சிறிது நேரம் கழித்து தன்னை கொஞ்சம் ஆசுவாச படுத்திகொண்டு,
திரும்பி அவளிடம், ” ம்… அப்பறம் வேற கதை எதுவும் இருக்கா?, இருந்தா அதையும் சொல்லி முடி…” என்று அவன் சாவகாசமாக கேட்க,
மதுவோ சட்டென மூண்ட கோபத்துடன், “நான் என்ன கதையா சொல்லுறேன்… அந்த பொண்ணுகிட்ட கட்டிக்குறேன்னு வாக்கு குடுத்தது நீ…”
“அதையெல்லாம் மறந்துட்டு, நீ இப்போ பண்றது உனக்கே நல்லா இருக்கான்னு பாத்துக்கோ…”
“ஹப்பா… இப்போ தான், உன் டோனுக்கே நீ வந்திருக்க… நீ, வா ன்னு…” என்று அவள் பேசியதை எல்லாம் விடுத்து, அவன் இதை சொல்ல,
“இப்போ இது ரொம்ப முக்கியமா… என்று அவள் ஆத்திரமாக கேட்க,
“இல்லையா பின்ன… எனக்கு இது ரொம்ப முக்கியம் தான்…” என்று அவளை வெறுப்பேற்ற,
“போடா… நான் கேட்டதுக்கு முதல்ல பதிலை சொல்லு… என்னைய வெறுப்பேத்தாத சொல்லிட்டேன்… அப்பறம் எனக்கு கெட்ட கோவம் வந்துரும்…”
“நீ பண்ணி வச்சிருக்க காரியத்துக்கு இந்த அளவுக்கு கூட உன்னைய பண்ணலைனா எப்படி…”
“அது என்ன கெட்ட கோவம்…” என்று அதி முக்கியமா கேள்வியை அவன் அடுத்து கேட்க,
மதுவும் ஒரு முடிவுடன், “இப்போ கோவமா பேசுற நான், அடுத்து உன்னைய அடிச்சிட்டு பேசுனா அது தான் கெட்ட கோவம்…” என்று அவளின் கையை தேய்த்துக் கொண்டே சொல்ல,
“ஓகே… ஓகே… சமாதானம்… இன்னும் பேசி முடிக்கலை… அதுக்கப்பறம் மத்த கச்சேரி வச்சிக்கலாம்…”
“அப்போ பேசு…” என்பது போல அவள் பார்க்க,
இதுக்கு பதில் சொல்லு,
“நான் வாக்கு கொடுத்ததை நீ பாத்தியா… வந்துட்டா, பெருசா உரிமை குரல் கொடுத்துட்டு…”
“இதுல எல்லாம் தெரியும்னு வேற சொல்லுற…”
“என்னை பத்தி என்ன தெரியும்னு முதல்ல சொல்லு…” என்று அவன் கேள்விகளை அடுக்க,
அவன் கேட்டதுக்கு பிறகு தான், அவனை பற்றி தனக்கு என்ன தெரியுமென்று யோசித்தாள்.
சிறு வயதில் அவனுடன் விளையாடியது நினைவு வந்தது. அதன் பின்பு பெரிதாக எதுவும் தோன்றவில்லை. சிறு வயதில், ஒரு முறை அவனுடன் பேசிட்டு இருந்ததை பார்த்த அவனின் அம்மா, இந்த வயசிலேயே என் பிள்ளைகிட்ட பேசி வளைச்சி போட பாக்குரியவென்று கேட்க, அதற்கு பிறகு அவனே வந்து பேசினாலும், அவனிடம் பேசமாட்டாள்.
அவள் பெரியவளான பிறகு, இன்னும் அவனின் அம்மா பேச்சு அதிகமாக, அதன்பிறகு, அங்கு அவன் வீட்டுக்கு போவதையே தவிர்த்து விடுவாள். அப்படி அங்கு போவது என்றால், அது அவளின் தாத்தாவை பார்ப்பதற்காக மட்டுமே.
அவள் போகும் சமயங்களில் அவன் பெரும் பாலும் இருக்க மாட்டான். அப்படி அவன் இருந்தாலும் இவள் அவன் இல்லாதது மாறி இருந்து, தாத்தாவை பார்த்துவிட்டு கிளம்பிவிடுவாள்.
இவளின் யோசனையை பார்த்து,
“என்ன யோசிச்சதுல தெரிஞ்சிதா?…” என்று அவன் கேட்க,
அவள், அவனை மட்டும் பார்க்க,
“எதுவாது பேசி இருந்தா தானே சொல்ல முடியும்…” என்று அவனே நக்கலாக பதில் சொல்ல,
அவளோ ரோஷத்துடன், “நான் அப்படி இருந்ததுக்கு காரணம் இருக்கு… சும்மா என்னைய சொல்லாத…”
அவனுக்கும் அந்த காரணம் தெரிந்து தான் இருந்தது.
“நீ தான் பேசல, ஆனா நான், என் அத்தை பொண்ணை, என்கூட பேசுவாளான்னு, நீ வரும் போதுலாம் பாத்திருக்கேன்…”
“அப்பறம் நீ, நான் இருந்தா, என் பக்கமே திரும்பாம ரொம்ப சீன் போடுவியா, அதுனால போடின்னு நானும் பாக்குறதை விட்டுட்டேன்” என பிரகதீஷ் அவளிடம் சொன்னான்.
அவள் அதற்க்கு பதில் சொல்லாமல், அமைதியாக இருந்தாள். சிறிது அமைதிக்கு பின்,
பிரகதீஷ், “நான் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு நினைச்சி, உன் லைப்க்கு நான் வேணாம்னு முடிவு பண்ணி, என்னை அவாய்ட் பண்ணுன நீ, எதுக்கு தாலியை மட்டும் கழட்டாம இருக்க?…” என்று அவன் அதிரடியாய் கேள்விக் கணைத் தொடுத்து அவளிடம் கேட்க,
அவனின் இந்த கேள்வியில் கொஞ்சம் ஆடித்தான் போனாள், பாவை. தயங்கி, திண்டாடி, அவனுக்கு பதில் சொல்ல முடியாமல் தலையை குனிந்து கொள்ள,
“மது… பேசு… பதில் சொல்லு…” என்று அவளிடம் சொல்ல,
அவளிடம் மீண்டும் மௌனம் வந்து ஒட்டிக்கொண்டது.
“சரி… நான் சொல்லுறேன்… நீ சரியான்னு சொல்லு…” என்று அவளிடம் சொல்லிவிட்டு,
“”நான் இன்னொரு பொண்ணு கூட வாழ்ந்தாலும், நீ இந்த தாலியை கழட்டிருக்க மாட்ட… அப்படி தானே?…”
அவன் சொன்னதில் இன்னும் அதிர்ந்து அவனை பார்க்க,
“ஸ்பீக் அவுட் மது ப்ளீஸ்…” என்று அவளை பேச ஊக்குவிக்க,
ஒன்றும் பேசாமல் தலையை மட்டும் ஆட்ட,
பிரகதீஷ் திரும்பவும், “சொல்லு மது…சொன்னாத்தானே தெரியும்…” என்று மென்மையாக சொல்ல,
அவனின் அந்த மேன்மையை உள்வாங்கி, மதுவும் தன்னை கொஞ்சம் சமன் படுத்திகொண்டு,
அப்படி பேசுனது எனக்கு பிடிக்காம ஒரு தடவை எதிர்த்து பேசுனேன் அவங்களை. அதுக்கு, உன் பரம்பரையே ரெண்டாம் தாரம் தான், அப்படி ரெண்டாம் தாரத்துக்கு பிறந்தவ, என்னையவே பேசுவியான்னு, அடிச்சிட்டாங்க என்று கண்ணில் நீர் வழிய சொல்லிக்கொண்டே செல்ல,
அவளின் அருகில் சென்று, கண்ணை தொடைத்து, “அதெல்லாம் முடிஞ்சிட்டு, ரிலாக்ஸ் மது… உன்னைய கஷ்டப்படுத்திக்காத சொல்லு…” என்று அவளுக்கு தன்மையாக எடுத்து சொல்ல,
அவளும் அதில் சற்று ஆசுவாசம் கொண்டு, அதுக்கப்பறம், அம்மாக்கு அங்க இருக்குறதுக்கு பிடிக்காம, திரும்ப நாங்க எங்க வீட்டுக்கே வந்துட்டோம்.
மாமா வந்து கேட்டும், அம்மா உங்க வீட்டுக்கு வர மறுத்துட்டாங்க. அப்பறம் அம்மா மட்டும்னு தான் எனக்கு. கடைசி வரைக்கும் அவங்க கூடவே இருந்துடணும்னு தான் என்னோட எண்ணமெல்லாம். இதுல நானே எதிர்பார்க்காதது, தாத்தாவோட ஆசைன்னு சொல்லி அம்மா உன்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னது, அப்பறம் கல்யாணம் நடந்தது என்று சொல்லி அவனை பார்க்க,
“சோ, கல்யாணம் வேணாம்னு முடிவுல இருந்த நீ, இதுனால தான், ஒரு முறை மட்டும் தான் கல்யாணம் முடிவுக்கு வந்திருக்க… அது வாழ்ந்தாலும், இல்லனாலும்… அப்படி தானே?”
அவள் ஆம் என்று தலையசைத்தாள்.
அடுத்து, “இந்த விஷயத்தால தான், உங்கிட்ட அந்த கனிமொழி வந்து கேட்டதும் எதையும் யோசிக்காம சைன் போடு குடுத்துருக்க” என்று கேள்வி கேட்க,
“இல்ல, இல்ல… அவங்க அழுதாங்க, அப்பறம் உங்க ரெண்டு பேர் வீட்டுலயும் முன்னவே பேசி வச்சிருக்கறதா சொன்னாங்க…”
“கிளம்புற அன்னைக்கும் அவ கிட்ட சொல்லையான்னு, அக்கா கிட்ட கேட்டேன்… நான் நேத்தியே சொல்லிட்டேனே… இன்னுமா வந்து அவ உன்னைய பக்கலன்னு ஒரு மாறி கேட்டா…”
“அப்போ எனக்கு ஒரு மாறி ஆகிட்டு… அவ கிட்ட ஒன்னும் இல்லனு போக சொல்லிட்டேன்.”
“என்கிட்ட யாரும் சொல்லல…” என்று இவள் இடையீட,
“ஹ்ம்… இப்போ தெரியும்…” என்று மட்டும் சொல்லி,
“நான் பேசணும்னு சொல்லியும், நீ வரலன்னு கோவத்துல இருந்தேன்… அப்போதான் நீ தாத்தா ரூம்க்கு போறதை பார்த்தேன்…”
“இப்பவே உங்கிட்ட பேசிடலாம்னு தான் உன்னை தேடி வந்தேன்…”
“நீ என்னை பார்த்தும் ஒன்னும் சொல்லாம, என்னவோ எடுத்துட்டு போனியா…”
“அது தாத்தாவோட துணி வச்சி படைக்க சீக்கரம் எடுத்து வர சொன்னாங்க…” என்றாள்.
“அந்த கோவத்துல தான், உனக்கென்ன பெரிய இவன்னு நினைப்பா… பேசணும் சொன்னா வர மாட்டியான்னு கேட்டேன்…”
“நீ, எப்போ சொன்ன?… என்ன பேசணும்னு?… நானும் சொல்லணும் கேளுன்னு, என்னமோ சொல்ல வந்தியா…”
“நான் வந்ததை பார்த்தும், ஒன்னும் கேக்காதவ, இவ சொல்லுறதை மட்டும் நாம கேக்கணுமான்னு ஒரு ஈகோ அப்போ… அதுக்கு தான், நீ பேசுறதையெல்லாம் நான் கேக்கணும்னு அவசியம் இல்லனு சொல்லிட்டு கிளம்பிட்டேன்…”
“அப்பறம் நீ என்கிட்ட பேசலாமான்னு கேட்டப்போ… முடியாதுன்னு சொல்லி வெளிய போயிட்டேன்…”