அத்தியாயம் – 30
கடந்த இரு நாட்களாக அனு கதிரிடம் பேசிவது இல்ல, பெருமாள் சாமி காலை சுற்றும் பாம்பு போல எப்பொழுது வேண்டுமானாலும் கடித்து விடும் என்பதால் கதிரும் பெருமாள் சாமியை எப்படி பதவியில் இருந்து தூக்குவது என்பதிலேயே கவனமாக இருந்தான்.
வளைகாப்பு நாள் அன்று ராம சந்திரனின் வீட்டில் அனைவரும் அனுவை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அனு அங்கு செல்லாமல் அறைக் குள்ளேயே அடைந்து கிடந்தால், அகிலன் அடிக்கடி அனுவிடம் போன் செய்து பேசுகிறான் என்று கதிர் நேற்றே அனுவின் போனை வாங்கி விட்டான்.
“ரஞ்சு டிரஸ் மாத்திட்டு கிளம்பி வா கொஞ்சம் வெளிய போகணும் ” என்றான் கதிர்.அனுவின் மீது உள்ள பாசத்தினால் கதிர் அனுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பது போல் வளைகாப்பு வீட்டுக்கு அழைத்து செல்ல போகிறான் என்று நினைத்து அவளும் மகிழ்ச்சியுடன் கிளம்பி சென்றாள்.
கார் நேராக போய் நின்றது ரெஜிஸ்டர் ஆபீஷில், அனு அதை பார்த்ததும் ஏமாந்து போனால்,கதிர் வழக்கம் போல் அவள் பேரில் சொத்து எதுவும் வாங்க போகிறான் என்று நினைத்து கதிர் கூறிய இடங்கள் எல்லாம் எந்த கேள்வியும் கேக்காமல் கையெழுத்து போட்டாள் .(கதிர் அனைத்து சொத்துகளையும் அவன் பேரில் எழுதிக் கொண்டு ஒரு உயிலையும் சேர்த்து எழுதி விட்டான். அதில் கதிரின் சொத்துக்கள் இனிமேல் சேர்க்க போகும் சொத்துகள் அனைத்திற்கும் அனு ஒருத்திய வாரிசு என்று எழுதி இருந்தான் ).
வேலை முடிந்ததும் இருவரும் வீட்டுக்கு வந்தனர்.லட்சுமி இருவரையும் சாப்பிட அழைத்தார் இருவரும் சாப்பிட சென்றனர். கதிர் ஊட்டி விடுவான் என்று எதிர் பார்த்தாள் ஆனால் அது நடக்கவே இல்லை.
“கதிரவா இவளோ நேரம் எங்க போயிருந்த நீ “என்றார் வேலுசாமி.
“ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு அப்பா, அனு பேருல இருந்த சொத்து எல்லாத்தையும் ஏன் பேருல மாத்தி எழுதுறதுக்கு போனே “என்றான் கதிர், அனு குழப்பத்துடன் கதிரை பார்த்தாள். கதிர் அவளை கண்டுக் கொள்ளவில்லை.
“எதுக்கு கதிரவா மாத்தி எழுதுன “
“எல்லாம் ஒரு பாதுகாப்புக்கு தான் அப்பா “என்றான் கதிர், கதிர் கூறியதை கேட்டு அனு அமைதியாக அங்கிருந்து எழுந்து சென்றாள்.
வடிவு பாண்டி இருவரும் அவர்கள் அறையிருந்து அனு காதில் விழவேண்டும் என்று சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர்.
“வடிவு இப்போ எதுக்கு ரஞ்சனி பேருல இருந்த சொத்தையெல்லாம் கதிர் அவன் பேருல மாத்திகிட்டான் “
என்றார் பாண்டி.
“என்னங்க கொஞ்ச நாளாவே கதிர் ஒரு மாதிரி தான் நடந்துகிறான். ரஞ்சனிய வீட்டை விட்டு வெளிய போக விட மாட்டேங்கிறான், அவகிட்ட இருந்து போனையும் பிடிங்கி வச்சிட்டான், எப்போ பார்த்தாலும் அந்த பொண்ண அடிச்சிட்டும், திட்டிடும் இருக்குறான்”
“அந்த பொண்ணை சந்தேகப் படுறான்க, அதுவும் இல்லாம போன்ல யாரு கிட்டயோ அனு எங்க போற யாருக்குடா பேசுறானு பார்த்து சொல்ல சொல்லுறாங்க “
“எனது அனுவ வேவு பார்க்க ஆளு அனுப்பிருக்கானா “என்றார் பாண்டி.
“அப்படி தாங்க நினைக்குறேன், இப்போ கூட வேலு அண்ணே கேட்டதுக்கு எல்லாம் ஒரு பாதுகாப்புகுனு சொல்லுறான்,இவன் சொல்லுறத பார்த்த ரஞ்சனி எவனையோ இழுத்துடு ஓடி போக போற மாதிரியும், அப்படி ஓடி போய்ட்டா அவ பேருல இருக்குற சொத்தும் போயிரும்னு பயந்து இப்படி அவசரமா எழுதி வாங்கிருக்கான் போலங்க “
“என்ன வடிவு என்னென்னமோ சொல்லுற, கதிர் அந்த பொண்ணு மேல உயிர தான இருந்தான், இப்போ இப்படி நடந்துகிறான். அந்த பொண்ணு எல்லாத்தையும் சகிச்சி கிட்டு எப்படி தான் இருக்காலோ “
“ரஞ்சனி மேல பாசமா தான் இருந்தான் அவ மேல இருந்த மோகம் போகுற வரைக்கும், இப்போ மோகமும் இல்ல பாசமும் இல்ல”
“கதிர் ரஞ்சனிய அடிச்சும், கடைல வச்சி அவமானப் படுத்தியும் அவ வீட்டை விட்டு போகாம இருக்கானா என்ன காரணம், வீட்டை விட்டு வெளிய போன அவ போகுறதுக்கு போக்கிடம் இல்லைங்க அதுனால தான் மனக்கேட்டு இங்கையே இருக்குற “என்றாள் வடிவு.
வடிவின் அறையில் இருந்து அனு அழுதுக் கொண்டே போனதை லட்சுமி பார்த்து விட்டு, வடிவிடம் “ரஞ்சனிய என்ன சொன்னிங்க அவ எதுக்கு அழுதுட்டு போற “என்று கேட்டார். அதுக்கு பாண்டி
“ரஞ்சனி இங்க வரவே இல்லாம நாங்களும் அவளை எதும் சொல்லல, அந்த பொண்ணு ஏன் அழகுறன்னு போய் கேளுமா ” என்றார்.
“அவகிட்ட கேட்டா சொல்லமாட்ட அண்ணே எல்லாத்தையும் மனசுக்குள்ளயே வச்சிக்கிட்டு வருத்தப் பட்டுடு இருப்பா “என்றார் லட்சுமி.
அனு வளைகாப்புக்கு வராததால் அவளை பார்க்க அகில் கதிர் வீட்டுக்கு வந்தான்.அகில் குரல் கேட்டு அனு அறையில் இருந்து வெளியே வந்தாள். கதிர் அகிலிடம் “எதுக்குடா அடிக்கடி அவளை பார்க்க வந்துட்டே இருக்குற,அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சி உனக்கு நியாபகம் இருக்கா இல்லையா “
“கல்யாணத்துக்கு முன்னாடி தான் அவளை வண்டில உக்கார வச்சி ஊர் சுத்திட்டு இருந்த இனிமேலும் நீ அவகூட பேசுறதும், பாக்கவறதும் வச்சிக்காத அப்பறம் அசிங்கப்பட்டு தான் போவ “என்று கூறி அகிலை துரத்திவிட்டான்.
அனுவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, மிகவும் குழப்பத்தில் இருந்தாள். கதிர் எதனால் இவ்வாறு நடந்துக் கொள்கிறான் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
“ரஞ்சனி நாம இரண்டு நாளைக்கு நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போய்ட்டு வரலாம் வா மா, கொஞ்ச நாளாவே வீட்டில நிம்மதியே இல்லாம இருக்குமா கோவிலுக்கு போய்ட்டு வந்தா எல்லாம் சரி ஆகிரும் வா மா “என்றார் லட்சுமி.
“இல்ல அத்தை நான் வரல எனக்கு பீரியட்ஸ் வர தேதி, நீங்க மட்டும் போய்ட்டு வாங்க அடுத்த முறை போகும் போது நான் உங்க கூட வரேன் “என்றாள் அனு.
“சரிமா நானும் மாமாவும் போய்ட்டு வாறோம் நீ பார்த்து பத்திரமா இருந்துக்கோடா, நாளைக்கு காலைல சீக்கிரமா கிளம்பி போய்ட்டு வாறோம் மா “என்றார் லட்சுமி.
லட்சுமியிடம் பேசிய பின்பு தான் அனுவிற்கு நியாபகம் வந்து காலண்டரை பார்த்தாள், அவளுக்கு பீரியட்ஸ் ஆகி நாற்பது நாட்களுக்கு மேல் ஆகி விட்டது என்று அறிந்து காலையில் டாக்டரிடம் செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். அனுவிற்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நாள் தவறிப்போகும் பின் மாத்திரை சாப்பிட்டால் சரியாகிடும்,
வழக்கமாக நடப்பது தான் என்று அனுவும் நினைத்துக் கொண்டாள்,
மறுநாள் காலையில் “கதிர் நான் கொஞ்சம் வெளிய போகணும் போயிட்டு வரட்டுமா “என்றாள் அனு.
“எங்க போற எதுக்கு போற “
“ஹாஸ்பிடலுக்கு போறேன், கொஞ்சம் உடம்பு சரி இல்ல”அனு உடம்பு சரி இல்லை என்றதும் கதிர் பதறிக் கொண்டு அவளை மருத்துவ மனை அழைத்து செல்வான் என்று நினைத்தால் ஆனால் கதிர்
“அம்மா ஊருக்கு போயிருக்காங்கல அதுனால சுமதி அக்காவ கூட கூட்டிடு போ “என்றான், கதிரிடம் இருந்து இப்படி ஒரு பதிலை அனு எதிர் பார்க்கவில்லை.
“சுமதி அக்காலாம் வேண்டாம் நானே தனியா போய்ட்டு வந்துறேன் ” என்றாள்.
“சரி இந்தா பணம், நீயே போய்ட்டு வா”என்று கூறி விட்டு சென்று விட்டான்.
அனுவும் ஸ்கூடியை எடுத்துக் கொண்டு மருத்துவ மனைக்கு சென்றாள். அங்கு வள்ளிப் பாட்டி அமர்ந்து இருக்க அவரை பார்த்துவிட்டு அமைதியாக அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
“குட்டிமா இந்த பாட்டிய பார்த்துட்டு பாக்காத மாதிரி போறல நீ “என்றார் வள்ளி.
பாட்டியின் குட்டிமா என்ற அழைப்பை கேட்டதும் ஓடி சென்று அவரை கட்டி பிடித்துக் கொண்டாள்.பின் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.”அனு நீ சந்தோசமா இருக்கியாடா “
“நான் சந்தோசமா இருக்கேன் பாட்டி” என்றாள் கண்கள் கலங்க.
“நீ எந்த அளவுக்கு சந்தோசமா அந்த வீட்டுல இருக்கானு அகில் சொன்னான் “அனு அமைதியாக தலையை குனிந்துக் கொண்டாள்.
“இந்த மாதிரி ஏதுவும் நடக்க கூடாதுனு தான் அன்னைக்கு நாங்க எல்லாரும் உன்ன அடிச்சோம் “
“அனுமா உன் புருஷன விட அகில் எந்த விதத்துலடா குறைஞ்சி போய்ட்டானு அவனை வேண்டாம்னு சொல்லிட்டு போன நீ “
“பாட்டி அத்தானை நான் குறைவா நினைக்கல, எனக்கு அவரை கல்யாணம் பண்ணிக்க தோணலை “
“உனக்கு தோணல, ஆனா அவனுக்கு தோணிச்சே உன் கல்யாணம் பண்ணி சந்தோசமா பாத்துக்கணும்னு “
“என்ன பாட்டி சொல்லுறீங்க “
“ஆமா அனு அகில் உன் மேல உயிரையே வச்சிருக்குறான், ஏழு வருசமா உன்ன காதலிக்குறான், உனக்கும் அவனுக்கும் கல்யாணம் பண்ணலாம்னு பேசுனாப்போ கூட நீ படிக்கனுன்னு ஆசை படுற படிச்சி முடிச்ச அப்பறம் கல்யாணத்தை பத்தி பேசலாம்னு சொன்னான் “
“அகிலன் உன்ன விரும்புனது நம்ம வீட்டுல இருந்த எல்லாருக்கும் தெரியும், உன்கிட்ட அவன் காதலை சொல்லி எங்க உன் கவனம் சிதறி போய் சரியா படிக்காம போயிருவியோனு தான் உன்கிட்ட சொல்லாம இருந்தான் “
“உங்க அப்பா சொன்ன மாப்பிளையா நினைச்சி அகிலனை நீ கல்யாணம் பண்ணிருந்தா உன் வாழ்க்கை எவளோ சந்தோசமா இருந்திருக்கும் நீயும் எங்கள விட்டு வேற எங்கையும் போயிருக்க மாட்ட, அகிலனும் உன்ன கண்ணுக்குள்ள வச்சி பாத்துட்டு இருந்துருப்பான்”.
“நீ காதலிச்ச பையனையே கல்யாணம் பண்ணியும் நீ சந்தோசமா இல்லாமா கஷ்டப்பட்டு இருக்குற, அகிலன் உன்ன கல்யாணம் பண்ண முடியலன்னு நெனச்சி வேதனை பட்டுட்டு இருக்குறான், கடைசில என் பேரப்பிள்ளைக ரெண்டு பேரும் நல்லா இல்லை “என்று கூறி அழுதார்.
“உனக்கு கல்யாணம் ஆன விஷயம் தெரிஞ்சி அவன் எப்படி அழுதான் தெரியுமா அனு உனக்கு. ராஜி உன்ன மறந்துட்டு வேற பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிகோனு சொல்லி அகில் கிட்ட சொன்னா “
“அதுக்கு அகில் அனு ஒன்னும் சட்டை இல்லாம கிழிஞ்சி போனதும் மாத்துறதுக்கு, என் தோல் மாதிரி நான் செத்து மண்ணோட மக்கி போகுற வரைக்கும் என் கூடவே தான் இருக்கும். அனுவை என்னால மறக்கவும் முடியாது வேற பொண்ணை கல்யாணம் பண்ணவும் முடியாதுனு முடிவா சொல்லிட்டான் “
“இப்போ கூட உங்க அப்பா கிட்ட உன் கூட பேச சொல்லி கெஞ்சி அவன் மனச மாத்துனா, உன்ன வளை காப்புக்கு வர வச்சி எங்க கூட சேர்த்து வைக்க நெனச்சான், நீ தான் வராம போய்ட “
“ராஜி தான் எங்க பேச்சை கேக்கமா கல்யாணம் பண்ணி கஷ்ட பட்டா இப்போ தான் கொஞ்ச நாளா அவளும் நாங்களும் நிம்மதியா இருந்தோம், இப்போ நீ கஷ்ட படுற உன்ன பார்த்து நாங்களும் கஷ்ட படுறோம் “
“பாப்பா அந்த பையன் வேண்டாம் மா விட்டுட்டு வந்துரு நம்ம வீட்டுக்கு, நம்ம வீட்டுல இருந்து படிக்கணும்னா படி இல்லனா வேலைக்கு போ, உன் இஷ்ட படி இரு உனக்கு விருப்பம் இருந்தா வேற கல்யாணம் பண்ணிக்கோ இல்லனா தனியாவே இரு நாங்க யாரும் உன்ன கட்டாயப் படுத்த மாட்டோம், எங்களுக்கு உன் சந்தோசம் தான் முக்கியம், நீ கஷ்ட படுறதா எங்கனால பாக்க முடியலடா” என்று கூறி பாட்டி அழ அவரை பார்த்து அனுவும் அழுதுக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது வள்ளிபாட்டியின் பக்கத்து விட்டு பெண் அவரை அழைக்க பாட்டியும் அனுவிடம் விடைப் பெற்று சென்றார். அனு பாட்டி கூறியதை பற்றி எண்ணிக் கொண்டிருந்தாள் தன்னால் அகில் அத்தான் வாழ்க்கை வீணாகி விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள்.
நர்ஸ் அனுவின் பெயரை அழைக்க அனு டாக்டரை பார்க்க அறைக்குள் சென்றாள். அங்கு அனுவை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் அவள் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். அனு மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வெளியே வந்தாள்.
இந்த விஷயத்தை கதிர் கிட்ட சொன்ன ரொம்ப சந்தோசப் படுவான். உடனே போய் அவன் கிட்ட சொல்லணும் என்று கிளம்பி கடைக்கு சென்றாள். பாவம் அனு அறியவில்லை அங்கு அவளுக்கு பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது என்று.