“வீட்டுக்கு கிளம்பலாம் ம்மா!” திருமணம் முடிந்த கையோடு சூர்யா கூற, பிரேமா பதில் கூறும் முன்,
“இன்னும் நேரம் இருக்கு சூர்யா! இங்கேருந்து பொண்ணு வீட்டுக்கு போறது தான் வழக்கம்.. அப்புறம் நல்ல நேரம் பார்த்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம்” அவ்வளவு நேரம் பேசாமல் நின்ற குணசீலன் கூற,
“முறைப்படி எல்லாம் முறையா நடந்திருந்தா நீங்க இதை சொல்லலாம்” என்ற சூர்யாவை,
“சூர்யா! என்ன பேச்சு இது?” என்று பால நாதன் கேட்க,
“நிஜம் தானே பெரியப்பா! அண்ணா கோச்சிட்டு போயிருக்கான்.. நான் அவனைப் பார்க்கணும்.. நான் வீட்டுக்கு போறேன்.. வர்றவங்க வரலாம்” என்று கூறி அஞ்சலியைப் பார்த்துவிட்டு நடக்க,
அவனை புரியாத வண்ணம் பார்த்தவளும் யாரையும் எதிர்பார்க்காமல் அவனுடன் கிளம்பினாள்.
“நாட் பேட்!” திரும்பாமலே கண்களை உயர்த்தி சொல்லிக் கொண்ட சூர்யா, மேடையில் இருந்து இறங்கி நடக்க, மனமேடைக்கு கீழே அமர்ந்திருந்த அனைவரும் அவர்களைப் பார்த்தபடி இருந்தர்.
பிரேமா காஞ்சனாவிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கிளம்ப, மல்லிகா யாரிடமும் கூறாமல் நிவியுடன் கிளம்பினார்.
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல சார்!” பால நாதன் கூற,
“அஞ்சலியைப் பார்த்துக்கோங்க!” என்ற குணசீலன்,
“போலாம்!” என்று மனைவியைப் பார்த்து கூற, அங்கே இருக்க வேண்டிய அனைவரும் தாலி கட்டிய அடுத்த நிமிடம் கிளம்பும்படி ஆகி இருந்தது.
“என்ன டி நடக்குது? எல்லாரும் கிளம்பிட்டாங்க.. இப்ப இதை என்ன பண்றது?” ஏன பரிசைக் காட்டிய பிரியாவை ஜனனி முறைக்க,
“என்ன நடந்துச்சுன்னு தெரியாம நானே குழம்பிப் போய் இருக்கேன்.. இப்ப இதான் முக்கியமா? ஒருவேளை டாக்டரை அந்த பொண்ணு வேணாம்னு சொல்லி இருக்குமோ? ஆனா ஏன்?” ஜனனி தீவிரமாய் சிந்தித்து கேட்க,
“ஏன் டாக்டர் அந்த பொண்ணை வேணாம்னு சொல்லி இருக்கலாம் இல்ல?” பிரியா கேட்க,
“எனக்கென்னவோ அப்படி தெரியல.. டாக்டர் தான் பாவம்னு தோணுது” என்றாள் ஜனனி.
“அட போ டி! நாங்க தான் பாவம்.. அந்த பையனுக்கு உன்னை பேசலாம்னு இப்ப தான் முழுசா விசாரிச்சுட்டு வந்தாரு உன் மாமா.. அதுக்குள்ள இப்படி நடந்துட்டு..” பிரியா கவலை கொள்ள,
“யாரு?சூர்யாக்கா? இது எப்போ நடந்துச்சு? நல்லவேளை!எஸ்கேப்.. ஆனா என்ன நடந்திருக்கும்? தெரியாம போக விருப்பம் இல்லயே!” என்றவள், சுற்றி பேசுபவர்களை கவனித்தாள்.
“பார்த்தியா நான் சொன்னது தான் சரி! பொண்ணு தான் டாக்டரை வேணாம்னு சொல்லி இருக்கு.. ஆனா என்னவா இருக்கும்?” ஜனனி யோசிக்க,
“நீயே பல வருஷம் கழிச்சு கோவில்ல தான் உன் பிரண்ட்டை பார்த்த.. வேற என்ன தெரியும்னு இந்த யோசனை? விடு! அதான் ஒருத்தர் இல்லனா இன்னொருத்தர் கல்யாணம் முடிஞ்சிருச்சே!” என்ற பிரியா,
வீட்டிற்கு வந்த சூர்யா வேகமாய் ஜெய் அறை நோக்கி செல்ல, வாசலில் நின்ற அஞ்சலி திரும்பிப் பார்த்தாள்.
“ப்ச்! இவன் வேற!” என்றவர்,
“உள்ள வா!” என்று அஞ்சலியிடம் சொல்லிவிட்டு செல்ல, மல்லிகா, நிவி எதுவும் பேசாமல் சென்றனர்.
உள்ளே நுழைந்தவளை யாரும் கண்டு கொள்ளாமல் ஜெய் அறைக்கு செல்ல, ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
“வெளில போ நீ? இல்ல மனுஷனா இருக்க மாட்டேன்” ஜெய் கத்துவது அஞ்சலிக்கும் கீழே கேட்டது.
“ண்ணா சொல்றதை கேளுண்ணா!” சூர்யா கூற,
“பேசாத டா.. யோசிச்சுக்கோ நான் உனக்கு சப்போர்ட் பண்றேன்.. உனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு எத்தனை முறை என்கிட்ட சொன்ன? அப்புறம் என்ன டேஷ்க்கு நீ இப்படி பண்ணின? தயவு செஞ்சு இப்ப நீ என்கிட்ட எதுவும் பேசாத.. நான் பேசுற மூடுல இல்ல” என்ற ஜெய் திரும்பிக் கொள்ள,
“சத்தியமா நானும் இப்படி எல்லாம் நடக்கும்னு நினச்சு பாக்கல ண்ணா! ஆனா வேற என்ன பண்ணணு எனக்கும் தோணல” என்றவனை ஜெய் எதுவோ சொல்ல வர,
“ஒரு நிமிஷம்! நான் பேசிக்குறேன்… இப்ப இது நடக்கலைனா பெரியப்பா நிச்சயமா உனக்கு இந்த கல்யாணத்தை நடத்தி இருப்பார்” சூர்யா கூற,
“வாட்? என்ன உலர்ற?” என்றான் ஜெய்.
“ஆமா!” என்றவன் இரு அன்னைகளையும் பார்த்து விட்டு,
“விஷயம் சீரியஸ்.. நான் அப்புறமா சொல்றேன்” என ஜெய் காதில் கூறியவன்,
“ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் ண்ணா! உனக்கு அஞ்சலி வேண்டாம்னு தோணுச்சு…” சூர்யா கூற,
“அதுக்கு? நீ செஞ்சது பேரு தியாகமா? அறைஞ்சுடுவேன் டா” என்றவனை,
“அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்ல நான்.. ஆனா எனக்குமே காண்டு இருக்கு.. திருத்துறது திருந்தறது எல்லாம் மேட்டர் இல்ல… என்னவோ நாம எல்லாம் ஒன்னுமே இல்லைன்னு நினைக்குறவங்களை நசுக்கணும்.. அது தான் மேட்டர்.. இவ மட்டும் இல்ல….” என்றவன்,
“என்னால சில விஷயங்களை சொல்ல முடியல” என்றவன் இப்போதும் அன்னைகளைப் பார்த்தான்.
ஜெய் அதில் அமைதியாய் யோசிக்க, சூர்யா கெஞ்சலாய் பார்க்க,
“ஜெய்! கல்யாணம் முடிஞ்ச அப்புறம் இந்த வாக்குவாதம் தேவை இல்லாதது. எல்லாத்தையும் ஏத்துக்கனும். சூர்யா பண்ணினது தப்பா சரியான்னு இப்ப பேசி என்ன பிரயோஜனம்? அஞ்சலி இந்த வீட்டு மருமகளா வரணும்னு எழுதி இருக்கு.. அதை யாரால மாத்த முடியும்?” என்று மல்லிகா கூற,
“அந்த பொண்ணு தனியா கீழே இருக்கு.. நாங்க போறோம்.. நீ பார்த்துக்கோ டா” என்று சூர்யாவிடம் கூறிவிட்டு அவர்கள் கீழே செல்ல,
“அந்தாளு என்ன பண்ணினார்?” என்றான் ஜெய் சூர்யாவிடம்.
“எனக்கு மார்னிங் தான் தெரியும் ண்ணா! ஆனா மேரேஜ் நடக்க போற நேரம் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு தான் விட்டேன்.. அது இப்படி வந்து முடிஞ்சிருக்கு” என்றான் சூர்யா.
“முதல்ல என்னனு சொல்லு!” ஜெய் பொறுமையை இழுத்து வைத்து கேட்க,
“சொல்றேன் ண்ணா! ஆனா இப்ப இல்ல.. இன்னும் கொஞ்சம் டீடெயிலா தெரிஞ்சிகிட்டு சொல்றேன்.. ப்ளீஸ் அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு.. எல்லாம் நான் பார்த்துக்குறேன்” என்றான் சூர்யா.
“அப்ப அந்த ஆளால தான் எல்லாம்.. ஏதோ பண்ணி இருக்காரு.. அதான் சொல்ல மாட்டுற இல்ல?” என்று ஜெய் கேட்க, சூர்யாவிற்கு பதில் கூற முடியவில்லை.
பால நாதன் குணசீலனிடம் பணம் வாங்கி இருப்பதே இன்று காலையில் தான் தெரிந்து கொண்டான் சூர்யா.
எவ்வளவு, எதற்காக, ஏன் என பதில் இல்லா கேள்விகள் இருக்க, அஞ்சலியை ஜெய்க்கு திருமணம் செய்து வைப்பதற்கு எதுவும் காரணம் இருக்குமோ என்பது சூர்யாவின் சந்தேகமாய் தான் இருந்தது காலையில்.
குணசீலனின் லாயர் மூலம் வேறு எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை.. எவ்வளவு என்ற கணக்கும் தெரியவில்லை. அழுத்தமாய் கேட்டு அது சந்தேகத்தில் முடிந்தால்? திருமணம் முடிந்ததும் அவரிடம் பேச வேண்டும் என சூர்யா நினைத்திருக்க, புள்ளியை தொடர் புள்ளியாக்கி தன்னையும் அதில் இழுத்து விட்டிருந்தாள் அஞ்சலி.
“சரியா தெரியாமல் நான் எதுவும் சொல்லிட முடியாது.. ஆனா நானும் இதை எக்ஸ்பேக்ட் பண்ணல.. பெரியப்பா…. அந்த பிரச்சனையை முதல்ல என்னனு தெரிஞ்சிட்டு பேசிக்கலாம்னு தான் வேணாம்னு சொல்றேன்.. ஆனா இப்ப அஞ்சலி பேசினது நான் சம்மதம் சொன்னது எல்லாமே அந்த ஸ்பாட்ல நடந்தது தான்.. மத்தபடி எதுவும் இல்ல.. அஞ்சலி இங்க இருக்குறது தான் நல்லதும்”
“என்ன நல்லது? யாருக்கு நல்லது? முதல்ல என்ன பேசுற நீ? நீ ஏன் டா? என்னாலயோனு நினச்சு நினச்சு நான் கில்ட்டியா பீல் ஆகணுமா?” ஜெய் கேட்க,
“நீ ஏன் பீல் பண்ணிக்கிட்டு அதுக்கெல்லாம் இங்க ஆள் இருக்கு.. நீ ஜாலியா இரு ண்ணா.. எவ்ளோ பெரிய கண்டத்துல இருந்து தப்பிச்சு வந்திருக்க..” என்று சூர்யா சிரிக்க,
“ப்ச்! போ டா!” என்றான் ஜெய்.
“நான் மாட்டிகிட்டேன்றியா? அது தான் இல்ல.. அவ எல்லாம் ஒரு ஆளு.. அது இஷ்டத்துக்கு அது வேண்டாம் இது வேணும்னு மாத்திகிட்டு.. அவ அப்பனை சொல்லணும்.. எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து வச்சிருக்கு. இரு மந்திரிச்சி விடறேன்..” என்று கூறவும் ஜெய் உணர்ச்சிகள் அற்றுப் பார்த்திருந்தான்.
“சத்தியமா என்னோட முடிவுக்கு நீங்க யாரும் காரணம் இல்லை.. வேணா இப்படி வச்சுக்குவோமா?” என்று குறுஞ்சிரிப்புடன் சூர்யா கேட்க, ஜெய் பதில் கூறாமல் இருக்கவும்,
“நான் அஞ்சலியை ரொம்ப லவ் பண்ணினேன்.. மிஸ் பண்ண மனசு வர்ல.. அதான் சான்ஸ யூஸ் பண்ணிக்கிட்டேன்” என்று பாவனையோடு அவன் கூற, கோபமாய் முறைத்த ஜெய்,
“ச்சீ! போ டா!” என்று கூறியவன் கண்ணுக்கு தெரியவில்லை என்றாலும் சிரித்தது நிஜம்.
“அது! அப்படியே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு.. நான் கீழே போறேன்..” என்றவன், இரண்டு அடிக்கள் வைத்துவிட்டு, பின் திரும்பி,
“நிஜமா உனக்கு என் மேல கோபம் எதுவும் இல்லைல?” என்று கேட்க,
“உன் லைஃப் நல்லா இருக்கனும்.. அந்த பயம் இருக்கு” என்றான் மனதில் இருந்ததை மறையாமல்.
“அவ்வளவு தானே? அதெல்லாம் டாப் டக்கறா இருக்கும் பாரு..” என்று கூறி கண்ணடித்து சென்றான் சூர்யா.
இன்னும் சோபாவில் இருந்து எழுந்து கொள்ளாமல் அமர்ந்திருந்தவளை கண்டு கொள்ளாமல் சூர்யா சமையலறைக்குள் செல்ல, அதை பார்த்தவளும் பெரிதாய் கண்டு கொள்ளாத பாவனை தான்.
“பெரியப்பா எங்கே பெரியம்மா?” சூர்யா கேட்க,
“மண்டபத்துல இருப்பாங்களா இருக்கும் டா.. எல்லாரும் வந்துட்டோம்.. அங்கே எல்லாம் செட்டில் பண்ணணுமே!” பிரேமா கூற,
“அந்த பொண்ணு தனியா இருக்கு டா அப்பவே! இங்கே எழுந்தும் வரல.. கூப்பிடவும் முதல் நாளே கிட்சேனுக்கு கூப்பிடுறோம்னு நினைச்சுக்குமோனு இருக்கு.. நீ போய் பக்கத்துல இரேன்!” என்றார் மல்லிகா.
“ப்ச்! நீங்க வேற லெவல் மல்லி ம்மா.. அண்ணாக்கு என் மேல கோபம் இல்லையாம்.. சொல்லிட்டான்.. நீங்க எப்படி?” என்று மல்லிகாவிடம் கேட்க,
“நீயும் எனக்கு மகன் தானே டா.. நீ நல்லா இருந்தா போதும்” என்றவரைப் பார்த்து வாஞ்சையாய் சிரித்தவன்,