அஞ்சலியும் கிரியும் ஒட்டிக் கொண்டிருக்கும் போது இன்பன் இவளை ஏக்கமாக பார்ப்பதை அவள் அறிந்தே இருந்தாள். அதனால் அவனை எண்ணி அவளுக்கு பாவமாக இருந்தது. கூடவே அவளுக்கும் அவனுடைய கைக்குள் அடங்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவன் கைக்குள் இருந்தால் அவன் தன்னை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று அவள் மனம் நம்பியது.
அவன் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று சொன்ன இந்துவுக்கே அவள் மேல் இருக்கும் நம்பிக்கை ஆட்டம் காணும் போல் இருந்தது. அவன் முடி படர்ந்த மார்புக்குள் அடங்க வேண்டும் போல எழுந்த உணர்வைத் தான் அவளால் தாங்க முடியவில்லை.
அவனது காதலுக்கு முன்பு தான் கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்தது. கூடவே அவள் மனதில் அவன் மட்டும் தான் இருக்கிறான் என்றும் அவளுக்கு புரிந்தது. ஆனால் அவளுக்கு அவன் மேல் உள்ள காதலை வெளிப்படுத்த தைரியம் இல்லை.
இருவரின் இதயமுமே எம்பி எம்பி குதித்துக் கொண்டிருந்தது. எதை எதையோ யோசித்த படி சிறிது நேரத்தில் இருவருமே உறங்கி விட்டனர். ஆனால் நடு இரவில் எப்போது யார் நேராக படுத்தார்கள் என்று தெரியாமலே இருவரும் நேராக ஒருவரை ஒருவர் இடித் படி படுத்திருந்தார்கள். ஆனால் அதை அவர்கள் உணரவே இல்லை. குளிர் அதிகமாக இருந்ததால் இருவரும் ஒரே போர்வையை கழுத்து வரை மூடியிருந்தனர்.
சிறிது நேரத்தில் அதிக குளிரில் அவனை ஒட்டிப் படுத்த இந்து அவன் இடையில் கையை போட்டுக் கொண்டாள். அவனும் தூக்கத்திலே அவள் புறம் திரும்பி படுக்க அவன் மார்பில் சுகமாக ஒட்டிக் கொண்டாள். அவன் கைகளும் அவளை தூக்கத்திலே அனைத்து பிடிக்க அவன் மார்பில் சுகமாக மஞ்சம் கொண்டாள் அவன் மனைவி.
நடு ராத்திரி போல் கண் விழித்த இன்பன் தன்னைக் கட்டிக் கொண்டு தூங்கும் மனைவியைக் கண்டு விழி விரித்தான்,. கூடவே அவனும் அவளைக் கட்டியிருப்பதைக் கண்டு அவனுக்கு சந்தோசமாக இருந்தது.
தன் நெஞ்சில் முகத்தை புதைத்திருக்கும் மனைவியை மேலும் இறுக்கி அனைத்துக் கொண்டான் அவள் தூக்கம் கலையாதவாறு. அவளது அருகாமை கொஞ்சம் கொஞ்சமாக அவனது காதல் உணர்வுகளை கிளப்ப ஆரம்பித்தது. முதல் முறை அவன் அனுபவித்த நெருக்கம் அவனுக்குள் பல விதமான உணர்வுகளை எழுப்பியது. அதனால் அவன் அவளை இறுக அணைத்தான்.
ஆனால் அவன் இறுக்கியதும் அவளுக்கு விழிப்பு வந்து விட்டது. அப்போது இருக்கும் நிலை உணர்ந்து திகைப்பு வந்தாலும் அவளுக்கு அது பிடித்திருந்தது. அவனை விட்டு அவள் விலக விரும்ப வில்லை. அவளுக்கு விழிப்பு வந்ததை உணர்ந்த இன்பன் இப்போது அவள் தன்னை விட்டு விலகி விடுவாள் என்று எண்ண அவளோ இன்னும் அவனுடன் ஒன்ற அவனுக்கு திகைப்பாக இருந்தது.
அவளிடம் எதிர்ப்பும் இல்லை. கூடுதல் போனசாக அவளுடைய தேடலும் இருக்கிறது என்று உணர்ந்த இன்பன் அவள் கழுத்து வளைவில் தன்னுடைய முகத்தைப் புதைத்தான். அதில் அவளுக்கு அடி வயிற்றில் இன்ப ஊற்றுக்கள் கிளம்ப ஆரம்பித்தது. எப்ப எண்ண சொல்வாளோ என்று பயந்தாலும் இன்பனால் அவளிடம் இருந்து விலக முடியவில்லை. இப்போது அவன் அவளை இன்னும் நெருங்கியதால் அவள் தன்னை விட்டு விலகுவாள் என்று நினைக்க அவளோ அவன் முதுகைச் சுற்றி கைகளை போட்டுக் கொண்டாள்.
அவள் செய்கையில் பித்தாகிப் போன இன்பன் முதல் முறையாக அவள் நெற்றியில் இதழ் பதித்தான். அதையும் அவள் கண்களை மூடி அனுபவிக்க அவனுக்கு தன்னைக் கட்டுப் படுத்துவதே கடினமாக இருந்தது. நெற்றியில் பதிந்த உதடுகள் கொஞ்சம் கொஞ்சமாக காது மடல், கன்னம் என்று நடமாட கடைசியில் சிறு தயாக்கத்துடன் அவள் உதடுகளை சிறை செய்தான்.
அப்போதும் அவளிடம் எதிர்ப்பு இருக்கும் என்று எதிர் பார்க்க அவளோ தன்னுடைய கையை எடுத்து அவனுடைய பின்னந்தலையை இறுக்கிப் பிடித்தாள். மனைவியின் செய்கையில் சொக்கிப் போன இன்பனுக்கு அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்ல ஆசை தான். ஆனால் அவனுக்கு தைரியம் இல்லை.
அவளது ஒன்றுதல் குளிர் காரணமாக கூட இருக்கலாம் என்று எண்ணியவனுக்கு கண்டிப்பாக தங்களின் சங்கமம் காதலோடு மட்டும் தான் அரங்கேற வேண்டும். சந்தர்ப்ப வசத்தால் நிகழக் கூடாது என்று முடிவு வந்தது.
அதன் பின் அவனது தேடல் குறைந்தாலும் அவளை அனைத்த படியே சும்மா படுத்துக் கிடந்தான். அவன் செய்கையில் அவன் மனதை உணர்ந்தவளுக்கு கட்டாயம் இன்பன் நல்லவன் தான் என்று அவன் மேல் நூறு சதவீதம் நம்பிக்கை வந்து விட்டது.
ஆனாலும் அதை வெளிக்காட்ட தைரியம் இல்லாமல் அவன் கைக்குள் சுகமாக படுத்துக் கிடந்தாள் அவனுடைய அருகாமை மட்டும் போதும் என்பது போல?
இருவருக்குமே இந்த மழை நேற்றே வந்திருக்க கூடாதா என்று தான் தோன்றியது. அதிகாலையில் இருவரும் அனைத்த படியே தூங்கி விட்டார்கள். காலையில் சீக்கிரம் எழுந்த இன்பன் அவளை தர்மசங்கடப் படுத்த கூடாது என்பதற்காக அவளை விலக்கி விட்டு குளிக்கச் சென்று விட்டான்.
அதன் பின் ஊருக்கு வந்து விட்டார்கள். அன்று இரவு அவர்களுடைய அறையில் அவள் எங்கே படுப்பாள் என்று ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தான் இன்பன். எப்போதும் போல் அவள் கீழே படுக்க போர்வையை விரிக்க அங்க வச்சு என் மேல இருந்த நம்பிக்கை இங்க வந்ததும் இல்லாம போச்சா இந்து என்று கண்களில் வலியுடன் கேட்டான் இன்பன்.
அந்த வலியைக் காண அவளுக்கு சகிக்க வில்லை. “உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்லை இன்பன். எனக்கு என் மேல தான் நம்பிக்கை இல்லை”, என்று மனதில் எண்ணிக் கொண்டு “இப்பவும் நான் உங்களை நம்புறேன்”, என்று மட்டும் சொன்னாள்.
அவள் சொன்னதைக் கேட்டு புன்னகைத்தவன் “அப்படின்னா இன்னைக்கும் மேல படுக்கலாமே? இந்த கட்டில் பெருசு தான்”, என்றான். சரி என்று மண்டையை ஆட்டி விட்டு கட்டிலில் அவன் அருகே படுத்தாள். அவனுக்கும் நிம்மதியாக இருந்தது.
சிறிது நேரத்தில் இருவருக்குமே இந்த கட்டில் ஏன் சின்னதா இல்லாம போச்சு என்று தான் தோன்றி வைத்தது. இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியை அவர்களே வெறுத்தார்கள். இருவருக்கும் ஆசை இருந்தது தான். ஆனால் அவளை நெருங்கினால் தன்னை தவறாக நினைப்பாள் என்று எண்ணி அவன் விலகி இருந்தான்.
தானாக தன் மனதை அவனிடம் சொல்ல தைரியம் இல்லாமல் அவள் அவனை விட்டு விலகி இருந்தாள்.
அதுவும் நேற்றைய இரவில் அவன் நடந்து கொண்ட விதம் ஒரு மனைவியாக அந்த அளவு அவன் மேல் காதல் கொண்டாள். நேற்று அவன் அதற்கு மேல் முன்னேறி இருந்தால் அவளிடம் ஒரு சதவீதம் கூட மறுப்பு இருந்திருக்காது. அப்படி இருக்க அவளது சம்மதம் வேண்டி அவன் விலகி இருந்த விதம் அவள் மனதில் காதலை ஆழமாக பாதித்தது.
ஆனால் அதை சொல்ல தயக்கமாக இருந்தது. ஆனால் இப்போது நீ வேண்டும் என்று அவன் கேட்டிருந்தால் கட்டாயம் அவன் கைக்குள் சுருண்டிருப்பாள்.
இருவரும் அமைதியாக படுத்திருந்தார்கள். ஆனால் உறங்க வில்லை. நேற்று நடந்ததில் என் மேல கோபமாக இருக்காளோ என்று எண்ணிய இன்பாவுக்கு கவலையாக இருந்தது.
நேரடியாக கேட்டு விடலாமா என்று எண்ணியவன் “இந்து”, என்று அழைத்தான்..
“ஆன்”
“நேத்து நடந்ததுல என் மேல கோபமா இருக்கியா? நான் வேணும்னு செய்யலை”, என்றான். அவன் சொன்னதைக் கேட்டு நேற்றைய நிகழ்வு நினைவில் வந்து அவள் முகத்தில் ரோஜாக்களைப் பூக்க வைத்தன. ஆனால் இருட்டில் அவனுக்கு அவள் வெட்கம் தெரியவில்லை. அவளிடம் இருந்து பதில் வராததால் சாரி என்று சொல்லோடு நிறுத்திக் கொண்டான்.
அவளுக்கும் நீங்க செஞ்சது பிடிச்சிருந்தது என்று நேரடியாக சொல்ல முடியாததால் அமைதியாகவே இருந்தாள்.
அதற்கு மேல் தூக்கம் வராமல் எழுந்தவன் பால்கனிக்கு சென்று விட்டான். பால்கனியில் இருந்த சேரில் வானத்து நிலவை பார்த்த படி அமர்ந்திருந்தான் இன்பன்.
“இன்பன்”, என்று அழைத்தாள் இந்து.
“என்ன இந்து?”
“தூங்கலையா?”
“தூக்கம் வரலை”
“அது எப்படி வராம இருக்கும் வாங்க”
“இல்லை நீ போ”
“தூங்காம இருந்தா தலை வலிக்கும் வாங்க”
“வேண்டாம்னா விடு இந்து. மனுஷன் அவஸ்தை புரியாம”, என்று கத்தினான்.
“நான் என்ன செஞ்சேன்? எதுக்கு என் மேல எரிஞ்சு விழுறீங்க?”
“ஒண்ணும் இல்லை நீ போ. எனக்கு தலை வலிக்குது”
“ஏன் தலை வலி வந்துச்சு? இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தீங்க?”
“அந்த தலைவலியே உன்னால தான் டி வந்துச்சு”
“என்ன சொல்றீங்க? நான் என்ன செஞ்சேன்?”
“ஒண்ணும் இல்லை டி, தயவு செஞ்சு இங்க இருந்து போ. பிளீஸ்”
“என்ன செஞ்சேன்னு தானே கேட்டேன்”
“உள்ளே போன்னு சொன்னேன்”, என்று அவன் கத்த அடுத்த நிமிடம் உள்ளே சென்று விட்டாள்
எதற்கு இந்த கோபம் என்று அவளுக்கு சுத்தமாக புரிய வில்லை. ஆனால் அவனுக்கோ இவ்வளவு அழகு மனைவியை ஒரு அறையில் வைத்துக் கொண்டு அவளை நெருங்க முடியாத தாபத்தில் தான் அந்த கோபமே வந்தது.
மற்றொரு நாள் அவன் எங்கோ அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்க அவனை சீனிவாசன் அழைத்ததால் தேடி வந்த இந்து அவன் மீது நேருக்கு நேர் மோதி விட்டாள்.
அந்த திடீர் தாக்குதலால் அவள் நிலை குழைந்து அப்படியே கீழே சரிய அவளை கீழே விடாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டான் இன்பன். அவளது கரமும் பற்றுதலுக்காக அவன் சட்டையை பற்றிக் கொண்டது. அவளது இடையில் கை பதித்து நின்ற அவனை மிக அருகாமையில் பார்த்தாள் இந்து. அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். இருவர் பார்வையும் பின்னி பிணைந்தது.
அவளுக்கோ அவளுடைய இடையில் இருந்த அவனுடைய கரம் கொடுத்த வெம்மையான குறுகுறுப்பில் தவிப்பாக இருந்தது.
அவனுக்கோ அன்று அவளுக்கு கொடுத்த முத்தம் நினைவில் வந்து இப்போதும் அவள் இதழ்களைச் சிறை செய்ய ஆசை எழுந்தது. அந்த ஈர உதடுகள் அவனை வா வென்று அழைக்க அவளை நோக்கி அவன் குனிய அவள் கண்கள் எதிர்பார்ப்புடன் மூடிக் கொண்டன. அவள் செய்கையில் ஆனந்தமாக அதிர்ந்து போனான். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனது அவனுக்கு புரிந்தது.
இப்போது கொஞ்சம் சந்தோசமாகவும் கொஞ்சம் பயத்துடனும் அவள் முகம் நோக்கிக் குனிய அப்போது அவன் கைபேசி இசைத்தது. அதில் இருவரும் அவசரமாக விலகி நின்றார்கள். “மாமா உங்களைக் கூப்பிட்டாங்க. சீக்கிரம் வாங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் இந்து.