மொத்தமாய் மூன்று நாட்கள் முடிந்துப்போனது. மதுரை விமான நிலையத்தில் அந்த காலைநேரத்தில் விசிட்டர்ஸ் லாபியில் எங்கோ நிலைத்த பார்வையுடன் சுரத்தே இன்றி அமர்ந்திருந்தான் ஜேகோப்.
இன்னும் சற்று நேரத்தில் விமானம் தரையிறங்கப்போவதற்க்கான அறிவிப்பு வந்தது. அதில் ஸ்மரணை வர பெற்றவன் ஒரு பெருமூச்சோடு எழுந்து நடந்தான். அன்று வீட்டை விட்டு வெளியேறிய ஜேகோப், திண்டுக்கல் வந்து ஒரு ஹோட்டலில் அறையெடுத்து தங்கிக்கொண்டான். அவனது வாழ்நாளில் இதுநாள் வரை இப்படியாப்பட்ட பிற்ப்போக்கு மனிதர்களை, அர்த்தமற்ற பேச்சுகளை, காட்டுமிராண்டித்தன செய்கைகளை அவன் எதிர்க்கொண்டதே இல்லை.
தான் பார்த்த படங்களில் இருந்து மட்டுமே இந்தியா பற்றிய, குறிப்பாக தென்னிந்தியா பற்றிய ஒரு மேலோடிய எண்ணத்தை வைத்துக்கொண்டு, அதே எண்ணத்தில் அவன் வீட்டாட்களை அவன் எடைப்போட்டிருக்க, இது அதற்க்கெல்லாம் பலப்படிகள் மேலே இருந்தது. படத்தில் கூட இதுப்போன்ற காட்சிகள் வந்தால், அதாவது கட்டாய கல்யாணம்… விருப்பமில்லா கல்யாணம்… பெற்றவர்கள் நல்லது செய்கிறேன் என்ற பெயரில் எமோஷனல் ப்ளாக்மெயில் செய்து முடித்து வைக்கும் திருமணம்… இப்படி வந்தால், ‘புல் ஷிட்!’ என்று அதை பாஸ்ட் பார்வேர்ட் செய்பவன் அவன்!
ஆனால், அவனுக்கே இதெல்லாம் நடக்கும் என்று அவன் கிஞ்சித்தும் நினைத்திருக்கவில்லை. வாழ்க்கைக்கு கூட ஒரு பாஸ்ட் பார்வேர்ட் பட்டன் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது அவனுக்கு.
அதற்குள் பயணிகள் எல்லாம் வெளியே வர ஆரம்பிக்க, பெரிதாக கூட்டம் இல்லாததால், ரிச்சர்ட் மற்றும் தேவகி வருவதை இலகுவாக காணமுடிந்தது அவனுக்கு.
அங்கிருந்தே, ‘ஹாய்’ என கையசைத்தான் ஜேகோப். ரிச்சர்ட் உற்சாகமாய் ‘ஹாய்!’ சொல்ல, தேவகி முகத்தில் வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவு உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு பிறகான தாய்மண்ணின் தரிசனம்! உண்மையில் மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்த்து நின்றது.
அருகே வந்ததும், “வெல்கம்!” என்ற ஜேகோப் அவர்கள் லக்கேஜ்’களை வாங்கிக்கொண்டு முன்னே டேக்சியை நோக்கி நடந்தான். அவன் பின்னே காணாததை கண்டதை போல சுற்றிலும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டு தேவகி வர, ரிச்சர்ட் மகனின் நடவடிக்கையால் சற்று யோசனைக்கு போனார்.
மகனின் முகத்தில் வாடாது கிடக்கும் சிரிப்பு மிஸ்ஸிங்! கூடவே தினம் தினம் பார்க்கும்போது கூட பார்த்ததும் வந்து கட்டிக்கொள்பவன், இரு வாரங்கள் பின்பு சந்திக்கையில் சின்ன தோளணைப்பை கூட செலுத்தாது போனது அவருக்கு நெருடியது. நெருட மட்டும் தான் செய்தது. இதுதான் என அவர்களுக்கு தீர்மானமாய் தெரியாது.
ஆம்! அவர்களுக்கு எதுவுமே இன்னமும் தெரியாது. தெரியாது என்பதை விட சொல்லப்படவில்லை என்பது இன்னும் பொருந்தும்.
அன்று ஹோட்டலுக்கு வந்த பின்னே, சிறிது நேரம் தன்னை ஆசுவசப்படுத்திக்கொண்டவன், அன்னைக்கு அழைத்தான். வழக்கம் போல உற்சாகமாக பேசியவரிடம், “உடனே இங்க வாங்க’ம்மா! உங்க அண்ணா உங்களை வர சொன்னார்!” என்றான். தேவகிக்கு இது போதாதா? அதுவும் அழைத்தது தமையன் எனும்போது…!? விட்டால் ஓடியே வந்திருப்பார். டிக்கெட் கிடைப்பதில் சற்றே காலதாமதம் ஆகிவிட, மூன்று நாட்களில் வந்து குதித்திருந்தார்.
திடீரென ‘பரமு’ வர சொல்லியிருகிறார் என்றதுமே ரிச்சர்டுக்கு சந்தேகம் வந்தது தான்.
‘அப்படியெல்லாம் நடக்க சான்ஸ் இல்லையே!’ என அவர் ஐயம் கொள்ள, அவரை யோசிக்கக்கூட விடாமல் இழுத்து வந்திருந்தார் தேவகி.
டேக்சி டிக்கியில் பொருட்களை அடைத்தவன், டிரைவர் அருகே அமர்ந்துக்கொள்ள, இருவரும் பின்னால் ஏறியதும் வண்டி புறப்பட்டது.
தேவகி, “என்னடா செஞ்ச நீ? இத்தனை வருஷம் வர சொல்லாத அண்ணன், இப்போ வர சொல்லிருக்கு? என்னால நம்பவே முடியல, நான் என் ஊருல இருக்கேன்னு!” பரவசமாய் அவர் சொல்ல,
ஒன்றும் சொல்லாமல் வெளியே முகத்தை திருப்பிக்கொண்டான் அவன்.
அருகே கணவரிடம், “நான் சொன்னேன்’ல? என் பையன் என்னை என் குடும்பத்தோட சேர்த்து வச்சுடுவான்’ன்னு… பார்த்தீங்களா என் பப்பூ குட்டி செஞ்சுடுச்சு!” மகனின் பெருமை பேச, அவர் மௌனமாய் சிரித்தார். மூன்று நாட்களாக அவர் காதில் ரத்தம் வடிகிறதோ என பரிசோதிக்கும் அளவுக்கு பேசி பேசி சோதித்திருந்தார் தேவகி.
“ஆமா, தேவி ஏன்டா என் ஃபோனே எடுக்கல மூணு நாளா? நீ வர சொன்னதுல இருந்து அவகிட்ட பேசுவோம்ன்னு நானும் ட்ரை பண்றேன்… எடுக்கவே மாட்டேங்குறா!” தேவகி சொல்ல, தேவியை நினைத்ததுமே இவனுக்கு எரிச்சல் ஏறியது.
அவனால் முறைத்துக்கொண்டே இருந்து அடித்தவரை கூட பொறுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால், சிரித்துக்கொண்டே அடித்தவரை தான் தாங்க முடியவில்லை.
மகனது எப்போதுமில்லாத மௌனம் ரிச்சர்ட்’க்கு ஏதோ சரியில்லை என்று உறுதியாய் தோன்ற வைத்தது.
“ஏன்டா நான் கேட்டுட்டே இருக்கேன், நீ எதுவுமே பேச மாட்டேங்குற?” தேவகி முன்னால் இருந்தவனின் தோளில் அடிக்க, “ப்ச், மாம்… ஐம் எக்சாஸ்டட், டோன்ட் ஆஸ்க் மீ எனிதிங் நவ் ப்ளீஸ்” (நான் ரொம்ப சோர்ந்துப்போய் இருக்கேன், என்னை எதுவும் கேட்காதீங்க) என்றுவிட்டான்.
“என்னாச்சு?” என கேட்க விழைந்தவரை ரிச்சர்ட் விடவில்லை. வண்டி அவன் தங்கியிருந்த ஹோட்டலை நோக்கி போக, “டேய், தப்பா போறாங்க போல!” என்றவர், நேராக டிரைவரிடம், “இந்த ரூட் இல்லங்க!” என்று சொல்ல,
“கரெக்ட்டா தான் போறாங்க” என்றான் ஜேகோப்.
“டேய், என் ஊருக்கு வழி எனக்கு தெரியாதா? இது அந்த ரோட் இல்ல” அவர் அடித்துச்சொல்ல, “கரெக்ட் தான், இது உங்க ஊருக்கு போற ரூட் இல்ல, நான் தங்கியிருக்க ஹோட்டல் போற ரூட்” என்றான் அவன்.
“ஹோட்டல்ல தங்கிருக்கியா? என்னடா பேசுற? தேவி வீட்டுல தானே இருந்த?” அதிர்ச்சியானது அவருக்கு.
“இருந்தேன்! இப்போ இல்ல” என்றவன் வண்டி நின்றதும் பொருட்களை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குள் சென்றான்.
“இல்ல சார்! இது ஹோட்டல் வண்டி, மொத்தமா காலி பண்றப்போ குடுத்துடுங்க” என்ற டிரைவர் போய்விட, “கெட் இன் டேவ், என்னன்னு கேட்ப்போம்!” ரிச்சர்ட் தேவகியோடு ஜேகோபை தொடர்ந்து சென்றார்.
தனது அறைக்குள் சென்றவன் அங்கே ஓரமாய் பொருட்களை எல்லாம் வைத்துவிட்டு கட்டிலில் கண்களை மூடி தொய்ந்து அமர்ந்தான்.
உள்ளே இருவரும் நுழைய, தேவகி தான் முதலில், “எதுக்குடா இங்க தங்கணும்? வீடு என்னாச்சு? என்ன செஞ்ச நீ?” என்று கேள்விகளை அடுக்க, “என்ன ப்ரோப்ளம் பப்பூ?” என்றார் ரிச்சர்ட்.
தந்தையின் கேள்வியில் மெல்ல கண்களை திறந்தவன், “டேட்?” என்றான்.
அவன் தோளில் ஆதரவாய் கைவைத்து அணைத்துக்கொண்டவர், “டெம்மி(டெல் மீ) பப்பூ? வாட் ஹெப்பென்ட்?” என்றதும், அவர் முகத்தை பார்த்தவன்,
“ஒன்ஸ் ஐ யூஸ்ட் டு திங்க் டேட், நீங்க மாம் வீட்டுல பேசி, கொஞ்சம் டைம் எடுத்து புரிய வச்சு, அப்பறமா மேரேஜ் பண்ணிருக்கலாம்’ன்னு!” என்று நிறுத்தியவன்,
“பட் நவ் ஐ கேன் ரிலேட், ஒய் யூ எலோப்ட் வித் மாம்!” என்றான் தலையை உலுக்கிக்கொண்டு.
(ஆனா, இப்போ எனக்கு புரியுது, நீங்க ஏன் அம்மாவை கூட்டிட்டு ஓடிப்போனீங்கன்னு)
தேவகிக்கு கோவம் வர, ரிச்சர்ட் வரப்பார்த்த சிரிப்பை அடக்கி, “ஏன் பப்பூ?” என்றார்.
“ஹும், நீங்க ஒன் டே இல்ல, ஒன் எரா (யுகம்) உட்காந்து அவங்கக்கிட்ட பேசி எக்ஸ்ப்ளைன் பண்ணாலும், அந்த லூசு பேமிலிக்கு ஒண்ணுமே மண்டைல ஏறிருக்காது…” பல்லைக்கடித்து சொன்னவன், “சச் அன் இர்ரிடேடிங் ஆஸ்..***” மட்டமாய் திட்டியவனை ஒரு வேகத்துடன் நெருங்கி அவன் வாயிலேயே அடித்தார் தேவகி.
“என்ன பேச்சு பேசுற?” அவர் அதட்ட, “ம்ச் மாம்… தே ஆர் ரியலி ச…***” ஆங்கிலத்தில் திட்ட, இம்முறை ரிச்சர்டுமே அதட்டினார்.
“வாட்ஸ் திஸ் ஜாக்கி? இஸ் திஸ் வாட் வீ டாட் யூ?”
(என்ன இது ஜாக்கி? இது தான் நாங்க உனக்கு சொல்லிகுடுத்ததா?)
உடனே தன் பேச்சிற்கு வெட்கியவன், “சாரி டேட்… பட் ஐ கான்ட் ரெசிஸ்ட் மைசெல்ஃப்” (என்னால தடுக்க முடியல) என்று கூற,
“இவ்ளோ பேசுற அளவு என்ன நடந்துச்சு!?” என்றார் ரிச்சர்ட்.
“சொல்றேன், பட், பிஃபோர் தட்… ரெண்டு பெரும் கிளம்புங்க… மாம் வீட்டுக்கு போகணும்!” என்றதும், இருவருக்குமே குழம்பியது அவனது முன்னுக்கு பின் முரணான பேச்சில்.
அவ்வீட்டு ஆட்களை திட்டுகிறான், பின்பு அங்கேயே போக வேண்டும் என்கிறான்! என்னடா இது? என்ற குழப்பத்தில், “நீ முதல்ல என்ன ஆச்சுன்னு சொல்லு, அப்றமா போலாம்” என்றார் தேவகி.
“மாம்! புரிஞ்சுக்கோங்க… ஆல்ரெடி த்ரீ டேஸ் முடிஞ்சுது… இப்போ நம்ம போலன்னா, போலிஸ் ஸ்டேஷன்’ல கம்ப்ளைன்ட் குடுத்துடுவாங்க! சொன்னா கேளுங்க, வீ ஆர் லிவிங் நவ்!” என்றவனை இருவருமே இப்போது பதட்டத்துடன் தான் பார்த்தனர்.
“ப்ளீஸ் டேட், கிளம்புங்க” அவன் இன்னமும் அழுத்தி சொல்ல, அரைமனதுடன் கிளம்பி மீண்டும் டேக்ஸியில் ஏறிக்கொண்டனர்.
சற்று நேரம் பொறுத்த தேவகியால் அதற்கு மேல் பொறுமை காக்க முடியாமல் போக, “என்னனு சொல்லு ஜாக்கி” என்றார் வற்ப்புறுத்தும் குரலில்.
அதற்குமேல் அவனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. கடைசியாய் அவன் வீட்டை விட்டு வெளியேறிய அன்று நடந்த அத்தனையும், அவர்கள் பேச்சு உட்பட ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான்.