Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 37 1
Post Views:
1,510
உனக்குள்
என்
உயிரே
அத்தியாயம்
37
அர்ஜுன்
நேராகப்
பெசன்ட்
நகர்
பீச்சில்
இருக்கும்
அஷ்டலக்ஷ்மி
கோவிலுக்குத்
தான்
சென்றான்
.
அவனும்
அன்று
மீரா
செய்தது
போல்
…
மற்ற
சந்நிதியில்
சென்று
சாமி
கும்பிட்டவன்
,
அன்று
மீராவுக்குச்
செயின்
போட்டுவிட்ட
இடத்திற்கு
வந்து
அமர்ந்து
கண்
மூடி
வேண்டினான்
.
“
நான்
அன்னைக்கு
மீரா
கழுத்தில
செயின்
போடும்
போது
,
அவ
இன்னையில்
இருந்து
என்னோட
மனைவி
,
இனி
நடக்கும்
கல்யாணம்
ஊருக்காகத்தான்னு
நினைத்துதான்
போட்டேன்
.
எங்க
அம்மா
மனசு
நல்லபடியா
மாறி
…
எங்களைச்
சீக்கிரம்
சேர்த்து
வைக்கணும்
.”
என்று
வேண்டிக்
கொண்டான்
.
அன்று
இரவு
அர்ஜுன்
மீராவை
செல்லில்
அழைத்து
, “
என்ன
மீரா
சென்னைக்கு
வந்து
ரெண்டு
மாசம்
ஆகப்
போகுது
,
எப்ப
தான்
வருவ
?”
என்று
வேண்டுமென்றே
தெரியாதது
போல்
கேட்க
…
ரஞ்சனா
அர்ஜுனுக்கு
விஷயம்
தெரிந்துவிட்டதால்
…
அவன்
பார்த்து
கொள்வான்
என்று
நினைத்து
,
அவள்
மீராவிடம்
எதுவும்
சொல்லவில்லை
…
அதனால்
மீராவிற்கு
வீட்டில்
நடந்தது
எதுவும்
தெரியாது
.
அதனால்
“
வரேன்
அர்ஜுன்
,
இங்க
ஆபீஸ்ல
ஒரே
வேலை
…
நகரவே
முடியலை
..
சனி
,
ஞாயிறு
கூட
வேலை
இருக்கு
…”
மீரா
சமாளிக்க
…
“
இன்னும்
எத்தனை
நாள்
இதே
காரணம்
சொல்வ
மீரா
…
வேறே
எதாவது
புதுசா
சொல்லு
….”
அர்ஜுன்
சொல்ல
….
மீரா
மெளனமாக
இருந்தாள்
.
“
எனக்கு
எல்லாம்
தெரியும்
மீரா
….
அம்மா
பேசினதை
நீ
ஏன்
என்கிட்டே
மறைச்ச
?”
மீரா
பெருமூச்சு
விட்டவள்
, “
அப்ப
எல்லோரும்
ஆரு
கல்யாண
வேளையில்
இருந்தீங்க
…
இதை
வேற
சொல்லி
எதுக்கு
மூட்
அவுட்
பண்ணனும்
.
அதோட
நான்
சொல்றத
விட
அத்தையே
சொல்லட்டும்னு
நினைச்சேன்
.”
என்றாள்
.
“
நல்லா
நினைச்ச
போ
…
அம்மா
உன்னை
ரொம்பப்
பேசிடாங்களா
…”
அர்ஜுன்
வருத்தமாகக்
கேட்க
….
“
இல்லை
…
அதெல்லாம்
எதுவும்
இல்லை
.”
“
நீ
ஆமாம்னாலும்
இல்லைன்னு
தான
டி
சொல்லுவா
.”
அர்ஜுன்
கடுப்பாகப்
பேச
….
“
எந்த
அம்மா
தன்
பையன்
லவ்
பண்றான்னு
தெரிஞ்சா
…
வரவேற்பு
கொடுப்பாங்க
,
கோவப்படத்
தான்
செய்வாங்க
….
இது
கூட
இல்லைனா
எப்படி
?
நாம
முன்னாடியே
இதை
எதிர்பார்க்க
தான
செய்தோம்
.
இனி
அவங்க
மனசை
எப்படி
மாத்தனும்னு
தான்
பார்க்கணும்
.”
என்றாள்
மீரா
.
உண்மை
தான்
என்றவன்
,
வீட்டில்
வித்யாவோடு
நடந்த
வாக்குவாதத்தைச்
சொன்னான்
.
ஆனால்
வித்யா
அவர்களைத்
திருமணம்
முடித்துத்
தனிக்குடித்தனம்
போகச்
சொன்னதை
மட்டும்
சொல்லவில்லை
.
அவனுக்குத்
தெரியும்
,
தன்னால்
ஒரு
குடும்பம்
பிரிகிறது
என்று
தெரிந்தால்
மீரா
தாங்கமாட்டாள்
என்று
.
“
அம்மாவுக்கு
நாம
கல்யாணம்
செஞ்சிகிறது
பிடிக்காம
இல்லை
மீரா
…
அவங்களுக்கு
உன்னைப்
பிடிச்சு
தான்
இருக்கு
.
இருந்தாலும்
…
எதோ
தடுக்குது
.
அது
என்னன்னு
பார்த்து
சரி
பண்ணிட்டா
…
அம்மா
சந்தோஷமா
,
நம்ம
கல்யாணத்துக்கு
ஒத்துப்பாங்க
.”
என்றான்
.
“
சரி
அர்ஜுன்
,
ஆனா
…
நாம
இந்த
இடைபட்ட
காலத்தில
…
அவங்க
மனசு
கஷ்டபடாம
பார்த்துக்கலாம்
.”
மீரா
சொல்ல
…
அர்ஜுனுக்கு
அவள்
என்ன
சொல்ல
வருகிறாள்
என்று
புரிந்தது
.
“
நாம
நேர்ல
சந்திக்கக்
கூடாது
…
அதுதான
சொல்ல
வர
….
சரி
மீரா
.”
என்று
போன்னை
வைத்தான்
.
அங்கே
ஆதியும்
,
ரஞ்சனாவும்
அவர்கள்
அறையில்
யார்
இவர்கள்
விஷயத்தை
அம்மாவிடம்
சொல்லி
இருப்பார்கள்
?
என்று
குழம்பி
கொண்டிருக்க
…
ரஞ்சனா
இந்த
விஷயம்
சஞ்சனாவிற்கும்
,
தினேஷ்க்கும்
தெரியும்
என்று
வாய்விட
…
உடனே
ஆதி
பிடித்துக்
கொண்டான்
.
“
அப்ப
சஞ்சனா
தான்
அம்மாகிட்ட
சொல்லி
இருப்பா
.
உன்
தங்கச்சிக்கு
எதுக்கு
இந்தக்
கேவலமான
புத்தி
?”
என
ஆதி
சண்டைக்குச்
செல்ல
….
ரஞ்சனாவிற்குக்
கோபம்
வந்து
விட்டது
.
உடனே
அவள்
“
எதுக்கு
என்னோட
தங்கச்சிய
திட்றீங்க
?
அவ
தான்
சொன்னான்னு
உங்களுக்குத்
தெரியுமா
..”
என்று
பதிலுக்குச்
சண்டைக்குச்
செல்ல
… “
அவ
புத்தி
தெரிஞ்சது
தானே
…
அதுவும்
அப்ப
அவ
நம்ம
வீட்ல
தான
இருந்தா
.”
ஆதி
எகிற
…
ரஞ்சனாவிற்குமே
சஞ்சனா
மேல்
சந்தேகம்
இருந்ததால்
…
இப்போதைக்கு
அடக்கி
வாசிப்போம்
என்று
அமைதியாகச்
சென்று
படுத்துவிட்டாள்
.
மறுவாரம்
ஞாயிறு
மதியம்
ஆரு
,
சூர்யாவோடு
அவள்
பிறந்த
வீட்டிற்கு
வந்த
போது
வித்யா
அவர்களுக்கு
உணவு
பரிமாறிக்
கொண்டே
, “
நீயும்
தான
உங்க
சின்ன
அண்ணனோட
கூட்டு
.
நான்
மீராவை
உன்னோட
சினேகிதின்னு
தான்
தாங்குறேன்னு
நினைச்சேன்
.
இப்ப
தான
தெரியுது
,
அவள
உங்க
அண்ணனோட
ஜோடி
சேர்த்திருக்கேன்னு
.
உனக்குச்
சோறே
போட
கூடாது
.
ஆனா
…
கல்யாணம்
ஆகி
வேற
வீட்டுக்கு
போய்ட்ட
,
இனி
நீ
அந்த
வீட்டு
பொண்ணு
,
அதுதான்
போடறேன்
.”
அவர்
கோபமாகச்
சொல்ல
…
ஆருவிற்குத்
தட்டில்
விதவிதமாகச்
சாப்பிட
வைத்து
விட்டு
திட்டும்
அம்மாவை
என்ன
செய்வது
என்று
தெரியவில்லை
…
ரோஷமாகச்
சாப்பிடாமல்
எழுந்து
செல்லவும்
மனம்
இல்லை
.
அவள்
தட்டை
பார்ப்பதும்
,
அம்மாவை
பார்ப்பதுமுமாக
இருந்தாள்
.
அவள்
காதருகில்
குனிந்து
சூர்யா
, “
இதுக்கெல்லாம்
பீல்
பண்ண
கூடாது
…
உங்க
அம்மா
தான
திட்றாங்க
.
அதெல்லாம்
கண்டுக்காத
…
நீ
பாட்டுக்கு
உள்ள
தள்ளு
…”
என
அவன்
சொல்ல
…
ஆருவும்
சாப்பிட
ஆரம்பித்தாள்
.
வித்யா
சமையல்
அறைக்குள்
சென்றதும்
,
ஆதி
“
உனக்கு
ஒரு
விஷயம்
தெரியுமா
ஆரு
,
அன்னைக்கு
அம்மா
அர்ஜுன்கிட்ட
…
நம்ம
ஆருவுக்கு
நாம
மாப்பிள்ளை
பார்த்துதான்
கல்யாணம்
பன்னோம்னு
சொன்னாங்க
.
அப்படியா
?”
என்று
கேட்க
…
ஆருவிற்குப்
புரை
ஏறியது
.
அவள்
இன்னைக்கு
என்னை
எல்லோரும்
சாப்பிட
விடக்
கூடாதுன்னு
முடிவோட
இருக்குங்க
போலிருக்கு
,
இது
தெரியாம
வந்து
மாட்டிகிட்டோம்
.
ஏற்கனவே
அர்ஜுன்
விஷயம்
தெரிஞ்சு
கோபமா
இருக்கிற
அம்மா
…
என்னோட
விஷயம்
தெரிஞ்சா
…
பத்திரகாளியாவே
மாறிடுவாங்க
.
சீக்கிரம்
இங்கிருந்து
எஸ்கேப்
ஆகணும்
என்று
நினைத்தாள்
.
அவள்
முழிப்பதை
பார்த்து
ஆதிக்கு
சிரிப்பாக
வந்தது
.
அப்போது
அர்ஜுன்
வந்து
அவர்களோடு
சாப்பிட
அமர்ந்தான்
.
அவனுக்கு
ரஞ்சனா
தான்
பரிமாறினாள்
.
வித்யா
அர்ஜுனை
பார்த்ததும்
,
அவரது
அறைக்குள்
சென்றுவிட்டார்
.
அர்ஜுனின்
முகம்
வாடிவிட்டது
.
அதைக்
கவனித்த
ஆரு
,
அர்ஜுனின்
அருகே
சென்று
அமர்ந்து
அவன்
தோள்
சாய்ந்து
, “
சீக்கிரம்
சரி
ஆகிடும்
அர்ஜுன்
,
நான்
வேணா
அம்மாகிட்ட
பேசவா
?”
என்று
கேட்க
…
அர்ஜுன்
வேண்டாம்
என்று
தலை
அசைத்தவன்
“
நீ
எனக்கு
ஒரு
ஹெல்
பண்ணனும்
.”
என்றான்
.
ஆரு
என்ன
என்பது
போல்
அவனைப்
பார்க்க
… “
நீயும்
,
சூர்யாவும்
பெங்களூர்
போய்
மீராவை
பார்த்திட்டு
வரணும்
.
எனக்காக
இதைச்
செய்வியா
ஆரு
.”
என்று
கேட்க
…
“
கண்டிப்பா
அர்ஜுன்
.
நாங்களே
அங்க
போகணும்னு
தான்
இருந்தோம்
.
எங்களை
மது
அண்ணி
ரொம்ப
நாளா
கூப்பிடுறாங்க
,
அதைச்
சாக்கா
வச்சு
போய்
மீராவோட
ரெண்டு
நாள்
இருந்திட்டு
வரேன்
.”
என்றாள்
ஆரு
. “
நீயும்
எங்களோட
வாயேன்
அர்ஜுன்
.”
சூர்யா
சொல்ல
… “
இல்ல
வேண்டாம்
,
நீங்க
போய்ப்
பார்த்திட்டு
வாங்க
.”
என்றான்
அர்ஜுன்
.
அர்ஜுன்
கேட்டு
கொண்டபடி
சூர்யாவும்
,
ஆருவும்
மறு
வாரம்
பெங்களூர்
கிளம்பி
சென்றனர்
.
மூன்று
நாட்கள்
அங்கே
தங்கியவர்கள்
,
முதல்
நாளே
மீராவை
அவள்
வீட்டில்
சென்று
சந்தித்து
…
அர்ஜுன்
மீராவுக்காக
நிறையப்
பொருட்கள்
வாங்கிக்
கொடுத்திருந்தான்
,
அதையெல்லாம்
அவளிடம்
கொடுத்துவிட்டு
,
தங்களுடன்
அவளையும்
அழைத்துக்
கொண்டு
மது
வீட்டிற்குச்
சென்றனர்
.
அங்கே
மது
வீட்டில்
அனைவரும்
சேர்ந்து
ஊர்
சுற்றுவதும்
,
இரவில்
அரட்டை
அடிப்பதுமாக
நன்றாகப்
பொழுதை
கழித்தனர்
.
மூன்று
நாட்கள்
சென்று
ஊருக்கு
கிளம்பும்
போது
…
சூர்யா
மீராவிடம்
, “
நாங்க
இனி
மாசம்
ஒரு
தடவை
வந்து
உன்னைப்
பார்க்கிறோம்
மீரா
.
கவலைபடாதே
சீக்கிரம்
சரி
ஆகிடும்
.”
என்று
சொல்லிவிட்டு
வந்தான்
.
இங்கு
அர்ஜுனின்
வீட்டிலும்
கணேசன்
,
ஆதி
,
ரஞ்சனா
என்று
ஒருவர்
மாற்றி
ஒருவர்
வித்யாவின்
மனசை
மாற்ற
முயற்சி
செய்து
கொண்டு
தான்
இருந்தனர்
.
அர்ஜுன்
மட்டும்
அமைதியாக
இருந்தான்
.
இப்படியே
ஆறு
மாதங்கள்
சென்ற
போது
…
அர்ஜுன்
,
சூர்யா
வேலை
செய்யும்
அலுவலகத்தில்
ஒரு
மூன்று
மாதம்
மட்டும்
சூர்யாவை
ஆஸ்திரேலியா
சென்று
வர
சொன்னார்கள்
.
ஆறு
சூர்யாவை
விட்டு
இருக்க
முடியாது
என்று
அழுது
கரைய
…
அவனுக்குப்
பதில்
அர்ஜுன்
ஆஸ்திரேலியா
செல்லும்
முடிவை
எடுத்தான்
.
அர்ஜுன்
மீராவிடம்
தான்
சூர்யாவிற்குப்
பதில்
ஆஸ்திரேலியா
செல்ல
போவதாகச்
சொல்ல
…
அவளும்
பார்த்து
போயிட்டு
வாங்க
அர்ஜுன்
என்றாள்
. “
நான்
உனக்காகவும்
தான்
மீரா
போறேன்
.
நான்
இங்க
இருக்கிறதுனால
தான
நீ
சென்னைக்கு
வர
மாட்டேங்கிற
…
நான்
ஆஸ்திரேலியா
போய்டா
,
நீ
வருவே
தான
.”
அர்ஜுன்
சொல்ல
…
மீராவிற்கு
இதனை
நாள்
அர்ஜுனிடம்
அழுது
விடக்கூடாது
என்ற
கட்டுபாடு
எல்லாம்
மீறி
அழுகை
வந்தது
.
அவள்
அழுததும்
அர்ஜுன்
துடித்து
விட்டன்
.
“
மீரா
…
நாம
கல்யாணம்
பண்ணிக்கலாம்
டா
.
அம்மா
நம்மைக்
கல்யாணம்
பண்ணிக்கத்
தான்
சொன்னாங்க
.
ஆனா
..
அவங்க
முழு
மனசா
சொல்லலைன்னு
எனக்குத்
தெரியும்
.
அதனால
…
அவங்க
முழு
மனசோட
ஒத்துக்கிட்டதும்
செஞ்சிக்கலாம்னு
நினைச்சேன்
.
நாம
கல்யாணம்
பண்ணிக்கிட்டு
அம்மாவோட
மனசை
மாத்தலாம்
,
சரியா
டா
…
எனக்கு
நீ
தனியா
இருக்கிறது
மனதுக்குக்
கஷ்ட்டமா
இருக்கு
.”
அர்ஜுன்
சொல்ல
…
“
வேண்டாம்
அர்ஜுன்
,
வித்யா
அத்தை
கண்டிப்பா
ஒத்துக்குவாங்க
,
எனக்கு
நம்பிக்கை
இருக்கு
,
வெயிட்
பண்ணலாம்
அர்ஜுன்
ப்ளீஸ்
…”
என்றாள்
மீரா
.
“
எனக்குத்
தெரியும்
நீ
இப்படித்
தான்
சொல்வேன்னு
,
சரி
பார்ப்போம்
.
வச்சிடுறேன்
.”
என்று
சொல்லிவிட்டு
அர்ஜுன்
போன்னை
வைத்தான்
.
அவனுக்கு
எப்போது
தன்
அம்மா
தங்கள்
திருமணத்திற்குச்
சரி
என்று
சொல்வார்கள்
என்று
இருந்தது
.
ஒரு
பக்கம்
மீரா
தனியாகப்
பெங்களூரில்
இருக்கிறாள்
.
அவளோடு
இருந்த
கீர்த்தனாவிற்குத்
திருமணமாகி
அமெரிக்கா
சென்றுவிட்டாள்
.
இன்னொரு
பக்கம்
மீராவின்
அப்பா
வேறு
அடிக்கடி
போன்
செய்து
,
எப்ப
கல்யாணத்தை
வச்சிக்கலாம்
?
மீரா
சென்னைக்கே
வர
மாட்றா
ஏன்
?
என்று
கேட்டுக்
கொண்டிருக்கிறார்
.
ஆஸ்திரேலியா
சென்று
வந்ததும்
,
அம்மாவிடம்
பேசி
முடிவு
எடுத்து
விட
வேண்டும்
என்று
நினைத்தபடி
ஆஸ்திரேலியா
செல்ல
…
பெட்டியில்
எடுத்து
வைத்தான்
.
அர்ஜுன்
அடுத்த
ஒரு
வாரத்தில்
ஆஸ்திரேலியா
கிளம்பினான்
.
கிளம்பும்
முன்
வித்யாவிடம்
சென்று
போயிட்டு
வரேன்
மா
…
என்று
சொல்லும்
போதே
…
அவன்
கண்கள்
கலங்கியது
.
வித்யா
மெளனமாக
இருந்தார்
.
ஆதி
,
சூர்யா
,
மற்றும்
ஆரு
அர்ஜுனோடு
விமான
நிலையத்துக்குச்
சென்றனர்
.
அர்ஜுன்
வீட்டில்
இருந்து
கிளம்பியதும்
“
வித்யா
,
நீ
ரொம்பப்
பண்ற
…
உனக்கு
உன்னோட
பையன்
உன்
சம்பந்தம்
இல்லாம
கல்யாணம்
பண்ண
மாட்டாங்கிற
திமிர்
.
அவனையும்
,
மீராவையும்
நீ
எவ்வவளவு
கஷ்டபடுத்துற
?
தோளுக்கு
மேல
வளர்ந்த
பையன்
எப்படிக்
கண்
கலங்கிட்டுப்
போறான்
பாரு
.
இனியும்
உன்னோட
சம்மதத்துக்காக
நான்
காத்திருக்க
மாட்டேன்
.
அவன்
ஆஸ்திரேலியால
இருந்து
வரட்டும்
,
நான்
அவங்க
கல்யாணத்தை
நடத்த
போறேன்
.
நீ
என்ன
அவனை
வீட்டை
விட்டுப்
போகச்
சொல்றது
,
என்
பையன்
என்னோட
தான்
இருப்பான்
.”
என்று
கணேசன்
முடிவாகச்
சொல்லிவிட்டு
சென்றார்
.
அர்ஜுன்
ஆஸ்திரேலியா
சென்றதும்
மீரா
சென்னைக்கு
வந்தாள்
.
அவள்
இங்கே
வந்து
எட்டு
மாதம்
ஆகி
இருந்தது
.
அதனால்
வருணுக்கு
மீரா
மீது
கோபம்
.
அவன்
அவளுடன்
பேசாமல்
முகத்தைத்
தூக்கி
வைத்துக்
கொண்டு
இருந்தான்
.
மீராவிற்கு
அவனைப்
பார்த்ததும்
மிகவும்
சந்தோஷமாக
இருந்தது
.
வருண்
இப்போது
கல்லூரி
முதலாம்
ஆண்டில்
இருந்தான்
.
குழந்தை
தனம்
போய்
,
அவன்
முகத்தில்
மீசை
அரும்ப
ஆரம்பித்து
இருந்தது
.
மீரா
வருணின்
பின்னாலையே
திரிந்து
மன்னிப்பு
கேட்டதும்
தான்
வருண்
மலை
இறங்கினான்
.
Advertising
Advertising