அன்று ஆதவன் வீட்டுக்கு வரும் போது அவன் முகம் ஏதோ யோசனையில் இருப்பதை சிந்து கண்டு கொண்டாள். “என்ன ஆச்சுங்க? என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க?”, என்று தயக்கமே இல்லாமல் கேட்டு விட்டாள். அவனிடம் அவள் ஏன் தயங்கப் போகிறாளாம்?
“என் மனசுல குழப்பம் இருந்தாக் கூட கண்டு பிடிச்சிருவியா டி?”, என்று கேட்டுக் கொண்டே அவளைக் கட்டிக் கொண்டவன் “உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் சிந்து“, என்றான்..
“நானும் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”
“அப்படியா? என்னது டி?”
“நீங்க முதல்ல சொல்லுங்க”
“வைதேகி கல்யாண விஷயம் டி”
“வைகுந்த் அண்ணா பாரீன்ல இருந்து வந்துட்டாங்களா?”
“இன்னைக்கு தான் வந்திருப்பான் போல? வந்ததும் கூப்பிட்டான். சீக்கிரம் முடிச்சு வைக்கணும்”
“சரி போகலாம். ஆமா நீ ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்ன? என்ன?”
“அது வந்து… எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும்ம்”
“நீ சொன்னா மலையையே புரட்டுவேன் டி”, என்று அவன் சொல்ல “ஐயோ வழியுது”, என்று சிரித்தாள் சிந்து.
“ஹா ஹா, சரி சொல்லு. நான் என்ன செய்யனும்”
“உங்க பேக்ட்டரில நம்ம அஞ்சலிக்கு ஒரு வேலை போட்டுத் தரணும்”
“என்ன டி சொல்ற? அஞ்சலிக்கா? அவளுக்கு சென்னைல இல்லாத வேலையா?”
“அங்க வேலை எதுவும் செட் ஆகலைங்க. அவளுக்கு ரெண்டு தங்கச்சி. அவங்க வேற படிச்சிட்டு இருக்காங்க. அவங்க அப்பா ஆட்டோ மட்டும் ஓட்டி கஷ்டப் படுறார். இவளுக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சா அவங்க குடும்பத்துக்கு சப்போர்ட்டா இருக்கும்”
“அஞ்சலி என் தங்கச்சி மாதிரி டி. அவளுக்கு செய்யாம நான் யாருக்கு செய்யப் போறேன்? கண்டிப்பா செய்றேன் டி. அவளை வரச் சொல்லு”
“நாளைக்கே வரச் சொல்லிறவா?”
“அவளோட அம்மா அப்பா அவளை நம்ம வீட்ல தங்க சம்மதிப்பாங்களா சிந்து?”
“அப்படின்னா கண்டிப்பா டி வரச் சொல்லு. சரி வா, அப்பா கிட்ட பேசலாம். நீ கூட இருந்தா தான் குண்டக்க மண்டக்க பேச மாட்டார். இல்லைன்னா தனியா சிக்குன ஆடு மாதிரி நான் தான் முழிக்கணும்”
“இதையே தான் அத்தை கிட்ட மாமாவும் சொல்றாங்களாம்”, என்று சொல்லிக் கொண்டே அவனுடன் நடந்தாள்.
சிரிப்புடன் கீழே வந்தவன் தந்தையைக் கண்டதும் சிரிப்பை நிறுத்தி விட்டு அவர் அருகில் சென்று அமர்ந்தான்.
“என்ன டா? திருட்டு முழி முழிச்சிட்டு வர? கம்பெனியை பாத்துக்கோங்கன்னு சொல்லப் போறியா?”, என்று ரத்தினம் கேட்க “அவன் நல்ல பேச வந்தாலும் நீங்க வாயை வச்சிட்டு சும்மா இருக்கீங்களா?”, என்று கணவரை அடக்கினாள் மங்கை..
“அப்பா, எப்படியும் இன்னும் ஒரு வாரத்துல எல்லா பொறுப்பையும் உங்க தலைல ஒப்படைச்சிட்டு நான் ஹனிமூன் போகத் தான் போறேன்”, என்றான் ஆதவன்.
“என்னது ஹனிமூணா? அப்படின்னா போன மாசம் போனது?”
“அது சும்மா”
“போன வாரம் போனது?”, என்று அவர் விடாமல் கேட்க “ஐயோ கொஞ்சம் வாயை மூடுங்க. சும்மா அவன் கிட்ட ஒரண்டை இழுத்துகிட்டு”, என்று கணவரை திட்டிய மங்கை “என்ன விசயம்ன்னு சீக்கிரம் சொல்லித் தொலையேன் டா, நீயும் ஏட்டிக்கு போட்டி பேசிட்டு இருக்க?”, என்று மகனையும் திட்டினாள்.
“நம்ம வைதேகிக்கு ஒரு வரன் வந்திருக்கு பா. மாப்பிள்ளை என் ஃபிரண்ட் தான். பேர் வைகுந்த். அவன் எங்க கல்யாணம் அப்ப பாரின்ல இருந்தான். அதான் வரலை. என் கூட தான் படிச்சான். அம்மாக்கு கூட அவனை நல்லா தெரியும். இல்ல மா? அவனுக்கு இப்ப வீட்ல பொண்ணு பாக்குறாங்க. அதான் நம்ம வைதேகியைச் சொல்லாம்னு தோணுச்சு”, என்று ஆதவன் சொன்னதும் “ஆமாங்க அவனும் நல்ல பையன் தான்”, என்றாள் மங்கை.
“அதுக்கென்ன தாராளமா செய்யலாம். நான் இப்பவே மச்சான் கிட்ட பேசுறேன்”, என்று சொன்ன ரத்தினம் பரமசிவத்தை அழைத்தார்.
“சரி மாப்பிள்ளை, கொடுங்க”, என்று பரமசிவம் சொன்னதும் போன் ஆதவன் கைக்கு மாறியது.
“மாமா”
“ஆதவா எப்படி இருக்க பா? என் மக எப்படி இருக்க? ஒரே ஊர்ல இருக்கோம்னு தான் பேர். வயலுக்கு காலைலே போனா நைட் தான் வீட்டுக்கு வரோம். எங்க பாக்க முடியுது?”
“நான் நல்ல இருக்கேன் மாமா. சிந்துவும் நல்லா இருக்கா”
“சரிப்பா, அந்த பையன் யாரு ஆதவா?”
“பேரு வைகுந்த் மாமா. நாங்க எல்லாம் ஒண்ணா தான் படிச்சோம். இத்தனை நாள் பாரின்ல இருந்தான். இனி சென்னைல தான் வேலை. நல்ல வேலைல இருக்கான். வீட்டுக்கு ஒரே பையன். அவங்க அப்பா ஏர்போர்ட்ல வேலை பார்த்தார். அதனால நல்ல வசதி. வைதேகியை அவங்க வீட்ல கொடுத்தா சந்தோஷமா இருப்பா. வைகுந்த் அப்பா அம்மாவும் எனக்கு நல்ல பழக்கம். ரொம்ப நல்லாவே நம்ம வைதேகியை பாத்துக்குவாங்க”
“அந்த பையனுக்கு கெட்ட பழக்கம் எல்லாம்….”, என்று தகப்பனுக்கே உரிய எச்சரிக்க உணர்வில் கேட்க “சத்தியமா கிடையாது மாமா. நீங்க என்னை விட அவனை நம்பலாம்”, என்று அவசரமாக சொன்னான்.
“சரிப்பா, நான் உன் அத்தை கிட்டயும் பாட்டி கிட்டயும் கேட்டுட்டு சொல்றேன்”
“சரி மாமா, கேட்டுச் சொல்லுங்க”, என்று சொல்லி போனை வைத்தான்.
“மச்சான் என்ன சொல்றார்?”, என்று கேட்டார் ரத்தினம்.
“வீட்ல எல்லார்க் கிட்டயும் கேட்டு சொல்றேன்னு சொன்னார் பா”
“சரி டா”
“அப்பா இன்னொரு விஷயம்”
“என்ன ஆதவா?”
“நம்ம கம்பெனி கொஞ்சம் டெவலப் ஆகிருச்சு”
“அதான் தெரியுமே?”
“ஸ்டாக் எல்லாம் கம்ப்யூட்டர்ல ஏத்தணும். நம்ம ரங்கனுக்கு பல தடவை சொல்லிக் கொடுத்தாலும் மண்டைல ஏறலை. எப்பவும் பெரிய நோட்டையே தூக்கிட்டு அலையுறான். அதான் ஒரு ஆளை வேலைக்கு வைக்கலாம்னு இருக்கேன்”
“அது உன் சாம்ராஜியம். நீ என்ன வேனாலும் செய்யலாம் டா. சரி ஆள் யாரு”
“சிந்துவோட பிரண்டு அஞ்சலி பா”
“ரொம்ப சந்தோஷம் பா. நல்ல பொறுப்பான பொண்ணு. வரச் சொல்லு”
“நம்ம வீட்ல தங்கச் சொல்லட்டுமா பா?”
“இவ்வளவு பெரிய வீட்ல அவ தங்கவா இடம் இல்லை?”, என்று மகனிடம் சொன்னவர் “சிந்து, அவளை வரச் சொல்லு மா. அந்த பொண்ணோட அம்மாவுக்கு போன் பண்ணிக் கொடு. உன் அத்தை பேசுவா. அப்ப தான் அவங்களுக்கும் நம்பிக்கை வரும்”, என்று மருமகளிடம் சொன்னார்.
உடனே சிந்து அஞ்சலி வீட்டுக்கு அழைத்துக் கொடுக்க அஞ்சலியின் அன்னை கீதாவிடம் பேசினாள் மங்கை.
“உங்க பொண்ணை அனுப்பி வைங்க. என் மக மாதிரி பாத்துக்குறேன்”, என்று சொல்ல மங்கை பேச கீதாவும் சரி என்று சொன்னாள். அன்று இரவே அஞ்சலி அங்கிருந்து கிளம்ப போவதாக தகவல் சொல்லி விட்டாள்.
அன்று மாலை மனைவியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் ரத்தினம். அப்போது வேணியின் கணவர் விஸ்வம் அவரை அழைத்தார். அதை எடுத்து “சொல்லுங்க மாப்பிள்ளை, எப்படி இருக்கீங்க? இப்படியா சொல்லாம கொள்ளாம போறது?”, என்றார் ரத்தினம்.
“அங்க என்னால இருக்க முடியலை மச்சான். எல்லாத்தையும் மறக்க எனக்கு கொஞ்ச அவகாசம் வேணும். அதான் கிளம்பி வந்துட்டேன்”