“எப்படி வந்து லாக் பண்ணி, என்னைய கூப்பிடுறான் பாரு…” என்று அவனை முறைத்து பார்க்க,
“இந்தா முறைச்சிட்டா பாரு…” என்று அவனும் அவளை போடி என்பது போல் பார்த்துவிட்டு,
அப்பறம் அத்தை, என்று அவரிடம் பிரகதீஷ் பேச தொடங்கிவிட,
தன் அன்னையின் முன்பு ஒன்றும் அவனை ஒன்றும் செய்ய முடியாமல், கிளம்ப சென்றாள்.
சிறிது நேரம் கழித்து, அவளும் கிளம்பி வர,
அவள் வெளிய வந்ததும், இவனும் எழுந்து, “சரி அத்தை… நாங்க கிளம்புறோம்…” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.
இவர்கள் இருவரும் காரில் ஏறியதை பார்த்ததும்,
பத்மா, “முருகா… சீக்கரம் இவங்க சேரனும்…” என்று வேண்டிவிட்டு, தன் அண்ணனிற்கு இந்த செய்தியை பகிர்வதற்க்காக, அவரை தொடர்புகொண்டார்.
– – – – –
காரில் ஏறியதிலிருந்து ஒன்றும் பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டு வந்த மதுவை பார்த்த, பிரகதீஷ்ஷோ “இப்படி இருந்தா இவளை எப்படி நான் கரெக்ட் பண்றது…” என்று அவனுக்கு அவனே பேசிக்கொண்டு,
காரில் பாட்டை ஓடவிட,
“தந்தன தத்தன தைய்யன தத்தன தான
தத்தன தான தையன்ன தந்தனா
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி”
என்று பாடல் பாட,
பாட்டினை ரசித்தபடியே ஸ்டெரிங்கில் தாளம் தட்டிக்கொண்டு, அவன் காரினை ஓட்ட,
மதுவும் கொஞ்சம் கொஞ்சமா பாட்டினில் லயித்து, அவளும் பாடிக்கொண்டே வர,
மங்கையும் சேர்ந்து பாடியதில், ஆச்சரியமாக திரும்பி பார்க்க, அவளோ பாட்டினோடு ஒன்றிவிட்டாள்.
“பாருடா… மதுவுக்கு இந்த பாட்டுல்லாம் உனக்கு தெரியுமா…” என்று அவன் கேட்க,
அவளும் இயல்பாக, ஹ்ம்… தெரியுமே… எனக்கு பிடிக்கும் இந்த பாட்டு…” என்று பதில் சொல்ல,
“சூப்பரா பாடுற…” என்று அவன் பாராட்ட,
“ஹ்ம்… தேங்க்ஸ்… ரொம்ப நாள் ஆச்சு இப்படி பாடியெல்லாம்…” என்று அவளே பகிர,
அப்போது,
“தானே தானே தான
அப்படியா ம் தேவை பாவை பார்வை…”
என்ற பாடல் வரிகள் வர, அவனும் பாடிக்கொண்டே அவளை பார்க்க,
அவளோ தன் கவனம் முழுவதும் பாட்டினில் வைக்க,
இவளுக்குதான் பாட்டு ரொம்ப பிடிக்கும்ல… இனிமே இவளை இப்படி பாட்டு பேக்கிரௌண்ட்ல போட்டுவிட்டு தான் பேசணும் என்று எண்ணிக்கொண்டு,
திரும்பி அவனே, “எந்த மியூசிக் டைரக்டர் பிடிக்கும்?…” என்று ஆரம்பிக்க,
“அப்படிலாம் எதுவும் இல்ல… எல்லா டைரக்டர் சாங்கும் கேப்பேன்… “
“ஹ்ம் குட்…” என்று சொல்லிக்கொண்டே சிறிது தூரம் சென்று ஒரு மருத்துவமனையின் முன்பு காரை நிறுத்த, இங்க எதுக்கு என்ற கேள்வியோடு அவனை பார்க்க,
அவன் ஒன்றும் சொல்லாமல், அவளை அழைத்துக் கொண்டு மதன் இருக்கும் ரூமிற்க்கு நுழைய,
அங்கு மதனோ, முகத்தில், கையில், காலிலும் கட்டுகள் போட்டிருக்க, பக்கத்தில் அவனின் மனைவி அழுதபடி இருந்தார்.
உள்ளே நுழைந்தவர்களை அவர் கேள்வியாக பார்க்க,
இதை சுத்தமாக மது எதிர்பாக்கவில்லை, அங்கே வைத்து அவனிடம் ஒன்றும் கேக்க முடியாமல் அமைதி காத்தாள்.
வணக்கம்… நான் பிரகதீஷ், இவங்க என்னோட மனைவி, மதன் கூட தான் வேலைபாக்குறோம். அடிபட்டுச்சின்னு கேள்விப்பட்டோம், அதான் பாத்துட்டு போலாம்னு வந்தோம்.
மதனோ அவனை உறுத்து விழித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
“படியிலருந்து கீழ விழுந்ததா கேள்விபட்டேன், எப்படி ஆச்சுங்க…” என்று அவன் பவ்யமாய் கேட்க,
“அத என்னனு சொல்லுறது சார்… எதோ வேலை போயிடுச்சி, யோசிச்சிட்டே வந்ததுல விழுந்துட்டேன்…அப்படின்னு தட்டு தடுமாறி சொல்லுறார்… குப்புற விழுந்திருப்பர் போல… எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைங்க…” என்று அவர் அழுதவாறே சொல்ல,
“நீங்க பேசுங்க… நான் எங்க அப்பா மருந்து வாங்கிட்டு வரங்களான்னு பாக்குறேன்…” என்று அவனின் மனைவி வெளியே செல்ல,
“உனக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்… என் பொண்டாட்டியை என் கூடவே மார்பிங் பண்ணி வேலை பாத்துருப்ப… என்னை யாருன்னு நினைச்ச, சாப்ட்வேர்ல வேலை பாத்தா சாப்ட் ஆஹ் எதுவும் கண்டுக்க மாட்டான்னு நினைச்சிட்டியா… போடு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன் சத்தமில்லாம…”
“உனக்கு கீழ பொண்ணு வேலை செஞ்சா, நீ என்ன வேணும்னாலும் பண்ணுவியா… இனிமே எந்த பொண்ணையாவது எதாவது பண்ணலாம்னு யோசிப்ப?…”