அதன் பிறகு வந்த நாட்கள் படு வேகமாகவே நகர்ந்தது.. என்று தான் சொல்ல வேண்டும்.
Advertisement
முகுந்தை அடுத்து சில முறை பரிசோதித்த மருத்துவரோ இனி மெல்ல அவனை நடப்பதற்கு பழக்க சொல்ல,
தினமும் அவர்கள் வீட்டிற்குள்ளோ அல்லது அருகே இருக்கும் பார்க்கிலோ நடக்க வைப்பதை வழக்கமாக்கி இருந்தான்.
Advertisement
Advertisement
புதிதாக செய்வதால்.. ஆரம்பத்தில் சில எட்டுக்களில் முதுகில் எழும் வலியால் நடக்க தடுமாறிய பிள்ளை.. இப்போது எல்லாம் ஓரளவு சீராக எடுக்களை தனியாக எடுத்து வைக்க ஆரம்பித்திருக்கிறான்.
பள்ளியில் கேஜி வகுப்புக்கு சேர்க்கும் பருவம் தான் என்றாலும்.. ‘இன்னும் ஒரு வருடம் சென்றே சேர்க்கலாம்..’ என நினைத்து, நேரம் கிடைக்கும் போது ரியானே ஆசானாக இருந்து எழுத்துக்களை பழக்கி கொடுக்க,
Advertisement
இயல்பிலேயே புத்திசாலியான பிள்ளை.. அழகாய் அதை பழகி எழுத தொடங்கியிருந்தான்.
இப்போது அலுவலகத்தில் அவனுக்கென குட்டி டேபிளும்.. சேரும் போடப்பட்டிருக்க அவனோ ரியான் கொடுக்கும் பாடத்தை அழகாய் அமர்ந்து செய்து கொண்டிருப்பான் யாருக்கும் தொந்தரவு இன்றி.
மலரும் அடிக்கடி அவனை வந்து பார்த்து செல்ல இப்போது அவரிடமும் நன்றாகவே ஒட்டிக்கொண்டான் பிள்ளை.
வெண்பா இப்போது ப்ரிகேஜி செல்வதால்.. குட்டி வாண்டுக்கு அவ்வளவு குஷி.
யூனிஃபார்ம் போட்ட அன்று.. அவள் கொண்ட ஆனந்தமும், அவளின் குட்டி பேகை போட்டுக்கொண்டு தத்தி தத்தி அவள் நடந்த அழகும்.. அம்மா, சித்தி இருவரையும் மயக்க, தனம் திட்டி பேத்திக்கு சுற்றி போட்டது.. எல்லாம் தனி அத்தியாயம்.
வெங்கடேஷ் தலைமையில்.. அவர்கள் செய்த ப்ராஜெக்ட்டும், அந்த நிறுவனத்திற்கு திருப்தியாக இருந்ததால்,
அவர்கள் ஏற்கனவே சொன்னபடி மேலும்.. சில ப்ராஜெக்டுகளை இவர்களுக்கே வழங்கியிருந்தனர்.
மறுபக்கம்.. ரியான், சந்தீப் மிக தீவிரமாக தங்களின் கம்பெனியை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டி, வேறு சில கார்ப்ரேட் கம்பெனிகளிடம் ப்ராஜெக்ட் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அதுவும் நல்லவிதமாகவே செல்ல தொடர் வெற்றியை ரெஸ்டரண்டில் கொண்டாட.. பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டு முறையாக அனைவருக்கும் தகவலும் கொடுக்கப்பட்டது.
குடும்ப உறுப்பினர்களையும் உடன் அழைத்து வரலாம்.. என்றவுடன் சிலருக்கு சந்தோஷமும், ‘தனியாக சென்றால் ஜாலி..’ என நினைத்திருந்தவர்களுக்கு வருத்தமும் ஒருங்கே எழுந்தது.
வெங்கடேஷ்.. சம்யுக்தா இருவருக்கிடையே தொழில் சார்ந்த பழக்கம் தாண்டி நல்ல நட்பு ஒன்று உருவாவதற்கும்.. அந்த பார்ட்டியே காரணமாய் அமைந்தது.
சரியாக பார்ட்டி அன்று வெண்பாவுக்கு சளி தொந்தரவால் இரவு முழுவதும் தூங்காமல் படுத்த இனியாளும், தனமும்
“இன்னொரு டைம் வர்றோம்.. இப்ப பாப்பாவ கூட்டிட்டு போனா இன்னும் சிரமம்..” என்று விட வேறு வழியின்றி சம்யுக்தா மட்டுமே சென்றிருந்தாள்.
வெங்கடேஷின் அம்மாவிற்கு இது போன்ற இடங்களுக்கு வர எப்போதும் விருப்பம் இருந்தது இல்லை.. என்பதால் அவரும் வரவில்லை.
தனித்து சென்ற இருவரும் வேறு வழியின்றி.. சந்தீப், ரியானோடு இணைந்து கொள்ள அன்றைய கொண்டாட்டம் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.
உணவு வேளை நெருங்க, சந்தீப் குடும்பம், ரியான்.. முகுந்த் அமர்ந்திருந்த இடத்திலேயே வெங்கடேஷூம், சம்யுக்தாவும் அமர்ந்து உண்ண..
மலரோடும் குழந்தைகளோடும் சம்யுக்தா பேசி கொண்டு இருக்க ஆண்கள் மூவரும் தொழில் தொடர்பான பேச்சுவார்த்தையில் இருந்தனர்.
பேச்சுக்கு நடுவே முகுந்த் வெங்கடேஷிடம் எதோ கேட்க, “வெங்கீ அங்கிள்..” என அழைத்திருக்க,
முகுந்திடம், “வெங்கீன்னு பேருக்கு பதிலா மங்கீ ன்னு தான் சொல்லனும். மூஞ்சிய பாரு.. ஆளும் கலரும்..” என கிண்டலாக சொல்லி சிரித்துவிட வெங்கடேஷின் முகம் அவமானத்தில் சுருங்கி போனது.
அதோடு அவன் அங்கிருந்து விலகி செல்ல ரியான் அவளை கண்டிப்போடு பார்த்தவன், சந்தீப்பை விட்டு வெங்கடேஷை பார்க்க சொல்லிவிட்டு தனியே வெளியே சம்யுக்தாவை அழைத்து கொண்டு வந்தான்.
“பேபி.. இது தப்பு. நா பேபின்னு சொன்னா நீ குழந்தையாகிட மாட்டே.
உன் வயசுக்குரிய பக்குவம் வேணாமா உனக்கு..?
அவனை பத்தி என்ன தெரியும் உனக்கு..?
அவன் வயசுக்கு இல்லைன்னாலும்.. அவனோட பதவிக்கு நீ மதிப்பு கொடுத்திருக்க வேணாமா..?
அதுவும் குழந்தைங்ககிட்ட இப்படி பேசறே..! நாளைக்கு அவங்களும் இப்படி பேசினா நல்லா இருக்குமா..?
அப்ப அப்ப.. உன் அதிகப்பிரசங்கித்தனம் வெளியே வந்துட்டு தான் இருக்கு.
அவன் நீ பேசினதுக்கு.. உன் டி.எல். லா உன்னை கண்டிச்சிருக்கலாம்.
ஏன்.. தண்டிச்சு கூட இருக்கலாம்.
நீ எனக்கு முக்கியமுன்னு அவனுக்கு தெரிஞ்சதால தான், அவன் அமைதியா போனான்.
அவனோட முகத்தோற்றத்தை பார்க்கற நீ.. ஏன் அவன் குணத்தை பார்க்கல..?
அப்போ.. நீ என்னை மதிக்கறதுக்கு காரணம் என்னோட ஸ்கின் வெள்ளையா இருக்கறதாலையா.? இல்ல தானே..! அப்போ அதை ஒரு அளவீடா நீ எப்படி எடுக்கலாம்..?
அவங்க வீட்டுல அப்பா இல்லை. இவனுக்கு அடுத்து ரெண்டு தங்கச்சி.
உங்களை அது எவ்வளவு ஹர்ட் பண்ணியிருக்குமுன்னு.. நீங்க அங்கிருந்து எழுந்ததுமே புரிஞ்சிடுச்சு.
ப்ளீஸ் சாரி..” என லேசாக விழிகள் கலங்க திக்கி திணறி அவள் சொல்ல,
“லூசா நீ..! அதுக்காகவா இவ்வளவு நேரம் இங்கே இருந்தே..?
சுத்தி பாரு. நம்ம கூட வந்த எல்லாரும் போயாச்சு. நீ என்னன்னா..” என்றவனுக்கு,
‘இவனும் காரில் வந்திருந்து.. இவளை கவனிக்காமல் போயிருந்தாள்..’ என்ற பயம் நெஞ்சத்தை ஒரு நொடி நடுங்கச்செய்தது.
“அது.. நீங்க.. உங்ககிட்ட சாரி கேட்காம போனா.. என்னால நிம்மதியா தூங்க கூட முடியாது.. அதான்..” என தலைகுனிந்தபடி குரல் கரகரக்க சொன்னவளை கண்டு அவனுக்கு பாவமாய் போக,
“ஓகே.. சாரி அக்சப்ட்டேட். வா கிளம்பலாம்..” என அவன் வண்டி அருகே செல்ல திரும்ப,
சட்டென அவனின் ஒரு கரத்தை பற்றியவளை கேள்வியாக அவன் திரும்பி பார்க்க,
“இனி நம்ம ப்ரண்ட்ஸ்.. சரியா..?” எனக் கெஞ்சும் கண்களுடன் இமை சுருங்க மறுகரம் நீட்டி நின்ற பெண்ணை மறுக்க தான் தோன்றுமா அவனுக்கு..?
அவனும் சிறு புன்னகையுடன் கை நீட்ட அன்று முதல் இருவரும் அழகான நட்பில் கைகோர்த்து இருந்தனர்.