Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 32
Post Views:
1,459
உனக்குள்
என்
உயிரே
அத்தியாயம்
32
ஞாயிற்றுக்கிழமை
மாலை
நான்கு
மணிக்கு
அர்ஜுனின்
வீடே
பரபரப்பாக
இருந்தது
.
மீரா
ஆருவை
அழகாக
அலங்கரித்துக்
கொண்டு
இருந்தாள்
.
வித்யா
,
காயத்ரி
மற்றும்
ரஞ்சனா
மூவரும்
சேர்ந்து
மாலை
சிற்றுண்டி
தயார்
செய்து
கொண்டிருந்தனர்
.
கணேசனும்
,
ஆதியும்
ஏற்கனவே
கடையில்
இருந்து
வந்து
விட்டனர்
,
இன்னும்
அர்ஜுன்
மட்டும்
தான்
வரவில்லை
.
சரியாக
மாலை
ஐந்து
மணிக்குச்
சூர்யா
தன்
குடும்பத்தினர்
மற்றும்
நெருங்கிய
உறவினர்களுடன்
உள்ளே
நுழைந்தான்
.
அப்போது
தான்
அர்ஜுனும்
வந்தான்
.
வந்தவர்களை
வாசல்
வரை
சென்று
வரவேற்ற
கணேசன்
தம்பதியர்
அவர்களை
உள்ளே
அழைத்து
வந்து
அமர
வைத்தனர்
.
வந்தவர்களுக்கு
ரஞ்சனா
டிபன்
கொண்டு
வந்து
கொடுக்க
…
அதை
எல்லோரும்
எடுத்து
கொண்டனர்
.
சூர்யாவின்
அக்கா
மதுவும்
தன்
குடும்பத்தோடு
வந்திருந்தாள்
.
அவளின்
கணவன்
ஸ்ரீதரோடு
ஆதி
பேசிக்கொண்டிருக்க
….
கணேசன்
சூர்யாவின்
அப்பாவோடு
பேசிக்கொண்டிருந்தார்
.
இப்படி
அங்கிருந்த
எல்லோரும்
ஒருவரோடு
ஒருவர்
பேசிக்கொண்டிருக்க
,
சூர்யா
இவங்க
ஆருவை
கண்ணிலேயே
காட்டா
மாட்டாங்க
போலிருக்கே
என்று
நொந்தபடி
அமர்ந்து
இருந்ததான்
.
அப்போது
அவன்
பக்கத்தில்
வந்து
அமர்ந்த
அர்ஜுன்
, “
அப்புறம்
மாப்பிள்ளை
ஏன்
டல்லா
இருக்க
?”
என்று
கேட்க
…
“
டேய்
நாங்க
இங்க
பொண்ணு
பார்க்க
தான
வந்திருக்கோம்
,
ஆனா
…
டிபன்
சாப்பிட
வந்த
மாதிரி
எல்லோரும்
அதிலேயே
கவனமா
இருக்காங்களே
…”
சூர்யா
வருத்தமாகச்
சொல்ல
…
“
ஏன்
ஆரு
இங்க
வந்தா
தான்
உனக்கு
டிபன்
இறங்குமா
,
இல்லைனா
இறங்காதா
?”
அர்ஜுன்
பதிலுக்குக்
கிண்டலடிக்க
….”
நான்
பொண்ணு
பார்க்கதான்
வந்தேன்
,
எனக்கு
டிபன்
வேண்டாம்
.”
சூர்யா
பல்லை
கடிக்க
…
அர்ஜுனின்
மடியில்
இருந்த
ஐஷுவோடு
விளையாடி
கொண்டிருந்த
ப்ரீத்தி
,
தன்
அம்மா
மதுவிடம்
திரும்பி
, “
அம்மா
….
மாமா
பொண்ணு
தான்
பார்க்க
வந்தாங்களாம்
,
அவங்களுக்கு
டிபன்
வேண்டாமாம்
.”
என்று
சத்தமாகச்
சொல்ல
…
ஹாலில்
இருந்த
அனைவரும்
அதைக்
கேட்டு
சிரித்தனர்
.
சூர்யா
அசடு
வழிய
…
அர்ஜுன்
சிரிப்பை
அடக்கி
கொண்டு
அமர்ந்து
இருந்தான்
.
அர்ஜுனின்
பெரியம்மா
ரஞ்சனாவிடம்
“
நீ
போய்
ஆராதனாவை
அழைச்சிட்டு
வா
.”
என்று
சொல்ல
…
ரஞ்சனாவும்
ஆருவை
அழைக்கச்
சென்றாள்
.
“
இந்தச்
சின்னப்
பிசாசு
இருந்ததைக்
கவனிக்காம
சொல்லிட்டேன்
.”
என்ற
சூர்யா
தொடர்ந்து
“
ஆமா
…
இந்தக்
குட்டி
எப்படி
?
இது
முன்னாடியாவது
தைரியமா
பேசலாமா
…”
என்று
ஐஷுவை
காட்டி
அவன்
கேட்க
…
“
மேடம்
இன்னும்
பேச
ஆரம்பிக்கலை
…
பேச
ஆரம்பிச்சா
தான்
தெரியும்
.”
என்று
அர்ஜுன்
சொல்லிகொண்டிருக்கும்
போதே
…
அங்கே
ஆருவை
அழைத்துக்
கொண்டு
ரஞ்சனாவும்
,
அவர்களோடு
மீராவும்
வந்தாள்
.
சூர்யா
ஆருவை
பார்க்க
…
அர்ஜுன்
மீராவை
பார்த்தான்
.
ஆரு
எல்லோருக்கும்
பொதுவாக
ஒரு
நமஸ்காரம்
செய்துவிட்டு
,
சோபாவில்
சூர்யாவின்
அம்மா
அருகே
சென்று
அமர்ந்தாள்
.
மீரா
சற்று
தள்ளி
சென்று
ஓரமாக
நின்று
கொண்டு
ஹாலில்
நடப்பதை
கவனித்தாள்
.
சூர்யாவின்
அம்மா
விஜயாவும்
,
மதுவும்
ஆருவிடம்
எதோ
கேட்க
,
அவள்
அதற்குப்
பதில்
சொல்லிக்கொண்டிருந்தாள்
.
மீராவுக்கு
அர்ஜுன்
தன்னையே
பார்ப்பது
தெரிந்து
தான்
இருந்தது
.
ஆனால்
அவனைக்
கண்டுகொள்ளாமல்
இருந்தாள்
.
மீரா
இள
மஞ்சள்
நிறத்தில்
காட்டன்
புடவை
கட்டி
இருந்தாள்
.
ஆனால்
அதிலேயே
பார்க்க
மிகவும்
அழகாக
இருந்தாள்
.
கழுத்தில்
அர்ஜுன்
அவள்
பிறந்த
நாளுக்கு
என்று
கொடுத்த
செயின்
மட்டும்
தான்
இருந்தது
.
மீரா
இதுவரை
அந்தச்
செயின்னை
கழட்டியதே
இல்லை
,
அது
அர்ஜுனுக்கும்
தெரியும்
.
மீரா
சுற்றி
எல்லோரையும்
ஒருமுறை
பார்த்துவிட்டு
,
அர்ஜுன்
இருக்கும்
பக்கம்
திரும்பி
,
போதும்
பார்த்தது
என்று
வாயசைத்து
முறைக்க
,
அர்ஜுன்
சிரித்துக்
கொண்டே
அவன்
பார்வையை
அவள்
மேலிருந்து
திருப்பினான்
.
சூர்யாவின்
பெற்றோர்
ஏற்கனவே
ஆருவை
பார்த்து
இருந்தாலும்
,
இன்று
முறைப்படி
பார்த்ததும்
அவர்களுக்கு
மனதில்
இருந்த
சிறு
சஞ்சலமும்
மறைந்து
அவளை
ரொம்பவே
பிடித்தது
.
அதே
போலக்
கணேசன்
தம்பதியருக்கு
,
சூர்யாவின்
குடும்பம்
ஏற்கனவே
பழக்கம்
என்றாலும்
,
இதுவரை
நண்பர்களாக
இருந்தவர்கள்
,
இப்போது
உறவினர்கள்
என்னும்
போது
எப்படி
இருப்பார்களோ
என்று
நினைத்திருந்தவர்களுக்கும்
,
இன்று
அவர்கள்
நடந்து
கொண்ட
முறையில்
மனதிற்குச்
சந்தோஷமாக
இருந்தது
.
காயத்திரி
பொதுவாக
இரு
குடும்பத்தினரிடமும்
,
உங்களுக்குப்
பிடிச்சிருக்கா
மேற்கொண்டு
பேசலாமா
என்று
கேட்க
…
இரு
குடும்பமுமே
ஒருவரை
ஒருவர்
பற்றி
ஏற்கனவே
விசாரித்துத்
தெரிந்து
கொண்டிருந்தனர்
.
அதனால்
முழு
மனதுடன்
இந்தத்
திருமணதிற்குச்
சம்மதித்தனர்
.
அதன்படி
திருமணத்தை
இன்னும்
ஆறு
மாதத்திற்குள்
வரும்
முகர்த்தம்
பார்த்து
வைப்பது
என்று
முடிவு
செய்யப்பட்டது
.
விஜயா
மெதுவாக
மதுவின்
காதில்
எதோ
சொல்ல
…
அவள்
வெளியே
சென்று
காரில்
இருந்து
ஒரு
கவரை
கொண்டு
வந்தாள்
.
அதிலிருந்த
தாம்பாளத்தை
வெளியில்
எடுத்து
வைத்து
,
அதில்
புடவை
,
பூ
மற்றும்
கற்கள்
பதித்த
ஒரு
நெக்லஸ்
வைத்து
ஆருவிடம்
கொடுத்தார்
.
அதைப்
பார்த்து
எல்லோரும்
மகிழ்ந்தனர்
.
மது
ஆருவை
அழைத்துக்
கொண்டு
புடவை
மாற்ற
சென்றாள்
.
வித்யா
டென்ஷன்னாகச்
சமையல்
அறைக்குள்
செல்ல
…
அதைப்
பார்த்த
ஆதி
,
அர்ஜுன்
இருவரும்
அவர்
பின்னே
உள்ளே
சென்றனர்
.
“
ஏன்
மா
டென்ஷனா
இருக்கீங்க
?”
ஆதி
கேட்க
… “
அவங்க
நம்ம
பொண்ணுக்கு
நகை
எல்லாம்
போடுறாங்க
,
நாம
பதிலுக்கு
மாப்பிள்ளைக்கு
ஒன்னும்
போடலைனா
நல்லா
இருக்குமா
…”
வித்யா
புலம்ப
….
“
மாப்பிள்ளைக்கு
என்ன
போடணும்
?
பேசாம
அவனையே
போட்டுடலாமா
.”
அர்ஜுன்
கேட்க
… “
டேய்
…”
வித்யா
பல்லைக்கடிக்க
…..
அர்ஜுன்
தன்
பாக்கெட்ல்
இருந்து
ஒரு
டப்பாவை
எடுத்து
திறந்து
காமித்தான்
.
அதில்
ஒரே
மாதிரி
இரண்டு
மோதிரங்கள்
இருந்தது
.
அதைப்
பார்த்ததும்
வித்யா
, “
நீயா
அர்ஜுன்
வாங்கின
,
சமத்துடா
நீ
.”
என்று
அவன்
கன்னத்தைக்
கிள்ளி
கொஞ்சினார்
.
அர்ஜுன்
மோதிரத்தை
ஆதியிடம்
கொடுத்து
, “
நீயே
கொடு
ஆதி
”
என்றான்
.
மது
ஆருவிற்குப்
புடவை
மட்டும்
கட்டி
அழைத்து
வந்தவள்
,
நகையை
அவள்
அம்மாவையே
போட
சொன்னாள்
.
விஜயா
ஆரதனாவின்
தலையில்
பூ
வைத்து
,
நகையைக்
கழுத்தில்
போட்டுவிட
…
அர்ஜுன்
வீடியோ
கேமராவில்
எல்லாவற்றையும்
படம்
எடுத்தான்
.
சூர்யா
,
ஆரு
இருவருமே
புன்னகையுடன்
அடிக்கடி
ஒருவரை
ஒருவர்
பார்த்து
கொண்டனர்
.
ஆதி
அர்ஜுன்
கொடுத்த
மோதிரத்தை
இருவருக்கும்
கொடுத்து
மாற்றிக்
கொள்ளச்
சொல்ல
…
அது
எல்லோருக்கும்
ஆனந்த
அதிர்ச்சியாக
இருந்தது
.
சூர்யாவும்
,
ஆராதனாவும்
மகிழ்ச்சியுடன்
மோதிரம்
மாற்றிக்
கொண்டனர்
.
பிறகு
எல்லோரும்
அவரவர்
ஜோடியுடன்
சேர்ந்து
சூர்யா
,
ஆருவுடன்
நின்று
போட்டோ
எடுக்க
…
அர்ஜுன்
மட்டும்
எடுக்கவில்லை
.
கணேசன்
தம்பதியர்
சூர்யாவின்
குடும்பத்தினரிடம்
,
அது
தான்
கல்யாணம்
உறுதியாகி
விட்டதே
…
அதனால்
இரவு
உணவு
சாப்பிட்டுவிட்டே
செல்ல
வேண்டும்
என்று
அன்பாகக்
கேட்டு
கொண்டதால்
….
அவர்களும்
சரி
என்றனர்
.
பெரியவர்கள்
எல்லோரும்
கீழே
அமர்ந்து
பேச
…
இளையவர்கள்
மாடிக்கு
சென்றனர்
.
அங்கே
ஆரு
,
சூர்யாவோடு
சேர்ந்து
அர்ஜுனும்
,
மீராவும்
போட்டோ
எடுத்து
கொண்டனர்
.
பிறகு
எல்லோரும்
சேர்ந்து
அமர்ந்து
சூர்யா
,
ஆருவை
கிண்டல்
செய்து
ஓட்டினர்
.
சூர்யா
மதுவிடம்
“
மீரா
பெங்களூர்ல
தான்
இருக்கா
..
அங்க
தான்
வேலை
பார்க்கிறா
…”
என்று
சொல்ல
… “
அப்படியா
ஏன்
மீரா
எங்க
வீட்டுக்கு
வரலை
.
அடுத்த
வீக்எண்டு
கண்டிப்பா
எங்க
வீட்டுக்கு
வரணும்
.”
மது
அழைக்க
….
அவள்
கணவன்
ஸ்ரீதரும்
“
வீட்டுக்கு
வாங்க
மீரா
”
என்றான்
.
சிறிது
நேரம்
கழித்துக்
கீழே
இருந்து
வித்யா
ஆதியையும்
,
ரஞ்சனாவையும்
அழைக்க
….
அவர்கள்
இருவரும்
கீழே
இறங்கி
சென்றனர்
.
அங்கே
சஞ்சனா
தன்
கணவனோடு
வந்து
ஹாலில்
அமர்ந்து
இருந்தாள்
.
அவளைப்
பார்த்ததும்
ரஞ்சனா
வேகமாக
அவளருகில்
சென்று
“
சஞ்சு
எப்படி
இருக்க
?
நீ
வரேன்னு
சொல்லவே
இல்லை
.”
என்று
சந்தோஷமாக
விசாரித்தவள்
,
தினேஷையும்
வரவேற்க
தவறவில்லை
.
“
நாங்க
ரொம்ப
நாளாவே
வரணும்னு
நினைச்சோம்
அண்ணி
.
இன்னைக்குப்
பீச்க்கு
வந்தோமா
,
அப்படியா
நீங்க
வீட்ல
இருந்தா
….
இங்கே
வரலாம்னு
ஆதி
அண்ணனுக்குப்
போன்
பண்ணோம்
.
அவரும்
வீட்ல
தான்
இருக்கோம்
,
வாங்கன்னு
சொன்னார்
.
அது
தான்
பார்த்திட்டு
போகலாம்னு
வந்தோம்
.”
என்றான்
தினேஷ்
.
ரஞ்சனா
ஆதியை
ஆச்சர்யமாகப்
பார்க்க
…
அவன்
“
அவங்களுக்குச்
சாப்பிட
எதாவது
கொண்டு
வா
….”
என்றான்
.
ரஞ்சனா
உள்ளே
சென்று
அவர்களுக்கு
ஸ்னாக்ஸ்
கொண்டு
வந்து
கொடுத்தாள்
.
மாடி
ஹாலில்
சூர்யா
,
அருவோடு
மதுவும்
அவள்
கணவரும்
அமர்ந்து
பேசிக்கொண்டு
இருந்தனர்
.
மீராவும்
,
அர்ஜுனும்
அவர்கள்
பேசுவதை
வேடிக்கை
பார்த்து
கொண்டிருந்தனர்
.
அர்ஜுன்
மெதுவாக
மீராவை
ஜாடை
காட்டி
தனியே
அழைக்க
…
அவள்
வர
மாட்டேன்
என்றாள்
.
“
மீரா
…
கொஞ்சம்
குடிக்கத்
தண்ணி
கொண்டு
வரியா
…”
அர்ஜுன்
சத்தமாகக்
கேட்க
…
மீரா
அவனைப்
பார்த்து
முறைத்துக்
கொண்டே
கீழே
சென்றாள்
.
கீழே
சஞ்சனா
தன்
கணவருடன்
வந்திருப்பதைப்
பார்த்தாள்
.
அவர்கள்
மற்றவர்களோடு
பேசிக்
கொண்டிருந்தனர்
.
மீரா
தண்ணீர்
எடுத்துக்
கொண்டு
மேலே
வந்தவள்
,
அங்கே
அர்ஜுனை
தேட
…
அவன்
அங்கு
இல்லை
.
எங்குப்
போனான்
என்று
சுற்றி
பார்த்தவள்
,
அவன்
பால்கனியில்
நிற்பதை
பார்த்து
அங்குச்
சென்று
,
தண்ணிரை
அவன்
பக்கம்
நீட்ட
…
தண்ணீரோடு
சேர்ந்தது
மீராவின்
கை
பற்றி
மறைவாக
இழுத்துச்
சென்றான்
.
மீரா
வேகமாக
அவனிடம்
இருந்து
விலகினாள்
.
“
விடுங்க
அர்ஜுன்
,
யாராவது
வரப்போறாங்க
.”
மீரா
பயப்பட
…”
ச்சு
….
யாரும்
வர
மாட்டாங்க
வா
.”
என்றவன்
,
மறுபடியும்
மீராவை
பிடித்து
அருகே
இழுத்தான்
.
மீரா
அவன்
அருகே
சென்று
நின்றாள்
.
அர்ஜுன்
பால்கனி
விளக்கை
போடவில்லை
,
அதனால்
அந்த
இடம்
இருட்டாக
இருந்தது
.
அர்ஜுன்
மெதுவான
குரலில்
“
அழகா
இருக்க
மீரா
.”
என்றவன்
,
அவள்
எதிர்
பார்க்காத
நேரம்
,
புடவை
கட்டி
இருந்ததால்
,
பளிரென்று
தெரிந்த
அவள்
இடையைப்
பிடித்து
அழுத்த
…
மீரா
துள்ளினாள்
.
மேலும்
முன்னேற
துடித்த
கையையும்
,
மனதையும்
அடக்கி
அர்ஜுன்
மெதுவாக
அவன்
கையை
எடுத்ததும்
,
மீரா
”
நான்
கிளம்புறேன்
அர்ஜுன்
.”
என்றாள்
.
“
ஏன்
மீரா
அதுக்குள்ள
கிளம்புற
?
மணி
ஏழு
தான
ஆகுது
.
உனக்குப்
பதினொரு
மணிக்கு
தான
ட்ரைன்
.”
“
கீழே
போன
போது
…
சஞ்சனா
வந்திருக்கிறதை
பார்த்தேன்
,
அது
தான்
கிளம்பலாம்னு
…”
என்றதும்
.
“
சரி
மீரா
நீ
கிளம்பு
,
இன்னைக்கு
நான்
தான்
கடைய
மூட
போகணும்
.
அதனால
நீ
இன்னைக்குக்
கார்ல
ஸ்டேஷன்
போய்டு
.”
அர்ஜுன்
சொல்ல
….
மீரா
சரி
என்றாள்
.
சூர்யாவிடம்
வந்த
அர்ஜுன்
, “
நான்
கடைக்குக்
கிளம்புறேன்
டா
.
அண்ணியோட
தங்கச்சி
வந்திருக்காங்க
,
அதனால
ஆதி
இங்க
இருக்கனும்
.”
என்றான்
.
சூர்யாவும்
நிலைமையை
உணர்ந்து
சரி
என்றான்
.
இரவு
உணவுக்கு
வெளியே
ஒரு
பெரிய
ஓட்டலில்
சாப்பாடுக்கு
சொல்லி
இருந்தனர்
.
வித்யா
மற்ற
வேலைகளைப்
பார்த்துக்
கொண்டிருந்தார்
.
அவரிடம்
வந்த
மீரா
“
வீட்டுக்கு
கிளம்புறேன்
ஆன்டி
.”
என்று
சொல்ல
…
வித்யா
,”
நைட்
சாப்பிட்டுட்டு
போ
மீரா
.”
என்றார்
. “
இல்லை
ஆன்டி
,
இன்னைக்கு
நைட்
பெங்களூர்
கிளம்புறேன்
.
அதனால
வீட்டுக்குப்
போய்ச்
சாப்ட்டுக்கிறேன்
.”
என்று
விடைபெற்று
சென்றாள்
.
மீரா
கிளம்பியதும்
,
அர்ஜுன்
அவன்
அப்பாவிடம்
“
நீங்களும்
,
ஆதியும்
வீட்ல
இருங்க
.
நான்
கடைக்குப்
போய்ப்
பார்த்துகிறேன்
.”
என்று
சொல்ல
….
அவரும்
சரி
என்றார்
.
அர்ஜுன்
தினேஷிடம்
மட்டும்
போயிட்டு
வரேன்
என்றவன்
,
சஞ்சனா
என்று
ஒருத்தி
அங்கிருப்பதே
தெரியாதது
போல்
,
அவளைக்
கண்டுகொள்ளாமல்
சென்றான்
.
எட்டு
மணி
ஆனதும்
முதலில்
சூர்யா
வீட்டினரை
சாப்பிட
அழைத்து
வித்யாவும்
,
காயத்ரியும்
உணவு
பரிமாறினார்கள்
.
சூர்யா
பிறகு
சாப்பிடுகிறேன்
என்று
சொன்னதால்
மற்றவர்களுக்குப்
பரிமாறினார்கள்
.
வித்யா
ரஞ்சனாவிடம்
“
நீ
போய்
உன்
தங்கையோட
பேசிட்டு
இரு
,
நாங்க
பார்த்திகிறோம்
…”
என்று
சொல்ல
…
ரஞ்சனா
,
சஞ்சனாவை
அழைத்துக்
கொண்டு
அவள்
அறைக்குச்
சென்றாள்
.
ஆதி
,
சூர்யா
,
தினேஷ்
ஹாலில்
அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தனர்
.
அவள்
அறைக்கு
வந்ததும்
“
இன்னைக்கு
ஆருவை
பெண்
பார்க்க
வந்தாங்க
,
உனக்குச்
சூர்யாவை
தெரியும்
இல்லை
…
அர்ஜுனோட
ப்ரண்ட்
,
அவர்
தான்
மாப்பிள்ளை
.”
ரஞ்சனா
சொல்ல
…
சஞ்சனா
ஒன்றும்
பேசாமல்
உர்ரென்று
இருந்தாள்
.
“
ஏன்
டி
..
உம்னு
இருக்க
,
நீ
இன்னைக்கு
வருவேன்னு
நான்
சத்தியமா
எதிர்
பார்க்கலை
.”
“
நானா
எங்க
வந்தேன்
?
நான்
கட்டி
இருகேன்னே
ஒருத்தர்
,
அவர்தான்
என்னை
இழுத்திட்டு
வந்தார்
.
ஏன்
உங்க
அக்கா
நம்ம
வீட்டுக்கு
வர
மாட்றாங்க
?
நீ
ஏன்
உங்க
அக்கா
வீட்டுக்கு
போகலாம்னு
சொல்ல
மாட்றேன்னு
ஒரே
இம்சை
,
அதனால
வேற
வழி
இல்லாமல்
வந்தேன்
.”
சஞ்சனா
கோபமாகச்
சொல்ல
…
இவ
இன்னும்
திருந்தலை
என்று
நினைத்த
ரஞ்சனா
“
சரி
அதை
விடு
,
அப்புறம்
சென்னையில
வேற
எந்த
இடமெல்லாம்
போனீங்க
,
எல்லா
இடமும்
சுத்தி
பார்த்துடீங்களா
?”
என்று
கேட்க
…
சஞ்சனாவும்
கொஞ்சம்
மலை
இறங்கி
பதில்
சொன்னாள்
.
ஐஷுவும்
அவர்களோடு
இருக்க
…
அவளோடு
இருவரும்
விளையாடி
கொண்டு
இருந்தனர்
.
கீழே
சூர்யா
வீட்டினர்
சாப்பிட்டதும்
,
வித்யா
சஞ்சனாவை
சாப்பிட
அழைத்தார்
.
சஞ்சனா
,
தினேஷோடு
,
சூர்யாவும்
,
ஆருவும்
சாப்பிட
அமர்ந்தனர்
.
அவர்களோடு
ஆதியும்
சாப்பிட
அமர்ந்தான்
.
வித்யா
ரஞ்சனாவை
“
நீயும்
உன்
தங்கையோட
உட்கார்ந்து
சாப்பிடு
.”
என்றவர்
,
தினேஷிடம்
“
ஒரு
நாள்
ஞாயிற்றுக்
கிழமை
முழு
நாளும்
,
எங்க
வீட்டுக்கு
வந்து
இருக்கணும்
.”
என்றார்
.
“
கண்டிப்பா
வரோம்
சித்தி
,
நீங்களும்
எங்க
வீட்டுக்கு
வாங்க
.
நீங்க
யாரும்
இன்னும்
எங்க
வீட்டுக்கு
வரவே
இல்லை
.”
தினேஷ்
உரிமையாக
அழைக்க
….
அவன்
பேசுவதில்
இருந்தே
அவன்
உண்மையான
பாசத்தில்
அழைக்கிறான்
என்பதை
உணர்ந்த
வித்யா
, “
கண்டிப்பா
அடுத்த
வாரம்
உங்க
வீட்டுக்கு
வரோம்
.”
என்றவர்
தொடர்ந்து
, “
கொஞ்ச
நாளா
ஆருவுக்கு
மாப்பிள்ளை
பார்க்கிற
வேலை
இருந்ததால
தான்
வர
முடியலை
,
அவ
கல்யாணம்
முடிஞ்சிட்டா
…
அடுத்து
அர்ஜுனுக்குப்
பார்க்கணும்
.”
என்றார்
.
“
அர்ஜுனுக்கு
இன்னும்
கல்யணம்
ஆகலையா
…
அப்ப
கொஞ்ச
நேரத்துக்கு
முன்னாடி
,
ஒருத்தங்க
கைல
தண்ணி
எடுத்துகிட்டு
மாடிக்குப்
போனாங்களே
…
அவங்க
அர்ஜுன்
மனைவி
இல்லையா
?
நான்
அவங்க
தான்
அர்ஜுன்
மனைவின்னு
நினைச்சேன்
.”
தினேஷ்
மீராவை
சொல்ல
…
அது
அர்ஜுன்
,
மீரா
காதலை
பற்றித்
தெரிந்தவர்கள்
அனைவர்
முகத்திலும்
புன்னகையை
வரவழைத்தது
.
ஆதியும்
,
சூர்யாவும்
சிரிப்பை
அடக்கி
சாப்பிடுவது
போல்
நடிக்க
,
ஆரு
என்ன
முயன்றும்
சிரிப்பை
அடக்க
முடியாமல்
எழுந்து
உள்ளே
சென்றாள்
.
தினேஷ்
அவளை
ஆச்சர்யமாகப்
பார்க்க
…
“
எதுக்கு
இப்ப
உனக்குக்
கக்க
…
பிக்கன்னு
…
சிரிப்பு
வருது
?”
என்று
அவளை
அதட்டிய
வித்யா
,
தினேஷை
பார்த்து
, “
அவ
மீரா
,
எங்க
அர்ஜுனோடு
காலேஜ்ல
தான்
படிச்சா
…
அவனுக்கு
ஜூனியர்
.
அதோட
ஆருவோட
ப்ரண்ட்
,
ரொம்ப
நல்ல
பொண்ணு
.
மத்தபடி
வேறெதுவும்
இல்லை
.
ரொம்ப
வசதியான
வீட்டு
பொண்ணு
,
அவங்க
நம்ம
ஆளுங்க
இல்லை
.”
என்றும்
சேர்த்து
சொல்ல
…
அதைக்
கேட்டு
சற்று
முன்
புன்னகையுடன்
இருந்த
அனைவர்
முகத்திலும்
இருந்த
சிரிப்பு
மறைந்தது
.
அதைக்
கவனித்த
தினேஷ்
,
இவங்க
நினைப்பது
போல்
இல்லை
…
அர்ஜுனுக்கும்
,
மீராவுக்கும்
கண்டிப்பாகச்
சம்பந்தம்
இருக்கிறது
என்றே
அவன்
உள்
மனம்
சொல்லியது
.
அதன்
பிறகு
யாரும்
அங்குப்
பேசவில்லை
…
எல்லோரும்
அமைதியாகச்
சாப்பிட்டு
எழுந்தனர்
.
Advertising
Advertising