ஒரு நாள் மாலை வர வேண்டிய நேரத்துக்கு இன்பன் வீட்டுக்கு வர வில்லை. அவன் தினமும் வரும் நேரம் கடந்ததும் அவள் அவனை தேட ஆரம்பித்து விட்டாள்.
அவள் தேடலைக் கண்ட அம்பிகா “என்ன மா?”, என்று கேட்க “இன்னும் அவங்களைக் காணுமே அத்தை?”, என்று பரிதவிப்பாக சொன்னாள்.
“வேலை இருந்துருக்கும் டா. அதான் இன்னும் வரலை. உனக்கு பயமா இருந்தா அவனுக்கு கால் பண்ணிக் கேளேன்”, என்று அம்பிகா சொல்லிச் செல்ல தன்னுடைய போனை எடுத்து மை ஹஸ்பண்ட் என்று சேவ் செய்திருந்த அவனுடைய எண்ணுக்கு அழைத்தாள்.
அதை எடுத்த அவனது பி. ஏ “சார் கார் ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு மேம். அதான் பாத்துட்டு இருக்காங்க”, என்று சொல்ல அவனுக்கு என்ன ஆனதோ என்ற பயத்தில் அவன் சொல்ல வருவதைக் கூட கேட்காமல் மயங்கிச் சரிந்தாள்.
அடுத்த நொடி அங்கே வந்த அம்பிகா போனை எடுத்து பேச சாரும் நானும் ஒரு மீட்டிங் முடிச்சிட்டு வரும் போது ஒரு மரத்துல மோதிருச்சு மேம். கார் அதுக்கு மேல போகலை. சாருக்கு தான் கார் சரி பண்ணத் தெரியுமே? அதான் பாத்துட்டு இருக்காங்க”, என்றான் அவன்.
“சரி சரி நான் வேற கார் அனுப்புறேன். அவனை வரச் சொல்லுங்க”, என்று சொல்லி விட்டு வைத்த அம்பிகா வேறு காரை அனுப்பி வைத்தாள். சிறிது நேரத்தில் இன்பன் அங்கு வர அம்பிகாவோ இந்துவுடன் போராடிக் கொண்டிருந்தாள்.
“அத்தை நீங்க பொய்ச் சொல்றீங்க. அவருக்கு என்னமோ ஆச்சு. நீங்க என் கிட்ட மறைக்கிறீங்க? எனக்கு இன்பன் வேணும். நான் அவரைப் பாக்கணும்”, என்று கதற “அவனுக்கு ஒண்ணும் இல்லை இந்து மா. இதோ பார் உன் புருசனே வந்துட்டான்”, என்று வாசல் பக்கம் கை காட்ட அடுத்த நொடி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல அவனை நெருங்கிய இந்து அவனை இறுக அனைத்துக் கொண்டாள்.
ஆனந்தமாக அதிர்ந்து போனான் இன்பன். அவன் கைகளும் அவளை அனைத்துக் கொண்டது. அவளோ அவன் மார்பில் முகம் புதைத்து அழுது கொண்டே இருந்தாள்.
“என்ன ஆச்சு மா?”, என்று அம்பிகாவிடம் இன்பன் கேட்க நடந்ததைச் சொன்ன அம்பிகா “அவளை ரூமுக்கு கூட்டிட்டு போ டா. உனக்கு ஏதோ ஆச்சுன்னு பிள்ளை பயந்துட்டா”, என்றாள்.
தனக்காக தவிக்கும் மனைவியை கண்டு புன்னகைத்தவன் “எனக்கு ஒண்ணும் இல்லை இந்து மா. உன்னை விட்டுட்டு அவ்வளவு சீக்கிரம் நான் இறக்க மாட்டேன்”, என்றான்.
அவன் வாயைப் பொத்தியவள் “அதைப் பத்தியே பேசாதீங்க இன்பன். உங்களுக்கு ஒண்ணுன்னா கண்டிப்பா என்னால தாங்கிக்க முடியாது. ஐ லவ் யு இன்பன்”, என்றாள்.
“ஏய் நிஜமாவா?”, என்று அவளிடம் கேட்ட படியே அவளை அறைக்குள் அழைத்து வந்தான்.
அறைக்குள் வந்ததும் அவள் அவன் கைக்குள் இருந்து கூச்சத்துடன் விலக நினைக்க சட்டென அவள் கரம் பற்றி இழுத்தவன் தன் இடையோடு அவளை இறுக்கிக் கொண்டு அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான்.
இந்த முறை அவள் கண்களில் அளவில்லாத காதல் மின்னியது. தன்னுடைய உடல் முழுவதும் அவன் மேல் ஒட்டியிருக்க அவஸ்தையில் நெழிந்தவள் “விடுங்க இன்பன். போய் குளிச்சிட்டு வாங்க”, என்றாள்.
அவனோ கண்களில் காதலைத் தேக்கி அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் பார்வை அவளை ஒரு மாதிரி அவஸ்தைக்கு உள்ளாக்கியது. அவன் தன்னை மேலும் தன்னை நோக்கி இழுக்க அவளுக்கு படபடப்பாக இருந்தது. அடி வயிற்றில் புது வித இம்ஸைகள் கிளர்ந்தன. அவள் கன்னங்கள் இரண்டும் சூடேறி சிவந்தன. அவனுடைய அருகாமையில் கரைந்து கொண்டிருந்தாள். இந்த நிலையில் நிற்பது அவளுக்கு பிடித்திருந்தது.
“இந்து”
“ம்ம்”
“எனக்கு…”
“உங்களுக்கு….?’
“ஐ பீல் லைக் கிஸ் யு.,… எனக்கு உன்னை முத்தமிடனும் போல இருக்கு. ஒண்ணே ஒண்ணு கொடுத்துக்கட்டா?”, என்று ஆழ்ந்த குரலில் கேட்க அவள் கண்களோ வெட்கத்தில் மூடிக் கொண்டது. அவனைப் பார்க்க அவள் வெட்கம் தடுத்தது.
அவள் கண்களை மூடியதும் “வேண்டாமா? உனக்கு பிடிக்காதா?”, என்று கிசுகிசுப்பாக கேட்டான் இன்பன்.
“இதுக்கெல்லாம் அனுமதி கேட்டா வேண்டாம்”, என்று அவள் கண்களை மூடிய படியே சொல்ல அவன் கண்களில் மின்னல் வந்தது. அவளது குண்டு கணங்களை தன்னுடைய இரண்டு கைகளால் தாங்கி அவளை வெகு அருகாமையில் ரசித்தான்.
பின் அவள் முகம் நோக்கி குனிந்தவன் முத்தமிடுவான் என்று அவள் எண்ண அவனோ அவனுடைய மூக்கால் அவள் மூக்கை உரசி அவளை சூடேற்றினான்.
இவன் சீக்கிரம் முத்தம் கொடுத்தால் தேவலை என்று அவள் எண்ண அடுத்த நொடி அவள் இதழ்களை மெதுவாக தன் இதழ்களை வைத்து தீண்டினான். அவனுடைய முதுகில் இருந்த அவளுடைய கை அவன் முதுகை இறுக்கிப் பிடித்தது.
மெதுவாக பதிந்த இதழ் சற்று அழுத்தமாக மாறி அவள் இதழ்களை அவன் இதழ்கள் உள் வாங்கிக் கொள்ள அவனுடைய டீ சர்ட்டை இறுக்கிப் பிடித்த இந்து அவன் முத்தத்தில் கிறங்கிப் போனாள்.
அவள் இடையில் இருந்த அவனுடைய கரம் அவளுடைய மேனியில் தன்னுடைய தடத்தை பதிக்க ஆரம்பித்தது. அவன் கை அவளுடைய வெற்றிடையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேல் ஏற மொத்தமாக நிலை குலைந்தாள் இந்து. தேகம் முழுவதும் ஒரு வித அனல் பரவியது போல இருந்தது.
மனைவி மனதில் அவன் இருக்கிறான் என்று அறிந்த பிறகு அவனிடம் இருந்த தயக்கம் அனைத்தும் விடை பெற்றுச் சென்றிருந்தது.
அவளுக்கோ அவன் தீண்டலில் கால்கள் துவண்டு நிற்க முடியாமல் தடுமாற்றமாக இருந்தது. அவளைத் தீண்டிக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்தான்.
கண்களை மூடி கிறங்கி அவன் தொடுகையில் அவன் கைக்குள் மயங்கி கிடந்த மனைவியை ஆசையாக பார்த்தவன் அடுத்த நொடி அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்.
அவளும் அவன் கழுத்தில் தன்னுடைய கைகளை மாலையாக கோர்த்தாள். கட்டிலை நெருங்கியதும் அவளை கட்டிலில் கிடத்தியவன் அவள் மேல் சரிய “குளிக்கலையா? குளிச்சிட்டு….”, என்று சொல்ல அடுத்த வார்த்தை அவன் அவளை பேச விடவில்லை. அவளுடைய இதழ்கள் அவன் இதழ்களால் முற்றுகை இடப் பட்டது.
அவளை இறுக அணைத்தவன் அவள் மேலே படர்ந்தான். தன்னுடைய முகத்தை அவள் மார்புக்கு மத்தியில் அழுத்தமாக புதைத்துக் கொண்டான்.
“இந்து”
“ம்ம்”
“இப்ப நான் நானா இல்லை டி. என்னல்லாமோ செய்ய தோணுது. என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியலை டி”
“நானா கண்ட்ரோல் பண்ண சொன்னேன்”, என்று அவள் கேட்க “இந்து”, என்று சந்தோஷமாக அழைத்தவன் “உனக்கு புடிச்சிருக்கா?”, என்று கேட்டான்.
“எனக்கு இப்ப உங்க நெஞ்சுக்குள்ள புதைஞ்சிரனும் போல இருக்குனு சொன்னா நம்புவீங்களா?”, என்று அவள் சொன்னதும் அவளுக்கு இன்னும் நெருக்கமாக மாறினான் இன்பன்.
அவள் வெட்கம் அவனை மொத்தமாக கவிழ்த்துப் போட்டது. அவள் முகம் நோக்கி குனிந்தவன் அவள் முகம் முழுவதும் முத்தமிட அவன் மீசையின் குறுகுறுப்பு அவளை அவன் மேல் பைத்தியமாக்கியது. அவள் காது மடல் கன்னம் கழுத்து என்று முத்தமிட்டவன் அவளுக்குள் ஆழமாக புதைத்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கும் தொலைந்து போக ஆரம்பித்தாள் இந்து. அவன் விரல் தீண்டிய இடங்களும் இதழ் தீண்டிய இடங்களும் தகிக்க ஆரம்பித்தது. அவனோ இத்தனை நாள் இருந்த ஆசை வேட்கை அனைத்தையும் அவளிடம் தீர்த்துக் கொண்டிருந்தான்.
முடிவில் அவள் நெற்றியில் நிறைவாக முத்தமிட்டவன் அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டு படுத்தான். சோர்வாக இருந்தவளைக் கண்டவன் “சாரி டி ரொம்ப கஷ்டப் படுத்திட்டேனா?”, என்று கேட்டான்.
“அப்படி எல்லாம் இல்லை”, என்று அவள் வெட்கத்துடன் முணுமுணுக்க அவள் கண்களில் வழிந்த கண்ணீர் அவள் வலியை அவனுக்கு புரிய வைத்தது.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அவன் தேடல் அவளிடம் தொடங்க ஆரம்பிக்க அவளும் விருப்பத்துடன் அவன் கரங்களுக்குள் புகுந்து கொண்டாள். அடுத்த நாள் காலை வரை அவன் அவளை விட வில்லை.
அதன் பின் வந்த நாட்களில் இருவரும் காதல் பறவைகளாக உலா வந்தார்கள். கிரியும் இன்பனும் கூட மாப்ள மச்சான் என்று பேசிக் கொண்டார்கள்.
பெரியவர்களுக்கு கூட அவர்கள் சந்தோஷம் மனதுக்கு நிறைவைத் தந்தது.
இப்படியே வாழ்க்கை அழகாக நகர ஒரு நாள் குணசேகரன் பழனிக்கு மொட்டை போடுவதாக வேண்டியிருந்ததால் மொத்த குடும்பமும் பழனிக்கு கிளம்பியது. பேரன் மற்றும் பேத்தியின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டியிருந்தார்.
அனைவரும் கிளம்பும் கடைசி நேரத்தில் இன்பன் மட்டும் வேலை இருக்கு என்று சொல்லி நாளை வருவதாக சொன்னான். கூடவே இந்துவையும் அவர்களுடன் அனுப்பாமல் இங்கேயே இருக்க வைத்தான்.
அவர்கள் கிளம்பிச் சென்றதும் “எதுக்கு நாம அவங்க கூட போகாம நாளைக்கு போறோம்?”, என்று கேட்டாள் இந்து.
“எனக்கு முக்கியமான வேலை இருக்கு டி., அதான்”
“ஓ, அப்ப என்னையாவது அனுப்பிருக்கலாம்ல? நீங்க மட்டும் உங்க வேலையை முடிக்சீட்டு காலைல வந்துருக்கலாம்”
“நீயில்லாம நான் என்ன வேலை டி பாக்க முடியும்?”, என்று கேட்டுக் கொண்டே அவன் அவளுடைய கழுத்தை வளைக்க “இந்த வேலையையா சொன்னீங்க?”, என்று கண்களை விரித்தாள் அவனுடைய ஆருயிர் மனைவி.
வேற எந்த வேலையைச் சொல்லுவாங்களாம்?”, என்று கேட்டுக் கொண்டே அவள் கழுத்து வளைவில் அவன் முகம் புதைக்க அவளும் தன்னுடைய கைகளை அவன் கழுத்தில் மாலையாகப் போட்டாள்.
“ஒரு உம்மா கொடு டி பிளீஸ்”, என்று அவன் கெஞ்ச அவனுடைய கன்னத்தில் தன்னுடைய பூவிதழ்களை பதித்தாள் இந்து.
அவன் கரங்கள் அவளை வாரிச் சுருட்டிக் கொண்டு தனக்கென்று எடுத்துக் கொள்ள ஆரம்பித்தது. அடுத்த நாள் காலை அவசர அவசரமாக இருவரும் கிளம்பினார்கள்.
அவன் அவசரமாக கிளம்பச் சொன்னதில் அவள் தான் அவனை முறைத்த படி வந்தாள்.
“ஏண்டி?”, என்று கேட்டான் இன்பன்.
“இது தேவையா? ஒழுங்கா அவங்க கூடவே போயிருக்கலாம்”
“போயிருக்கலாம் தான். ஆனா அதுக்கு நீ தான் காரணம்”, என்று சொல்லி சிரித்தான் இன்பன்.
“நானா நான் என்ன செஞ்சேன்?”
“நேத்து கிளம்பும் போது நீ என்ன செஞ்ச?”
“என்ன செஞ்சேன்?”
“நல்லா யோசிச்சு பாரு”
“சத்தியமா நினைவுக்கு வரலைங்க”
“நேத்து குளிச்சிட்டு வந்து என்ன பண்ணின?”
“நீங்களே சொல்லுங்கப்பா”
“உன் சட்டைக்கு பின்னாடி இருந்த முடிச்சை போட்டு விடச் சொன்னல்ல?”
முகம் சிவந்த படி “ஆமா”, என்றாள்.
“சும்மாவே நான் உன் மேல பைத்தியமா இருக்கேன். என்னைக் கூப்பிட்டு அப்படிச் செய்யச் சொன்னா நான் சும்மா இருப்பேனா? எனக்கு நீ உடனே வேணும் போல இருந்துச்சு. அங்க எல்லார் கூடவும் போய் சும்மா ரூம் எடுத்து தங்குறதுக்கு இங்க எனக்கு தேவையானது எல்லாம் எடுத்துக்கலாம்ல?”
“சி போங்க நீங்க ரொம்ப மோசம்”
“இப்படி சிணுங்காத டி. அப்புறம் அப்படியே வண்டியை வீட்டுக்கு விட்டுருவேன். இப்ப தாத்தாவும் என் மச்சானும் என்னை மனுசனா நினைச்சு பேச ஆரம்பிச்சிருக்காங்க. நான் மட்டும் இப்ப சரியான நேரத்துல போகலைன்னு வை அவ்வளவு தான்”, என்று அவன் சொன்னதும் அவள் சிரித்தாள். இவர்கள் அங்கே போன போது அங்கே அவர்களும் தயாராக இருந்தார்கள்.
“அண்ணா அவங்க வேலை எல்லாம் முடிச்சிட்டாங்களா அண்ணி?”, என்று கேட்டு இந்துவைப் பார்த்து கண்ணடித்தாள் அஞ்சலி. அதற்கு அழகாக முகம் சிவந்தாள் இந்து.
குணசேகரன் மொட்டை போட தயாராக இன்பனும் “நானும் மொட்டை போடப் போறேன்”, என்றான்.
“ரெண்டு மொட்டை போடக் கூடாது டா”, என்று அம்பிகா சொல்ல “அப்படின்னா நானும் போடுறேன்”, என்று சொன்னான் கிரி.
அதன் பின் மூவரும் மொட்டை போட்டு குளித்து முடித்து அந்த பழனி முருகனைப் பார்க்க குடும்பத்துடன் மலை ஏறினார்கள்.
மலை ஏறும் போது கூட இந்துவின் கையை அக்கறையாக பிடித்துக் கொண்டான் இன்பன். நதியையும் கரையையும் சேர்த்த காதல் அவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.