பிடித்தம் 28
காலை உணவின் போது வெற்றிவேல் மாலதியிடம், “நேத்து ஏன் மா நிவியைக் கூப்பிடலை?”
“அவ மாமியார் கிட்ட பேசினேன்.. பொண்ணு தானே பாக்க போறீங்க.. பொண்ணு உறுதியானா நிச்சயத்துக்கு வருவா னு சொல்லிட்டாங்க.. நாம உறுதி பண்ண தான் போறோம் னு சொல்ல முடியாதே அதான் விட்டுட்டேன்”
“ஓ” என்று வெற்றிவேல் கூற,
யாழினி, “அக்கா வரதுக்கு அந்த பொம்பளையை ஏன் கேட்கணும்?”
மாலதி, “யாழினி மரியாதையுடன் பேசு.. அந்த பொம்பளை.. என்ன வார்த்தை இது.. நாளைக்கு புகுந்த வீட்டிலும் இப்படி பேசினா என்ன நினைப்பாங்க? ஒழுங்கா பேசிப் பழகு” என்று கண்டிப்புடன் கூற,
யாழினி இறங்கிய குரலில், “இல்ல மா.. அவங்க அக்காவை விடுறதே இல்லையே னு கோபத்தில் பேசிட்டேன்.. சாரி மா.. இனி இப்படி பேச மாட்டேன்”
“கூட்டு குடும்பம் னா பெரியவங்க கிட்ட தான் கேட்கணும்.. அது தான் சரி.. அப்பறம் அவங்க விடலைனு இல்லை.. அவ மேல இருந்த கோபத்தில் அவளை நாம கூப்பிடலை.. அதான் இப்படி”
“ஹ்ம்ம்”
“உன் பிரெண்ட் கூட பர்சேஸ் பண்ண போறேன் னு சொன்ன! இன்னும் கிளம்பலையா?”
“இதோ கிளம்பிட்டேன் மா” என்றவள் எழுந்து சென்று கை அலம்பிவிட்டு கிளம்பினாள்.
அவள் கிளம்பியதும் வெற்றிவேல், “என்னாச்சு மா?” என்றான்.
மாலதி அவனை பார்க்க அவன் மென்னகையுடன், “யாழுவை நீங்க கிளப்பி விட்டது போல் இருந்துது.. அவ வெளியே போகும் போது எப்போதும் சொல்லும் அறிவுரைகள் கூட சொல்லலை.. நான் கிளம்புறதுக்கு முன்னாடி பேசுற அவசரத்தில் இருக்கிறீங்க”
அவர் முறைப்புடன், “உன் போலீஸ் மூளையை வீட்டிற்குள் கொண்டு வராதே”
அவன் மென்னகையுடன், “சரி சொல்லுங்க”
“நேத்து வீட்டிற்கு வந்ததும் நிவேதா கிட்ட பேசினேன்.. உனக்கு கல்யாணம் முடிவானதில் அவளுக்கு ரொம்ப சந்தோசம்.. ஆனா அவ குரலே சரி இல்லை.. என்ன னு வற்புறுத்தி கேட்டப்ப தான் சொன்னா.. அவ மாமியார் அவளை கொஞ்சம் படுத்துறாங்க போல.. நின்னா குத்தம் நடந்தா குத்தம் னு எதுக்கெடுத்தாலும் ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க போல.. என் கோபத்தால நாமும் அங்கே போய் வரது இல்லை.. அதனால் கேட்க ஆள் இல்லை னு நினைச்சுட்டாங்க போல” என்றபோது அவரது குரல் கமரியது.
வெற்றிவேல் எழுந்து வந்து அவரை ஆதரவாக தோளோடு அணைத்து, “என் கிட்ட சொல்லிட்டீங்க தானே… நான் பார்த்துக்கிறேன் மா.. கவலைப்படாதீங்க” என்றான்.
மாலதி, “இன்னைக்கு காலையில் கூட பேசினா.. உனக்கு கல்யாணம் உறுதி ஆகிருச்சு னு சொன்னதும் அந்த அம்மா ‘பொண்ணு பார்க்க போறதா தானே சொன்னாங்க! மாப்பிள்ளை வீட்டுகாரங்க னு மரியாதை வேணாம்மா? உறுதி பண்றப்ப எங்களை கூப்பிட வேணாமா? எங்களை மதிக்கலை இந்த கல்யாணத்துக்கு நீ போகக் கூடாது’ னு இன்னும் ஏதேதோ பேசினாங்களாம்”
“சதீஷ் ஒன்னும் சொல்லலையா?”
“மாப்பிள்ளை ஏதோ வெளியே போயிருந்தார் போல.. அவர் வந்து திட்டினத்துக்கு அப்பறம் தான் அந்த அம்மா அடங்குச்சாம்.. அப்பவும் மாப்பிள்ளையை பொண்டாட்டி தாசன் அது இது னு சொல்லியிருக்கு.. ஆரம்பத்துலேயே அம்மா குணம் தெரிந்து மாப்பிள்ளை தனிக் குடித்தனம் போகலாம் னு சொல்லி இருக்கார், இவ ரெண்டு பக்க பெரியவங்களையும் பகைச்சுக்க வேணாம் னு நினைச்சிருப்பா போல.. அதனால வேணாம் னு சொல்லியிருக்கா”
“நிவி ஏன் முதல்லையே சொல்லலை?”
“நான் ஒழுங்கா பேசியிருந்தா சொல்லியிருப்பா.. நாலு வருஷமா என் பொண்ணு என்னென்ன மனவருத்தம் எல்லாம் அனுபவிச்சாளோ! எல்லாம் என்னால் தான்” என்றபோது அவரது குரலும் கண்களும் ஒருங்கே கலங்கியது.
அணைப்பை இறுக்கியவன் அவரது கண்களை துடைத்தபடி, “அம்மா நான் தான் பார்த்துக்கிறேன் னு சொல்றேன்னே! இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்.. சாயுங்காலம் நிவி வீட்டுக்கு போயிட்டு தான் வருவேன்……”
“டேய் பார்த்து டா.. நீ ஏதாவது செய்ய போய் அவளுக்கு மேலும் கஷ்டம்…………..”
“நான் எதையாவது செய்யணும் னு தானே என்கிட்ட சொன்னீங்க!” என்று அவன் சிறு முறைப்புடன் கூற,
அப்பொழுதும் மாலதி, “சரி டா.. பார்த்து பண்ணு” என்றார்.
“சரி மா.. நான் கிளம்புறேன்” என்று கூற,
அவர், “இரு டா.. காபி கொண்டு வரேன்” என்றபடி சமையலறைக்கு சென்றார்.
வெற்றிவேல் தந்தையை பார்த்து, “நேத்து நைட்டே சொல்லியிருக்கலாமே பா.. இந்நேரம் இதுக்கு ஒரு முடிவு கட்டியிருப்பேன்”
சுந்தர்ராஜன், “இதையெல்லாம் கேட்டு யாழினி பயந்துற கூடாது னு தான் அவளை அனுப்பிட்டு அம்மா பேசினா.. நேத்து நைட் அம்மா தூங்கவே இல்லை டா..”
“நீங்களும் தானே பா தூங்கி இருக்க மாட்டீங்க” என்றவன், “கவலைப்படாதீங்க பா.. கண்டிப்பா சரி பண்ணிடலாம்”
“இனி எனக்கு கவலை இல்லை பா” என்று அவர் மென்னகையுடன் கூற அவனும் புன்னகைத்தான்.
[the_ad id=”6605″]
காபியுடன் வந்த மாலதி அதை இருவருக்கும் கொடுத்தபடி, “பத்தரைக்கு மேல ஜோசியரை பார்த்து கல்யாண நாள் குறிச்சிட்டு வரோம் டா”
புன்னகையுடன், “சரி மா.. வந்ததும் போன் பண்ணுங்க” என்றான்.
அதன் பின் காபியை அருந்திவிட்டு கிளம்பினான்.
—————————————————————————————————————————————————-
கலைவாணி, “நான் ஒன்னு கேட்டா உண்மையை சொல்லுவியா?”
மித்ராணி, “பொய் சொல்ல மாட்டேன்”
கலைவாணி மென்னகையுடன், “உனக்கு விருப்பம் இருந்தால் தான் பதிலை சொல்லுவேன் னு சொல்ற.. சரி.. உனக்கு புகழை பிடிச்சு இருக்குது தானே?”
“அவன் செய்தது சரி னு நினைக்கிறீங்களா?”
“புகழ் செய்தது சரி னு நான் எப்போ சொன்னேன்?”
“ஆனா உங்க கேள்வியோட உள் அர்த்தம் என்ன? நீங்களும் சராசரி அம்மா மாதரி வேந்தனை மன்னிச்சு சேர்ந்து வாழு னு சொல்ல போறீங்களா?”
“நீ என்ன நினைக்கிற?”
“இப்பவே சொல்ல மாட்டீங்க ஆனா மகன் பாசம்!”
“என்னோட ஆசையும் பிரார்த்தனையும் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா சேர்ந்து வாழ்றது தான் ஆனா உன்னை வற்புறுத்த மாட்டேன்” என்றவர், “உன் மனம் மாறும் னு எனக்கு நம்பிக்கை இருக்குது” என்றும் சேர்த்துக் கூறினார்.
“அப்படியா!!!”
அவர் மென்னகையுடன், “என் மகன் முகத்தில் இருக்கும் வாடாத புன்னகை அப்படி தான் சொல்லுது”
“ஸோ நான் தரும் தண்டனைகள் சரி இல்லை.. என்னோட வில்லத்தனம் பத்தாது னு சொல்றீங்க”
“அப்படி சொல்லலை.. நீ என்ன தான் செய்தாலும் உன்னோட வில்லத்தனத்தை அவன் ரசிக்கத் தான் செய்வான்”
“கோபத்தை ரசிக்கிற ஒரே ஆள் உங்க மகன் தான்”
“தன்னோட தப்பை ஒத்துகிட்டு உன்னோட கோபத்தையும் நிமிர்வையும் ரசிக்கிறானே! அதிலேயே அவனோட குணமும் மனமும் உனக்கு தெரியலையா?”
“ஏன் தெரியாம! ஆனா இதனால் அவன் செய்தது சரி னு ஆகிடாதே? மன்னிப்பு என்ற வார்த்தை இருக்கிற வரை தவறுகள் நடந்துகொண்டே தான் இருக்கும்.. அதுவும் தப்பு னு தெரிந்தே செய்றவங்களை என்ன செய்ய? என் அம்மாவோட அண்ணனுக்கு இது தேவை தான்.. அவருக்கு மகனா பிறந்ததால் முதுகெலும்பு இல்லாத கோழையான மனோஜுக்கும் இது சரினே சொல்லலாம் ஆனா நான்? அவரை பழி வாங்குறேன் னு அவர் செய்த அதே தப்பை தானே இவனும் செய்து இருக்கிறான்!”
“புகழ் செய்தது தப்பு தான் ஆனா உன் மாமா செய்ததுக்கும் புகழ் செய்ததுக்கும் வித்தியாசம் இருக்குது.. புகழ் உன்னை கடத்தி கல்யாணம் செய்யலை.. உன் விருப்பம் இல்லாம செய்தாலும் உன்னோட அம்மாவோட சம்மதத்தோட தான் உன்னை கல்யாணம் செய்தான்.. இதில் என்ன பெரிய வித்தியாசம் னு நீ கேட்கலாம்.. நிச்சயம் வித்தியாசம் இருக்குது.. உன்னோட மதிப்பை கௌரவத்தை கேள்விக்குறி ஆக்காம அதை காப்பாற்றி இருக்கிறான் அவன்.. புரியலையா? உன் அத்தைக்கு கிடைத்த ‘ஓடிப் போனவள்.. துணை தேடிக்கிட்டவள்.. குடும்பத்தை அழித்தவள்’ போன்ற கெட்ட பெயர்களை உன்னை அண்டவிடலை புகழ்.. நீ மண்டபத்தை விட்டு கிளம்பி போனப்ப கூட ஒரு முக்கியமான டீலர்ஷிப் சைன் பண்ண நீ போயிருக்கிறதா தான் சொன்னான்”
சில நொடிகள் மௌனத்தில் கழிய, கலைவாணி, “முதலும் கடைசியுமா அவன் செய்த ஒரே தவறு இது தான்.. ஆனா என்னைக் கேட்டால் இதை அழகான தவறு னு சொல்வேன்”
மித்ராணி தன் மனம் புகழ்வேந்தன் பக்கம் சாய்வதை உணர்ந்தாலும் கலைவாணியிடம், “எது எப்படியோ தவறுக்கு தண்டனை உண்டு.. அதுவும் இவன் தெரிந்தே செய்து இருக்கிறான்..” என்றாள்.
“ஹ்ம்ம்.. உன் இஷ்டம்..” என்றவர், “கடைசியா ஒன்னே ஒன்னு சொல்றேன்.. உங்க வாழ்க்கையை அழகான பூஞ்சோலையா மாத்துறது உன் கையில் தான் இருக்குது.. இந்த நிலையில்லா உலகத்தில் இன்னைக்கு என்ன நடக்கும்னே நமக்கு தெரியாது.. ஸோ அதிக நாட்களை வீணாக்கிடாத” என்றார்.
—————————————————————————————————————————————————-
காலை வெகு நேரம் கழித்து கண் விழித்த பிரசாத்திற்கு முதலில் பார்வை மங்கலாகத் தெரிய, இருவர் பேசும் சத்தம் மெலிதாகக் கேட்டது.
முதலில் ஒரு ஆண் சிறு கோபக் குரலில், “நீ எதுக்கு இங்க வந்த?” என்று வினவ,
அதை தொடர்ந்து ஒரு பெண் குரல் சிறு தவிப்புடன், “நீ இவர் இருக்கும் நிலையை பற்றி சொன்ன பிறகு என்னால் எப்படி வராமல் இருக்க முடியும்?”
“ப்ச்.. புரியாம பேசாத.. அவன் இருக்கும் மனநிலையில் என்னையே கடிச்சு குதறினாலும் குதறுவான்.. நீ முதல்ல கிளம்பு”
பிரசாத் கண்களை கசக்கிக் கொண்டு பார்க்க இப்பொழுது பார்வை சற்று தெளிவாக தெரிந்தது. அவன் இருக்கும் இடத்தை சுற்றிப் பார்க்க, அது விடுதி அறை என்பது புரிய அவனது பார்வையில் கதவோரம் நின்றுக் கொண்டிருந்த ராகுல் விழ, “ராகுல்” என்று அழைத்தான்.
ராகுல் சட்டென்று திரும்பி, “முழிச்சிட்டியா டா.. ஒரு நிமிஷம் இரு வரேன்” என்றவன் அந்த பெண்ணிடம், “இப்போ நீ கிளம்புறியா இல்லையா?” என்றான் கோபத்தை அடக்கிய குரலில்.
ராகுல் அந்த பெண்ணின் முகத்தை மறைத்தபடி நின்றிருந்ததால் பிரசாத், “ராகுல் யாரது?” என்று வினவினான்.
ராகுல் அந்த பெண்ணை முறைத்தபடி, “என் தங்கை ரோஷினி” என்றான்.
“ஓ!” என்றவன் தட்டு தடுமாறி குளியலறைக்கு சென்று தன்னை சுத்தம் செய்து ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தான்.
இப்பொழுது பிரசாத் முற்றிலும் தெளிந்திருந்தான்.
பிரசாத், “சரி நீ கிளம்பு.. நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
ராகுல் பதில் சொல்லும் முன் பிரசாத் முன் வந்து நின்ற ரோஷினி, “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.
பிரசாத் புருவ சுளிப்புடன் அவளைப் பார்க்க, அவள் மூச்சை இழுத்துவிட்டு ஒரு நொடி கண்களை மூடித் திறந்து, “நான் உங்களை விரும்புறேன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று வினவினாள்.
பிரசாத் ராகுலை முறைக்க, அவன் சங்கடமான பார்வையுடன், “எனக்கே நேத்து நைட் தான் டா தெரியும்.. நான் வீட்டுக்கு வர மாட்டேன் னு சொல்ல போன் பண்ணப்ப உன்னைப் பத்தி கவலை பட்டு பேசிட்டு இருந்தப்ப தான் சொன்னா”
“உடனே கிளம்பி வர சொல்லிட்டியாக்கும்.. இதுக்கு…………..” என்று ஏதோ சொல்ல வந்து நிறுத்த,
அவன் சொல்லாமல் விட்டதை புரிந்துக் கொண்ட ராகுல் ரோஷினியை கடுமையாக முறைத்துவிட்டு பிரசாத்தை பார்த்து, “நான் ஹோட்டல் பெயரைக் கூட சொல்லலை.. அவளா தான் கெஸ் பண்ணி காலையில் கிளம்பி வந்திருக்கா” என்றான் கோபத்தை அடக்கிய குரலில்.
பிரசாத் தளராத இறுக்கத்துடன், “உன் தங்கையை கூட்டிட்டு போய் புத்திமதி சொல்லு”
ரோஷினி, “நீங்க இப்போ அனுபவிக்கிற வலியை எனக்கும் கொடுக்கணும் னு முடிவு பண்ணிட்டீங்களா?” என்றாள் வலியுடன்.
அவள் முகத்தை கூட பார்க்காமல் பிரசாத், “ராகுல் உன்னை கிளம்ப சொன்னேன்” என்று குரலை சற்று உயர்த்தினான்.
“ரோஷினி கிளம்பு” என்ற ராகுல், “ரூமுக்கு பே பண்ணிட்டேன்” என்றுவிட்டு கிளம்ப,
ரோஷினி கிளம்பும் முன், “உங்களை விரும்பாதவங்களை நினைத்து வலியுடன் தனியா வாழ்றதுக்கு பதில் உங்களை விரும்பும் என்னுடன் சந்தோஷமா வாழலாமே! எத்தனை வருஷம் ஆனாலும் உங்களுக்காக நான் காத்திருப்பேன்” என்றுவிட்டு சென்றாள்.
‘இருக்கிற பிரச்சனையில் புது இம்சை’ என்று நினைத்த பிரசாத் இருக்கும் மனநிலையில் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் மற்றொரு நண்பன் வீட்டிற்கு செல்ல நினைத்தான்.
அப்பொழுது அந்த நண்பனே இவனை கைபேசியில் அழைத்தான். (அன்று மித்ராணி மற்றும் மனோஜை பார்த்த போது இவனுடன் இருந்த அதே நண்பன்)
[the_ad id=”6605″]
இவன் அழைப்பை எடுத்ததும், “ராகுல் போன் பண்ணான் டா.. நான் அங்கே தான் வந்துட்டு இருக்கிறேன்”
“சரி” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவனின் மனம், ‘ராகுலை அதிகமா பேசிட்டோமோ!’ என்று எண்ணியது ஆனால் அடுத்த நொடியே, ‘அப்படியே இருக்கட்டும்.. இப்போ அவன் விலகி இருக்கிறது தான் எனக்கும் நல்லது அவனுக்கும் நல்லது.. இல்லை ரோஷினியை வேற தனியா சமாளிக்கணும்’ என்று கூறிக் கொண்டான்.
பிறகு பொத்தென்று மெத்தையில் விழுந்தபடி கண்களை மூடினான். மித்ராணியின் நினைவுகள் அவனை இம்சிக்க அதை விரட்ட முயற்சித்துக் கொண்டிருந்தான்.
—————————————————————————————————————————————————-
மித்ராணியின் ஆடை தொழிலகத்தில் இருக்கும் கூட்டமன்றத்தில் கிருபாகரன் மனதினுள் எரிச்சலுடனும் கோபத்துடனும் அமர்ந்திருக்க, அவருடன் வக்கீலும், அந்த தொழிலகத்தின் முக்கிய பதவியில் இருக்கும் அனைவரும் இருந்தனர். அனைவரும் மித்ராணியின் வரவிற்காக காத்திருக்க, சொன்ன நேரத்தில் சரியாக உள்ளே வந்த மித்ராணியுடன் நிவேதாவும் வந்தாள்.
நீள் சதுர வடிவத்தில் இருந்த மேஜையில் வந்திருந்தவர்கள் எதிர் எதிரே அமர்ந்திருக்க, கிருபாகரன் நடுநாயகமாக அமர்ந்திருந்தார்.
உள்ளே வந்த மித்ராணி நேராக கிருபாகரன் அருகே சென்று மென்னகையுடன், “மிஸ்டர் கிருபாகரன் கேன் யூ ப்ளீஸ்” என்று பேச்சை நிறுத்தி கையால் வேறொரு இருக்கையை காட்ட,
கிருபாகரன் அவளை கடுமையாக முறைக்க, மித்ராணி அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் வக்கீலை பார்த்தாள்.
வக்கீல், “சார் ப்ளீஸ்” என்று மெல்லிய குரலில் கூற,
கிருபாகரன் கோபத்துடன் இருக்கையை வேகமாக தள்ளியபடி எழுந்து வெளியே செல்லத் திரும்ப, மித்ராணி அவரை பார்க்காமல், “இந்த மீட்டிங் முடியாம கிளம்பினா லாஸ் அவருக்கு தான் னு சொல்லுங்க வக்கீல் சார்” என்றாள்.
பல்லை கடித்துக் கொண்டு திரும்பி வந்த கிருபாகரன் வக்கீலுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமரப் போக, மித்ராணி, “அடுத்த சேரில் உட்காருங்க.. இங்கே என் பி.ஏ உட்காருவா” என்றாள்.
கிருபாகரன் கொதிநிலைக்கு செல்ல, மித்ராணி மனதினுள், ‘இதுக்கேவா! இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே!’ என்று கூறியபடி அவரை உதட்டோர நக்கல் புன்னகையுடன் பார்த்தாள்.
“நிவேதா உட்காருங்க” என்ற மித்ராணி தனது இருக்கையில் கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்தாள்.
பின், “வெல்.. இந்த கார்மென்ட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிவிக்க தான் இந்த மீட்டிங்.. இனி இந்த கார்மென்ட் புல் இன்சார்ஜ் நான் தான்.. எஸ்.. மிஸ்டர் கிருபாகரனுக்கு ரெஸ்ட் கொடுத்துட்டு என்னோட கார்மென்ட்டை நானே சார்ஜ் எடுத்துக்கிறேன்.. இனி எந்த விஷயமா இருந்தாலும் நீங்க என்னிடமே கேட்கலாம்.. என்னை ரீச் பண்ண முடியலைனா என்னோட பி.ஏ-விடம் சொல்லுங்க.. அவங்க என்னிடம் கன்வே பண்ணுவாங்க.. அண்ட் கிளையன்ட்ஸ் எல்லோருக்கும் இதை பத்தி இன்பார்ம் பண்ணிட்டேன்” என்றவள், “மிஸ்டர் மோகன் அகௌன்ட்ஸ் டீடேல்ஸ் மொத்தமும் இன்னும் ஒரு மணி நேரத்தில் என் டேபிளில் இருக்கணும்.. நொவ் யூ மே கோ” என்றாள்.
அடுத்து, “மிஸ்டர் கமலேஷ்.. நெக்ஸ்ட் டென் மினிட்ஸ் பாக்டரி ரௌண்ட்ஸ் போறோம்.. அங்கேயே யூனியன் லீடரையும் மீட் பண்றேன்.. அரேஞ் பண்ணுங்க” என்றவள் அடுத்தடுத்து ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலையை கொடுத்து அனுப்பினாள்.
ஐந்து நிமிடத்தில் அந்த கூடத்தில் மித்ராணி, நிவேதா, வக்கீல் மற்றும் கிருபாகரன் மட்டுமே இருந்தனர்.
கிருபாகரன் கோபத்துடன், “நான் பார்த்து வளர்ந்த பொண்ணு.. உனக்கே இவ்ளோ இருக்கும் போது எனக்கு எவ்ளோ இருக்கும்? ஆழம் தெரியாம காலை விட்டுட்ட.. இனி………………………”
“இனி என்ன! உன்னோட அழிவு தான்”
“ஏய்!!!!”
“சும்மா சவுண்ட் விடாத.. இன்னும் நான் முடிக்கலை…………..”
“மரியாதையா பேசுடி.. இல்லை நாக்கை இழுத்து வைச்சு அருத்துருவேன்”
“உனக்கெல்லாம் எதுக்கு டா மரியாதை?” என்று கோபத்துடன் எழுந்தபடி குரலை சற்று உயர்த்தியவள், “நீ என் மேல கை வைக்கிறதா? முடிஞ்சா வைச்சு பாரு டா..” என்று சவாலிட்டவள் உதட்டோர புன்னகையுடன், “என் மேல கை வைக்க நீ நினைக்கும் போதே உன் கதை முடிஞ்சிருக்கும்.. என்ன பார்க்கிற! உன் முன்னாடி நிற்கிறது மித்ராணி புகழ்வேந்தன்” என்றாள் நிமிர்வுடனும் கர்வத்துடனும்.
பின், “மித்ராணி கணேசன்னா இருந்த போதே உனக்கு குடைச்சல் கொடுத்தவள் நான்.. இப்போ உன்னால் என் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது.. சரி இப்போ விஷயத்துக்கு வருவோமா?” என்றவள் கிருபாகரன் முன் ஒரு பத்திரத்தை போட்டபடி, “இத்தனை நாள் என் சொத்துக்களை ஆட்டை போட்டதுக்கு நஷ்ட ஈடா ஊட்டியில் இருக்கும் உன்னோட டீ எஸ்டேட்டையும் டீ பாக்டரியையும் என் பெயரில் எழுதி வைக்கிற னு சைன் பண்ணு.. இன்னும் ரெண்டு நாளில் ரெஜிஸ்ட்ரேஷன்னும் நடக்கணும்”
“சைன் பண்ணலைனா?”
“சிம்பிள்.. நீ கம்பி என்ன வேண்டியதா இருக்கும்.. என்னோட வீடுகள் கடையெல்லாம் என் கையெழுத்து போட்டு லீஸ் விட்டிருக்கியே.. அவங்களுக்கு நோட்டிஸ் போகும்.. இன்னும் நீ செய்த தில்லாலங்கடியெல்லாம் வெளியே வரும்.. போர்ஜரி கேஸில் உள்ளே போவ.. கேஸ் இழுத்தடிக்கலாம் செய்யாது.. தெரிந்த ஆட்களை வைத்து சட்டுபுட்டுன்னு தீர்ப்பு வர மாதிரி செய்திடுவோம்” என்று அலட்டிக்கொள்ளாமல் மிரட்டினாள்.
கிருபாகரன் கோபத்துடன் கையெழுத்து போட்டுவிட்டு அவளை வன்மத்துடன் முறைத்தபடி வெளியே செல்ல,
வக்கீல், “பார்த்து மா.. அவர் பொல்லாதவர்”
“இந்நேரம் வேந்தன் வேலையை ஆரம்பித்து இருப்பான்.. அவனை சமாளிக்கவே நேரம் பத்தாது இதில் என்னை பத்தி எங்கே யோசிக்க” என்றாள் நகைப்புடன்.
வக்கீல், “இருந்தாலும் பார்த்து இருந்துக்கோ மா”
“தேங்க்ஸ் அங்கிள்”
“தாமதமா செய்த கடமைக்கு எதுக்கு மா தேங்க்ஸ்?”
“இந்த தேங்க்ஸ் என் மேல் உள்ள அக்கறைக்கு.. எனக்கு உங்க மேல கோபமோ வருத்தமோ இல்லை அங்கிள்.. அவர் உங்களை மிரட்டி இருப்பார்.. அதனால் தான் நீங்க சொல்லி இருக்க மாட்டீங்க”
“ஆமா மா என் குடுபத்தை வைத்து என்னை மிரட்டி இருந்ததால் உன்னிடம் உண்மையை சொல்ல முடியாம தவிச்சிட்டு இருந்தேன்.. புகழ் சார் வந்ததுக்கு அப்பறம் தான் தைரியமா செயல்பட்டேன்.. இப்போ தான் நிம்மதியா இருக்குது”
“அப்போ எங்க கல்யாணம் பத்தி முன்னாடியே உங்களுக்கு தெரியுமா?” என்று கூர்மையுடன் அவளது கேள்வி வர,
அவர், “இல்லை மா.. உன்னோட பிரெண்ட் னு சொல்லித் தான் விஷயத்தைக் கேட்டார்.. முதலில் நம்பலை அப்பறம் அவரோட உயரம் அண்ட் இந்த உண்மைகள் தெரிந்தால் அவருக்கு எந்த சுயலாபமும் இருக்க போறது இல்லை அண்ட் எப்படியோ உனக்கு விஷயம் போனால் போதும் என்ற எண்ணத்தில் தான் அவர் கேட்ட டீடேல்ஸ் ரெடி பண்ணி கொடுத்தேன்.. உங்க கல்யாணத்தில் தான் நான் அவரைப் பார்த்தேன்.. அதுக்கு முன்னாடி போனில் மட்டும் தான் பேசி இருக்கிறேன்.. அவர் சார்பா சுனில் னு ஒருத்தர் தான் என்னை வந்து பார்த்தார்”
“ஓ.. அங்கிள் இந்த விஷயம் எல்லாம் மனோஜ் பிரசாத் ரெண்டு பேருக்குமே தெரியுமா?”
“முன்னாடியே முழு விவரம் தெரியாதுனாலும் உன்னை ஏமாத்துறது கண்டிப்பா தெரிந்து இருக்கும்.. கொஞ்ச நாள் முன்னாடி மனோஜுக்கு முழு விவரமும் தெரியும்.. என்னிடம் தான் கேட்டான்.. அவன் ஏதாவது செய்வானா என்ற எதிர்பார்ப்பு இருந்தது ஆனா ஏமாத்திட்டான்”
“சரி அங்கிள் நீங்க ரெஜிஸ்ட்ரேஷன் வேலையை பாருங்க”
“எதுக்கும் கொஞ்சம் யோசி……………”
“என் முடிவில் மாற்றம் இல்லை அங்கிள்”
“அட்லீஸ்ட் புகழ் சார் கிட்டயாவது ஒரு வார்த்தை சொல்லு மா”
“நான் பார்த்துக்கிறேன் அங்கிள்” என்றதும் அவர் கிளம்பினார்.
அவர் சென்றதும் நிவேதா, “அப்போ புகழ் சாரை மன்னிச்சு ஏத்துக்கிட்டியா?”
“நீ என்ன நினைக்கிற?”
“அப்போ சும்மா தான் அப்படி சொன்னியா?”
“என்னிடமே நீ சதீஷை விட்டு கொடுக்க மாட்ட.. அந்தாளு கிட்ட வேந்தனை விட்டு கொடுக்க சொல்றியா? அது போக.. என்னை வேந்தனுக்கு எதிரா திருப்ப நினைத்து தேவை இல்லாததை பேச கூடாதுன்னும் தான் அப்படி பேசினேன்”
(ஆம்.. மித்ராணி கூறியது சரியே.. கிருபாகரன் மித்ராணியிடம் சற்று உருக்கமாக பேசி அவளைக் குழப்பி புகழ்வேந்தன் எதிராக திருப்பும் எண்ணத்தில் இருந்தார் தான்.. அதற்காகவே கூட்டத்திற்கு சீக்கிரம் வந்திருந்தார் ஆனால் மித்ராணி அனைவரும் வந்த பிறகு வந்ததோடு அவருக்கு உருக்கமாக பேச வாய்ப்பு தராமல் அவரைக் கோபம் கொள்ள செய்திருந்தாள்)
“ஓ” என்ற நிவேதா, “ஆனா இப்போ என்னிடம் புகழ் சாரை விட்டுக் கொடுத்துட்டியே!”
“அவனை பற்றி குறைவா ஏதாவது சொன்னேனா? இல்லை எங்களுக்குள் நடந்ததை பற்றி சொன்னேனா? உனக்கு தெரிந்த அவனோட செயலை நான் இன்னும் மன்னிக்கலை னு மட்டும் தான் சொன்னேன்.. மன்னிக்கவே மாட்டேன்னும் சொல்லலை”
“தெரியாம கேட்டுட்டேன் தாயே!” என்று கையெடுத்து கும்பிட்டவள், “ஆமா உங்களுக்குள் என்ன நடந்தது?” என்று ஒரு மாதிரி குரலில் கேட்டு புன்னகையுடன் கண்ணடித்தாள்.
“உன் பெட்ரூமை என்னைக்காவது நான் எட்டி பார்த்திருக்கிறேனா?”
ஒரு நொடி அதிர்ந்த நிவேதா, “நீ மாறவே இல்லைடி.. எப்பவும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான்..”
“நீ என் மேல் இருக்கும் அக்கறையில் தான் கேட்கிற னு புரியுது ஆனா கணவன் மனைவி விஷயம் பிரெண்ட்டா இருந்தாலும் நலம் விரும்பியா இருந்தாலும் சொல்லக் கூடாது”
“ஹ்ம்ம்”
அப்பொழுது கதவை தட்டி மித்ராணியின் அனுமதியுடன் உள்ளே வந்த இளைஞன், “குட் ஈவ்னிங் மேம்.. நான்………………”
“சுரேஷ்.. அக்கௌண்ட்ஸ் டிப்பார்ட்மென்ட்.. மிஸ்டர் மோகனின் அசிஸ்டென்ட் என்ற பெயரில் இருக்கும் புகழ்வேந்தனின் உளவாளி..”
“மேம்!!!” என்று அதிர்ச்சியுடன் அவன் அழைக்க,
அவள், “இங்கே சார்ஜ் எடுத்துக்கிறதுக்கு முன்னாடி கிருபாகரன் விசுவாசி யாரெல்லாம் னு தெரிய முக்கிய பொறுப்பில் இருக்கிறவங்க அவங்க அசிஸ்டென்ட் னு எல்லோரடைய போன் காள் ஹிஸ்டரி அனலைஸ் பண்ணேன்.. அதில் தெரிந்த உண்மை இது.. ஆல்ரைட்.. இப்போ எதுக்கு வந்த? இங்கே என்ன நடந்துது னு தெரிஞ்சுட்டு வேந்தனுக்கு சொல்லவா?” என்று சிறு கோபத்துடன் வினவினாள்.
அவன், “நோ மேம்.. சார் என்னை அவரோட ஆள் னு சொல்லிட்டு இங்கே யார் யார் மிஸ்டர் கிருபாகரன் விசுவாசி னு சொல்லி உங்களுக்கு உதவியா இருக்க சொன்னாங்க.. ஆனா நீங்களே எல்லாத்தையும் கண்டுபிடிச்சிட்டீங்க”
நிவேதா மனதினுள், ‘நேத்து இதுக்கு தான் எல்லாரோட நம்பரையும் கேட்டாளா’ என்று நினைத்துக் கொண்டாள்.
————————————————————————————————————————————————–
அதே நேரத்தில் புகழ்வேந்தன் அறைக்குச் சென்ற சதீஷ், “பாஸ் ஒருத்தர் மட்டும் நமக்கு ரெஸ்பாண்ட் பண்ணலை…………..”
[the_ad id=”6605″]
“மிஸ்டர் பால்ராஜ் என்னிடம் பேசிட்டார்.. அவர் தான் அவனோட பெரிய கிளைன்ட்.. அந்த பெரிய ப்ராஜெக்ட் அவன் கைவிட்டு போனாலே அவனுக்கு லாஸ் தான் இதில் அவர் இப்போ நம்ம கூட சேருறதோட நஷ்ட ஈடும் வேற கேட்க போறதா சொன்னார்”
“சூப்பர் பாஸ்”
“ஸோ அவன் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி முடிந்தது.. இந்நேரம் கைலாஷ் வேலையை முடித்து இருப்பான்.. ஸோ அடுத்த ரெண்டு நாளுக்கு சாப்ட்வேர் கம்பனி கதிகலங்கும்……………” என்று பேசிக் கொண்டிருக்கும் போது புகழ்வேந்தன் கைபேசி அடித்தது.
எடுத்து பேசிவிட்டு வைத்தவன் புன்னகையுடன், “கிருபாகரன் ஸ்பின்னிங் மில் கொடோனில் பையர் அக்சிடென்ட்டாம்..” என்றான்.
சதீஷ் சிறு அதிர்ச்சியுடன், “பாஸ் இதை நீங்க சொல்லவே இல்லை”
“ஏற்கனவே உனக்கு நிறைய வேலை அதான் இதை நானே டீல் பண்ணேன்.. சரி ஸ்டீல் இண்டஸ்ட்ரி விஷயம் என்னாச்சு?”
“அதை பத்தியும் சொல்ல தான் வந்தேன் பாஸ்.. வொர்கர்ஸ் ஸ்ட்ரைக் ஆரம்பிச்சுட்டாங்க.. அண்ட் லோட் ஏத்திட்டு போன கன்டெய்னர் ரெண்டும் அக்சிடென்ட் ஆகி மெட்டிரியல்ஸ் டேமேஜ்.. இதில் குறைந்தது பல லட்சம் லாஸ் ஆகும்”
“குட்.. அப்பறம் அந்த கவர்மென்ட் ஸ்கூல் யுனிபார்ம்……………..”
“நாளைக்கு தான் பாஸ் டெண்டர் ரிசல்ட் அனௌன்ஸ் பண்றாங்க.. கண்டிப்பா நமக்குத் தான் கிடைக்கும்”
“நாம அதில் இருந்து விலகுறதா லெட்டர் ரெடி பண்ணி கொண்டு வா..”
“பாஸ்!!”
“நாம விலகினா டெண்டர் யாருக்கு கிடைக்கும்?”
“செகண்ட் பிளேசில் இருக்கும் கிருபா………..” என்று ஆரம்பித்தவன் மென்னகையுடன், “ஓ! அது மேடம் கார்மென்ட் தானே! ஓகே பாஸ்” என்றான்.
“தென் நம்ம கிட்ட வந்த கிருபாகரன் கிளைன்ட்ஸ் கூட நாளைக்கு ஈவ்னிங் மீட்டிங் ஏற்பாடு பண்ணு.. மிஸ்டர் பால்ராஜுக்கு தனி அப்பாயின்மென்ட் பிக்ஸ் பண்ணு.. மத்த எல்லோரையும் ஒரே நேரத்தில் வர சொல்லு.. அதுக்கு தேவையான டாகுமென்ட்ஸ் எல்லாத்தையும் வக்கீலை ரெடி பண்ணச் சொல்லு”
“ஓகே பாஸ்” என்று கூறி வெளியே சென்றவனை அவனது மனைவி கைபேசியில் அழைத்தாள்.
சதீஷ் மனதினுள், ‘கோபத்துல நேத்துல இருந்து பேசாம இருந்தவ இப்போ எதுக்கு போன் பண்றா?’ என்று நினைத்தபடி அழைப்பை எடுத்தான்.
இவன் அழைப்பை எடுத்ததும் நிவேதா, “இன்னைக்கு வீட்டுக்கு ஏழு மணிக்கு வந்திருவியா?” என்று கறார் குரலில் வினவினாள்.
“வேதி செல்லம்…………..”
“கேட்ட கேள்விக்கு பதில்”
“இன்னைக்கு ரொம்ப முக்கியமான நிறைய வேலைகள் இருக்குது டா.. அதனா…………………………………….”
“அண்ணா போன் பண்ணான்.. இன்னைக்கு ஏழு மணிக்கு வீட்டுக்கு வரேன் னு சொன்னான்”
“என்ன விஷயம் னு கேட்டியா?”
“ஏன்! என்ன விஷயம் னு தெரிந்தால் தான் துரை என் அண்ணாவை பார்க்க வருவீங்களோ?”
“நான் எங்க அப்படி சொன்னேன்?” என்று இவன் சிறிது அலற,
அவள், “அப்போ ஒழுங்கு மரியாதையா ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்து சேரு” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
சதீஷ், “இன்னைக்கு சீக்கிரம் கிளம்பினா பாஸ் வேலையில் இருந்து டைவர்ஸ் பண்ணிடுவார்.. சொன்ன நேரத்துக்கு போகலைனா வேதி டைவர்ஸ் பண்ணிடுவா.. இப்படியா டா உனக்கு சத்யா சோதனை வரணும்?” என்று புலம்பினான்.
இதயம் இணைய காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥