“அன்பு எப்போம்மா வந்தான்?” என கல்பனா டீ யை நீட்ட, “பதினொரு மணிக்கும்மா” என்றபடி டீயை வாங்கியவள் முகம் தூக்கமின்மையைக் காண்பித்தது.
நிறைவாய் பார்த்து, சமையல் வேலையை கவனிக்க சென்றார். வழக்கமாய் கல்பனா பின்னே சென்று சின்ன சின்ன உதவிகளை செய்பவளுக்கு இன்று கணவன் அருகே செல்லத்தான் மனம் நாடியது. ஆனாலும் தவறாக நினைப்பார்களோ என கிச்சன் சென்றாள்.
“முல்லை” என்ற அன்பரசின் குரல் கிச்சனை அடைய, முல்லை சங்கடமாய் கல்பனாவை பார்க்க, சிரித்தவர் “போய் என்னனு கேளு. நைட்தான வந்தான்? எதாவது பேச நினைப்பான் போ” என்றார்.
“இப்போவும் பிஸிதான். என் குண்டுமல்லிக்காக டைரக்டர்கிட்ட பேசி என்னோ சீன்ஸ் சிலதை முன்னாடியே முடிச்சிட்டு வந்திருக்கேன்”
“ஆமாவா? எனக்காகவா? டைரக்டர் சம்மதிச்சிட்டாங்களா?” என பெரும் வியப்போடு ஆர்பரிக்க, “ஹம்” என கன்னத்தில் முத்தமிட்டு, “நீபோய் டீ குடி, நான் வந்திடறேன்” என்று குளியலறை புகுந்தான்.
முல்லை வெளியே வர, “அன்பு வந்திருக்கானு கல்பனா சொன்னுச்சும்மா, எழுந்துட்டானா?” என்றார் மாதவன்.
“எழுந்துட்டாங்க மாமா, குளிக்க போயிருக்காங்க”
“எப்போ வந்தான்? நான் பத்து மணிவரை முழிச்சிட்டுதான் இருந்தேன்?” என்றாள் சுகந்தி.
“பதினொரு மணிக்கு வந்தாங்கக்கா”
“ம்மா சூப் வச்சியா?” என சுகந்தி கிச்சன் செல்ல, “இன்னும் அஞ்சு நிமிஷத்துல ஆகிடும் சுகந்தி, முல்லையும் இன்னும் டீ குடிக்கல, இரண்டு பேரும் குடிங்க” என்று டீயை காண்பித்தார் கல்பனா.
மாதவன் முல்லைக்கு கொடுத்து, சுகந்தியும் பருகிக்கொண்டிருந்தாள். “இன்னைக்கு குலசாமி கோவிலுக்கு போய்ட்டு வந்திடலாமா கல்பனா. கல்யாணம் முடிஞ்சதும் செய்ய வேண்டியது தள்ளி போய்ட்டேயிருக்கு” என்றார் மாதவன்.
“இரண்டு நாள் போகட்டும்ப்பா, பண்ணிக்கலாம். திடீர்னு சொன்னா சேகருக்கும் வர கஷ்டமாகிடும்” என்றபடி வெளியே வந்தான் அன்பரசு.
அன்பரசின் மலர்ந்த முகம் கண்ட சுகந்தி, “பொண்டாட்டியை விட்டுட்டு நல்லா ஜாலியா ஊர் சுத்துறிங்கடா” என்றாள் நொடிப்பாக.
சத்யன் மீதுள்ள கோபம் தன் மீது பாய்கிறது எனப்புரிந்தவன் “நீ ரொம்ப மாறிட்ட அண்ணிம்மா, முன்னலாம் நான் வந்தா தடல்புடலா கறி சமைப்ப, இப்போ எப்படி இருக்கேனு கூட கேட்கல” என்றான் பாவமாக.
“இருக்குப்பா, தினமும் காலைல வீட்டுலயே ப்ராக்டீஸ் பண்ணிட்டிருக்கேன்”
“அப்பாகிட்ட ஈவ்னிங் பேசலாம். ஸ்கூலுக்கு டைமாகுது ஜனனி” என மகளை பள்ளிக்கு தயார் படுத்த, “நான் கூட்டிட்டு போறேன் அண்ணிம்மா” என்றான்.
“அம்மா சூப் தருவாங்க. ஆறும்முன்ன குடி, நானே போய்ட்டு வரேன்” என சுகந்தி சொல்ல, அன்பரசுக்கு தனி சமையல் என்பதால், சுகந்தி இருந்தால் கல்பனாவிற்கு உதவியாக இருக்குமென, “நான் போய் விட்டுட்டு வரேன் சுகந்திமா” என மாதவன் கிளம்பினார்.
மாதவன் சென்றதும் அன்பரசை முறைக்க, “நான் என்ன செய்தேன் அண்ணிம்மா?” என்றான் புரியாமல்.
“இரண்டு நாள் கழிச்சு குலசாமி கோவிலுக்கு போலாம்ன்ற? அவன் வர வேணாமா?” என முறைத்தாள் கோபமாக.
உள்ளுக்குள் மகிழ்ந்தவன் “ஆமா… உன் புருசன் அப்படியே கிலோ கணக்குல திங்கறான். அவன் வர வரைக்கும் காத்திருக்க” என்றான் சிரிப்போடு.
முறைப்போடு சுகந்தி சமையலறைக்குள் சென்றிட, “சரி சரி… உன் புருசன் வந்த பின்னவே செய்துக்கலாம்” என சரண்டர் ஆனான் அன்பரசு.
கிச்சனிலிருந்து எட்டிப்பார்த்து “வேணாம், வேணாம். அவன் வர இன்னும் இரண்டு மாசத்துக்கு மேல ஆகும், அதுவரை வெய்ட் பண்ண வேண்டாம்” என உண்மை உணர்ந்து தானும் இறங்கி வந்தாள்.
“ஒரு மாசத்துக்கு இங்கதான இருப்பேனு சொன்னிங்க? மாமா வந்த பின்னவே செய்துக்கலாமில்லைங்க” என முல்லை கேட்க,
“ஹம் இப்படி வந்து உக்காரு, உன்கிட்ட முக்கியமான பஞ்சாயத்து இருக்கு” என எதிரிலிருந்த சோபாவை காட்ட, முல்லை அமர்ந்ததும், “என் அப்பா பெரியமாமா, சத்யன் சின்னமாமா, சரவணன் கொழுந்தனார், அத்தை உனக்கு அம்மா, அண்ணிம்மா அக்கா, அப்போ என்னை மட்டும் ஏன் முறைவச்சு கூப்பிடல?” என்றான்.
முல்லை முகம் சிரிப்பை காட்ட, “ஹேய்… எதோ பேர் வச்சிருக்கதான? சொல்லு சொல்லு” என்றான் ஆவலாக.
“ரூம்க்கு வாங்க சொல்றேன்” என இவள் கிசுகிசுக்க, “அதெல்லாம் முடியாது, இங்கையே சொல்லு” என அன்புக்கான சூப்போடு வெளியே வந்தாள் சுகந்தி.
முல்லை அவஸ்த்தையாய் பார்க்க, “சரி போ சொல்ல வேணாம், உன் புருசனுக்கு மட்டும் சொல்லு” என சுகந்தி கோவிக்க, “சொல்றேன்க்கா” என அவசரமாய் சொன்னவள், “அது பட்டபேரெல்லாம் இல்ல. அன்னைக்கு அவரை பார்த்ததும் இவர் நியாபகம்தான் வந்தது” என்றாள்.
“யாரை பார்த்ததும்?” என அன்பரசும் புரியாமல் கேட்க, “ஐயனாரை பார்த்ததும்” என ரூமிற்குள் புக முயற்சித்தவளை இழுத்து அமர வைத்தவன், “எந்த ஐயனார்?” என்றான்.
சுகந்தி சத்தமாய் சிரிக்க, “பார்டா, எனக்கு புரியாதது உனக்கு புரிஞ்சிடுச்சா அண்ணிம்மா?” என வியந்து மீண்டும் மனைவியை பார்க்க, “நம்ம குலசாமி” என்று உள்ளே ஓடினாள் முல்லை.
பேத்தியை பள்ளியில் விட்டு உள்ளே வந்த மாவதன், “என்ன முல்லை குலசாமினு சொல்லிட்டு ரூம்க்குள்ள போய்டுச்சு? ஐயனாரை பார்த்தா பயமா இருக்காமா?” என தீவிரமாய் வினவினார் மாதவன்.
“அதில்ல மாமா, ஐயனாரையே அவ பின்ன சுத்தவிட உள்ள ஓடிட்டா” என சிரித்தாள் சுகந்தி.
சுகந்தி சிரிப்பில் தான் நினைத்தது போல் இல்லை என இலகுவான மாவதன், “என்னம்மா சொல்ற?” என்றார் புரியாமல். சுகந்தி நடந்ததை விளக்க, தானும் சிரித்து “புருசனை குலசாமியா நினைக்குறது நல்ல விசயம்தானே சுகந்திம்மா” என்றார் பெருமையோடு.
சிரித்த முகத்தோடு சுகந்தி கிச்சன் சென்றிட, “நீ வந்த பின்னதான் அன்பு சுகந்தி சிரிக்குது, இரண்டு வாரமா சோர்ந்தே இருந்துச்சு” என பெருமூச்சிழுத்து, “சத்யனை இங்கையே எதாவது வேலை பார்க்க சொல்லு அன்பு, நீ சொன்னா கேட்பான்” என்றார் கோரிக்கையாக.
தந்தையை தனியே அழைத்துச்சென்றவன், “நாளைக்கு நைட் சத்யன் வரான்ப்பா, இனி நிரந்தரமா இங்கதான் இருக்கப்போறான், அதனாலதான் இரண்டு நாள் கழிச்சு கோவிலுக்கு போலாம்னு சொன்னேன்” என்றான் மகிழ்வோடு.
சந்தோசத்தில் மாதவனுக்கு கண்ணீர் வந்திட, “அண்ணிம்மாக்கு தெரியாதுப்பா, காட்டி கொடுத்துடாதிங்க” என அன்பரசு சிரிக்க, “எல்லாம் உன்னாலதான் அன்பு. நீ நினைக்கலனா அவங்க கல்யாணம் வாய்ப்பேயில்ல” என்றார் உள்ளார்ந்து.
“ஒரு மாசத்துக்கு இங்கதான் இருக்கப்போறேன், இரண்டு நாளைக்கு என் பொண்டாட்டியோட ஸ்பெண்ட் பண்ணிட்டுதான் மத்த வேலை” என்றான் சிரிப்போடு.
“ஒரு மாசத்துக்கு இருப்பியா” என தானும் சந்தோசித்து இணைப்பை துண்டித்தான் சேகர்.
பின்னே அனைவரும் காலை உணவு உண்டுமுடித்ததும் மாதவன் இன்ஸ்டியூட்டிற்கு கிளம்பிட, அன்பரசு தனதறைக்கு வந்தான்.
கதவை தாழிடவும் முல்லை முகத்தை தாழ்த்த, அருகே வந்து அணைத்தான். முல்லை முகம் சிவந்து சிலிர்த்திருக்க, விடுவித்தவன், “அத்தை மாமாக்கு போன் பண்ணி நான் வந்ததை சொல்லலாம்” என மொபைலை எடுத்தான்.
“அதெல்லாம் சொல்லிட்டேன், சரி நீ மாப்பிள்ளையை பாரு, நான் சாயங்காலம் வீட்டுக்கு வரேனு அப்பா சொன்னார்” என்றாள்.
எவ்விசயமாக இருந்தாலும் தனக்காகவே பார்க்கும் மனைவியை ஆழப்பார்த்தவன், “எனக்கு நீ வீட்டோட இருக்குறது கஷ்டமா இருக்கு முல்லை, எதாவது பிடிச்சதை செய்யேன்” என்றான் தன்மையாக.
“செய்யறேன், ஆனா இன்னும் கொஞ்ச வருசம் கழிச்சு”
“ப்ச் இப்போ நான் இல்லாத நேரம் வெறுமையா உணர்வேனுதான சொல்றேன்” என்றான் சிறு கோபத்தோடு.
“நான் வெறுமையா உணரவேயில்லங்க. புதுசா கல்யாணமாகிப் போற பொண்ணுங்களுக்கு இருக்கும் பிரச்சனை போல எனக்கு இங்க ஏதும் இல்ல, வெங்காயம் உரிச்சு கொடுத்தா கூட பெருசா பாராட்டுறாங்க கல்பனாம்மா.
சுகந்திக்கா, வீட்டு வேலைலாம் எனக்கு ஒரு விசயமேயில்ல, நான் பார்த்துக்கிறேனு சொல்லி மாப் போட கூட விடுறதில்ல. மாமா எப்போ பார்த்தாலும் சாப்பிட்டியாம்மா? அன்பு போன் செய்தானானு விசாரிக்குறாங்க. சேகர் அண்ணாவும் அப்படித்தான்.
கல்யாணத்துக்கு முன்ன அப்பாம்மாவை தவிர வேற யாரும் இப்படி என்னோட இருந்ததில்ல. எனக்கு இப்படி அன்பெல்லாம் புதுசுங்க, அதை அனுபவிக்க விடுங்க”
அன்பரசு அமைதியாய் பார்த்திருக்க, கணவன் சமாதானம் ஆகவில்லை எனப்புரிந்து “நான் சிக்ஸ்த் படிக்கும்போது ஸ்கூல்ல ஒரு பையன் என்னோட நோட்டை கிழிச்சு போட்டுட்டான். வீட்டுக்கு வந்து அழுதேன். அடுத்த நாள் அப்பா ஸ்கூலுக்கு வந்துட்டார்.
அந்த பையனை செமையா திட்டிவிட்டுட்டார். அடுத்த நாள் அந்த பையனோட அப்பா ஸ்கூலுக்கு வந்து அப்பாவோட சண்டை. அப்பாவும் செமையா திட்டிவிட்டுட்டார்.
அப்போலாம் நிறைய கோபம் வரும் அப்பாக்கு. எனக்கு சின்னதா எதாவதுனா கூட பெருசா ரியாக்ட் பண்ணுவார். எதிர்ல இருக்குறது யாரா இருந்தாலும் யோசிக்கமாட்டார். அதனாலயே அப்பாகிட்ட சொல்லாம எதுவானாலும் அம்மாகிட்ட சொல்ல ஆரம்பிச்சேன்.
நிதீஷ் என்னை தப்பா பார்க்க ஆரம்பிச்சதுலயிருந்து ரொம்ப பயப்பட ஆரம்பிச்சுட்டார். என்மேலான பயத்துலயே ப்ரஸர் அதிகமாகிடுச்சு. அப்பப்போ மயக்கம் வரவும் என்னை நிராதரவா விட்டுட்டு போய்டுவோமோனு பயந்து உடம்பை கெடுத்துக்கிட்டார்.
யார் என்ன சமாதானம் சென்னாலும் சமாதானம் ஆகுறதேயில்ல. நைட்ல சரியா தூங்குறதில்ல. ஒரு நாற்பது வயசுல தத்தெடுத்திருந்தா உடம்புலையும் மனசுலையும் தெம்பிருக்கும்போதே மகளை கரைசேர்த்திருக்கலாம்னு அம்மாகிட்ட அடிக்கடி ஃபீல் பண்ணுவார்.
அப்படி தத்தெடுத்திருந்தா நமக்கு முல்லை கிடைச்சிருக்கமாட்டானு அம்மா சமாதானம் செய்வாங்க. அப்பாவை பார்த்துக்கனும்றதுக்காகவே மனசு வலிக்க வலிக்க நிதீஷை கல்யாணம் செய்ய முடிவெடுத்தேன்.