இவ்வாறு வெவ்வேறு மனநிலையில் இருக்கும் மனிதர்கள் இடையே அவர்கள் திருமணமும் நடந்து முடிய இருவரின் தோழமைகளால் கேலி கிண்டல்களுக்கும் பஞ்சமில்லை. எல்லாம் ஆரியன் – சக்திக்கு பொதுவான நட்புகள் தான் என்பதால் இருவரையும் தரமாய் வைத்து செய்ய பதிலுக்கு இவர்களும் கவுண்டர் கொடுக்க என அங்கே நிலவிய இறுக்கம் தளர்ந்து கலகலப்பானது.
“யப்பாடி.. ஸ்ரீ.. நீ இவ்வளவு பேசுவியா..?? உன்னை ரொம்ப சைலன்ட்னு தப்பு கணக்கு போட்டுட்டோமோ.. இல்லை எங்கள்ட்ட மட்டும் தான் அமைதியா..”
என யோகி சீண்டலாய் கேட்க அதனை சீரியஸாய் எடுத்துக்கொண்டு,
“ஹே அப்படிலாம் இல்லை யோகி..”
என அவள் விளக்கம் கொடுக்க முனைய குறுக்கே புகுந்த ஸ்வேதா,
“டேய்.. சும்மா இருடா..” என அவனை அதட்டி,
“அவன் சும்மா விளையாட்டுக்கு சொன்னான் ஸ்ரீ.. உன்னை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஹாப்பி மெரீட் லைப்.. இந்த மாதிரியே எப்பவும் இரு..”
என அவளை அணைத்து உளமார கூற யோகி, லெனின், கௌதமும் அதையே தங்கள் புன்னகையில் உணர்த்தினர்.
“திடீர்னு நான் கல்யாணம்னு சொன்னபோது நீ எப்படி எடுத்துப்பீங்கன்னு யோசிச்சேன்.. ஆனால் நீங்க எனக்காக இவ்வளவு தூரம் வந்தது அவ்வளவு சந்தோஷ இருக்கு..”
தன் தங்கை வாழ போகும் வீடு.. தன்னுடைய இந்த திடீர் திருமணத்தால் தங்கள் குடும்பத்தை பற்றி அவர்கள் தவறாக எதுவும் எண்ணிவிட கூடாதே என்ற எண்ணத்தில் வீட்டில் பேசிய பின் அவன் முதலில் தொடர்ப்பு கொண்டது கார்த்திகேயனை தான்..
சக்தியின் குடும்ப விஷயத்தை தன் பெற்றோர் முதற்கொண்டு யாரிடமும் அவன் பகிரவில்லை என்பதால் இன்னது என குறிப்பிடாமல் விஷயத்தை மட்டும் கூறியிருக்க கார்த்திக்கும் புரிந்துக்கொண்டான். அதனாலே அவன் வீட்டில் வந்து திருவும் ரம்யாவும் பேசும்போது ஏற்கெனவே யோசித்து வைத்திருந்ததை பேசி தன் பெற்றோரை எளிதில் சமாதானப்படுத்த முடிந்தது.
“நீங்க தேங்க்ஸ் சொல்ல எல்லாம் அவசியமே இல்லை ஆரியன்.. அதையெல்லாம் நினைக்காதீங்க..”
என்றவன்,
“ஆனால் உங்க தங்கச்சியை மட்டும் கொஞ்சம் கவனிங்க..”
என்று அர்த்தமாய் சொல்ல,
“ஏன் அப்படி சொல்றீங்க கார்த்திக்..”
என ஆரியன் பார்க்கவும்,
“ஏன்னு தெரியல.. அவ மூட் ஆஃப்ல இருக்கிறா மாதிரி தோணுது.. நான் கேட்டேன் சொல்லல.. நீங்க பேசினா மே பீ சொல்லலாம்..”
என்று சொல்லிவிட்டு செல்ல ‘உன் தங்கச்சி என் பக்கமே திரும்பல..’ என சக்தி கூறியதும் நினைவில் வர யோசனையில் ஆழ்ந்தான்.
ஆனால் கோவிலில் இருந்த வரையிலும் மேக்னாவை பிடிக்க முடியவில்லை.
வீட்டிற்கு வந்ததும் மேக்னாவே ஆரத்தி எடுக்க அவள் முகம் பாவனையை கண்டு,
என ஆரியன் நக்கலாய் சொல்ல பதிலன்றி பல்லை கடித்து முறைக்கவும்,
“என்ன மேன் லுக்கு.. லம்ப் அமௌன்ட் எடுத்து வைச்சேன்.. இப்படி வேண்டா வெறுப்பா எல்லாம் சுத்தினால் தட்ல எதுவும் போட மாட்டேன்.. பார்த்துக்க..”
என மிரட்டலாய் சொல்ல,
“எனக்கும் ஒன்னும் தேவையில்லை.. போடா டேய்..”
உதட்டை சுளித்து அலட்சியமாய் சொல்லியவள் அவனை ஒரு இடியோடு கடந்து வெளியே செல்ல,
“யம்மோவ்..!!” என முனங்கியவனை கண்டு,
“ஏன் அவளை சும்மா சீண்டுற ஆர்யா..”
என சக்தி கேட்க,
“அப்படி தான்.. நீ கண்டுக்காத..” என்றான் கண்சிமிட்டலோடு..
மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து பிற சடங்குகள் என பிந்தைய பொழுது மின்னலாய் கடந்தது. மாலையில் விஷாகனும் யாமினியும் கிளம்ப ஆயத்தமாக அவர்கள் விடைபெறும் போது ஏனோ சக்திக்கு தொண்டை அடைத்தது. அதிலும்,
“என்னால தான் நீ இப்படி ஒரு முடிவு எடுத்தேன்னு தெரியும்.. அவசரப் பட்டுடோமோன்னு நீ நினைக்கிற நிலை என்னைக்கும் வரவே கூடாது என்றது மட்டும் தான் இப்ப என்னோட ஒரே வேண்டுதல்..”
என்று ஊடுருவிய பார்வையோடு யாமினி சொன்னதும்,
கிளம்பும் முன் வாழ்க்கையில்
விஷாகன் முதன்முதலாய் தன் மகளை
தோளோடு அணைத்து,
“உன்னை கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னிச்சுரும்மா..”
என்று உருகி சொன்னதும் அவளை அழ வைக்க போகும் அவர்களையே பார்த்தப்படி நின்றிருந்தாள். அவளை கவனித்து இருந்த ரம்யாவுக்கும் லேசாய் மனம் இறங்க,
“மேக்னா.. உன் அண்ணியை கூட்டுட்டு போய்.. உன் ரூம்ல ரெஸ்ட் எடுக்க வை..”
என சொல்லி நகர்ந்துவிட அப்பொழுது அவளுக்கும் அந்த தனிமை தேவையானதாகவே இருந்ததால் அமைதியாய் மேக்னாவோடு உள்ளே சென்றாள்.
விஷாகன் யாமினி கார் ஏறும் வரை உடன் வந்து விடைக்கொடுத்த ஆரியன் மீண்டும் உள்ளே வந்த போது சக்தியை காணவில்லை. எல்லார் முன்பும் கேட்கவும் முடியாது பார்வையால் தேடியவன் மேக்னாவை கண்டதும்,
“என் ரூம்ல தான் இருக்காங்க.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்னு அம்மா தான் சொன்னாங்க..”
என சொல்லிவிட்டு நகர போனவளை தடுத்து,
“உனக்கு என்ன பிரச்சனை இப்ப..?? நீ ஏன் என்கிட்ட முகத்தை திருப்புற மேகி.. வீட்ல நீ தான் எனக்கு சப்போர்ட்டா இருப்பேன்னு நினைச்சேன்..”
என அவன் வருத்தமாய் சொல்ல பதிலுக்கு அவள் வரிந்து கட்டிக்கொண்டு வந்தாள்.
“நல்லா பண்ணுவேன் சப்போர்ட்டு.. என்கிட்டேயே மறைச்சுட்ட தானே.. நான் ஏதாவது இதுவரை உன்கிட்ட சொல்லாம இருந்து இருப்பேனா.. இப்ப கூட வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தப்போ அம்மா – அப்பாகிட்ட பேசின.. என்னை கண்டுக்கவே இல்லை தானே.. இம்புட்டுக்கும் அவர்கிட்ட கூட நீ சொல்லி இருக்க.. ஆனால் எனக்கு அண்ணியை இன்ரோ கூட கொடுக்கல.. நீ பேசாத என்கிட்ட..”
என சிறுபிள்ளையாய் அவள் குற்றம் அடுக்க அவன் இதழில் புன்னகை அரும்பியது.
“இவ்வளவு தானா டி.. நான் என்னவோன்னு நினைச்சேன்.. இந்த ஒன் வீக் நானே எத்தனை குழப்பத்தில் இருந்தேன்.. பார்த்த தானே.. அப்பா அம்மா சம்மதிக்கலை-னா எதுவுமே என்னால செஞ்சு இருக்க முடியாது.. அவங்களை எப்படி சமாளிக்கிறதுன்னே இருந்துட்டேன்..”
என பேசிக் கொண்டே வந்தவன்,
“அத்தோட என் தங்கச்சி நான் பேசலேனாலும் என்னை புரிஞ்சுக்குவான்னு நினைச்சேன்..”
என பெரூமூச்சோடு சொல்ல அது கொஞ்சம் வேலை செய்தது.
அவள் யோசிக்க,
“இப்ப என்ன இன்ரோ தானே.. வா முதல்ல இருந்து ஆரம்பிக்கலாம்..”
என கை பிடித்து அவள் அறை நோக்கி அடியெடுத்து வைக்க,
“இரு.. இரு.. இதான் சாக்குன்னு நீ அண்ணியை பார்க்க வரேன்னு புரியது.. சாரி ப்ரதரே இப்போதைக்கு யூ ஆர் நாட் அலோவ்ட்.. இனி நாங்களே பேசிப்போம்… போ.. போய் சித்தப்ஸ் மாமஸ் ஓட உட்கார்..”
என்று அவனை துரத்திவிட்டாள்.
அதன்பின் சக்தியோடு அவனுக்கு தனிமை கிடைத்தது என்னவோ இரவில் தான்..!!
அன்றைய இரவை குறித்து பெரிதாய் எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் தன் காதலியை மனைவியாய் கைபற்றிய மகிழ்ச்சியும் நிறைவும் வேறு எதையும் எண்ண விடாமல் உற்சாகமாய் வைத்திருக்க ஆர்வமாகவே அவளுக்காக காத்திருந்தான். ஆனால் உள்ளே வந்த பெண்ணவளிடமோ மருந்துக்கும் மகிழ்ச்சி இல்லை.
கடமையாய் அவர்கள் கொடுத்தனுப்பிய பாலினை அவனிடம் கொடுத்தவள் அமைதியாய் வந்து மெத்தையில் அவன் அருகே அமர்ந்துவிட அவளின் பாவனையில் அவனின் உற்சாகம் எல்லாம் வடிந்துவிட்டது.
“என்ன சக்தி.. ஏன் ஒரு மாதிரி இருக்க..”
என்று அவன் கேட்டதற்கு,
“ம்ச்.. ஒன்னும் இல்லை.. நீ தூங்கிறதுனா தூங்கு..”
என சலிப்பாய் வந்தது அவளின் பதில்..
“தூங்கிறதா.? இன்னைக்கு எப்பேர்ப்பட்ட நாள்.. ஃபர்ஸ்ட் நைட்ல எவ்வளவு அன்ரொமாண்டிகா பேசுற நீ.. டூ பேட் சக்தி…”
வம்பிற்கென்று அவன் சொன்னதில் உண்மையிலே டென்ஷன் ஆனாவள்,
“வேணாம்… இருக்கிற கடுப்புல.. அப்படியே குதறி வைச்சுடுவேன்.. என்ன பேச வைக்காத..”
என்று சிடுசிடுக்க,
இம்முறை முழுதாய் அவள் பக்கம் திரும்பி,
“ஹே இங்க என்னை பார்..”
என அவளையும் தன் பக்கம் திருப்பி அமர்த்தியவன்,
“என்ன சக்தி.. காலைல கூட நல்லா தானே இருந்த.. இப்ப என்னாச்சு.. யாரும் எதுவும் சொன்னாங்களா.. “
என்றான் தன்மையாய்..
“ம்க்கும்.. சும்மா கூட யாரும் பேசல.. இதுல என்ன சொல்லிட போறாங்க.. அதெல்லாம் எதுவும் இல்ல..”
என அவள் சுரதேன்றி சொன்னதில் அவர்கள் புதுமண தம்பத்தியர் என்பதெல்லாம் மறந்தே போனது.
“ஏன்டி இவ்வளவு சலிச்சுக்கிற.. என்ன ஆகி போச்சு இப்ப..”
“எதிலுமே மனசு ஒப்பல ஆர்யா.. தப்பு பண்ணிட்டோமோன்னு குத்திட்டே இருக்கு.. இன்னும் கூட நிதானமா இந்த விஷயத்தை ஹெண்டில் பண்ணி இருக்கலாம்.. இப்ப இந்த கல்யாணம் நடந்ததுல யார் தான் சந்தோசமா இருக்கா.. எல்லாருக்குமே வருத்தம் தான் மிச்சம்..”
என இருவரின் வீட்டிமரை நினைத்து அவள் சொல்ல,
யாருக்காக இவ்வளவு தூரம் போராடினானோ அவளே சந்தோஷம் இல்லை என்று சொன்னதில் சுள்லென்று கோபம் பொங்கியது.
அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்க தன்னுடைய சிந்தனையில் அவனின் குரல் மாற்றத்தை உணராது,
“ஆமா ஆர்யா… ” என்றிட,
“அப்போ வேணாம்னு தூக்கி போட்டு போக வேண்டியது தானே.. உன்னை கை காலை கட்டி ஒன்னும் தாலி கட்டலையே..”
என பட்டென்று எழுந்து நிற்க கோபத்தில் குரலும் உயர்ந்தது.
திடுக்கிடலுடன் நிமிர்ந்து பார்த்தவள்,
“இப்ப ஏன் கத்துற..நான் பொறுமையா தானே பேசிட்டு இருக்கேன்..”
என்று அவள் சொல்ல,
“நீ என்னவும் பேசுவ… எல்லாத்தையும் என்னால அமைதியா கேட்டுட்டு இருக்க முடியாது.. எவ்வளவு காதலோடு தெரியுமா காலைல இருந்து ஒன்னொன்றும் செஞ்சேன்.. உனக்கு எதுவுமே உணரலல.. நடக்காம இருந்திருக்கலாம்னு ஈஸியா சொல்ற..” என்றான் இன்னும் இறங்காத சுருதியில்….
“ஐயோ.. நான் அதை மீன் பண்ணல ஆர்யா..” என்றவள் அவன் முகத்தை பார்த்துவிட்டு,
“இப்ப நான் என்ன சொன்னாலும் தப்பா தான் புரியும்.. அப்புறம் பேசலாம்.. நான் தூங்க போறேன்..”
என்று சொல்லி அவன் பதிலை எதிர்பார்க்காது மெத்தையில் ஏறி படுத்துவிட,
“அதான்.. ஆரம்பிச்சிட்டாலே… சொல்ல வந்ததை முழுசா சொல்லி முடி.. சக்தி..
ஏய்.. சக்தி..”
என அவன் கத்திக் கொண்டே நிற்க மூடிய விழிகளை மீண்டும் திறந்து,
“ஷ்ஷ்.. ஏன் இப்ப உன் சத்தம் வெளிய வரை கேட்டகனுமா.. அமைதியா வந்து படுன்னு சொல்றேன்ல..”
என அரட்டலாய் சொல்லி திரும்பிவிட கோப மூச்சுகளோடு சில நொடிகள் நின்றாலும் இனி அவள் எழும்ப மாட்டாள் என புரிந்து லைட்டை அமர்த்திவிட்டு பட்டென்று அவள் பக்கத்தில் மறுக்கம் திரும்பி படுத்துவிட்டான்.
சக்தி தான் நினைத்தத்தை வேறு விதத்தில் சொல்லி இருந்தாலோ, ஆரியன் அவளின் கவலையை சரியாய் புரிந்து கொண்டிருந்தாலோ தங்களுக்குள்ளே அதற்கு தீர்வும் கண்டு அந்த இரவும் அழகாய் முடிந்திருக்கும்..!!
ஆனால் என்ன செய்ய.. காதல் வாழ்க்கை போல் அவர்கள் கல்யாணம் வாழ்க்கையும் மோதலில் தான் தொடங்கிற்று..!!