தேம்ஸ் நதிக்கரை ஓரமாக அந்த நண்பர்கள் கூட்டம் கூடியது. அவர்கள் அனைவரும் பெரும்பாலும் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருந்தனர். சிலர் மட்டுமே அங்கே பிறந்து வளர்ந்தவர்கள்., மற்ற அனைவருக்கும் வேர் இந்தியா தான்.
தொழில் நிமித்தமும் பொருளாதார சூழ்நிலையும் அவர்களை அங்கேயே குடியிருப்பு கொண்டவர்களாக மாற்றி இருந்தது.
நண்பர் பட்டாளத்தில் ஒருவர் “ஹோட்டல்., ரிசார்ட் ன்னு இல்லாமல் ஏன் திடீர்னு இந்த பக்கம்” என்று கேட்டார்,
ஏற்பாடு செய்திருந்த மற்றொரு தோழியோ “எல்லாம் நம்ம துளசிக்காக தான்., அவளுக்கு தான் நிறைய பேசணும் கொஞ்சம் முடிவு எடுக்கணும்னு சொன்னா., ஆனா பேசணும் முடிவெடுக்கணும் சொன்னவ இன்னும் மௌனமா தான் இருக்கா., முகம் வேற டல்லா இருக்கு” என்று சொன்னாள்.
துளசி ஆகியவள் அவளை ஏறிட்டு பார்த்த பார்வை., ஆயிரம் கதைகள் சொன்னது.
மற்றொரு தோழியோ “சரி சரி எதுனாலும் இங்க வச்சு பேச வேண்டாம்”., என்று சொன்னாள்.
மற்ற நண்பர்களும் தோழிகளும் அதை அமோதிக்கும் விதமாக “ஆமா மிதக்கும் (floting Hotel) ஹோட்டலுக்கு சென்ற பிறகு பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
தேம்ஸ் நதிக்கரையில் அதிகமான மிதக்கும் ஹோட்டல்கள் அங்கும் இங்கும் நகர்ந்தபடி இருக்கும் அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து நண்பர் கூட்டம் ஏறியது., அவர்களுக்கான டேபிளை தேடி அமர்ந்த பிறகு பேச்சை தொடர்ந்தனர்.
“ஓகேடா முதலில் நமக்கு தேவையானதெல்லாம் ஆர்டர் பண்ணிட்டு அதுக்கப்புறம் நம்ம பேச ஆரம்பிக்கலாம்., ஏன்னா பேச ஆரம்பிச்சோம்னா நம்ம ஆர்டர் பண்ணிக்க மாட்டோம்”., என்று சொல்லிக் கொண்டே அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை ஆர்டர் செய்துவிட்டு., பின்பு பேச தொடங்கினர்.
“சரி சொல்லு துளசி, என்ன பிரச்சனை இப்ப எப்படி சரி பண்ணலாம்னு நினைக்கிற., நாங்க இத்தனை பேர் இருக்கிறோம் இல்ல உனக்கு., நாங்க எத்தனை தடவை தைரியம் சொன்னோம்., எல்லோரும் இருக்கும் போது நீ எதுக்கு பயப்படுற”., என்றாள் ஒரு தோழி.
ஒரு நண்பனோ “துளசி ஏன் பயப்படுற., உன்ன மீறி உனக்கு பிடிக்காத கல்யாணம் நடக்கவே நடக்காது., அதுவும் இங்கே உள்ள சூழ்நிலையில் நமக்கெல்லாம் 16 வயதிலேயே ஃப்ரீடம் கொடுத்துறாங்க., நம்ம என்னதான் இந்தியாவில் இருந்து இங்க வந்து செட்டில் ஆனாலும் இங்க உள்ள பிள்ளைங்க மாதிரி தான் நம்ம வளர்ந்து இருக்கோம்., என்ன நம்ம வீட்ல ஒழுக்கம் கட்டுப்பாடு ன்னு சொல்லப்போய் நம்ம சில விஷயங்கள்ல நம்மளுடைய எல்லை மீறாம கரெக்ட்டா இருந்துக்கிட்டு இருக்கோம்., நீ பயப்படுற மாதிரி உன்னை மீறி இங்க எதுவும் நடக்காது., மாப்பிள்ளை பிடிக்கலை ன்னு தைரியமா உங்க அப்பாட்ட சொல்லு., இல்லாட்டி நாங்க வந்து பேசட்டுமா”., என்று கேட்டான்.
மற்றொரு தோழி “ஏண்டி பயப்படுற., நாங்க எல்லாம் இல்லையா., அப்படி எல்லாம் உன் கல்யாணம் உன் இஷ்டம் இல்லாம நடக்காது., நாங்க இருக்கிறோம்ல., அந்த மாப்பிள்ளை கிட்ட பேசி பாரேன்., அவனும் இங்கே பிறந்து வளர்ந்தவன் தானே., அப்புறம் என்ன பேசி பாரு அவன் புரிஞ்சுப்பான்”., என்று சொன்னாள்.
துளசி மீண்டும் அதே பரிதாப பார்வையோடு., “வெயிட் பண்ணுங்க, சாப்பிட்டுட்டு தெம்பா பேசுறேன்., ஏன்னா நேத்து நைட்டு நான் சாப்பிடல., இப்ப காலையிலே கூட சாப்பிடல., இப்பவாது ஜஸ்ட் கொஞ்சம் உள்ள இறக்கிட்டு அதுக்கப்புறம் பேசுறேன்”., என்று சொன்னாள்.
அவள் அமைதியாகவும்., மற்றவர்கள் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டிருந்தாலும்., துளசியின் கல்யாணத்தை எப்படி நிறுத்துவது, அவளுக்கு பிடிக்காத கல்யாணத்தை அவள் செய்து கொள்ள முடியாது., அது மட்டும் அல்லாமல் இங்கு யாருடைய உதவியை நாடினால் கல்யாணத்தை நிறுத்த முடியும் என்பது வரை பேச.,
துளசியோ., “ப்ளீஸ் நான் சொன்னத கேட்டதுக்கு அப்புறம்., நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்”., என்று சொன்னாள்.,
அவர்களோ “அப்படி என்னடி விஷயம்., நீ ஒரு மாதிரி சொல்றத பார்த்தா வித்தியாசமா இருக்கு”., என்று மற்றொரு தோழி கேட்டாள்.
“சொல்றேன் சொல்றேன் முதல்ல என் வயிற்றுக்கு கொஞ்சம் போட்டுக்குறேன்”., என்று சொல்லிவிட்டு உணவுக்காக காத்திருக்க தொடங்கினாள்.
அங்கு அமர்ந்திருந்த தோழிகள் தோழர்கள் பட்டாளத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் அனைவரும் பள்ளிக்காலத்தில் இருந்தே அவர்களுக்கு என்று ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டனர்.
பிறந்தது எல்லாம் இந்தியாவில் என்றாலும் ஒரு சில காரணங்களால் இங்கு வந்து செட்டிலான குடும்பத்திலிருந்து வந்தவர்கள்., துளசி பிறந்தது என்னவோ இந்தியாவில் தான்., சிறுவயதாக இருக்கும் போதே லண்டனில் வந்து செட்டில் ஆகினர்.,
தந்தையின் முதலில் தொழில் விஷயமாக வந்தவர் பின்பு குடும்பத்தோடு வந்து செட்டிலாக., அவள் சேர்ந்த பள்ளியில் இருந்த நண்பர் பட்டாளம் இவர்கள் இவளோ இந்திய நண்பர்களையே தனக்குள் பிணைத்துக் கொண்டாள்., ஒரு சில நண்பர்கள் பின்னால் பின் வகுப்பில் அவர்களோடு சேர்ந்து கொண்டவர்கள்.,
உணவு வந்தவுடன் அனைவரும் கலகலப்போடு சாப்பிட்டு முடித்தனர்.
அனைவரும் காத்திருப்பு இருக்கையில் சென்று அமர்ந்து கதை பேச தொடங்கினர்.
முதலில் ஆரம்பித்தது மற்றொரு தோழி தான்., “என்ன துளசி சுத்தி சுத்தி பார்த்துகிட்டே இருக்க., நீதான் ஏதோ சாப்பிட்டதுக்கு அப்புறம் சொல்றேன் ன்னு சொன்ன”., என்று சொன்னாள்.
” சொல்றேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் சுற்றிமுற்றி பார்த்தவள் “இங்கேயும் யாராவது பின்னாடியே வந்து இருக்காங்களான்னு பார்த்தேன்., நல்லவேளை வரலைன்னு நினைக்கிறேன். ஆனாலும் நான் சொல்ல வந்ததை உங்ககிட்ட சொல்லிடுறேன்”., என்று சொல்லி பேச தொடங்கினாள்.
“யார் வருவா ன்னு நினைக்கிற”., என்று ஒரு நண்பன் இடையிட்டு கேட்டபடி அவனும் சுற்றி பார்த்தான்.
“வேற யாரு எங்க அப்பாக்கு தெரிஞ்ச ஆளா இருக்கும்., இல்லாட்டி எங்க அப்பா பார்த்திருக்கிறாரே ஒரு லூசு மாப்ள அவனுக்கு தெரிஞ்ச ஆளா இருக்கும்., நான் உங்க கூட வர்றதெல்லாம் ரெண்டு பேரும் நோட் பண்ணிட்டே இருக்காங்க”., என்று சொன்னாள்.
“ஏண்டி இப்படி” என்று ஒரு தோழி பதட்டமாக கேட்டாள்.
“எல்லாம் இந்த கல்யாண விஷயத்தால தான்., எனக்கு கல்யாணம் பிடிக்கலை ன்னு முதல்ல வீட்ல சொன்னேன்., அது மட்டும் இல்லாம இந்த மாப்பிள்ளை சுத்தமா பிடிக்கலன்னு சொன்னேன்., அப்பா இல்லவே இல்ல இவர தான் கல்யாணம் பண்ணி ஆகணும் பிடிவாதமா நிக்கிறாரு., இந்த கல்யாணத்தை நான் நிறுத்துவதற்கு ஏதாவது ட்ரை பண்ணுவேன்னு சொல்லிட்டு, எங்க அம்மாவை வேற மிரட்டி வச்சிருக்காரு., அம்மாவும் அப்பா பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டேங்கிறாங்க., சரி அந்த லூசு மாப்பிள்ளை கிட்ட போய் பேசலாம் அப்படின்னு பேசினா., அவன் அதுக்கு மேல கல்யாணம் பிடிக்கலையா., இல்ல என்ன புடிக்கலையா ன்னு கேட்டான்., ரெண்டுமே புடிக்கலைன்னு சொல்லி பாத்துட்டேன்., அவன் மூஞ்சில அடிச்சாப்ல பேசியும் அவன் கேட்கிற மாதிரியே இல்லை., எல்லாம் போக போக சரியாயிடும் சொல்லிட்டு., சினிமா டயலாக் எல்லாம் பேசுறான்.,
சிலரை பார்க்க பார்க்க பிடிக்கும்., சிலரை பார்த்தவுடனே பிடிக்கும்னு டயலாக் விடுறான்., இவன் சரியான லூசா இருப்பான் போல., எங்க அப்பாகிட்ட எங்க அம்மாகிட்ட அத சொன்னா ., எங்க அம்மா சொல்றாங்க எனக்கு தெரியாது கல்யாண விஷயத்துல உங்க அப்பா பேச்சை என்னால மீற முடியல ன்னு சொல்லிட்டு பெருமூச்சோடு நகர்ந்து போறாங்க., இதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும்” என்று கேட்டாள்.
“நம்ம இங்க தானே இருக்கோம்., இந்தியாவில் இருந்தா தான் சின்ன வயசுல கல்யாணம் பண்ணா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம்., பெரிய வயசுல தன்னுடைய இஷ்டம் இல்லாம கல்யாணம் பண்ணா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம்., இங்க அதை விட ஈஸி நம்முடைய இஷ்டம் இல்லாம எதுவுமே நடக்காது., சோ நீ தைரியமா இரு” என்று சொன்னாள்.
“அந்த தைரியத்தை தான் நேத்து நைட்டோட மூட்டை கட்டிட்டாங்க., நானும் அப்படித்தான் நினைச்சிருந்தேன், இங்க நீங்க எல்லாம் இருக்கீங்க எப்படியாவது ஹெல்ப் பண்ணி கல்யாணத்தை நிறுத்திடலாம்., அப்படின்னு தான் நினைச்சிருந்தேன்., இப்போ என்னோட சூழ்நிலை வேற மாதிரி மாறிடுச்சு., உங்களுக்கே நல்லா தெரியும் இந்தியால எனக்கு ஃபேமிலி ரிலேஷன் யாரையுமே தெரியாது”., என்று பேசிக் கொண்டிருக்கும்போதே இடைப் புகுந்த மற்றொரு தோழி.,
“இதுக்குதாண்டி சொல்றது அப்பப்போ இந்தியா போயிட்டு வாங்க., நம்ம பேரெண்ட்ஸ் அவங்க ஃபேமிலி சர்கிள் இவங்க எல்லாரையும் பாத்துட்டு வந்தா தான்., நமக்கு நாலு பேரை தெரியும் சொன்னேன்” என்றாள் ஒரு தோழி.
மற்றொரு தோழி., “ஆனா இவங்க அம்மா அப்பா ஒரு ஸ்டேஜ் வரைக்கும் அவங்களும் இந்தியா போகலை., அவளையும் கூட்டிட்டு போகல., இப்போ ரீசண்டா கொஞ்ச நாளா அவங்க அம்மா அப்பாவும் போயிட்டு வந்தாங்களே., ஒழிய இவளை கூட்டிட்டு போகல., இவளும் இங்க ஓகே சொல்லி இங்க அப்படியே இருந்துட்டா”., என்றாள்.
மற்றொரு தோழி”உங்க தாத்தா பாட்டியை கூட போய் பார்க்க போகலயா துளசி” என்று கேட்டாள்.
“உனக்கு தெரியுமா நான் அங்கே போக ஆசைப்படலைன்னு., எத்தனை முறை கேட்டிருக்கேன் தெரியுமா., எங்க அப்பா தான் அங்க சொல்லிக்கிற மாதிரி சொந்தம் இல்லைன்னு சொல்லிட்டாங்க., அப்பாவோட தங்கச்சி ஃபேமிலில ஒரு சின்ன பிரச்சனை அதனால பேச்சுவார்த்தை கிடையாது., அங்கெல்லாம் போக முடியாது அப்படின்னு சொல்லிட்டாங்க., பாட்டி தாத்தா இருக்கத்தான் செய்றாங்க. அவங்களை பார்க்க கேட்டா பாட்டி தாத்தாவை தான் வீடியோ கால்ல பாக்குற இல்ல., அப்படின்னு சொல்லிடறாங்க., பாட்டி தாத்தா ட்ட கூட எதுவும் ரெக்கமண்ட் பண்ண சொல்ல முடியாது., அவங்க என்கூட பேசும் போது கூடவே நிப்பாரு அப்பா., அவங்களும் ஏதோ சொல்ல வந்துட்டு சொல்ல முடியாம முழுங்குவாங்க., எனக்கு ஒரே யோசனையா இருக்கும்., என்ன ரீசன் எதனால அப்படின்னு தோணும்., அம்மா பாட்டி தாத்தா பார்த்தாலும் அவங்களும் எதுவும் சொல்ல மாட்டாங்க., அம்மா கூட பிறந்த சித்தி உண்டு. சோ அம்மா கூட அவங்க ஃபேமிலி எல்லாருமே பேசுவாங்க ஆனா யாருமே ரொம்ப அட்டாச் கிடையாது., எங்க அப்பா எல்லாரையுமே கொஞ்சம் ஒதுக்கி வச்ச மாதிரி வச்சிருக்காரு., இது எதுக்காக ன்னு எனக்கு இப்ப வரைக்கும் தெரியல.,
ஆனா இப்ப பெரிய சிக்கல் என்ன அப்படின்னா., எனக்கு மேரேஜ் இந்தியால அப்படின்னு பேசி இருக்காங்க., இந்த லூசு மாப்ள வீட்ல இந்தியால போய் கல்யாணம் பண்ணலாம்., நம்ம ட்ரடிஷனலா கல்யாணம் பண்ணிட்டு அதுக்கப்புறம் இங்க வந்து ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம்., அப்படின்னு சொல்லி இருக்காங்க., இதைக் கேட்டு எங்க அப்பாவும் இந்தியாவில் தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்லி இருக்காரு., அது மட்டும் இல்லாம அம்மா கிட்ட சொல்றாரு., உன் பொண்ணு இங்க இருந்தா ஏதாவது நாடகம் பண்ணி கல்யாணத்தை நிப்பாட்டுவா இந்தியாக்கு போனா என்ன பண்றான்னு பார்க்கிறேன்., அப்படின்னு சொல்றாரு ., இப்ப நான் என்ன பண்ண என்னால நிச்சயமா கல்யாணம் பண்ணிக்க முடியாது”.,என்றாள்.
“ஏண்டி உங்க அப்பாட்டயும் கல்யாணம் புடிக்கல ன்னு சொல்லிட்ட., அந்த மாப்பிள்ளை கிட்டயும் கல்யாணம் புடிக்கலை ன்னு சொல்லியாச்சு, அப்புறம் ஏன் ரெண்டு பேரும் இவ்வளவு பிடிவாதமா இருக்காங்க”., என்றாள்.
“ஆஹாங் நல்ல கேட்ட., ரெண்டும் சரியான மணி மைன்ட்., ரெண்டுக்கும் இப்ப பணம் தான் முக்கியம்., அந்த லூசு மாப்பிள்ளை வீட்லயும் நல்ல வசதி., எங்க அப்பா யார்னிங் ஃபுல்லா எனக்கு ன்னு மாப்பிள்ளை வீட்டில் நினைப்பு., அதுமட்டுமல்ல நான் ஒரே பொண்ணு அதனால இருக்கிற பிசினஸ்., & பராப்ர்ட்டி எல்லாம் எனக்கு ன்னு நினைச்சு அந்த லூசு மாப்பிள்ளை வீடு கணக்கு போடுது., அப்பாக்கு மைன்ட் செட் கல்யாணம் பண்ணி கொடுப்பது பெரிய இடமா கொடுத்துட்டா லைப் செட்டில் ஆகும் அப்படின்னு., இவர் வேற மாதிரி கணக்கு போடுறாரு., எனக்கு ஒன்னும் புரியல ஆனா எனக்கு இந்த கல்யாணம் புடிக்கல., மனசுல என்னமோ படபடன்னு அடிச்சிக்கிது., கல்யாணம் என்னால பண்ணிக்க முடியாதுன்னு தோணுது., ஏதாவது நிறுத்த பண்ணாலும்., அதை மீறி எனக்கு இவங்க கல்யாணம் பண்ணி வைக்கனும் ன்னு முடிவு பண்ணாங்கன்னா என்னோட முடிவு வேற மாதிரி இருக்கும்., சோ நான் என்ன பண்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கு., இப்ப நீங்கதான் தீர்வு சொல்லணும்., இல்லாட்டி நீங்க யாராவது என் கூட இந்தியா வரீங்களா., வந்தீங்கன்னா உங்களுக்கு தெரிந்த சொந்தக்காரங்களை வைத்தோ., இல்ல உங்க ரிலேஷன் வைத்து இந்த மேரேஜ் நிப்பாட்ட ஏதாவது வழி இருக்கா., ப்ளீஸ் யாராவது உங்களால முடிஞ்சா, சின்ன ஹெல்ப் பண்ணுங்க என்னால இந்த கல்யாணத்தை அக்சப்ட் பண்ணிக்க முடியாது”., என்றாள்