Skip to content
Post Views: 7,835
“எ… என்.. என்ன சொன்னீங்க..?” என வார்த்தை தந்தி அடித்தது இனியாளுக்கு.
“உன் காதுல என்ன விழுந்துச்சோ அதை தான் சொன்னேன்.
Advertisement
என்னை கல்யாணம் பண்ணிக்கிறையா..?” என்றான் மீண்டும் அழுத்தமாக.
Advertisement
அதற்கு மறுப்பாக ஏதோ பேச வந்தவளை தடுத்தவன், “உன்னோட தகுதின்னு நீ சொன்ன எதுவுமே என் மனசுல இல்லை.
Advertisement
நடந்த எதுவுமே என் நாலேஜ்க்கு வராம நடந்தாலும்.. நடந்ததுல என்னோட பங்கும் உண்டு.
Advertisement
அதுலையும் என்னோட குழந்தை மீதான ஆசைக்காக தான் இதெல்லாம் அப்படிங்கும் போது பெரும்பாலான பங்கு எனக்கு தான்.
அந்த பாவம் தான் என்னோட அப்பா அம்மாவை நான் இழந்ததற்கு காரணமுன்னு நான் நினைக்கிறேன்.
இதனால நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கை சீராகறதோட நான் என் மகளோடவும்.. நீ உன் மகனோடவும் ஒரே வீட்டில் கடைசிவரை வாழ முடியும். பிள்ளைங்க ஏக்கமும் தீரும்..” என்று சொல்ல,
அவனின் அந்த விழியில் அதில் இருந்த உறுதியில் சம்மதிக்க மனம் உந்திய போதும்,
‘அவர் சொல்வது போல இருந்தால் பிள்ளையை பிரிய வேண்டாம் தான்.. ஆனால், அவனிடம் தான் எதிர்பார்க்கும் நேசம் கிட்டுமா..? என்ற எண்ணத்தால்,
“கல்யாண வாழ்க்கை விளையாட்டில்லை.
பிள்ளைங்களுக்காக மட்டும் கடைசி வரை நம்ம வாழ முடியாது.
நீங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணா.. உங்க தாம்பத்திய வாழ்க்கையும் நல்லபடியா இருக்கும்..” என்று அவள் சொல்ல,
“ஏன்.. உன்னோட அப்படி வாழ முடியாதா..? இல்ல வாழ கூடாதா..?” என்றான் அவனும் அவளோடு இசைந்து.
“அது.. நான்.. எனக்கு..” என அவள் தடுமாற,
“என்ன உனக்கு..? ஹெல்த் வைஸ் நான் பிட் தான்.
அங்கே எதாவது சிக்கலா..? வேனுமுன்னா டெஸ்ட் பண்ணி பார்த்துடலேமே..!” என்றான் கண்களில் குறும்பு மிளிர,
“ச்சே.. ச்சே.. இதுக்கு எல்லாம் டாக்டரை பார்க்க போவாங்களா..?” என ஆரம்பித்தவள்,
பேச்சு போகும் பாதை புரிந்து.. அவனை பார்க்க,
அதில் தெரிந்த விசமத்தில்.. அவன் சொன்னதன் பொருள் புரிய சட்டென பேச்சை நிறுத்தி திருதிருவென விழிக்க,
அவளின் பாவனையில் எழுந்த புன்னகையை இதழை கடித்து அடக்கியவன்,
“லிசன்.. நம்ம லைஃப் அடுத்த கட்டத்துக்கு போறது.. அது நம்ம அப்புறமா டிசைட் பண்ணிக்கலாம்.
இப்போ, குழந்தைங்களுக்காக தான் இந்த கல்யாணம்.
ஆனா அது நிரந்தரம் இல்ல. நிச்சயமா உன் எதிர்பார்ப்பு எல்லாத்தையும் என்னால கொடுக்க முடியுமுங்கற நம்பிக்கையோட கேட்கறேன்.. உனக்கு ஓகே வா..?” என்றிட,
‘மறுத்து என்ன பேசுவது..?’ என புரியாது விழித்தவள்,
‘வெண்பாவை விட்டு கொடுத்துவிட்டு.. தன்னால் இருக்க முடியுமா..?
முகுந்த், அவனின் தாய்க்கான ஏக்கம் தெரிந்தும்.. உதறி தள்ள முடியுமா..?’ என்ற குழப்பமும் பாடாய்படுத்த வேறு வழியின்றி..
‘சரி..’ என தலையசைத்தாள் அமிழ்தினியாள்.
அவளின் சம்மதம் அதுவரை தன் இதயத்தை அழுத்திக்கொண்டிருந்த ஏதோ ஒன்றை இல்லாமல் ஆக்க, முகம் மலர, “தேங்க்ஸ்..” என்றான் ஆத்மார்த்தமாய்.
புரியாமல் அவள், ‘ஏன்..?’ என விழியால் வினவ,
“எல்லாத்துக்கும்.. என் வாழ்க்கையில நீ வர்றேன்னு ஒத்துக்கிட்டதுக்கு..
அப்படி வரும் முன்னமே எனக்காக ரெண்டு பொக்கிஷங்களை பிள்ளைகளா கொடுத்ததுக்கு..” என்றான் உள்ளம் நிறைய.
அவனின் பேச்சில் அவளை முன்னிருத்தி விட்டு.. பிள்ளைகளை அடுத்து சொன்ன விதம்.. அவளுக்கு ஒருவித இதத்தை தந்தது.. என்பது தான் உண்மை.
ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது அதை தானே..!
பிள்ளையே.. என்றாலும் தனக்கு முன்னுரிமை வேண்டும் தன் துணையிடம் என்று தானே போராடுவார்கள்.
இனியாளும் அது போன்ற மனம் கொண்ட பெண் தானே..!
அவளின் அந்த இதம் அவளின் முகத்தையும் மலர வைக்க அவனை கண்டு லேசான புன்னகையை சிந்தினாள் முதல் முறையாக.
அதை ரசித்து பார்த்தவனுக்கு இன்னும் அவளுடன் நேரத்தை செலவிட தோன்றினாலும்.. கீழே தங்களுக்காக காத்திருக்கும் மற்றவர்களை மனதில் வைத்து,
“வா அம்மூ.. கீழே போலாம்..” என்றான் தன் கரத்தை அவளை நோக்கி நீட்டியவாரு.
அவனின் அழைப்பில் விழி விரிய அதிசயத்து பார்த்தவளை கண்டு புருவத்தை உயர்த்தி, ‘என்ன..?’ என்றான் பாவனையாக.
“அப்பா என்னை அப்படி தான் கூப்பிடுவாங்க..!
அவருக்கு அப்புறம் யாருமே அப்படி கூப்பிட்டதே இல்லையா.. அதான், சட்டுன்னு ஒரு மாதிரி ஆகிடுச்சு..” என்றவளுக்குள்,
‘அவளின் தந்தை அவளை விட்டு விட்டாலும்.. மகளாய் அவரை அவள் எவ்வளவு தூரம் இன்னும் தேடுகிறாள்..’ என்பது நன்றாகவே புரிந்தது.
‘இனி வெண்பா மட்டும் மகளல்ல..’ என்று அப்போதே முடிவெடுத்தவன்..
“வாடா ம்மா.. போலாம்..” என்றான் ஆதுரமாய்.
அவன் குரலில் அதில் இருந்த கனிவில்.. அவனின் கையோடு சந்தோஷமாகவே கைகோர்த்தாள் அமிழ்தினியாள்.
******
ரியானும், இனியாளும் மேலே சென்றதும் தனம் தன் மனதில் இருப்பதை அங்கிருப்பவர்களுக்கு சொல்லிவிட,
அத்தனை பேரும்.. ‘என்ன முடிவெடுப்பார்களோ..?’ என்ற சிந்தனையில் மூழ்கிவிட்டனர்.
எல்லோரும் அதே சிந்தனையில் இருந்ததால், ‘தன்னை யாரும் கவனிக்கமாட்டார்கள்..’ என்ற நினைப்போடு,
சம்யுக்தாவை ஆசை பார்வை பார்த்திருந்த வெங்கடேஷ் தோளை லேசாக சுரண்டினான் சந்தீப்.
“ப்ம்ச்..” என அவன் கரத்தை தட்டிவிட்டவன் எண்ணமும்.. பார்வையும் பாவையிடமே.
மீண்டும் சுரண்ட.. அதே நிலை..!
இந்த முறை சட்டென அடித்துவிட, அப்போது தான் சுரனை வந்தவனாய் சந்தீப்பை பார்க்க,
“என்னடா தம்பி.. லுக்கு பலமா இருக்கு..?” என்றான் மெல்லிய குரலில்.
‘ஈஈஈஈ..’ என அனைத்து பல்லையும் காட்டிய வெங்கடேஷ், “சும்மா தான் அண்ணே..” என்றான் அசடு வழிய.
“அந்த சும்மா லுக்கை.. ரெண்டு அம்மாங்களும் பார்த்துட்டிருக்காங்க..” என்றதும்,
பதறிப்போய் வெங்கடேஷ் பார்க்க, அப்படி ஒன்றும் இல்லாமல்.. அனைவரும் ஏதோ சிந்தனையில் இருக்க,
“ஏண்ணே..?” என்றான் முகத்தை சுருக்கி சோகமாய்.
“பின்னே என்னடா.. இங்கே எவ்வளவு டென்ஷனோட எல்லாரும் காத்துட்டு இருக்கோம்.
நீ என்னமோ அந்த புள்ளைய அப்புடி பாத்து வைக்கறே..! சரியில்லையே..? என்ன விசயம்..?” என்றான் முறைப்பாக,
“அது.. வந்து அண்ணே..” என இழுக்க,
“வந்த வரை போதும்.. சொல்லி தொல.. உன் ஃபேஷை இந்த ரியாக்ஷன்ல பாக்க முடியல..” என சந்தீப் முகத்தை சுழித்து சொல்ல,
“அது.. வந்து.. அண்ணே..” என்றவனை கண்டு,
“டேய்.. திரும்பவுமா..?” என்றான் கடுப்பாக.
“அட.. இருங்க அண்ணே.. ஒரு ஃப்லோல சொல்ல வந்தா.. விட்டா தானே..?
போங்க.. நா சொல்ல மாட்டேன்..” என வெங்கடேஷ் பிகு செய்ய,
“சரி சொல்லதே. எப்படியும்.. எங்க தயவு தேவைப்படும். அப்போ வச்சுக்கறேன்..” என்றதும்,
நிதர்சனம் புரிந்த வெங்கடேஷ், “அய்யோ.. அண்ணே..! என் வாழ்க்கையில வெளக்கேத்தி வைக்க வேண்டிய தெய்வமே நீங்க தான்..” என ஐஸ் வைத்தவனை கண்டு,
“அப்ப சொல்லுடா வெண்ணே..” என அதட்ட,
“அது.. வந்து.. அண்ணே..” என அவன் திரும்பவும் அதை பல்லவியை திரும்ப படிக்க,
“போடாங்க..” என்றவன், அவனை திட்ட போக அவனின் வாயை அவசரமாக கை கொண்டு மூடியவன்,
“அண்ணே.. அண்ணே.. இந்த முறை கரெக்ட்டா சொல்லிடுறேன்..” என்றான் கெஞ்சலாக.
“இது தான் லாஸ்ட்.. இனி அது வந்துன்னு ஆரம்பிச்சே.. மவனே ஒரே போடு.. ஜாக்கிரதை..” என்றான் நாக்கை மடித்து ஒற்றை விரல் நீட்டி எச்சரித்து,
“அ..” என ஆரம்பித்தவன், சந்தீப்பின் உஷ்ண பார்வையில்,
“அந்த புள்ளகிட்ட நெருங்கி பழகினாலும்.. அது ப்ரண்ட்ஷிப்பா..? க்ரஷ்ஷா..? இல்ல அதுக்கும் மேலையா..?ன்னு இத்தன நாள் ஒரு குழப்பம் ஓடிட்டே இருந்துச்சு மனசுல.
இப்போ கன்பார்மா இது க்ரஷ்ஷுக்கு மேலன்னு தெரிஞ்சிடுச்சா அதான் அப்படி பார்த்தேன்..” என,
கண்களில் கலர் கனவுகள் தெரிய மேலே பார்த்து நெஞ்சை நீவி சொன்னவனை கண்டு,
“அது என்னடா.. க்ரஷ்ஷூக்கு மேல..?” என்றான் சந்தீப் அறியாதவனாய்.
“ஓ.. நீங்க 90’ஸ் கிட் இல்ல..? அது வேற மறந்துட்டேன்.
க்ரஷ்ஷூக்கு மேலன்னா.. லவ்வர்ன்னு அர்த்தம் ண்ணே..” என நக்கல் பார்வையோடு விளக்க,
“ஆமா, இவரு மட்டும் 90’ஸ் கிட் இல்லாம.. என்ன உன்ன விட ஒரு அஞ்சாறு வருஷம் முன்னாடி பிறந்துட்டேன்.. அதுக்கு இப்படியா..?!
அந்த புள்ள மேல லவ்வுன்னு ஒத்த வார்த்தையில முடிக்காம இதுக்கே இந்த இழு இழுக்கறே..
நீ கல்யாணம் பண்ணி முடிக்கறதுக்குள்ள.. எப்பா சாமீ முடியலடா..” என்றவன் திரும்ப,
அவன் பார்வையில் விழுந்தனர் ரியானும் இனியாளும்.
அவர்களின் இணைந்த கரங்களே அவர்களின் முடிவை எல்லாருக்கும் உணர்த்த அந்த இடமே சந்தோஷ ஆர்ப்பரிப்பில் மூழ்கியது.
error: Content is protected !!