அளவு
வளர்ந்திட்ட
,
நாங்கெல்லாம்
உனக்குத்
தேவை
இல்லை
…”
என்றார்
வருத்தமாக
….
“
அம்மா
ப்ளீஸ்
…
நான்
பிளான்
பண்ணி
லவ்
மேரேஜ்
தான்
பண்ணிக்கணும்னு
நினைக்கலை
.
எனக்கு
ஆராதனாவை
பிடிச்சிருக்கு
.
அவ
எனக்கு
மனைவியா
வரணும்னு
ஆசை
.
ஆனால்
உங்களுக்கு
விருப்பம்
இல்லைனா
வேண்டாம்
,
இதோட
விட்டுடுங்க
.
ஆனா
…
என்னை
வேறு
யாரையும்
கல்யாணம்
பண்ணிக்கச்
சொல்லி
வற்புறுத்த
கூடாது
.”
சூர்யா
உறுதியாகச்
சொல்ல
…
“
இதை
ஒன்னு
சொல்லி
நல்லா
பயமுறுத்துங்க
டா
…
உங்களுக்குக்
காலேஜ்ல
இதெல்லாம்
தான்
சொல்லி
தராங்களா
…
பெத்தவங்களை
எப்படிக்
கார்னர்
பண்றதுன்னு
…”
அவன்
அம்மா
கேட்க
…
சூர்யா
இதற்கு
மேல்
என்ன
சொல்வது
என்று
தெரியாமல்
அவரைப்
பரிதாபமாகப்
பார்த்தான்
.
“
போதும்
அவனைப்
போட்டு
ஏன்
படுத்துற
?
நல்ல
பொண்ணா
தான
பார்த்திருக்கான்
.
உனக்குப்
பொண்ணு
தேடுற
வேலை
மிச்சம்
.
இந்தக்
காலத்தில
பொண்ணு
கிடைக்கிறதே
கஷ்டமா
இருக்கு
,
அவன்
உனக்கு
நோகாம
ஒரு
நல்ல
பொண்ணா
பார்த்திருக்கான்
.
சரின்னு
சொல்லிட்டு
போவியா
…
அதை
விட்டுட்டு
உன்னோட
கெத்த
காட்ற
நேரமா
இது
…”
சூர்யாவின்
அப்பா
கேட்க
….
சூர்யாவின்
அம்மா
, “
நீங்களும்
அவனோட
சேர்ந்துடிங்களா
…
இனி
உருப்பட்ட
மாதிரி
தான்
.”
என்று
அலுத்துக்
கொண்டார்
.
சூர்யா
சென்று
அவன்
அம்மாவின்
அருகே
அமர்ந்தவன்
“
அம்மா
உங்களுக்கு
நிஜமா
ஆராதனாவை
பிடிக்கலையா
,
அவ
ரொம்ப
நல்ல
பொண்ணுமா
…”
என்றான்
தவிப்பாக
.
மகனின்
தவிப்பை
உணர்ந்த
அவன்
அம்மா
, “
தன்னோட
பையனுக்குத்
தான்
பெண்
பார்த்துக்
கல்யாணம்
பண்ணி
வைக்கணும்னு
…
எல்லா
அம்மாவுக்கும்
ஆசை
இருக்கும்
.
அதனால
நான்
அப்படிப்
பேசினேன்
.
எனக்கு
ஆராதனாவை
பிடிச்சிருக்கு
கவலைபடாதே
.”
என்றவர்
, “
நாம
அவங்க
வீட்ல
எப்படிப்
பேசுறது
?”
என்று
கேட்க
….
சூர்யாவின்
முகம்
மலர்ந்தது
.
“
ரொம்பத்
தேங்க்ஸ்
மா
.”
என்றவன்
தொடர்ந்து
, “
அர்ஜுன்
இன்னைக்குச்
சாயங்காலம்
அவங்க
பெரியம்மாவோட
நம்ம
வீட்டுக்கு
வரேன்னு
சொல்லி
இருக்கான்
.
அவங்க
வந்ததும்
எப்படின்னு
பேசி
முடிவு
பண்ணிக்கலாம்
.”
என்றான்
.
சூர்யா
சொன்னது
போலவே
அர்ஜுன்
மாலை
நான்கு
மணிக்கு
தன்
பெரியம்மாவை
அழைத்துக்
கொண்டு
அவர்கள்
வீட்டுக்கு
வந்தான்
.
டிபன்
காபி
சாப்பிட்டதும்
காயத்ரியே
பேச்சை
ஆரம்பித்தார்
.
“
உங்களுக்கு
விஷயம்
தெரிஞ்சிருக்கும்
,
பசங்க
ஆசை
படறாங்க
,
அதுவும்
நாம
ஒருத்தருக்கு
ஒருத்தர்
சொந்தம்
வேற
…
எனக்கு
உங்க
பையன்னு
தெரிஞ்சதும்
ரொம்பச்
சந்தோஷம்
,
அது
தான்
நானே
நேர்ல
வந்தேன்
.”
“
எங்களுக்கும்
உங்க
குடும்பம்னு
தெரிஞ்சதும்
சந்தோஷம்
தான்
,
இருந்தாலும்
பொண்ணு
வீட்ல
இவங்க
காதல்
தெரியாது
போலிருக்கே
…”
என்று
சூர்யாவின்
அப்பா
இழுக்க
…
“
ஆதி
வரவேற்புல
உங்க
பையன்
தான்
சூர்யான்னு
தெரிஞ்சதும்
,
ஆருவுக்குச்
சூர்யாவை
கல்யாணம்
செஞ்சா
நல்லா
இருக்குமேன்னு
நான்
அப்பவே
நினைச்சேன்
.
அதனால
நாம
இதைக்
காதல்
கல்யாணமா
பார்க்காம
,
நாம
பார்த்து
செஞ்சு
வைக்கிற
கல்யானமாவே
நினைச்சுப்போம்
.”
“
என்னோட
தங்கை
வீட்ல
என்
பேச்சை
தட்டமாட்டங்க
.
நான்
சூர்யாவுக்கு
ஆருவை
செய்யலாம்னு
சொன்னதும்
.
அவங்களுக்கு
ரொம்பச்
சந்தோசம்
.”
என்று
காயத்ரி
ஒரு
பெரிய
ஐஸ்
கட்டியை
தூக்கி
சூர்யாவின்
பெற்றோர்
தலையில்
வைக்க
…
அவர்களும்
அதில்
உருகி
,
பெரியம்மா
சொன்னதுக்குச்
சந்தோஷப்பட்டனர்
.
“
நீங்க
எப்ப
எங்க
வீட்டுக்குப்
பெண்
பார்க்க
வர்றீங்க
?”
காயத்ரி
கேட்க
…..
“
சூர்யா
இப்ப
தான்
வேலையில
சேர்ந்திருக்கான்
,
அதுக்குள்ள
கல்யாணமான்னு
தான்
யோசிக்கிறோம்
.”
சூர்யாவின்
அம்மா
சொல்ல
…
“
நீங்க
சொல்றதும்
கரெக்ட்
தான்
.
ஆனா
நல்ல
விஷயத்தைத்
தள்ளி
போட
வேண்டாம்
.
அடுத்த
வாரம்
ஞாயிற்றுக்
கிழமை
நாள்
நல்லா
இருக்கு
,
நீங்க
அன்னைக்குப்
பொண்ணு
பார்க்க
வாங்க
.
நாம
நமக்குள்ள
பேசி
உறுதி
பண்ணிக்கலாம்
.
நமக்கும்
மண்டபம்
கிடைக்கணும்
,
கல்யாணம்னா
ஏகப்பட்ட
வேலை
இருக்கே
.
எப்படியும்
கல்யாணம்
வைக்க
ஆறு
மாசமோ
இல்லை
எட்டு
மாசமோ
ஆகிடும்
.”
காயத்ரி
சொல்ல
…
சூர்யாவின்
பெற்றோரும்
ஆமாம்
சரி
\
தான்
என்றனர்
.
அர்ஜுனும்
,
பெரியம்மாவும்
வெற்றிகரமாகச்
சூர்யா
,
ஆரு
திருமணத்தைப்
பற்றிப்
பேசிவிட்டு
வெளியே
வந்ததும்
,
அர்ஜுன்
தன்
பெரியம்மாவை
வண்டியில்
வைத்து
அழைத்துக்
கொண்டு
அவர்கள்
வீட்டுக்குச்
செல்லாமல்
,
மீரா
வீட்டுக்குச்
சென்றான்
.
அன்று
சனிக்கிழமை
மீரா
பெங்களூரில்
இருந்து
வந்து
இருந்தாள்
.
அவர்கள்
வருவது
மீராவுக்குத்
தெரியாது
.
வீட்டில்
வேறு
யாரும்
இல்லை
,
எல்லோரும்
வெளியே
சென்று
இருந்தனர்
.
வீட்டில்
வேலை
செய்யும்
பெண்
மீராவை
இண்டர்காமில்
அழைத்து
,
அர்ஜுன்
வந்திருப்பதாகச்
சொல்ல
…
மீரா
துள்ளி
குதித்துக்
கீழே
இறங்கி
வந்தாள்
.
மீரா
காயத்ரியை
பார்த்ததும்
உற்சாகமாகி
“
அத்தை
,
வாங்க
…
வாங்க
.”
என்று
அவரைச்
சந்தோஷமாக
வரவேற்று
கட்டி
கொண்டவள்
,
அவரிடம்
பாச
மழை
பொழிய
….
அர்ஜுன்
அவள்
தன்னைக்
கண்டு
கொள்ளவில்லை
என்ற
கடுப்பில்
இருந்தான்
.
மீரா
அர்ஜுனுக்குப்
பிடித்த
ரசமலாயும்
,
முந்திரி
பக்கோடாவும்
கொண்டு
வந்து
இருவருக்கும்
கொடுத்தவள்
, “
அத்தை
,
நீங்க
இருந்து
நைட்
சாப்ட்டுட்டு
தான்
போகணும்
.”
என்றாள்
.
“
ஏற்கனவே
சூர்யா
வீட்ல
டிபன்
சாப்பிட்டோம்
மீரா
,
இப்ப
நீ
வேற
ஸ்னாக்ஸ்
குடுத்திருக்க
.
இனி
நைட்
ஒன்னும்
சாப்பிட
முடியாது
.
எனக்கு
உங்க
வீட்ல
போடற
பில்ட்டர்
காபி
பிடிக்கும்
,
அது
வேணா
கொடு
…”
காயத்ரி
சொல்ல
…
மீரா
வேலை
செய்யும்
பெண்ணை
அழைத்து
இரண்டு
பில்டர்
காபி
கொண்டு
வர
சொன்னாள்
.
அர்ஜுன்
தனக்குக்
காபி
வேண்டாம்
என்றான்
.
மீரா
சரி
ஒரு
காபி
கொண்டு
வா
என்று
அந்தப்
பெண்ணை
அனுப்பிவிட்டுக்
காயத்திரியிடம்
பேச
…
அவரும்
சூர்யா
வீட்டில்
நடந்ததைச்
சொல்ல
…
அதை
கேட்ட
மீராவிற்கு
மிகவும்
சந்தோசம்
.
வேலை
செய்யும்
பெண்
காபியை
கொண்டு
வந்து
மீராவிடம்
கொடுக்க
…
அவள்
காயத்ரிக்கு
கொடுத்துவிட்டு
அர்ஜுனை
தேடினாள்
…
அர்ஜுன்
வெளியே
தோட்டத்தில்
நின்று
கொண்டிருந்தான்
.
மீரா
காயத்ரிக்கு
டிவி
போட்டுவிட்டு
“
பார்த்திட்டு
இருங்க
அத்தை
,
இதோ
வரேன்
.”
என்று
அர்ஜுனிடம்
சென்றவள்
,
அவனை
அழைத்துக்
கொண்டு
தள்ளி
சென்றாள்
.
அர்ஜுன்
எதற்கு
என்று
புரியாமல்
பார்க்க
…
மீரா
தோட்டத்தின்
உள்ளே
சென்றதும்
,
அர்ஜுனை
இறுக
அனைத்து
கொண்டாள்
.
அர்ஜுன்
மீராவின்
முகத்தை
நிமிர்த்தி
“
என்ன
மேடம்
இவ்வளவு
நேரம்
கண்டுக்காம
இருந்தீங்க
,
இப்ப
திடீர்ன்னு
கட்டி
பிடிக்கிறீங்க
.”
என்றவன்
லேசாக
மீராவின்
நெற்றியில்
முட்ட
….
மீராவிற்குக்
கண்ணெல்லாம்
கலங்கி
விட்டது
.
“
என்னடா
மீரா
?
என்ன
ஆச்சு
?
ஏன்
கண்ணெல்லாம்
கலங்குது
?”
“
அர்ஜுன்
நம்ம
கல்யாணமும்
நல்லபடியா
நடக்கும்
இல்ல
…”
“
அதுல
உனக்கு
என்ன
சந்தேகம்
?
கண்டிப்பா
நடக்கும்
.”
“
அர்ஜுன்
நாம
வித்யா
ஆன்டி
முழு
மனசோட
ஒத்துக்கிற
வரை
…
அது
எவ்வளவு
நாள்
ஆனாலும்
காத்திருக்கணும்
.
அவங்க
சம்மதம்
இல்லாம
,
நாம
கல்யாணம்
பண்ணிக்கக்
கூடாது
.”
மீரா
கண்ணீரோடு
சொல்ல
…
“
கண்டிப்பா
மீரா
,
அம்மா
சம்மதத்தோட
தான்
நம்ம
கல்யாணம்
நடக்கும்
.
நீ
ஏன்
இதுக்கு
இவ்வளவு
கவலைப்படுற
?
நான்
பார்த்துக்கிறேன்
.”
என்றவன்
,
அவள்
கண்ணீரை
துடைத்து
,
அவள்
இதழில்
லேசாக
முத்தமிட்டு
,
வா
போகலாம்
என்று
அவளை
அழைத்துக்
கொண்டு
உள்ளே
வந்தான்
.
உள்ளே
வந்த
மீராவை
பார்த்து
காயத்திரி
, “
அழுதியா
என்ன
…
கண்ணெல்லாம்
கலங்கி
இருக்கு
.”
என்று
கேட்க
…”
அவளுக்கு
அம்மா
எங்க
கல்யாணத்துக்கு
ஒதுக்க
மாட்டாங்களோன்னு
பயம்
.”
என்றான்
அர்ஜுன்
.
“
இதுல
பயப்பட
என்ன
இருக்கு
?”
என்றதும்
,
அர்ஜுன்
,
மீரா
இருவரின்
முகமும்
மலர்ந்தது
.
அவர்கள்
இருவரின்
முகத்தைப்
பார்த்த
காயத்ரி
, “
இதுல
என்ன
சந்தேகம்
?
கண்டிப்பா
வித்யா
உங்க
கல்யாணத்துக்கு
ஒத்துக்க
மாட்டா
.”
என்றார்
சாதாரணமாக
….
அர்ஜுன்
அவனின்
பெரியம்மாவை
பார்த்து
முறைக்க
…
“
என்ன
டா
லுக்கு
….
கண்டிப்பா
உங்க
அம்மா
ஒத்துக்கமாட்டா
….
அதுக்காக
நீ
அப்படியே
விட்டுடவா
போற
,
அப்புறம்
எதுக்குப்
பீலிங்க்ஸ்
?
எதுவுமே
உடனே
கிடைச்சுட்டா
அதோட
அருமை
தெரியாது
.
போராடுங்க
…
கண்டிப்பா
நினைத்ததைச்
சாதிக்கலாம்
.”
என்றார்
உறுதியாக
.
அவர்
சொன்னதைக்
கேட்ட
அர்ஜுன்
,
மீரா
இருவருக்கும்
மனதில்
நம்பிக்கை
வந்தது
.
பெரியம்மா
பேசுவதைக்
கேட்டுக்
கொண்டே
உள்ளே
வந்த
மீராவின்
அப்பா
, “
நீங்க
சொல்றது
ரொம்பச்
சரி
மா
.”
என்றார்
.
மீராவின்
அப்பாவையும்
,
சித்தியையும்
பார்த்து
காயத்ரியும்
,
அர்ஜுனும்
எழுந்து
நிற்க
…
ராம்நாத்
காயத்திரியை
பார்த்து
“
வாங்க
மா
உட்காருங்க
.”
என்றவர்
,
அர்ஜுனிடம்
“
எப்படி
இருக்க
அர்ஜுன்
?
நானே
உன்னைப்
பார்க்கணும்னு
நினைச்சேன்
.”
என்றார்
.
“
நான்
நல்லா
இருக்கேன்
அங்கிள்
,
நீங்க
எப்படி
இருக்கீங்க
?”
அர்ஜுன்
கேட்க
…
ராம்நாத்
அர்ஜுனின்
அருகில்
வந்து
அவனைத்
தோளோடு
சேர்த்து
அணைத்து
, “
நானும்
நல்லா
இருக்கேன்
.”
என்றவர்
மீனாக்ஷியை
பார்க்க
,
அவள்
அவர்களைப்
பார்த்து
“
நைட்
சாப்பிட்டு
தான்
போகணும்
,
நான்
டிபன்
ரெடி
பண்ண
சொல்றேன்
.”
என்றாள்
.
“
இப்ப
தான்
மீரா
ஸ்னாக்ஸ்
குடுத்தா
…
அதுவே
போதும்
,
இன்னொரு
நாள்
வரும்
போது
சாப்பிடுறோம்
.”
காயத்ரி
சொல்ல
…
மீனாட்சியும்
சரி
என்று
அவர்களோடு
அங்கயே
அமர்ந்தாள்
.
ராம்நாத்
அர்ஜுனிடம்
தனியாகப்
பேச
வேண்டும்
என்று
அவனை
அழைத்துக்
கொண்டு
அவரது
அலுவலக
அறைக்குச்
செல்ல
…
காயத்ரியும்
,
மீனாட்சியும்
ஒருவருக்கொருவர்
நலம்
விசாரித்துக்
கொண்டனர்
.
ராம்நாத்தும்
,
அர்ஜுனும்
என்ன
பேச
போகிறார்களோ
என்று
மீரா
டென்ஷன்னாக
இருந்தாள்
.
“
அர்ஜுன்
,
மீரா
என்கிட்டே
உன்னை
விரும்புறேன்னு
சொன்னா
…
ஒரு
அப்பாவா
முதல்ல
எனக்குக்
கொஞ்சம்
ஷாக்
தான்
.
ஆனா
எனக்கு
உன்னை
ரொம்பப்
பிடிச்சிருக்கு
,
என்
பொண்ணு
அவளா
தேர்ந்தெடுத்தாலும்
நல்ல
மாப்பிள்ளையா
தான்
தேர்ந்தெடுதிருக்கா
….
எனக்கு
இந்த
ஜாதி
நம்பிக்கை
எல்லாம்
கிடையாது
.
யாரை
கல்யாணம்
பண்ணிகிட்டாலும்
அங்கே
அன்பும்
,
ஒருத்தருக்கொருத்தர்
விட்டுக்
கொடுக்கிறதும்
தான்
ரொம்ப
முக்கியம்
.
அது
இல்லைனா
எந்தக்
கல்யாணமும்
வெற்றி
பெறாது
,
இதுக்கு
நானே
உதாரணம்
.
அதனால
நான்
அவ
விருப்பத்தை
மறுக்கலை
…”
என்ற
ராம்நாத்
தொடர்ந்து
,
“
மீராவுக்கு
உங்க
குடும்பத்தோட
நல்ல
ஒட்டுதல்
இருக்கு
,
அவ
உங்க
வீட்டுக்கு
மருமகளா
வந்தா
சந்தோஷமா
இருப்பா
…
எனக்குத்
தெரியும்
.
நானும்
ஒரு
அப்பாவா
எதிர்பார்க்கிறது
அது
தான்
.
உனக்கே
தெரியும்
,
என்
பெண்ணை
நானோ
,
இல்லை
…
அவ
அம்மாவோ
,
சீராட்டி
வளர்க்கலை
.
அவளுக்கு
அந்த
ஏக்கம்
மனசுல
இருக்கும்
.
அதனால
உன்
கூட
மட்டும்
இல்லாம
,
உன்
குடும்பத்தோடவும்
சேர்ந்து
இருக்கணும்னு
ஆசைபடுறா
….
அவ
ஆசை
நியாயமானது
தான்
.
அதனால
தான்
நான்
உங்க
கல்யாண
விஷயத்தில
தலையிடலை
.
நீயும்
மீராவும்
எப்ப
உங்க
வீட்ல
பேச
சொல்றீங்களோ
,
நான்
அப்ப
வந்து
பேசுறேன்
.”
என்றார்
.
அர்ஜுன்
அவர்
கைபிடித்து
அழுத்தி
“
தேங்க்ஸ்
மாமா
,
நான்
உங்க
நம்பிக்கைய
கண்டிப்பா
காப்பாத்துவேன்
.
என்
தங்கைக்குக்
கல்யாண
ஏற்பாடு
செஞ்சுகிட்டு
இருக்கோம்
,
நான்
நேரம்
பார்த்து
அம்மாகிட்ட
பேசுறேன்
.
அம்மாவுக்குக்
காதல்
திருமணம்
மேல
அவ்வளவு
நம்பிக்கை
இல்லை
…
ஆனா
சொன்னா
புரிஞ்சிப்பாங்க
,
அதுவும்
மீரான்னு
தெரிஞ்சா
மறுக்க
மாட்டாங்கன்னு
தான்
நினைக்கிறன்
.”
என்றான்
புன்னகையுடன்
.
“
அப்படி
நடந்தா
எனக்கும்
சந்தோசம்
தான்
.”
என்ற
ராம்நாத்
,
அர்ஜுனிடம்
அவன்
வேலையைப்
பற்றி
விசாரிக்க
…
அர்ஜுனும்
அவருக்குப்
பதில்
சொன்னான்
.
இருவரும்
சிறிது
நேரம்
கழித்து
வெளியே
வர
…
மீரா
அவர்கள்
இருவரின்
முகத்தையும்
ஆர்வமாகப்
பார்க்க
….
இருவரின்
முகத்திலும்
புன்னகை
இருந்தது
.
ஹப்பா
…
என்று
நிம்மதியானவள்
,
அவர்கள்
இருவரையும்
பார்த்துச்
சந்தோஷமாகச்
சிரித்தாள்
.
அர்ஜுன்
அவன்
பெரியம்மாவோடு
வீட்டுக்குள்
நுழைந்ததும்
,
அவர்களுக்காக
ஆவலுடன்
காத்திருந்த
வித்யா
, “
ரெண்டு
பேரும்
எங்க
போனீங்க
?
உங்களுக்காக
எவ்வளவு
நேரம்
காத்திருக்கிறது
?
அவங்க
வீட்ல
என்ன
சொன்னாங்க
?
என்று
கேள்விகளாக
அடுக்க
…
“
நானும்
,
அர்ஜுனும்
சூர்யா
வீட்ல
இருந்து
அப்படியே
மீரா
வீட்டுக்கு
போனோம்
.
அவ
வீடு
அங்க
தான
இருக்கு
.
அது
தான்
லேட்
.
சூர்யாவோட
அம்மா
,
அப்பா
ரெண்டு
பேருக்கும்
நம்ம
குடும்பத்தோட
சம்பந்தம்
பண்ண
ரொம்ப
இஷ்ட்டம்
,
அவங்க
சரின்னு
சொல்லிட்டாங்க
.
அடுத்த
ஞாயிற்றுக்
கிழமை
பெண்
பார்க்க
வராங்க
.”
விளக்கமாகக்
காயத்திரி
சொல்ல
…
வித்யா
நிம்மதி
பெருமூச்சு
விட்டார்
.
இவர்கள்
பேசுவதை
மறைந்து
நின்று
கேட்டுக்
கொண்டிருந்த
ஆருவுக்குச்
சந்தோசம்
தாங்கவில்லை
,
அவள்
துள்ளி
குதித்துத்
தன்
அறைக்குச்
சென்றாள்
.
அன்று
இரவு
குடும்பத்தினர்
அனைவரும்
சேர்ந்து
அமர்ந்து
ஆராதனாவை
பெண்
பார்க்க
வருவதைப்
பற்றி
மகிழ்ச்சியுடன்
பேசினார்கள்
.
அர்ஜுனின்
வீடு
…
சூர்யா
,
ஆராதனாவை
பெண்
பார்க்க
வரும்
நன்னாளுக்காகத்
தயாராகியது
.
மறுநாள்
அர்ஜுன்
மீராவை
அழைத்துக்
கொண்டு
ஆருவுக்கும்
,
சூர்யாவுக்கும்
பரிசு
பொருள்
வாங்க
ஷாப்பிங்
சென்றான்
.
இரவு
அவளை
ரெயில்
நிலையம்
அழைத்துக்
கொண்டு
சென்றவன்
அங்கே
அவளோடு
அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தான்
.
“
அடுத்த
வாரம்
ஆருவை
பெண்
பார்க்க
வர்றதுனால
…
என்னையும்
வர
சொல்லி
ஆருவும்
,
வித்யா
ஆன்டியும்
சொல்லி
இருக்காங்க
.
இன்னும்
அஞ்சு
நாள்
தான்
இருக்கு
,
உங்களைப்
பார்க்க
.”
என்றாள்
மீரா
மகிழ்ச்சியுடன்
.
அர்ஜுனுக்கு
அவளை
நினைத்து
வருத்தமாக
இருந்தது
.
மீராவுக்கு
இப்பொது
மீனாட்சியால்
தொல்லை
என்று
எதுவும்
இல்லை
என்றாலும்
,
சிறி
வயதில்
ஏற்பட்ட
காயம்
இன்னும்
அவள்
மனதில்
ஆறவில்லை
.
அதனால்
அவளால்
முழு
மனதோடு
அவள்
வீட்டில்
தங்க
முடியவில்லை
.
அதே
நேரத்தில்
அவளாள்
தன்னைப்
பிரிந்தும்
இருக்க
முடியவில்லை
என்பதும்
அர்ஜுனுக்குப்
புரிந்தது
.
மனதிற்குள்
தவித்துக்
கொண்டு
வெளியில்
சிரிக்கும்
மீராவின்
துயரை
துடைக்கவாவது
தங்களுக்குச்
சீக்கிரம்
திருமணம்
நடந்தால்
நன்றாக
இருக்கும்
என்று
அர்ஜுன்
நினைத்தான்
.
அர்ஜுன்
நினைப்பது
நடக்குமா
?
Advertising
Advertising