Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 37 2
Post Views:
1,389
வருண்
இத்தனை
நாள்
மீரா
வராமல்
இருந்ததிற்குக்
காரணம்
கேட்க
…
மீரா
இப்போது
அவன்
சின்னப்
பிள்ளை
இல்லை
என்பதால்
…
அவனிடம்
மனம்
திறந்து
எல்லாவற்றையும்
சொன்னாள்
.
அவளுக்கும்
அவள்
மனதில்
இருப்பதை
யாரிடமாவது
சொன்னால்
தான்
நிம்மதியாக
இருக்கும்
என்று
தோன்றியது
.
மீரா
சொன்னதை
எல்லாம்
கேட்கும்
போது
வருணுக்கு
இப்படிக்
கூட
ஒருவரை
காதலிக்க
முடியுமா
என்று
தோன்றியது
.
அவள்
அர்ஜுன்
மேல்
உயிரையே
வைத்திருந்தும்
,
அவன்
அம்மாவிற்காக
அவனைப்
பார்க்காமல்
இருக்கிறாள்
என்று
தெரிந்த
போது
அவனுக்கு
மீரா
மீது
மரியாதை
வந்தது
.
அதே
நேரத்தில்
அர்ஜுன்
குடும்பத்தார்
மீது
கோபமும்
வந்தது
.
எங்க
அக்காக்கு
என்ன
குறைச்சல்
?
அவளுக்கு
இருக்கும்
அழகுக்கும்
,
அறிவுக்கும்
அவளுக்கு
எப்பேர்பட்ட
வாழ்க்கை
அமையும்
,
அவளைப்
போய்
எப்படி
அர்ஜுனின்
அம்மா
வேண்டாம்னு
சொல்லலாம்
என்று
நினைத்தான்
.
“
அக்கா
…
போதும்
நீ
அவங்களுக்காகப்
பார்த்தது
,
இனி
நீ
பெங்களூர்
போக
வேண்டாம்
.
இங்கயே
இரு
…
அர்ஜுன்
ஆஸ்திரேலியால
இருந்து
வரட்டும்
,
ரெண்டுல
ஒன்னு
பார்க்கலாம்
.”
“
என்னடா
திடிர்னு
வேலைக்குப்
போகாதன்னு
சொல்ற
?”
மீரா
புரியாமல்
கேட்க
…
“
இத்தனை
நாள்
நீயே
எல்லா
முடிவும்
எடுத்தது
போதும்
.
இனி
நாங்க
சொல்றதையும்
கொஞ்சம்
கேளு
.”
என்றான்
வருண்
.
மீராவுக்கும்
அந்த
வேலை
பிடிக்கவில்லை
…
அவளுக்கு
ஏனோ
அந்த
வேலையில்
மனம்
ஒன்றவில்லை
.
இயந்திரத்தனமாக
வேலை
பார்ப்பது
போல்
தோன்றியது
.
அதோடு
அவள்
செய்து
கொண்டிருந்த
ப்ராஜெக்ட்டும்
முடிந்துவிட்டது
.
இனி
அடுத்த
வாரத்தில்
இருந்து
புது
ப்ராஜெக்ட்
தான்
.
அதனால்
அவளும்
தான்
வேலையை
விடப்
போவதாக
மெயில்
அனுப்பினாள்
.
அதை
அர்ஜுனிடம்
சொன்ன
போது
,
அவன்
மிகவும்
சந்தோஷபட்டான்
.
ஹப்பா
…
இனி
தனியாக
இருக்க
மாட்டாள்
என்ற
நிம்மதி
அவனுக்கு
.
சஞ்சனாவிற்கு
ஆண்
குழந்தை
பிறந்திருந்தது
.
அவளையும்
,
குழந்தையையும்
பார்க்க
ரஞ்சனா
சென்றாள்
.
ஒரு
வாரம்
அங்கே
தங்கி
இருந்தவள்
,
மெதுவாகச்
சஞ்சனாவிடம்
அவள்
வித்யாவிடம்
அர்ஜுன்
,
மீரா
பற்றிச்
சொன்னாளா
என்று
விசாரிக்க
…
சஞ்சனா
அழுதுவிட்டாள்
.
“
ரஞ்சு
கா
ப்ளீஸ்
..
என்னை
நம்பு
.
நான்
எதுவும்
அவங்ககிட்ட
சொல்லலை
.
நீயே
என்னைப்
பத்தி
இப்படி
நினைக்கிறேன்னா
…
மத்தவங்களும்
என்னைத்
தப்பா
தான
நினைச்சிட்டு
இருப்பாங்க
.”
“
இல்லை
சஞ்சு
,
யாரும்
அப்படி
நினைக்கலை
எனக்குத்
தான்
சந்தேகம்
.
அது
தான்
அப்படிக்
கேட்டுட்டேன்
சாரி
.”
ரஞ்சனா
சொல்ல
…
சஞ்சனா
“
விடுக்கா
…
நான்
முன்னாடி
அப்படித்
தான
இருந்தேன்
.”
என்று
சாதாரணமாகச்
சொன்னாள்
.
தன்
தங்கையின்
மாற்றத்தை
பார்த்து
மகிழ்ந்த
ரஞ்சனா
அவளைக்
கட்டி
கொண்டாள்
.
சஞ்சனாவும்
,
தினேஷும்
இனி
திருச்சியிலேயே
இருப்பது
என்று
முடிவு
செய்திருந்தனர்
.
அது
எல்லோருக்கும்
மகிழ்ச்சியைக்
கொடுத்தது
.
அர்ஜுன்
ஆஸ்திரேலியா
சென்று
ஒரு
மாதம்
ஆகியிருந்தது
.
மீராவும்
கிட்டத்தட்ட
இரண்டு
வருடங்கள்
பெங்களூரில்
இருந்ததால்
…
இப்போது
அவள்
வீட்டில்
சென்னையில்
இருப்பது
மனதுக்குச்
சந்தோஷமாக
இருந்தது
.
அவளும்
வருணும்
சேர்ந்து
ஷட்டில்
விளையாடுவது
,
ஒன்றாகச்
சினிமாவுக்குச்
செல்வது
என்று
சந்தோஷமாகப்
பொழுதை
போக்கினர்
.
மீரா
தன்
பரத
நாட்டிய
வகுப்பிற்குத்
திரும்பி
செல்ல
ஆரம்பித்தாள்
.
மீனாட்சியும்
இப்போது
மீராவுடன்
நன்றாகப்
பழகினார்
.
மீராவும்
இப்போது
தான்
தன்
சொந்த
வீட்டில்
இருப்பது
போல்
உணர்ந்தாள்
.
அர்ஜுனும்
,
மீராவும்
போன்னில்
பேசிக்கொள்வார்களே
தவிர
…
ஸ்கைப்பில்
கூடப்
பார்ப்பது
இல்லை
.
இருவருக்கும்
தங்களின்
வருத்தத்தை
மற்றவர்களுக்குக்
காட்ட
விருப்பும்
இல்லை
.
அதனால்
பேச்சோடு
முடித்துக்
கொள்வார்கள்
.
ஒரு
நாள்
ஆருவும்
,
ரஞ்சனாவும்
வித்யாவிடம்
ஷாப்பிங்
செல்வதாகச்
சொல்லிவிட்டு
மீராவை
வெளியில்
சந்தித்தனர்
.
ஐஷுவை
வித்யாவிடம்
விட்டு
வந்ததால்
…
மூவரும்
ஜாலியாக
ஊர்
சுற்றிவிட்டு
ஒரு
ஹோட்டலுக்குச்
சாப்பிட
சென்றனர்
.
அப்போது
பேச்சு
வாக்கில்
ரஞ்சனா
, “
இன்னும்
எத்தனை
நாள்
நீயும்
,
அர்ஜுனும்
இப்படியே
இருக்கப்
போறீங்க
மீரா
…
அத்தை
தான்
உங்களைக்
கல்யாணம்
பண்ணிக்கத்
தான
சொல்றாங்க
.
ஆனா
…
ஒரே
வீட்ல
இருக்கக்
கூடாது
தனியா
போகச்
சொல்றாங்க
.
பேசாம
நீங்க
அவங்க
சொல்லும்
போதே
கல்யாணம்
பண்ணிக்கோங்க
.
அப்புறம்
கொஞ்சம்
,
கொஞ்சமா
அவங்க
மனசை
மாத்தி
நம்ம
வீட்டுக்கு
வந்துடுங்க
.
அர்ஜுன்
ஊருக்கு
போன
அன்னைக்கு
மாமாவும்
அத்தைய
திட்டிட்டாங்க
.”
என்று
வீட்டில்
நடந்த
அனைத்தையும்
விவரமாகச்
சொல்ல
…
மீரா
அதைக்
கேட்டு
அதிர்ந்தாள்
.
ஆனால்
….
ரஞ்சனாவிடமும்
,
ஆருவிடமும்
எதையும்
காட்டிக்கொள்ளவில்லை
….
பேசாமல்
சாப்பிட்டாள்
.
மீரா
வீட்டுக்கு
வரும்
வழியெல்லாம்
…
தன்னால்
அர்ஜுனின்
வீட்டில்
பிரச்சனை
வருகிறதே
,
என்று
வருத்தப்பட்டுக்
கொண்டே
வந்தாள்
.
வீட்டுக்குள்
சென்ற
போது
அங்கே
அவளது
அம்மா
ஷ்யாமளா
அவளுக்காகக்
காத்திருந்தாள்
.
அவளைப்
பார்த்ததும்
மீராவிற்கு
எரிச்சல்
தான்
வந்தது
.
இந்தத்
தடவை
எதற்கு
வந்திருக்காறோ
என்று
நினைத்துக்
கொண்டே
அவர்
எதிரில்
சென்று
அமர்ந்தாள்
.
ஷ்யாமளா
பொதுவான
நல
விசாரிப்புகளுக்குப்
பிறகு
“
மீரா
…
நான்
சொல்றதை
இப்பவாவது
கேளு
.
உங்க
அப்பா
உனக்குக்
கல்யாணம்
பண்ணி
வைக்கிற
மாதிரி
தெரியலை
.
நீ
அவரை
நம்பிட்டு
இருந்தா
…
காலமெல்லாம்
இப்படியே
இருக்க
வேண்டியது
தான்
.”
என்று
பேச
…
மீராவிற்குச்
சுள்ளென்று
கோபம்
வந்தது
.
“
உங்களுக்குத்
தேவை
இல்லாத
விஷயம்
எல்லாம்
நீங்க
பேச
வேண்டாம்
.
எதுக்கு
வந்தீங்களோ
அதை
மட்டும்
சொல்லிட்டு
போங்க
.”
என்றாள்
கடுப்பாக
.
“
நான்
உன்னோட
அம்மா
….
எனக்கு
உன்
கல்யாண
விஷயத்தைப்
பத்தி
பேச
உரிமை
இல்லையா
…
நான்
அதுக்குத்
தான்
இப்ப
லண்டன்ல
இருந்து
வந்தேன்
.
வம்ஷி
இன்னும்
உன்னை
விரும்புறான்
,
இப்பவும்
நீ
ஓகே
சொன்னா
…
கல்யாணம்
பண்ணிக்கத்
தயாரா
இருக்கான்
.
சரின்னு
சொல்லு
மீரா
…
அப்புறம்
நீ
ராணி
மாதிரி
வாழலாம்
.”
ஷ்யாமளா
ஆர்வமாகக்
கேட்க
…
“
முதல்ல
இங்க
இருந்து
போங்க
,
எனக்கு
யாரை
,
எப்ப
கல்யாணம்
பண்ணிக்கணும்னு
தெரியும்
.
நீங்க
என்
விஷயத்துல
தலையிடாதீங்க
…”
மீரா
கோபமாகச்
சொல்ல
…
“
நீ
இன்னும்
அந்த
அர்ஜுன்
உன்னைக்
கல்யாணம்
பண்ணிப்பான்னு
நம்பிக்கையில
இருக்கியா
…
அது
நடக்காது
.
நான்
அர்ஜுனோட
அம்மாகிட்ட
விளக்கமா
பேசிட்டேன்
.
உங்களை
மாதிரி
சாதாரணக்
குடும்பத்தில
…
எல்லாம்
என்
பொண்ணு
மீரா
வந்து
வாழ
மாட்டா
…
அப்படியே
வந்தாலும்
,
அவளுக்கு
உங்க
வீட்டுல
இருக்க
முடியாது
.
அவளும்
என்னை
மாதிரி
தான்
போகப்
போறான்னு
சொன்னேனே
…”
ஷ்யாமளா
பெருமையாகச்
சொல்ல
…
அது
மீராவிற்கு
உச்சகட்ட
அதிர்ச்சியாக
இருந்தது
.
“
நான்
உனக்கு
என்ன
பாவம்
செஞ்சேன்
?
என்னைப்
பெத்திட்டு
ஏன்
இந்தப்
பாடுபடுத்திற
?
முதல்ல
என்னை
ஆறு
வயசில
தவிக்க
விட்டுட்டு
….
உன்னோட
சந்தோஷம்
தான்
பெருசின்னு
போன
.
இப்ப
என்னோட
வாழ்க்கையவே
இப்படிக்
கெடுத்து
வச்சிருக்கியே
.
இதுக்கு
நீ
என்னைப்
பெறாமலே
இருந்திருக்கலாமே
…
இப்படி
என்னைக்
கொஞ்சம்
…
கொஞ்சமா
கொல்றதுக்கு
…
என்னை
மொத்தமா
கொன்னுடு
…”
என்று
கதறிய
மீரா
,
சென்று
ஷ்யமளாவின்
கைகளை
எடுத்து
தன்
கழுத்தில்
வைத்து
அழுத்த
….
வருண்
வேகமாக
ஓடி
வந்து
அவளைப்
பிடித்து
இழுத்து
அனைத்துக்
கொண்டான்
.
“
அக்கா
விடுக்கா
…
டென்ஷன்
ஆகாத
அமைதியா
இரு
…”
என்று
வருண்
தேற்ற
…
மீனாக்ஷி
மீராவிற்குக்
குடிக்க
நீர்
கொண்டு
வந்து
கொடுத்தவள்
.
ஷ்யமளாவை
பார்த்து
, “
நீங்க
மீராவை
அவங்க
அப்பா
பொறுப்பிலே
விட்டுட்டு
போய்டீங்க
….
இப்ப
ஏன்
வந்து
தொந்தரவு
கொடுக்றீங்க
?
அவ
மேஜர்
அவளுக்கு
யாரை
கல்யாணம்
பண்ணிக்க
விருப்பமோ
அவங்களைக்
கல்யாணம்
பண்ணிக்க
அவளுக்கு
உரிமை
இருக்கு
.
இதிலெல்லாம்
நீங்க
தலையிடுறது
நல்லாயில்லை
…”
“
அர்ஜுனோட
அம்மாட்ட
போய்
இப்படிப்
பேசி
இருக்கீங்களே
…
நாளைக்கு
மீரா
போய்
அந்த
வீட்ல
வாழணுமே
,
அவளுக்கு
அவங்களைப்
பார்க்க
சங்கடமா
இருக்காதா
…
உங்களுக்கு
நீங்க
பண்ணது
தப்புன்னு
தோணலை
.”
என
அவர்
கேட்க
,
ஷ்யாமளா
தலை
குனிந்தாள்
.
“
இனி
நீங்க
எங்க
அக்கா
வாழ்கையில
தலையிட்டீங்க
,
நான்
மனுஷனாவே
இருக்க
மாட்டேன்
.
உங்க
மேல
போலீஸ்
கம்ப்ளைன்ட்
கொடுத்துடுவேன்
.”
வருண்
மிரட்ட
….
ஷ்யாமளா
அமைதியாக
வெளியே
சென்றாள்
.
ஷ்யாமளா
போன
வருடம்
இந்தியாவிற்கு
வந்த
போது
அர்ஜுனையும்
,
மீராவையும்
ஒரு
மாலில்
பார்த்தாள்
.
இருவரின்
நெருக்கமே
காதலர்கள்
என்று
காட்டி
கொடுத்தது
.
இதனால்
தான்
மீரா
வம்ஷியை
வேண்டாம்
என்று
சொல்கிறாள்
என்று
நினைத்து
வித்யாவிடம்
சென்று
போட்டு
கொடுத்தாள்
.
மீரா
இன்னும்
அழுது
கொண்டிருக்க
…
அப்போது
ராம்நாத்
அங்கே
வந்தார்
,
அவரை
மீனாக்ஷி
தான்
போன்
செய்து
அழைத்திருந்தாள்
.
மீனாக்ஷி
நடந்ததையெல்லாம்
ராம்நாத்திடம்
சொல்ல
….
அவர்
இதுக்கு
முதல்ல
முடிவு
கட்டனும்
என்றவர்
,
உடனே
கிளம்பி
ஷ்யமளாவின்
பெற்றோரை
சந்திக்கச்
சென்றார்
.
மீரா
அவள்
அறையில்
விடிய
விடிய
அழுதவள்
,
விடிந்த
போது
ஒரு
முடிவிற்கு
வந்திருந்தாள்
.
பெற்ற
தன்
தாய்க்கே
தன்
மேல்
அக்கறை
இல்லாத
போது
,
வித்யா
தன்னை
வேண்டாம்
என்று
சொல்வதில்
தவறு
எதுவும்
இல்லை
.
தன்னால்
அவர்கள்
குடும்பம்
பிரியவும்
வேண்டாம்
.
அவர்கள்
குடும்பத்தில்
பிரச்சனையும்
வேண்டாம்
.
அதனால்
தான்
எங்காவது
சென்று
விடலாம்
என்று
உணர்ச்சி
வேகத்தில்
(
அர்ஜுன்
பயந்த
மாதிரியே
)
முடிவு
எடுத்தாள்
.
Advertising
Advertising