பால நாதன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. என்னதான் தான் செய்ததில் தவறு என்ன என்று மகன்கள் முன்பு பேசிவிட்டாலும் அவர்களை நேர் கொண்டு பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.
குணசீலன் தன்னிடம் ஒன்று கூறிவிட்டு இப்படி தனக்கு துரோகமாய் நினைப்பார் என்றும் நினைக்கவில்லை.
வீட்டை எழுதி கொடுப்பதெல்லாம் கனவிலும் நினைக்காத காரியம்.. அது சூர்யாவிற்கே செல்லும் என்றாலும் குணசீலனின் இந்த அணுகுமுறையில் கோபம் வந்தது என்னவோ உண்மை.
பணத்தை அடைத்துவிட்டால் தானும் தன் குடும்பமும் என நிம்மதியாய் இருக்கலாம் என தோன்ற, என்ன செய்வது என யோசித்தபடி அறையில் இருக்க, கதவை தட்டும் சத்தத்தில் திரும்பிப் பார்க்க, அங்கே ஜெய்யும் சூர்யாவும்.
“பெரியப்பா!” என்று அழைத்தவனை வா என்றபடி பால நாதன் தலையசைக்க இருவருமாய் உள்ளே நுழைந்தனர்.
கையில் பேப்பருடன் சூர்யா நிற்க அவனருகில் நின்ற ஜெய் இன்னுமே தந்தை முகத்தை பார்த்திருக்கவில்லை.
“நேத்து நீ பேசின எதுவும் ரெகார்ட் பண்ணி உன் மாமனார் உன் பெரியப்பாக்கு அனுப்பியிருக்க போறார்.. முதல்லயே கேட்டுக்கோ!” ஜெய் கூற, சூர்யாவும் அது தானே வழக்கம் என்பது போல பார்த்தான்.
‘இப்பொழுது இவனுமா?’ என்று தான் தோன்றியது பாலாவிற்கு.
“இல்ல! நான் அவர்கிட்ட பேசி மூணு நாள் ஆச்சு” என்றார்.
“சரி பெரியப்பா! இந்த பேப்பர் பாருங்க.. இதுல போட்ருக்க அமௌன்ட் எல்லாம் சரியான்னு பாருங்க” என்று சூர்யா நீட்ட,
“ஒரு நிமிஷம் இரு சூர்யா!” என்ற ஜெய்,
“அவர்கிட்ட எப்படியும் கடன் வாங்கினதுக்கு சைன் பண்ணின டாக்குமெண்ட் இல்ல பேப்பர் ஏதாவது இருக்குமே.. அதை முதல்ல கேளு” என்றான்.
“எதுக்கு?” என்று ஒற்றை கேள்வியில் அவர் அப்படியே நிற்க,
“ஹான்! உங்களை விட்டுட்டு ஊரை விட்டு ஓடுறதா இல்ல கூட்டிட்டு ஓடுறதான்னு ஒரு முடிவுக்கு வரணும்ல?” என்றதும் ஜெய் தான்.
“டேய் அண்ணா!” சூர்யா அழைக்க,
“பின்ன என்ன டா? சொத்தையா கேட்டேன்.. கடன் வாங்கின பேப்பரை கேட்டா தூக்கிட்டு ஓடிருவேன்ற மாதிரி முழிக்குறாரு” என்று அவருக்கு கேட்கும் படியே கூற,
“பெரியப்பா ப்ளீஸ்! விஷயம் சீரியஸ்.. அந்த குணசீலன் சரி இல்ல.. நீங்க எதுக்காக அவ்வளவு பணம் வாங்கினீங்க? எவ்வளவு டால்லி பண்ணி பார்த்தாலும் அசல்ல இருந்து இன்ட்ரெஸ்ட்னு அமௌன்ட் அதிகமா இருக்கு.. இவ்வளவு வர வாய்ப்பே இல்லை.. என்னனு வாங்குனீங்க?” சூர்யா கேட்க,
“ப்ச்! ண்ணா நீ போ.. நான் பேசிக்குறேன்” சூர்யா கூற,
“முடியாது” என அவனும் மல்லுக்கு நின்றான்.
“அவனை விடுங்க.. நீங்க அதை காட்டுங்க பெரியப்பா… அப்ப தான் பேச முடியும்.. கோர்ட்டுக்கு போனா நிச்சயம் நமக்கு கொஞ்சம் டைம் கிடைக்கும்.. அதுக்கு முன்னாடி எல்லாம் கிளீயர் பண்ணிக்கலாம் இல்ல?” என்று தெளிவாய் சூர்யா கூற, உணர்ந்த பின் வேகமாய் எடுத்து வந்து சூர்யா கைகளில் கொடுத்தார் பால நாதன்.
சூர்யா, ஜெய் இருவரும் அதைப் பிரித்து படிக்க, “பிராடு! இவனை எல்லாம்..” என்று சூர்யா பல்லை கடிக்க, என்னவென்று கேட்கவே யோசித்தார் பாலா.
“அந்த ஆளை ஏன் டா சொல்ற? பேப்பரை சரியா படிக்காம கையெழுத்து போட்டு உன் முன்னாடி நிக்குறவரை கேளு!” என்றான் ஜெய்.
“என்ன ஆச்சு சூர்யா?” ஜெய் கூறியதை கேட்டு என்னவோ என பால நாதன் விசாரிக்க,
“பெரியப்பா! இன்ட்ரெஸ்ட் எல்லாம் சரி தான்.. ஆனா அது ஏன் மாசம் மாசம் கூடி இருக்கு? அதுவும் டபிள் டபிளா? நீங்க அதை பார்க்கவே இல்லையா?” என்று சூர்யா கேட்க,
“குடு!” என்று வாங்கினார்.முதலில் சரியாய் வட்டி தனியாய் என கணக்கு இருக்க, இறுதியில் குழப்பி இருந்தது சூர்யாவின் கணக்கில் தான் புரியவே செய்தது.
“பிசினஸ் லாஸ் ஆனது கூட இதனால தான்.. என்ன வாங்குறோம்.. எவ்வளவு வாங்குறோம்.. எதுக்குமே கணக்கு வேணும்.. இவர் கட்டின பணத்துக்கு கணக்கு எங்கேனு கேளு டா?” என்று ஜெய் கேட்க,
“அது அவர்கிட்ட தான் இருக்கு” என்றதும் சூர்யாவுமே அதிர்ச்சி ஆனான்.
“என்ன சொல்றிங்க பெரியப்பா? நீங்க தனியா நோட் பண்ணலையா?” என்று கேட்க,
“இல்ல! குணா தனியா ஒரு கார்டு வச்சிருப்பார்.. அதுல அவரே தான் எல்லாம் ஃபில் பண்ணுவார்” என்றவருக்கும் இப்பொழுது தன் தவறு புரிய,
“அந்த நியாயஸ்தனை நம்பி இந்த நியாயஸ்தன் இருந்திருக்கார்.. சரி தான்” என்றான் ஜெய்.
“இல்ல! நான் வாங்கும் போது சரியா தான் இருந்துச்சு.. ஆனா எப்படி?” என்று யோசித்தவருக்கு எப்படி யோசித்தும் புரியவே இல்லை.
பணத்தை கொடுக்கும் பொழுது கொடுத்த டாக்குமெண்ட் வேறு.. அதன் பின்னர் அதை மாற்றி கொடுத்து வைத்தது என அனைத்தும் குணசீலன் மட்டுமே அதில் இருக்க, புரியாமல் தயங்கி நின்றார்.
பாடு பட்டால் அடைத்து விடலாம் சரி. எப்பாடு பட்டும் அடைக்க முடியும் என்று தோன்றவில்லை பாலாவிற்கு.. சூர்யா காட்டிய விதமும் அதை தான் சொல்லியது.
“சூர்யா! இதை வச்சு ஈசியா கம்பளைண்ட் ரைஸ் பண்ணலாம் இல்ல?” ஜெய் கேட்க,
“வீடே கட்டலாம்.. அந்த ஆளை ஓட ஓட விரட்டல…” என்று சூர்யாவும் ஜெய்யும் பேசிக் கொள்ள,
“கம்பளைண்ட் பண்ணி தான் ஆகணுமா?” என்றார் பால நாதன்.
“அந்த ஆளை விடு! இந்த ஆளை வச்சுட்டு நீ ஒரு ஆணியை கூட… ம்ம்ஹும்ம்” என்று ஜெய் கூற,
“பெரியப்பா! இல்லீகல் பிசினஸ்.. இதுல ப்ரோப்பரா பேப்பர்ஸ் கூட இல்ல.. இருக்குறதும் இந்த மாதிரி ஃபோர்ஜரி!… சும்மா விட முடியாது.. நீங்க சைன் பண்ணினா இன்னும் நல்லாருக்கும்” என்ற சூர்யா, அவர் கையெழுத்து இல்லை என்றாலும் இதை விடுவதாய் இல்லை என்று தான் நின்றான்.
“நம்ம மேலையும் தப்பு இருக்கே.. அது பிரச்சனை இல்லையா?” என்று கேட்ட பால நாதனை சூர்யாவே குறுகுறுவென பார்க்க,
“இல்ல! நானுமே அவர் கேட்ட இடத்துல எல்லாம் கையெழுத்து போட்டு தானே பணம் வாங்கினேன்.. அதை கேட்டேன்” என்றார்.
“அதை நான் பார்த்துக்குறேன் பெரியப்பா.. ப்ளீஸ்! கையெழுத்து போடுங்க” என்று கூற, எப்படியோ சுமை குறைந்தால் சரி என்பதை போல கையெழுத்திட்டார்.
“சரி ண்ணா! நான் ஆபீஸ் போய்ட்டு சீனியர்கிட்ட சொல்லிட்டு நானே நேர்ல போய் பேசிட்டு வர்றேன்..” என்று ஜெய்யிடம் சூர்யா கூற,
“சீனியர்னா…” என்று ஜெய் கேட்க,
“இல்ல! இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்குறது.. நான் முதல்ல தனியா எடுக்குற கேஸ் நம்மளோடதாவே இருக்கட்டும்.. நானே பார்த்துக்குறேன்” என்ற சூர்யா,
“சீக்கிரமே ஒரு ரெஜிஸ்டரேஷன் ஆபீஸ் ஓபன் பண்ணலாம்னு நினைக்குறேன்.. பார்க்கலாம்..” என்றும் கூற,
“ஆல் தி பெஸ்ட் டா!” என்று சூர்யா தோளணைத்து விடுத்தான் ஜெய்.
சூர்யா கொடுத்த தைரியம் கொஞ்சம் பலத்தையும் கொடுத்திருந்தது ஜெய்க்கு.
பதினோரு மணி அளவில் ஜனனியை சந்திக்க சென்ற ஜெய் அதே காபி ஷாப்பில் காத்திருக்க, அரை மணி நேரம் தாமதமாய் வந்து சேர்ந்தாள் ஜனனி.
“சாரி சாரி! சாரி டாக்டர்.. கிளம்புற நேரம் ஜிஎம்கிட்ட மாட்டிக்கிட்டேன்.. ரொம்ப நேரமா வெயிட் பண்றிங்களா? எதாவது சாப்பிட்டீங்களா?” என்று பேசிக் கொண்டே சென்றவள், எதாவது சாப்பிட்டு இருக்கிறானா என மேஜையை பார்க்க, அது சுத்தமாய் இருந்தது.
“சுத்தம்! வந்து எதுவுமே வாங்கலையா? அதான் ஹோட்டல் மேனேஜர் குறுகுறுனு பாக்குறாரு போல.. நானா இருந்தா இந்நேரத்துக்கு அஞ்சு டீ, ரெண்டு பப்ஸ், நாலு சண்ட்விச்னு உள்ள தள்ளி இருப்பேன்” என்று கூறிவிட்டு ஜெய் முகம் பார்க்க, அவனோ சிரித்தபடி அவளை பார்த்திருந்தான்.
“ப்ச்! மறுபடியும் சாரி! அப்செட்ல இருந்திங்க இல்ல?” என்று அசடு வழிய அவள் கேட்க, இரண்டு கைகளின் முட்டியினையும் டேபிளில் வைத்து கோர்த்து அவளைப் பார்த்திருந்தவன் வேறு புறம் பார்த்து சிரிக்க,
“ஓஹ்! அப்செட் போயாச்சா?” என்றாள் அவன் சிரிப்பதை பார்த்து.
“என்ன வேணும்?” அவளே கேட்க, அவன் எதுவும் பேசாமல் தோள்களை குலுக்கினான்.
“எனக்கு மொத்தமே அரை மணி நேரம் தான் டைம் குடுத்திருக்காங்க.. நீங்க வேற படுத்துறீங்களே!” என்றவள்,
“சரி நானே எதாவது வாங்கிட்டு வர்றேன்” என்று அவனைத் தாண்டி சென்றவள், பின் அவனுக்கு வெகு அருகே பின்னால் நின்று,
“இந்த ஸ்மைல் கூட க்யூட்டா தான் இருக்கு!” என்று சொல்லிவிட்டு ஓடிவிட, அருகில் கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டவன், அவள் கூறியதில் இன்னும் மலர்ந்து சிரித்து திரும்பிப் பார்த்தான். கண்டு கொள்ளவில்லை அவள்.
காபி, ஸ்னாக்ஸ் என அவள் அள்ளிக் கொண்டு வர,
“காலையில சாப்பிடாம வந்தியா என்ன?” என்றான் அவள் கையைப் பார்த்து.
“ஆச்சு! ஆச்சு! இனி சாப்பிட ஒரு மணி ஆகுமே! பசிக்கும்ல?” என்றவள் காபியை அவனுக்கு தள்ளி வைத்து,
“காபி வித் ஜானு! நல்லாருக்குல்ல?” என்று கேட்டு வைக்கவும் தவறவில்லை.
“அங்கிருந்த அரை மணி நேரமும் அவள் பேசவும் இவன் கேட்கவுமாய் இருக்க,
“சரி டைம் ஆயிடுச்சு.. நான் கிளம்பவா?” என்றாள் அங்கிருந்த அனைத்தையும் காலி செய்து.
“ஹே! உண்மையை சொல்லு.. நீ சாப்பிட தானே வந்த?” ஒரு பக்கமாய் சாய்ந்து ஜெய் புன்னகைத்து கேட்க,
“இல்லையேனு எல்லாம் சொல்ல மாட்டேன்.. அதுவும் ஒன்னு… ஆனா இன்னும் ரெண்டு விஷயம் இருக்கு” என்றாள்.
“என்ன?” அவன் கேட்க,
“நேத்து நைட் பேசின ஜெயப் பிரகாஷ் எனக்கு பிடிக்கல.. அதான் பார்த்து பேசி சரி பண்ண வந்தேன்.. பட் இப்ப நீங்க தெளிவா இருக்குற மாதிரி இருக்கு.. அதான் கிளம்புறேன்னு சொன்னேன்” என்றாள்.
“அப்ப என்னனு கேட்க மாட்ட?”
“அப்படி இல்ல.. ஏன் நீங்க மறந்ததை தோண்டி எடுப்பானேன்னு நினச்சேன்..” என்றாள்..
“ஹ்ம்! இன்னொன்னு?” ஜெய் கேட்க,
“அது பர்சனல்!” என்றாள் ஹஸ்கி வாய்ஸில்.
“அதென்ன பர்சனல்.. சொல்லு பரவால்ல” அவன் விளையாட,
“கண்டிப்பா சொல்லுவேன்.. ஆனா இப்படி எல்லாம் சொல்ல முடியாது.. நானா தான் சொல்லுவேன்” என்றது அவனுக்கு புரியாமல் போக,
“சரி நேரமாச்சு நான் கிளம்புறேன்.. இனி அப்செட் ஆகுற மாதிரி இருந்தா முன்னாடியே சொல்லிடுங்க.. லீவ் போட்டுடுறேன்” என்று கூற, அவன் சிரித்தபடியே தான் இருந்தான்.
“பை!” என்று கையசைத்து அவள் எழுந்து கொள்ள, தான் சொல்ல வந்ததை கூறவே முடியவில்லை ஜெய்யால்.
யோசித்தபடி இவன் மொபைலை எடுத்து அதில் கண்களை விடவும்,பின்னிருந்து
“இன்னொரு முக்கியமான விஷயம்… உங்களை சைட்டடிக்க தான் வந்தேன்” என்று விட்டு மீண்டும் ஓடிவிட, உதட்டில் உறைந்த புன்னகையுடன் எழுந்து கொண்டான் ஜெய்.