கண்மூடி அமர்ந்திருந்த முல்லையின் கண்களிலிருந்து கண்ணீர் இறங்கி கொண்டிருக்க, தாள முடியாமல் அருகே அமர்ந்தவன் “என்னாச்சுமா?” என்றான் கனிவாக.
வெகு அருகிலிருந்து கேட்கும் குரலில் திடுக்கிட்டு விழித்தவள், அன்பரசை கண்டு பிரம்மையோ என மேலும் மலங்க விழித்தாள். “என்னாச்சு? தனியா உக்கார்ந்து அழற அளவுக்கு என்ன பிரச்சனை?” என்றான் மீண்டும்.
முல்லை எழ முற்பட, “உக்காரு” என அதட்டியவன், “அந்த கஜேந்திரன் ஏது பிரச்சனை செய்தானா? இல்ல அன்னைக்கு உன் வீட்டுல இருந்தானுங்களே அவனுங்களால ஏதும் பிரச்சனையா?” என்றான் அக்கறையாக.
இல்லை என தலையசைத்த முல்லைக்கு அதற்கு மேல் அன்பரசு முன் இருக்க முடியாமல் போக, எழுந்தவள் வேக நடையோடு வெளியேறினாள்.
ஏதும் இல்லை என தலையசைத்த போதும் முல்லை கண்ணிலிருந்த வலி, எதோ பெரிதாய் இருக்கிறது என்பதை உணர்த்த, ரங்கசாமிக்கு அழைத்து கேட்கலாமா என யோசித்தான். பின்னே, இங்கேதான வீடு, இன்னும் அரைமணி நேரத்துல வீட்டுக்கு போய்டுவோம். நேர்ல போயே விசாரிச்சுக்கலாம் என நினைத்து தனது குடும்பத்தோடு இணைந்தான்.
மொத்தம் நூற்றி இருபது பேர் வரை நெருங்கிய சொந்தங்கள் இருக்க, வீட்டிற்கு சென்றதும் அனைவருக்கும் உணவளிக்க வேண்டும். சொந்தங்கள் களைந்த பின்னேதான் முல்லை வீட்டிற்கு செல்ல முடியும் என யோசித்திருக்க, “அன்பு என்ன யோசனை? கிளம்பலாம். இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா சாப்பிடாம இப்படியே கிளம்பிடுவாங்க” என்றார் மாதவன்.
“சரிப்பா கிளம்பலாம்” என்றவன், சத்யன் சுகந்தியோடு, அனு மற்றும் ஜனனி, சேகர் குழந்தைகளை அனுப்பி வைத்தவன், திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரையும் வீட்டிற்கு விருந்துண்ண வரப்பணித்தான்.
சத்யன் சுகந்தி வீட்டை அடைந்த இரண்டாவது நிமிடம் அன்பரசு வந்திருந்தான். “இரண்டு நிமிஷத்துல வந்துடறேன். இப்படியே நில்லுங்க” என மணமக்களிடம் சொல்லி குமரியின் உற்சாகத்தோடு ஆரத்தி தயார் செய்ய உள்ளே போனார் கல்பனா.
உறவினர்களில் ஒருவர் தனது மொபைலில் “மணமகளே மருமகளே வா வா… உன் வலது காலை எடுத்து வைத்து வா வா… குணமிருக்கும் குலமகளே வா வா…” என்ற பாடலை ஒலிக்க விட, “சுகந்திக்கு சத்யன்தான்னு கடவுள் முடிவு பண்ணியிருக்கார். அதான் அவசரக் கல்யாணம்னாலும் ஒரு குறையுமில்லாம நடந்திருக்கு” என சொந்தங்கள் பாராட்ட, பெரும் சங்கடத்திற்குள்ளானாள் சுகந்தி.
பின்னே விளக்கேற்றி வணங்கியதும், பால் பழம் கொடுக்க, சுகந்திக்கு சங்கடம் வேண்டாமென, அனைத்தையும் உண்ட சத்யன், “எனக்கு நல்ல பசி அத்த, சுகந்திக்கு வேற கொடுங்க” என்று எழுந்தவன் குழந்தைகளோடு விளையாட சென்றிருந்தான்.
அனைவருக்கும் உணவு பரிமாற கல்பனா ஆயத்தமாக, தனியாளாக செய்வது கடினமென அன்பரசனும் சரவணனும் அத்தையோடு இணைய, சத்யனும் இணைந்துகொண்டான் இவர்களோடு.
அரைமணி நேரம் பரிமாறிவனுக்கு முல்லையின் வலி மிகுந்த கண்களே மனதை ஆக்ரமிக்க, என்னவாக இருக்கும் என யோசித்தவன் மனம் உடனே ரங்கசாமி வீட்டிற்கு செல்ல உந்தியது.
ஆனாலும் இங்கு இத்தனை பேர் இருக்கும்போது எப்படி போவதென மேலும் ஒரு மணி நேரத்தை கடத்தினான். அனைவரும் உண்டு முடித்திருந்த போதும் வந்தவர்கள் யாரும் வீட்டிற்கு கிளம்புவதாய் தெரியவில்லை. அனைவரும் நெருங்கிய சொந்தங்கள் வேறு. சுகந்தி சத்யன் திருமணத்தால் மனம் நிறைந்து போயிருந்தார்கள். இனி சுகந்தியை சத்யன் பார்த்துப்பான் என்று பாராட்டிக்கொண்டிருந்தார்கள்.
இது வேலைக்காகாகதென உடை மாற்றுவது போல் தனதறைக்கு சென்றவன் ரங்கசாமிக்கு அழைத்தான். ரங்கசாமி அழைப்பை ஏற்காமல் போகவே மீண்டும் அழைத்தான். இம்முறை ரங்கசாமி அழைப்பை துண்டிக்க, பெரியவர் இப்படி இருக்க மாட்டாரே, தன்னிடம் அன்று கூட நன்றாகத்தான் பேசினார். ஏன் அழைப்பை துண்டிக்கிறார் என யோசித்தான்.
ஒருவேளை உடம்புக்கு முடியாமல் ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்காங்களோ? அப்பாவை நினைச்சித்தான் அழுதிருப்பாளோ? மற்றவர்களால் பிரச்சனை இல்லை என்றாளே என யோசித்திருக்க, மாதவன் கதவை தட்டினார்.
அன்பரசு கதவை திறக்க, “சத்தியனையும் சுகந்தியையும் கல்பனா வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன்னு சொல்லுது. நல்ல நேரம் முடியறதுக்குள்ள அனுப்பி வைக்கனும் வா” என்றார்.
அன்பரசு வெளியே வர, “நீயும் வா அன்பு” என்றான் சத்யன்.
“எனக்கு இங்க ஒரு முக்கியமான வேலையிருக்கு சத்யா. நீ போ, அரை மணி நேரத்துல வந்துடறேன்” என்றான்.
“நம்ம வீட்டு கல்யாணத்தை விட என்ன முக்கியமான வேலை? சுகந்திக்கு நீ இருந்தாதான் பரவால்லயா இருக்கும். அவங்களோட போய்ட்டு வா அன்பு” என்றார் மாதவன்.
சொந்தங்கள் சற்று தள்ளியிருக்க, “அப்பா காம்ப்ளக்ஸ் ஓனர் வீட்டுக்கு போய்ட்டு வந்திடறேன்” என்றான்.
“அங்க போக வேணாம்” என்றார் கட்டளையாக.
“பெரியவர் வீட்டுல எதோ பிரச்சனை போலப்பா” என முல்லையை கோவிலில் சந்தித்ததை சொல்ல, “தனியா இருக்க பொண்ணுகிட்ட எதுக்குடா போய் பேசின? அதுவும் நம்ம சொந்த பந்தம் அத்தனை பேர் இருக்கும்போதே பேசியிருக்க. யாராவது பார்த்திருந்தா அந்த பொண்ணை தவறா பேசமாட்டாங்களா?” என்றார் கோபமாக.
“ப்ச், எதோ பிரச்சனைனு சொல்றேன், சும்மா சுத்தி வளைச்சிட்டிருக்கிங்க” என கடிந்து, “அன்னைக்கு அவங்க வீட்டுக்கு போனப்போ இனி எதாவது பிரச்சனைனா நான் துணையா இருப்பேன்ற நம்பிக்கையோட பெரியவர் பார்த்தார்ப்பா. என்ன ஏதுனு விசாரிச்சுட்டு பத்து நிமிஷத்துல வந்துடறேன்” என விலக முயல, அன்பரசு வரவிற்காக அனைவரும் காத்திருக்க, “சத்யனை அனுப்பி வச்சிட்டு போய்க்கலாம். எல்லார் முன்னாடியும் அவங்க வீட்டுக்கு போறதா சொல்லாத” என்ற கண்டித்து சத்யனிடம் அழைத்து வந்தார் அன்பரசை.
ஜனனி “அப்பா நீங்களும் வாங்க” என முகம் சுருக்க, “அப்பாக்கு வேலை இருக்குடா, நீ பெரியப்பாவோட போ, நான் பின்னாடியே வரேன்” என்றான்.
“வா அன்பு” என்று கல்பனாவும் அழைக்க, “முக்கியமான வேலை இருக்கத்த, இல்லைனா வரமாட்டேனா?” என்றான்.
“டைரக்டர் யார்கிட்டயாவது பேசவேண்டியதா இருக்கும். காரணமில்லாம அன்பு சொல்லமாட்டான். வாம்மா” என சேகர் அதட்ட, பிறகு அனைவரும் கிளம்பினர்.
மாதவனும் அன்பரசும் மட்டும் வீட்டில் இருக்க, “நான் போய்ட்டு வரேன்ப்பா” என்று பைக் சாவியை எடுத்தான்.
“இப்படி உக்காரு அன்பு” என்ற மாதவனின் முகம் வருத்தத்தை காண்பிக்கவே, “அந்த பொண்ணு அழுதுட்டிருந்தது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா. என்ன விசயம்னு சீக்கிரம் சொல்லுங்க” என்றான்.
“இருபது நாளுக்கு முன்ன ரங்கசாமி அவர் மகளை உனக்கு கொடுக்க கேட்டார்” என்றதும், இதனை சுத்தமாய் எதிர்பார்க்காதவன் “என்னப்பா சொல்றிங்க?” என்றான் பேரதிர்வோடு.
“ம் எனக்கும் அதிர்ச்சியாதான் இருந்தது. ஆனாலும் அவரோட சம்பந்தம் வச்சிக்க பிடிச்சிருந்தது. நீ சம்மதிப்பியோன்ற பயம் இருந்ததால மகன்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லியிருந்தேன், நீதான் பொண்ணு யாருனு கூட கேட்காம கல்யாணத்துக்கு மறுத்துட்ட” என முறைத்தார்.
சொதப்பிட்டியே அன்பு என தன்னைத்தானே நொந்து கொண்டான். “நம்பளை நம்பிட்டிருந்து நல்ல வரன்களை வேணாம்னு சொல்லிட்டா அந்த பொண்ணோட வாழ்க்கையில்ல வீணாகும்னு யோசிச்சு, நீ எதனால கல்யாணம் வேணாம்னு நினைக்கிறேன்றதையும் பொறுமையா விளக்கினேன்”
பிறகு அன்று ரங்கசாமியின் நிலையை வருத்தத்தோடு சொல்லி, “பழைய மன வருத்தங்களுக்காக வேணாம்னு சொல்லிட்டேனு நினைச்சிட்டார் போல. அதுக்கப்புறம் காம்ப்ளக்சுக்கு கூட வரதில்ல அன்பு” என்றார் பெருத்த சங்கடத்தோடு.
பத்து நாள் வரைக்கும் நம்ம சம்மதத்தை எதிர் பார்த்திருக்காங்கனா அவளுக்கு என்னை பிடிச்சிருக்கவும்தான்’ என நினைக்க அன்பரசு முகம் பொலிவானது.
“பொண்ணை வேணாம்னு சொல்லிட்டு எப்படி அவங்க வீட்டக்கு போறதுனுதான் வேணாம்னேன். உனக்கு அவர் பொண்ணை கல்யாணம் செய்துக்க சம்மதம்னா அவங்க விசயத்துல தலையிடு. இல்லைனா அவங்க பிரச்சனையை அவங்களே பார்த்துக்கட்டும்” என்றார்.
“அவர் பொண்ணை உனக்கு பிடிச்சிருக்கா?” என மகிழ்ந்தவர் “ஆனாலும் அவர் முகத்துல முழிக்க எனக்கு சங்கடமா இருக்கு அன்பு. இப்போ நமக்கு பொண்ணு கொடுக்க சம்மதிப்பாரோ இல்லையோ” என்றார் வருத்தமாக.
“அதை நான் பார்த்துக்கிறேன், வாங்க போலாம்”
மகன் ரங்கசாமியிடம் சரியாக பேசிடுவான் என்ற நம்பிக்கை இருந்த போதும், “நல்ல விசயமா போறோம், வீட்டுக்கு மருமகள் வந்த பின்ன அது இல்லாம எப்படி? அதோட நாம இரண்டு பேரும் போனா மங்களகரமா இருக்காது அன்பு. நாளைக்கு காலைல மொத்த குடும்பமும் சேர்ந்து போலாம்” என்றார் ஆசையாக.
“முறைப்படி கேக்குறது நாளைக்கு பண்ணிக்கலாம்ப்பா, முல்லை ரொம்ப அழுதிட்டிருந்தா, அதைப் பத்தி விசாரிச்சுட்டு வரலாம்” என பிடிவாதமாய் சொல்ல, பெண் கேட்ட விசயம் தெரியும் முன்பே பெரியவர் மீது அக்கறையாய் இருந்தவன், தற்போது விசாரிக்காமல் விடமாட்டான் என்று “சரிப்பா” என்று மாதவன் சம்மதிக்க, இருவரும் ரங்கசாமி வீட்டிற்கு விரைந்தனர்.
மகள் விசயத்தில் பெரியவர் படும் வேதனையை பார்க்கிறார் அல்லவா? விஸ்வாச காவலாளி ஆதலால் அன்பரசு மீது கோபம் வந்தது. “என்னங்க தம்பி? உங்க பலத்தை என்கிட்ட காட்டி பயமுறுத்த நினைக்கிறிங்களா?” என முறைத்து, “எங்கய்யாவோட பொண்ணைதான் வேணாம்னு சொல்லிட்டிங்களே… அப்புறம் எதுக்காக வந்துருக்கிங்க? கிளம்புங்க” என்றார் மாதவனிடம்.
எதனால் தன் மீது கோபம் எனப்புரிந்ததும் காவலாளி மீது அன்பரசுக்கு மரியாதை கூடிட, “நான் ஊர்ல இல்லாத நேரம் இது நடந்திருக்கு. கேட்டை திறங்கண்ணா, அது விசயமா பேசத்தான் வந்தோம்” என்றான் மரியாதையாக.
“நிஜமாங்களா தம்பி” என வணங்கி கேட்டினை நன்றாக திறந்துவிட்டு, “ஐயாவோட அக்கா குடும்பம் இப்போதான் கிளம்பினாங்க. ரொம்ப பிரச்சனை ஆகிடுச்சுங்க தம்பி, ஐயா ரொம்ப மனசொடைஞ்சிருக்கார்” என்று வீட்டு வாயிலை அடையும் வரை எடுத்துரைத்த காவலாளியை நன்றியோடு பார்த்தபடி உள்ளே சென்றான்.
ஹாலில் யாரும் இல்லை. ஓர் அறையிலிருந்து முல்லையின் பேச்சரவம் கேட்டது. சமையலறையிலிருந்து வெளி வந்த பெண்மணிக்கு அன்று தனது முதலாளிக்காக பேசிய அன்பரசனை பார்த்ததும் எதாவது தீர்வு பிறக்கும் என்ற நம்பிக்கையில் “ஐயா ரொம்ப வேதனையில இருக்கார்” என்றார் வருத்தத்தோடு.
அறையருகே சென்ற பெண்மணி, “ஐயா அன்பு தம்பியும் அவங்க அப்பாவும் வந்துருக்காங்க” என்றார்.
“அக்கா குடும்பம் பிரச்சனை செய்தது தெரிஞ்சு வந்திருப்பாங்க. நீ போய் பிரச்சனை சரியாகிடுச்சு, வந்ததுக்கு நன்றினு சொல்லி அனுப்பிட்டு வா ஜானு” என்றார் ரங்கசாமி.
அன்பரசு பெயரை கேட்டதும் படபடத்தது முல்லை மனம். அதேநேரம் தன்னை மறுத்தவர்கள் என்பது வலிக்கவும் செய்ய, தந்தையோடு அமைதியாக அமர்ந்துகொண்டாள்.
ஜானகி வெளியே வர, “வணக்கம்ங்க” என வணங்கினார் மாதவன்.
பதில் வணக்கம் தெரிவித்த ஜானகிக்கு கணவன் சொன்னது போல சொல்ல முடியாமல் போக, “உக்காருங்க” என்றார்.
தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார் சமைக்கும் பெண்மணி. வாங்கிய மாதவன், “ஐயா இல்லைங்களா? முக்கியமான விசயம் பேச வந்திருக்கோம்” என்றார்.
“இருக்காருங்க. ஆனா பேசுற சூழல்ல அவர் இல்ல” என்றார் வாடிய முகத்தோடு.
“அழுதிட்டிருந்தாளா?” என ஜானகி வேதனையடைய, “உங்களுக்கு தெரியாம அழற அளவுக்கு என்ன பிரச்சனை?” என்றான்.
ரங்கசாமி “அனுப்ப சொன்னா, உங்கம்மா என்ன எதேதோ பேசிட்டிருக்கா?” என்று முல்லையிடம் கடுகடுக்க, இன்னும் சற்று நேரம் அன்பரசு இங்கிருந்தால் பெரிதாய் அழுதிடுவோமோ என பயந்து “நீங்க போய் பேசி அனுப்பிட்டு வாங்கப்பா” என்றாள் முல்லை.