எப்படியோமனைவியை சம்மதிக்க வைத்து சாகேத்அவளுடன் ஆவலுடன் தேன்நிலவுக்கு கிளம்பினான்.ஏனோ அவனிடம் இருந்த கொஞ்சநஞ்ச உற்சாகமும் அவன் மனைவியிடம் இல்லை.ஏதோ கட்டாயப் படுத்தி அவளை அழைத்து செல்வதைப் போல உணர்ந்தான் சாகேத். அவளது முகமும் பாவனைகளும்கூட அதைத்தானே நிரூபித்தன.
அவளது எதிர்பார்ப்புகள் கொஞ்சமும் இதுவரை பூர்த்தியாகவில்லை எனும் பொழுது அவளால் வேறு எப்படி இருக்க முடியும்? இன்று வட்டி,நாளை அசல் என்பதுபோல் அல்லவா அவளது திருமண உறவு சென்று கொண்டிருக்கிறது. மனையிடம் கணவன் இணக்கமாக இல்லை என்பதை ஆரம்ப காலகட்டத்தில் பெற்றோரிடமோ,புகுந்த வீட்டினரிடமோ நிச்சயமாக எந்த பெண்ணாலும் வாய் விட்டு சொல்ல இயலாது.
இந்த விஷயத்தில்திருமகளும் சரி,ஜான்வியும் சரி ஏறத்தாழ ஒரே மாதிரி பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அங்கேயும் கூட திருமகளுக்கு கணவனின் காதல் அல்ல,உதாசீனம்தானே கிடைக்கப் பெறுகிறது.ஜான்வி தேன் நிலவில் மருந்துக்கு கூட சிரிக்கவில்லை. அது சாகேத்தை நிச்சயம் ஆதி மனது வரை பாதித்தது.
அதன் விளைவு, அங்கே இருந்த ஒருவாரமும் ,ஒரு முறைகூட அவனால் படுக்கையில் மனைவியின் எதிர்பார்ப்பதை பூர்த்தி செய்ய முடியாது சோர்ந்து போனான். ஜான்வியின் நிலை வார்த்தைகளால் சொல்ல முடியாது.அவளது ஏக்கமும்,ஏமாற்றமும் கூடிப்போனது. ஏற்கனவே,குழப்பத்தில் இருந்தவளுக்குஇப்போது சாகேத் மீதும்,கல்யாண வாழ்க்கை மீதுமான பிடித்தமும்நம்பிக்கையும் ஆட்டம் காண ஆரம்பித்தது.
சாகேத் அவனுக்கும் கூட குழப்பம்தான்.ஏன் இப்படி? எங்கே,எதனால் இவ்வாறெல்லாம் நிகழ்கிறது என்று அவனுக்கு புரியவில்லை.மருத்துவ பரிசோதனையில் அவன் முழு உடற்தகுதியுடன் இருப்பதாகத் தானே மருத்துவரும் சொன்னார்!
அவனது எண்ணஓட்டங்களை ஒன்று தனது மனைவியுடன் சொல்லியிருந்திருக்கலாம்.இல்லாவிட்டால், மனதை கொஞ்சம் அமைதியாக விட்டு பிறகு முயற்சி செய்திருக்கலாம். எதற்க்காக..தன்னை ஆண் என்று நிரூபிக்க கலவி என்ன போர்களமா ….வீரத்தைக் காட்ட ?
என்னவோ,ஆரம்பத்திலிருந்தே அவர்களது உறவு இடியாப்ப சிக்கல்தான். ஜான்வி அறவே அவனுடன் பேசுவதை விட்டாள் . அவன் மீதான மரியாதை குறைந்ததும் நிஜம்.இதை படிப்பவர்களுக்கு வெல்வேறு விதமான கருத்துக்கள் தோன்றலாம்.ஆனால் ,நிதர்சனத்தில் திருமண வாழ்க்கை வெற்றி பெற கட்டிலும் காமமும் கூட பெரிய பங்கு வகிக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.அதனால்தானே,பெரியவர்கள் காலாகாலத்தில் திருமணம் செய்து வைப்பதும், சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்வதும்!
அனுபவத் பட்டவர்களைதூர தள்ளிவைக்கிறோம். வீட்டின் பெரியவர்கள் முன்பெல்லாம் ஏதாவது விசேஷம் உண்டா..என்று அடிக்கடி கேட்பார்கள்.இப்போது யாராவது அப்படி கேட்டால்,நாகரீகம் அற்றவர்கள்.நம் அந்தரங்கத்தில் தலையிடுகிறார்கள் என்று எதையாவது சொல்லி தூர நிறுத்துகிறோம்.
இதோ,இங்கே ஜான்வி கூட தந்து பெற்றோரையும் சரி, மாமியார் மாமனாரையும் சரி,வீட்டுக்கு வர வேண்டாம் என்று நேராகவே சொல்லிவிட்டாள் .அவர்கள் யாராவது வீட்டிற்கு வந்து போக இருந்தால் ஒருவேளை இருவரது நிலையையும் கண்டுபிடித்து ஏதாவது தீர்வு கொடுத்து இருந்திருப்பார்களோ என்று எனக்குத் தோன்றாமல் இல்லை.
எப்படியோ கடுமையான மனோ நிலையில் இருவரும் தேன்நிலவு சென்று பெயருக்கு ஒப்பேத்திவிட்டு வீடு வந்து சேர்ந்தார்கள். மனைவியின்கோவம் இன்னமும் கணவனை பலமாகத் தாக்கியது. அதற்குப்பிறகு, இருவருக்கும் இடையே பலத்த பெருஞ்சுவர் எழுப்ப பட்டது போல்உறவுக்குள் விரிசல்.
ஜான்வி மனதால் மிகவும் சோர்ந்து போனாள் .எத்தனை ஆர்வம், காதல், எதிர்பார்ப்பு..எல்லாம் பொய்த்துப்போனதேஅவளை சுற்றி துக்கம் ஆக்கிரமிப்பு செய்தது. நிறையமுறை சாகேத் ஜான்வியை அணுக முயற்சி செய்து தோற்றான். இப்படியே அவர்களது திருமண உறவின் முதல் வருஷம் முடிந்தது.
சாகேத் மனைவிக்குபிளாட்டினத்தில் வைரக்கற்கள் பதித்த ப்ரெஸ்லேட் வாங்கி பரிசளித்தான்.ஆனால் அதை மனப்பூர்வமாக ஏற்கும் நிலையில் அவள் இல்லை.வெறும் தலையசைப்புடன் கடந்து சென்றவளை துக்கம் போங்க பார்த்தான். ஆனால் அவளது உணர்வுகள் அவனுக்கும் புரிந்தது.
யோகா வகுப்புகள் சென்று மனதை அமைதியாக வைத்துக்கொள்ள இருவருமே பயிற்ச்சி செய்ய ஆரம்பித்து கொஞ்சம் பலனை அளித்தது. பழைய நாட்கள் போல நட்பு துளிர்த்தது. ஏனோ மனைவியை பார்த்து அவனுக்கு சுரக்க வேண்டிய ஹார்மோன்கள் இன்னமும் சுரக்க ஆரம்பிக்கவில்லை.
அரைகுறையான ஒரு அந்தரங்கம் அவர்களுக்குள் அடிக்கடி நடந்தேறியது. ஜான்விக்கு அதுவே பெரிய விஷயம் ஆயிற்று. அவளது ஏக்கங்கள் கூடிப்போனது. சாகேத் பொறுத்தவரை இது பெரிய்ய முன்னேற்றம். கடுமையாக மன உளைச்சலில் இருந்தான்.தான் திருமண வாழ்க்கைக்கு தகுதி அற்றவனோ என்று. மீண்டும் மருத்துவரை சென்று அவன் சந்திக்கவே இல்லை.
அந்தரங்கத்தில் தான் பெரும் தோல்வியை ஈடுகட்ட,அலுவலகத்தில் அதிகம் கவனம் செலுத்தினான்.விளைவு, நேரடியாக இரண்டு படிகள் மேலே இருந்த நிலைக்கு ப்ரமோஷன். வீட்டில் அவன் அம்மாவிடம் தந்து சந்தோஷத்தை சாகேத் பகிர்ந்து கொள்ளும் பொழுது, ராஜம் கேட்டது இதுதான்“கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகப் போகுது. அப்பா என்கிற ப்ரமோஷன் எப்போன்னு ஏதாவது முடிவு பண்ணி வச்சிருக்கீங்களா ..இல்லையா“என்று தான். மகனிடம் கேட்பதற்க்கே இரண்டு வருஷங்கள் தேவைப்பட்டது.ஜான்வி மாமியாரிடம் போனில் கூட பேச மாட்டாள்.
அவளது பெற்றோரிடமும் அவள் அப்படித்தான் நடந்து கொண்டாள் . அவர்களாலும் எதுவும் பேச முடியாத நிலை. அம்மா கேட்ட கேள்விக்கு சாகேத்திடம் பதில் இல்லை. “நா ஆண்மையில்லாதவானா,குழந்தை பெத்துக்குற தகுதி எனக்கு கிடையாதா“என்று தனிமையில் நொந்தான் .
அவனது அதே நிலையில்தான் ஜான்வியும் இருக்கிறாள். என்னிடம் எந்த குறையும் கிடையாதே..நான் எதற்க்காக,யாருக்காக அமைதியாய் இருக்கவேண்டும்? பொறுத்துப் போகவேண்டும்? என்று யோசிக்க ஆரம்பித்தாள். தனது ஸ்ட்ரெஸ் குறைக்கும் மருந்தாக அலுவலக வேலையை செய்யப்போக அவளுக்கும் அலுவலகத்தில் ப்ரமோஷன் கிடைத்தது. இப்போது,விநீதனுக்கு அடுத்த நிலையில் ஜான்வி.
இருவரும் அலுவலக நேரங்களில் பெரும்பாலும் ஒன்றாகவே வேலை செய்யும் சூழ்நிலை. இருவரது கேபினும்
அருகருகே தான் எனும் பொழுது கண்ணாடி தடுப்பின் வழியாக அநேகமாக அவளது முகம் பார்ப்பதை விநீதன் வழக்கமாக கொண்டிருந்தான். அவனுக்கு அவளது களையற்ற முகம் சந்தேகத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது.
இவள் தனது காதலை தேடி தானே இந்தப்பெண் என்னை விட்டுப் போனாள் ?இப்போது என்னவாகிவிட்டது இவளுக்கு..திருமண உறவில் இவள் சந்தோஷமான நிலையில் இருப்பதாகத்தெரியவில்லையே என்றெல்லாம் அவனது மனம் கேள்விகளை தொடுத்துக்கொண்டிருக்க,அவள் மீதான அவனது பார்வையின் அழுத்தம் கூடி,கழுகுப பார்வையானது.
அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.வேலை நேரத்தை விடவும் அதிகமாகநேரத்தை அவள் தனது பணிக்காக கொடுத்துவிட்டாள் . சிலசமயங்களில் விடிகாலை வரையும் கூட வீட்டிலிருந்து லொகின் செய்து வேலை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டாள் .
அலுவலகத்தில் இது பற்றித் தெரிந்தவர்கள் ,இவளது பின்னால் பேசத் தொடங்கிவிட்டார்கள் சிலர். இவளது மீது அக்கறை கொண்டவர்களோ ,”இவ்வளவு நேரம் எல்லாம் வேலை செய்யாதே ஜானு.உடம்பு சீக்கிரம் வீக் ஆகிடும்“என்று சொல்லிச் சென்றார்கள். இவளது பாஸ் விநீதன் எனும் போது இவற்றை கவனிக்காமலா இருப்பான்?
இவளது வேலை செய்யும் திறம் அதிகமாக இருப்பதை கண்டு சந்தோசம் கொள்ள அவனால் முடியவில்லை. எப்படி சொன்னாலும்,அவனது மனது அவள் மீது காதல் கொண்டது என்பதை மறுப்பதற்கு இல்லை. காதலனாக அவனது மனம் வெகுவாக காயப்பட்டது.
தன்னை சுற்றி இருக்கும் எல்லோருமே ஏதோ ஒருவகையில் தன்னை கவனிக்கிறார்கள் என்று கூட அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. மொத்தத்தில் பழைய ஜான்வி இல்லை இவள். வீட்டிலும் ஒருவித அலட்சியம் வந்துவிட்டிருந்தது. தனது உணர்வுகளை அடக்க வழி தெரியாது தத்தளித்தாள் ஜானவி .
சாகேத் ,ஜான்வியைஉறவுக்கென நெருங்கும்பொழுது,அவளது வார்த்தைகள் சவுக்கடியாய் சுழன்றது.“இப்போ நெருங்குவே, என்னோட உணர்ச்சிகள் உச்சம் அடையும் பொழுது நகர்ந்துடுவே..கடைசில நாதான் ..“என்று வார்த்தைகளை பாதி விழுங்கி அவள் சொல்லும் பொழுதே அவன் நகர்ந்துவிடுவான். தேன்நிலவில் நடந்தது போல் எதுவும் ஆகாது என்று தைரியமாய் சொல்ல அவனுக்கும் தைரியம் இல்லை.அவனுக்கே சந்தேகம் எனும் விஷயத்தில் அவளுக்கு எப்படி வார்த்தைகள் சொல்லமுடியும்.
மெல்ல அவள் அருகே செல்வதை கூட தவிர்க்க ஆரம்பித்தான். அவன் அருகே நெருங்குவதை அனுமதிப்பது அவளுக்கு எவ்வளவு கடினமாக இருந்ததோ அவன் நகர்ந்து செல்லும் பொழுது அவ்வளவு வலி. அதையும் அனுபவித்தது பெண். சாகேத்துக்கும் புரிகிறது. அவள் தனது அறையில் கைகளை மூடிக்கொண்டு அழுவதையும் , எதையாவது வெறித்து பார்த்துக்கொண்டு வெகுநேரம் அமர்ந்திருப்பதையும் அவனும் பார்க்கிறான் தானே.
ஏனோ,அடுத்த கட்டத்தை பற்றி இருவருக்கும் யோசிக்க தோன்றவில்லை. கூடுவதில் பிரச்சனை என்றால் விலகி விடலாம் தானே.எதைப்பற்றியும்யோசிக்காமல் வருஷன்களை கடத்திக்கொண்டும் மனா உளைச்சலில் அவதிப்பட்டுக்கொண்டும் இருப்பதால் யாருக்கு என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது?
விநீதன் அவன் மனது பலவிதமான யோசனைகளுடன் ஜான்வியை உற்று நோக்கிக்கொண்டு இருக்கிறது. அதன் விளைவு?
அந்த வார இறுதியில் விநீதனும் ஜான்வியும் டிஸ்கோதே சென்றார்கள். விநீதனுடன் நேரம்செலவழிப்பது அவளுக்குள் உற்சாகத்தை கொடுத்தது.விநீதனும் அதை கவனித்தான். இருவருக்குமான உறவு முறிவுக்கு பிறகு அவனுக்கு வேறு எந்த பெண்ணிடமும் நாட்டம் செல்லவில்லை. அவனது மனமும் உடலும் அவள்ஒருத்தியிடம் மட்டும் தான் லயித்தது,லயிக்கும்.வெளியே சொல்லமுடியாவிடினும் இதுதான் நிஜம்.
அவளது திருமண உறவுக்கு கட்டுப்பட்டு தான் விநீதன் விலகி நிற்கிறான். எவ்வளவு நாட்கள் இன்னும் தான் காதலிக்கும் பெண் கஷ்டப்படுவதை அவனால் பார்த்துக்கொண்டு கைகட்டி நிற்கமுடியுமென்பது நிச்சயம் இல்லை. விநீதனுக்கு ஜான்வி துன்பப்படுகிறாள் என்று தெரியும். ஆனால் ,அவளது அந்தரங்கம் பற்றியெல்லாம் தெரியாது. அதை ஜான்வி யாரிடமும் சொல்ல இதுவரை தயாராக இல்லை.
சாகேத் மனதிலோ,இந்த திருமணம் இன்னும் எவ்வளவு தூரம் தாங்கும் என்று சந்தேகம் வந்துவிட்டிருந்தது. போகும் போக்கை பார்த்தால் வருஷங்கள் பற்றியெல்லாம் அவனால் யோசிக்க கூட இயலாது. அவனுக்கு ஜான்வியை பற்றிய சிந்தனைகளுடன் வருத்தங்களும் உண்டு.
பெண்பாவம் பொல்லாதது. அவளை திருமணம் ஆகி இவ்வளவு வருஷங்கள் காக்க வைப்பது தவறு என்று குற்ற உணர்ச்சியுடன் யோசிக்கவும் தொடங்கிவிட்டான். அவனால் நிச்சயம் மனைவியிடம் தனது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது என்ற அழுத்தம் அவன் மனதை கிழித்தது.