சந்தியாவும் சூரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க சுமித்ரா அவள் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று யோசித்தபடியே வெளியே வந்தவள் அங்கே நின்ற சூரியாவை கண்டதும் “சூரியா அண்ணா!” என்ற சந்தோசக்கூவலுடன் அவனிடம் சிரித்த முகமாக வர சூரியாவும் அவளைப் பார்த்ததும் மென்நகை புரிந்தான்.
“எப்பிடி இருக்க சுமி?” என்றபடி அவன் வெளியிலேயே நிற்க சுமித்ரா “அண்ணா வீட்டுக்குள்ள வாங்க. வெளியே நின்னு ஏன் பேசணும்?” என்றபடி அவனை உள்ளே அழைக்கவும்
சூரியா சந்தியாவை பெருவிரலால் சுட்டிக் காட்டியபடி “சுமி உனக்கு தெரிஞ்ச மேனர்ஸ்ல கொஞ்சம் உன் சிஸ்டருக்கும் கத்து குடு. ரேணு ஆன்ட்டி கரெக்டா தான் சொல்லிருக்காங்க. நீ கொஞ்சம் இர்ரெஸ்பான்ஸிபிள் கேர்ள் தான் பிரவுனி” என்று கூறிவிட்டு அவளைப் பார்த்து கண் சிமிட்டு விட்டு சுமித்ராவுடன் உள்ளே சென்றவனை நினைத்து உள்ளுக்குள் புகைந்தபடி அவர்களைத் தொடர்ந்தாள் சந்தியா.
எப்போதும் அளந்து பேசும் சுமித்ரா அவனிடம் வாய் ஓயாமல் பேசிவிட்டு “அண்ணா இருங்க., நான் உங்களுக்கு பிடிச்ச ஏலக்கா டீ போட்டு கொண்டு வர்றேன்” என்றபடி சமையலறையை நோக்கி உற்சாகமாக செல்ல சந்தியா இந்த கூத்தை கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சூரியா அவளைப் பார்த்தவன் “ஏன் நிக்கிற பிரவுனி? மரியாதை மனசுல இருந்தா போதும். பிளீஸ் சிட் டவுன்” என்று தன் அருகில் சோஃபாவை சுட்டிக் காட்ட அவள் புருவம் உயர்த்தி கேள்வியாய் பார்க்க “ஏன் இந்த வாயால பேசுனா ஆகாதா? ஐப்ரோவால தான் கொஸ்டீன் கேப்பிங்களோ?” என்று அவன் அதற்கும் வாயாட சந்தியா இவன் எப்போது இருந்து இவ்வளவு பேச ஆரம்பித்தான் என்ற ஆயாசத்துடன் இருக்கையில் அமர்ந்தாள்.
சுமித்ரா தேநீருடன் திரும்ப அதை வாங்கிக் கொண்டவன் அவள் வேலை தொடர்பான விஷயங்களை கேட்க தொடங்க சந்தியாவின் மனது அவள் எவ்வளவு அடக்கியும் அவள் பேச்சைக் கேட்காமல் சகோதரியிடம் உரையாடும் அவனது பேச்சை ரசிக்க ஆரம்பித்தது. பேசும் போது அடிக்கடி புருவத்தை ஆள்காட்டிவிரலால் தேய்ப்பது அவனது பழக்கம். அதே போல சின்ன புன்னகைக்கு கூட அவனது கன்னத்தில் விழும் குழி கூட சந்தியாவுக்கு பரிச்சயம் ஆனதே.
முன்பாவது சிரிப்பதற்கும் பேசுவதற்கும் காசு கேட்பான்; ஆனால் இப்போது அவள் கண் முன் அமர்ந்திருக்கும் இந்த சூரியா உற்சாகமாக பேசுவதோடு மனம் விட்டு சிரிக்கவும் செய்தான். அவன் சிரிப்பு அவளுக்கு பிரச்சனை இல்லை. விட்டால் நாள் முழுக்க கூட சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பாள்.
[the_ad id=”6605″]ஆனால் இந்த கடல் அலை போல் ஓயாத பேச்சும் இடையிடையே அவளைச் சீண்டுவதும் தான் அவளை அடிக்கடி கொம்பு சீவி விடுவது போல இருந்தது. இப்படியே அவன் செய்து கொண்டிருந்தால் அவளால் எப்படி அவனிடம் இருந்து விலகி இருக்க முடியும் என்ற கேள்வி தான் அவள் கண் முன் பூதாகரமாக நின்றது.
ஒரு வழியாக அவன் தேநீர் குடித்து முடிக்க சந்தியா ஏற்கெனவே அலுவலகத்துக்கு தயாராகி இருந்தவள் ஹேண்ட்பேக்கை எடுத்துக் கொண்டபடி “அப்போ நான் கிளம்புறேன் சுமிக்கா. சார் நீங்களும் கிளம்பலாமே! ஆபிஸுக்கு டைம் ஆச்சு” என்று தனது மணிக்கட்டை தட்டிக் காட்ட
சூரியா “இப்போ என்ன நீ என்னை என்ன சொல்லி கூப்பிட்ட பிரவுனி? சாரா?” என்று கேட்டபடி கூரியவிழிகளால் அவளை அளவிட சந்தியா இதில் என்ன குற்றம் கண்டுபிடித்தான் இவன் என்ற மாதிரி அவனைப் பார்க்க சுமித்ரா இருவருக்கும் இடையே இடையூறாக இருக்க விரும்பாமல் சமையலறைக்கு தம்ளரை வைக்கப் போகும் சாக்கில் சென்றுவிட்டாள்.
சூரியா “இனிமே நீ என்னை சார்னு கூப்பிட்டனு வையேன் நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது” என்று பொய்யான குரலில் மிரட்ட
சந்தியா அதைக் கேட்டு உதட்டைச் சுழித்தவள் “அஹான்! நான் பயந்துட்டேன் மார்ஸ்மாலோ. இப்போ கிளம்புறியா?” என்று கேட்டுவிட்டு தலையைச் சிலுப்ப
அவன் “கிளம்புறியா இல்ல பிரவுனி, கிளம்புவோமானு கேக்கணும்” என்றபடி அவள் அருகில் வந்து அவளது கரத்தை கோர்த்துக் கொள்ள சந்தியா “இப்போ நீ என் கையை விடுறியா இல்ல இந்த பேக்கால நாலு அடி போடவா?” என்று பேக்கை அவனை அடிக்க ஓங்க அவன் அதை பிடுங்கிக் கொண்டான்.
பின்னர் சமையலறையை நோக்கி “சுமி நாங்க கிளம்புறோம்டா., பை” என்றபடி அவளை இழுத்துச் செல்ல சந்தியாவும் அவனோடு போட்டி போட இயலாமல் கிளம்பிவிட்டாள். வெளியே வந்த பிறகும் கையை விடாமல் இருக்கவே அவனது தோளில் பட்டென்று ஒரு அடி வைத்தபடி “கையை விடுடா! இல்லைனா இன்னும் ரெண்டு அடி வைச்சிடுவேன்” என்று கூற அவன் சிரித்தபடி கார்க்கதவை திறந்துவிட்டான்.
உள்ளே அவள் அமர்ந்ததும் சாத்திவிட்டு முன் இருக்கையில் அமர்ந்தவன் “நீ அடிச்சது எனக்கு கொசு கடிச்ச மாதிரி தான் இருந்துச்சு பிரவுனி. ஐயாவை பார்த்தல்ல, ஜிம் பாடியாக்கும்” என்று கையை உயர்த்தி பலம் கட்ட
சந்தியா அழகு காட்டியபடி “ஆமா! முன்னாடி பார்க்க நெடுநெடுனு பனைமரம் மாதிரி இருந்த! இப்போ பார்க்க மலைமாடு மாதிரி இருக்க., இதுல பெருமை வேற” என்று அலட்சியமாக திரும்பிக் கொண்டாள்.
சூரியா அவளது வார்த்தையை கேட்டு சிரித்துவிட்டு அவள் கூந்தலை கலைத்துவிட்டபடி காரை ஸ்டார்ட் செய்தவன் அவர்களின் அலுவலகத்தை நோக்கி செலுத்த ஆரம்பித்தான்,.
அலுவலகம் வந்ததும் இருவரும் காரை விட்டு இறங்கியவர்கள் ஒன்றாக நடக்க ஆரம்பிக்க சந்தியா சூரியாவிடம் “மார்ஸ்மாலோ நான் முன்னாடி போறேன், நீ என் பின்னாடி வா. இல்லனா நீ முன்னாடி போ. ரெண்டு பேரும் ஒன்னா போக வேண்டாம்” என்று அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் முணுமுணுத்துவிட்டு முன்னேறிச் செல்ல அவன் மனதிற்குள் “நீ போ! ஆனா உள்ளே வந்து நான் என்ன பண்ண போறேனு எனக்கு மட்டும் தானே தெரியும்” என்று கூறிக் கொண்டே அவளைத் தொடர்ந்தான்.
அலுவலகத்தின் உள்ளே வரும் போதே அனைவரையும் மீட்டிங் ஹாலுக்கு வருமாறு கூறிவிட்டு அவன் இரண்டாவது தளத்தை நோக்கி செல்ல சந்தியாவும் அவனை தொடர்ந்தாள். அனைவரும் அங்கே கூடிவிட புதிதாக பணிக்கு வந்த அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் சந்தியாவும் எழுந்து தன்னை அறிமுகப்படுத்த ஆயத்தமானாள்.
அவள் எழும்பி சொல்வதற்கு முன்னரே சூரியா “மீட் மிஸ் சந்தியா தேவராஜ்., மை நியூ செகரட்டரி. அதோட இம்ப்பார்ட்டென்ட் விஷயம் அவங்க என்னோட குளோஸ் ஃப்ரெண்ட். சோ நீங்க எல்லாரும் எனக்கு குடுக்கிற அதே மரியாதையை அவங்களுக்கும் குடுப்பிங்கனு எக்ஸ்பெக்ட் பண்ணுறேன். ஓகே எவ்ரிபடி கோ பேக் டு யுவர் ஒர்க்” என்று அறிமுகப்படுத்திய கையோடு அவர்கள் அனைவரையும் அனுப்பி வைத்தான்.
சந்தியா அவனிடம் வந்தவள் “சார் நானும் உங்க மத்த எம்ப்ளாயி மாதிரி தான். சோ இங்க எனக்குனு எந்த ஸ்பெஷல் மரியாதையும் தேவையில்ல” என்று கூற
சூரியா “நோ பிரவுனி. நீ என்னோட ஃப்ரெண்ட். உனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கண்டிப்பா கிடைக்கும். இவ்ளோ ஏன் விட்டா நான் என்னோட எம்.டி சேரை கூட உனக்கு விட்டுக் குடுப்பேன்” என்று கேலியாக முடிக்க
சந்தியா “அஹான்! இவர் பெரிய டோனி ஸ்டார்க், இவரோட கம்பெனியை செகரட்டரிக்கு தானம் பண்ணுறாரு. எதுக்கு தேவை இல்லாம பேசிகிட்டு., நான் என் வேலையை ஸ்டார்ட் பண்ணனும். இப்போ நான் என்ன பண்ணனும்?” என்று அவனை கேலி செய்துவிட்டு வேலையை ஆரம்பிக்கும் ஆர்வத்தில் கேட்க அதற்கு மேல் சூரியாவும் அவள் செய்ய வேண்டிய வேலைகளை பற்றி கூறிவிட்டு அவளுக்கான கேபினுக்கு அனுப்பி வைத்தான்.
[the_ad id=”6605″]சந்தியா தனது கேபினை அடையும் போது கதவின் கைப்பிடியில் கைவைக்க அது சுலபமாக திறந்து கொண்டது. சந்தியா “நான் இப்போ தானே வர்றேன். எனக்கு முன்னாடி யாரு உள்ளே போனது?” என்ற யோசனையுடன் பூனை போல அடி வைத்து உள்ளே செல்ல அங்கே கோப்புகளை அடுக்கி வைக்கும் ரேக்கிற்கு பின் யாரோ நிற்பது அதன் கீழே தெரிந்த ஷூ அணிந்த கால்கள் அறிவிக்க சந்தியாவின் மூளை விபரீதமாகச் சிந்திக்க ஆரம்ப்பித்தது.
மெதுவாக கால்கள் பின்னோக்கி நகர சத்தம் போடாமல் அந்த அறையை விட்டு வெளியேறியவள் கதவை வெளிப்புறமாக தாழிட்டு விட்டு சூரியாவின் அறையை நோக்கி வேக வேகமாக நடந்தாள். அவன் அறைக்கதவை தட்டி அனுமதி வாங்குமளவுக்கு பொறுமையில்லாதவளாய் சட்டென்று கதவைத் திறந்து உள்ளே சென்றவள் சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி போனில் பேசிக் கொண்டிருந்தவனிடம் சென்று “சார் என்னோட ரூம்ல யாரோ திருடன் நுழைஞ்சிட்டான்” என்று கூற சூரியா அவளை வினோதமாக பார்த்தான்.
“வாட்? திருடனா? அதுவும் நம்ம ஆபிஸ்லயா? விளையாடாதே பிரவுனி. இன்னும் பேபி மாதிரி நடந்துகிற. கோ பேக் டு யுவர் சீட்” என்று கூற சந்தியா அவனது கையைப் பிடித்தவள் “பிளீஸ் சார்! எனக்கு பயமாயிருக்கு” என்று தயக்கத்துடன் கூற சூரியா அவளை குறும்புடன் பார்த்துவிட்டு எழுந்தான்.
அவன் வருவான் என்ற நம்பிக்கையில் வாசல் வரை சென்று விட்டவள் தன் பின்னே அவன் வரும் அரவம் கேட்காததால் திரும்பி பார்க்க அவன் டேபிளில் சாய்ந்தபடி ஒரு கோப்பை புரட்டிக் கொண்டிருந்தான்.
சந்தியா திகைத்தவளாய் “சார் ஏன் அங்கேயே நிக்கிறிங்க? என் கூட வாங்க. அந்த திருடனை கையும் களவுமா பிடிக்கணும்லா” என்று கூற
அவன் “நீ இந்த சார் மோர் தயிரை விடற வரைக்கும் நான் இங்கே இருந்து ஒரு இன்ச் கூட நகர மாட்டேன்” என்று கூற சந்தியா “ஓகே ஓகே! சூரியா பிளீஸ் வாங்க” என்று அழைக்க அவன் அதற்கும் அசராமல் நிற்கவே அவள் எரிச்சலுற்றாள்.
“ஏய் ரொம்ப பிகு பண்ணாதே மார்ஸ்மாலோ. நான் நினைச்சா அந்த திருடனை தனியாளா பிடிச்சிடுவேன். வீணா உன் கம்பெனி செக்யூரிட்டி சிஸ்டத்தை கேலிப்பொருளா ஆக்க கூடாதேங்கிற நல்லெண்ணத்துல சொன்னா நீ ஓவரா தான் பண்ணுற. நீ ஆணியே புடுங்க வேண்டாம், நானே அவனை பார்த்துக்கிறேன்” என்று கடுப்புடன் மொழிந்துவிட்டு கிளம்ப எத்தனிக்க அவனும் அவள் பின்னே தொடர்ந்தான்.
தனது மேஜையில் வைத்திருந்த டேபிள் வெயிட்டுடன் வந்தவன் அவள் கதவை திறக்கச் செல்லவும் தான் திறப்பதாக கூறிவிட்டு கதவில் கைவைத்து உள்பக்கம் தள்ளியவன் அவள் சொன்னபடியே ஃபைல் ரேகிற்கு கீழே தெரிந்த ஷூ அணிந்த கால்களை கண்டதும் அவள் அமர்வதற்கு போடப்பட்டிருந்த நாற்காலியை கையில் எடுத்துக் கொண்டான். அதோடு அந்த இடத்தை நோக்கி நகர்ந்த சூரியா அங்கே முதுகு காட்டி நின்று கொண்டிருந்தவனை கவனிக்காமல் நாற்காலியை அவன் தலையிலடிக்க ஓங்கிவிட்டான்.
அதற்குள் அங்கே முதுகு காட்டியபடி நின்றிருந்த அந்த ஷூ கால்களுக்கு சொந்தக்காரன் திரும்பி இவன் நாற்காலியை ஓங்குவதைக் கண்டதும் “டேய் அண்ணா நான் தான்டா” என்று கத்திவிட ஏற்கெனவே பயந்து போயிருந்த சந்தியா ஓடிச் சென்று சூரியாவின் பின்னே ஒழிந்து கொண்டாள்.
சூரியா தன் எதிரே நிற்பவனை வினோதமாக பார்த்தபடி நாற்காலியை தரையில் வைத்து விட்டு “உன்னாலே டென்சன் ஆயிடுச்சுடா” என்றபடி அவனை முறைத்தான்.
அதற்குள் அவனை அண்ணா என்று அழைத்தவன் சூரியாவின் பின் நின்றபடி எட்டிப்பார்த்த சந்தியாவைப் பார்த்து கேலியாக “சோ இந்த விபரீத சம்பவத்துக்கு காரணம் உன் பின்னாடி நிக்கிற அந்த ட்வார்ஃப் தானா” என்று அவளை கேலி செய்துவிட்டு இன்னும் அவள் அண்ணனின் பின்னே மறைந்து நிற்பதை கண்டுவிட்டு “ஆமா இந்தம்மா கில்லியில வர்ற திரிஷா, இவரு தளபதி பாரு! அட சீ ஒழியாம முன்னாடி வந்து நில்லு” என்று கிண்டலடிக்க சந்தியா இவன் யாரென்ற குழப்பத்துடன் முன்னே வந்தாள்.
[the_ad id=”6605″]சூரியா அவளிடம் “இவன் ஆரியா! என்னோட தம்பி. இந்த கம்பெனியோட டைரக்டர்ல ஒருத்தன்” என்று அறிமுகப்படுத்த வந்தவன் கிட்டத்தட்ட சூரியாவின் சாயலிலேயே அதே உயரத்துடன் இருக்க சூரியாவின் கன்னக்குழி மட்டும் அவனிடம் மிஸ்ஸிங். சந்தியா ஒரு புன்னகையுடன் அவனிடம் கைகுலுக்கிக் கொண்டாள்.
சூரியா அதோடு நிற்காதவனாய் ஆரியாவிடம் திரும்பி “இவ தான் என்னோட பிரவுனி” என்று கூறிவிட்டு அவள் தோளில் கையை போட்டுக் கொள்ள சந்தியா சட்டென்று அவன் கையை தட்டிவிட்டாள்.
அவன் அதை கண்டுகொள்ளாமல் மீண்டும் கையை போட சந்தியா தட்டிவிட இந்த விளையாட்டு புதியவனின் கண்ணில் படவும் அவன் விஷமமாக சிரித்தபடி “ஓ! இவங்க தான் பிரவுனியா? நீ திருநெல்வேலி போயிட்டு வந்ததுல இருந்து ஒரு போட்டோவை வச்சு ஃபீல் பண்ணுனியே, அந்த போட்டோல இருந்த பொண்ணா இது?” என்று கூற சந்தியா இது என்ன புதுகதை என்பது போல சூரியாவை பார்த்தாள்.
அவன் பேசுவதைக் கேட்ட சூரியா தோளை குலுக்கிவிட்டு “அவன் பொய் சொல்லுறான் பிரவுனி. நீ அதெல்லாம் காதுல போட்டுக்காதே” என்று கூறியபடி தம்பியிடம் சென்றவன் அவன் காதில் “டேய் வந்த உடனே வேலையை ஆரம்பிச்சிட்டியா?” என்று பற்களை நறநறக்க
ஆரியா இலகுவாக “வேலையை ஆரம்பிச்சது நீயா நானா ப்ரோ?” என்று கேட்டுவிட்டு கண்ணை சிமிட்டியவன் சந்தியாவிடம் “ஓகே சாக்லேட் பேபி, நீ போய் உன் வேலையைப் பாரு. எனக்கும் என் ப்ரோக்கும் நிறைய வேலை இருக்கு. பை! அப்புறமா வந்து உன்னை டிஸ்டர்ப் பண்ணுறேன்” என்று கூறிவிட்டு நகர சந்தியாவுக்கு அவர்கள் இருவரும் வெளியேறிய பிறகு மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது.
அதன் பின் அவள் வேலையை பார்க்கத் தொடங்க மதியமானதும் சாப்பிட எங்கே செல்ல என்று விழித்தவள் அவளது அறையில் ஒரு ஓரமாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலையை தொடர்ந்தாள். மாலையில் சூரியா கேட்ட ரிப்போர்ட்டை அவனிடம் அளிக்கச் சென்றவள் அவனது மேஜையில் இருந்த காபிகப்பை கையில் எடுக்கவும் சூரியாவின் குரல் கேட்டது.
“கப்பை கீழே வை பிரவுனி” என்றவனின் குரலில் திரும்பியவள் “இல்ல சார்! இதை கிளீன் பண்ணி வைக்க தான் போறேன்” என்று கூற அவன் “அது உன்னோட வேலை இல்ல” என்று கப்பை பிடுங்கிக் மேஜையில் வைத்தான்.
“ஆனா நான் உங்க செகரட்டரிட் தானே, அதான் கிளீன்…..” என்றவளை இடைமறித்தவன் “இதை செய்யறதுக்கு எர்ரண்ட் ஸ்டாஃப் இருக்காங்க. நீ அஃபிஷியல் ஒர்க்கை மட்டும் பார்த்தா போதும். இந்த கிளீனிங், குக்கிங் எல்லாம் உன்னை மாதிரி பொண்ணுங்களோட வேலை இல்ல. நாம எதுவா ஆக ஆசைப்படுறோமோ அதுவா முதல்ல நம்மளை இமேஜின் பண்ணிக்கனும். நீ ஆடிட்டர் ஆக ஆசைப்பட்டேனா முதல்ல அந்த பொசிசன்ல நீ உன்னை இமேஜின் பண்ணிக்கோ. எந்த ஆடிட்டரும் கம்பெனியில காபிகப்பை வாஷ் பண்ணுறது இல்ல” என்று முத்தாய்ப்பாய் கூறி முடித்தான்.
சந்தியாவும் அதற்கு தலையாட்டிவிட்டு நகர்ந்தாள். மனதிற்குள் “மார்ஸ்மாலோ தான் எவ்ளோ நல்லவன்!” என்று சிலாகித்தபடி தனது அறைக்கு சென்றாள். வந்த முதல் நாளே அவளுக்கு அந்த அலுவலகம், சக ஊழியர்கள் எல்லாம் பிடித்துப் போய்விட, சுமித்ரா சொன்னது போல எந்த பிக்கல் பிடுங்கலுமில்லாத அந்த வேலை அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது.
அன்று மட்டும் அல்ல. அதன் பின் வந்த நாட்களிலும் எப்போதுமே சூரியா தனது அலுவலக பணிகளை தவிர்த்து சொந்த வேலைகள் எதையும் அவளைச் செய்ய சொல்லவில்லை. அதே போல அவளை தனது தோழி என்று அறிமுகப் படுத்திவிட்டதால் சந்தியாவுக்கு அந்த அலுவலகத்தில் மரியாதைக்கும் குறைவில்லை.
அவளுமே அதிகாரத்தை காட்டி வேலையை முடிக்கும் ரகம் இல்லை என்பதால் அவள் கேட்ட தகவல்களை உடனுக்குடன் கொடுப்பதில் அவளது சக ஊழியர்கள் சுணக்கம் காட்டவில்லை.
சூரியாவுக்கு தான் கொடுத்த வேலைகள் அனைத்தையும் சுறுசுறுப்புடன் செய்து முடிக்கும் அவனது தோழி சென்னை வந்ததன் முக்கிய நோக்கத்தை மறந்துவிட்டாளோ என்ற ஐயம். ஏனெனில் வேலைக்கு சேர்ந்த ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அவள் பட்டயக்கணக்காளர் படிப்புக்காக விண்ணப்பிக்காமல் இருந்ததே அதற்கு காரணம்.
எனவே சனிக்கிழமை மாலை அவள் கிளம்பும் போதே “பிரவுனி கமிங் மன்டே மார்னிங் நம்ம சதர்ன் கவுன்சிலுக்கு போய் என்ட்ரோல் பண்ணிட்டு வந்திருவோம்” என்று கூற
சந்தியா தயக்கத்துடன் “உங்களுக்கு எதுக்கு சார் சிரமம்? நானே போய் அப்ளிகேஷன் ஃபார்ம் ஃபில் பண்ணி குடுத்துடுறேன்” என்று கூறிவிட்டு வெளியேற முயற்சிக்க அவளைத் தடுத்தான் சூரியா.
என்ன என்பது போல பார்த்தவளிடம் “மன்டே நீ என் கூட என்ட்ரோல் பண்ண வர்றியானு நான் உன் கிட்ட கேக்கல. நாம போறோம்னு உனக்கு இன்ஃபர்மேசன் மட்டும் தான் குடுத்தேன். இதுல எனக்கு எந்த சிரமமும் இல்ல. அண்ட் ஒன் மோர் திங், என்னை இனிமே சார்னு சொல்லாதே பிரவுனி. எனக்கு அதை கேக்க பிடிக்கல” என்று நறுக்கு தெறித்தாற்போல கூறிவிட்டு நீ கிளம்பலாம் என்று சைகை காட்ட அவளும் தலையாட்டிவிட்டு வெளியேறினாள்.
சந்தியா சென்றதும் எரிச்சலுடன் “டேமிட்! எப்போ பாரு சார் சார்னுட்டு. நான் அவளுக்கு சாரா?” என்று சற்று உரத்தக் குரலில் கூறிக் கொண்டவன் நீ அவளுக்கு சார் இல்லையென்றால் வேறு யார் என்று மனசாட்சி கேட்ட கேள்வியை மட்டும் வசதியாக ஓரம் தள்ளிவிட்டான்.
சாரல் வீசும்….