துளிப் கன்ஸ்ரெக்ஷனின் கலந்தாய்வு அறையில் கடந்த ஒரு மணி நேரமாக சிபி மற்றும் தன் குழுவுடன் விவாதத்தில் இருந்தாள் நளினி.
“ஃபைனலா என்னோட டிமென்ட் இது தான் நளின்.. உங்களால அதை செஞ்சு தர முடியுமா இல்லையா.. அதை மட்டும் சொல்லுங்க..”
என சிபி உறுதியாக கேட்க மேசையில் விரிக்கப்பட்டிருந்த ப்ளூ ப்ரின்டில் பார்வையை பதித்து இருந்த நளின் பெருமூச்சுடன்,
“சர்.. வீ ஆல்ரெடி ப்ரீபர்ட் அ கம்ப்ளீட் அவுட்லைன்.. உங்க விருப்பப்படி தான் எல்லா ப்ளானும் போட்டோம்.. இப்போ திடீர்னு இந்த எக்டென்ஸன் போர்ஷன் சொல்றீங்க.. அப்படி சட்டுன்னு ஓகே பண்ணிட முடியாது சர்.. இதனை கன்ஸ்ரெக்ட் பண்றதில் உள்ள ப்ரோஸ் அன்ட் கன்ஸ்ஸை அனலைஸ் பண்ணனும்..”
“யெஸ் சர்.. இதனால கெம்பஸ் கான லேன்ட்ஸ்கேப் ப்ளானும் கொலாப்ஸ் ஆகும்.. அதிலும் சேன்ஞ்சஸ் பண்ணனும்.. ஸோ நீங்க கன்ஸ்ரெக்ஷன் முடியனும்னு எதிர்பார்க்கிற நேரத்தைவிட இன்னும் சில மன்த்ஸ் எடுக்கும்..”
என அந்த ப்ராஜெக்டில் உள்ள மற்றொரு வடிவமைபாளரும் சொல்ல,
“கெம்பஸ் கார்டனிங் ப்ளானை வேணும்னா மாத்திக்கலாம்.. டைமும் உங்களுக்கு வேண்டிய அளவு எடுத்துக்கோங்க.. அது பிரச்சனை இல்லை.. எனிதிங் எல்ஸ்..?”
என சிபி சொல்லும்போது அதற்கும் மேலும் வாதிட தோன்றாமல் ‘ நாங்கள் ஆலோசனை செய்து புதிய திட்டத்தை தருகிறோம்..’ என மீட்டிஙை முடித்தாள் நளினி.
“சூப்பர்.. தென்.. நான் உங்க எம்.டியை பார்க்கணுமே.. இப்ப முடியுமா..” என்று கேட்டிட,
“யா.. ஷுயர் சர்..” என்றவள் தங்கள்
ஊழியர் ஒருவருடன் அனுப்பி வைக்க போகும்போது சிபி நளினை பார்த்து கண்சிமிட்டி சிரித்து செல்லவும்,
“இது வேற ஒரே இம்சையா..” என மானசீகமாய் தலையில் தட்டிக் கொண்டாள்.
சிபி மறைந்ததும்,
“நேத்து வரையும் ஓகே வா தானே இருந்தார்.. திடீர்ன்னு ஏன் இப்படி புதுசா ஒண்ணு ஆரம்பிக்கணும்.. எதுவும் புரியல..”
என விஷால் சொல்ல ப்ளூ ப்ரின்டை மீண்டும் ஆராய்ந்தபடி,
“அதை ஏன் கேட்கிற.. நானே இன்னைக்கு சிக் லீவ்ல இருந்தேன்.. சடெர்னா கால் பண்ணி மீட்டிங் அரேஞ்ச் பண்ணுங்கன்னு சொல்லவும் என்னவோ ஏதோன்னு பதறி ஓடி வந்தேன்..”
என்ற நளினி,
“ஓகே கைய்ஸ்.. நீங்க வொர்க் பாருங்க.. இதை பத்தி நாம பேசுவோம்..” என சொல்ல அனைவரும் கலைந்து சென்றபின் எஞ்சி இருந்த விஷால்,
“எனக்கு என்னமோ எங்க இந்த ப்ராஜெக்ட் சீக்கிரம் முடிஞ்சிட்டால் எங்க உன்னோட எந்த கனெக்ஷனும் இல்லாம போயிடுமோ என்ற எண்ணத்தில் இப்படி புதுசா ஒரு ஐடியா பண்ணிருப்பாரோன்னு தோணுது..”
தாடையை தடவி துப்பறிவாளன் போல் பேச நிமிர்ந்து முறைத்தவள்,
“பிஸ்னெஸ் வேற ஃபிலிங்க்ஸ் வேற நளின்.. காதல் எப்பேர்ப்பட்ட மூளைகேஸையும் முட்டாளாக்கிடும்.. கண்டிப்பா
இது லவ் தான்.. நீ ஏன் சிபியை கன்சிடர் பண்ணக் கூடாது..”
என ராகமாய் இழுத்து சொல்லவே கையில் அகப்பட்ட பென்சிலை விஷால் மீது எறிந்த நளினி,
“என்கிட்ட அடிவாங்கி சாகாத..” என்றவள்
“பண்ணின ஒரு கல்யாணத்தோட பலனே இன்னும் சுத்தி அடிக்குது..”
என வாய்க்குள் முனங்கினாள்.
“ஹே.. ஆண்டவன் ஒரு கதவை மூடுறது இன்னோர் கதவை திறந்துவிட தான்..”
என அப்போதும் அவன் சொல்லவும்,
“ஆமா.. ஆண்டவன் டோர்மேன் வேலை பார்க்க தான் இருக்கார்.. கடுப்பேத்தாம வெளிய போடா..”
என அவள் விரட்டி விட சிரித்தபடி எழுந்துக் கொண்டாலும்,
“நீ வேணா பார்.. இதை காரணம் காட்டி இனி அடிக்கடி உன்கிட்ட பேச ட்ரை பண்ணுவாப்ல..”
என சொல்லி வெளியேற அப்படி இருக்கும் பட்சத்தில் என்ன செய்வது..? என்ற யோசனையை அவள் மனதின் ஓரம் உறுத்தியது.
அலுவலக நேரம் கடந்தும் புதிய பகுதிக்கான திட்டமிடலில் வெகு மும்முரமாக இருந்தவள் நன்றாக இருட்டிய பின்பே அங்கிருந்து கிளம்பினாள்.
அன்றைய வேலைபளூ உடலில் அத்தனை சோர்வை கொடுக்க தன் வெஸ்பாவை பார்க் செய்துவிட்டு மாடியேறியவள் அந்த தளத்தில் நுழைந்த உடனே தன் கதவில் ஒருவன் சாய்ந்து நிற்பதைக் கண்டுக் கொண்டாள்.
“யாரோ..” என்று வேக வேகமாய்
வீட்டை நெருங்க சற்று அருகில் வந்ததுமே அது சாட்சாத் வினோதகனே என புரிந்தது.
இரண்டே எட்டில் அவனை அடைந்தவள் கண்மூடி சாய்ந்து நின்றவனிடம்,
“உனக்கு வேற வேலையே இல்லையா வினோ… வாட்ஸ் ராங் வித் யூ..”
என அடிக்குரலில் சீற சட்டென்று கண் திறந்து நிமிர்ந்து நேராக நின்றவன் அவளை தலை முதல் கால்வரை ஆராய்ந்து,
“ஹப்பாடா தெளிவா தான் இருக்கா.. நான் கூட இன்னமும் காணுமே.. இன்னைக்கும் மேடம் தண்ணி தொட்டி தேடி போயிருப்பியோன்னு நினைச்சேன்..” என பெருமூச்சுடன் சொல்ல ஆத்திரமாய் அவள் அதரங்கள் துடித்தது.
“ரொம்ப பேசுற வினோ.. என்னை டென்ஷனாக்கி பார்க்க நினைக்காத..”
அப்போது தான் அவன் கால் அருகில் இருந்த ட்ராலி பேக்கை கவனித்தாள்.
“என்ன இது..?? எதுக்கு இப்படி வந்து நிற்கிற..”
“நேத்து திருடன் மாதிரி வந்துட்டேன்னு நீ சொன்ன ஒரே காரணத்துக்காக கீய் இருந்தும் நீ வரணும்னு ஜெனியூனா காத்திட்டு இருக்கேன்.. ஏற்கெனவே பலர் என்னை குறுக்கா மறுக்கா பார்த்துட்டு போயாச்சு.. இன்னும் நம்ம பேச்சு சத்தம் கேட்டு பங்கஜம் ஆன்ட்டி வந்து விசாரிக்கனுமா..”
என்று சொல்ல கடுப்புடன் கதவை சாவிக் கொண்டு வேகமாய் திறந்தவள் உள்சென்று விளக்கை போட தன் பேக்கை தள்ளிக் கொண்டு நிதானமாய் பின் தொடர்ந்தவன் ஐவிரல்களை விரித்து ஏந்தும் கை வடிவிலான அங்கிருந்த ஒற்றை ஸோபாவில் ஆசுவாசமாய் அமர்ந்தான்.
வினோதகன் முன்னே கைகட்டி விளக்கம் வேண்டும் என்ற தோரணையில் நளினி நின்றிருக்க,
“இனி இங்கேயே இருக்கலாம்னு முடிவு பண்ணி தான் கிளம்பி வந்திருக்கேன்..”
என்றான் மிக கேஷ்வலாய்..!!
“ஹலோ.. யாரை கேட்டு டிசைட் பண்ணின..!! என் கூட தங்க என் பர்மிஷன் வேணும்..”
“ஏன் யாரை கேட்கணும்.. உன்னை தனியா எல்லாம் விட முடியாது.. உன் போக்கே சரியில்ல.. நியாபகம் இருக்கா இல்லையா.. உன்னை கடைசி வரை பத்திரமா பார்த்துப்பேன்னு உங்க அம்மாக்கு வாக்கு கொடுத்து இருக்கேன்..”
“என்னை யாரும் பார்த்துக்க வேண்டிய நிலமையில் நான் இல்ல.. தேவையில்லாம சீன் க்ரியேட் பண்ணாம கிளம்பு வினோ..”
“ஹான்.. நேத்து தான் பார்த்தேனே நீ இருந்த அழகை..!! காலைல என்னை வேணும்னு நினைக்க உனக்கு ஒரு காரணமும் இல்லைன்னு எப்போ சொல்லாம சொன்னீயோ அப்போவே எனக்கும் நீ வேண்டியது இல்லைன்னு தோணிடுச்சு.. ஆனால் உங்க அம்மா பாவம்.. அவங்க கடைசி நிமிடங்களில் என்கிட்ட வாக்கு வாங்கி இருந்தாங்க..
எங்க உன்னை இப்படியே விட்டால் நீ குடிச்சு குடிச்சு உடம்பை கெடுத்து அவங்க கிட்டேயே போய் சேர்ந்துட்டா.. ஹப்பா அத்தையோட சாபம் என்னை சும்மா விடாது.. அதனால உன்னை இனி தனியே விட கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்..”
என்று சொல்ல தலையை கையில் தாங்கி கொண்டாள். அவளின் பலவீனம் அன்னை ஜெயஸ்ரீ தான்.. அதனை வைத்தே எப்போதும் அவளை வாயடைத்து போக செய்து விடுவான்..!
“சத்தியமா இனிமே குடிக்க மாட்டேன் வினோ.. என்னை ரொம்ப நல்லா நானே பார்த்துப்பேன்.. எங்க அம்மா சாபம் உன்னை எப்பவும் வந்து சேராது.. போதுமா..”
என பல்லை கடித்து தன் கோபத்தை இழுத்து பிடித்து சொல்ல,
“அதை நான் எப்படி நம்புறது.. உன்னை நம்பி இத்தனை நாள் இருந்தேன்.. என் நம்பிக்கையை நீ காப்பாற்றவே இல்லை.. இனி அது மறுபடியும் வரவரையும் உன் கூட தான்..”
என்றவன் அவள் முறைத்த முறைப்பில்,
“உன் கூடன்னா உன் புருஷனா தான் இருக்கணுமா.. ஒரு கார்டியன் மாதிரி.. ஒரு ஹவுஸ்மேட் மாதிரி நினைச்சுக்கோ.. நீ உன் வேலையை பார்.. நான் என் வேலையை பார்க்கிறேன்..” என சொல்லி,
“அத்தோட உன்னை யார் வந்து எங்க வீட்டில் எல்லாம் சண்டை போட சொன்னது.. உன் பொண்டாட்டி பிரச்சனையை எல்லாம் தீர்த்துட்டு மறுபடியும் இந்த வீட்டு உள்ள வான்னு நீ பேசின பேச்சுக்கு எங்க அண்ணன் என்னை வீட்டவிட்டு துரத்திவிட்டான்.. நான் வேற எங்க போவேன்.. எனக்கும் வேற ஆப்ஷன் இல்ல..”
என தோளை குலுக்கி சொல்ல “என்னென்ன சொல்றான் இவன்..”
என்று தான் பார்த்து இருந்தாள்.
இறுதியில்,
“சீ.. இதில் உனக்கொரு அட்வான்டேஜும் இருக்கு.. இன்கேஸ் நீ நான் இல்லைனாலும் நல்லா தான் இருப்ப..!! உன் லைஃப் பெட்டரா இருக்கும்ன்னு எப்போ எனக்கு நம்பிக்கை வருதோ அடுத்த செக்கெண்ட் நீ விரும்பி கேட்ட டிவோர்ஸை கொடுத்துட்டு போயிட்டே இருப்பேன்.. அதுக்கு அப்புறம் உன் வழியில் வரவே மாட்டேன்..”
என கூற அது சற்றே அவளை அசைத்தது. இருந்தும் சந்தேகமாய் புருவம் உயர்த்தியவளை,
“என்ன காலைல முடியவே முடியாதுன்னு சொல்லிட்டு நைட்டே ஓகே சொல்லிட்டானே பார்க்கறீயா..?? அப்போ சொன்னதே தான் இப்பவும்.. என் மனசு எப்ப வேணும்னாலும் மாறலாம்.. உன் லக் ஒரே நாளில் மாறிடுச்சு.. எனக்கு டிவோர்ஸ் கொடுக்க சம்மதம்.. ஆனால் நான் எதிர்பார்க்கிற நம்பிக்கையை நீ எனக்கு கொடுத்த அப்புறம் தான்..”
என தெளிவாக உரைத்தவன் கைகளை விரித்து சோம்பல் முறித்து,
“நான் இந்த ரூம் யூஸ் பண்ணிக்கிறேன்.. குட் நைட்..” என எழுந்து அந்த வீட்டில் இருந்த மற்றொரு அறைக்குள் சென்று விட,
“இந்த வினோ பேசாமல் மௌனகுருவா இருக்கிறதே பெட்டர்… பேசினால் எதிரில் இருக்கிறவங்களை பைத்தியம் ஆக்காம விட மாட்டான்.. நான் நினைச்சது என்ன.. நடக்கிறது என்ன.. இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கானோ..” என தனக்குள்ளே புலம்பி நின்றவள் பூமியில் கால்கள் டங்கென்று அதிர தன் அறைக்குள் சென்று மறைந்தாள்.
நளினியின் முக பாவனையை அங்கே அறை வாயிலில் நின்று பார்த்து இருந்த வினோதகன் அவள் அறைக்குள் செல்லவும் தான் நிம்மதியானான்.
அவளுக்கு சந்தர்ப்பமே கொடுக்காமல் அவன் மட்டுமாய் சுற்றிய கதைகளில் நிச்சயம் குழம்பி போயிருக்கிறாள் என அவளை பார்த்தாலே தெரிந்தது.
அது தானே அவனுக்கும் வேண்டும்..!! நளினியை தெளிவாக யோசிக்க விட்டால் நிச்சயமாக அவனை இங்கே தங்க விடமாட்டாள். அவள் கோபத்தில் விடும் வார்த்தைகளை கேட்டபின் அவன் மனமும் இருக்க ஒப்பாது..!!
அந்த சங்கடங்கள் எதுவும் நிகழாமல் இருக்கவே அவளுக்கு பேச இடைவேளையே கொடுக்கவில்லை.
கதவை முழுதாக மூடியவன் பேக்கை ஒரு ஓரமாக வைத்துவிட்டு கட்டிலில் தளர்வாய் விழுந்தான்.
காலையில் இங்கிருந்து செல்லும் வரையிலும் இப்படி ஒரு எண்ணமே அவனுக்கு இல்லை.
‘தன்னை பிரிவதில் நளினி இத்தனை தீவிரம் காட்டும்போது எங்கே தானே ஒரு கட்டத்தில் வெறுத்து விலகி விடுவோமோ..’
என்ற ஒரே கேள்வி தான் நாள் முழுவதும் அவனை குடைந்து எடுக்க தான் விலகியே இருந்தால் கண்டிப்பாக அது தான் நடக்கும் என உணர்ந்து இனி அவளை பிரிந்து இருக்க கூடாது என்ற முடிவுடன் வந்து விட்டான்.
இனியும் நிறைய போராட வேண்டி இருக்கும் என அறிவான்..! ஆனால் சில காலம் என்றாலும் அவளோட அவன் அனுபவித்த காதலின் ஆழம் அவனை இழுத்து பிடித்து போராட வைக்கிறது..!!
அந்த நம்பிக்கையுடனே கண்களை மூட அடுத்த அறையில் நளினி முகம் கழுவி வந்ததால் பூத்திருந்த ஈரத்தை டவாலால் துடைத்தபடி தன் விழிகளை பெரிதாக விரித்து கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து இருந்தாள்.
வினோதகன் விவாகரத்து கொடுக்க சம்மதித்த போதிலும் அதற்கும்முன் அவன் வைக்கும் நிபந்தனையை நினைத்தால் கடுப்பாக இருந்தது. அவனின் நம்பிக்கை பெறும்வரையில் தன்னால் பொறுமை காக்க முடியுமா..?
ஏனோ அவன் அருகில் தான் இருக்கிறான் என்ற எண்ணமே நளினியை அமைதியின்றி தவிக்க செய்தது..!!
வினோதகனை வேண்டாம் வேண்டாம் என எத்தனை தூரம் அவள் விலகி ஓடினாலும் சுவற்றில் வீசப்பட்ட பந்தாக அதனைவிட வேகமாய் அவன் அவளை வந்து சேர்ந்து விடும் மாயம் என்னவோ விளங்கவில்லை.
கண்ணாடி பிம்பத்தில் அவள் முகம் அருகே பின்னால் சுவற்றில் தீட்டப்பட்டிருந்த ஜெயஸ்ரீயின் புன்னகை முகமும் தெரிய,
“வொய் மா.. வொய்..? ஏன் வினோவை மறுபடியும் மறுபடியும் என்னோட சேர்க்க பார்க்கிறீங்க..!! என் ஃபீலிங்க்ஸ் உங்களுக்கு தெரியாதா..?? நீங்க தானே என்னை ஆதரிக்கணும்.. எனக்கு வினோதகன் வேண்டாம் மா.. அவன் பக்கத்தில் இருக்கிறது கூட எனக்கு மூச்சு முட்டுறா மாதிரி இருக்கு.. என்னால வாழ்க்கை முழுக்க அவனை ஃபேஸ் பண்ண முடியாது மா…”
தன் உணர்வுகளோடு போராட முடியாத இயலாமையில் கண்கள் கலங்கிவிடும் போல் இருக்க உதடுகளை கடித்து அதனை கட்டுப்படுத்தினாள்.
பார்வை மட்டும் ஜெயஸ்ரீயை குற்றம் சாட்டி நிற்க அவளை அணைத்து ஆறுதல் சொல்ல முடியாது சாந்தமாக புன்னகையை மட்டுமே பதிலாய் கொடுத்தார்.
நளினி விபரம் புரிந்த வயதில் இருந்தே அவள் உலகம் முழுவதும் ஜெயாம்மா.. ஜெயாம்மா… ஜெயாம்மா மட்டும் தான்..!! தந்தையின் முகம் நினைத்தால் தன்னை தூக்கி வைத்து விளையாடியது மங்கலாய் ஞாபகம் வரும் அவ்வளவே..!! ஒற்றை ஆளாக அவளை வளர்த்து இருந்தார் ஜெயஸ்ரீ.
கணவன் இறந்தபின் சிறு பெண்ணுடன் தனித்து நிற்கும் பெணணின் பொறுப்பு எங்கே தங்களிடம் திரும்பிவிடுமோ என சொந்தங்கள் பட்டும்படாமலும் பழக அதில் வெறுத்து போன ஜெயஸ்ரீ அவரே அவர்களை மொத்தமாய் ஒதுக்கிவிட்டு தனிச்சையாய் வாழ்ந்தார்.
மனிதர்கள் கொடுக்காத துணையை அவரின் படிப்பு கொடுக்க சிறு சிறு வேலைகள் செய்துக் கொண்டே அரசு வேலைக்காக தேர்வு எழுதியவர் அதில் வெற்றியும் கண்டு அரசாங்க பணியில் நிமிர்வாய் அமர்ந்தார்.
தனித்து வாழும் பெண்கள் தானே என எந்த ஆபத்தும் நெருக்க கூடாது என்ற எச்சரிக்கையில் ஆணவத்தையும் திமிரையுமே தன் கவசமாய் அணிந்து இருந்தவர் அவ்வாறே தன் மகளும் வளர்ந்ததை பாதுகாப்பாக தான் நினைத்தார்.
பருவ வயது பெண்களை சுற்றி வரும் இளசுகள் நளினியின் பார்வையில் இரண்டடி தள்ளி நின்றே பேசும் தோரணை அவருக்கு பிடித்தே இருந்தது.
யாரிடமும் அதிக நெருக்கம் காட்டாதபோதும் தன் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ச்சியாக தான் கொண்டு சென்றாள் நளினி.
அக்கம் பக்கத்தின் பேச்சு, குடும்பம், சமூகம் என அவளை பிணைத்து வைக்கும் எந்த காரணியும் இல்லாது நல்லவை கெட்டவை என்ற இரண்டே கோட்பாட்டை மட்டுமே கருத்தில் வைத்து வேலிகளின்றி காற்றாக சுற்றி வந்தாள்..!!
எல்லாம் நன்றாக தான் சென்றது. ஆனால் எப்போது நளினி வாழ்நாள் முழுவதும் அவளும் அன்னையும் மட்டுமாக இவ்வாறே வாழ்ந்துவிடும் நோக்கத்தில் இருக்கிறாள் என்று புரிய தொடங்கியதோ அன்றிலிருந்து ஜெயஸ்ரீ மனம் நெருடலாக தொடங்கியது.
எந்த கட்டுபாடுகளும் இல்லாமல் இருப்பதில் சுகம் காண பழகியிருந்த நளினியிடம் கல்யாணம், குடும்ப அமைப்பு என பேச்சை எடுத்தால் ஒவ்வாமை போல் ஓடிவிட தவறு செய்து விட்டோமோ என பயம் பிடித்தது.
சில காலம் என்றாலும் கணவன் மனைவி என்ற உறவின் அழகையும் நிறைவையும் அனுபவித்து வாழ்ந்தவர் அதன் மகத்துவத்தை தன் மகளிடம் கடத்த தவறி இருந்தார்.
“உனக்கு ஒரு பையன் மேல கூட இன்ரெஸ்ட் வந்ததே இல்லையா நளினி..”
தன் யோசனையில் ஆழந்து இருந்தவர் கிட்சனில் ஏதோ புதிதாக சமைக்க முயன்றுக் கொண்டிருந்த நளினியிடம் கேட்க தன் தலையை மட்டும் வெளியே நீட்டியவள் பிடரியில் வடிவாய் வெட்டப்பட்டிருந்த கூந்தல் காற்றில் துள்ளி குதிக்க,
“ச்சு.. ச்சு… யாரும் என்னை இம்ப்ரெஸ் பண்ணதே இல்லை..”
என தலையை உருட்டி சிரித்துவிட்டு செல்ல எழுந்து அருகில் வந்தவர்,
“அப்போ.. நான் உனக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் தானே..”
“வருஷம் போக போக எல்லாருக்கும் தான் வயசு ஆகும்.. இது ஒரு விஷயம்னு இதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றீயா ஜெயாம்மா.. காமெடி பண்ணாத போ..”
என அலட்சியாய் தோளை உதறிவிட்டு வேலையை பார்த்தவளை கண்டு அவரின் டென்ஷன் ஏறியது.
“நான் சீரியஸா சொல்லிட்டு இருக்கேன் நளினி.. லைஃப்ல இதுவரை இப்படியே இருந்த ஓகே.. பட் இனிமேலும் இப்படி இருக்க முடியாது.. இனி வரும் வாழ்க்கையில் உனக்குன்னு ஒரு லைஃப் பார்டனர் அவசியம் கண்ணம்மா..”
“நீயும் தானே ம்மா உன் லைஃப்ல ட்வென்டி இயர்ஸ் மேல எந்த பார்ட்னரும் இல்லாம இருக்கிற.. என்ன குறை வந்திடுச்சு.. ஹேப்பியா தானே இருக்க..”
“எனக்கு நீ இருந்த டி..”
“எனக்கும் தான் நீ இருக்க ஜெயாம்மா..”
“எத்தனை நாள் வரையும்.. நான் போன அப்புறம் என் இடத்தில் உனக்குன்னு ஒருத்தன் வேணும் நளினி..”
“அதென்ன நீ போன அப்புறம்.. கடவுள் நீ பர்ஸ்ட்.. நான் நெக்ஸ்ட்னு எழுதி கொடுத்து இருக்கானா..!! உனக்கும் முன்னாடி நான் போய் சேர்ந்துட்டால்..?? அதுக்கும் வாய்ப்பு இருக்குல்ல.. அப்போ நானும் உனக்கு ஒரு பார்ட்னர் தேடி வைப்பா..?”
அவள் சொல்லவே அருகில் இருந்த கரண்டியை எடுத்து தோளில் ஒன்று வைத்தவர்,
“இங்க பார் ஜெயாம்மா.. இப்போ நான் எப்படி இருக்கேன்.. எனக்கு எந்த குறையும் இல்ல.. எந்த கவலையும் இல்ல.. ஹேப்பியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன்.. இப்ப என் லைஃப்ல ஒருத்தன் வந்தான்னு வையேன் அவனுக்காக நான் என்னை காம்பரமைஸ் பண்ணிக்கனும்..!! அவனோட சேர்த்து அவன் பேமிலியும் இருப்பாங்க.. அவங்களையும் நான் அட்ஜெஸ்ட் பண்ணனும்..
பிடிச்சதை விட்டுக் கொடுக்கணும்.. பிடிக்காததை செய்ய பழகணும்.. என்னோட எல்லா செயலுக்கும் விளக்கம் கொடுக்கணும்.. கேள்வி கேட்டா கோபப்படாம பதில் கொடுக்கணும்.. எப்பவும் ஒருத்தன் கண் பார்வையிலே இருக்கணும்..!!
தினம் தினம் இதனால சண்டை வந்து டென்ஷனாகி சந்தோஷம் இல்லாம ஏனோ தானோன்னு ஒரு லைஃப்..!!! தேவையா ஜெயாம்மா இந்த தலைவலி எல்லாம்..”
என்று அவள் பேச பேச எப்படி இவள் மனதை மாற்ற போகிறோம் என திக்கென்று இருந்தது.
“என்ன நளினி பேசுற.. இந்த காலத்து பிள்ளைங்க ஸ்கூல் டேஸ்ல இருந்தே பாய் ஃப்ரெண்ட் வைச்சுக்கிட்டு திரியுறாங்க.. உனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லவே இல்லையா..?”
என அவர் ஆற்றாமையுடன் கேட்க இதழோரம் குறும்பாய் சிரிப்பை அதக்கி,
“கமிட்மென்ட்ஸ் தானே ம்மா வேணாம்னு சொன்னேன்.. மத்த ஆசைக்கு எல்லாம் வேற வழியா இல்ல..” என்று கூற அதன் அர்த்தம் விளங்கியதும்,
“அடியேய்.. நான் உன் அம்மா டி.. கொன்றுவேன் பார்த்துக்க..”
என அவர் ஹை டெஸிபலில் கத்த கலகலவென சிரித்தவள்,
“சும்மா.. சும்மா சொன்னேன்.. டென்ஷன் ஆகாத சரியா..!!” என கன்னம் வழித்து கூறிவிட்டு,
“இந்த டாப்பிக்ஸ் எல்லாம் சுத்த போர் ஜெயாம்மா… நான் கட்லெட் எடுத்துட்டு வரேன்.. நெட் ஃபளக்ஸோட என்ஜாய் பண்ணலாம்..”
என உள்ளே சென்றுவிட தன் மகள் குறித்த பெரும் கவலை அவரை ஆட்கொண்டது.