Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 14 3

அவளை எழுப்பி உண்ண வைத்தவன், அவளோடு சேர்ந்து தூங்க போக விடிந்திருந்தது,, காலில் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்தான் ரவி.

ஜூலியும், கண்மணியும் வாசலில் நின்று இருந்தார்கள், “சீதா எப்படி இருக்க”என்று கேட்க.



Advertisement

, “அவ தூங்குற”, என்றவன்.

“நீங்க எங்க  போக ரெடியா  இருக்கீங்க” என்றான்,.

Advertisement

Advertisement

“ரிஷி வர சொன்னான் டா,  இன்னைக்கு ஊருக்கு போறான் அதான்  வர சொன்னான், நீ சீதாவை பார்த்துக்கோ, நாங்க போறோம்” என்றவர்கள்  சீதாவை பார்க்க போக.

“அவ தூங்குற கண்மணி நீங்க போங்க நான் சொல்லிக்கிறேன்”  என்றான் ரவி..

Advertisement

“சரிடா சீதாவை பார்த்துக்கோ, நாங்க ஈவ்னிங் வந்துருவோம்” என்று ஜூலியும், கண்மணியும்  கிளம்ப.

அப்பாட என்றவன். அறைக்கு வந்து.

சீதாவை அணைத்த படியே தூங்கிவிட.

இருவரும் சாயங்காலம் தான் கண்விழித்தனர், முதலில் கண்விழித்தது ரவி தான்,.

தன்னருகே அறை குறை ஆடையில் தன்னை அணைத்து படியே தூங்கி கொண்டு இருந்தவளை பார்த்தவனுக்கு போதை தலைக்கேற,, முத்தமிட்டே  அவளை எழுப்பினாள்,, சீதா சுகமான தூக்கத்தில் இருந்தாள்,, ரவி தொடுதலும்,  முத்தத்தையும் உணர்ந்தவள், “ரவி” என்று மெல்ல முணங்க, அவளின் முணங்கள் அவனுக்கு  மோக தீயை மூட்ட.. அவளிடம்  இன்னும்  நிறைவேறாமல் இருந்த பல விதமான தேடலை அவன் தொடற ,, அவளை பல வகையில் கொஞ்சி ஆட்கொண்டவன்,, அவளை தன்னை கொஞ்ச வைத்தான், சீதாவே அவனின் கொஞ்சல் தாங்க முடியாமல் இவனை கொஞ்சி தீர்த்தவள், ரவியின் அணைப்பில் இருக்க.

இருவருக்கும்  அப்படி ஓர் திருப்தி,,  இன்ப கடலில் நீந்தி மூச்சு வாங்கியர்கள், போதும் போதும் என்று சுகத்தை அனுபவித்தவர்கள், ஒருவரோடு ஒருவர் பின்னி, பிணைத்து படுத்து கொண்டிருக்க..

“சீதா”” என்றான் ரவி…

“ஊம்ம்” என்றவளுக்கு அவனின் முகத்தை பார்க்கவே முடியவில்லை,,

அவளின் முகத்தை அவன் உடலில் மறைத்தவள்,, “என்ன ரவி” என்றாள்..

“ஐ யம் ஹாப்பி யஸ்ட் இன் தா வெல்ட்” என்றான்..

அவளோ நானும் தான் என்பது போல் அவனை அணைத்துக்கொள்ள..

சீதா அணைத்ததும் அவளை இறுக்கமாக அணைத்து முத்தமிட்டவள்.

கழைந்திருந்தவளின், தலை முடியை அவள் காதோரம் ஒதுக்கியவன், அவளின் முகவடிவை தன் விரல் கொண்டு வருடியவன்.

அவளை தன் முகத்தருகே  தூக்கி பார்க்க வைத்தவன்,

“உனக்கு என்ன வேணும் சீதா”? என்றான்.

“எனக்கா? எனக்கு ஒன்னும் வேண்டாம் ரவி”?.என்றவள்

 அவன் படுத்திய  பாட்டில் அவனின்  மார்பில் மீது தலை வைத்து சீதா  கண்மூடி படுத்திருக்க…

“சொல்லு சீதா உனக்கு என்ன வேணும்,” என்று மீண்டும் கேட்க.

அவளோ தூங்குவதற்கு தயாராகி இருக்க.

கண்களை மூடி இருந்தாள்.

“உனக்கு என்ன வேணும் சீதா சொல்லு” என்றவன் அவளின் முகத்தை தன்னை நோக்கி  திருப்ப.

“என்ன ரவி”? என்று எழுந்து அமர்ந்தவள்.

“புரியல”? என்றாள்.

“உனக்கு பாரின் கார், இல்ல பீச் ஹௌஸ், இல்ல பாரின் டூர், இந்த மாதிரி ஏதாவது வேணுமா” என்றான்.

“எனக்கா, எனக்கு எதுக்கு ரவி எனக்கு ஏற்கனவே ஒரு வில்லா இருக்கு அது போதும், கார் என் அப்பா கார் இருக்கு, பாரின் போகுற ஆசையெல்லாம் எனக்கு  இல்ல” என்றாள்.

அவன் சொல்ல வருவதை புரிந்து கொள்ளாமல்,,..

“சீதா உனக்குன்னு ஆசையில்லையா, ஏதாவது சூப்பர் ஸ்டார் கூட படம் நடிக்கனுமா, இல்லா ஹிந்தி மூவி” என்று  அவன் பேச.

“எனக்கு இப்போ எதுவும் வேண்டாம் ரவி, பசிக்குது தூங்கனும் அவ்வளவு தான்” என்றாள்..

“சீதா நான் எல்லார் கிட்டை கேட்கறது தான் சொல்லு” என்றதும்..

“என்னது எல்லார் கிட்டையுமுன்னா புரியல ரவி”,, என்றாள்…

“ஆமா சீதா என்னை சந்தோஷ படுத்துன எந்த பொண்ணையும் நான் சும்மா அனுப்பனது இல்லை, பல லட்சம் மதிப்பு உள்ள சொத்து, வீடு, நகை இந்த மாதிரி ஏதாவது கொடுத்து தான்  நான் அவங்களை அனுப்புவேன்,  சொல்லு உனக்கு என்ன வேணும் ” என்றதும் சீதாவுக்கு அவன் கேட்டதின் அர்த்தம் புரிய அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தவள் வேகமாக எழுந்து நின்றவள்..

“என்ன சொல்லுற ரவி”.

என்று மீண்டும் கேட்க.

“சும்மா வெட்கபடமா உனக்கு வேணுமுங்குறத கேளு, நீ என்ன கேட்டாலும் தருவேன், அது பல கோடி பணம் மதிப்பு  இருந்தாலும் பரவாயில்லை இல்லை,, நீ அவ்வளவு வொர்த்”  என்று அவள் தலையில் இடி இறக்கி இருந்தான் ரவி.

சீதா அவன் கேட்டதின் அர்த்தம் புரிய கூசி போனாள் பெண்ணவள்..

கண்ணீல் இருந்து மட மட வென கண்ணீர் வர.

கண்களை துடைத்தவள்.

“புரியல ரவி, நீங்க கேட்டதற்க்கு  அர்த்தம் புரியல கொஞ்சம் விவரமா சொல்லுறீயா” என்றாள் கையை கட்டிய படியே..

“அது சீதா” என்றவன் அவளின் அருகில் வர.

“தள்ளி நின்னே சொல்லுங்க  ரவி” என்றாள் சீதா, ஒரு வேளை நான் ரவியை தப்பா புரிந்து கொண்டு விட்டோனோ என்ற அல்பா ஆசை அவளுக்கு..

அவனோ ஒரு சிவிங்கத்தை  எடுத்து அவன் வாயில்  போட்டு மென்ற படியே. பேச ஆரம்பித்தான்.

 ”  என்கிட்ட நெறுங்கி வந்த  பெண்களை நான் விட்டது இல்லை சீதா, நானா  போய் எந்த பொண்ணையும்  தொட்டது இல்ல, அதே மாதிரி என்னை பார்த்து, ஐ மீன், என் காசை பார்த்து, என்னால காரியம் அகனுமுன்னு வர்ர பொண்ணுங்கள நான் யூஸ் பண்ணிக்கிறேன், அதும் என் தேவைக்கு தான், நான் தொட்ட முதல் பொண்ணு நீ இல்ல, அதே மாதிரி நான் தொட்ட கடைசி பொண்ணும் நீ இல்ல, எமோஷனல் ஆகதா, யோசி உனக்கு என்ன வேணுமோ கேளு” என்றதும்.

சம்பித்து போன சீதா அப்போ சிரஞ்சீவி இவனை பற்றி சொல்லியது அனைத்தும் உண்மையா, நீயா வந்து இவன்கிட்ட  மாட்டிக்கிட்டீயா என்று மனதில் நினைத்தவள், தப்பு பண்ணிட்டோமே, தப்பு பண்ணிட்டேனே, என்று  வேதனையோடு நின்றிருக்க…

“நீ  இவ்வளவு பீல் பண்ணி வருத்தப்படுற அளவுக்கு இங்க ஒன்னும் பெருசா நடந்துறல, செஸ்ட் நம்ம வயசோட ஆர்மோஸ்  பண்ணுற வேளை, உனக்கும்  எனக்கும் நடந்தது

செஸ்ட் ஒரு ” என்று அவன் ஏதோ சொல்ல.

“செஸ்ட்  ஸ்டாபிட் ரவி, இனி நீ  நமகுள்ள நடந்தத பத்தி  பேசாத,” என்றவள்..

இந்த இடத்தை விட்டு போ என்று மனது சொல்ல.

அவளின் போனை தேடி எடுத்து சார்ஜ் போட்டவள், குளியலை அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அழுகையாக வந்தது, அவன் உன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறான், எல்லாம் பெண்களை மாதிரி தான் நீ என்று  சொல்லி விட்டானே, அப்போ என்னை என்றவளுக்கு சவர்கடியில் நின்றவள் தேம்பி, தேம்பி அழுதாள்  தன் கண்ணீல் நீர் வற்றும் வரை நின்றவள், இனி அவனிடம் தன் நேசத்தை சொல்லி புரியவைக்க முடியாது, என்னை பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டானே, நான் என்ன விபச்சாரியா, அவன் கேட்டதுக்கு அது தானே அர்த்தம், என் நேசம் அவனுக்கு புரியவில்லை, என்றவள் அவளிடமே அவள் கேள்வி கேட்டு, கேட்டு அழுது கரைந்தவள் ரவி பாத்ரூம் கதவை தட்டவும், தான் சுய நினைவுக்கு வந்தவள்..

 சவரை ஆப் பண்ணியவள்.

குளித்து முடித்து விட்டு அமைதியாக வெளியே வர.

சீதா கத்துவாள், கதறுவாள் என்னை நீ ஏமாற்றி விட்டாய்,  என் கற்பு போயிற்று, நான் உன்னை சும்மா விட மாட்டேன் என்று  அவள் கத்தி ஆர்பாட்டம் பண்ணுவாள் என்று அவன் நினைத்திருக்க.

குளித்து  ரெடியாகி கொண்டிருந்த சீதாவை பார்த்தவன், “எங்கே போற சீதா” என்றான்.

“சென்னை” என்று  ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் சீதா.

“நானும் கிளம்பி வர்ரேன் வெய்ட் பண்ணு” என்றான் ரவி.

“எனக்கு போக தெரியும்” என்றவள்.

அவள் ஆத்திரத்தை  அடக்கி கொண்டு இருப்பது அவனுக்கு தெரிந்தது,.

“இரு நான் வர்ரேன்” என்றான்,, அவன் முன் ஒரு செக்கை நீட்டினாள்   சீதா.

“என்னது  இது”? என்று வாங்கி பார்த்தான் ரவி, அதில் 4 லட்சம் ரவிக்கு செக் எழுதி கொடுத்திருந்தாள் சீதா.

அதை வாங்கி பார்த்தவன் சிரிக்க.

அவன் சிரித்தை அலச்சியம் செய்தவள்..

“நீங்க எனக்கு இந்த அஞ்சு நாள் பண்ணிய  செலவுக்கு  பணம்” என்றும்,.

கோபம் கொண்ட ரவி “சீதா” என்று சத்தமாக அழைக்க.

“சீதான்னு சொல்லுறதுக்குட உங்களுக்கு  இனி உரிமை இல்லை மிஸ்டர் ரவி,  என்ன பேசவைக்காதீங்க”  என்றவள்,..

தன் கைபையை  தூக்கி கொண்டு வெளியே செல்ல பார்க்க..

“சீதா எங்கே போற இரு நான் வந்து உன்னை  ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணுறேன்”  என்றவன், அவளின் கையை பிடிக்க போக..

“டோன்ட் டச் மீ ” என்றவள்.

ரவி தன்னை தொடக்கூட அனுமதிக்க வில்லை சீதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!