பிடித்தம் 32(அ)
புகழ்வேந்தன் கையை பண்ட்(Pant) பாக்கெட்டில் விட்டபடி நின்றுக் கொண்டிருக்க, மாரீஷ்வரன் கோபத்துடன் முறைத்தபடி, “இதுக்கு ஒரு நாள் நிச்சயம் அனுபவிப்ப” என்றான்.
புகழ்வேந்தானோ, ‘நான் பதில் சொல்ற அளவிற்கு நீயெல்லாம் வொர்த்தே இல்லை’ என்பது போல் பார்த்துவிட்டு நகர்ந்தான். மாரீஷ்வரன் இன்னும் அதிகரித்த கோபத்துடன் செல்லும் புகழ்வேந்தனின் முதுகை முறைத்துக் கொண்டிருந்தான்.
சற்று முன்பு கமிஷ்னர் ஏற்பாடு செய்திருந்த ஊடகங்களுடான சந்திப்பில் மாரீஷ்வரன் புகழ்வேந்தனிடம் மன்னிப்பு கேட்க, நிருபர்கள் கேள்விகளால் அவனை திணறடித்தனர். இவற்றின் தாக்கமே இந்த கொந்தளிப்பு.
தனது வண்டியை நோக்கி சென்று கொண்டிருந்த புகழ்வேந்தன் முன் வந்த வெற்றிவேல் கையை நீட்டியபடி, “ஹெலோ மிஸ்டர் புகழ்வேந்தன்.. அம் ACP வெற்றிவேல்” என்றான்.
வெற்றிவேல் பேச ஆரம்பித்ததும் மனதினுள் யோசனையாக வெளியே உணர்ச்சிகளை துடைத்த பார்வையுடன் பார்த்த புகழ்வேந்தன் அவன் பெயரைச் சொன்னதும் சிறு மென்னகையுடன் கையை குலுக்கியபடி, “ஹாய் சார்.. நைஸ் மீட்டிங் யூ.. உங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்.. இப்போ தான் நேரில் பார்க்கிறேன்” என்றான்.
இப்பொழுது மனதினுள் யோசித்து வெளியே உணர்ச்சியற்ற பார்வை பார்ப்பது வெற்றிவேலின் முறையாயிற்று.
வெற்றிவேலின் யோசனையை புரிந்துக் கொண்டது போல் புகழ்வேந்தன், “சதீஷ் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறான்”
“ஓ”
“ஓகே” என்றபடி புகழ்வேந்தன் கிளம்பப் பார்க்க,
வெற்றிவேல், “ஓகே.. பார்க்கலாம்” என்றான் கூர்விழிகளுடன்.
புகழ்வேந்தன் அதே சின்ன மென்னகையுடன், “சுயர்” என்று கூறி கிளம்பினான்.
புகழ்வேந்தனின் பதற்றமில்லா இயல்பான பேச்சை உன்னிப்பாக கவனித்துக் கொண்ட வெற்றிவேல் கமிஷ்னர் அறை நோக்கிச் சென்றான். அனுமதி பெற்றுக் கொண்டு அறையினுள் சென்றவன் விறைப்பாக வணக்கம் தெரிவித்தான்.
அவனது வணக்கத்தை தலையசைப்புடன் பெற்றுக் கொண்ட கமிஷ்னர், “உட்காருங்க வெற்றி” என்றார்.
வெற்றிவேல் கமிஷ்னர் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்ததும் அவனிடம் ஒரு கோப்பியத்தை கொடுத்தபடி, “ஹோப் யூ னோ தி சிட்டுவேஷன்?”
“எஸ் சார்.. SK இண்டஸ்ட்ரீஸ் ஓனர் மிஸ்டர் கிருபாகரனோட மூத்த மகன் மனோஜை காணும்.. மிஸ்டர் கிருபாகரன் வேந்தன் குரூப் ஆப் கம்பனீஸ் மிஸ்டர் புகழ்வேந்தன் மேல் சந்தேகப்பட்டு கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கார்..”
“குட்.. மாரீஷ்வரன் மீடியாவை இழுத்துவிட்டதால் நீங்க கேர்புல்லா டீல் பண்ணனும்”
“சுயர் சார்”
“தேவை இல்லாத கேள்விகள் பிரஷர் வேணாம் னு தான் மீடியா கிளம்பியதும் உங்களை வரச் சொன்னேன்.. ஆனா உங்க பெயரை அனௌன்ஸ் பண்ணிட்டதால் மீடியா உங்களை வாட்ச் பண்ணிட்டு தான் இருப்பாங்க..”
“புதுசா நியூஸ் கிடைக்கிற வரை அவுட் ஆப் கியுரியாசிட்டி என்னை கவனிப்பாங்க.. நாம பார்க்காததா சார்?” என்றான் மென்னகையுடன்.
கமிஷ்னரும் புன்னகைத்தார்.
வெற்றிவேல், “எப்போதும் போல் என்னோட டீம் வச்சு டீல் பண்ணிக்கிறேன் சார்”
“ஓகே கேரி ஆன்” என்ற கமிஷ்னர், “எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கண்டு பிடிங்க.. அதுக்கு தான் உங்களிடம் இந்த கேசை கொடுக்கிறேன்.. ஏன்னா மிஸ்டர் கிருபாகரன் பிரச்சனை பண்ணக் கூடியவர்.. மாரீஷ்வரனை வச்சு மீடியாவை இழுத்துவிட்டது அவர் தான்”
“ஓகே சார்” என்றவன் மீண்டும் வணக்கம் வைத்து விடைபெற்றான்.
———————————————————————————————————————————————
மித்ராணி கலைவாணியை சமாதானம் செய்துக் கொண்டிருந்த போது அவளது கைபேசி அலறியது. அழைத்தது அவளது அன்னை கமலா.
மித்ராணி அழைப்பை எடுத்ததும், கமலா படபடப்புடன், “டிவி பார்த்தியா மித்து? என்னென்னவோ சொல்றாங்க! மனோவை காணுமா? புகழ் தம்பி எங்க? அவருக்கு தான் போன் பண்ணேன் அவர் எடுக்கலை னு தான் உனக்கு போட்டேன்.. நீ எடுப்பியோ மாட்டியோ னு தான் நினைச்சிட்டே போட்டேன்”
“அம்மா பதட்டப்படாத.. நானே உனக்கு போன் பண்ணனும் னு நினைத்தேன்.. வீட்டுக்கு போலீஸ் வந்து விசாரிச்சது அப்பறம் டிவி நியூஸ் னு அத்தை கொஞ்சம் பயந்துட்டாங்க.. அவங்களை சமாதானம் செஞ்சுட்டு உன் கிட்ட பேசணும் னு இருந்தேன்”
“மித்து என்ன சொன்ன? நீயே பேசணும் னு நினைச்சியா? அப்போ.. அப்போ…” என்றவர் கண்ணில் கண்ணீர் வடிய வார்த்தை வராமல் சற்று திணறினார்.
“சாரி மா.. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. முதல்ல கோபத்தில் உன் கிட்ட பேசலை.. அப்பறம் எல்லாம் சரியானதுக்கு அப்பறம் தான் பேசணும் னு எனக்கு நானே முடிவு பண்ணேன்.. இன்னைக்கு காலையில் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி அவருடன் வீட்டுக்கு வரணும் நினைச்சேன்.. அதுக்குள்ளே என்னென்னமோ ஆகிடுச்சு”
“…”
“அம்மா.. அம் வெரி சாரி மா.. என்னை மன்னிச்சிரு”
“…”
“அம்மா.. அம்மா.. லைனில் தானே இருக்கிற?”
“ஹ்ம்..ம்.. என..க்கு சந்தோஷ..த்தில் பேச்சே வரலை.. மன்னிப்பெல்லாம் எதுக்கு டா? நீ சந்தோஷமா இருந்தா அது தான் அம்மாவுக்கு வேணும்.. அண்ணியை நீ அத்தை னு கூப்பிட ஆரம்பிச்சதுமே தம்பி நீ சீக்கிரம் மனசு மாறிடுவ னு சொன்னார்”
“உன் கிட்ட பேசிட்டு தான் இருந்தானா? என் கிட்ட சொல்லவே இல்லை” என்று சிறு கோபத்துடன் கூற,
கமலாவும் கோபத்துடன், “முதல்ல பேசும் போது அவர் னு மரியாதையா ஒழுங்கா தானே பேசின! இப்போ என்ன மரியாதை இல்லாம பேசுற? ஒழுங்கா மரியாதை கொடுத்துப் பேசு”
“உன் தம்பி தங்க கம்பியை மத்தவங்க முன்னாடி மரியாதையுடன் பேச தான் ட்ரை பண்ணிட்டு இருக்கிறேன்.. அவனே.. ப்ச்.. அவரே என்னை ஒன்னும் சொல்ல மாட்டார்.. அதனால் நீ பொங்காத”
“உன்னை பத்தி தெரியாம அதிக இடம் கொடுத்து………….”
“அதை விடு மா.. டெய்லி உன் கிட்ட பேசுவா..ரா?” என்று வேண்டுமென்றே இழுத்து பேசினாள்.
“டெய்லி சாயுங்காலம் வீட்டுக்கு வந்து என்னை பார்த்து பேசிட்டு தான் உங்க வீட்டுக்கே வருவார்”
“பார் டா!” என்றவள், “ஆமா என்ன சொல்லி உன்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சா..ர்?”
“இந்த கதையை அப்பறம் சொல்றேன்.. முதல்ல என்ன பிரச்சனை நடக்குது னு சொல்லு”
“ஏன் உன் நொண்ணன் சொல்லலையா?”
கமலா எரிச்சலுடன், “நான் அவருடன் பேசுவதில்லை”
“எப்பவோ செய்திருக்க வேண்டியது.. சரி அதை விடு.. காலையில் போலீஸ் வந்து சொன்ன பிறகு தான் எங்களுக்கும் தெரியும் மனோஜை காணும் னு.. அது உண்மையா இல்லை நாடகமாடி வேந்தனை மாட்டி விட பார்க்கிறாங்களா னு தெரியலை.. அவர் கமிஷ்னர் ஆபீஸ் போய் இருக்கார்.. அதான் உன் போனை எடுத்து இருக்க மாட்டார்.. பேசாம நீ கிளம்பி இங்கே வரியா மா? அத்தைக்கும் சப்போர்ட்டா இருக்கும்”
“சரி டா.. நான் கிளம்பி வரேன்.. வந்து பேசிக்கலாம்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.
———————————————————————————————————————————————
காவல்துறை அசிஸ்டென்ட் கமிஷ்னர் வெற்றிவேல் அறை:
மூடிய அறையினுள் வெற்றிவேலும் அவனது குழுவை சேர்ந்த இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் அமர்ந்து மனோஜ் காணமல் போன வழக்கைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
வெற்றிவேல், “அர்ஜுன்.. முதல்ல மனோஜோட போன் காள் ஹிஸ்ட்ரி கலெக்ட் பண்ணு.. லாஸ்ட்டா எந்த டவரில் மனோஜ் நம்பர் அக்டிவ்வா இருந்திருக்குது னு செக் பண்ணு.. தென் மனோஜ் கார் எங்க நிக்குது னு கண்டுபிடி..”
அர்ஜுன், “சார்.. மாரீஷ்வரன் சார் இதுல எதையுமே செக் பண்ணலையா?”
வெற்றிவேல், “அவர் எடுத்த ஒரே ஸ்டேப் புகழ்வேந்தனை விசாரிக்க போய் மீடியா பீப்பிளை இழுத்து விட்டது தான்” என்றவன், “சந்தோஷ் நீ SK இண்டஸ்ட்ரீஸ் மெயின் ஆபீஸ் போய் விசாரி.. மிஸ்டர் கிருபாகரன், மனோஜ் அண்ட் அவனோட தம்பி எப்படி? அவங்களுக்கு எதிரிங்க யாராவது இருக்காங்களா? னு விசாரி.. மனோஜ் அதிகமா போற ஆபீஸ் எது னு கேட்டு அங்கேயும் போய் விசாரி.. நான் மிஸ்டர் கிருபாகரன் வீட்டிற்கு போய் விசாரிச்சிட்டு மிஸ்டர் புகழ்வேந்தனை விசாரிக்கிறேன்..”
சந்தோஷ், “மிஸ்டர் கிருபாகரன் அண்ட் அவரோட செகண்ட் சன்னையும் விசாரிக்கனுமா சார்?”
“அவங்களையும் விசாரிக்கணும் ஆனா நீ போகும் போது அங்கே இருந்தால் ஜஸ்ட் லைக் தட் விசாரி.. அவங்களை விசாரிக்க னு அவங்க இருக்கும் இடத்துக்கு தேடி இப்பவே போக வேண்டாம்.. நம்மளோட நெக்ஸ்ட் டிஸ்கஷன் முடிச்சிட்டு டீப்பா விசாரிக்கலாம்”
அர்ஜுன், “ஓகே சார்.. நான் வேலை முடிந்ததும் அப்டேட் பண்றேன்” என்றபடி எழ,
வெற்றிவேல், “நம்ம ப்ரைவேட் நம்பரிலேயே காண்டக்ட் பண்ணு”
“ஓகே சார்”
[முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் போது மூவரும் தனி எண்னையும் தனி கைபேசியையும் உபயோகப் படுத்துவர். இந்த மூன்று எண்னும் இவர்களுக்கு மட்டுமே தெரியும். இந்த எண் மற்றும் கைபேசி இவர்கள் பெயரில் கிடையாது. அதனால் இவர்கள் பெயரை வைத்து கூட அந்த எண்னை கண்டு பிடிக்க முடியாது. எப்பொழுதும் இந்த கைபேசி ‘சைலென்ட்’ மோட்(mode) மற்றும் அதிர்வில்(vibration) தான் இருக்கும். இது வெற்றிவேலின் ஏற்பாடு.]
சந்தோஷ், “மிஸ்ஸிங் கேஸ்க்கு இது தேவையா சார்?”
“குற்றவாளி அலர்ட் ஆகிட கூடாதுனா நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும்.. பெரிய இடம் சம்பந்தப்பட்டிருக்கிறது.. அதுவும் நம்ம டிப்பார்ட்மென்ட் ஆளே தப்பான வழிக்கு துணை போகும் போது நாம ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணும்..”
“உண்மையிலேயே வேந்தன் குரூப் எம்.டி கடத்தி இருந்தா மாரீஷ்வரன் சார் தப்புக்கு துணை போனதா இருக்காதே!”
“அப்படியும் இருக்கலாம் தான்.. ஆனா நாம எல்லா அங்கிளிலும்(angle) யோசிக்கணும்.. ஒரு வேளை மிஸ்டர் கிருபாகரனே மகனை கடத்தியோ இல்லை மனோஜும் சேர்ந்து தலைமறைவா இருந்து மிஸ்டர் புகழ்வேந்தன் மேல் பழி போடவும் சான்ஸ் இருக்குதே! ரெண்டு பேருக்கும் நடுவில் விரோதம் இருக்கிறது.. பிஸ்னெஸ் போட்டிக்கும் மேல் பெர்சனல்லாவும் பிரச்சனை இருக்குது.. மனோஜ் கல்யாணம் செய்துக்க இருந்த அவரோட அத்தை பொண்ணு மித்ராணியை கல்யாணத்தன்னைக்கு கடைசி நேரத்தில் புகழ்வேந்தன் கல்யாணம் செய்து இருக்கார்.. அதை பற்றிய இன்பார்மேஷன் கிடைக்கிதானும் பாரு..
அண்ட்.. மிஸ்டர் கிருபாகரன் நேரிடையாவோ மறைமுகமாவோ சம்பந்தப்பட்ட கேசஸ் மாரீஷ்வரன் டீல் பண்ணி இருக்கார்.. எல்லாமே மிஸ்டர் கிருபாகரனுக்கு சாதகமா தான் முடிந்திருக்குது..
இவங்க ரெண்டு பேருமே இல்லாம மூனாவதா வேற யாரவது கூட இதை செய்து இருக்கலாம்.. லெட்ஸ் பைண்ட் அவுட் தி ட்ரூத்”
“ஓகே சார்” என்று கூறி சந்தோஷும் எழுந்துக்கொள்ள மூவரும் கிளம்பினர்.
வெற்றிவேல் கிருபாகரன் வீட்டிற்கு சென்றபோது 65 வயதில் இருக்கும் வீட்டு நிர்வாகி அவனை வரவேற்று, “என்ன விஷயமா வந்திருக்கீங்க சார்? சார் வீட்டில் இல்லை”
“செக்குரிட்டி சொல்லலையா?”
“மனோஜ் சார் கேஸ் விஷயமா விசாரிக்க வந்திருக்கிறதா சொன்னான்”
“உங்க பெயர் என்ன? என்ன வேலை பார்க்கிறீங்க? எத்தனை வருஷமா வேலை பார்கிறீங்க?”
“என்னோட பெயர் கதிரேசன்.. மேற்பார்வை பார்க்கிறது தான் என் வேலை.. கிட்டதிட்ட பத்து வருஷமா இங்கே தான் வேலை பார்க்கிறேன்”
“உங்க வேலை நேரம்?”
“காலை 7 மணியில் இருந்து நைட் 9, 10 வரை ஆகும்.. இங்கே இருக்கிற அவுட் ஹௌஸ்ஸில் தான் என் குடும்பத்துடன் இருக்கிறேன் சார்”
“மத்த வேலை செய்றவங்க?”
“என் வீட்டம்மா சின்ன சின்ன வேலையெல்லாம் செய்வா.. அவ மட்டும் காலையில் 10 மணிக்கு வந்துட்டு நைட் வீட்டுல இருக்கிறவங்க சாப்பிட்டதும் கிளம்புவா.. நடுவில் சில நேரம் தேவைனா வீட்டுக்கு போயிட்டு வருவா.. மத்தவங்கலாம் காலையில் வந்தா வேலை முடிஞ்சு போற வரை இங்கே தான்.. சமையல் செய்றவங்க எல்லோரும் காலை 6 மணிக்கு வந்துட்டு நைட் 8 மணிக்கு கிளம்புவாங்க.. மத்தவங்க காலை 9 மணிக்கு வந்துட்டு 6 மணிக்கு கிளம்பிடுவாங்க”
“மனோஜ் குணம் எப்படி?”
“தங்கமானவர் சார்.. வீட்டுக்கு அடங்கிய பிள்ளை.. யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவர்.. வேலை செய்றவங்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவார்”
“மிஸ்டர் கிருபாகரன்?”
“அவரும் தங்கமானவர் தான் சார்.. கொஞ்சம் கோபம் வரும்”
“அவரும் யாருக்கும் எந்த தீங்கும் செய்தது இல்லையா?”
வெற்றிவேலின் லேசர் பார்வையில் ஒரு நொடி தடுமாறியவர், “ஆ..மா சார்” என்றார்.
“மிஸ்டர் கிருபாகரன் வேலை செய்றவங்க கிட்ட எப்படி பழகுவார்?”
“லிமிட்டோட தான் சார் பழகுவார்”
“பிரசாத் எப்படி?”
“அவரும் தங்கமானவர் சார்.. தைரியமானவர்.. தனக்கு நியாயம் னு படுறதை செய்வார்.. வீட்டில் சாரை எதிர்த்து பேசும் ஒரே ஆள்”
“சாரை எதிர்த்து னா யாரை சொல்றீங்க?”
“கிருபாகரன் சாரை”
“ஸோ கிருபாகரன் சார் அநியாயமான விஷயமும் செய்வார்”
“நான் அப்படி சொல்லலை சார்”
“அப்போ அநியாயமான விஷயம் பிரசாத் பொறுத்தவரை நியாயமான விஷயமா இருந்திருக்குது?”
“சார்!!” என்று அதிர்ச்சியுடன் அழைத்தவர், “இல்லை.. நான் அப்படி சொல்லலை”
“அப்போ நீங்க சொன்னதுக்கு அர்த்தம் என்ன?” என்று கூர்மையுடன் அவனது கேள்வி வர,
அவர் சிறு பதற்றத்துடன், “பிரசாத் சார் நல்லவர்……..”
“அப்போ கிருபாகரன் சார்?”
“அது.. அவர் கொஞ்சம் அப்படி இப்படி தான் சார்”
“அப்படி இப்படி னா?”
“எல்லா பணக்காரங்களை போல தான் சார்.. பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்”
“வேற?”
“வேற ஒண்ணுமில்லை சார்” என்றவர் நடுங்கியபடி, “சார்.. இதை நான் சொன்னேன் னு சார் கிட்ட சொல்லிடாதீங்க” என்றார்.
“பயப்படாதீங்க.. சொல்ல மாட்டேன்..” என்றவன், “சரி மனோஜை கடைசியா நீங்க எப்போ பார்த்தீங்க?”
“அவர் காணாம போன அன்னைக்கு காலையில் ஆபீஸ் கிளம்பினப்ப பார்த்தது தான் சார்”
“அப்பறம் வீட்டுக்கு வரவே இல்லையா?”
“இல்லை சார்”
“காலையில் கிளம்பும் போது டென்ஷனா இருந்தாரா?”
“எப்பொழுதும் போல தான் சார் இருந்தார்”
“கடந்த ஒரு வாரத்தில் புதுசா வீட்டுக்கு யாரும் வந்தாங்களா?”
“இல்லை சார்”
“கொஞ்ச நாளா மனோஜ் எப்படி இருந்தார்? எப்பயாவது வேற மாதிரி நடந்துகிட்டாரா?”
“மனோஜ் சார் எப்போதுமே அமைதி தான் அதுவும் கல்யாணம் நின்னு போனதில் இருந்தே ரொம்ப அமைதியாகிட்டார்.. கொஞ்சம் சோகமா தான் ரூமில்லேயே இருந்தார்.. அப்பறம் பெரிய சார் தான் கட்டாயப்படுத்தி ஆபீஸ் கூட்டிட்டு போனார்.. அதுக்கு அப்பறம் சோகமா இல்லனாலும் ரொம்ப அமைதியா மாறிட்டார்”
“கல்யாணம் ஏன் நின்னுது?”
“எனக்கு சரியா தெரியாது சார்”
“உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க”
“முக்கியமான விஷயம் எதுனாலும் சார் அவரோட ஆபீஸ் ரூமில் தான் பேசுவார்.. ஆனா இந்த கல்யாண பேச்சு எடுத்ததில் இருந்து கொஞ்சம் பிரச்சனை தான் சார்.. மித்ரா மா சார் கூட சண்டை போட்டாங்க………..”
“மித்ரா னா மனோஜோட அத்தை பொண்ணு மித்ராணி தானே?”
“ஆமா சார்”
“பிரசாத் தவிர வேற யாரும் மிஸ்டர் கிருபாகரனை எதிர்த்து பேசியது கிடையாது னு சொன்னீங்க?”
“அது.. மறந்துட்டேன் சார்.. மித்ராமாவும் பேசுவாங்க..”
“சரி கல்யாண விஷயத்தை சொல்லி முடிங்க”
“மித்ராமா மட்டுமில்லை பிரசாத் சாரும் சண்டை போட்டாங்க.. என்ன பேசிகிட்டாங்க னு தெரியாது ஆனா சத்தமா இருந்துது.. மனோஜ் சாருக்கும் மித்ராமாக்கும் ஒரே வாரத்தில் கல்யாணம் னு முடிவு பண்ணாங்க.. ஆனா கல்யாணத்தன்னைக்கு மித்ராமா வேற ஒருத்தரை கல்யாணம் செஞ்சுகிட்டாங்க.. அவ்ளோ தான் சார் எனக்கு தெரியும்”
“மித்ராணி யாரை கல்யாணம் செஞ்சாங்க?”
“அவரும் பெரிய ஆள் தான் போல.. சாருக்கும் அவருக்கும் ஆகாது போல”
“போல னா? எப்படி சொல்றீங்க?”
“பேசிக்கிட்டதை வச்சு சொல்றேன்”
“மிஸ்டர் கிருபாகரன் தான் ஆபீஸ் ரூமில் வச்சு தான் பேசுவார் னு சொன்னீங்க?”
“கல்யாணத்தன்னைக்கு பிரசாத் சார் வீட்டில் வைச்சு ரொம்ப சண்டை போட்டார்………….” என்று சொல்லிக் கொண்டிருந்த போது,
“என்ன ACP சார்! அந்த புகழ்வேந்தனை அரெஸ்ட் பண்ணாம இங்கே வந்து விசாரிச்சிட்டு இருக்கிறீங்க?” என்று சற்று உரத்த குரலில் கூறியபடி கிருபாகரன் உள்ளே வந்தார்.