“கல்யாணத்தை நிப்பாட்டுறது எல்லாம் சாதாரண கிடையாது., இங்க நம்ம நிப்பாட்டுற மாதிரி அங்க நிப்பாட்டன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணனும்., இந்தியால போலீஸ்லாம் லஞ்சம் வாங்குவாங்கலாமா., அவங்கள எல்லாம் உங்க அப்பா பணத்தை கொடுத்து எல்லாத்தையும் சரிகட்டி அனுப்பிவிடுவார்., நீ என்ன பண்ணுவ”., என்று கேட்டாள்.
“அதுதாண்டி இப்போ எனக்கு யாராவது மேனுவல் ஹெல்ப் வேணும்., யார் ஹெல்ப் பண்ணுவா” என்று கேட்டாள்.
“நீ தைரியமா இரு, யார்கிட்டயாவது ஹெல்ப் கேட்டு பார்க்கலாம்”., என்று சொன்னாள் தோழி.
” எனக்கு யாரு ஹெல்ப் பண்ணுவான்னு தெரியணும் இல்ல., அப்படி ஹெல்ப் கிடைக்கும் என்றால் தான் நான் தைரியமா கிளம்புவேன்., நெக்ஸ்ட் வீக் அப்பா டிக்கெட் போடறதா பிளான் பண்ணி இருக்காங்க., நான் இதுக்கப்புறம் உங்களை பார்க்க கூட வருவனா ன்னு தெரியல., நெக்ஸ்ட் வீக் நாங்க போறோம்., அதுக்கு அடுத்த வீக் அந்த லூசு குடும்பம் வருது., அதுல இருந்து டூ வீக்ஸ்ல என்கேஜ்மென்ட் அண்ட் மேரேஜ் அப்படின்னு பேசி இருக்காங்க., சோ எனக்கு பயங்கர டென்ஷனா இருக்கு., இதுல வேற இந்த லூசு வேற அப்பப்போ போன் பண்ணி என்னை டார்ச்சர் பண்ணுது., போன் எடுக்கலைன்னா அப்பா நம்பருக்கு போன் பண்ணுது., அப்பா போனை கொண்டு வந்து என்கிட்ட கொடுத்து மாப்பிள்ளை பேசுறாரு பேசு., அப்படின்னு சொல்றாரு எனக்கு கோபம் ஏறுது., அந்த ஆள் பேசினா நாங்க போனை தூர வச்சுட்டு தனியா போய் உட்கார்ந்துகிறேன்., இதுக்காகவே உம் கொட்டி ரெக்கார்ட் பண்ணி வைக்கனும் போல.,
நான் பேசுவதை கேட்க மாட்டியா., இத உங்க அப்பா ட்ட சொல்லமாட்டேன் அப்படின்னு வேற இன்டேரக்ட்டா சொல்லி மிரட்டி பார்க்குது., அப்பா நீ என்ன இப்படி இருக்கிற ன்னு என்று கேட்கிறார்., அப்பவும் நான் ஓப்பனா சொல்றேன் எனக்கு கல்யாணம் புடிக்கல., அந்த லூசு கிட்ட எல்லாம் என்னை பேச சொல்லாதீங்க ன்னு சொல்லிட்டேன்., அதுக்கு வேற ஒரு பாடு சண்டை எங்க அம்மாட்ட போடுறாரு.,
நீ தான் எடுத்து சொல்லணும்., நீயே இப்படி பண்ணுனா எப்படி ன்னு எல்லாம் கேட்கிறார்., நான் என்னன்னு சொல்லுவேன்., ப்ளீஸ் எனக்கு யாராவது ஐடியா கொடுங்க”., என்றாள்.
“யோசிப்போம் டி., நீ நெக்ஸ்ட் வீக் போறதுக்கு முன்னாடி நாங்க இந்தியால எங்க ரிலேஷன் ட்ட எல்லாம் பேசி பார்க்கிறோம்., முதலில் நீ எந்த ஊர்ல மேரேஜ் வைக்கிறாங்க ன்னு தெளிவா கேட்டு எங்களுக்கு இன்பார்ம் பண்ணு., அதுக்கப்புறம் நாங்க மத்தத பேசுறோம்”., என்று சொன்னாள்.
“கண்டிப்பா கேட்டு ரெண்டு நாளுக்குள் சொல்ல ட்ரை பண்றேன்”., என்று சொன்னவள்
தோழிகளிடம் ” ஏதாவது முடிஞ்சா ஹெல்ப் பண்ணுங்கடி இல்லாட்டி நான் என்ன பண்றது ன்னு எனக்கே தெரியல., கோழை மாதிரி ஏதாவது முடிவெடுத்துருவேன்னு பயமா வேற இருக்கு., எவ்வளவு தான் போராட முடியும்., என்னால் பிடிக்காத மேரேஜ் பண்ணிக்க முடியாது” என்று சொன்னாள்.
நண்பர்களில் ஒருவன் “உங்க அப்பாவும் அந்த மாப்பிள்ளையும் மணிமைண்ட் ஆ கால்குலேட் பண்றாங்க ஓகே., உனக்கும் அது வந்து அவங்க கால்குலேட் பண்றது தெரியும் ஓகே., பட் நீ என்ன ரீசன்னால வேண்டாங்கிற., மேபி யாரையாவது லவ் ன்னு அந்த மாதிரி ஏதாவது”., என்று இழுத்து கேட்கும் போதே…
” லூசா டா நீ உங்களுக்கு தெரியாம நான் என்ன செய்திருக்கேன்., எனக்கு உங்களை தவிர வேற பிரண்டே கிடையாதே., அப்புறம் லவ் மட்டும் எங்க இருந்து வரும்”., என்று கேட்டாள்.
” உன் மனசுல வேற யாராவது இருக்காங்களா”., என்று மீண்டும் கேட்டான்.
” நிச்சயமா இல்ல., ஆனா இந்த ஆள பாத்தா இவரு எனக்கானவர் இல்லைன்னு என் மனசு உறுதியா சொல்லுது., எனக்கான முகம் இது கிடையாது., எனக்கான பேச்சு இது கிடையாது., எதுவுமே இது இல்ல”., என்றாள்.
” ஓ அப்போ உனக்கான ஆளு யாருன்னு பார்த்த உடனே கண்டுபிடிச்சிடுவ அப்படி தானே”., என்று கேட்டனர்.
“அப்படி எல்லாம் கிடையாது எனக்கு இதுவரைக்கும் அந்த மாதிரி தோணல., மே பி அவரை பார்த்தா தோணுதோ என்னவோ., இங்க இருந்த வரை ஒன்னும் பெருசா யோசிக்க கூட தோணலை., அம்மா பேசிக் இந்தியன் மாதிரி தான் வளர்த்தாங்க ன்னு உங்களுக்கு தெரியாதா., வெளியே வரும் போது தான் மாடர்ன் டிரஸ்., வீட்டில் இருக்கும் போது நைட் டிரஸ் கூட நீட்டா இருக்கணும்., இங்க உள்ளவங்க மாதிரி மத்த டிரஸ் எல்லாம் கிடையாது., புடவை கட்டணும், கோயிலுக்கு போகணும், சமைக்க கத்துக்கணும், எல்லாம் சொல்லி சொல்லி தான் வளர்த்தாங்க.,
ஆனா திடீர்னு ரீசண்டா ஒரு டூ இயர்ஸ் எங்க அம்மா ட்ட அப்பா வந்து இந்த மாதிரி எதுவும் வேண்டாம் ன்னு சொன்னாங்க., எங்க அப்பாகிட்ட சேஞ்சஸ் நிறைய., இப்ப ஏதாவது நான் செய்தா கூட அதெல்லாம் ஒன்னும் செய்ய வேண்டாம் அப்படின்னு சொல்றாரு., நான் சமையல் எல்லாம் கத்துக்கிட்டதுக்கப்புறம் கத்துக்காதன்னு சொல்லி என்ன பிரயோஜனம்., கத்துக்க சொல்லி கொடுக்கும் போது அப்பாவும் வேடிக்கை பார்த்துட்டு தானே இருந்தாரு., ஆனா அம்மா சொல்லுவாங்க, நான் காலேஜ் படிக்கும் போது உங்ககிட்ட சொல்லி இருக்கேன் என் லைஃப் இந்தியால செட் ஆகுற மாதிரி தான், எங்க அப்பா அம்மா பேசுவாங்க அப்படின்னு சொல்லி இருக்கேன் இல்ல., ஆனா இப்போ டோட்டல் டிஃபரண்டா மாறின அப்பா., இல்ல நீ இங்கதான் இருக்கணும், இங்க தான் உன்னை செட்ல்ட் பண்ணுவேன்னு சொல்லி பேசுறாங்க.,
எனக்கு சுத்தமா புரியல, ஏன் இப்படி இருக்காங்கன்னு தெரியல”., என்று சொன்னபடி கிளம்ப தொடங்க மீண்டும் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவன்
“யாரையும் லவ்வு ன்னு எல்லாம் இல்ல இல்ல” என்று கிண்டலாக கேட்டான்.
“அந்த மாதிரி ஒரு லவ்வும் இல்லை., அந்த லவ் இருந்தா தான் நான் தப்பிச்சு ஓடி இருப்பேனே., அது இல்லாம போச்சுன்னு தானே இப்ப வருத்தப்படுறேன்”., என்று சொன்னாள்.
” கவலைப்படாத கவலைப்படாத உனக்குன்னு ஒருத்தன் இனிமேல் பிறக்கவா போறான்” என்று பழைய டயலாக்கை மொத்தமாக அனைவரும் சேர்ந்து கத்தினர்.
“டேய் இருக்கிற கடுப்புல அத்தனை பேரையும் அடி கொன்னுடுவேன்”., என்று சொன்னவள்., “அப்படியே புடிச்சு தண்ணிக்குள்ள தள்ளி விட்டுடுவேன்”., என்று சொன்னாள்.
“அம்மா தாயே தள்ளிவிட்டுடாத” என்று ஆளாளுக்கு பேசிக்கொண்டு கதை பேசியவர்கள் அங்கிருந்து களைய தொடங்கினர்.
இவளோ ஏதோ மனதே இல்லாமல் கிளம்புவது போல கிளம்பி வீடு வந்து சேர்ந்தாள்.
வீட்டிற்கு வந்து சேரவும் உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அம்மாவும் அப்பாவும் ஒன்று போல திரும்பி பார்த்தவர்கள் இவளது முகத்தை பார்த்தபடியே இருந்தனர்.
அவள் அப்பாவோ “எங்க போயிட்டு வர்ற” என்று கேட்டார்.
திரும்பியவள் “பிரண்ட்ஸ பார்க்கப் போனேன்., பிரண்ட்ஸோட லஞ்ச் முடிச்சுட்டு வரேன்., என்ன விஷயம்” என்று கேட்டாள்.
“இல்ல இனிமேல் அடிக்கடி வெளியே போகாத அது நல்லா இருக்காது” என்று சொன்னார்.
“நம்ம ஒன்னும் இந்தியால இல்லையே., இங்க எல்லாம் கல்யாணத்துக்கு முதல் நாள் வரைக்கும் வெளியே சுத்துவாங்க, ஷாப்பிங் எல்லாம் போவாங்க, நீங்க தான் புதுசு புதுசா பேசுறீங்க” என்று சொன்னாள்.
“அப்படி தானே மாப்பிள்ளை வீட்டில் எதிர்பார்ப்பாங்க”, என்றாள்.
” என்னத்தை எதிர்பாப்பாங்க” என்று கேட்டாள் அமைதியாக.,
அதட்டி செல்ல முடியாமல் நிறுத்தி பேசியவர்., “என்ன பிரண்ட்ஸோட போய் எதுவும் பிளான் பண்றியா”, என்று கேட்டார்.
“என்ன பிளான் பண்ணனும், என்னோட பாஸ்போர்ட் உங்க கையில இருக்கு, அதை நேத்தைக்கே எடுத்து வச்சுட்டீங்கன்னு எனக்கு தெரியும்., அந்த பாஸ்போர்ட்ட வச்சி இப்போ டிக்கெட் போடுவதற்கு ரெடி பண்ணிட்டு இருக்கீங்கன்னு தெரியும்., வீசா வாங்க ஏற்பாடு செய்துட்டு இருக்கீங்கன்னு தெரியும்., இதுல நான் பிளான் பண்ணி என்ன பண்ண போறேன்., என்ன நெனச்சிட்டு பேசுறீங்க., உங்க இஷ்டத்துக்கு வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவீங்களா.,
இஷ்டம் இல்லன்னு சொல்லியும் கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துறீங்க., எனக்கு இஷ்டம் கிடையாது தான்., எனக்கு புடிக்கலைன்னா புடிக்கல தான்., இப்ப வரைக்கும் அதையே தான் சொல்றேன்., புடிக்கல புடிக்கல புடிக்கல” என்றவள்,
அம்மாவை பார்த்த படி “எல்லா வீட்டிலேயும் பொண்ணுங்களுக்கும் கல்யாண விஷயத்துல அம்மா தான் சப்போர்ட் பண்ணுவாங்க., ஆனா நீங்க வந்து ஒரு நல்ல அம்மாவே கிடையாது., பிடிக்காம கல்யாணம் பண்றது எவ்வளவு கஷ்டம் ன்னு உங்களுக்கு புரியல ன்னு நினைக்கிறேன்”., என்றாள்.
அதற்கு அவள் அப்பாவோ “அந்த காலத்தில் எல்லாம் பொண்ணுங்களுக்கு பேரன்ட்ஸ் பார்க்கிற மாப்பிள்ளை தான் மாப்பிள்ளையை பார்க்க கூட இல்லாமல் அம்மா அப்பா சொன்னதுக்காக கல்யாணம் பண்ணிப்பாங்களாம்., நீ நினைச்சு நினைச்சு பேசுறியா”., என்று கேட்டார்.
“நான் என்ன நினைச்சு நினைச்சு பேசுறேன்., நீங்க இஷ்டத்துக்கு மாப்பிள்ளை பார்த்தால் உங்க இஷ்டத்துக்கு நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது., உங்களுக்கு புடிச்சிருந்தா நீங்க கட்டிக்கோங்க., எனக்கு பிடிக்கலை ன்னு சொல்கிறேன்ல., நான் எதிர்பார்க்கிறது வேற”., என்று சொன்னாள்.
“என்ன எதிர்பார்க்கிற, நல்ல பணம் இருக்கு, நல்ல பேமிலி, நல்ல பிசினஸ் உன்னை நல்லபடியா கடைசி வரைக்கும் பார்த்துப்பாங்க., இதைவிட என்ன வேண்டும்” என்று சொல்லும் போதே
அவள் அப்பாவை பார்த்து “மனசு வேண்டும்., அன்பு வேணும்பா., அதைவிட முக்கியமா நல்ல கேரக்டர் வேணும், இங்க வளர்ந்தவங்க இப்படித்தான் இருப்பாங்கன்னு சாக்கு போக்கு சொல்லாதீங்க., நான் ஒழுங்கா தானே இருக்கேன்., இங்க வளந்தவ தானே நானும்., அப்படித்தான் இருப்பேன்னு சொல்லிட்டு நானும் வெளிய போயிட்டு வரட்டுமா”., என்று கேட்டவள் வேகமாக அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.