ஒரு தாய்
தன் குழந்தையை
பத்து மாதம் சுமக்கிறாள்
கருவறை வரையில்….
தந்தை தன் குழந்தையை
சுமப்பான் தன்
கல்லறை வரையும்…..
கதிரவன் தன் தூக்கத்தை முடித்து கொண்டு வர..,,தனக்கு இன்னும் சிறிது நேரம் கழித்து தான் விடியும் என்று உறங்கி கொண்டு இருந்தான் கிரிதரன்.
தன் அறை கதவினை தட்டும் சத்தம் வெளியே வந்த கிரிதரனிடம் ,, “டேய் அணு எங்க டா ..??” என்று அவன் பெரியம்மா சுந்தரி கேட்டாள்.
வீட்டில் உள்ள அனைவரும் அணு எங்க என்று வினவ…,,
இன்னைக்கு என்ன நாள்ன்னு மறந்து பொய்டுச்சா உங்க எல்லாருக்கும்.. இன்னைக்குன்னு பாத்து எல்லாரும் அவளையே கேக்குறீங்க என்று வீட்டினோர் அனைவரின் முன் வைத்து பேசிக்கொண்டு இருந்தான் கிரி.
அப்படி இன்னைக்கு என்ன நாள்ன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா …??அப்படி எங்க தான் உன் மனைவி இவ்வளவு காலையிலேயே யாரு கிட்டயும் சொல்லாம பொய்யிருக்கா மனதில் வஞ்சகத்தை வைத்து பேச்சை ஆரம்பித்தாள்.
என்னோட மனைவி இன்னைக்கு எங்க பொயிருக்கான்னு என்னோட குடும்பத்தில உள்ள எல்லாருக்கும் தெரியும் என்று சிறு கோபத்துடன் கூறினான் .
கிரி நான் உன்னோட பெரிமா டா ..எனக்கு உன் மனைவி மீது பாசம் இருக்காதா என்ன …??காலையிலிருந்து உன்னோட அம்மா தான் எல்லா வேலையும் தனியா பாத்திட்டு இருக்கா..,,அதுக்கு தான் அவள ஹெல்ப் பண்ண சொல்லலாம்னு தான் அவள கேட்டேன் . அதுவும் இல்லாமல் நான் இப்ப வரைக்கும் அவளை பார்க்கவே இல்லை .அவ எங்க தான் பொயிருக்கா ..?? என்று பாசமாக தன் உரையை தொடங்கி கேள்வியில் முடித்தாள் சுந்தரி.
[the_ad id=”6605″]
உங்களுக்கு இன்னைக்கு என்ன நாள் என்று தெரியும் தானே அம்மா ..?? என்றான்.அதற்கு அவன் அன்னை எனக்கு தெரியும் என்று பதில் கொடுக்க…,,அப்போ பெரியம்மா கிட்ட சொல்லுங்க எனக்கு நேரம் ஆகுது.நான் பொய் சடங்கு செய்ய தயாராகுறேன் என்று தன் அறைக்கு செல்ல எத்தனிக்க
அப்படி உங்க வீட்டு மகாராணி எங்க தான் பொயிருக்காங்கனு சொல்லு லக்ஷ்மி (கிரியின் அன்னை ) …,,இன்னைக்கு அப்படி என்ன நாள் ..???என்றாள் சுந்தரி.
அக்கா அது இன்னைக்கு அணுவோட அப்பா இறந்த நாள் என்று அடிக்குரலில் கூறினாள் லக்ஷ்மி .
அணுவோட அப்பாக்கு தான இறந்த நாள் ..,,அதுக்கு கிரி எதுக்கு போய் திதி செய்யனும் ..?? இப்போ அணு எங்க இருக்கா ..?? என்று அடுத்தடுத்து கேள்விகளை கொடுத்தாள் சுந்தரி.
கிரிதரன் தன் கோபத்தை கட்டுபடுத்தி கொண்டு ,,அணுக்கு அப்பான்னா அவரு எனக்கும் அப்பா தான் என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று கிளம்ப தயாரானான்.
கிரி தன் அறைக்கு செல்லவும் ,, வீட்டில் உள்ள அனைவரும் அவர்களது வேலையை பார்க்க சென்றனர்.
பின்னர்,,சுந்திரியும் எதுவும் பேசாமல் அமைதியாக சென்று சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.ஆனால் அவள் மனதில் அணு எங்கே போயிருப்பாள் என்ற கேள்வி மட்டுமே இருந்தது.
கிரி வேகமாக கிளம்பி தன் அறையை விட்டு வந்தவன்,, தன் அன்னையிடன் கூறிவிட்டு கார்க் கீயை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.
கிரி நேராக திதி கொடுக்கும் இடத்திற்கு சென்று அணுவின் அப்பாவிற்கு திதி கொடுத்துவிட்டு வந்து அங்கே பக்கத்தில் இருந்த பசுவிற்கு தன்னிடம் இருந்த வாழைப்பழத்தை கொடுத்துவிட்டு பக்கத்தில் இருந்த ஆற்றில் மூன்று முறை தலை மூழ்கி கொண்டு வந்தான்.
பின்னர்,,தனது காரை எடுத்துக்கொண்டு அணுவை காண புறப்பட்டான்.
சிறிது தூரம் சென்று போது..,,,கிரியின் கார் பஞ்சர் ஆக தன் பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு காரை ஓராமாக நிறுத்திவிட்டு கேப் புக் செய்தான்.பிறகு தன் நண்பனை வர வைத்து வண்டியை சரி செய்து விட்டு தான் இருக்கும் இடத்தை சொல்லி அங்கே வந்து கொடுத்திட்டு என்றான் கிரி.கிரியின் நண்பனும் சரி சொல்விட்டு தன் வேலையை பார்க்க தயாரானான்.
பின்னர்,,கேப் வர அதில் ஏறிய கரியை பார்த்து நீங்க எங்கே போகனும் சார் என்க
அதற்கு கிரி சன்தோம் கேத்திடரல் சர்ச் (Santhome Cathedral church) என்றான்.
[the_ad id=”6605″]
கிரியின் பயம் சர்ச்சை நோக்கி இருந்தது….
.
.
.
.
.
.
.
.
இறைவா எனக்கொரு எனக்கொரு வரம் தா…
அழுதிடும் சின்ன பிள்ளை நான்
உந்தன் கைகளில் ஏந்தி கொள்வாய்
இறைவா எனக்கொரு எனக்கொரு வரம் தா…
அழுதிடும் சின்ன பிள்ளை நான்
உந்தன் கைகளில் ஏந்தி கொள்வாய்
தன் இரண்டு கைகளையும் ஒன்றாக கோர்த்து கொண்டு மண்டியிட்டு தன் முன் இருந்த கடவுளை பார்த்து கண்ணீர் விட்டு கொண்டு இருந்தாள் அணு என்கிற அணுப்பிரியா .
இன்று என்ன நாள்ன்னு உனக்கு தெரியும் தானே …???எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா சொல்லு …???நான் என்னுடைய வேதனையை உன்கிட்ட சொல்றதுக்காக வந்திருக்கிறேன் என்று கடவுளிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.
அணுவின் கண்ணீரை பார்த்து அந்த வானமும் மழையின் மூலம் அதன் கண்ணீரை தெரிவித்தது.
மழை பெய்ய ஆரம்பித்தால் போக்குவரத்து நெரிசல் ஆனது. கிரியின் மனமோ சீக்கிரம் அணுவிடம் செல்ல வேண்டும் என்றது.
உனக்கே தெரியும் தானே நான் கிட்டத்தட்ட ஏழு வருஷமா இந்த நாளுக்கு இங்க வந்திட்டு இருக்கேன்னு…
ஒவ்வொரு வருஷமும் நான் இங்க வேண்டிட்டு போறேன் . ஒருநாளாவது நான் வேண்டின்ன விஷத்தை செய்றீங்களா ….??? என்று கடவுளிடம் தன் கோபத்தை அழுகையுடனே காட்டிக்கொண்டு இருந்தாள்.
இந்த தடவையும் நான் என் கதையை உன்கிட்ட சொல்லிட்டு என்னோட வேண்டுதல்ல உன்கிட்ட வச்சிட்டு போறேன் என்று கூறிவிட்டு தன் வாழ்வில் நடந்த கசப்பான நினைவுகளை கூறத் தொடங்கினாள்.
பதிமூன்று வருடங்களுக்கு முன்பு…,,
நிதானம் இல்லாத வாழ்வில் விடிந்ததும் தன் இயந்திரமான வேலையை பார்க்க ஓடோடி செல்லும் மக்கள்.போகும் வழியெங்கும் போக்குவரத்து நெரிசல் . அந்த காலத்தில் பறவைகளின் சத்தம் கேட்க கேட்க இனிமையாக இருக்கும் .,ஆனால் இன்றோ வெறும் வண்டிகளின் ஹாரன் சத்தம் மட்டுமே கேட்டும் படியாக இருந்தது அந்த கோவை மாவட்டம்….
அந்த பெரிய ஊரில் ,,பல கட்டிடங்களும் பலவகையான தொழில் துறைகளும் பல மாளிகைகளும் இருக்கும் அந்த ஊரில் ஒரு சிறிய கூட்டுக்குள் வாழ்ந்தனர் அணுவின் குடும்பத்தினர்.
அம்மா எனக்கு பள்ளிக்கு நேரமாச்சு மா.. சீக்கிரம் சாப்பாட்டை கட்டி கொடுங்க என்று அணு கத்திக்கொண்டு இருந்தாள்.
இரு டி பறக்காத எனக்கு என்ன பத்து கையா இருக்கு.. எனக்கும் ரெண்டு கை தான இருக்குது… நானும் ஒவ்வொன்னா செஞ்சிட்டு தானே இருக்கேன் என்று சமையலறையில் இருந்து பாக்கியம் திட்டி கொண்டு இருந்தாள்.
அணு எதுவும் பேசாமல் அமைதியாக கிளம்பிவிட்டு டிஃபன் பாக்ஸ் வாங்கிக்கொண்டு செல்வதற்காக காத்திருந்தாள்…
[the_ad id=”6605″]
இரண்டு நிமிடம் கழித்து..,, சமையலறையை விட்டு வெளியே வந்து டிஃபன் பாக்ஸை அவளிடம் நீட்ட ..அணுவோ அம்மா இன்னைக்கு school ஃபீஸ் கட்டணும் என்றாள்.
சரி நான் உங்க அப்பாகிட்ட கேட்டுகிறேன் .நீ பாத்து பத்திரமா பொய்ட்டு வா என்று அணுவை வழி அனுப்பி வைத்தாள் பாக்கியம்.
அணுவின் தந்தை பெருமாள் ஆட்டோ ஓட்டுபவர்… அதனால் காலையில் விடிந்ததுமே தன் வேலையை பார்க்க சென்றுவிடுவார்.இரவு வெகு நேரம் கழித்தே வீட்டிற்கு வருவார்.தன் குடும்பத்திற்காக இரவு பகல் பாராது உழைப்பவர்.
மாலை நேரம் வரவும் அணு பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தாள்..
சிறிது நேரம் டிவி பார்த்தவள்..,, பின்னர் படிக்க சென்றுவிட்டாள்.
இரவு நேரமாகவும் அணுவிற்கு சாப்பாடு கொடுத்துவிட்டு தன் கணவருக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் பாக்கியம்….
இரவு பதினொரு மணி எட்டிய படியே வீட்டிற்கு வந்த பெருமாள்,,தன் மனைவியிடம் பசிக்குது சாப்பாடு எடுத்து வை கை கால் கழுவி விட்டு வந்தரேன் என்று கூறிவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டார்.
சிறிது நேரத்தில் குளியலறையில் இருந்து வந்த பெருமாள்,, நேராக அணுவிடம் சென்று சாப்பிட்டியா டா அம்மு என்க அணுவும் சாப்பிட்டேன் என்று கூறிவிட்டு டிவியை பார்க்க ஆரம்பித்தாள்.
பாக்கியம் சாப்பாடு எடுத்து வைக்க ..,, பெருமாள் சாப்பிட ஆரம்பித்தார்.
பாக்கியம் மெதுவாக தன் பேச்சை ஆரம்பித்தாள்.
ஏங்க நம்ம பிள்ளைக்கு school ஃபீஸ் கட்டம்ன்னு பாப்பா கிட்ட சொல்லி விட்டுருக்காங்க என்று கூறிவிட்டு வீட்டு செலவு எல்லாம் தீர்ந்து விட்டதுங்க . ஆயிரம் ரூபாய் கொடுத்தா நான் வீட்டுக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கிடுவேன்ங்க என்றாள் பாக்கியம்.
பெருமாள் அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருந்தார்.
என்னங்க அமைதியாவே இருக்கீங்க …??? என்றாள் பாக்கியம்.
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ,, என்கிட்ட இப்போ சுத்தமா காசு இல்லமா.இந்த மாசம் கொஞ்சம் பொறுத்துக்கோ மா.அடுத்த மாசம் காசு தரேன் ,,அப்போ நீ எல்லாத்தையும் வாங்கிக்கோ என்றார் பெருமாள்.
இதே தான் நீங்க போன மாசமும் சொன்னீங்க ..,,இப்படியே போனா குடும்பம் நடத்துவது ரொம்ப கஷ்டம்ங்க என்று தன் கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தாள்.
பெருமாளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
மேலும் பாக்கியமே தொடர்ந்தாள்..
சரி இத விட்டுருங்க… பொண்ணுக்கு school ஃபிஸ்காவது எதாவது செய்ங்க என்றாள்..
இல்லமா இந்த மாசம் பாப்பாவோட school ஃபீஸூம் கட்ட முடியாது.அடுத்த மாசம் தான் கட்ட முடியும். நான் போய் அம்முவோட school ல பேசுறேன் என்றார் பெருமாள்.
என்னங்க இப்படி பண்றீங்க …?? நாம ஃபீஸ் கட்டலன்னா அவள schooluku வர வேண்டாம்னு சொல்றாங்க .நீங்க என்னனா இப்படி சொல்றீங்க . இப்படி தான் உங்க வாழ்க்கை இருக்குன்னு தெரிஞ்சா நான் உங்கள கல்யாணம் பண்ணிறுக்கவே மாட்டேன் என்று கத்திவிட்டு அணுவையும் இழுத்து கொண்டு படுக்க சென்றுவிட்டாள்.
சாப்பிட்டு இருந்த பெருமாள்.,,பாதி சாப்பாட்டிலே கை கழுவி விட்டு தன் மொபைலை எடுத்து வெளியே சென்று திண்ணையில் உட்கார்ந்து யாருக்கோ கால் செய்து பேசினார்.
இரண்டு நாட்களும் இப்படியே போனது..,, பாக்கியம் தன் கணவரிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை .அணுவையும் பேச விடவில்லை.
இப்படி ஒருவாரம் போனது..அணுவுக்கு எதுவும் புரியவில்லை.பாவம் அந்த பதிமூன்று வயது குழந்தைக்கு என்ன புரியப்போகுது சொல்லுங்க.
ஒருவாரம் கழித்து இரவு சாப்பிட்டு விட்டு பாக்கியமிடம் வந்த பெருமாள்..
நான் என்னோட ஃபிரண்ட் கிட்ட பேசியிருந்தேன்..,, அவன் தான் சொன்னான் ஒரு சவாரி இருக்குன்னு ..நான் நாளைக்கு விடியற்காலையில் அக்டிங் ரைவராக போக போறேன் அடுத்த நாள் காலை தான் வருவேன் . அதுவரைக்கும் பாத்து பத்திரமா இருங்க என்று கூறிவிட்டு படுத்துக் கொண்டார்.
[the_ad id=”6605″]
அடுத்தநாள் காலை..,,சீக்கிரமே கிளம்பி தன் மகளிற்கு முத்தம் கொடுத்து விட்டு தன் மனைவியிடம் கூறிவிட்டு சென்றார் பெருமாள்.
வீட்டிலிருந்து கிளம்பிய பெருமாள் நேராக தன் நண்பன் கூரிய இடத்திற்கு சென்றார்.
அந்த வீட்டில் அறுபது வயதை உடைய பெண்மணி நாற்பது வயதை அடைந்த ஒரு பெண் அவர்களது இரண்டு குழந்தை பெரியவனுக்கு பத்து வயது சின்னவளுக்கு ஆறு வயது .இவர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு சென்றார் பெருமாள்.
மதிய நேரத்தில் வண்டி சென்னையை அடைந்து.
அவர்கள் அனைவரும் அவர்களது வேலையை முடித்துவிட்டு இறுதியாக சன்தோம் கேத்திடரல் சர்ச் (Santhome Cathedral church) சென்று வந்தனர்.
இங்கு பாக்கியமிற்கு ஏதோ தவறாக பட அணுவை பள்ளிக்கு அனுப்பிய சிறிது நேரத்தில் கோவிலுக்கு சென்று வந்தாள்.
மாலை நேரம் சென்னையிலிருந்து அவர்களுடன் கிளம்பினார் பெருமாள்.
பைபாஸ் ரோட்டில் மெதுவான வேகத்திலே வண்டியை செலுத்தினார். இரவு நேரம் வர வண்டியை ஒரு உணவு விடுத்திக்கு முன் நிறித்துவிட்டு. அனைவருயும் சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்விற்கு பிறகு சென்றனர்.
இரவு பத்து மணி அளவில் ,,அந்த ஆறு வயது குழந்தை பெருமாளிடம் தனக்கு பாத்துரும் வருவதாக கூற ,,அந்த இரவு நேரத்தில் இருட்டாக இருந்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு வண்டிக்கு பின்புறமாக நின்றுக்கொண்டார் பெருமாள்.
அதே பைபாஸ் ரோட்டில் ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது.அந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் குடித்துக்கொண்டே ஓட்டினார்.
அந்த ஓட்டுநர் தாறுமாராக வரவும்..,, தீடிரென்று அந்த லாரி பெருமாள் நின்றுக்கொண்டு இருந்த நோக்கி வர ,,அந்த ஒரு நொடி பயணத்தில் பெருமாள் மீது மோதியது.
அந்த லாரி மோதியதில் பெருமாள் தூக்கி வீசப்பட்டார் .அந்த காரும் லாரியும் உருண்டோடி விழுந்தது.
அந்த குடும்பத்தினர் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இங்கே அணுவும் பாக்கியமும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
இமை மூடும் நொடியில் அனைத்தும் நடந்தது..
பெருமாள் உயிருக்கு போறாடிட்டு இ ருந்த நேரத்திலும் ..,,என்னால் முடிந்த அளவுக்கு இந்த குடும்பத்தை காக்க முயன்றேன். என்னுடைய இறப்பினால் வரும் பணத்தை வைத்து கொண்டு அம்முவை காப்பாத்து பாக்கியம் என்று மனதில் நினைத்து கொண்டே தன் உயிரை துறந்து மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றார்.
அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெருமாளின் நண்பருக்கு அழைப்பு விடுத்து நடந்த நிகழ்வை கூறினர்.
பெருமாளின் நண்பன் முத்துவிற்கு இதை எப்படி பாக்கியத்திடம் சொல்வது என்று நினைத்து களக்கமுற்றார் .
முத்து தன் மனைவி லக்ஷ்மியை கூப்பிட்டுக் கொண்டு பாக்கியம் வீட்டிற்கு சென்றார்.
அணு டிவி பார்த்து கொண்டு இருக்க பாக்கியம் பாத்திரம் கழுவி கொண்டு இருக்க,,அந்த நேரத்தில் வீட்டின் காலிங் பெல் அடிக்கவும் இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டு அணுவிடம் கதவை திறக்க சொல்ல அவளும் திறந்தாள்.
அங்கே முத்துவையும் லக்ஷ்மியையும் கண்ட அணு ,, அத்தை மாமா உள்ளே வாங்க என்று உள்ளே வரவேற்றாள்.
[the_ad id=”6605″]
வாங்க அண்ணா அண்ணி ..!!!இந்த நேரத்துல வந்துருக்கீங்க ..?? என்று பாக்கியம் அவர்களை வரவேற்ற பின்பு கேட்டாள்.
தங்கச்சி உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும் மா என்றார் சிறு தயக்கத்துடனே..,, சொல்லுங்க அண்ணா என்க நம்ம பெருமாளுக்கு என்று இழுக்க அவருக்கு தான் ஊருக்கு பொய்ருக்காறே அண்ணா என்றாள்.
முத்து கண் கலங்கிய படியே நம்ம பெருமாளுக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சி மா என்றார்.இதை கேட்ட பாக்கியத்திற்கு உயிரே போனது போல் இருந்தது.
லக்ஷ்மி ஏதோ பேச வாய் எடுக்க ,,அவளை பேச வேண்டாம் என்று முத்து தடுத்தார் .
தன் அன்னை அழுவதை பார்த்து அணுவும் அழத் தொடங்கினாள்.
பின்னர் நால்வரும் சேர்ந்து பெருமாளை சேர்த்த ஹாஸ்பிடலுக்கு சென்றனர்.
அணு போகும் வழியெங்கும் தன் தந்தையை காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டே வந்தாள்.
அங்கு அவர்கள் சென்ற பின்புதான் பாக்கியத்திற்கும் அணுவிற்கும் பெருமாள் இறந்துவிட்ட செய்தியை கூறினர்.
பின்பு,,பெருமாளை போஸ்ட் மாடம் செய்து பாடியை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
அப்போதுதான் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த முத்து லக்ஷ்மி தம்பதியரின் மகன் கிரிதரன்..,,அவர்களுக்கு உதவியாக இருந்தான்..
தன் தந்தையின் சடலத்தை கண்ட அணு கதறி அழுதாள்.இதை பார்த்த கிரிக்கும் அழுகையாக வந்தது.
தந்தையின் சிரிப்பு ஒலி
காதில் கேட்கிறது…
பிரிவின் வலி
நெஞ்சில் இருக்கிறது…..
அன்பு மலையில் இருந்த மனம்
இன்று வரண்டு போனது
நீ இல்லாமல் ???……
அப்பா என்ன விட்டு போகாதீங்க பா….. நான் school fees எதையும் கட்ட சொல்லி அம்மாகிட்ட சொல்ல மாட்டேன் பா..அம்மாவும் உங்ககிட்ட வந்து சண்ட போட மாட்டாங்க பா…என்ன விட்டு எங்கேயும் போகாதீங்க என்று கதறி அழுதாள் அந்த பதிமூன்று வயது பெண்.
இதை எல்லாம் கண்ட பதினான்கு வயதுடைய கிரி தன் மனதில் இனி அணுவிற்கு எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான்.
பிரிவில்
என் மூச்சுக்கு
நீ எழுதிய
முடிவுரை
மரணம்…..!!!!!
பின்னர் எல்லா சடங்குகளையும் செய்து அவரது உடலை எறித்துவிட்டனர்….
அணு தன் வலிகளை மறைக்க தொடங்கினாள்.நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றாள் பனிரெண்டாம் வகுப்பில்.
கிரிதரன் படிக்கும் கல்லூரியிலே அவளையும் சேர்த்து விட்டார் முத்து.
இருவரும் சேர்ந்து நன்கு படித்தனர்.கிரிதரனிற்கு இறுதியாண்டில் வேலை கிடைக்கவும் கிரி சென்னை சென்றுவிட்டான்.மீண்டும் அணுவை வெறுமை மீண்டும் சூழ்ந்து கொண்டது போல் இருந்தது அவளுக்கு.
பிறகு அணுவும் ஃபைனல் இயர் வர ,தன் படிப்பிலும் கேம்பஸ் இன்டர்வியூவிலும் தன் கவனத்தை காட்டினாள்.
[the_ad id=”6605″]
பிறகு அவளுக்கு வேலை கிடைக்க அவளும் தன் அன்னையை கூப்பிட்டு கொண்டு சென்னையில் குடி புகுந்தாள்.
கிரியும் அணுவும் வெவ்வேறு இடத்தில் வேலை பார்த்தார்கள்.
கிரி தன் காதலை அணுவிடம் சொல்வதற்கு முன்பு தன் வீட்டில் உள்ளார்களிடம் தன் காதலை பற்றி கூறி அவர்களிடம் சம்மதம் வாங்கிய பின்பே அணுவிடம் தன் காதலை கூறினான்.
பிறகு ,,அவளும் தரனின் காதலை ஏற்றுக்கொண்டாள்.பின்னர்,ஒரு வருடம் கழித்து ஊரார் முன்னிலையில் தரன் தன் தேவதையின் சங்கு கழுத்தில் தாலியை கட்டி தன்னவள் ஆக்கிக்கொண்டான் .
தன் முன் இருந்த கடவுளின் முன் தனது வாழ்வை பற்றி கண்ணீர் தீர தீர அழுது கொண்டே கூறி முடித்தாள்.
ஏன் என் அப்பாவ என்கிட்ட இருந்து பிரிச்சிங்க…??? என்னையும் எங்க அப்பா கிட்ட தேத்துறுங்க …. என்று தன் கைகளை கூப்பி கெஞ்சி கொண்டு இருக்க ப்ரியா என்ற குரலை கேட்டு தரன் வந்துட்டியா என்று தன்னவனை ஓடி சென்று அணைத்தாள்.
தரன் நீயே இவுங்க கிட்ட சொல்லு ,,எங்க அப்பாவை என்கிட்ட தர சொல்லு தரன்.எங்க பிரிஞ்சி நான் வாழ்ந்தது போதும் . இனியும் என்னால பிரிஞ்சு இருக்க முடியாது…ப்ளிஸ் தரன் இவுங்கிட்ட சொல்லு எனக்காக என்று தன்னவனின் அணைப்பிலிருந்து கொண்டே கூறினாள்.
நான் இவுங்க கிட்ட சொல்றேன் ப்ரியா குட்டி ….நீ மொதல்ல வா நாம வீட்டுக்கு போகலாம் மா என்று கூறி அவளை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றான்.
வீட்டிற்கு வந்தவர்கள் ,நேராக அவளை அறைக்கு அழைத்துச் சென்றான்.
தீடிரென்று அணு மயங்கவும் அவளை தாங்கி பிடித்தான் தரன்.
உடனே டாக்டரை வர சொல்லவும் ,, அவர்கள் வந்து செக் செய்துவிட்டு அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று கூறிவிட்டு அந்த மருத்துவர் சென்றார்.
அணு கண் விழிக்கும் வரை காத்திட்டு இருந்த தரன்..,,அணு கண் விழித்ததும் உன்னோட வேண்டுதல் நிறைவேறிடுச்சி என்றான் தரன்.
தரன் சொல்வதை கேட்டதும் ..,,என்ன சொல்றீங்க தரன்….??? என்க அவள் வயிற்றில் அவளது கையை எடுத்து வைத்து உங்க அப்பா உங்கிட்ட வர போறாரு டி பொண்டாட்டி என்றான்.
எங்க அப்பா வர போறாரா ..??? என்க ஆமாம் என்றான்.
கிரி கூறியதை கேட்டு அணு மகிழ்ச்சியாக இருந்தாள்.அவளது மகிழ்வை கண்டு கிரியும் அவளது குடும்பத்தினரும் சேர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்.
எந்தன் கைகளில் வந்து
சேர்ந்த உன்னை
ஒருபோதும் இழக்க
மாட்டேன்…!!!
எந்தன் கண்ணீருக்கு
வந்த வரம் நீ…!!!
அடுத்த ஒன்பது மாதத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது தரன் மற்றும் அணு தம்பத்தியருக்கு . அவர்கள் வாழ்விற்கே வரமாக வந்திருந்தான் அவர்களது புதல்வன்…
அடுத்த ஒரு வாரத்திலேயே அணு மற்றும் தரனின் புதல்வனுக்கு ஹரிஹரசுதன் என்று பெயர் வைத்தனர்…
அவர்களின் மேல் யார் கண்ணும் பட்டு விட கூடாது என்று நினைத்து கொண்டு அவர்களுடன் நாமும் விடை பெறுவோம்.
??முற்றும் ??