பெரியாத்தாவும், கூடவே கலைவாணியும் பதறி அடித்து கொண்டு வேலுவை பார்க்க ஓடி வந்தார்கள். தகவல் சொன்னது என்னவோ மணிமாறன் தான். வேலுவின் நிலையை கண்ட பெரியாத்தவிற்கு மனதே ஆற வில்லை.
“ அய்யா! என் ராசா உமக்க இந்த நிலைமை, இப்படி உன்ன பார்க்கவ இந்த சிறுக்கி மவ உயிரோட இருக்கேன்!, என்னாவே ஆச்சு! அந்த கூறு கெட்டவ வேற இப்படி ஒரு காரியத்தை பண்ணி, நெஞ்சுல நெருப்ப அள்ளி வச்சுடாலே, நான் என்னத்த பண்ணுவேன். என் கூட பொறந்தவ எப்படி தாங்கி நிக்கா?” என தலையில் அடுத்து கொண்டு அழ,
ஆறுதல் சொல்லும் நிலையில் வேலு இல்லை. தாமரையின் நிலை தெரியாமல் மனது அடித்து கொண்டது. ஏதேனும் கெட்டது நடக்கும் முன் மனம் நிலை இல்லாமல் தவிக்கும் பார்! அப்படி இருந்தது வேலுவின் மனநிலை. கண்ணில் நீர் வடிய நின்றிருந்த அக்காவையும், பதறிப்போய் தன்னை நோக்கும் நண்பன் மாறனையும் பார்த்தவன், யாருக்கும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், நடந்ததை நினைத்தே கலங்கி நிற்பதை கண்டு, நிலையை கையில் எடுத்தான். வேற வழியும் அவனுக்கு இல்லையே. நான் என முன் நிற்கும் சொந்தம் யாரையும் காணோம்! தாமரையின் நிலையும் அப்படி! ஒரே நாளில் கொடுமைகாரனாக அடையாள படுத்தி விட்டார்கள்.
தன் துக்கத்தையும், வேதனையும் எச்சில் போல விழுங்கி கொண்டு, “ ஆத்தா! அழுவாதீக, இனி புலம்பி ஒன்னும் ஆவப்போது இல்ல, என்னிய விட்டு தள்ளு, இப்ப தாமரைய பாக்குறதுதான் முக்கியம். மாமன் தனியா கிடந்தது அல்லாடுவாக! நீங்க போய் நில்லுங்க, மொத அவ பொழச்சு வரட்டும், பின்ன என்னவோ பார்க்கலாம்”. என்று பெரியாத்தாவிற்கு வழி சொல்லியவன்,
வாணி புறம் திரும்பி, “ அக்கா! நீங்க டவுன் ஆஸ்பித்திரில தான் ஆயியும், அம்மையும் இருக்காங்க! கூட இருந்து பார்த்துக்கோங்க,நான் வருவேன்னு அம்மை காத்திருக்கும்” என்று அக்காவிடம் சொன்னவன், மாறன் புறம் திரும்பி, “ ஏலே! அக்கா கூட இருந்து பார்த்துக்க, ரெண்டு பொம்பளைக தனியா சமாளிக்க மாட்டாக”, அத்தோடு தன்னை வெளியே எடுக்க வக்கில் பார்க்க சொன்னான்.
தான் வெளியே வரும் அவசியம் புரிந்து கொண்டான் வேலு. தன் இருக்கும் நிலை மட்டும் தாய்க்கு தெரிந்தால் அவ்வளவு தான்.தாமரை, சிவம் என்று யாரும் கண்ணுக்கு தெரிய மாட்டார்கள். ஒரு ஆட்டம் ஆடி விடுவார். அரசிக்கு தான் வேலுவை மிஞ்சி எதுவும் இல்லையே. தற்போது சூழலை சமாளித்து, அனைவரையும் அமைதி படுத்த வேண்டும். பிற்பாடு பிரச்சனையை பேசி சரி செய்து கொள்ளாலாம். சிவம், அரசி, பூமணி மூவரும் ஒரே இடத்தில் இருப்பது நல்லதல்ல.
“உன்னிய இப்படி கிடக்க விட்டு, நான் என்னத்தவே போவேன். உன் மாமன் அங்க சலம்பிகிட்டு திரியுறான். அவனுக்கு என்னான்னு எடுத்து சொல்ல, கூட பொறந்தவ மவன்னாவது உன்ன நினைக்க வேண்டாமா! அரசிக்கு தெரிஞ்ச ஆஞ்சுறுவா!” என்று தாமரையின் தீவிர நிலை அறியாமல், மகன் ஜெயிலில் நிற்பதே பெருசு என்று பேச,
வேலுக்கு ஆயாசமாக இருந்தது. “ ஆத்தா, குத்து கல்லாட்டம் நிக்குரேன்! நான முக்கியம், ஒருத்தி அங்க சாக கிடக்க, அவள பாரும் முதல்ல, எம் பொண்டாட்டி நல்ல படிய எந்திருச்சு வந்த, எனக்கு இங்க என்ன வேலை! என்னய பார்க்க எனக்கு தெரியும். ஆள் வச்சு வெளியே வந்துக்குறேன். நீயி போய் அவகள பாரும், கூட நின்ன ஒரு தெம்பு வரும்ல, நம்ம தாரைக்கு வெளி ஆள் பழக்கம் ஓட்டாது, நீயி ஒத்தாசை நில்லு ஆத்தா” என்று அவரை கடிந்து கொண்டான். பின் அவர் தான் மாற மாட்டாரே, மகன் தானே முதல் அதன் பொருட்டே சத்தமாக பேசி அவரை அனுப்பியவன்,
வாணியிடம் , “ அக்கா! கலை மாமவ வர சொல்லுவே! அவருக்கு ஆள் பழக்கமும் ஜாஸ்தி, பேச்சுக்கு மரியாதை அதிகம். அவர் நிக்க சத்தம் குறையும் நிலைமையும் கை மீறாது” என்று கூரியவன், மாறனிடம் “ நீயி கூடவே நில்லுவே! ஆஸ்பத்திரி நிலவரம் விசாரித்து சொல்லும்!” என்று அவர்களை அனுப்பி வைத்து, சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவனுக்கு தாகத்தில் தொண்டை அடைத்தது. ஆனால், ஒரு சொட்டு தண்ணி குடிக்க கூட மனம் இடமளிக்க வில்லை. குற்ற உணர்வு கொன்றது.
தந்தை நினைவிலே நின்று தாமரையை மறந்தது தவறோ என்று எண்ண ஆரம்பித்தான். கல்யாணம் தொட்டு இரட்டை வாழைப்பழம் போல ஒட்டியே திரிந்தவன், தந்தை இறப்பின் பின் அவளை தனியே விட்டது தவறு தான் என்று உணர்ந்தான். அவளின் மனபோக்கு அறியாமல், குழந்தைக்கு என்று கண்டதை வாங்கி குவிக்கும் போதும், தொட்டு தடவி பார்க்கும் போதும் கண்டிக்காமல் இருந்ததோடு, என்ன எதுவென்று விசாரிக்கவும் இல்லையே! தன் மனதிலும் நிற வேறுபாடு இருந்ததோ என்று சுய ஆராய்ச்சியில் இறங்கினான்.
ஆம்! தன்னிடமும் அவ்வாறு எண்ணம் இருக்க போய் தானே! அவளின் செயல்களை தடுக்காமல் விட்டதோ! ஆரம்பத்தில் சிறு சிறு அரிப்பு, அலர்ஜி வரும் போது கடுமையாக சாடி இருந்தால். இந்த அளவிற்கு பாதிப்பு வந்திருக்காது என்று நினைத்தவன். கணவன், மனைவி உறவில் நெளிவு, சுளிவுகளை புரியாமல், புரிய வைக்காமல் தாமரையை ஒத்துபாடியே சென்றதால் தான் அவளிற்கு அவ்வளவு தைரியம் வந்ததோ. தான் எது செய்தாலும் தன்னை தாண்ட மாட்டான் தன் கணவன் என்ற எண்ணம் கொடுத்த தைரியம் தான் அவளின் நடத்தையோ! கையில் வைத்து தாங்கிய கணவனின் கோபமும், கொடுத்த திடீர் அடியும் தான் அவளின் இந்த முடிவிற்கு காரணமா? என்று தன் தவறுகளை படையலிட்டு அலசி சோர்ந்து போனான்.
ஏது எப்படியோ! நடந்ததை இனி மாற்ற முடியாது. மாமனின் கோபத்தையும் குறை சொல்ல முடியாது பெண்ணை பெற்றவரின் துடிப்பு அது. எல்லாவற்றையும் சரி செய்து, தன் வாழ்வை நல்ல படியாக கொண்டு செல்ல வேண்டும். அதற்கு, முதலில் தாமரை பிழைத்து வரணும் என்ற வேண்டுதலோடு, வெளியே நிலைமையும் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று அவசரமாக அய்யனிடம் வேண்டுதல் வைத்தான். நிலைமை எப்போதோ கட்டுடைத்தது அறியாமல்!
தன் கணவனுக்கு அழைத்து நிலவரம் சொல்லி, பின் மணிமாறன் கூட தன் சின்னம்மாவை காண சென்றாள் வாணி. அவளுக்கும் இந்த அளவு போகும் என்று தெரியாது. ஏதோ குடும்ப சண்டை சரிசெய்து விடலாம் என்று வர நடப்பதை பார்த்து அதிர்ந்து விட்டாள். சொந்த தாய் மாமன் கிட்ட கூட போக முடியவில்லை. எதிரியாக பார்க்கிறார், கூட பிறந்த தம்பி, உடன் வளர்ந்த மாமன் மகள் யார் பக்கம் நிக்க, யாரை அதட்ட, யாரை சரிகட்ட ஒன்றும் புரியா நிலை.
அங்கு, குழந்தை பவியின் உடல் தற்போது முன்னேற்றம் கண்டது. காலையில் நல்ல முழிப்பு தட்டி, கண்ணை உருட்டி உருட்டி தன் அப்பத்தாவை பார்த்து, முதல் இரண்டு பல் தெரிய சிரிக்க, அவ்வளவு மன நிறைவு அரசிக்கு. கிறுக்கு பயமவ இந்த சிரிப்பு தொலைக்க பார்த்தாலே! என்று தாமரையை அப்போதும் வசை பாடினார்.
டாக்டரும் பரிசோதித்து சரியாகி விட்டது என்று நம்பிக்கை அளித்ததோடு, நாளை வீட்டிற்கு சென்று விடலாம் என்றும் அறிவுறுத்தினார். குழந்தையின் கன்னத்தில் இருந்த காயம் ஆறி சிறு சிறு வடுவாக நிற்க, இரண்டொரு நாளில் சரியாகி விடும் என்று மருந்து கொடுத்து விட்டு செல்ல, வேலுவை எதிர்பார்த்து காத்திருந்தார் அரசி.
வணி, மணிமாறன் இருவரும் குழந்தை வார்ட் விசாரித்து பவியின் அறைக்கு வர, அவர்களை கண்ட அரசி, “என்னாவே நீங்க வாரீங்க! எங்க அந்த கோட்டி பய, என்னிய தனியா நிக்க வச்சு போனான், ஆள காணோம். வாணி, இங்கு தெக்கும் தெரியாம?, வடக்கும் தெரியாம! ரொம்ப பாடுபட்டேன் ஆத்தா! வாடையே சேரல, மொத வீட்டுக்கு போய் நம்ம ஊரு சோனை தண்ணில குளிக்கணும்” என்று வாணியிடம் புலம்பிய படி, மணிமாறனை பார்க்க,
பார்வை புரிந்த மணி மாறனும் “ ரொம்ப முக்கியமான வேலை ஆத்தா, அதான் அக்காவ கூட்டியர சொல்லி துணைக்கு என்னிய அனுப்புனான்” என்று சமாளிக்க , அவரின் நம்பாத பார்வையை கண்டு, “ நிசத்துக்கே உண்மை ஆத்தா, ரொம்ப அவசரமான சோழி அதான். அக்காவ கேட்டு பாரும்” என்று சொல்லி பெருமூச்சு விட,
வாணி தான் அவருக்கு எப்படியோ புரிய வைத்து, தங்களோடு வர அனுமதி வாங்கினாள். அவ்வளவு பொறுப்பு அற்றவன் அல்ல வேலு, அதுவும் தாயும், குழந்தையும் நிக்க வராமல் இருக்க மாட்டான் என்று எண்ணிய அரசி மகளுடன் செல்ல சம்மதித்தார். ஒரு நாள் இருக்க சொல்லியும் கிளம்பி விட்டனர். அங்கு தாமரை கவலைக்கிடம் என்று அறிந்த மணிமாறன் உடனடியாக கிளப்பி விட்டான் இருவரையும்.
பெரியாத்தா எவ்வளவு போராடியும் தாமரையை காண அனுமதிக்க வில்லை பூமணி. மகளின் நிலை கண்டு கொதித்து போய் இருந்தார் சிவம். “மதினி” என்ற சொல் போக மறு வார்த்தை பேசாத பூமணி, இன்று அவ்வளவு பேச்சு, “ போதும் உங்க உறவு, எம் பிள்ளை சாகுறத பாக்காத்தான் வந்தீகள, சொந்தம் சொந்தம் சொல்லியே எம்ம கழுத்த அறுத்துடீக, ஒன்னும் பாக்கி இல்ல. பொதைக்கிறதோ! எரிக்கிறதோ நாங்க பாத்துகிறோம், அதுக்கு ஒன்னும் உம்ம குடும்பம் ஆவ வேணாம், உம் சோழிய பாரும்” என்று ஆவேசமாக பேச,
அதிர்ந்து நின்றார் பெரியாத்தா, இது என்ன மட்டுமரியாதை இல்லாமல் என்று கோபம் வந்த போதும். மகளின் நிலை கண்டே வந்த வார்த்தை என்ற அளவிற்கு புரிந்து கொண்டு, தன் உடன் பிறந்தவன் பக்கம் திரும்பினார்.
உடல் விரைக்க நின்ற சிவத்தை கண்டு பயம் வந்தாலும், தைரியமாக அவர் முன் சென்று, “ அய்யா சிவம்! என்ன ஆறுதல் சொல்லன்னு ஒன்னும் புடிபடலவே! என்னவோ கண்ணு பாட்டாப்புல ஆகிபோச்சு, நாலு தலை முறை சம்மந்தம் இப்ப வெட்டி நிக்குது. எனக்கு என்னவோ தாமரை நல்ல படிய எந்திருச்சு வருவான்னு தான் தோணுது சாமி! அவ இப்படி வீம்பா கிடக்க, நினைப்பு புள்ள கிட்ட இருக்கோ. உம் பேத்திய பாருவே! யாருக்கும் மனசு தாங்காது, பிஞ்சு முகம் வெந்து கிடக்க கோபத்துல கை நீட்டீடான்” என்க,
கோபத்தோடு ஏதோ மறுத்து சொல்ல வந்த சிவத்தை, பேச விடாமல், “ தப்பு தான், அவன் அடிச்சது. நம்ம தாமரையும் அவசர பட்டு செஞ்சுபுட்டா! யார சொல்லி நோக படுத்து கிடக்கவ எந்துருச்சா தான் சேதி தெரியும். ஆன, தம்பி உமக்கு விவரம் புரியுமுல்லா, பெத்தவ ஆதங்கத்தில பேசுற, நீயி நிதானம் தவறாதப்பு, கொஞ்சம் யோசிவே” என கொஞ்சலாக சொன்னவர் சிவம் முகம் காண, ஒன்றும் கண்டறிய முடியவில்லை. அவருக்கு புரிய வைக்கும் நோக்கோடு,
“அய்யா ராசா! அவன் யாருவே! உம்ம எதிரியா, நீயி தூக்கி வளத்த உம்ம கூட பொறந்தவ மகன்வே! முட்டு பிள்ளைய தூக்கி இளந்தாரி வரைக்கும் உன் கைக்குள்ள வளந்தவன். உம் சொல்லு கேட்டவன் தப்பா நிப்பான, என் கூட பொறந்தவக சொந்தம் என்னிக்கும் வேணும், அடுத்த வீட்டு பொண்ணு வந்தா நிலை படி நுழைய முடியாது எந்நாளும் நிக்க அக்கா வீடு தான் வேணும், எம் மருமவன்னு உரிமையை விட மாட்டேனு! ஒத்த காலுல நின்னு கட்டி குடுத்த உன் கூடபொறந்தவ வீட்டையா நம்பல, நாளைக்கு தாமரை வந்து எம் புருசன், எம் பிள்ளைன்னு நிக்கும் போது, நீயி மருமவன்னு போய் நிக்க முடியுமா!…. சொல்லு? சொன்ன சொல்லு மறைஞ்சு போகும், செஞ்சா செயல் மறையாதுலே!”……. அவரின் வெளிப்படையான பேச்சை கேட்ட பூமணிக்கு தான் ஆவேசம் பொங்கியது. கணவரின் முகமும் அக்காவின் பேச்சில் யோசனையாக கோபம் கரை உடைக்க அவர்களை நெருங்கி சென்றார்.
“பேசுங்க பேசுங்க இன்னும் என்னாலாம் பேசி உங்க மவன் செஞ்சா காரியத்தை பூசி முழுக போறிங்க! , நீங்களும் ஒரு பொம்பள பிள்ளைய வச்சிருக்கீங்க அதா மறந்துடாதீங்க மதினி! என்னாலாம் சொல்லி சரி கட்டுறீங்க” என்று எள்ளாலாக சொல்லிய பூமணி.
“எங்களுக்கு மட்டும் வேண்டுதல்ல! உம்ம மவன ஜெயிலுல போட, மருமவன்னு ஆசை ஆசையா கிடந்த மனுசன கச்சு போக வச்சது யாரு? ….. உம் மவன் தான, சொந்தம் என்னிக்கும் விட்டு கொடுக்காது, அப்படி நம்மி தானே மவள குடுத்தோம்! இன்னிக்கு என்ன ஆச்சு?…. வட்ட முக சிரிப்போட வந்த எம் புள்ளைய. உருக்குலைச்சு அனுப்புனது யாரு? உம் மவன் தானே?” என்று கண்ணில் நிற்காமல் வழியும் நீரோடு வினவ,
பேச்சு மறந்து நின்றார் பெரியாத்தா! பெற்றவள் வயிறு எரிய பேசும் போது யாரு என்ன சமாதானம் சொல்ல முடியும். உண்மை நிலவரம் உள்ளே கிடப்ப வளுக்கு தானே தெரியும். அவள் எழுந்து வராமல் இங்கு எதுவும் சரியாகாது என்று புரிந்தது. மறுத்த பேசாமல் அமைதியாக சென்று ஒரு மூலையில் அமர்ந்து விட்டார்.
தாமரை நிலையில் ஒரு முன்னேற்றமும் இல்லை. நேற்று வரை எழுந்து அமர்ந்தவள், இன்று மொத்தமாக சுருண்டு விட்டாள். அவளின் கட்டுப்பாடு இல்லாமலே வயிற்று போக்கு ஆரம்பித்தது, அதை உணரும் நிலையில் கூட தாமரை இல்லை. எப்போதும் சுத்தம், நேர்த்தி என்று பேசுபவள் ஆடை ஒதுங்கி, தலை கலைந்து என்று ஒரு நாளும் பார்க்க முடியாது, எப்போதும் பளிச் முகம் தான்.
அரசு மருத்துவமனை வாடை ஓமட்டும் என்று படு சுத்தம் பார்ப்பவள் சும்மா கூட அந்த பக்கம் செல்லாதவள், இன்று அந்த பெரிய ஆஸ்பித்திரி படுக்கையில் சுருண்டு கிடந்தாள். குண்டு என்று இல்லாவிட்டாலும் ஓங்கு தாங்காக இருக்கும் தாமரை, அரை அடியாக குறுகி, வட்ட கண் பட்டு கிடக்க. பார்த்த அனைவருக்கும் நெஞ்சு கொதித்தது. வேலுவை வெட்டி எரியும் துடிப்போடு தாமரையின் சொந்தம் நிற்க, வேலுவை காக்கும் மாமனாக வந்து விட்டான் கலைவாணன்.
மணிமாறனை அழைத்து பேசி நிலவரம் என்ன என கண்டு, வேலுவை பார்க்க சென்றான். மனம் தவித்து நின்ற வேலுவிடம் ஆறுதல் சொல்லி, தான் உடன் இருப்பதாக வாக்களித்து தாமரையை காண சென்றான். வீட்டின் மூத்த மாப்பிள்ளையாக இருந்த போதும் அதிகாரம் எல்லாம் அவனிடம் இருக்காது. மாமியார் வீடு என்று சொந்த பந்தங்களோடு கலந்து நின்றாலும், தன் எல்லைக்குள் ஒரு வரைமுறையோடு எட்டி நிற்பான். அதினாலே, அவன் பேச்சிற்கு மதிப்பு எப்போதும் இருக்கும்.
தனக்கு தெரிந்த மருத்துவர் கொண்டு விசாரித்த கலை. நிலைமை கை மீறி விட்டது என்று உணர்ந்து தன் பக்க ஆள்களை திரட்டினான். வேலு கடைசியாக ஒரு முறையாவது மனைவி முகம் காண வேண்டுமே என்று. ஆம், தாமரையை காப்பாற்ற முடியாது என்று கை விரித்து விட்டார் மருத்துவர். வேலுக்கு இது எத்தகைய சூழல் என்று புரிந்தாலும், மாற்றும் வல்லமை யாருக்கு இருக்கு. கடவுள் ஒருவரை தவிர,
கலை மருத்துவமனை செல்ல, அங்கு ஒரே கூட்டமும், அழுகை சத்தமும் தான். மணிமாறனுக்கு அழைத்து கேட்க, நெருங்கி விட்டதாகவும் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாக சொல்லி வைக்க, பெருமூச்சோடு உள்ளே சென்றான் தாமரையை காண நிதானம் தப்பிய நிலை தான் வெறும் மூச்சு மட்டுமே வந்தது. எப்போது அடங்கும் என்று தெரியாது சில மணி நேரங்களில் இருக்கலாம்.
இனி அவ்வளவு தான் முடிந்தது என்று சேதி கேட்டு, சொந்தமும் சுற்றமும் குவிந்தது மருத்துவமனைக்கு. ஒரு பக்கம் அரட்டலும், ஒப்பாரியும் என்றால். ஒரு பக்கம் கோபமும், ஆவேசமும், பழிவாங்கும் எண்ணமும் மிகுந்து நின்றது. பூமணி ஊராகிய தேனி மக்கள் பஸ் நிறைய வந்து விட்டனர்.
பாதிப்பு யாருக்கு அதிகமோ, அந்த பக்கம் தானே மக்கள் நியாயமும் நிற்கும். அதன் படி தாமரை பக்கமே ஊர் மக்களும் நின்றனர். தாமரைக்கு எந்த உணர்வும் இல்லை, மயங்கிய நிலை தான். அவள் உள்ள கிடங்கை யார் அறிவார். பொறுமை, நிதானம் என்று எல்லாம் ஏன் சொல்கிறார்கள். அவசரப்பட்டு, நொடி நேர கோபத்தில் நிதானம் தவறி தாமரை எடுத்த முடிவு. எவ்வளவு இன்னல்களை அவளுக்கும், குடும்பத்திற்கும் கொண்டு வந்து விட்டது. சாவின் விளிம்பில் இருந்து மீண்டு வர அவள் நடத்திய போராட்டம் அவளிற்கு மட்டும் தான் தெரியும்.
வேலு எப்படியும் மாமா தன்னை வெளியே எடுப்பார் என்று காத்து கிடக்க. ஒரேடியாக மறுத்து விட்டார் எஸ்.ஐ மதன். “நிலைமை கட்டுக்குள் இல்லை கலை, சொந்த பந்தம் என்று இரண்டு ஊர் மக்கள் நிக்குறாங்க! உங்க பக்கமும் ஆள் நிறைய இருக்கு. நிதானம் இல்லாமல் கோபத்துல நிக்குறான்க காட்டு பயலுக, என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. அந்த பொண்ணு நிலைமையும் சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்லை. இப்போ வேலுவ வெளிய விட்ட சோழிய முடிச்சுட்டு தான் விடுவான்க, கலவரம் ஆகி வெட்டு குத்து ஆச்சுன்னா யார் பொறுப்பு. வேலு போலீஸ் பாதுகாப்புல இருக்கிறது தான் நல்லது. கடைசியாக முகம் பார்த்து என்ன ஆகப்போது. அம்மா இல்லனாலும் அப்பாவாது நிக்காட்டும் அந்த குழந்தைக்கு” என்று நிதர்சம் உரைத்தவரிடம் மறு பேச்சில்லாமல் வெளியேறினான் கலைவாணன்.
எஸ்.ஐ மதன் சொல்லிய படி தான், தாமரைக்கு முடியும் முன்பே வேலுவை போடும் எண்ணத்தோடு தேனி ஊர் இளவட்டம் நின்றனர், எப்படியும் மனைவியை பார்க்க வந்து தானே ஆக வேண்டும்.
பூமணி தான் தலையிலும், நெஞ்சிலும் மாறி மாறி அடித்து அழுது கொண்டிருந்தார். யாரும் நெருங்க வில்லை, எல்லோரும் அழுக யார் தான் நெருங்குவார். சிவம் முழுதாக தொலைத்த நிலையில் நிற்க, அவரின் சாட்டையை கொத்தாக பற்றிய பூமணி, “ சொந்தத்தில் கட்டி குடுத்த உறவு விட்டு போகாம இருக்கும், நம்ம புள்ளை பயம் இல்லாமல் வாழும், சொந்த அத்த வீடு அன்னியம இருக்காது சொன்னிகளே! உங்க சொந்தம் பண்ணிய காரியத்தை பாருங்க. எம் புள்ளை பேச்சு மூச்சு இல்லாம கிடக்கா?, மணி நம்ம புள்ளைய செல்லமா வளத்துத்தோம், சொந்தம்ன குறையோ, நிறையோ அனுசரிச்சு இழுத்து போகும்னு சொன்னீங்க, எம் புள்ளைய துணில மூட்டை கட்டுறது தான் அனுசரிப்ப சொல்லுயா? எனக்கு ஒரு பதில் சொல்லு பெத்தவா கேக்குறேன் எம் புள்ளையா மீட்டு குடு!” என்று அவர் நெஞ்சில் அடித்து அடித்து அழ, அவரின் கடைசி வாக்கியத்தை தாங்க முடியாமல், சிவமும் தலையில் அடித்து கதறினார்.
வாணி கட்டுப்பாட்டில் அரசி இருக்க, மணிமாறன் மட்டுமே குழந்தையை தூக்கி கொண்டு சென்றான் தாமரை அறைக்கு. அரசி வாய் தெரியும் என்பதால் வாணி அவரை விட வில்லை. நிலை புரியாமல் ஏதேனும் பேசி மேலும் சிக்களாக்கி கொள்ள கூடாதே.
முன் பல் தெரிய மாமன் தோல் சாய்ந்து சிரிப்போடு வந்த குழந்தையை, பார்த்த அனைவருக்கும் துக்கம் பொங்கியது. தாயை இழந்து நிற்கும் வயத அதற்கு. மற்றவர் குழந்தையை கட்டி அழ வர, தடுத்து பெரியாத்தா கையில் கொடுத்தான் மாறன். அழுது அழுது ஓய்ந்தவர், தள்ளாடிய படி மெது நடை கொண்டு தாமரை இருக்கும் அறைக்கு சென்றார்.
ஆளாளுக்கு ஒரு பக்கம் அமர்ந்து அழுது கொண்டிருக்க. பூமணி, சிவம் மட்டுமே உள்ளே இருந்தனர். பேத்தியை கண்டு பெறும் குரலோடு பூமணி ஒப்பாரி வைத்து, குழந்தையை தூக்க, அந்த சத்தத்தில் அரண்ட குழந்தை வீல் என்று கத்தி அழுது அவரிடம் செல்லாமல் முரண்டு பிடிக்க.
உடனே பெரியாத்தா வாங்கியும் அழுகை குறைய வில்லை. சூழல் பயம் கொண்டு அதிக சத்தத்தில் குழந்தை அழ, சத்தம் காதை கிழித்தது. குழந்தை அழு குரல் உணர்ந்து மெதுவாக கண் திறந்து தன் பிள்ளையை கண்டாள் தாமரை.