ஜிம்மில் தொடர்ந்து ஒலித்த ஹிப்ஹாப் பாடலை ‘ஹம்’ செய்தப்படி வொர்க் அவுட் செய்துக் கொண்டிருந்தான் ஜெய்.
வியர்வை வழிய தீவிர வொர்க் அவுட்டின் இடையே தன் அருகே யாரோ அமரும் அரவம் உணர்ந்து திரும்பியவன் நிச்சயம் ஆரியனை எதிர்பார்க்கவில்லை.
“டேய்..” என்ற அவனின் அதிர்ச்சியான விளிப்பில்,
“என்ன டா.. எங்கும் பிடிச்சுகிச்சா..”
என்று கேட்டதோடு நில்லாமல் அவனை பார்வையாய் ஆராய்ந்தான்.
“எனக்கு எங்கேயும் பிடிக்கல.. உனக்கு தான் கிறுக்கு பிடிச்சு இருக்கு போல.. நேத்தி தானே கல்யாணம் முடிஞ்சு ‘நல்லா இரு மகனே..’னு வாழ்த்திட்டு வந்தோம்… மறுநாளே ஜிம்ல வந்து நிற்கிற.. நீ பிட்னஸ் ஃப்ரீக்னு தெரியும்.. அதுக்குன்னு இப்படியா..”
ஜெயியின் ஏக வசனம் எதையும் கண்டுக்காது, “போடா டேய்..” என்பது போல் தன் வேலையை பார்க்க,
“உன்னை தான்டா கேட்கிறேன்…”
என்றவன், “உனக்கு டயர்டா இல்லை..” என மெல்லமாய் கேட்டு அவனிடம் இரண்டு மொத்தையும் வாங்கி கொண்டான்.
“ஸ்ஸ்.. ஆ… ஹல்க் மண்டையா.. இதுக்கு ஏன்டா அடிக்கிற..”
என்றவன் இன்னும் ஏதாவது கேட்டால் கொலை விழும் என்பதால்,
“உன்னை எல்லாம் திருத்த முடியாது.. எப்படியோ போ..” என்றதோடு விட்டுவிட்டான்.
வீட்டில் அப்பொழுது தான் உறக்கம் கலைந்த சக்தி அறையில் ஆரியன் இல்லாததை கண்டு,
‘அதுக்குள்ள எழுந்தாச்சா.. ம்ஹும்..” என்று நேரத்தை பார்த்தவள்
‘அவ்வளவு ஒன்னும் லேட் ஆகல..’ என தனக்கே சொல்லிக் கொண்டாள். திடீரென மாறிய புதிய இடம்.. நடந்து முடிந்த திருமணம் என எல்லாம் மூளையில் மின்னி மின்னி மறைய ஆரியன் அருகில் இல்லாதது ஒரு மாதிரி தான் இருந்தது.
“பாவம்.. ரொம்ப ஆசையா இருந்தான்.. அதையும் இதையும் பேசி ஏமாத்திட்டியே டி..”
என்று மனம் முறுக்கி கொள்ள சோம்பலாய் எழுந்து குளியலறை சென்றவள் குளித்து முடித்ததும்
‘என்ன புடவை கட்டலாம்..’ யோசித்து இறுதியாய் அவன் வாங்கி கொடுத்த புடவை ஒன்றையே எடுத்து வைத்தாள் சமாதானம் உடன்படிக்கைகாக.. ஆனால் அதற்கு முன் தானே மீண்டும் சண்டையிட போவதை அறியாமல்..!!
இளம் சிவப்பு வண்ண சாஃப்ட் சில்க் புடவையை உடுத்திக் கொண்டு புத்தம் புது மலராய் பொலிவோடு அறையில் இருந்து வெளியே வந்தவள் அங்கே யாரும் இல்லாமல் நிசப்தமாய் இருக்கவும் முழித்து நின்றாள். ஆரியன் இங்க தான் இருப்பான் என்ற நினைத்திருந்தாள்.
ஆனால் அவன் வீட்டில் இருப்பதற்கான சுவடே இல்லை. சுற்றும் முற்றும் தேடினாள். மற்றவர்களையும் காணும்..!!
‘இன்னும் யாருமே எழுந்திருக்கலையோ..’ என நினைக்கும்போது பின்கட்டில் சத்தம் கேட்க அங்கே சென்றவள் ரம்யாவை கண்டதும் அப்படியே தயங்கி நின்றுவிட்டாள்.
வேலையாட்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என சொல்லியப்படி கூட தானும் ஒதுங்க வைத்துக் கொண்டும் இருந்தார். நேற்றைய நிகழ்வால் இடமெல்லாம் களரியாக தான் இருந்தது.
திருமணம் முடிந்ததில் இருந்து இதுவரை தன்னிடம் பேசியே இராத மாமியாரிடம், ’பேசலாமா.. என்ன பேசுவது.. முகத்தில் அடித்தாற்போல் எதுவும் சொல்லி விட்டால்..’ என குழம்பி நின்றவள் ‘எதற்கு வம்பு..’ என வந்தவழியே மீண்டும் சென்றுவிட போகும் அவளை ரம்யாவும் கவனித்து விட்டார். ஆனால் கூப்பிடவும் இல்லை.. எதுவும் கூறவுமில்லை.
‘மேக்னா இன்னும் விழிக்கல போல.. ஆரியன் எங்க போய் தொலைஞ்சான்…’ என அறைக்கு திரும்பியதும் சோர்வாய் எண்ணினாள்.
வேறொன்றும் இல்லை. அவளுக்கு பசி வயிற்றை பிராண்டியது.
சென்னையிலும் அவள் தூங்கி எழுந்ததும் யாரும் ஓடி வந்து உபசரித்தது இல்லை தான்.. ஆனால் அங்கே அது அவள் வீடு.. இஷ்டம் போல் எழுந்து தனக்கு வேண்டியதை செய்துக் கொள்வாள்..!! ஆனால் இது புதிய இடம்.. தானே கிட்சென் செல்ல தயக்கமாய் இருந்தது.. தெரிந்த ஒரு ஜீவனும் எங்கோ சென்றுவிட்டது.. என்ன செய்ய..?’
பாவமாய் அமர்ந்திருந்தாள்.
பசியில் கண்கள் கரித்து கொண்டுவர கணவனாக பட்டவன்மேல் மீண்டும் கோபம் எக்கசக்கமாய் பொங்கியது.
வேகமாய் அலைபேசியை எடுத்து ஆரியனுக்கு அடித்தவள் அழைப்பு ஏற்கப்பட்ட மறுநொடி,
“நேத்து நான் சொன்னதுக்கு மட்டும் அப்படி சிலிர்த்துட்டு வந்த..
இப்ப நீ பண்றது மட்டும் நல்லா இருக்கா.. ஆசையா கல்யாணம் பண்ணிக்கிட்டவன் இப்படி தான் கல்யாணம் ஆன மறுநாளே அம்போன்னு விட்டுட்டு போவானா..”
என வார்த்தையால் பாய்ந்து தாக்க அனிச்சையாய் ஃபோனை தன் காதில் இருந்து விலக்கி,
‘யப்பா.. என்ன காலைலேயே காளி அவதாரமா..” என மனதில் எண்ணியவன் மறுமுனையில் சக்தி அவன் பெயரை ஏலம் இடவும் மீண்டும் அதை காதுக்கு கொடுத்து,
“என்னடி ஆச்சு இப்ப… அம்போன்னு உன்னை காட்டிலா விட்டுட்டு வந்தேன்.. வீட்ல தானே இருக்க..”
என அவனும் எரிச்சலாய் சொல்ல அருகே இருந்த ஜெய்யிக்கு இவர்கள் பேச்சு கேட்கவில்லை என்றாலும் சண்டை என்பது மட்டும் புரிய அன்றொரு நாள்,
‘கல்யாணம் மட்டும் ஆகிவிட்டால் போதும்.. எதுவா இருந்தாலும் சமாளித்து விடலாம்… சண்டை வராது..’ என்பது போல் ஜம்பமாய் ஆரியன் சொன்னது நினைவில் ஆட,
“ம்க்கும்.. பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் இதுக ரெண்டையும் திருத்த முடியாது..” என எண்ணியவனாய் தன் வேலையை தொடர்ந்தான்.
“கண்ண கட்டி காட்டில் விட்டா மாதிரி தான் இருக்கு.. யார்கிட்ட போய் பேசுவேன்.. உங்க அம்மா மட்டும் தான் முழிச்சு இருக்காங்க.. அவங்க கிட்ட பேசவே பயமா இருக்கு.. உன்னை நம்பி தானே வந்தேன்.. அப்போ உன்னை தானே தேடுவேன்.. உனக்கு எங்க புரிய போது.. வரவே வராதே.. எங்க போனியோ அங்கேயே இருந்துக்க இடியட்..”
என பசியில் வாயிக்கு வந்ததை கத்திவிட்டு பட்டென்று வைத்துவிட தலையில் கைவைத்து சாய்ந்துவிட்டான்.
காலையில் அவள் நன்றாக தூங்கி கொண்டு இருந்ததால் வீட்டில் இருந்து என்ன செய்ய என்று தான் வழக்கம்போல் ஜிம்மிற்கு வந்துவிட்டான். அதற்கு இத்தனை அக்கபோர்..!!
சக்தி ஃபோனை வைத்த சில நிமிடங்களிலே கதவை லேசாய் தட்டிவிட்டு திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள் மேக்னா. அப்பொழுது தான் விழித்து இருப்பாள் போல.. முகம் இன்னும் வீங்கி தூக்க கலக்கத்தோடு இருந்தது.
“குட் மார்னிங் அண்ணி..” என்று புன்னகையோடு சொல்ல,
“குட் மார்னிங்..” என்றாள் லேசான தயக்கதோடு..
“முன்னாடியே எழுந்துட்டீங்க போல.. சரி வாங்க அண்ணி..” என்றவள்
“ஆக்சுவலீ.. நானும் அதிகாலைலே எழுந்திடுவேன் தான்.. பட்.. நேத்து எல்லாரோடையும் அரட்டை அடிச்சுட்டு நேரம் போனதே தெரியல.. அவங்க எல்லாரும் கிளம்பி ரொம்ப லேட்டா தான் தூங்கினேன்.. அதான்.. அம்மா இப்போ தான் வந்து எழுப்பிவிட்டு போறாங்க.. நீங்க என்ன குடிப்பீங்க அண்ணி..”
என இயல்பாய் பேசியபடி கிட்சன் அழைத்து வந்துவிட,
‘தனக்காக தான் மேக்னாவை அத்தை எழுப்பிவிட்டு இருப்பார்களோ..’ என யோசனை ஓடியது மனதில்..
இருவருக்கும் டீ போட்டுவிட்டு
கூடவே நேற்று வாங்கி இருந்த பலகாரங்களையும் எடுத்துக்கொண்டு ஹாலில் வந்து அமர்ந்துவிட்டனர். ’பசி வந்தால் நீ.. நீயா இருக்க மாட்ட..’ என்ற விளம்பரம் போல் சாப்பிட்டதும் தான் சற்று தெளிவாக,
“அவசரப்பட்டு ஆரியனை வேறு திட்டியாச்சே.. வந்து பதிலுக்கு கத்துவானோ..” என பயந்து,
‘அவனை எதாவது சொல்லிட்டே இருக்கணும் உனக்கு..’ என்று தன்னையே திட்டிவிட்டு ‘சரி.. நம்ம ஆரியன் தானே.. கோச்சிக்க மாட்டான்..’ என சமாதானமும் அவளே செய்துக் கொண்டாள்.
“என்னாச்சு அண்ணி.. ட்ரீம்ஸ்ஸா..”
என்று கேட்க பதிலாய் புன்னகைத்தாள். தன்னோடு சட்டென்று ஒட்டிக்கொண்ட மேக்னாவை ரொம்ப பிடித்தது.
“தேங்க்ஸ் மேகி.. நேத்து நீயும் அவ்வளவா பேசலையா.. உனக்கும் என்மேல கோபம் தான்னு நினைச்சேன்…” என்றாள் மனதை மறையாமல்..
“உங்க மேல எதுவும் இல்ல அண்ணி.. ஆரியன் மேல தான்.. அதுவும் சார்ட் அவுட் ஆகிடுச்சு.. மத்தபடி ஐம் ஸோ ஹேப்பி.. ஏன் தெரியுமா..? ஆரியனுக்கு கல்யாணம் பண்ணும்போது நான் கல்யாணம் ஆகி போயிருப்பேன்.. அப்புறம் எனக்கும் என்னோட வருங்கால அண்ணிக்கும் எப்படி ஒரு பாண்டிங் உருவாகும்னு முன்னாடியே நினைச்சு இருக்கேன்.. அந்த குறை இப்ப நிறைவேறிடுச்சுல.. அதான்..”
என மேகி உற்சாகமாய் சொல்லவும் சிரித்த சக்தி அந்நேரம் அங்கே ரம்யாவை கண்டதும் அமைதியாகி விட,
“எந்த அம்மே.. குடிச்சாச்சு.. சாப்பிட்டாச்சு.. இப்ப திருப்தி தானே..!!” என சக்தியை காட்டி சும்மா சென்றவரை வம்பிழுத்த மேகி, “தூங்கிவிட்டேனாம்.. அதுக்கு என்னா திட்டு..” என்று சொல்ல,
“கொழுப்பு கூடி போச்சுடி உனக்கு.. குளிக்காம உனக்கு என்ன அரட்டை.. ஓடு.. முதல்ல குளி..” என பதிலுக்கு விரட்டிவிட நொடித்து கொண்டாலும் எழுந்து சென்றுவிட்டாள் மேக்னா..
தான் யூகித்தது உண்மை தான் என புரிந்துக் கொண்ட சக்திக்கு ஏனோ சந்தோஷமாய் இருந்தது.
தங்கள் மீது கோபம் இருந்தாலும் வெறுப்பு இல்லை.. கொடுமை செய்ய கூடிய மாமியார் வகையும் அவர் இல்லை.. எல்லாம் ஒரு நாள் சரியாகிவிடும்..’ என்ற நம்பிக்கையும் வந்தது.
“ரம்யா ஃபாக்டரிக்கு நேரம் ஆகிடுச்சு.. சாப்பாடு ரெடி தானே…”
என்று கேட்டுக்கொண்டே வந்த திருவை கண்டதும் சக்திக்கும் படபடவென வர,
அடுத்து மாமனார் கவலையா..?
அருகில் மேக்னாகூட இல்லை.. அவஸ்த்தையான நிலை தான்.. அவர் சக்தியை ஒரு பார்வை பார்த்தாலும் எந்த பிரதிபலிப்பும் காட்டவில்லை. தன் போக்கில் ரம்யாவிடம் பேசிக் கொண்டு கிளம்புவதில் முனைப்பாய் இருந்தார்.
உண்ட பொருட்களை எடுத்து வைக்கும் சாக்கில் அங்கிருந்து நகர்ந்து விட்டாலும் அதன் பின் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க,
“சக்தி.. இங்க வா..” என ரம்யா திடீரென அழைக்கவும் திடுக்கிட விழியை உருட்டியப்படியே அருகில் சென்றாள்.
அதையெல்லாம் கவனித்தாலும் கண்டுக்கொள்ளாது நேரே பூஜை அறைக்கு அழைத்து விளக்கேற்ற சொல்லி தானும் கடவுளை வணங்கி
நிற்க அப்பொழுது வந்து சேர்ந்தான் ஆரியன். உள்ளே நுழைந்ததுமே அவன் கண்ணில் முதலில் பட்டது அன்னையோடு நின்ற சக்தி தான்..!!
ஃபோனில் அந்த திட்டு திட்டிவிட்டு இங்கே பதுமையாய் நிற்பவளை கண்டதும்,
‘கொய்யால.. என்னை டென்ஷன் படுத்திவிட்டு.. இங்க கேஷ்வலா நிற்கிறதை பாரேன்..’
என்று பார்க்க அவன் பார்வை உணர்ந்து கண்களை சுருக்கி கன்னத்தில் தப்பு போட்டுக் கொண்டாள். அது சாமிக்காக இல்லை தானக்காக தான் என்பது அவனுக்கு மட்டும் புரிய புன்னகையை நிறுத்த முடியவில்லை. அதுவும் அன்னை அருகில் அவள் நிற்பதை பார்க்கவும் அத்தனை மகிழ்ச்சி..!!
ஆனாலும் எதுவும் சொல்லாமல் அவன் அறையினுள் சென்றுவிட,
‘ இப்ப என்ன செய்யினும்.. நாமும் போகலாமா..? வேண்டாமா..? பின்னாடியே போனால் தப்பா நினைச்சுபாங்களா..? என மறுபடியும் மண்டை குடைய ‘அட போங்கப்பா.. ரொம்ப யோசிக்க வைக்கிறாய்ங்க.. முடில..” என மனம் அலுத்துக் கொண்டது.. அவர் அத்தோடு வேலை முடிந்தது என்று திருவிற்கு உணவை எடுத்து வைக்க சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் ப்ரெஷ்னப் ஆகி மீண்டும் வந்தவன்,
“அம்மா.. காஃபி…” என்க அவர் அதை காதில் வாங்கியதாக கூட தெரியவில்லை. அத்தோடு விடுபவனா ஆரியன்..!!
“அம்மா.. ம்மா.. ம்மாஆஆஆஆ…” என்று விடாமல் கூப்பிட கிட்சன் உள்ளிருந்து தலையை மட்டும் நீட்டி,
“என்ன டா..” என்றார் அவன் தொல்லை தாங்காமல்..
“காஃபி..” பளீச் புன்னகையோடு கேட்க,
“வேணும்னா போட்டு குடி.. என்கிட்ட ஏன் கேட்கிற..” என்று வெடுக்கென சொல்லி உள்ளே போய்விட கவலையாய் தன்னை பார்த்த மனைவிக்கு கண்களால் ஆறுதல் சொல்லி அம்மாவிடம் செல்ல அனைத்தையும் சாப்பிட்டபடி கவனித்தே இருந்தார் திருவும்..
“என்ன ம்மா..!! நீ தானே எப்பவும் கொடுப்ப.. ஒரு காஃபி தானே கேட்டேன்..” என கேட்டுக் அவர் கையை பற்றி,
“ஏன் இவ்வளவு கோபம்..” என மென்மையாய் வினவ,
“எனக்கு பிடிக்காத வேலையை செய்யனும்னு எந்த அவசியமும் இல்லைனு ஒரு ஞானி சொல்லி இருக்கார்.. அந்த வரிசையில் இதுவும் இனி..”
என்று அதற்கும் காரமாகவே..
“ஹோ.. அப்படி வரீங்களா.. சரி ஓகே.. விடுங்க..”
என்று தானே தனக்கு காஃபி கலக்க ரம்யா அவனை துளியும் பொருட்படுத்தவில்லை.
“இன்னும் ரெண்டு நாள் லீவ் இருக்கு.. வீட்டில் தான் இருப்பேன்.. நான் எதுவும் செய்ய வேண்டியது இருக்கா..? இருந்தால் நியாபக படுத்துங்க ம்மா..”
என வழக்கமாய் விடுமுறை நாட்களில் கேட்பது போல் கேட்க,
“இதை மட்டும் ஏன் என்கிட்ட கேட்கிற…
உன் இஷ்டம் போல என்ன வேணுமோ செய்.. இனி எல்லாம் உன் விருப்பம் மட்டும் தான்..”
என்று குத்தலாய் சொன்னது அவன் மனதை வாட செய்ய,
“அம்மா..” என்று விளிக்கும் போதே தடுத்து,
“ஒன்னும் நடக்காத மாதிரி நீ பேசிட்டால் உடனே எல்லாம் உன் இஷ்டத்துக்கு மாறிடாது ஆரியன்..”
என்றார் ஸ்திரமாய்..
‘அதற்கும் மேல் என்ன சொல்வான்..?’
அமைதியாய் அங்கிருந்து வெளியேறிவிட மகனின் வாடிய முகம் அவருக்கும் வலிக்க செய்தாலும் வீம்புக் கொண்ட மனம் இறங்கிவர மறுத்தது.
ரம்யாவே தேவலாம் என்பது போல் திருவோ ஆரியன் வந்து அருகில் அமரவும் ஒழுங்காய் சாப்பிட்டும் முடிக்காமல் கிளம்பிவிட அவ்வளவு தான் ஆரியன் முகம் மொத்தமாய் விழுந்துவிட்டது.
சில நொடிகள் குனிந்த தலை நிமிராமல் அப்படியே அமர்ந்திருந்தவன் சட்டென்று எழுந்து அறைக்குள் போய்விட தானும் அவனை தொடர்ந்து வந்தாள்.
அவளை பார்த்தாலும் ஒன்றும் பேசாமல் முகத்தை திருப்பிக்கொள்ள அவனை உரசி அருகில் சென்று அமர்ந்துக் கொண்ட சக்தி,
“சரி.. சரி விடுங்க.. தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை மன்னா.. இப்பவே அசந்தால் எப்படி..”
என இலகுவாக்கும் நோக்கோடு கூறினாள்.
“ம்ச்.. கோபமா தான் இருப்பாங்க தெரியும் சக்தி…நேத்து வரை சமாளிச்சிடலாம்னு தைரியமா தான் இருந்தேன்.. ஆனால் இப்ப இக்னோர் பண்ணும் போது ரொம்ப வலிக்குதுடி.. என்கிட்ட இத்தனை வருஷத்தில் இப்படி எல்லாம் இருந்ததே இல்லையா.. அதான் ஏத்துக்க முடியல.. என்னை அப்படி தாங்குவாங்க ரெண்டு பேரும்.. இப்ப இப்படி வேண்டா வெறுப்பா பார்க்கும்போது ரொம்ப ஹர்ட் பண்ணிட்டோமோனு உறுத்தலா இருக்கு..”
என்று அவன் பேச லேசாய் அவன் தலையில் தட்டி,
“இதை தான் நேத்து நானும் மீன் பண்ணேன்.. அதுக்குள்ள சர் டென்ஷன் ஆகி கத்தியாச்சு.. என்னை சொல்லுவ.. ஆனால் இப்ப நீ தான் எமோஷனல் ஆகி யோசிக்காமல் முடிவு எடுத்தது..”
என்று அவள் சொல்லவும் ஆரியன் முகம் இன்னும் சுருங்கி உமென்று ஆக அதில்,
“ஆனால் உன்னை மட்டும் சொல்ல முடியாது.. பிகாஸ் என் மனசிலும் ஆசை இருந்ததால தான் இந்த மேரேஜை அழுத்தமா மறுக்க முடியல..
ம்ஹும்.. உன்கிட்ட நான் வந்து சேர இத்தனையை கடக்கணும்னு விதி எழுதி வைச்சால் யாரால மாத்த முடியும்.. எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா..”
என்றவள் அவனை அப்படியே கட்டி போடுவது போல் கையையும் சேர்த்து மொத்தமாய் கட்டிக்கொண்டு,
என குழந்தையாய் பாவித்து கொஞ்சி பேச அதில் அவனுக்கும் புன்னகை அரும்பியது.
“அம்மா அப்பா மனசு மாறிட்டால் எனக்கு அதைவிட வேற என்ன வேணும்..”
என்றவன், “ஆனால் இப்பவும் இந்த மேரேஜ் டெஸிஸினை நான்
ரெக்ரேட் பண்ணவே இல்லை சக்தி.. எந்த இடத்தில் உன் கணவனா உன் மொரல் பவரா இருக்கணுமோ அப்போ அம்போனு விட்டுட்டு பின்னாடி இந்த கல்யாணத்தை எவ்வளவு பிரமாண்டமா நடத்தி இருந்தாலும் அதில் அர்த்தம் இருந்திருக்காது…”
என அவள் வெளியே சொல்லாத அந்த குழப்பத்திற்கு அவள் எளிதாய் பதில் கொடுத்து விட அவளின் இரு ஜோடி இமைகளிடையே அங்கும் இங்கும் மானாய் துள்ளி ஓடும் அந்த கருவிழியில் தான் எத்தனை காதல்..!!
“என் தங்கம்டா நீ..”
தாடை பற்றி செல்லமாய் சொல்ல
அவள் அணைப்பில் விலகாமலே மூக்கோடு தன் மூக்கை உரசி,
“நைட் எல்லாம் சண்டை போட்டு.. மனுஷனை நிம்மதியில்லாம பண்ணிட்டு.. பகலில் கொஞ்சுறதை பாரேன்.. இதெல்லாம் நியாயமே இல்ல சக்தி…”
என்றான்.. அம்பியில் இருந்து சட்டென்று ரெமோ அவதாரம் எடுத்தவனாய்..
“என்ன செய்றது.. நம்ம டிசைன் அப்படி..!! ஏன் நைட்ல தான் கொஞ்சணுமா.. பகல் என்ன பாவம் பண்ணுச்சாம்..”
என மெல்லமாய் முணுமுணுக்க மயக்கும் புன்னகை அவளிடத்தில்..
கண்ணோடு கண் கோர்த்த காதல் கிளிகளுக்கு அந்த நொடி உலகமே மறந்து போயிருக்க,
“அதானே.. என்ன பண்ணுச்சாம்..”
அவள் உதட்டில் முணுமுணுத்து அவளோடு சரிய அதன் பின் பேசிய பேச்சுக்கள் எல்லாம் அவர்களுக்கு மட்டுமே புரியும் மொழியில் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ..!!