வித்யா வந்த சிரிப்பை அடக்கியவர், “அப்படி வா வழிக்கு, வெட்டி பந்தா காட்ற வேலையெல்லாம் இன்னையோட விட்டுட்டு…இப்ப எழுந்துக்கோ..” என்றவர், “மீராவோட அப்பா சொன்ன தேதியிலேயே கல்யாணத்தை வச்சுடுவோம். அன்னைக்கு மண்டபமும் இருக்காம்.” என்று ஒரு பெரிய மண்டபத்தின் பெயரை சொன்னார். அர்ஜுன் அவ்வளவு பெரிய மண்டபமா…என்று யோசிக்க… கணேசன் நாமும் பாதிப் பணம் குடுத்திடுவோம் என்றார்.