அஞ்சலி வீட்டுக்கு வந்ததும் “இப்ப மணி என்ன டி?”, என்று கேட்டான் கிரி. அவனுடைய குரலின் மாறுபாட்டை உணர்ந்தவள் “மணி ஒண்ணறை ஏன் கேக்குற? ஆமா நீ என்ன சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்ட? உனக்கு உடம்பு சரி இல்லையா?”, என்று கேட்டாள் அஞ்சலி.
“எனக்கு உடம்புக்கு என்னவாவும் இருக்கட்டும். நீ எங்க சுத்திட்டு வர?”
“ஏண்டா இப்படி கேக்குற?”
“ஓ நான் கேக்க கூடாதா?”
“நான் அப்படிச் சொல்லலை”
“சரி அதை விடு. இன்னைக்கு எதுக்கு நீ ஆபீஸ் வரலை?”
“தலை வலியா இருந்துச்சு அதான்
“ஓஹோ, ஆனா தலைவலியோட ஊர் சுத்த மட்டும் போகலாமோ?”
“இப்ப எதுக்கு சண்டை போடுற மாதிரி பேசுற கிரி? தாத்தா பசியோட இருப்பாங்க. சாப்பிட வா”
“இப்ப சோறு ரொம்ப முக்கியம்”
“என்ன டா உன் பிரச்சனை?”
“நீ எதுக்கு இப்ப அவனைப் பாக்க போன? அதுக்கு தான் இன்னைக்கு லீவ் போட்டியா?”, என்று கோபமாக கேட்டான்.
அவன் கோபத்தில் அதிசயமாக அவனைப் பார்த்தாள் அஞ்சலி. “என்ன டி முழிக்கிற? அந்த அருணை பாத்துட்டு தானே வர? அவன் கூட உனக்கு என்ன பேச்சு? ஓ பழைய காதல் மொட்டு விடுதா?”
“கிரி”, என்று அதிர்ச்சியாக கத்தினாள் அஞ்சலி.
“என்ன கத்துற?”
“தப்பா பேசாத. அவன் நம்ம ஃபிரண்ட்”
“ஆனா அவன் உனக்காக தான் டி என் கிட்ட பேசுறதை விட்டான். ஏன்னா அவனுக்கு உன் மேல அவ்வளவு காதல். அவன் லவ் பண்ணுறது உனக்கு தெரியும்ல டி? அப்புறம் நீ ஏன் அவன் கிட்ட பேசின? அவனை ஏன் பாக்க போன?”, என்று அவன் கோபத்தில் பொங்க அப்போது தான் அவனது பேச்சின் சாராம்சம் பொறாமை என்று அவளுக்கு புரிந்தது.
அவள் மனது மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்டது. பொறாமை என்பது காதலின் வெளிப்பாடு அல்லவா?
“எதுக்கு நீ அவன் கிட்ட பேசணும்? உன்னை வெட்டி போடணும்னு எனக்கு ஆத்திரம் வருது. நீ என்னோட பொண்டாட்டி. நீ எனக்கு மட்டும் தான் சொந்தம். காலேஜ் படிக்கும் போதே அவன் உன்னை லவ் பண்ணுறதை நினைச்சு எனக்கு அவ்வளவு எரிச்சல் வரும்”, என்று அவன் சொல்ல அடுத்த நொடி அவனை பாய்ந்து கட்டிக் கொண்டாள் அஞ்சலி .
அவன் தான் திகைத்துப் போனான். அவன் அவளைத் திட்டிக் கொண்டிருக்க அவள் அப்படி செய்ததும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கூடவே இத்தனை நாள் அவன் நெருங்கினாலும் விலகி இருப்பவள் இன்று அவளாக அவனை நெருங்கி அணைக்கவும் திகைத்து தான் போனான்.
“இது போதும் கிரி. உன் பொறாமை மூலமா உன் காதலை எனக்கு புரிய வச்சிட்ட. இதுக்காக தான் இத்தனை நாளா காத்துட்டு இருந்தேன்”, என்று அவன் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டு பேசினாள் அஞ்சலி. அவள் பேசியதைக் கேட்டதும் அனைத்தையும் உணர்ந்தவன் அவளை விலக்கி அவள் முகம் பார்த்தான்.
“அஞ்சலி”, என்று சந்தோஷமாக அழைத்தான் கிரி.
“உன் பேர்த்டேக்கு கிஃப்ட் வாங்க போனேன் டா. அப்ப தான் அருண் அவனோட பேமிலியோட வந்திருந்தான். அவனுக்கு கல்யாணம் ஆகி ஒரு பேபி இருக்காம். அதை தான் சொல்லிட்டு இருந்தான். ஆனா அவனைப் பாத்ததும் தான் உன் காதல் வெளிய வந்துருக்கு அபப்டித் தானே?”, என்று அவள் கேட்க அடுத்த நொடி புன்னகையுடன் அவளை இழுத்து அனைத்து தன்னுடைய மார்போடு பிணைத்துக் கொண்டான். அஞ்சலியும் சந்தோஷமாக அவன் மார்பில் புதைந்து கொண்டாள்.
உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே
உனதுயிராய் எனதுயிரும்
உலவிடத் துடிக்குதே
தனியொரு நான் தனியொரு நீ
நினைக்கவும் வலிக்குதே
இதயத்தை எதற்காக எதற்காக
இடம் மாற்றினாய்
இருக்கும் ஒரு துன்பத்தைக்
ஏன் குடியேற்றினாய்
புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த
பரிசுகள் தேடிப் பிடிப்பாய்
கசந்திடும் செய்தி வந்தால்
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்
நோய் எனக் கொஞ்சம் படுத்தால்
தாயென மாறி அணைப்பாய்
உனது காதலில் விழுந்தேனே”, என்ற பாடல் அங்கே ஓடியது.
இருவரும் உலகத்தை மறந்து ஏகாந்த நிலையில்ஒருவர் அணைப்பில் மற்றவர் மெய் மறந்து இருந்தனர்.
“நேரம் ஆச்சு அஞ்சலி சாப்பிட வா மா. கிரி நீயும் வா டா”, என்று குணசேகரன் அழைத்ததும் தான் இருவரும் நடப்புக்கு திரும்பினார்கள்.
பின் சாப்பிடும் போது இருவர் பார்வையும் மற்றவரை வட்டம் இட்டது. சந்தோசத்தில் இருவருக்குமே உணவு இறங்க வில்லை. குணசேகரன் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு உள்ளே சென்றதும் சாப்பிட்டுக் கொண்டிருந்த அஞ்சலியின் கையைப் பற்றினான் கிரி. அவள் என்னவென்று அவனைப் பார்க்க “ஊட்டி விடு டி”, என்று கிறக்கமாக சொன்னான்.
“ஐயோ தாத்தா”, என்று சொல்லி அவள் வெட்கப் பட “அவர் உள்ள போய்ட்டார், பிளீஸ்”, என்று கெஞ்சினான். பின் ஒரு பிடி உணவை எடுத்து அவன் வாயருகே கொண்டு சென்றாள்.
அவன் வாய் திறந்து அவள் கொடுத்த உணவை ஏற்றுக் கொண்டான்.. கூடவே அவள் கையைப் பற்றியவன் அவள் விரலில் இருந்த எச்ச சாதங்களையும் தன்னுடைய நாக்கால் எடுத்தான்,
அவன் செய்கையில் அடி வயிற்றில் ஒரு பிரளையம் எழ கண்களை இறுக மூடிக் கொண்டாள் அஞ்சலி. அவன் செய்கைகளும் பார்வைக்கும் அவளுக்கும் இம்சையை கிளப்பியது.
“அஞ்சலி”, என்று அவன் கிசுகிசுப்பாக அழைக்க “ம்ம்ம”, என்று கண்களை மூடிய படியே அவள் முணுமுணுத்தாள்.
“ஒரு உம்மா கொடு டி”, என்று அவன் சொல்ல அவள் மாட்டேன் என்னும் விதமாய் தலையசைத்தாள்.
உடனே அவள் கையை விட்டு விட்டான். கோப பட்டுட்டானோ என்று எண்ணி அவள் கண் விழித்து அவனைப் பார்க்க “பிளீஸ் சீக்கிரம் சாப்பிடேன்,. என்னால ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க முடியும்னு தோணலை. எனக்கு நீ இப்பவே வேணும்“, என்றான்.
அதற்கு மேல் அவள் அங்கே இருப்பாளா என்ன? உடனே தட்டை எடுத்துக் கொண்டு கை கழுவ எழுந்து விட்டாள்.
“என்ன ஆச்சு டி? சாப்பிடலையா?”, என்று கேட்டான் கிரி.
“அப்புறமா சேத்து சாப்பிட்டுக்குறேன்”, என்று சொல்லி விட்டு அவள் அவர்களின் அறைக்குச் செல்ல அவசரமாக தன்னுடைய உணவை வாய்க்குள் அடைத்த கிரியும் கை கழுவி விட்டு அவர்களின் அறைக்குள் சென்றான்.
அறைக்குள் அவன் வந்ததும் அவள் வெட்கத்துடன் தலை குனிய அவளை நெருங்கினான் கிரி. அவள் முகம் எல்லாம் செம்மையுற அழகாக சிவந்திருந்தாள் அஞ்சலி.
அவள் அருகில் சென்று அந்த செம்மை படிந்த அவள் முகத்தை தன்னுடைய கையில் ஏந்தி ரசித்துப் பார்த்தான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். இருவர் கண்களும் காதல் கதை பேசியது. அவன் கண்களில் வழிந்த கரைக் காணாக் காதலில் அவள் முகத்தில் மேலும் செம்மை படர்ந்தது. உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும் புது ரத்தம் பாய்வது போல இருந்தக்து,.
“அஞ்சு’, என்று அவள் பெயருக்கு வலிக்குமோ என்பது போல மிக மென்மையாக அழைத்தான் கிரி
“ம்ம”, என்றாள் அவள்
“உன்னை எடுத்துக்கட்டா அதுவும் இப்பவே?”, என்று அவன் கேட்டதும் அவன் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை. வெட்கத்துடன் அவன் மார்பில் வந்து விழுந்தாள். அடுத்த நொடி அவன் கரங்களும் அவளை வளைத்துக் கொண்டது,
முதலில் அவள் முகத்தை நிமிர்த்தி அவளுடைய இதழ்களை வேகமாக சிறை செய்தான் கிரி. முதல் முத்தத்தில் அவள் கண்கள் சுகமாய் மூடிக் கொண்டது. அவன் முத்தத்தில் கரைந்து கொண்டிருந்தவளின் கரங்கள் அவன் கழுத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டது. அவன் இதழ்களுக்கு தன்னுடைய இதழ்களையும் காதலையும் காணிக்கையாக்கினாள் அஞ்சலி.
அவன் கைகள் மெதுவாக மிக மெதுவாக அவள் உடலில் பயணித்தது. அவளை அப்படியே கட்டிலில் சரித்து அவள் மேல் சரிந்தவனின் கைகள் செய்த வேலையை உதடுகள் செய்ய அவன் கைக்குள் சரணடைந்தாள். அங்கே இனிய இல்லறம் ஆரம்பமானது.