அந்த டைம் நீ தான் கேம்ப் போயிருந்தையே..” என வெற்றி நிறுத்த,
“ஆமா.. நா போறப்போ உன்கிட்ட விசயத்தை சொல்லிட்டு தானே போனேன். இது வழக்கம் தானே.. நா திரும்பி வந்த பின்னாடி நீ வந்து பார்த்திருக்கலாமே..?” என நந்தன் கேட்டதற்கு,
“டேய் நந்து.. கனி யாரு ன்னு தெரிஞ்சு சந்தோஷப்படறதுக்குள்ள.. அவளுக்கு இப்படின்னு அம்மா சொன்னதும் எப்படிடா அந்த விசயத்தை பத்தி தெரிஞ்சுக்காம நீ வர்ற வரை அதை தள்ளி போட முடியும்.
அதனால நானே அந்த ரிப்போர்ட்ஸ் எல்லாம் காட்டி ஹாஸ்பிடல்ல தெளிவா விசாரிச்சேன்.
அங்கே தான் சொன்னாங்க, அது சரி செய்ய முடியாத நிலைமைய தாண்டிடுச்சுன்னு.
அவளோட கடைசி ஆசைய நிறைவேத்த தான் இந்த கல்யாணமே நடந்துச்சு..” என்றதும்,
அவனின் கனிகா மீதான பாசமும், அன்பும் அந்த நண்பனுக்கு நன்றாகவே புரிந்தது.
“நீ எழுந்திருக்க லேட் ஆனா ஆறிடுமுன்னு தான் கொஞ்சம் சூடாவே கொண்டு வந்தேன்டா..” என விளக்கம் கொடுத்தவரை கண்டு, அதுவரை இழுத்து பிடித்த பொறுமை மொத்தமும் காலியாக, “அம்மா..!” என பல்லை கடித்தபடி சத்தமாய் வெற்றிவேல் அழைக்க,
அதுவரை மருமகளை கொஞ்சுவதில் மகன் வந்ததை கூட கவனிக்காமல் இருந்தவர், அவன் அழைப்பில் திரும்பி பார்த்து,
“என்ன கண்ணா..! என்ன வேணும்..?
கனி காபி குடுச்சிட்டு ரெடியாகிடுவா. நீயும் கொஞ்சம் ஃப்ரஷ்ஷாகிட்டு வந்தா நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்..” என சொல்லிக்கொண்டே செல்ல,
“அம்மா.. கனிய விட்டுட்டு கொஞ்சம் நீங்க வெளிய போறீங்களா..?” என கேட்ட நொடி,
“அடேய், ஏன்டா இப்படி அவசரப்படறே.?
அதெல்லாம் நேரம் காலம் பார்த்து நாங்களே அனுப்புவோம்.
கல்யாணமே வேணாமுன்னு பிடிவாதம் பிடிச்சது என்ன..? இப்ப நேரம் காலம் பாக்காம வந்து நிக்கற கோலமென்ன..?
பட்டப்பகல்ல போய்.. இது நம்ம வீடு கூட இல்ல.
சொந்தகாரங்க காதுல மட்டும் இந்த விசயம் விழுந்தா, மானமே போயிடும்..!” என படபடத்து சொன்னதை கேட்டவன் முதலில் புரியாமல் பார்த்து,
பின் புரிந்ததும், “அம்மா..! ஏம்மா இப்படி..?” என பல்லைக்கடித்துக்கொண்டு கேட்டவன்,
“நா அதுக்கு..” என வந்த காரணத்தை சொல்ல வர,
“டேய் அவசரகுடுக்கே.. வாய மூடப்போறீயா இல்லையா..?
யாராச்சும் கேட்டா என்ன புள்ள வளத்திருக்கேன்னு மானத்த வாங்கிடுவாங்க.
என்னவானாலும் நம்ம வீட்டுக்கு போய் சடங்கு நேரத்துக்கு தான் அனுப்ப முடியும்.
அதுவரை கொஞ்சம் அடங்கி இரு. போ, போய் வீட்டுக்கு போக ரெடியாகு. மத்தது எல்லாம்.. அப்புறம்… தான்..” என சந்திரா கடுப்பாக சொல்ல,
தன்னை புரிய வைக்க இயலாத கோபத்திலும் தாயின் பேச்சில் உள்ள அர்த்ததிலும், தன் நெற்றியில் அறைந்து கொண்டு வெளியே சென்றவன் காதில்,
“கனிம்மா..! பார்ரா அவனோட அவசரத்த. என் ராசாத்தி நீ வந்த நேரம்..!
இப்ப தான் நிம்மதியா இருக்கு.
எப்படியோ எண்ணி பத்தாவது மாசம், உன்ன மாதிரி அம்சமா ஒரு பேரனையோ.. பேத்தியையோ.. பெத்து என் கையில கொடுத்திட்டா போதும்..” என சொல்வதும்,
“போங்க அத்தம்மா..!” என்ற கனியின் சிணுங்கள் வார்த்தையும் விழ,
‘அய்யோ.. நா அதுக்கு வரல. சண்டைகட்ட தான் வந்தேன்.. என போய் சொல்லலாமா..?’ என நினைத்தவன்,
மீண்டும் அங்கு போனால் தன் தாய் அதையும் சேர்த்து, எதாவது.. ஏடாகூடமாய் சொல்லி வைத்தாலும் ஆச்சர்யமில்லை என நினைத்து,
‘ஏய் புலுகினி.. வாடீ.. எப்படியும் என் வீட்டுக்கு வந்து தானே தீருவே.
அங்கே தனியா சிக்காமயா போவ..? அப்ப இருக்கு..’ என முடிவு செய்த கையோடு வீட்டிற்கு செல்ல தயாராக சென்றான்.
இருவரும் மண்டபத்திலிருந்து கிளம்பிய கணம் முதல் தன்னிடமிருந்து விலகியே இருந்தவனை யோசனையோடே பார்த்திருந்தாள் கனிகா.
காலையில் அவன் முகத்தில் இருந்த நிறைவோ.. அமைதியோ இல்லாது,
காலையிலிருந்து தன்னிடம் அவ்வளவு அக்கறை காட்டியவனின் இந்த ஒதுக்கம்.. கனிகாவிற்கு சந்தேகத்தை கொடுத்தாலும்,
‘ஆசையாய் வந்தவனை தன்னை நெருங்க விடாததால் வந்த கோபமோ..?’ என்ற எண்ணம் ஒரு வித கூச்சத்தை தந்ததோடு,
அவனின் இப்படியான வேகம் கண்டு பயமும் எழுந்தது பெண்ணவளுக்கு..
“எம்மாடி அந்த சீனே இல்ல..” என்று விதி கத்தியது எங்கே அவளுக்கு கேட்டது.
அதனால் எப்போதும் போல, ‘எவ்வளவோ… பார்த்திட்டோம். இத பார்க்கமாட்டோமா..?
நம்ம மாமா தானே.. அதெல்லாம் சமாளிக்கலாம்..’ என அசால்டாக சென்றவளுக்கு தெரியவில்லை அவனின் கோபத்தின் காரணமும்.. அதன் அளவும்.