தான் கொண்டு வந்த உடைமைகளை க்ளோஸட்டில் (closet ) அடுக்கிக் கொண்டிருந்த பவித்ராவின் மொபைல் அழைத்தது. யாரென்று அவளுக்குத் தெரியும்… அவள் தனியே ரிங்க் டோன் எல்லாம் செட் செய்யவில்லை என்றாலும் அழைப்பில் யாரென்று அவள் அறிவாளே….
இரண்டு முறை அடித்து ஓய்ந்தது…. எடுத்து பார்த்ததில் அழைத்தது அவர் தான்.சற்று வலியுடன் மொபைலை சைலன்ட் மோடில் போட்டாள்.
அடுத்த நிமிடமே சௌம்யாவின் மொபைல் அழைத்து ரீங்காரமிட்டது. அழைப்பில் ரேணுகா.
ஹலோ சௌமி … நல்லா இருக்கியாம்மா?
Advertisement
சொல்லுங்கத்தை நான் நல்லா இருக்கேன் நீங்க நல்லா இருக்கீங்களா? மாமா எப்படி இருக்கார்?
நான் நல்லா இருக்கேம்மா. மாமாக்கு என்ன ராஜா மாதிரி இருக்காரு. குழந்தைங்க எப்படி இருக்காங்க?
நல்லா இருக்காங்கத்தை இப்போ தான் குளிப்பாட்டி தூங்க வைத்திருக்கோம்.
Advertisement
பவித்ரா பொண்ணு நல்ல விதமா வந்து சேர்ந்துட்டாளா?
Advertisement
ம்ம்ம்ம் சேஃபா வந்து சேர்ந்துட்டா. உங்க பிள்ளை ஏர்போர்ட்டில் போய் பிக்கப் பண்ணிட்டு வந்தாரு.
பவித்ரா வந்து சேர்ந்த விஷயத்தை வீட்டுக்கு சொல்லலை போல… இப்போ அவ அம்மா தமயந்தி கால் பண்ணி பார்த்திருக்காங்க அவ கால் பிக் பண்ணலை போல… உடனே எனக்கு பண்ணிட்டாங்க.
ஒன்னும் பிரச்சனை இல்லத்தை பவித்ராவை நான் பார்த்துக்கிறேன்.
Advertisement
பாவம் சௌமி அந்த பொண்ணு மிகுந்த வேதனையில் வந்திருக்கா நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே… ரேணுகா வருத்தம் கொண்டார்.
நீங்க கவலை படாதீங்கத்தை பவித்ரா நல்லா இருக்கா… நாங்க பார்த்துக்கிறோம்.
அவ அம்மா உன் மொபைல் நம்பர் கேட்டாங்க கொடுத்திருக்கேன். உனக்கு கால் பண்ணினா பேசு!
கண்டிப்பா பேசறேன்… அவங்களை கவலை படவேண்டான்னு சொல்லுங்கத்தை.
சரிம்மா அங்கே குளிர் அதிகமா இருக்குன்னு அகி சொன்னான். குழந்தைங்களை கவனமா பாருங்க!
சரிங்கத்தை…!
பவித்ரா குழந்தைகளை நல்லா கவனிச்சுக்குவா… நீ கவலை படாதேம்மா.
சரிங்கத்தை என்றவளுக்கு அவ்வளவு தெம்பு வந்திருந்தது.
“——————“
மாமியாரிடம் பேசி முடித்த அடுத்த நிமிடம் புது எண்ணில் இருந்து வாட்சப் மூலம் அழைப்பு.
ஹலோ!
ம்ம்மா நான் தமயந்தி, பவித்ராவோட அம்மா.
சொல்லுங்கம்மா!
பவித்ரா நல்லபடியா வந்து சேர்ந்துட்டாளா?
ம்ம்ம்ம்… வந்து சேர்ந்துட்டா. இப்போ தான் சாப்பிட்டு ரூமுக்கு போனா… ஏதாவது வேலையா இருப்பா அது தான் நீங்க கால் பண்ணினது அவளுக்கு தெரிந்திருக்காது.
இல்லம்மா அவ நான் போன் பண்ணினது தெரிந்தாலும் எடுக்க மாட்டா…. அவர் குரல் கமறியது.
அம்மா எல்லாம் போக போக சரியாகிடும்… நீங்க கவலை படாதீங்க! ஆறுதல் படுத்தினாள் சௌமியா.
பணத்துக்காக அவளை அனுப்பல…நீங்க இருக்க தெம்பில் தான் நான் அமெரிக்கா அனுப்பவே ஒத்துக்கிட்டேன்.
அவளுக்கு இடமாற்றம் ஒரு மன மாற்றமா இருக்கும் நீங்க கவலை படாதீங்கம்மா! ஆறுதல் படுத்தினாள் சௌமியா.
“——————-“
இனியன் சிணுங்கிய அடுத்த நிமிடம் நல்ல உறக்கத்தில் இருந்த இதயாவும் சிணுங்க தொடங்கினாள்.
இரட்டை குழந்தை வளர்ப்பில் இது தான் பெரிய சிக்கல். ஒரு குழந்தை விழித்து எழுந்தால் அலாரம் அடித்தது போல் அடுத்த குழந்தையும் அழ ஆரம்பிக்கும்.
அக்கா நான் ஒன்னு சொல்லவா…? ஒரே நேரத்தில் ரெண்டு குழந்தைக்கும் பீட் பண்ண நினைக்காதீங்க. ஒரு நேரம் ஒரு குழந்தைக்கு முழுசா கொடுங்க… அடுத்த நேரம் இன்னொரு குழந்தைக்கு கொடுங்க!
அட…இந்த ஐடியா நல்லா இருக்கே… உடனடியாய் ஒப்புக் கொண்டாள் சௌமியா.
அக்கா இப்போ இதயாக்கு வயிறு முட்ட கொடுங்க நான் இனியனுக்கு பால் பவுடர் கலக்கி கொடுக்கிறேன்.
“———————“
சௌமி…சௌமி உரக்க குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் ஹரி.
குழந்தைகளுடன் ஹாலில் இருந்தாள் பவித்ரா.
ஹலோ நீக்கு செவிட்டித்தனம் தேனைக்கி? ச்சே பல்லை கடித்தவன் தெலுங்கை விடுத்து இங்கே கரடி மாதிரி கத்திட்டு இருக்கேன் நீ கல்லு மாதிரி உட்கார்ந்திருக்க… பவித்ராவிடம் கேட்டான்.
அவள் வாயை திறந்தால் தானே…
ஏய் மாயவரம் பொண்ணு சௌம்யா எக்கட? பதில் சொல்ல மாட்டியா… எரிச்சலுடன் கேட்டான்.
சாரி எனக்கு கரடி பாஷை தெரியாது… மீண்டும் குழந்தைகளிடம் ஐக்கியம் ஆனாள்.
அஹங்காரம் அன்டே எமிதி நீக்கு கௌரவம் தெளியதா?
ஹலோ தமிழ்… தமிழ்… தமிழில் பேசுங்க!
நாக்கு தமில்லாம் ராது. டெலுகு மத்ரமே மாட்டலாடதனு.
கோபத்திலும் தாபத்திலும் தாய் மொழி இயல்பாய் வந்து நின்றுவிடும் அல்லவா… ஹரிசரணுக்கும் அவ்வாறே..
நாக்கோ மூக்கோ… எனக்கு தெரியாது. சௌம்யா அக்கா தலைவலின்னு படுத்திருக்காங்க.
அதை முன்னமே சொல்றதுக்கு எந்தா?
இவர்களின் சத்தத்தில் குழந்தைகள் உன்னிப்பாய் கை கால் உதைத்து குஷியாய் விளையாட சௌம்யா கொட்டாவி விட்டபடி வந்து நின்றவள்.
உன் அடிமை வர லேட் நைட் ஆகும். அவனுக்கு கிளையண்ட் மீட்டிங் இருக்கு. அவன் வரும்போது சாப்பிட்டு வந்துடுவான் அதை சொல்ல தான் கூப்பிட்டேன். உனக்கு கால் பண்ணி பார்த்தானாம்.
சரி…. நீ சாப்பிடறியா? சப்பாத்தி மஷ்ரூம் கிரேவி இருக்கு.