வயலில் நடவு வேலை நடந்து கொண்டிருந்தது..அவர்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டு, நின்று கொண்டிருந்தான் ராஜா..
உணவை கொண்டு வந்து தோப்பு வீட்டுக்குள் வைத்து விட்டு, இவனை நெருங்கிய வேலை ஆள்,
“சின்னையா,சின்னம்மா வர்றேனாக.. வந்து பரிமாறுறேன்னு சொன்னாங்க..”
“அகலா??சரி போ..”
‘இந்த வெயில்ல எதுக்கு வரா??’
யோசனையோடு நின்றான்..கார் வரும் ஒலியில் திரும்பினான்..காரில் இருந்து மதுவும், அகலும் இறங்கினார்கள்..
‘இவ எதுக்கு வர்றா??’
இருவரும் அவனை நெருங்கி இருந்தார்கள்..
“வா ண்ணா சாப்பிடலாம்..”
“இந்த வெயில்ல எதுக்கு வந்த அகல்..??”
கவனமாய், மதுவின் முகம் பார்க்காமல் பேசினான்..
“அண்ணி தான், வீட்டுக்குள்ள இருக்க போர் அடிக்குது..வயலுக்கு போலாம்னு சொல்லுச்சு..”
“சரி, உள்ள போய் சாப்பாடு எடுத்து வை.. நான் வடக்க போய், வரப்பு மாத்தி விட்டு வரேன்..”
“சரி ண்ணன்..”
தோப்பு வீட்டுக்குள் நுழைந்தாள், அகல்.
“அகல்,நான் அப்படியே வயலை சுத்தி பார்த்துட்டு வரேன்..”
“இரு அண்ணி,சாப்பிட்டு போலாம்..நானும் வரேன்..”
“இல்ல,இப்போ போய் ஒரு தடவை பார்த்துட்டு வரேன்..அப்புறம் ஒருதடவை போலாம்..”
அவள் பதில் கூறும் முன் விரைந்து விட்டாள்.. எதிரே வந்த பெண்ணிடம்,வடக்கு எது என கேட்டு, அவன் போன பக்கம் வந்தாள்..
தூரத்தில், அவன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, வரப்பு மாத்தி கொண்டிருந்தான்..
“நீ ,கட்டும் வேட்டி மடிப்புல
நான் மயங்கி போனேனே!!
உன், கட்டழகு மீசையில
கிறங்கிப் போனேனே..!!”
அவள் பாடலில் திரும்பி பார்த்தவன்,அவளை முறைத்து விட்டு, வேறு பாதையில் சென்றான்..
“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்
போ போ போ..!!”
மனதிற்குள் மகிழ்ச்சி ஊற்று பொங்க ஆரம்பித்தாலும்..எதையும் காட்டி கொள்ளாமல் நடந்தான்..சிறிது தூரம் வந்த பிறகு தான் கவனித்தான், அது கொஞ்சம் புதர் மண்டிய பகுதி.. சுத்தம் செய்ய ஆள் வர சொல்லி இருந்தான்..
ஆள் பற்றாக்குறை..ஆள் கிடைத்ததும் அங்கு வாழை மரங்கள் வைத்தால், நன்கு வரும்..தண்ணீர் நிற்கும் பகுதி,யோசனையோடு நின்றான்..
அவன் பின்னே வந்த மதுவும் நின்றாள்..புன்னகையுடன் அவனை நெருங்கும் போது தான் கவனித்தாள், அவன் கால் அருகே ஒரு நல்ல பாம்பு. படம் எடுத்துக் கொண்டு, மிக அருகில் நின்றது..
ஒரு நிமிடம் அவள் இதயம் நின்று துடித்தது..முகம் எல்லாம் வியர்க்க,தொண்டை குழியில் இதயம் துடிக்க, மெதுவாய் அவனை நெருங்கியவள்,
“வரு போய்டுங்க..”
கத்திய படி, அவன் முதுகில் கை வைத்து, தன் பலம் கொண்ட மட்டும் தள்ளி விட்டாள்..
எதிர் பார்க்காத நிலையில் இருந்ததால்,வேகமாய் முன்னே சென்று தடுமாறி, ஒரு மரத்தை பிடித்து சமாளித்து நின்றான் ராஜா..
அவள் கத்தலிலும், செய்கையிலும், அவள் புறம் கவனம் திரும்பிய நாகம், அவளின் காலில் தன் கோபத்தை வெளிப்படுத்தியது..
பாம்பு கொத்தியதும்,
“அம்மா..”
என கால்களை பிடித்துக் கொண்டு கத்தினாள் மது..
மரத்தை பிடித்து சமாளித்தவன் திரும்புவதற்கும், நாகம் அவளை தீண்டுவதற்கும் சரியாய் இருந்தது..
“மதி…”
கத்திக் கொண்டே அவள் அருகில் வந்தான்..பாம்பு அதற்குள் ஓடி மறைந்திருந்து..
அந்த நிலையிலும், அவன் மதி என்ற அழைப்பு, அவளுக்கு இனிமை தந்தது..
அவளை கைகளில் ஏந்தி கொண்டவன், ஆட்கள் இருக்கும் பகுதிக்கு வந்தான்..
“என்னாச்சு,என்னாச்சு சின்னையா??”
பல குரல்கள்..
“பாம்பு கொத்திடுச்சி..”
வேகமாய், ஒரு கயிறு கொண்டு, அவள் பாதத்தில் கட்டுப் போட்டாள் ஒரு பெண்மணி..
மதுவை காரில் ஏற்றினான் ராஜா..ஓட்டுநர் வேகமாய் காரை எடுக்க, மருத்துவச்சியின் வீடு நோக்கி சென்றது வண்டி..
மருத்துவச்சியின் வீட்டு வாசலில் கார் நின்றதும்..வேகமாய் அவளை தூக்கி கொண்டு, அவர் வீட்டுக்குள் போனான்..
சமையல் அறையில் இருந்து, சத்தம் கேட்டு வெளியே வந்த மருத்துவச்சி,
“என்ன தம்பி, என்ன ஆச்சு..??”
“பா..பாம்பு கொத்திடுச்சி..”
மூச்சு வாங்க, பதில் கூற முடியாமல் தொண்டை அடைக்க, பதில் கூறினான்..
“அட பாவமே..இப்போ தான் காய்ச்சல்ல கிடந்து எழுந்த பிள்ளை..அடுத்து பாம்பு வேற கடிச்சுருக்கு.. ஏன் தான் இந்த பிள்ளைக்கு இப்படி ஆகுதோ..”
கூறிக்கொண்டே, விஷத்தை உறிஞ்சி எடுத்தார்..பிறகு பச்சிலை வைத்து கட்டு போட்டவர்..
அவளை தெளிய வைத்தார்..
“தம்பி நான் பச்சிலை உருண்டை தரேன்..ஒரு மணி நேரத்துக்கு ஒருக்கா கொடுங்க..சாயங்காலம் வீட்டுக்கு வரேன்..ரா மூச்சுடும் தூங்க விடாதீங்க..தூங்குனா விஷம் தலைக்கு ஏறிடும்.. கவனமா ஒரு ஆள், பக்கத்துலயே தூங்கமா இருந்து பார்த்துக்கோங்க..”
கூறிவிட்டு, அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்..வீட்டில் அகல் வந்திருந்தாள்..
“என்ன ண்ணா.. அண்ணிக்கு என்ன ஆச்சு..??நான் தோப்பு வீட்டுக்குள்ள இருந்தேன்..திடீருன்னு அண்ணிக்கு பாம்பு கடிச்சிருச்சி, மருத்துவச்சி கிட்ட கூட்டிட்டு போய் இருக்கன்னு சொன்னாங்க..என்ன பண்ணன்னு புரியாம, கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்..”
“ஆமா அகல்,புதர் பக்கம் இருந்த பாம்பு..கடிச்சிருச்சி..”
“அங்க ஏன் அண்ணி போன.??.”
“எ..”
பதில் கூற வந்த ராஜாவின் கையை பிடித்து தடுத்த மது,
“உங்க அண்ணா போக வேண்டாமுன்னு தான் சொன்னார்..நான் தான், புதர் பக்கம் போய்ட்டேன்..அதான்..”
சோர்வாய் பேசி விட்டு, கண்களை மூடிக் கொண்டாள்..
கொல்லை புறத்தில் இருந்து, வேகமாய் உள்ளே நுழைந்த மரகதம்..
“என்ன லே என்ன ஆச்சு..??இந்த பேச்சி இப்போ தான் சொல்லுறா.. மது கண்ணுக்கு, பாம்பு கடிச்சுருச்சுன்னு..”
“ஆமாம் ம்மா..”
“என்ன லே?? ஒழுங்கா பார்த்துக்க மாட்டியா..??”
“அத்தை, அவர் மேல தப்பு இல்லை.. நான் தான் சொன்னது கேட்காம, அந்த பக்கம் போய்ட்டேன்..”
‘இவள் ஏன் உண்மையை மறைகிறாள்..??என்னையும் சொல்ல விடாமல்’
என்ற யோசனையோடு பார்த்திருந்தான் ராஜா..
“என்ன கண்ணு நீ??பார்த்து போக மாட்டியா..??”
அதன் பின், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, பச்சிலை உருண்டை கொடுத்து பார்த்துக் கொண்டான் ராஜா..
அகலும் கூட இருந்து பார்த்துக் கொண்டாள்..
மரகதம், கோவிலில் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்து விட்டு, அங்கு சென்று விட்டார்..
இரவு வந்தது..மதுவின் கண்கள் தூக்கத்திற்கு கெஞ்சியது..
அவள் கண் சொருகும் போதெல்லாம், அவள் கன்னம் தட்டினான் ராஜா..
“மது தூங்காத..இங்க பாரு.”
‘அப்போ மட்டும் மதி..இப்போ மதுவா..’ அவனை முறைத்தவள்..
“எனக்கு தூக்கம் வருது..”
“சொன்னா கேளு மது..தூங்க கூடாதுன்னு மருத்துவச்சி சொன்னாங்க தானே..”
“நான் தூங்குவேன்..”
“என்ன பிடிவாதம் இது மது..??”
“நீங்க மட்டும் பிடிவாதமா இருக்கீங்க..நான் இருந்தா தப்பா..??”
“நான் என்ன பிடிவாதம் பண்ணேன்..??”
அருகில் நின்ற அகல், இவர்கள் பேசுவதை புரியாமல் பார்த்திருந்தாள்..
“அகல், கொஞ்சம் தண்ணி கொண்டு வரியா??”
அவளை அனுப்பினாள் மது..
பிறகு இவனை பார்த்து,
“இப்போ சொல்லுங்க..”
“என்ன சொல்ல..??”
“ஹ்ம்ம்..இந்தியா வல்லரசு ஆகுமா??ஆகாதான்னு..”
“ச்சு மது..”
“அவன் வாயில் விரல் வைத்து தடுத்தவள்.. மது இல்ல, மதி. உங்க மதி..”
அவள் பேச்சில் திகைத்தவன்,சில நொடிகளில் சுதாரித்து,அவள் விரல்களை எடுத்து விட்டு,
“அது..ஏதோ அதிர்ச்சில சொல்லி இருப்பேன்..”
“ஓஹோ..அப்போ நான் காய்ச்சல்ல இருக்கும் போது, என் அறைக்கு வந்து, என்னை விரும்புறேன்னு சொன்னதும், அதிர்ச்சில தானா??”
அவளின் கேள்வியிலும்,பார்வையின் கூர்மையுள்ளும்,வேறு புறம் திரும்பியவன்,
“நான் எப்போ உன் அறைக்கு வந்தேன்..கனவு எதுவும் கண்டியா??”
“அப்போ,நீங்க என் அறைக்கு வரல..”
அவன் முகத்தை திருப்பியவள்,
“என் கண்ணை பார்த்து சொல்லுங்க..நீங்க என் அறைக்கு வரல..உங்க காதலை சொல்லலன்னு..”
“இப்போ எதுக்கு அதெல்லாம் விடு..”
அவள் கைகளை விலகினான்..
“இல்ல..இப்போ எனக்கு தெரிஞ்சாகனும்..நானும் தூக்கத்துல, நீங்க பேசுனது எல்லாம் கனவுன்னு தான் நினைச்சேன்..அது கனவு இல்லை நிஜம்…என் காதல் என் கிட்ட சேர்ந்துடுச்சுன்னு, எனக்கு தெளிவா புரிய வச்சுது இது..”
தன் கைகளை விரித்து காண்பித்தாள். அவள் உள்ளங்கையில், அவன் மோதிரம்..
எங்கேயோ தொலைத்து விட்டதாய், அவன் தேடி கொண்டிருந்த மோதிரம்..
திகைத்து போய் அவள் முகம் பார்த்தான்..
“அன்னைக்கு, என் கையை பிடிச்சு காதலை சொல்லி, முத்தம் கொடுத்துட்டு, கையை எடுக்கும் போது, இது என் கைக்குள்ள வந்துடுச்சு..
இப்போ சொல்லுங்க..இன்னும் இல்லைன்னு சொல்ல போறீங்களா??துஷ்யந்தனுக்கு, மோதிரம் பார்த்து சகுந்தலை ஞாபகம் வந்துச்சாம்..உங்களுக்கு இப்போவும் ஞாபகம் வரலியா..??”
தன் கண்களை இறுக மூடி திறந்து, தன்னை நிதானப் படுத்தினான் ராஜா..
“எதுக்கு இன்னும் மறைக்குறிங்க..?? சொல்லுங்க வரு..”
அவளை நிமிர்ந்து பார்த்தான்.. பாம்பு கடிப்பதற்கு முன்னும், இப்படி தான் கூறி, அவனை தள்ளி விட்டாள்..
அப்பொழுது மனதில் சரியாய் பதியாதது, இப்போது பதிந்தது ..
“என்ன கூப்பிட்ட..??”
“வருன்னு. என் வரு..எனக்கு மட்டுமேயான வரு..”
அவன் கண்களை பார்த்த படி கூறினாள்..
தொண்டையை செருமியவன்..
“மதி,நான் அன்னைக்கு உன் கிட்ட..”
“அதெல்லாம் நான் மறந்துட்டேன் வரு..நான் உங்களுக்கு தான் சொந்தம்.அதை நீங்க அன்னைக்கு புரிஞ்சுக்கல..இப்போ புரிஞ்சுகிட்டீங்க…அது போதும் வரு..இப்போ சொல்லுங்க..என்னை விரும்புறீங்க தானே..??”
இன்னும் சற்று தயங்கினான் ராஜா..
“சத்தியமா, உங்களை தவிர யாரையும் மனசால கூட நினைச்சதில்லை வரு..உங்களை பார்த்த நாள்ல இருந்து, உங்களை நினைக்காத நாள் இல்ல..உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியுமான்னு தெரியாம, மானசீகமா உங்க கூட வாழ்ந்துட்டு இருக்கேன் வரு..ப்ளீஸ் வரு புரிஞ்சுக்கோங்க..”
உணர்ச்சி வேகத்தில் உள்ள கிடங்கை கூறியவள். சற்று சுதாரித்து,
“இன்னும் என் மேல சந்தேகம் தீரலையா உங்களுக்கு..??”
சிறு புன்னகையுடன், அவள் கைகளை எடுத்து இதழ் ஒற்றியவன்,
“காதலிப்பதை விட, காதலிக்க படுவது இனிமையானது..நான் அந்த இனிமையை அனுபவிச்சுட்டு இருந்தேன்..”
அவன் பதிலில் கண்கள் மலர அவனை பார்த்தாள்..
“வரு??”
“நீ எப்படி இருந்தாலும், என்ன தப்பு செஞ்சுருந்தாலும்..இனி நீ தான், என் எதிர்காலம்..உன்னை எங்கேயும், விட்டுக் கொடுக்க மாட்டேன்..”
அவன் பதிலில் ஆனந்த கண்ணீர் வர, வேகமாய், அவன் கன்னத்தில் இதழ் ஒற்றினாள்..
அதில் திகைத்து, வாசல் பக்கம் பார்த்தான்..
இன்னும் அகல் வர வில்லை..
“எதுக்கு அம்மா கிட்ட உண்மையை சொல்லல..??என்னை காப்பாத்த போய் தானே, இப்படி ஆச்சு உனக்கு..??”
“உண்மையை சொன்னா, அத்தை உங்கள தான் திட்டுவாங்க.. எனக்கு காய்ச்சல் வந்ததுக்கே, உங்களை தானே கோச்சுக்கிட்டாங்க..அதான் சொல்லல..”
புன்னகையுடன் அவள் கைகளை எடுத்து, அவன் கன்னத்தில் வைத்துக் கொண்டான்..
இருவரும் அடுத்தவர் பார்வையை, விழி எடுக்காமல் பார்த்தார்கள்..
“கண்ணோடு கண் சேரும் போது,
வார்த்தைகள் எங்கே போகும்
கண்ணே உன் முன்னே வந்தால்,
என் நெஞ்சம் குழந்தை ஆகும்..!!
விழியில், உன் விழியில்,
வந்து விழுந்தேன் அந்த நொடியில், என் எதிர்காலம் நீ தான் என்று,
உயிர் சொன்னதே…!!
வழியில், உன் வழியில்,
வந்து நடந்தேன் அந்த நொடியில்,
என் வழி துணை நீ தான் என்று,
நிழல் சொன்னதே..!!
உன்னோடு வாழ்ந்திட தானே
நான் வாழ்கிறேன்!!
உன் கையில் என்னை தந்து,
தோள் சாய்கிறேன், நான்
தோள் சாய்கிறேன்..!!
அவன் தோள் சாய்ந்தாள் பாவை..
அறை வாயிலில் சத்தம் கேட்டது..
அதில் கலைந்து, இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்..
அகல் நுழைந்து கொண்டிருந்தாள்.
இருவரும் கைகளை விலக்கி கொண்டனர்..விலகி அமர்ந்தார்கள்..
குறுகுறுவென இருவரையும் பார்த்த படி வந்தவள்..
“தொந்தரவு பண்ணிட்டேனா..??”
இவள் எதுவும் பார்த்தாளா.. ??என்று தெரியாமல் இருவரும் முழித்தார்கள்..
“தண்ணி சூடு பண்ணி எடுத்துட்டு வந்தேன்..நேரமாயுடுச்சுன்னு வேகமா வந்தேன்..இப்போ சீக்கிரம் வந்துட்டேன் போல..”
அவர்கள் இருவரும் கைகள் கோர்த்து பேசியதையும், பின் அவசரமாய் கைகள் விலக்கியதையும், மட்டுமே பார்த்தாள் அகல்..சிறு சந்தேகம் மட்டுமே..
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல அகல்..நீ அண்ணி கூட இரு..நான் வரேன்..”
வேகமாய் கூறிவிட்டு, கீழே சென்றான்..
முதல் முறையாக அவன் வாயால், அவளை அண்ணி என்று கூறி, அங்கீகாரம் கொடுத்து விட்டு சென்றான்..
அகல் கவனித்தாளோ இல்லையோ, மது கவனித்தாள்..உள்ள பூரிப்பை முகத்தில் காட்டாமல் மறைத்துக் கொண்டாள்..
மதுவின் முகத்தை பார்த்தாள் அகல்..முகம் மலர்ந்திருந்தது..
‘மது அண்ணியே, அண்ணியா வந்தா, நல்லா தான் இருக்கும்..பார்ப்போம்..கத்திரிக்காய் முத்தினா, கடை தெருவுக்கு வந்து தானே ஆகனும்..என்னைக்காவது விஷயம் வெளிய வரும்..அது வரை நானும், தெரியாத மாதிரியே இருக்கேன்..’
மனதோடு நினைத்து, புன்னகைத்து கொண்டவள்..இரவு முழுவதும் தூங்காமல் இருந்து, அவளையும் தூங்காமல் பார்த்துக் கொண்டாள்..
பத்து நாட்கள் கடந்திருந்தது..
“மது கண்ணு,அண்ணன் நாலு நாள் முன்ன போன் பண்ணி, இங்க வரேன்னு சொன்னுச்சு..இப்போ போன் பண்ணி, வெளிநாட்டுக்கு தொழில் சம்மந்தமா போறேன்..வர, மூணு நாலு மாசம் ஆகுமுன்னு சொல்லுது..உன் கிட்ட பேசுச்சா??”
“ஹான்.. பேசுனாங்க அத்தை. எதோ பெரிய டீல். நேரே போனா தான் சரி வரும்..யாரையும் அனுப்ப முடியாது..முக்கியமானதுன்னு சொன்னாங்க..”
“சரி கண்ணு..”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, பாண்டி வந்தான்..
“என்ன வெயில் என்ன வெயில்..எவ்ளோ வேலை.. எவ்ளோ அலைச்சல்..”
“என்ன டா.. வரும் போதே புலம்பிக்கிட்டு வர..”
“பின்ன உன்ற மவன்..மும்பை போ..அங்க போ,இங்க போன்னு, ஒரே சமயத்துல ஆயிரம் வேலை கொடுக்குறான்.. பாரு, நான் துரும்பா இளைச்சு போய்ட்டேன்..”
“அப்படி ஏதும் தெரியலையே டா.. ரெண்டு சுத்து பெருத்து போன மாதிரி இருக்க..”
“அது, நான் போட்டு இருக்குற சட்டை, மொட மொடன்னு இருக்கு..அது உன் கண்ணுக்கு, பானக்க துரும்பா உறுத்துதா??”
“போலே,போலே போய் உன்ற தோழனை பாரு.. மாடியில தான், அவன் அறையிலே இருக்கான்..”
“என்ன மது??பேசவே மாட்டேங்குற??”
“நீ வாயை மூடுனா தானே டா, அடுத்தவங்க பேச முடியும்..நீ தான் யாரையும் பேச விட மாட்டியே..”
“வர வர நீயும், அகலு மாதிரியே பேச ஆரம்பிச்சுட்ட அத்தை.. சரி சரி பலகாரம் எடுத்து வை.. ராஜாவை பார்த்துட்டு வரேன்..”
சொல்லி விட்டு மாடிக்கு சென்றான்..
“என்ன மாப்பி எப்படி இருக்க??”
அவன் குரலில் திரும்பிய ராஜா,
“ஏலே,எப்போடா வந்த..??”
“இன்னிக்கு காலையில தான் மாப்பு. எல்லா வேலையும் முடிஞ்சுது..போன் பேச கூட நேரம் இல்ல..ஒரே வேலை..”
“சரி சரி புலம்பாத..”
“ஆத்தாவும் மவனும் ஒரே மாதிரி சொல்லுங்க..சரி இந்தா, நீ சொன்ன மாதிரி, சென்னைக்கு போய், அந்த பாலாவா கோலாவா, அவனை பார்த்து, அவன் கொடுத்ததை வாங்கி கொண்டு வந்துட்டேன்..பிடி..”
அவன் கையில் ஒரு கவரை திணித்து விட்டு,
“என் வயிறு ஏதாவது கொடுன்னு கத்துது மாப்பு..கீழ போறேன்..நீயும் சீக்கிரம் வா.. அப்புறம் சாப்பாடு தீர்ந்து போச்சுன்னு, என்னை குத்தம் சொல்ல கூடாது..”
கூறிவிட்டு கீழே சென்றான்..
அந்த கவரை, வெறித்த படி அமர்ந்திருந்தான் ராஜா..